செவ்வாய், 29 நவம்பர், 2016

ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
சில முக்கியமான புள்ளி விவரங்கள்!
---------------------------------------------------------------------
இவை நவம்பர் 27,2016 நள்ளிரவு 12 மணி நிலவரம்.

1) பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு நாடு முழுவதும்
உள்ள வங்கிகளில் பொதுமக்கள்
டெப்பாசிட் செய்த தொகை = 8.45 லட்சம் கோடி ரூபாய்
( அதில் பழைய ரூ 500, ரூ 1000 நோட்டுகளுக்குப்
பதிலாக செல்லுபடியாகும் நோட்டுகளாகப்
பெற்ற தொகை ரூ 33948 கோடியும் அடக்கம்)

2) வங்கி கவுன்டர்களிலும் ATM களிலும் மக்கள்
எடுத்த தொகை (withdrawals) = ரூ 2.16 லட்சம் கோடி.

3) இதன்படி,
deposits = ரூ 8.45 லட்சம் கோடி
withdrawals = ரூ 2.16 லட்சம் கோடி
வங்கிகளிடம் இருப்பு = ரூ 6.29 லட்சம் கோடி.
--------------------------------------------------------------------------------------------

திங்கள், 28 நவம்பர், 2016

தோழர் ராஜனின் படுகொலை நெருக்கடி நிலைக்
கொடுமையின் உச்சம்!
----------------------------------------------------------------------------------------
அச்சுத மேனன் கம்யூனிஸ்ட் (CPI) கட்சியைச்
சேர்ந்தவர். இவர் 1970-1977 காலக்கட்டத்தில்
முதல்வராக இருந்தார். அச்சுதானந்தன் மார்க்சிஸ்ட்
(CPM) கட்சியைச் சேர்ந்தவர். இவர் முதல்வராக
இருந்தது அண்மைக்கால வரலாறு. அச்சுதமேனன்
வேறு; அச்சுதானந்தன் வேறு.
**
காங்கிரசின் கருணாகரன் முதல்வராக இருந்தது
1981-87 காலக் கட்டத்தில். தோழர் ராஜனின் படுகொலை
கருணாகரன் முதல்வராகும் முன்பே நடந்த ஒன்று.
அது அச்சுத மேனன் முதல்வராக இருந்தபோது
நடந்தது. அதாவது நெருக்கடி நிலையின்போது
(emergency) நடந்தது. நெருக்கடி நிலையின் பின்னர்,
இந்திய நீதிமன்றங்களில் முதன் முதலில் போடப்பட்ட
ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கு ராஜனின் தந்தையால்
போடப்பட்டது. நெருக்கடி நிலையின் போது
உயிர் வாழும் உரிமை கிடையாது; ஹேபியஸ்
கார்ப்பஸ் மனு தாக்கல் செய்ய முடியாது.   

ஞாயிறு, 27 நவம்பர், 2016

மிகவும் நுனிப்புல் தன்மையுடைய, விஷயங்களை
மிகவும் மேம்போக்காக மட்டுமே பார்க்கக் கூடிய
நபர்களாகவே பாஜகவின் சார்பில் தொலைகாட்சி
விவாதங்களில் பங்கேற்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்.
இவர்களின் பொருளாதாரம் பற்றிய அறிவுடைமை
என்பது mediocre and sub mediocre levelஇல் உள்ளது. நீங்கள்
குறிப்பிடும் அன்பர் அத்தகையவர். அவரை மார்க்சியப்
பொருளாதாரம் அறிந்தவராக எவ்விதத்திலும் கருத
இயலாது. எனவே மார்க்ஸ் குறித்து hypotheticalஆக அவர்
கூறும் கூற்று பரிசீலனைக்கே அருகதையற்றது.

  
வஉசி எண்பதாம் ஆண்டு நினைவேந்தல் விழா!
------------------------------------------------------------------------------------
இடம்: நவபாரத் வித்யாலயா, சோலைப்பண் தெரு,
தியாகராய நகர் சென்னை 17

நாள்: 27.11.2016 ஞாயிறு காலை 10 மணி to 4 மணி.

விழாவில் குமரி  அனந்தன் கலந்து கொண்டு
ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார்.

கவியரங்கம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள்
நடைபெற்றன.

கவியரங்கில் தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
பங்கேற்று கவிதை வாசித்தார்.
************************************************************************
இந்தப் பள்ளி தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள்
நடத்தும் பள்ளியாகும். பிரின்ஸ் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சி நடப்பதற்காக, தமது
பள்ளியில் உள்ள இடத்தைக் கட்டணம் இன்றி வழங்கிய
பிரின்ஸ் அவர்களுக்கு நன்றி.


  
மோடி பயப்படுகிறார்! முடிவை மாற்ற உத்தேசம்!
--------------------------------------------------------------------------------------------
ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவில் உறுதியாக
இருப்பேன் என்றும்  என்ன ஆனாலும் பின்வாங்க
மாட்டேன் என்று உறுதியுடன் இருந்த மோடி, தற்போது
பயப்படத் தொடங்கி விட்டாராம். முடிவைத்  திரும்பப்
பெறுவது பற்றி நிபுணர்களுடன் ஆலோசித்து
வருகிறாராம்.

என்ன காரணம்? அண்ணன் வைகோ இந்த முடிவை
ஆதரித்து தீவிரமாகப் பேசியும் அறிக்கை விடுத்தும்
வருவதால் கலங்கிப் போய் விட்டாராம் மோடி.

வைகோ ஒன்றை ஆதரித்தால், அது தவறாகத் தானே
இருக்க முடியும் என்பதால் பீதி அடைந்துள்ளாராம் மோடி.
***********************************************************************

சனி, 26 நவம்பர், 2016

நல்ல நோட்டுகளே இரண்டு விதமாக உள்ளன என்று
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நான் இன்னும் ரூ 500
நோட்டைப் பார்க்கவில்லை. நல்ல நோட்டுகள் இரண்டு
விதம் என்பதோடு நின்று விடுகிறதோ அல்லது
மூன்றாவதாகவும் நான்காவதாகவும் நல்ல நோட்டுகள்
உள்ளனவா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். 
மோடிக்கு புரட்சிப்புயல் வைகோ பாராட்டு!
-----------------------------------------------------------------------------------
கருப்புப்பண முதலைகள் அடிவயிறு கலங்கிப் போய் இருக்கிறார்கள்! மோடியின் துணிச்சலான
நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பாராட்டத் தக்கது.
(அரியலூரில் புரட்சிப் புயல் வைகோ பேசியது;
நாள்:நவம்பர் 9, 2016, News 7 TV)

மோடியின் அறிவிப்பு: நவம்பர் 8
புரட்சிப் புயலின் வரவேற்பு: நவம்பர் 9.
தமிழக அரசியல்வாதிகளில் இதை முதன் முதலில்
ஆதரித்தவர் புரட்சிப் புயல்தான் என்கிறது
தாயக வட்டாரம்.


வைகோவுக்கு  மாநிலங்களவை உறுப்பினர் பதவியை
வழங்கலாம் என்று  பாஜக முக்கிய தலைவர் ஒருவர்
கருதுகிறாராம்.

மக்கள் நலக்  கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா?


காஸ்ட்ரோ மறைந்தார்!
--------------------------------------------------
உலகம் ஒரு மாபெரும் இரும்பு மனிதரை
இழந்து விட்டது.
----கல்வித் தந்தை பாரிவேந்தர்.
(தகவல் ஆதாரம்: புதிய தலைமுறை டி.வி)

தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசக்  கல்வியை
வழங்கிய பிடல் காஸ்ட்ரோவுக்கு கல்வித் தந்தை
பாரிவேந்தர் விடுத்துள்ள இரங்கல் செய்தி
உலக அளவில் கவனிப்பைப் பெறுகிறது.
*************************************************************

இந்த வீடியோ போலியானது. இதில் இருப்பவர் ஹர்ஷ வரதன்
அல்ல. அவர் மத்திய அறிவியல் தொழிநுட்ப அமைச்சர். இந்த வீடியோ அக்டொபர் மாதம், மேற்கு வங்கம் அசன்சால்
நகரில் எடுக்கப்பட்டது. பாஜக, திரிணாமூல் கட்சியினர்
தகராறு செய்து அடித்துக் கொண்டபோது எடுத்த வீடியோ.

1) ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் தடய அறிவியல்
நிபுணர் சந்திரசேகர் மூலம் ஆங்கில இந்து ஏட்டுக்கு
கிடைத்தன. அவர்கள் சிவராசன் ஒரு பத்திரிகையாளராகத்
தோற்றம் அளித்ததால், அவரைத் தவிர்த்து விட்டு,
மற்றவர்களை வெளியிட்டனர். அதில் சந்தன மாலையுடன்
தாணு என்ற பெண் நிற்பது வெளியானது.

2) ஹரிபாபுவிற்குத்தான் கலைஞரும் வைகோவும் நன்றி
சொல்ல வேண்டும். ஹரிபாபுவின் புகைப்படங்கள்
வெளியாகாவிட்டால், கண்டிப்பாக கலைஞரும்
வைகோவும் கைது செய்யப்பட்டு இருப்பார்கள்.

3) நான்கு எம்.பி.க்கள் ராஜிவ் கொலை வழக்கில்
கலைஞரைக் கைது செய்ய வேண்டும் என்று
டில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்கள்.
அரசுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இது பற்றியெல்லாம்
ஏற்கனவே எழுதி உள்ளேன். 

வைகோ அப்போது ( 1991) திமுகவில்தான் இருந்தார்
என்பதும் அவரின் பெயர் வை கோபால்சாமி
என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கவை.
ரகோத்தமன் வெகுகாலம் கழித்து புத்தகம் எழுதினார்.
நான் அதில் இருந்து சொல்லவில்லை. 1991 மே  மாதம்
முதல் வெளியான தமிழ், ஆங்கில ஏடுகளில் வெளியான,
நான் படித்து என் நினைவில் பசுமையாக உறைந்து
போன செய்திகளில் இருந்து எழுதுகிறேன். 

குறைத்துச் சொன்னதாக நானும் கருதவில்லை.
பேச வேண்டிய காலத்தில் எல்லாம் மௌனமாக
இருந்து விட்டு, காலம் கடந்து புத்தகம் எழுதியவர்
ரகோத்தமன். அதில் நிறைய உண்மைகளைத் திரித்து
எழுதிய யோக்கிய சிகாமணி அவர். உண்மையில் அந்தப்
புத்தகத்தை எழுதியவர் பா ராகவன் அவர்களே.
இவருக்கு ஒரு வரி கூட எழுதத் தெரியாது.

ரகோத்தமனுக்கு எழுதத் தெரியாது என்பது
நாடறிந்த உண்மை. அவர் சொல்லச் சொல்ல,
பா ராகவன் எழுதியது அது என்பதும் எழுத்துலகம்
அறிந்த ஒன்றே.

அதேபோல் திருச்சி வேலுச்சாமிக்கும் எழுதத் தெரியாது.
அவர் சொல்லச் சொல்ல ஒரு பத்திரிகையாளர்
எழுதியதுதான் வேலுச்சாமியின் பெயறில் வந்த புத்தகம்.

ரகோத்தமன் பொய்யாய் எழுதி வாழப்பாடி ராமமூர்த்தியை,
மரகதம் சந்திரசேகரைக் காப்பாற்றினார்.

ஆம், உண்மையே. நளினி எழுதிய புத்தகம் என்பது
அவர் சொல்லச் சொல்ல ஒரு பத்திரிகையாளர்
எழுதியதுதான். நிற்க. எவ்வளவு காசு தெரியுமா?


நான் புத்தகத்தின் விலையைத் தான் கேட்டேன்
என்று முருகன் கோயிலில் சத்தியம் செய்கிறேன்.


கற்பூரத்துடன் வடபழனி முருகன் கோவிலுக்கு
நேரில் வரவும்.

நளினி, முருகனை ஆதரித்து எழுதி, காசு பார்ப்பதை
விடுத்து, உண்மையை  எழுதிக் கொண்டு
இருக்கிறீர்களே, மூளையைப் பயன்படுத்தி ஆதாயம்
அடையப் பாருங்கள். நாங்கள்தான் நஷ்டத்திலேயே
வாழ்ந்து விட்டோம். நீங்களாவது புத்திசாலித் தனமாக
பிழைக்கப் பாருங்கள். நன்றி, வணக்கம்.
 


வெள்ளி, 25 நவம்பர், 2016

கருப்புப்பண முதலைகளின் தந்திரங்கள்!
--------------------------------------------------------------------------
1) நாட்டின் மொத்தமுள்ள ஜன்தன்
அக்கவுண்ட்கள் = 25.58 கோடி (அதாவது 26 கோடி).

2) இவற்றில் zero balance அக்கவுன்ட்கள் = 6 கோடி.

3) மொத்தமுள்ள  25.58 கோடி அக்கவுன்ட்களில்
போடப்பட்ட தொகை = ரூ 64,252.15 கோடி (65 ஆயிரம் கோடி)
இந்த நிலவரம் நவம்பர் 14, 2016 அன்று.

ஏழை எளிய மக்களின் ஜன்தன் அக்கவுண்ட்களில்
கருப்புப்பண முதலைகள் தங்களின் கருப்புப்பணத்தை
டெப்பாசிட் செய்துள்ளனர்.

கறுப்புப்பணம் ரொக்கமாக இல்லை என்று
தொண்டையைக் கிழித்துக் கொண்ட அன்பர்கள்
இதை உணரட்டும்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஜெயலலிதாவை தலைகுனிய வைத்த
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!
குண்டு துளைக்காத கக்கூசில் மலம் கழிக்கிறார்!
-----------------------------------------------------------------------------------------
ஒரு லட்சம் சதுர அடியில் இந்த வளாகம் கட்டப்
பட்டுள்ளது. இதற்கு ஆன செலவு ரூ 40 கோடி மட்டுமே.
இது மக்களின் வரிப்பணம்தான். சந்திரசேகர ராவின்
அப்பன் வீட்டுப் பணம் அல்ல.

உலகின் தலைசிறந்த வாஸ்து அறிஞர்கள், வாஸ்து
சாஸ்திர முறைப்படி கட்டிய வளாகம் இது. சந்திர
சேகர ராவ் ஒரு வாஸ்துப் பைத்தியம்!

சந்திர சேகர்ராவின் ஆடம்பரத்துக்கு முன்னால்,
ஜெயலலிதா தலைகுனிந்து நிற்கிறார்.
---------------------------------------------------------------------------------------

வித விதமாய் மலம் கழித்தல்!
-----------------------------------------------------
1) ஜெயலலிதா, சசிகலா, கலைஞர் ஆகியோர்
சாதாரண கக்கூசிலேயே மலம் கழிப்பதாக
திமுக, அதிமுக உடன்பிறப்புகள் கூறுகிறார்கள்.
இது உண்மை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
2) அம்பானி மலம் கழிக்கும் கக்கூஸில் தங்கத் தடுகள்
வேயப்பட்டுள்ளன.
3) இந்தி நடிகர் சல்மான்கான் வைரக் கற்கள்
பதித்த கக்கூஸில் மலம் கழிக்கிறார்.
4) வாழை இலையில் மலம் கழிப்பவர் ஜகத்குரு.
5) லல்லு பிரசாத் யாதவ் கக்கூசில் மலம் கழிப்பதில்லை.
அவர் எப்போதுமே open defecationதான்.  
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல்!
----------------------------------------------------------------------------------
1) மிகச் சிறந்த முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்.
2) நரசிம்மராவ், மன்மோகன் சிங், நரேந்திர மோடி
ஆகிய மூன்று  பிரதமர்களாலும் மிகப் பெரிதும்
விரும்பப் பட்டவர்; விரும்பபப் படுகிறவர்.
3) அவர் குறித்த இந்த ஆங்கிலக் கட்டுரையைப்
படிக்கலாம். 
சம்பளம் ரொக்கமாகத் தர மறுக்கலாமா?
---------------------------------------------------------------------------
சம்பளப் பட்டுவாடாச் சட்டத்தின் ஷரத்துக்களின் படி,
சம்பளப் பணத்தை ரொக்கமாகவே தர வேண்டும்.
இதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. தினக்கூலி,
வாரக்கூலி, மாதச் சம்பளம் ஆகிய எல்லா விதமான
பட்டுவாடாவும் ரொக்கமாகவே தரப்பட வேண்டும்
என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

நடைமுறை எப்படி இருக்கிறது?
--------------------------------------------------------
நடைமுறையில், அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட
(organised sector) தொழிலகங்கள் அனைத்திலும்,
அரசுத் துறை மற்றும் தனியார் துறை உட்பட,
எல்லா நிறுவனங்களிலும், நிர்வாகம்-சங்கம்
இருதரப்பு உடன்பாடு மூலமாக சம்பளத்தை வங்கிக்
கணக்கில் போடுவது என்ற நடைமுறை பல
ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

டெபிட் கார்டு இல்லாத மாதச் சம்பளக்காரர் எவரும்
கிடையாது என்ற அளவுக்கு salaried class இந்த
நடைமுறையை விரும்பியே ஏற்றுக் கொண்டு விட்டது.

மேலும், சென்னை மாநகராட்சியில், துப்புரவுப்
பணியாளர்களுக்கு கடன் கொடுத்த வட்டிக்காரர்கள்
சம்பளத் தேதியன்று அவர்களிடம் உள்ள எல்லாப்
பணத்தையும் சம்பளம் வாங்கிய சில நிமிடங்களிலேயே
பிடுங்கிக் கொள்வது என்ற கொடிய வழக்கம் இருந்து
வந்தது. எனவே வட்டிக்காரர்கள் சம்பளப் பணத்தை
பிடுங்கிக் கொள்வதைத் தடுக்கும் பொருட்டு,
சம்பளத்தை வங்கிக் கணக்கில் போடுவது என்ற
நடைமுறை அறிமுகம் ஆனது.

இவ்வாறு  contingency workers, ஒப்பந்தப்
பணியாளர்கள் தவிர, மீதி அனைவருமே வங்கிக்
கணக்கில் சம்பளம் பெறும் நடைமுறைக்கு வந்து
விட்டார்கள். இதில் இணைக்கப் படாத தொழிலாளர்கள்
unorganised sectorஇல் பணிபுரியும் காசுவல் மற்றும்
ஒப்பந்தத் தொழிலாளர்களே.

தற்போது நிதித்துறைச் செயலரின் உத்தரவு, அரசு
ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற
எல்லாருக்கும், அதாவது ரொக்கப் பட்டுவாடா மூலம்
சம்பளம் பெறும் மீதி அனைவருக்கும், ரொக்கமாகவே
சம்பளம் வழங்கப் படும்.  

அரசு ஊழியர்களில், இன்னும் ரொக்கமான சம்பளப்
பட்டுவாடா என்ற நடைமுறையில் இருக்கும் சொற்பமான
பகுதி ஊழியர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு
பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த உத்தரவை
எதிர்த்து, அந்தப் பகுதியின் தொழிற்சங்கம்,
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் சாதகமான
தீர்ப்பைப் பெறலாம். உடனடியாக தடையாணை
பெற இயலும்.        
    
தன்னுடைய கருத்தைச் சொல்வதற்கு பின்னூட்டம்
ஈடுபவர்களைக் கண்டிருக்கிறேன். கோணல் புத்தியை
மன வக்கிரத்தை வெளிப்படுத்த பின்னூட்டம்
இடுவதும், மீண்டும் மீண்டும் கேட்ட கேள்வியை
கேட்டுக் கொண்டு இருப்பதும் மனப்பிறழ்வு.
முகநூல் என்பது மனப்பிறழ்வு கொண்டவர்கள்
கூத்தடிக்கும் இடம். எனவே இப்படித்தான் இருக்கும்.


 மோதல்களும் பூசல்களும் எழுவது இயற்கை.
ஒரு அதிகாரியாக இருப்பவர் கோபம் கொள்ளக்
கூடாது என்று சொல்ல முடியாது. அவருக்கும் கோபம் வரும்.
ஆனால், பொதுமக்களை அராஜகமாக அணுகுவதும்,
ஆபாச வசவுகளை மேற்கொள்வதும் ஒரு அதிகாரிக்கு
ஏற்புடைய நடத்தை அல்ல. அரசு ஊழியர் நடத்தை
விதிகள் இதை அனுமதிக்கவில்லை. 
"Unbecoming of a govt servant" என்ற குற்றமாக நடத்தை
விதிகள் இதைக் கருதுகின்றன.
**
முன்பெல்லாம் செல் போனோ காமிராவோ கிடையாது.
முகநூலும் கிடையாது. இப்போது அப்படியா?
ஒரு வங்கியின் கவுன்டரில் நடந்த சம்பவம்
நாடு முழுவதும் பரவி விடும் அபாயம் இருக்கும்போது,
ஒரு அதிகாரி அப்படி நடந்து கொண்டால் மக்கள்
விடுவார்களா?
வெற்றியின் ரகசியம்!
-----------------------------------------------
ஓட்டுக்கு ரூ 2000 கொடுத்த அதிமுக!
அதன் பிறகு அந்த நோட்டை மாற்ற
ரூ 1000க்கு ரூ 200 கமிஷன் கேட்டனர்!
வாக்காளர்கள் அதிர்ச்சி!
மொத்தம் ரூ 120 கோடி பட்டுவாடா!
( நன்றி: விகடன் )

வியாழன், 24 நவம்பர், 2016

டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் புகழ் பெற்ற
முதலாளித்துவப் பொருளாதார நிபுணர். He is more an
ECONOMIST than a politician. ஆனால் மோடி எந்த
விதத்திலும் ஒரு பொருளாதார நிபுணர் அல்ல.
அவர் வெறும் அரசியல்வாதி மட்டுமே. இது
குறைந்தபட்ச அறிவு உள்ள ஒவ்வொருவருக்கும்
தெரியும். இதை எனது கட்டுரை அழுத்தம்
திருத்தமாகச் சொல்கிறது. இதில் எவருக்கும்
சந்தேகம் வர இயலாது. நிற்க.
**
என் கட்டுரை டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைக்
கேலி செய்கிறது என்று எவரும் கருத இடமில்லை.
மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமே அவ்வாறு
கருத இயலும்.
**
முதிர்ச்சியுள்ள வாசகர்களுக்காக எழுதப்படுகின்ற
கட்டுரைகள் இவை. அருள் கூர்ந்து பிறழ் புரிதலைத்
தவிர்க்கவும்.

இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய
கட்டுரைக்கு மட்டுமே நான் பொறுப்பு. டாக்டர் மன்மோகன்
சிங் பெயரில் கேம்பிரிட்ஜ் பல்கலை ஸ்காலர்ஷிப்
வழங்குகிறது என்ற செய்தியை, பலரும் அறியாத
ஒரு செய்தியை, நான் இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.
டாக்டர் மன்மோகன்சிங்கை கேலி செய்வது என்ற
பேச்சுக்கே இங்கு இடமில்லை. இதுபோன்ற அபத்தமான
வலுச்சண்டையில் நான் ஈடுபட விரும்பவில்லை.
டாக்டர் மன்மோகன்சிங் மீது எனக்கு மிகுந்த
மரியாதையும் உள்ளது; அவரின் முதலாளியப்
பொருளியலில் முரண்பாடும் உள்ளது. 

டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் மோடிக்கு
மக்களின் சிரமங்களைக் குறைக்குமாறு அறிவுறுத்தி
இருக்கிறார். அதை மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று தெளிவாக என்னுடைய பின்னூட்டத்தில்
முன்பே எழுதி இருக்கிறேன். அதைப் பலரும்
படித்தும் இருக்கிறார்கள். அதன் பிறகும் மன்மோகன்
அவர்களைக் கேலி செய்கிறேன் என்று கூறுவது
என்ன நியாயம்?  

இக்கட்டுரையைப் படித்து விட்டு, ஒரு பாஜக ஆதரவாளர்
"மன்மோகன் ஒரு லஞ்சப் பேர்வழி" என்று பின்னூட்டம்
எழுதி இருந்தார். அந்த நிமிடமே அதைக் கண்டித்து
பதில் எழுதி உள்ளேன். மேம்போக்காக எதையாவது
அரைகுறையாகப் பார்த்து விட்டு, பொய்யாகவும்
தவறாகவும் வீண்பழி போடுவதைத் தவிர்க்கவும்.

பின்னூட்டத்தில் நீங்கள் ஒரு கருத்தை எழுதுகிறீர்கள்.
அதற்கு நான் எழுதுகிற பதிலை பின்னூட்டத்தில்தானே
எழுத முடியும்? வேறு எங்கே எழுதுவது? கக்கூசிலா?


நீங்கள் உங்கள் தவறை உணர மறுக்கிறீர்கள். உங்கள்
தவறு அம்பலப் பட்ட பின்னும் அதை ஏற்றுக் கொள்கிற
மனப் பக்குவம் இல்லை. இதுதான் உங்கள் பண்பு
என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? 

உங்களுடைய கேள்விகளை, சந்தேகங்களை யாராவது
ஒரு பொருளாதார நிபுணரிடம் கேட்கவும். இந்தப் பதிவு
சார்ந்து மட்டுமே என்னால் பதில் சொல்ல இயலும்.
பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை என்னால்
பொருட்படுத்த இயலாது.


அடுத்தவனை இளக்காரமாகப் பார்த்து, வலுச்
சண்டைக்கு இழுத்து, உங்களின் வக்கிர புத்தியை
அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறீர்கள். உங்களோடு
மல்லுக்கு நிற்க முடியாது. நான் ஒரு பொருளாதார
நிபுணன் என்று எங்குமே கூறியதில்லை. ஆனால்
நான் கூறாத ஒன்றைக் கூறியதாக நீங்களே
கூறும்போது, உங்கள் வக்கிரபுத்தி வெளிப்படுகிறது.
**
நிற்க. இந்தக் கட்டுரை டாக்டர் மன்மோகன்சிங்
அவர்களைக் கேலி செய்கிறது என்று நம் இருவருக்கும்
பொதுவான யாராவது ஒரு நண்பர் கூறட்டும். அதன்
பிறகு நான் உங்கள் அடிமையாக இருக்கிறேன்.
அப்படி யாரும் கூறவில்லை என்றால், அதன் பிறகு
நீங்கள் உயிருடன்  இருப்பதில் ஏதேனும் அர்த்தம்
உள்ளதா என்று முடிவு செய்வோம்.



டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் உரையின் முக்கிய அம்சங்களாக நான்கு அம்சங்களைக் குறிப்பிட்டு
உள்ளேன். இது முன்பே பின்னூட்டத்தில் எழுதப்பட்டு
விட்டது. அதில் முக்கிய அம்சமாக நான் கருதுவது,
இந்தியாவின் GDP இரண்டு சதம் குறையும் என்ற அவரின்
கணிப்பு. அதை அவர் எப்படி என்று விளக்கவில்லை.
எவ்வாறு GDP குறையும் என்று நான் ஆராய்ந்து
கொண்டு இருக்கிறேன். பொருளாதாரத்தில் நல்ல
புலமை உடைய நண்பர்களிடம் இக்கேள்வியைக்
கேட்டுள்ளேன். பதிலுக்கு காத்து இருக்கிறேன்.


கறுப்புப் பணம் என்றால் என்ன என்பது குறித்து
கடந்த வாரமே கட்டுரை எழுதி அது முகநூலில்
வெளியிடப் பட்டும் விட்டது. மீண்டும் மீண்டும்
எத்தனை முறை எழுதுவது? கீரை விற்கும் ஆயாவிடம்
உள்ள ஆயிரம் ரூபாய் கருப்புப்பணமா என்ற கேள்வி
உங்களைத் தவிர இந்தியாவில் வேறு யாருக்கும்
எழ முடியுமா? ஏன் குதர்க்கமும் விதண்டாவாதமும்?

கறுப்புப்பணம் என்பதற்கு முதலாளித்துவம் பல
வரையறைகளை வைத்துள்ளது.
வரி கட்டாத பணம்தான் கறுப்புப்பணம் என்பது
ஒரு வரையறை என்று வைத்துக் கொண்டால்,
இரண்டரை லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானம்
எப்படி கறுப்புப் பணம் ஆகும்?

முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்து,
அடிப்படையான பல கேள்விகள் உங்களுக்கு உள்ளன.
எனவே அவற்றுக்கு விடைகாண, அருள் கூர்ந்து
அருகில் உள்ள கல்லூரியின் பொருளாதாரப்
பேராசிரியரை அணுகவும். நான் பொருளாதாரப்
பேராசிரியர் அல்ல.
**
அதே போல, மார்க்சிய பொருளாதாரம் குறித்தும்
மூலதனம் குறித்தும் கம்யூனிஸ்ட் கட்சியில்
வகுப்பு எடுக்கிறார்கள். தோழர் அ  கா ஈஸ்வரன்,
தோழர் தா ஜீவானந்தம் ஆகியோர் வகுப்பு எடுக்கிறார்கள்.
அங்கு சென்று மார்க்சிய பொருளாதாரம் கற்கவும்.
**
நாங்கள் நடத்துவது நியூட்டன் அறிவியல் மன்றமே
தவிர, பொருளாதார மன்றம் அல்ல.
**
உங்களின் கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த அளவில்
என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் பதில்
சொன்னேன். உங்களின் சந்தேகங்களைத் தீர்த்து
வைக்க இதற்கு மேல் என்னால் முடியாது. எனவே
வீணாக என்னிடம் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
நல்ல பொருளாதார பேராசிரியரை நாடுங்கள், கூடவே
நல்ல மனநல மருத்துவரையும் நாடலாம்.


டாக்டர் மன்மோகன்சிங்கின் உரையில் உள்ள
அரசியல் தாக்குதல்களைத் தவிர்த்து விட்டுப்
பார்த்தால், அவரின் உரையின் சாராம்சம் இதுதான்.
---------------------------------------------------------------------------------------------
1) GDP இரண்டு சதவீதம் குறையும்.
2) இந்த நடவடிக்கையின் நோக்கம் வரவேற்கத் தக்கது.
3) இதன் காரணமாக, பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு
பணம் கிடைப்பது தடுக்கப் படுகிறது.
4) எனவே இதன் செயலாக்கத்தால் மக்களுக்கு ஏற்படும்
கஷ்டங்களைக் குறைக்க பிரதமர் முன்வர வேண்டும். 

அவர் கூறியதில் 2, 4 ஆகிய அம்சங்களில் எவருக்கும்
மாற்றுக் கருத்து இல்லை. 4ஆவது அம்சம் பிரதமருக்கான
அறிவுறுத்தல். இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு,
மக்களின் சிரமங்களைக் குறைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

2ஆவது அம்சம் எனக்குப் புரியவில்லை. அவர் கூறியபடி,
GDP இரண்டு சதம் குறையும் என்றால், அது நிச்சயமாக
பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும். ஆனால்
எவ்வாறு GDP இரண்டு சதம் குறையும் என்பதை அவர்
விளக்கி இருக்க வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை.
அவர் சார்பில், காங்கிரசின் பொருளாதார நிபுணர்கள்
விளக்க வேண்டும். ஆனால், இதுவரை காங்கிரஸ்
தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை.

அடுத்து, GDP இரண்டு சதம் குறையும் என்ற
மன்மோகனின் கருத்தை, இந்த நிமிடம் வரை
பாஜக தரப்பு மறுக்கவில்லை. நானறிந்த வரையில்
அருண் ஜேட்லியும் மறுக்கவில்லை.
**
இதுதான் இந்தியா. காங்கிரசில் பொருளாதார நிபுணர்கள்
ஏராளம். ஆனாலும் விளக்கம் வரவில்லை. பாஜக தரப்பில்
இருந்து மறுப்பும் வரவில்லை. மக்கள் முட்டாள்கள்
என்று கருதுவதால், இவ்விரு கட்சிகளும் எவ்வித
விளக்கத்தையும் அளிக்க முன்வரவில்லை.
மக்களும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது
போலத்தானே இருக்கிறார்கள். 

நாடாளுமன்றச் செயல்பாடுகள் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப் பட்டு வரும் நாள் முதலாக, முக்கியமான
தலைவர்களின், குறிப்பாக அறிவார்ந்த  நிபுணர்களின்
நாடாளுமன்ற உரைகளைக் கேட்டு வருகிறேன்.
பார்த்து வருகிறேன். வாஜ்பாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
சீத்தராம் யெச்சூரி, ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி,
ப சிதம்பரம், மன்மோகன் சிங் ஆகியோரின் உரைகள்
உட்பட.
**
டாக்டர் மன்மோகன்சிங் பேச ஆரம்பித்தபோதே,
குறைந்தது 15 நிமிடமாவது பேசுவார் என்று
எதிர்பார்த்தேன். ஆனால் ஏழே நிமிடங்களில்
உரையை முடித்து விட்டார். அவர் முப்பது நிமிடம்
பேச விரும்பினாலும், ஹமீது அன்சாரி அவரை
அனுமதிப்பார். ஆனால், துரதிருஷ்ட வசமாக,
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் அரசியல்வாதி
என்ற நிலையில் நின்று உரையாற்றி விட்டு முடித்து
விட்டார். He might have decided that it was sufficient to play for the gallery.
**
பொருளியல் நோக்கில் ஆற்றும் உரை வேறு; அரசியல்
நோக்கில் ஆற்றும் உரை வேறு. சரி, வேறொரு
சந்தர்ப்பத்தில், மன்மோகன் அவர்களின்
பொருட்செறிவான உரையைக் கேட்கலாம் என்று
நினைத்து அமைதியானேன். 
வாசகர்களின் கவனத்திற்கான முக்கிய அறிவிப்பு!
---------------------------------------------------------------------------------------------
1) இந்தியாவில் முதலாளியப் பொருளாதாரம் செயல்பட்டு
வருகிறது. இது ஏகாதிபத்திய சார்புப் பொருளாதாரமும்
ஆகும். இதை இந்தியாவின் ஆளும் வர்க்கங்கள்
செயல்படுத்தி வருகின்றன. அரசியல் கட்சிகள்
என்பவை (காங், பாஜக முதலியன) ஆளும் வர்க்கத்தின்
பிரதிநிதிகளே. இன்று ஆட்சியில் இல்லாவிட்டாலும்
காங்கிரஸ் கட்சி இந்திய ஆளும் வர்க்கத்தின் கட்சி
என்பதை மறந்து விடக் கூடாது. டாக்டர் மன்மோகன் சிங்
அவர்களும் ப சிதம்பரம் அவர்களும் இன்று ஆட்சியில்
இல்லாவிட்டாலும், அவர்கள் ஆளும் வர்க்கத்தின்
நம்பகமான பிரதிநிதிகள். இவை அனைத்தும் மார்க்சிய
பால பாடம் ஆகும். நிற்க.
**
நாம் எழுதும் பொருளாதாரக் கட்டுரைகள் வாசகத்
தன்மையில் முதிர்ச்சி அடைந்த, அறிவார்ந்த
வாசகர்களை மனதில் கொண்டு எழுதப் படுபவை.
அவர்களுக்கு ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும்,
மார்க்சிய பால பாட போதனைகளை எழுதிக் காட்ட
வேண்டிய அவசியமில்லை.
**
நுனிப்புல் ஆசாமிகளும், மார்க்சிய பாலபாடம்
அறியாதவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில்
எழுத வேண்டும் என்றால், ஒவ்வொரு கட்டுரையையும்
பத்துப் பக்கத்தில் எழுத வேண்டும். அது இயலாதது.
**
அடுத்து, அநாகரிகமான பின்னூட்டங்கள், வசவுகள்,
அவதூறுகள் ஆகியவற்றுக்கு இங்கு அனுமதியில்லை.
அவ்வாறு பின்னூட்டம் இடுபவர்கள் தண்டிக்கப்
படுவார்கள்.
**
இந்தப் பதிவில் உள்ள கட்டுரையின் முதல் வரியே,
டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஒரு முதலாளியப்
பொருளாதார நிபுணர் என்ற வாக்கியத்துடன்
தொடங்குகிறது. இந்த ஒரு வாக்கியமே எல்லாவற்றையும்
புரிய வைக்கும் ஆற்றல் கொண்டது. இதைப் புரிந்து
கொள்ள இயலாதபோது, பிறழ் புரிதல் ஏற்பட்டு
விடும். அது மோசமான பின்னூட்டங்களைப் பிரசவிக்கும்.           
பொருளாதார நிபுணரின் அரசியல் பேச்சு!
------------------------------------------------------------------------------
டாக்டர் மன்மோகன் சிங் முதலாளியப் பொருளாதார
நிபுணர். அவர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் உள்ள
செயின்ட் ஜான் கல்லூரியில் பொருளாதாரம் பயின்று
டாக்டர் பட்டம் பெற்றவர். தற்போது கல்லூரிப்
பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கேம்பிரிட்ஜில் படித்த டாக்டர் மன்மோகன்சிங் இந்தியப்
பிரதமர் ஆனதும், அவரைக் கவுரவிக்கும் பொருட்டு,
கேம்பிரிட்ஜ் பல்கலையானது ஒரு ஸ்காலர்ஷிப்பை
அறிவித்தது. ஆண்டுதோறும் ஒரு இந்திய மாணவருக்கு
பிஹெச்டி படிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும்
(உணவு தங்குமிடம் உட்பட) கேம்பிரிட்ஜ் பல்கலை
ஏற்கும் என்பதே அந்த ஸ்காலர்ஷிப்.

இன்றும் அந்த ஸ்காலர்ஷிப் வழங்கப் பட்டுக்
கொண்டிருக்கிறது. இது குறித்து நியூட்டன் அறிவியல்
மன்றம் முன்பே பலமுறை எழுதியுள்ளது.

ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு (demonetisation) குறித்து,
எதிர்க்கட்சிகளின் சார்பில் உரையாற்றுமாறு
டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நிதியமைச்சர்
அருண் ஜேட்லி அழைப்பு விடுத்திருந்தார். மன்மோகன்
அவர்களும் அவரின் அழைப்பை ஏற்று
மாநிலங்களவையில் உரையாற்றினார்.

ஏழு நிமிட ஆங்கில உரை அது. மிகுந்த ஆவலுடன்
அந்த உரையைக் கேட்டேன். எனினும் ஒரு பொருளாதார
நிபுணரின் உரை அல்ல அது; மாறாக அது ஒரு
அரசியல்வாதியின் உரை, The politician in Manmohan Singh only
spoke and the economist did not.

இந்திய நாடாளுமன்றத்தில் வெகு அபூர்வமாகத்தான்
சிறந்த உரைகளைக் கேட்க முடியும். இதற்கு முன்பு
நிகழ்த்தப்பட்ட சிறந்த உரை முன்னாள் நிதியமைச்சர்
ப சிதம்பரம் அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரி
குறித்து (GST) ஆற்றிய உரை. அதற்கப்புறம் இன்று
வரை நிபுணத்துவம் வாய்ந்த சிறந்த உரை எதுவும்
ஆற்றப்படவில்லை. சிறந்த உரையை ஆற்றியிருக்க
வேண்டிய டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்
அரசியல்வாதியாகச் சுருங்கிக் கொண்டது
ஏமாற்றத்தைத் தந்தது. 

இருப்பினும் இக்குறையை ப சிதம்பரம் அவர்களால்
போக்க முடியும். ஆனால் ப சிதம்பரம் பேசிப்
பெயர் வாங்குவதை ராகுல் காந்தி விரும்பாத
காரணத்தால், ப சிதம்பரம் அவர்கள் பேசுவதற்கு
வாய்ப்பில்லை என்றே தெரிய வருகிறது.

பூலான் தேவியும் மு.க அழகிரியும் அலங்கரித்த
இந்திய நாடாளுமன்றத்தில் டாக்டர் மன்மோகன்
சிங்கும் ப சிதம்பரமும் இடம் பெற்றது ஒன்றே
போதுமானது என்று மனநிறைவு அடையலாம்.
---------------------------------------------------------------------------------------------
யாரடா நீ, பால் ராபின்சன், புழுவினும் கீழான ஈனப்
பயலே, உன் மரமண்டையில் பொருளாதாரம் ஏறாது.
எங்கு வந்து என்ன பேசுகிறாய்? கக்கூஸில் எழுதுகிற நாயே.
கழுத்துக்கு மேல் தலை இருக்க வேண்டும் என்றால் ஓடிப்போ,
பிணமே, you pimp.

------------------------------------------------------------------------------------------------------------------


புதன், 23 நவம்பர், 2016

இடைத் தேர்தல் முடிவுகள்: விமர்சனம்!
தேமுதிக நிலை என்ன?
வின் டி.வி. விவாதம் குறித்த யூடியூப் காணொளி!
------------------------------------------------------------------------------------------
பங்கேற்பு: நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
நேரம்: 1.55 நிமிடம் to 9.00 நிமிடம் மற்றும்
22 நிமிடம் to 32 நிமிடம் மற்றும் 41,30 நிமிடம் to 45.30 நிமிடம்
மற்றும் 52 நிமிடம் முதல் 55 நிமிடம் வரை.
************************************************************************ 
கல்வித் தந்தை கல்வித் தந்தைதான்!
---------------------------------------------------------------------
ஜேப்பியார் அவர்களோ, அல்லது, பாரிவேந்தர்
அவர்களோ அல்லது துரைமுருகன் அவர்களோ,
யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும்,
கல்வித் தந்தை கல்வித் தந்தைதான். அவர்களின்
ஒரே நோக்கம் கொள்ளை அடிப்பதுதான்!  
மக்களின் துயருக்கு விடிவுதான் என்ன?
----------------------------------------------------------------------
ஸ்டேட் வங்கி அதிகாரியின் ஆணவமும் திமிரும்!
அறிவு இருக்கா? காதுலே ஈயத்தக் காச்சி
ஊத்தியிருக்கீங்களா என்றெல்லாம் மக்களைக்
கேட்கும் அதிகாரி!
இந்த வீடியோவைக் காணுங்கள்!
இந்த அதிகாரியின் சம்பளம் குறைந்தது மாதம்
ரூ ஒரு லட்சம் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------  

இந்த வீடியோவில் காணப்படும் நபர் SBI வங்கி
வேலூர் நாட்றாம்பள்ளி கிளையில் AGM அந்தஸ்தில்
(Asst General Manager) பணிபுரிவதாக வாசகர்கள்
தெரிவிக்கிறார்கள்.  
ஸ்டேட் வங்கி நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டிய
பொதுத்துறை நிறுவனம். பாதுகாக்க வேண்டிய
பொதுத்துறை நிறுவனம். ஆனால் அதிகாரியின்
இந்த நடத்தை கண்டனத்துக்கு உரியது.

இந்த வீடியோ நிச்சயம் பெரிய அளவில் பரவும்;
பரவி வருகிறது. எனவே இந்த அதிகாரி சஸ்பெண்ட்
செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.


சட்டமன்றத் தேர்தல் (2016) முடிந்து விட்டது. இனி அடுத்து
வரவிருப்பது 2019 நாடாளுமன்றத் தேர்தலே. இடையில் வேறு
தேர்தல்கள் கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் பற்றி
சோனியா துளியும் அக்கரைப் பட மாட்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு கூட்டணி வேண்டும். அது தற்போது உள்ள திமுக கூட்டணிதான்.
எனவே காங்கிரஸ் தனித்து நிற்பது என்பது அக்கட்சியின்
எதிர்கால வரலாற்றில் இல்லை. காங்கிரசின் வாழ்வும்
தாழ்வும் திமுகவைச் சார்ந்தே உள்ளது. எனவே காங்கிரசை
தனியொரு கட்சியாகக் கருத அக்கட்சி இடம்
தரவில்லை. அது திமுகவின் ஒரு பிரிவு அவ்வளவே.

மும்பையில் ஒரே இடத்தில் ரூ 13,000 கோடி
கறுப்புப் பணம் பிடிபட்டது!
வருமானவரித் துறையினர் அதிர்ச்சி!
-----------------------------------------------------------------------------
நாள்: 14 நவம்பர் 2016
இடம்: விரார் மும்பை
 பாய் தாக்கூர் (Bhai Thakur) என்பவரின் வீடு மற்றும்
அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் ரூ 13,000 கோடி
கறுப்புப்பணம் ரொக்கமாகப் பிடிபட்டது.

கறுப்புப் பணம் ரொக்கமாகவே இல்லை என்று
உளறித் திரிந்தவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?
*********************************************************************   
அருள்கூர்ந்து இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள்.
ரூபாய் நோட்டு கட்டுக்கள் குவிந்து கிடக்கின்றன.
எவ்வளவு பேரைக் கொள்ளையடித்துச் சேர்த்தானோ?
இன்று அவ்வளவும் அம்பேல்!


ரசீது இல்லாமல் ரூ 5 லட்சம் பணம்!
கல்விக்கட்டணமாக (capitation fees) வசூலித்து
ஏமாற்றிய கல்வித்தந்தை துரைமுருகன்!
போலீசில் புகார்! கைது ஆவாரா?
-------------------------------------------------------------------------
மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் ஒரு கல்வித்
தந்தை! இவர் வேலூரில் கிங்ஸ்டன் பொறியியல்
கல்லூரி என்ற சுயநிதிக் கல்லூரியை நடத்தி
வருகிறார். இக்கல்லூரியில், ப்ளஸ் டூ ( 12ஆம் வகுப்பு)
படித்துக் கொண்டிருந்தபோதே முத்துக்குமார்
என்ற மாணவன் பொறியியல் படிப்பில் அட்மிஷன்
கேட்டு, அவனுக்கு ரூ ஐந்து லட்சம் கட்டணத்தில்
இடம் வழங்கப் பட்டது.

ப்ளஸ் டூ முடிவுகள் வந்தன. பையனின் மதிப்பெண்கள்
மிகவும் குறைவு. பொறியியல் படிப்பிற்கு அரசு
நிர்ணயித்துள்ள மதிப்பெண்களை இம்மாணவன்
பெறவில்லை. எனவே அவன் பொறியியல் படிப்பிற்குத்
தகுதியற்றவன்  ( not eligible) ஆனான்.

பணத்தைத் திருப்பிக் கேட்டான். இன்றுவரை கல்வித்
தந்தை திருப்பித்  தரவில்லை. போலீசில் புகார்
கொடுத்துள்ளனர் மாணவன் பெற்றோர்.

கல்வித் தந்தை துரைமுருகன் அவர்கள் திமுக
நடத்தும் கருப்புப்பண போராட்டத்தில் இன்று
பங்கேற்கிறார். ரசீது கொடுக்காமல் அவர் வாங்கிய
கருப்புப்பணத்தை எப்படிக் கைப்பற்றுவது?

ஜெயலலிதாவை, பார்ப்பனீயத்தை சகிக்க முடியாது
என்ற ஒரே காரணத்திற்காக, திமுகவை பலரும்
ஆதரிக்கின்றனர். அதற்காக கல்வித்தந்தை
துரைமுருகனின் கறுப்புப் பணத்தையும், கேடி
பிரதர்ஸின் கறுப்புப் பணத்தையும் ஆதரிக்க
வேண்டிய அவசியமில்லை!
--------------------------------------------------------------------------------------------------------
இடைத்தேர்தல் முடிவு உணர்த்தும் செய்தி!
தமிழக அரசியலின் தெளிவான ஒரே சித்திரம்!
-------------------------------------------------------------------------------
1) தேமுதிக என்ற கட்சிக்கு தமிழக அரசியலில்
இடமில்லை என்பதே இடைத்தேர்தல் உணர்த்தும்
செய்தி.

2) திமுக, அஇஅதிமுக என்ற இரு பெரும் திராவிடக்
கட்சிகளுக்கு அடுத்த இடத்தில், மூன்றாவது  கட்சியாக
தேமுதிக இருந்தது என்பது உண்மை. அந்த மூன்றாவது
இடத்தை தேமுதிக நிரந்தரமாக இழந்து விட்டது
என்பதாய் வாக்காளர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

3) இனி என்றாவது அந்த மூன்றாவது இடத்தை, தேமுதிக
பிடிக்க முடியுமா என்றால், இல்லை என்பதே நிலவரம்.
ஏனெனில், தேமுதிக ஒரு கட்சியே இல்லை; அதாவது ஒரு
கட்சி என்ற குறைந்தபட்ச வடிவத்தில் கூட அது இல்லை.
விஜயகாந்த், அவரின் மனைவி, அவரின் மச்சான்
சுதீஷ் என்று இந்த மூன்று பேர் மட்டுமே கட்சி என்பதாக
தேமுதிக சுருங்கிப் போய்விட்டது. அரசியல் என்பது
பெரும் வீச்சைக் கோருவது. அரசியலின் அத்தேவையை
அக்கா-மாமா-மச்சான் என்ற அச்சில் மட்டுமே சுழலும்
தேமுதிகவால் என்றுமே நிறைவேற்ற இயலாது.

4) தேமுதிக மூன்றாவது இடத்தில் இருந்து வெளியேறி
விட்டதால், அந்த இடத்திற்கு வேறு யாராவது
வருவார்கள் அல்லவா! வாக்குவங்கி அடிப்படையிலும்
சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள்
அடிப்படையிலும் பாமக  மூன்றாவது இடத்தைக்
கோருகிறது. எனினும் பாமகவுக்கு மூன்றாவது
இடத்தை வழங்க இயலாது. ஏனெனில் பாமக ஒரு
sectarian கட்சி. இன்னமும் வன்னியப் பெருங்குடி
மக்களையே அச்சாகக் கொண்டு சுழலும் கட்சி.
அது அனைவருக்குமான கட்சி என்ற அந்தஸ்தை
ஒருநாளும் பெற இயலாது. மேலும் அதன் தலித்
எதிர்ப்புப் போக்கு அதை அனைவருக்கும் பொதுவான
கட்சியாக உருவாக்காது.

5) எனவே மூன்றாவது  இடம் பாஜவுக்குத்தான். அக்கட்சி
திட்டவட்டமான கொள்கைகளை நிலைப்பாடுகளைக்
கொண்டது. திராவிட அரசியலை நிராகரிக்கும்
மக்களுக்கு புகலிடம் வழங்க பாஜகவால் மட்டுமே
முடியும்.

6) ஆக மொத்தத்தில், தேமுதிக தன்னுடைய இடம்,
அந்தஸ்து ஆகிய அனைத்தையும் நிரந்தரமாக
இழக்கிறது. தேமுதிக காலி செய்த வீட்டில் பாஜக
குடியேறுகிறது.

7) மற்றக் கட்சிகளில் பாமக மட்டுமே, தொடர்ந்து
கடுமையாக உழைப்பதன் மூலம் தன்னுடைய
ஐந்து சத வாக்குவங்கியைத் தக்க வைக்க இயலும்.
என்றாலும், வேறு ஒரு வலுவான கட்சியுடன் கூட்டுச்
சேராமல், பாமகவால் சட்டமன்ற, நாடாளுமன்ற
இடங்களைப் பெற முடியாது.

8) மதிமுகவுக்கு இனி மீட்சி இல்லை. அரசியல்
துறவறம் அக்கட்சியை வா வா என வரவேற்கிறது.

9) கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழிவில்லை. தொடர்ந்து
தனியாக நின்று 0.5 சதம் வாக்குகளைப் பெற்று
இறுதி மூச்சை விட்டு விடாமல் பிடித்து வைத்துக்
கொண்டிருப்பார்கள்.

10) இதுதான் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலின்
மிக்கது தெளிவான ஒரே சித்திரம்.
*********************************************************************
நாம் தமிழர் கட்சியைப் பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ள இயலாது. காரணம், இந்த சட்டமன்றத்
தேர்தலில்தான் (2916 மே ) அக்கட்சி முதன்முதலில்
போட்டியிட்டது. மேலும் அது one man party. எனவே
அது பொருட்படுத்தத் தக்கதாக இன்று இல்லை.
நாளையும் பொருட்படுத்தத் தக்க கட்சியாக
உருவாவதற்கு வழியில்லை. 

இக்கட்டுரை பள்ளி மாணவர்களின் ரேங்க் பட்டியல்
அல்ல. இது alternate politics பற்றியது. காங்கிரஸ் காலாவதி
ஆகி 50 ஆண்டுகள் நிறுவடைகின்றன. திராவிட
அரசியலுக்கும் முன், தோற்று அழிந்து போய், திராவிட
அரசியலை அண்டிப் பிழைக்கும் கட்சியாக மட்டுமே
காங்கிரஸ் இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி
திராவிட அரசியலுக்கு மாற்றாக (asanalternate) வருவது
என்பது கிழவி மீண்டும் சமைந்தாள் என்பதைப்
போன்றதே.  
  

திங்கள், 21 நவம்பர், 2016

மோடி என்ன பெரிய அப்பாடக்கரா?
மானங்கெட்ட மோடியே ராஜினாமா செய்!
--------------------------------------------------------------------------------
சனிக்கிழமை காலை (19.11.2016) இழவெடுத்தது
மாதிரி விடிந்தது. கல்வித் தந்தை ஜேப்பியார்
அவர்களின் செயின்ட் ஜோசப் பொறியியல்
கல்லூரியில் வருமானவரித்துறை ரெய்டு செய்து
ரூபாய் எட்டுக் கோடியை கையும் களவுமாகப்
பிடித்தது.

இது மிகப்பெரிய அநியாயம் என்று நாடு முழுவதும்
உள்ள முற்போக்குகள் கண்டனம் தெரிவித்தனர்.
பெருமதிப்பிற்குரிய கல்வித்தந்தை ஜேப்பியார்
அவர்கள் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்
என்பதால், இந்த ரெய்டு நடந்துள்ளது என்று
நாடு முழுவதும் உள்ள முற்போக்குகள் மோடி அரசின்
மீது காரித் துப்பினர்.

இன்று திங்கள் கிழமை (21.11.2016) மீண்டும் இழவெடுத்தார்
மோடி. மற்றுமொரு கல்வித்தந்தை பாரிவேந்தர்
அவர்களின் உதவியாளரான வேந்தர் மூவீஸ் மதன்
அவர்கள்  திருப்பூரில் கைது செய்யப் பட்டார்.

மரியாதைக்குரிய மதன் அவர்கள் தம்முடைய மனைவி
அந்தஸ்தில் உள்ள ஒரு பெண்ணுடன் தனியறையில்
இருந்தபோது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும்.
மோடி அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை
சர்வதேசப் பத்திரிகைகள் கண்டிக்கின்றன.
சர்வதேச அளவில் மோடியின் மானம் சந்தி
சிரிக்கிறது.

கல்வித்தந்தை பாரிவேந்தர் அவர்கள், அவரின் புதல்வர்
ரவி பச்சமுத்து அவர்கள், கல்வித் தந்தையின்
உதவியாளர் மரியாதைக்குரிய மதன் அவர்கள்
ஆகிய அனைவருமே,  கல்வி மறுக்கப்பட்ட, ஏழை
எளிய  சூத்திரக் குடும்பத்துப் பிள்ளைகளை
டாக்டராகவும் என்ஜீனியராகவும் ஆக்கி அழகு
பார்க்கிறவர்கள்.

துணி வெளுப்பவன் மகன் துணிதான்  வெளுக்க
வேண்டும் என்ற நிலையை மாற்றி, துணி வெளுப்பவன்
மகனை டாக்டராக்கி அழகு பார்ப்பவர் பாரிவேந்தர்.
சவரம் செய்பவன் மகனை இன்ஜீனியராக்கி
அழகு பார்த்தவர் ஜேப்பியார்.

மோடி தன்னை ஒரு பெரிய அப்பாடக்கராக
நினைத்துக் கொண்டு, கல்வித் தந்தைகள்
மீது நடவடிக்கை எடுப்பது வன்மையான
கண்டனத்துக்கு உரியது. எனவே கல்வித்
தந்தைகள் மீது கைவைத்த மோடி உடனடியாக
ராஜினாமா செய்ய வேண்டும். இதுவே இந்த நாடு
முழுவதும் உள்ள முற்போக்குகளின் கருத்து.

குலக்கல்வி ஒழிக!
கல்வித் தந்தைகள் வாழ்க!
---------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: மூன்றாவது கல்வித் தந்தை அருள்மிகு
பங்காரு அடிகளார் அவர்கள் ரூ 700 கோடி கறுப்புப்
பணத்தை வைத்துக் கொண்டு சிரமப் படுகிறார்.
ரிசர்வ் வாங்கி கவர்னர் இதில் கவனம் செலுத்தி,
அடிகளாருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
**********************************************************  
கல்வித் தந்தைகள் கைது செய்யப் படுவதன்
காரணமாக, நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள்
அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். இது
கல்வித்துறையில்  மோடி அரசு பிறப்பித்த ஒரு
நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) என்று முற்போக்குகள்
கருதுகின்றனர். கல்வித் துறையே ஸ்தம்பித்துப்போய்
உள்ளது. மோடியின் நாட்கள் எண்ணப் படுகின்றன.

திரு சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
தயிர்சாதக் கண்ணோட்டத்தை வைத்துக் கொண்டு
அரசியல் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. அரசியல்
விவாதங்களில் ஈடுபடுவது என்று முடிவு செய்துவிட்டால்,
அதற்கேற்ற இரும்புக் கண்ணோட்டம் தேவை. அத்தகைய
கண்ணோட்டம் தங்களிடம் இருக்குமானால், தாங்கள்
யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவை
இருக்காது.

வளர்ச்சிக்கான பாதை என்பது நேர்கோட்டுப்பாதை அல்ல.
முன்சென்றும் பின்னடைந்தும்தான் பாதையைக்
கடக்க முடியும். உலக அளவிலும், உள்நாட்டு அளவிலும்
வேகமான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இத்தருணத்தில்
எந்தவொரு சீர்திருத்தத்தின் விளைவும் ஏழாண்டுகள்
மட்டுமே நீடிக்க இயலும். நிற்க.
**
1) இதுவரை வரி செலுத்தாதவர்கள் இனிமேல் செலுத்தியே
ஆக வேண்டும். இதற்கான பிடி இறுகி விட்டது. இதன்
மூலம் வரி செலுத்துவோர் எண்ணிக்கை கோடிக்கணக்கில்
அதிகரிக்கும். இவ்வாறு அதிகரித்த எண்ணிக்கை
ஒருபோதும் குறையாது என்பது மட்டுமே இந்த
நடவடிக்கையின் ஒரே சிறப்பு அம்சம்.
2) அச்சடித்து வெளியிடப்பட்ட பணத்தில் ஒரு பகுதி
வங்கிகளுக்குத் திரும்ப வராது. அதுதான் கறுப்புப்
பணம். வங்கியில் பதிவு செய்வதற்கு அருகதையற்ற
அப்பணம் வீணாய்ப்போகும். இது எவ்வளவு என்பது
டிசம்பர் 31 அன்று தெரிந்து விடும்.
3) இந்திய அரசு அச்சடிக்காத பண நோட்டுகள் யாவும்
அறிவித்த அன்றே இறந்து விட்டன.
இம்மூன்றும்தாம் இந்த நடவடிக்கையின் கண்கண்ட
பலன்கள் (substantial gains).
4) இதன் மூலம் முதலாளியப் பொருளாதாரம் தன்னைச்
சீர்செய்து கொள்கிறது.(rectified). அவ்வளவுதான். இது மிகவும்
இயற்கையான ஒன்று. Demonetisation is a defensive mechanism
which was activated by the system (govt).        
  
கல்வித் தந்தை பாரிவேந்தர் அவர்களின்
ஏஜெண்டான மதன் அவர்களைக்
கைது செய்ததில் மனித உரிமை மீறல்!
மனித உரிமைப் போராளிகளே அணிதிரளுங்கள்!
----------------------------------------------------------------------------------------
கல்வித்தந்தை பாரிவேந்தரின் உதவியாளரும்
மாபெரும் சமூக என்ஜீனியருமான (social engineer)
மதன் அவர்களைக் கைது செய்ததில் மனித
உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.

அவரின் இரு மனைவிகளும் அவரைச் சந்திக்க
அனுமதிக்கப் பட்டனர். என்றாலும் இது போதாது.
அவரின் இரு மனைவியரும் அவருடன் தங்கி இருக்க
அனுமதிக்கப் படாதது மனித உரிமை மீறல் ஆகும்.

மேலும் அவரின் மூன்றாவது மனைவி அந்தஸ்தில்
உள்ள வர்ஷா என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை
செய்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது.

இது குறித்து எழும்பூரில் மதன் அவர்களின்
வழக்கறிஞர் அளித்த நேர்காணல் தொலைக் காட்சிகளில்
ஒளிபரப்பாகி உள்ளது.

மதன் அவர்களைக் கைது செய்ததே மனித உரிமை
மீறல்தான் என்கிறார் வழக்கறிஞர்.

மனித உரிமையைப் பாதுகாக்க அணி திரள்வோம்!
*************************************************************************     
வேந்தர் மூவீஸ் மதன் திருப்பூரில் கைது!
கல்வித்தந்தை பச்சமுத்துவின் கையாள் மதன்
300 கோடி ரூபாய் கறுப்புப்பணம் பதுக்கப்பட்ட
இடங்கள் பற்றி துப்புக் கொடுத்த மதன்!
---------------------------------------------------------------------------------------
கல்வித்தந்தை பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து
அவர்கள் உலகம் புகழும் விதத்தில் கல்வித்தொண்டு
ஆற்றி வருகிறார். இவரின் கையாளாக இருந்த,
வசூல் ஏஜண்டாகச் செயல்பட்ட மதன் என்பவரை
திருப்பூரில் தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது.
இத்தகவலை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அதிகார
பூர்வமாக இன்று (21.11.2016) அறிவித்தார்.

மருத்துவக் கல்லூரி அட்மிஷனில் சுமார் 300 கோடி
தொகை வசூலானதாகவும் அத்தொகை பதுக்கி
வைக்கப்பட்ட மூன்று இடங்கள் பற்றி மதன்
உண்மையைக் கக்கி இருப்பதாகவும், பெயர்
சொல்ல விரும்பாத போலீஸ் அதிகாரி தெரிவித்து
உள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு கல்விச் சேவை
அளித்து, ஒவ்வொரு சூத்திரக் குடும்பத்திலும் ஒரு
பொறியியல் பட்டதாரியை உருவாக்கிய கல்வித்
தந்தை பாரிவேந்தரின் நம்பகமான ஏஜெண்டான
மதன் அவர்களைக் கைது செய்த தமிழக காவல்
துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மதனின் கைது பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீது
பார்ப்பனீயம் தொடுக்கும் தாக்குதல்!
***************************************************************

  




ஞாயிறு, 20 நவம்பர், 2016

பொருளாளர் நியமனம்!
-------------------------------------------
அனைத்துலக அகிலேஷ் யாதவ் நற்பணி மன்றத்தின்
பொருளாளராக தோழர் பி மனோகர் அவர்களை
நியமித்துள்ளோம். ரசீது இல்லாமல் பணம் வசூலிப்பதில்
தோழர் மனோகர் தம் முழுத்திறமையையும்
வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்.  
இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் தா பாண்டியன் அவர்கள்
பிரதம மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற
அறிவிப்பை வரவேற்று தினமணி நாளேட்டில் எழுதிய
கட்டுரை இது! கறுப்புப்பணம் குறித்த கம்யூனிஸ்ட்
கட்சியின் (CPI) நிலைப்பாட்டை இக்கட்டுரை தெளிவாக
எடுத்துரைக்கிறது.
(நன்றி: தினமணி, 12.11.2016) 


பெரிதாக்கிப் பார்க்க கட்டுரையின் மீது சுட்டியை வைக்கவும்.
FULL PAGE வேண்டுமென்றால் அதை கிளிக் செய்யவும்.
பின் மீண்டும் சுட்டியை வைத்துப் பெரிதாக்கவும்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மோடி
திரும்பப் பெறப் போவதாக ஆக்ராவில் அறிவித்து உள்ளதாக
முந்நூல் பதிவுகள் பல பார்த்தேன் உண்மை என்ன? 
வாழ்க நீ எம்மான்!
கறுப்புப் பணத்தை ஆதரிக்கும் அகிலேஷ் யாதவ்!
--------------------------------------------------------------------------------------------
கறுப்புப் பணத்தை ஆதரித்து கருத்துத் தெரிவித்து
புரட்சியை ஏற்படுத்தி உள்ளார் உ.பி முதல்வர்
அகிலேஷ் யாதவ்.

"உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, உலகில்
பல நாடுகள் வீழ்ந்தன. ஆனால் இந்தியாவில் எத்தகைய
பாதிப்பும் இல்லை. அதற்கு காரணம் கறுப்புப் பணமே.
கறுப்புப்பணம் இந்தியப் பொருளாதாரம் விழுந்து
விடாமல், ஒரு இணையான பொருளாதாரமாக (PARALLEL
ECONOMY) இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது." 

இவ்வாறு கறுப்புப் பணத்திற்கு ஆதரவாகக் கருத்துத்
தெரிவித்து உள்ளார் அகிலேஷ் யாதவ்.

இவரின் கருத்து முட்டாள்தனமான கருத்து. இந்தியப்
பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தியது கறுப்புப்
பணம் அல்ல. பொதுத்துறை நிறுவனங்களே ஆகும்.

நிற்க. இவ்விஷயத்தில் வாதம் எதுவும் தேவையில்லை.
கறுப்புப் பணத்தை நேரடியாக ஆதரித்து கருத்துக்
கூறிய அகிலேஷ் யாதவ் அவர்களை பாராட்டுவோம்.
கறுப்புப் பணம் சேர்ப்போம்! கறுப்புப் பணம் வாழ்க!

அகிலேஷ் யாதவ் அவர்களே!
வாழ்க நீ எம்மான்!!
**********************************************************************  
தலையங்க விமர்சனம் 205ஆவது கூட்டம்!
--------------------------------------------------------------------------------
நாள்: ஞாயிறு 20.11.2016 இரவு 7 மணி to 8.30 மணி.

இடம்: வங்கி ஊழியர் OBC நலச்சங்க கட்டிடம்,
எண்-6, மேற்கு அவென்யூ, மேனகா கார்டு எதிரில்,
கோடம்பாக்கம், சென்னை 24. 

சிறப்புரை:
பி இளங்கோ சுப்பிரமணியன்
(மார்க்சிய சிந்தனைப் பயிலகம்)
 பொருள்:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற
பிரதமரின் அறிவிப்பும் பின்விளைவுகளும்.

அனைவரும் வருக. அன்புடன் அழைக்கும்
வே சோதிராமலிங்கம், ஊடகவியலாளர்.
***************************************************************
கருப்புப்பண ஆதரவு அனைத்துலக அகிலேஷ் யாதவ்
நற்பணி மன்றம் தொடங்க உள்ளேன். கறுப்புப் பணம்
உள்ளவர்கள் மட்டும் உறுப்பினராகச் சேர்க்கப்
படுவார்கள். மாதச் சந்தா ரூ பத்து மட்டுமே. சந்தா ரசீது
கிடையாது. கருப்புப்பணமாகச் செலுத்தவும். மன்றத்
தொடக்க விழாவில் வைகோ சிறப்புரை உள்ளது.

  
புதிய ரூ 2000 நோட்டு thermo chromatic dye எனப்படும் சாய
மையால் அச்சடிக்கப் பட்டுள்ளது. thermo என்றால் வெப்பம்
என்று பொருள். chromo என்றால் நிறம் என்று பொருள்.
வெப்பத்தைப் பொறுத்து நிறம் மாறும் தன்மை
உடையதே இந்தச் சாய மை ஆகும்.
**
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகிறது என்பதை
துணி சாயம் போவது என்பது போல் கருதக் கூடாது.
இங்கிலாந்து அண்மையில் செப்டம்பரில் அடித்த
ஐந்து பவுண்டு நோட்டும் இத்தகையதே. அதாவது
சாயம் போகும் தன்மை உடைய மையால்
அச்சடித்ததே.
**
சாயம் போவதால் தவறில்லை; நஷ்டமில்லை.
சாயம் போய், அந்தச் சாயம் உங்கள் துணிமணிகளில்
ஓட்டப் போவதில்லை. அமெரிக்காவின் பிளாஸ்டிக்
நோட்டுகள் கூட இதை போன்றவைதான்.   
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகுமா?
வின் டி.வி விவாதம் யூடியூப் காணொளி!
நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
அறிவியல் பரிசோதனை விளக்கம்!
மற்றும் பொருளாதாரம், கறுப்புப்பணம் பற்றிய விளக்கம்!
நேரம்: 7.48 to 14 நிமிடம்; 26 to 32 நிமிடம்; 34 to 39 நிமிடம்;
43 to 43 நிமிடம்; 46 to 49 நிமிடம்; 50.10 to 50.35 நிமிடம்.
--------------------------------------------------------------------------------------------------------
1) யூடியூபில் 7.48 முதல் 14 நிமிடம் வரை
அறிவியல் பரிசோதனையும் விளக்கமும்!
(சாயம் போவது, தண்ணீரில் அமிழ்த்துவது)

2) மொரார்ஜியின் நடவடிக்கை தோற்றது ஏன்?
விரலில் மை  வைக்கக் கூடாது.

3) லெனினும் பிடல் காஸ்ட்ரோவும் தனியுடைமையை
ஒழித்ததால் அங்கு கறுப்புப்பணம் இல்லை.
 4) லஞ்சம் இதனால் ஒழியாது. ஏன்?

5) GST சரக்கு சேவை வரியும் கருப்புப்பணமும்

6) லோக் பால் சட்டத்திற்கு எதிரான நிலை ஏன்?

இவ்வாறு அறிவியல் மற்றும் பொருளாதார
விளக்கங்களை நியூட்டன் அறிவியல் மன்றத்
தலைவர் இளங்கோ அளித்தார்.
-----------------------------------------------------------------------------------------------

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுங்கள். அதில் புதிய
ரூ 2000 நோட்டை முக்கவும். ரூபாய் நோட்டு நன்கு
தண்ணீரில் ஊறட்டும். என்ன ஆகிறது என்று
தெரிய வேண்டுமா? இந்த வீடியோவில் செய்து
காட்டப் படுகிறது.  

உலகில் உள்ள எல்லா முன்னேறிய நாடுகளின்
கரன்சி நோட்டுகளும் சாயம் போகும். அதுதான்
உயர் தொழில்நுட்பம். அப்படிச் சாயம் போனால்தான்
அது நல்ல நோட்டு.
      

சனி, 19 நவம்பர், 2016

கல்வித்  தந்தை ஜேப்பியாரின் கல்லூரியில்
பிடிபட்ட ரூபாய் எட்டுக்கோடி!
---------------------------------------------------------------------------
கல்வித் தந்தை ஜேப்பியாரின் செயின்ட் ஜோசப்
பொறியியல் கல்லூரியில் ரூபாய் எட்டுக்கோடி
ரொக்கப்பணம் கைப்பற்றப் பட்டது. இச்செய்தி
தற்போது (19.11.2016) எல்லா டி.வி சானல்களிலும்
சொல்லப்பட்டு வருகிறது.

இச்செய்தி வெளியானதும் மீதியுள்ள கல்வித்
தந்தைகள் தங்கள் கல்லூரியில் பதுக்கி வைக்கப்
பட்டிருந்த நோட்டுக்களை அப்புறப் படுத்தி
விட்டனர்.

கல்வித் தந்தைகள் வாழ்க! மோடி ஒழிக!
------------------------------------------------------------------------------------------     

மானங்கெட்ட மோடியே ராஜினாமா செய்!
-------------------------------------------------------------------------------
கல்வித் தந்தை ஜேப்பியாருக்கு இழைக்கப்பட்ட
"அநீதி"யைக் கண்டித்தும் மோடி உடனடியாக பிரதமர்
பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கோரியும்
நாளை காலை 10 மணி முதல் சென்னை வள்ளுவர்
கோட்டத்தில் சாகும் வரை உண்ணாவிரதம்
இருக்கிறேன். அனைவரும் வள்ளுவர் கோட்டம்
நோக்கி அலை அலையாகத் திரண்டு வருமாறு
வேண்டுகிறேன்.


கல்விக் கொள்ளையர்கள் அனைவருமே
விதிவிலக்கின்றி மக்கள் விரோதிகள்.
இதில் மதத்தின் அடிப்படையில்
ஒருவருக்கு ஆதரவு அளிப்பது தவறு. யார்
பிடிபட்டாலும் வரவேற்பது மக்களை நேசிப்போரின்
கடமை. கிறிஸ்துவ மாணவர்களுக்கு மட்டும்
இலவசக் கல்வியா வழங்குகிறார் ஜேப்பியார்?
சுரண்டல் பேர்வழி எப்போதாவதுதான் மாட்டுவான்
அப்படி மாட்டுவது அபூர்வம். அப்படி மாட்டுகிற
நேரத்தில், அவனை ஆதரிப்பது சரியல்ல. . 
ரூ 500 ரூ 1000 நோட்டுக்கள் செல்லாது!
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகுமா?
வின் தொலைக்காட்சியில் விவாதம்!
-----------------------------------------------------------------------
நாள்: 18.11.2016 இரவு 8.30 to 9.30 மணி
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகிறது என்று
நிகழ்ச்சியின் நடுவே  பரிசோதனையின் மூலம்
நியூட்டன் அறிவியல் மன்றம் நிரூபித்தது!
இதன் யூடியூப் காணொளி நாளை வெளியாகும்.
விரும்புவோர் காணலாம்.
***************************************************************

கறுப்புப் பணம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற
அறிவிப்பு, அதன் பின்விளைவுகள் என்ற பொருளில்
நிகழ்ந்த விவாதம் அது. அதில் மக்களின் ஐயமான
புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகுமா என்ற கேள்விக்கும்
பரிசோதனை மூலம் விடையளித்தது நியூட்டன்
அறிவியல் மன்றம். சாயம் போகிறது என்பதை
காமிரா வெளிச்சத்தில் அத்தனை பேரும் பார்க்க
வசதியாக நேரடியாக நிரூபித்துக் காட்டியது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
பின்குறிப்பு: சாயம் போனால் மட்டுமே அது
உண்மையான நோட்டு. ஏனெனில் அத்தகைய
தொழில்நுட்பம் கொண்டது அது.   

வெள்ளி, 18 நவம்பர், 2016

இடக்கரடக்கல்
----------------------------
இடக்கர் + அடக்கல் = இடக்கரடக்கல்.
இடக்கரான சொற்களை அடக்கிக் கூறுவது என்று பொருள்.
இது தமிழ் இலக்கணம் சார்ந்தது.
மலம் கழித்த பிறகு, நாம் கழுவுவது எதை?
ஆனால் நாம் "கால் கழுவினேன்" என்று கூறுகிறோம்.
**
அந்தச் சொல்லை அப்படியே கூறுவது முகச் சுளிப்பை
ஏற்படுத்தும். எனவே அந்தச் சொல்லைத்த தவிர்த்து
விட்டு, வேறு ஒரு சொல்லை பயன்படுத்துகிறோம்.
இவ்வாறு பயன்படுத்துவது இடக்கரடக்கல் ஆகும்.
**
பின்நவீனத்துவம் வந்த பிறகு, அது இடக்கரடக்கலை
முற்றிலுமாக நிராகரித்து, தொடர்புடைய சொல்லை
அப்படியே பயன்படுத்துகிறது.
**
பெருமாள் முருகன் என்ற பின்நவீனத்துவ எழுத்தாளர்
"கெட்ட வார்த்தை பேசுவோம்" என்ற நூலையும்
"பீக்கதைகள்" என்ற நூலையும் எழுதினர். பொதுவாக
ஓர் அவையில் "பீ" என்று சொல்வதில்.
இடக்கர் அடக்கலாக, நரகல்  என்றோ மலம் என்றோ
சொல்கிறோம். ஆனால் பீ என்றுதான் சொல்ல வேண்டும்
என்று பின்நவீனத்துவம் வலியுறுத்துகிறது.    

காளையை அதன் கொம்பைப் பிடித்து அடக்குவதற்கு
இந்தியாவில் நாதி இல்லை!
----------------------------------------------------------------------------------------------------
Hold the bull by its horns என்று ஓர் ஆங்கிலத் தொடர்
உண்டு. சிலிர்த்துக் கொண்டு வரும் காளையை
அதன் கொம்பைப் பிடித்து அடக்க வேண்டும் என்று இத்தொடருக்குப் பொருள்.

துரதிருஷ்ட வசமாக, இந்தியாவின் தேசிய அரசியலில்,
அந்த வல்லமை படைத்த எந்தத் தலைவரோ அல்லது
கட்சியோ இல்லை என்பது வெளிப்படை.

சோனியா காந்தி சாய்வு நாற்காலியில் அமர்ந்து
விட்டார். ராகுல் காந்தியை ஒரு challenging leader என்று
குடிபோதையில் இருக்கும் நேரத்தில் கூட,
எவராலும் கருத முடியவில்லை. ஆக, மோடியின்
காட்டில் மழை!

மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட நாடாளுமன்ற இடதுசாரிக்
கட்சிகளிடம் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று
சொல்லும் அளவுக்கு அனைத்தையும் அவர்கள்
இழந்து விட்டார்கள். மார்க்சிஸ்டுகளால் அதிகபட்சமாக
ஓர் அழுத்தக் குழுவாக (pressure group) மட்டுமே செயல்பட
இயலும், அதுவும் நாடாளுமன்றத்தில் போதிய
இடங்களைக் கொண்டிருந்தால். அப்படி ஒரு
பாத்திரத்தை வகிக்கும் ஆற்றலையும் அவர்கள்
இழந்து நாட்கள் ஆகி விட்டன.

கொள்கை ரீதியாக பாஜகவுடன் முரண்பட்ட
கட்சி வேறு எதுவும் இந்தியாவில் இல்லை. (இங்கு
கொள்கை என்பது பொருளாதாரக் கொள்கையை
மட்டுமே குறிக்கும். அடையாள அரசியல் என்பதற்கு
கொள்கை எதுவும் கிடையாது.)

அடையாள அரசியலை வைத்துக் கொண்டு, உலக
மயத்தை, ஏகாதிபத்தியச் சார்பு பொருளியல்
கொள்கைகளை ஒருநாளும் எதிர்க்க முடியாது.
அடையாள அரசியல் என்பது காலாவதி
ஆகிப்போன ஒன்று.

அடையாள அரசியலின் விளைவாக, மோடி எதிர்ப்பு
முகாமில் தத்துவ வறட்சியும் தலைமைப் பஞ்சமும்
நிலவுகின்றன.அறிவார்ந்த சிந்தனை என்பதற்கே
அடையாள அரசியல் எள்ளளவும் இடமளிக்காது.
அறிவின் இடத்தில் வெறுப்பை வைப்பதுதானே
அடையாள அரசியல்!

இங்கு மோடி எதிர்ப்பு என்பது மோடி அரசின்
பொருளியல் கொள்கைகளுக்கான எதிர்ப்பு
என்ற உண்மை ஒருபோதும் எடுபடாது. "மோடி என்ன
பெரிய பூ......." என்று கக்கூஸில் எழுதி விட்டு
ஓடி வருபவன் முழுநேரப் புரட்சியாளன்!  

ஆங்கில இந்து ஏட்டில் இன்று (118.11.2016) வெளியான
"THE MORALITY OF BINARIES" என்ற கட்டுரையில்,
கட்டுரையாளர் திரு ஜி சம்பத் இதையேதான்
கூறுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக
இதையேதான் நான் கூறி வந்துள்ளேன். சுருங்கக்
கூறின், "There is NO binary" என்பதையே கட்டுரையாளர்
நிறுவி இருக்கிறார்.

விரும்புவோர் படிக்கலாம். வாசகர்களிடம் இருந்து
போதிய ஆங்கிலப் புலமையை இக்கட்டுரை
கோருகிறது.
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: அடையாள அரசியலால் நீலம் பாரித்துக்
கிடக்கின்ற ஜடத்துவ நிலையை (mental inertia) எய்திய
தமிழ் தேசத்துக் குடிகளிடம் இடக்கரடக்கல்
பயன் தராது என்பதால், தேவையான இடத்தில்
இடக்கரடக்கலைப் பயன்படுத்த இயலவில்லை.
எனவே வாசகர்கள் பொருத்தருளுமாறு வேண்டுகிறேன்.
***********************************************************************

இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும், எந்த ஒரு
மாநிலக் கட்சியும் தனக்கென்று தனித்த ஒரு
பொருளாதாரக் கொள்கையைக்
கொண்டிருக்கவில்லை. மம்தா பானர்ஜியின்
பொருளாதாரக் கொள்கை என்ன? மாயாவதியின்
பொருளாதாரக் கொள்கை என்ன? நவீன் பட்நாயக்
முதல் ஜெயலலிதா வரை இவர்களின் மாநிலக்
கட்சிகளுக்கு தனித்த பொருளாதாரக் கொள்கை
எதுவும் கிடையாது. ஆளும் வர்க்கத்தின்
பொருளாதாரக் கொள்கையை, அவ்வப்போது
ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். அவ்வளவுதான்.
**
GST (சரக்கு மற்றும் சேவை வரி) எப்படி அனைவராலும்
ஆதரிக்கப்பட்டு நிறைவேறியது? திமுக உட்பட
ஆதரித்ததே! கனிமொழி GSTயை ஆதரித்து
வாக்களித்தாரே!  


      
இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் காலத்திலேயே
இந்தியாவில் ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்து வந்தது.
அப்போது நான் மத்திய அரசில் வேலை பார்த்து
சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய
சம்பளம் அப்போது ரூ 600 மட்டுமே. நான் ஆயிரம்
ரூபாய் நோட்டைக் கண்ணால் பார்த்ததே இல்லை.
சம்பளத் தேதியன்று ரிசர்வ் வங்கியில் இருந்து
பணம் எடுத்து வந்து, சம்பளப் பட்டுவாடா செய்யும்
எங்கள் அலுவலக கேஷியர், எல்லோருக்கும்
ரூ 2, ரூ 5, ரூ 10, ரூ 20 என்றுதான் சம்பளம் கொடுப்பார்.
இது அன்றைய (1970களில்) நிலை.
**
இன்று, கடந்த வாரத்தில் இருந்து, நாட்டில்
எல்லோரிடமும் ரூ 2000 புதிய நோட்டு இருக்கிறது.
எனவே அதைப்பற்றித் தெரிந்து கொள்வது
மிகவும் அவசியம்.
**
அடுத்து, அரசியல் நிற்கும், முடங்கும், உறங்கும், ஓடும்.
ஆனால் அறிவியலானது தொடர்ந்து எவ்விதத் தடங்கலும்
இல்லாமல் சென்று கொண்டே இருக்கும்; இருக்க
வேண்டும். அறிவியலுக்கு எவ்விதத் தடையும் கிடையாது.  


வியாழன், 17 நவம்பர், 2016

புதிய ரூ 2000 நோட்டு சாயம் போகிறதா?
அதில் நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய
GPS chip வைக்கப் பட்டுள்ளதா?
சக்திகாந்த தாஸ் அளித்த விளக்கம் முழுமையானதா?
---------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------------------
1) புதிய ரூ 2000 நோட்டில் GPS வசதியுள்ள சிப் எதுவும்
பொருத்தப் படவில்லை என்று ரிசர்வ் வங்கி
மறுத்துள்ளது. It is a simple denial, that is all. எத்தகைய
அறிவியல் விளக்கத்தையும் ரிசர்வ் வங்கி
அளிக்கவில்லை.

2) சாயம் போனால்தான் அது உண்மையான நோட்டு
என்று ரூ 2000 புதிய நோட்டைப் பற்றி, நிதித்துறைச்
செயலாளர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
எனினும் அதற்கான அறிவியல் விளக்கம் எதையும்
சக்திகாந்த தாஸ் அளிக்கவில்லை.

3) சக்திகாந்த தாஸ் அவர்களை நாம் குறை சொல்ல
விரும்பவில்லை. After all, அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.
அவர் அறிவியல் அறிஞர் அல்ல. எனவே அறிவியல்
விளக்கம் அளிக்கவில்லை என்பதற்காக,
சக்திகாந்த தாஸ் அவர்கள் மீது குறை காண இயலாது.

4) தமிழ்த் தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்கும்
பாஜக பிரதிநிதிகள் புதிய ரூ 2000 நோட்டில் எல்லாமே
இருக்கிறது என்றும், nano, picco, femto என்று எல்லா
வகையான தொழில்நுட்பங்களும் இருப்பதாகவும்
வண்ணக் கனவுகளை மெய்போல விவரிக்கின்றனர்.

5) அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை. பாவம்,
அவர்கள் சராசரி அரசியல்வாதிகள் (mediocre people).
அவர்களுக்கு அறிவியலில் எளிய பரிச்சயம் கூடக்
கிடையாது.

6) எனவே புதிய ரூ 2000 நோட்டு குறித்து, முழுநிறைவான
அறிவியல் விளக்கத்தை நியூட்டன் அறிவியல் மன்றம்
அளிக்கும். அது கட்டுரையாகவோ காணொளியாகவோ
இரண்டுமாகவோ இருக்கும்.

7) இதற்கான தயாரிப்புகளில், தரவுத் தேடலில் நியூட்டன்
அறிவியல் மன்றம் தற்போது ஈடுபட்டுள்ளது. விரைவில்
எமது அறிவியல் விளக்கம் நிரூபணத்துடன் வெளியாகும்.

8) மொத்தத் தமிழ்நாட்டிலும் ஏன் மொத்த இந்தியாவிலுமே
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே இப்பொருளில்
அறிவியல் விளக்கம் அளிக்கும் பொறுப்பை ஏற்க
முன்வந்துள்ளது என்பதை நாடறியும். இதனால்
நியூட்டன் அறிவியல் மன்றம் பெருமிதம் கொள்கிறது.

9) தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும்
வெளியாகும் எமது அறிவியல் விளக்கத்தை
அறிந்திட முந்துங்கள்.
*********************************************************************
         
திவால் நோட்டீஸ் அல்லது மஞ்சக் கடுதாசி!
------------------------------------------------------------------------------
ஒருவர் தம்முடைய சொத்து மற்றும் கடன்களை
(assets and liabilities) டிக்ளேர் செய்து, சொத்தை விடக்
கடன்கள் அதிமாகி விட்டதால், கடனைத் திரும்பிச்
செலுத்த இயலாது என்றும் அதனால் தம்மிடம்
இருந்து கடன் வசூல் செய்யும் நடவடிக்கைகளை
கடன் கொடுத்தவர்கள் நிறுத்த வேண்டும் என்று
சட்ட பூர்வமாக, ஆதாரத்துடன் நீதிமன்றத்தில்
மனுச் செய்யலாம். நீதிமன்றம் அதை ஏற்றுக்
கொண்டால் அவர் திவால் ஆனவர் (insolvent) என்று
அறிவிக்கப் படுவார்.
**
ஒருவரின் சொத்து மதிப்பு 1 கோடி என்றும், கடன்
100 கோடி என்றும் ஒருவர் அறிவிப்பார் என்றால்,
அவரை திவால் ஆனவர் என்று நீதிமன்றம் ஏற்றுக்
கொண்டால், அவரின் சொத்தை அத்தனை
கடன்காரர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு,
அவர் மீதான கடன் வசூல் முடித்து வைக்கப்படும்.
**
இவ்வாறு திவால் ஆனவர் தேர்தலில் நிற்க முடியாது.
விஜய் மல்லையா அவ்வாறு செய்தால் மட்டுமே
அவர் மீதான recovery நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
ஆனால் அவர் அவ்வாறு செய்வாரா என்பது பற்றி
யூகிக்க முடியவில்லை.    



திவால் நோட்டீஸ் கொடுப்பவர்களில் பாதிப்பேர்
உண்மையில் திவால் ஆனவர்கள். மீதிப்பேர்
கடன் கொடுத்தவனை ஏமாற்ற திவால் நோட்டீஸ்
கொடுப்பவர்கள். தங்களின் சொத்துக்களை பினாமிகள்
மூலம் பதுக்கி விடுவார்கள். நீதிமன்றத்தில் திறமையாக
வாதாடினால், நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டு
சம்பந்தப் பட்டவரை திவால் ஆனவர் என்று
அறிவித்து விடும். பெரும்பாலும் திவால் கோரிக்கைகளை
நீதியரசர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்
இருப்பார்கள். ஏனெனில் திவால் என்பது கேவலம்
என்று விதிவிலக்கின்றி எல்லா நீதியரசர்களும்
கருதுவார்கள்.  
வெண்ணிற ஆடை நிர்மலாவைப் போல
விஜய் மல்லையா மஞ்சக் கடுதாசி கொடுப்பாரா?
மூஞ்சி சுருங்கிப்போன ராமச்சந்திர மேனன்!
-------------------------------------------------------------------------------------------
விஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி எடுத்த
நடவடிக்கைகள் பற்றி அறிவோம்!

1) பிற வங்கிகளுடன் இணைந்து ஸ்டேட் வங்கி
மல்லையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக
வழக்குத் தொடரப்பட்டு, பொருளாதாரக் குற்றப்
பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்து
ஸ்டேட் வங்கி வழக்கை நடத்தி வருகிறது.

2) இதன் விளைவாக மல்லையா தேடப்படும்
குற்றவாளியாக (proclaimed offender) அறிவிக்கப்
பட்டுள்ளார்.

3) அவரின் 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
முடக்கப்பட்டு உள்ளன (attached)

4) ஸ்டேட் வங்கிக்கு மல்லையா கடன் பட்ட தொகை
ரூ 1200 கோடி. அவரின் முடக்கப் பட்ட சொத்தின்
மதிப்போ 9000 கோடி.

5) தாவூத் இப்ராஹிமைப் போல, விஜய் மல்லையாவும்
தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.

விஜய் மல்லையா தப்ப முடியுமா?
------------------------------------------------------------------
கடனைத் திரும்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா
தப்ப முடியுமா? முடியும்; அதற்கு அவர் மஞ்சள் கடுதாசி
எனப்படும் திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
In that case he will become an UNDISCHARGED INSOLVENT. That is
nothing but Vijay Malliyaa UNBECOMING of himself.

வெண்ணிற ஆடை நிர்மலா என்ற சினிமா நடிகையை
எம் ஜி ராமச்சந்திர மேனன் தமிழக மேலவையின்
உறுப்பினராக (MLC) அறிவித்தார். அனால் நிர்மலா
மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் என்பதால், அன்றைய
தமிழக ஆளுநர் எஸ்.எல்.குரானா, நிர்மலாவை
மேலவை உறுப்பினராக நியமிக்க முடியாது என்று
மறுத்து மேனனின் முகத்தில் கரியைப் பூசினார்.
இதனால் ஏற்கவே சுருக்கம் விழுந்த மேனன் மேலும்
மூஞ்சி சுருங்கிப் போனார்.

சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கருதப்பட்ட
மேனன் போன்ற முதல்வராலேயே, தான் விரும்பிய
நிர்மலாவை எம்.எல்.சி ஆக்க முடியவில்லை.
இது வரலாறு.

நிர்மலாவைப் போல், மல்லையாவும் மஞ்சள் கடுதாசி
கொடுத்தால் மட்டுமே, வங்கிகளில் இருந்து அவர்
வாங்கிய கடனைச் செலுத்தாமல் தப்பிக்க முடியும்.
வேறு வழி எதுவும் அவருக்கு இல்லை.

write off என்றால் என்ன? PCR என்பதற்கும் write offக்கும்
உள்ள தொடர்பு என்ன?
----------------------------------------
ஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்
ஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்
தெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்
என்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).

வருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)
காட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF
செய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)

ஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை?
NPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்
அது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு
பூஜ்யம் ஆகும். அதாவது  மெய்ந்நிலையில் அது asset அல்ல.
எனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்
காட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.

ஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.
அப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்
இருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி
விடுவார்கள்.

ஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு
முறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.

write off  என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்
தள்ளுபடியாகக்  கருதுவது வங்கியியல் மொழி
(banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.

இவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி
அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு
முதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து
உள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்
வங்கி விதித்து உள்ளது.

write off செய்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage
Ratioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு
ஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.

சுருங்கக் கூறின், write off  என்பது ஒரு technical matterதானே
தவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது
மிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்
ஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை
(board) மேற்கொள்ளும் முடிவு.

PCR அதிகரிக்க அதிகரிக்க வங்கியின் லாபம் குறையும்.
நஷ்டம் ஏற்படத் தொடங்கும். இது வங்கி திவாலாகும்
நிலைக்கு இட்டுச் செல்லும். எனவே வங்கிகள்
பிழைத்திருக்க வேண்டுமென்றால் (FOR SURVIVAL)
அவை வாராக் கடன்களை வசூலித்துத்தான் தீர
வேண்டும். இதுதான் வங்கிகள் இயங்கும் முறை
பற்றிய விதி.    
           
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளை முட்டாள்களும்
கோமாளிகளும் நடத்தவில்லை. வாராக்கடனை
வசூலிக்கும் வித்தை தெரியாமல் அவர்கள் வங்கி
நடத்தவில்லை, வாராக்கடனை வசூலிக்காமல் விடுவது
என்பது வங்கிகளை பொறுத்த மட்டில் தற்கொலைக்குச் சமம். எனவே விஜய் மல்லையா தப்ப முடியாது.
***********************************************************************



write off செய்யப்பட்டு வசூலான கடன் எவ்வளவு என்றால்
100 சதம் ஆகும். இங்கு பத்தாயிரம், லட்சம் என்ற அளவில்
வாங்கிய சிறுதொகையிலான கடன்களைக்
குறிப்பிடவில்லை. பல கோடி ரூபாய் அளவிலான பெரும்
நிறுவனங்கள் வாங்கிய கடன் அவ்வளவும்
முழுமையாகவோ பகுதியாகவோ வசூல் ஆகியுள்ளன.
கடன் வசூல் ஆகாவிட்டால் வங்கிகள் திவாலாகி விடும்.
எனவே வாராக்கடனை வசூலிக்க முடியாது என்ற
நினைப்பு கற்பனையே.

பாதி வசூல் முடிந்து விட்டது என்றே கூறலாம். ஸ்டேட்
வங்கியிடம் மல்லையா பட்ட கடன் எவ்வளவு? 1000 கோடி.
மல்லையாவின் சொத்து  ரூ 9000 கோடி அளவுக்கு
முடக்கப்பட்டு உள்ளது (ATTACHED). எனவே பணத்தை
மல்லையா தந்துதான் ஆக வேண்டும். இல்லையேல் அவர்
திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். திவால் நோட்டீஸ்
கொடுப்பாரா மல்லையா?
**
வெண்ணிற ஆடை நிர்மலா இதே போல் திவால்
நோட்டீஸ் கொடுத்திருந்தார். She was an undischarged insolvent.
எம்ஜி ராமச்சந்திர மேனன் அவரை எம்.எல்.சி
ஆக்க முயன்றார். முடிந்ததா? கடைசியில்
அவமானத்தால் மூஞ்சி சுருங்கிப் போனார் மேனன்.  

**
கடன் வாங்கிய ஒருவர் திவால் நோட்டிஸ் (insolvency)
எனப்படும் மஞ்சள் கடுதாசி கொடுத்தால் மட்டுமே
அவரிடம் இருந்து முழுக்கடனையும் வசூலிக்க
முடியாது. திவால் நோட்டீஸ் கொடுக்காத வரை
அவரிடம் இருந்து கடன் திருப்ப வசூலிக்கப் படும். 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!


தோழர் நாராயணன் அவர்களின் நினைவேந்தல் வெல்க!


பாதி வசூல் முடிந்து விட்டது என்றே கூறலாம். ஸ்டேட்
வங்கியிடம் மல்லையா பட்ட கடன் எவ்வளவு? 1000 கோடி.
மல்லையாவின் சொத்து  ரூ 9000 கோடி அளவுக்கு
முடக்கப்பட்டு உள்ளது (ATTACHED). எனவே பணத்தை
மல்லையா தந்துதான் ஆக வேண்டும். இல்லையேல் அவர்
திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். திவால் நோட்டீஸ்
கொடுப்பாரா மல்லையா?
**
வெண்ணிற ஆடை நிர்மலா இதே போல் திவால்
நோட்டீஸ் கொடுத்திருந்தார். She was an undischarged insolvent.
எம்ஜி ராமச்சந்திர மேனன் அவரை எம்.எல்.சி
ஆக்க முயன்றார். முடிந்ததா? கடைசியில்
அவமானத்தால் மூஞ்சி சுருங்கிப் போனார் மேனன்.  

விஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி எடுத்த
நடவடிக்கைகள் பற்றி அறிவோம்!

1) பிற வங்கிகளுடன் இணைந்து ஸ்டேட் வங்கி
மல்லையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக
வழக்குத் தொடரப்பட்டு, பொருளாதாரக் குற்றப்
பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்து
ஸ்டேட் வங்கி வழக்கை நடத்தி வருகிறது.

2) இதன் விளைவாக மல்லையா தேடப்படும்
குற்றவாளியாக (proclaimed offender) அறிவிக்கப்
பட்டுள்ளார்.

3) அவரின் 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
முடக்கப்பட்டு உள்ளன (attached)

4) ஸ்டேட் வங்கிக்கு மல்லையா கடன் பட்ட தொகை
ரூ 1200 கோடி. அவரின் முடக்கப் பட்ட சொத்தின்
மதிப்போ 9000 கோடி.

5) தாவூத் இப்ராஹிமைப் போல, விஜய் மல்லையாவும்
தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.

விஜய் மல்லையா தப்ப முடியுமா?
------------------------------------------------------------------
கடனைத் திரும்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா
தப்ப முடியுமா? முடியும்; அதற்கு அவர் மஞ்சள் கடுதாசி
எனப்படும் திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
In that case he will become an UNDISCHARGED INSOLVENT. That is
nothing but Vijay Malliyaa UNBECOMING of himself.

வெண்ணிற ஆடை நிர்மலா என்ற சினிமா நடிகையை
எம் ஜி ராமச்சந்திர மேனன் தமிழக மேலவையின்
உறுப்பினராக (MLC) அறிவித்தார். அனால் நிர்மலா
மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் என்பதால், அன்றைய
தமிழக ஆளுநர் எஸ்.எல்.குரானா, நிர்மலாவை
மேலவை உறுப்பினராக நியமிக்க முடியாது என்று
மறுத்து மேனனின் முகத்தில் கரியைப் பூசினார்.
இதனால் ஏற்கவே சுருக்கம் விழுந்த மேனன் மேலும்
மூஞ்சி சுருங்கிப் போனார்.

சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கருதப்பட்ட
மேனன் போன்ற முதல்வராலேயே தான் விரும்பிய
நிர்மலாவை எம்.எல்.சி ஆக்க முடியவில்லை.
இது வரலாறு.

நிர்மலாவைப் போல், மல்லையாவும் மஞ்சள் கடுதாசி
கொடுத்தால் மட்டுமே, வங்கிகளில் இருந்து அவர்
வாங்கிய கடனைச் செலுத்தாமல் தப்பிக்க முடியும்.
வேறு வழி எதுவும் அவருக்கு இல்லை.

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளை முட்டாள்களும்
கோமாளிகளும் நடத்தவில்லை. வாராக்கடனை
வசூலிக்கும் வித்தை தெரியாமல் அவர்கள் வங்கி
நடத்தவில்லை, எனவே விஜய் மல்லையா தப்ப
முடியாது, 

      


விஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி எடுத்த
நடவடிக்கைகள் பற்றி அறிவோம்!
----------------------------------------------------------------------------
1) பிற வங்கிகளுடன் இணைந்து ஸ்டேட் வங்கி
மல்லையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக
வழக்குத் தொடரப்பட்டு, பொருளாதாரக் குற்றப்
பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்து
ஸ்டேட் வங்கி வழக்கை நடத்தி வருகிறது.
**
2) இதன் விளைவாக மல்லையா தேடப்படும்
குற்றவாளியாக (proclaimed offender) அறிவிக்கப்
பட்டுள்ளார்.
3) அவரின் 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
முடக்கப்பட்டு உள்ளன (attached)
4) ஸ்டேட் வங்கிக்கு மல்லையா கடன் பட்ட தொகை
ரூ 1200 கோடி. அவரின் முடக்கப் பட்ட சொத்தின்
மதிப்போ 9000 கோடி.
5) எனவே யார் கை  ஓங்கி நிற்கிறது என்பதை
எல்லோரும் புரிந்து கொள்ளலாம்.


புதன், 16 நவம்பர், 2016

write off என்றால் என்ன? PCR என்பதற்கும் write offக்கும்
உள்ள தொடர்பு என்ன?
----------------------------------------
ஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்
ஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்
தெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்
என்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).
**
வருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)
காட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF
செய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)
**
ஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை?
NPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்
அது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு
பூஜ்யம் ஆகும். அதாவது  மெய்ந்நிலையில் அது asset அல்ல.
எனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்
காட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.
**
ஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.
அப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்
இருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி
விடுவார்கள்.
**
ஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு
முறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.
**
write off  என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்
தள்ளுபடியாகக்  கருதுவது வங்கியியல் மொழி
(banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.
**
இவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி
அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு
முதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து
உள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்
வங்கி விதித்து உள்ளது.
**
write off செய்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage
Ratioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு
ஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.
**
சுருங்கக் கூறின், write off  என்பது ஒரு technical matterதானே
தவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது
மிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்
ஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை
(board) மேற்கொள்ளும் முடிவு,
            
write off என்றால் என்ன?
----------------------------------------
ஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்
ஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்
தெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்
என்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).
**
வருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)
காட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF
செய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)
**
ஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை?
NPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்
அது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு
பூஜ்யம் ஆகும். அதாவது  மெய்ந்நிலையில் அது asset அல்ல.
எனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்
காட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.
**
ஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.
அப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்
இருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி
விடுவார்கள்.
**
ஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு
முறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.
**
write off  என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்
தள்ளுபடியாகக்  கருதுவது வங்கியியல் மொழி
(banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.
**
இவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி
அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு
முதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து
உள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்
வங்கி விதித்து உள்ளது.
**
write off செய்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage
Ratioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு
ஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.
**
சுருங்கக் கூறின், write off  என்பது ஒரு technical matterதானே
தவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது
மிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்
ஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை
(board) மேற்கொள்ளும் முடிவு,  
            
write off என்றால் என்ன?
----------------------------------------
ஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்
ஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்
தெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்
என்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).
**
வருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)
காட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF
செய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)
**
ஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை?
NPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்
அது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு
பூஜ்யம் ஆகும். அதாவது  மெய்ந்நிலையில் அது asset அல்ல.
எனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்
காட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.
**
ஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.
அப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்
இருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி
விடுவார்கள்.
**
ஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு
முறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.
**
write off  என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்
தள்ளுபடியாகக்  கருதுவது வங்கியியல் மொழி
(banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.
**
இவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி
அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு
முதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து
உள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்
வங்கி விதித்து உள்ளது.
**
write off செய்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage
Ratioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு
ஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.
**
சுருங்கக் கூறின், write off  என்பது ஒரு technical matterதானே
தவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது
மிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்
ஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை
(board) மேற்கொள்ளும் முடிவு,   
            
வதந்திகளில் உயிர் இல்லை. ஸ்டேட் வங்கித் தலைவர்
அருந்ததி அம்மையார் அப்படி முடிவெடுத்து (தள்ளுபடி
செய்வதாக முடிவெடுத்து) அறிவிக்கட்டும். அதன் பிறகு
பேசலாம். பொதுத்துறைகளில் ஆயிரம் குறைகள்
உள்ளன. அதை மறுக்கவில்லை. ஆனால் தனியார்மயக்
கைக்கூலிகளாய் இருக்கும் குட்டி முதலாளித்துவப்
பத்திரிகையாளர்கள் திட்டமிட்டே பொதுத்துறை
நிறுவனங்களைக் களங்கப் படுத்தும் நோக்கில்
வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். அதற்கு மக்கள்
இரையாவது இயல்பே. சமூகப் பொறுப்பு உடைய
தொழிற்சங்கங்களும் சமூகப்  பிரக்ஞை உடைய
குடிமக்களும் வதந்திகளைப் புறக்கணிக்க வேண்டும்.  
பாலன்ஸ் ஷீட் என்பதுதான் வழிகாட்டும் ஆவணம்
(guiding document). அதில் யதார்த்த நிலைமை (actual reality)
பிரதிபலிக்கப் பட வேண்டும். வாராக் கடன்களைப்
பொறுத்த மட்டில், யதார்த்தத்தில் அவை asset அல்ல.
அதாவது அவை பூஜ்யமே. பாலன்ஸ் ஷீட்டில் அவற்றைக்
கொண்டு வருதல் கூடாது. எனவே write off செய்தாக
வேண்டும். இதுதான் well established practice in vouge. எனவேதான்,
AUCA வகையில் அவை இடம் பெறுகின்றன.
**

write off மற்றும் தள்ளுபடி (waiver) என்ன வேறுபாடு?
----------------------------------------------------------------------
WAIVER (தள்ளுபடி) என்பது கொள்கை முடிவு.
மிகவும் சீரியஸான கொள்கை முடிவு (policy decision).
ஆனால், write off என்பது  ஒரு adjustment entry மட்டுமே.
தள்ளுபடி முடிவை வங்கி
நிர்வாகம் மட்டுமே எடுக்க இயலாது. அதற்கு
நிதியமைச்சகத்தின் ஒப்புதல் தேவை. (இங்கு பெருந்தொகையிலான கடனைத் தள்ளுபடி செய்வது
மட்டுமே குறிப்பிடப் படுகிறது.)     
அப்படி அல்ல, write off என்பது ஒரு tehnical matter.
write off பண்ணுவதால் திரும்ப வராது என்று  பொருள் அல்ல.
இதே போல, கடந்த பல ஆண்டுகளில் write off செய்யப்
பட்டுள்ளது. இந்த ஆண்டு அந்தச் செய்தி முக்கியத்துவம்
பெறுகிறது. அவ்வளவே. write off செய்யப்பட பல்வேறு
கடன்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வசூலாகி
உள்ளன. இதெல்லாம் ஒரு routine நடைமுறை.  

வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பதில்
ஒட்டு மொத்த வங்கித் துறையில் உள்ள AIBEA, BEFI
தொழிற்சங்கங்கள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.
தொழிற்சங்கங்களைப் புறக்கணித்து விட்டு,
நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக முடிவு எடுத்து
விட முடியாது. இதுதான் நம்பிக்கை தரும் அம்சமாகும். 
எந்தக் கடனையும் ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்யவில்லை!
பொய்யான அவதூறுகளுக்கு  ஸ்டேட் வங்கியின்
தொழிற்சங்கங்கள் கண்டனம்!
ஸ்டேட் வாங்கி ஒருநாளும் திவால் ஆகாது!
----------------------------------------------------------------------------------------------------------
வாராக் கடன்கள் என்ற இனத்தில் ரூ 7016 கோடியை
ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்து விட்டதாக ஒரு
பொய்ச் செய்தி வேகமாகப் பரவி வருகிறது.

விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ்
நிறுவனத்தின் வாராக்கடன் ரூ 1201 கோடி உட்பட,
63 நிறுவனங்களின் வாராக் கடன் தொகையான
ரூ 7016 கோடியை ஸ்டேட் வங்கி நிர்வாகம் தள்ளுபடி
செய்து விட்டதாக பொய்ச் செய்திகள் தீவிரமாக
உலா வருகின்றன.

ஸ்டேட் வங்கி நிர்வாகம் அப்படி எந்தக் கடனையும்
தள்ளுபடி செய்யவில்லை என்பதே உண்மையாகும்.
மேலும் அத்தகைய வாராக் கடன்களை வசூலிக்கத்
தேவையான எல்லா முயற்சிகளையும், சட்ட
நடவடிக்கைகள் உட்பட முடுக்கி விடப் பட்டு
இருப்பதாகவும் ஸ்டேட் வங்கி தரப்பில், வங்கி
நிர்வாகமும் தொழிற்சங்கத் தலைமையும்
கூட்டாகத் தெரிவிக்கிறார்கள்.

WRITE OFF என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வங்கியியல்
மொழியில் (banking language) தள்ளுபடி (waiver) என்று
பொருள் அல்ல என்று உறுதியுடன் தெரிவித்தனர்
நாங்கள் தொடர்பு கொண்ட AIBEA மற்றும் BEFI
தொழிற்சங்கத் தலைவர்கள்.

ரொக்க வசூலுக்கு (cash collection) பயன்படும்
இயந்திரங்களை அன்றாடம் zeroise செய்ய வேண்டும்.
அதாவது பூஜ்யத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
இது அன்றாட நடைமுறை. கிட்டத்தட்ட இதுபோன்ற
நடைமுறைதான் write off செய்வது. இவ்வாறு write off
செய்வதால், கடனைத் தள்ளுபடி செய்வதாகப்
பொருள் கொள்ளக் கூடாது. ஆனால் இந்தியா போன்ற
கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய நாட்டில்,
சமூக விரோதிகள் இவ்வாறு அவதூறுகளையும்
பொய்களையும் பரப்புவது சுலபமானது.

ஸ்டேட் வங்கி என்பது இந்தியாவின் தலைமையான
பொதுத்துறை நிறுவனம். தனியார்மயக் கைக்கூலிகளும்
சமூக விரோதிகளும் பொதுத்துறை மீது திட்டமிட்ட
முறையில் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு பொதுத்துறை
நிறுவனமான BSNL மீது "திவாலாகும் BSNL" என்ற
தலைப்பில் அவதூறுகள் பரப்பப் பட்டன. கடைசியில்
அவதூறு பரப்பிய நாச சக்திகள்தான் திவால்
ஆனார்களே தவிர, BSNL திவால் ஆகவில்லை;
ஒருநாளும் திவால் ஆகாது.

அதேபோல், வாராக்கடன்களை ஸ்டேட் வங்கி
தள்ளுபடி செய்து விட்டதாகவும், அதனால்
ஸ்டேட் வங்கி திவால் ஆகிவிடும் என்றும்
சமூக விரோதிகள் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
ஸ்டேட் வங்கி ஒருநாளும் திவால் ஆகாது என்று
அடித்துக் கூறுகிறோம்.

இந்த நாட்டின் அமைப்புரீதியாகத் திரண்ட தொழிலாளி
வர்க்கம், இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை
அழிவில் இருந்தும், தனியார்மயத் தாக்குதலில்
இருந்தும் காத்து வருகிறது. தொடர்ந்து காத்து வரும்.

ஒவ்வொரு வேலைநிறுத்தத்தின் போதும்,
நிர்வாகம்-தொழிற்சங்கம் பங்கேற்கும் இருதரப்புப்
பேச்சு வார்த்தையின் போதும், வாராக் கடன்களை
வசூலிப்பதில் தொழிற்சங்கங்கள் எவ்வளவு
அழுத்தம் கொடுக்கின்றன என்பது தொழிற்சங்க
முன்னோடிகளுக்குத் தெரியும்.

எனவே வாராக் கடன்களை வசூலிப்பதில் ஸ்டேட் வங்கி
பின்வாங்காது. அப்படிப் பின்வாங்குவதற்கு
தொழிற்சங்கங்கள் அனுமதிக்காது.
-------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: ஸ்டேட் வங்கியின் இன்பெக் தொழிற்சங்கம்

 காங்கிரஸ் சங்கமாகும். அவர்கள் விளக்கம் அளிக்காமல்
மௌனமாக இருப்பதால், அவர்களையும் சேர்த்து
AIBEA BEFI சங்கங்கள் சுமக்க வேண்டி உள்ளது.
*********************************************************************                   
தமிழகம் புதுவை இடைத்தேர்தல் முடிவுகள்!
நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்துக் கணிப்பு!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
1) தஞ்சை: டாக்டர் அஞ்சுகம் (திமுக);
அடுத்து வரும் அஇஅதிமுக வேட்பாளரை விட
16,4 சதம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி
பெற வாய்ப்பு.

2) அரவக்குறிச்சி:  கே சி பழனிச்சாமி (திமுக)
அடுத்து வரும் அஇஅதிமுக வேட்பாளரை விட
8.7 சதம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வாய்ப்பு.

3) திருப்பரங்குன்றம்: சரவணன் (திமுக)
அடுத்து வரும் அஇஅதிமுக வேட்பாளரை விட
5.1 சதம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற வாய்ப்பு.

4) நெல்லித்தோப்பு: நாராயணசாமி (காங்கிரஸ் )
அடுத்து வரும் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளரை விட
14.2 சதம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற வாய்ப்பு.
***********************************************************************


1992இல் நரசிம்மராவ்- மன்மோகன் ஆட்சிக் காலத்தில்
இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டினர் முதலீடு
செய்வதற்கு முதன் முதலில் அனுமதிக்கப் பட்டது.
செபி அமைப்பும் 1992இல் உருவாக்கப் பட்டது.
இதற்காக செபி சட்டமும் (SEBI Act 1992) 1992இல்
உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
**
ஆக, இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீடு
என்பது 1992யிலேயே வந்து விட்டது. அதாவது நரசிம்மராவ்-மன்மோகன் காலத்திலேயே. அதன் பிறகு தேவா கவுடா
பிரதமர். அதற்கும் பிறகுதான் வாஜ்பாய்
பிரதமராக இருந்தார்;  காலம் 1998-2004. இக்காலக்
கட்டத்தில் இருமுறை அவர் பிரதமராக இருந்தார். 
**
அந்நிய முதலீடு என்பது 1992லேயே வந்து விட்டது.
இதன் வளர்ச்சியின் போக்கில், P Notes என்பவை
வந்தன. அவை வாஜ்பாயாய் காலத்திற்கு
முன்னதாகவே நடைமுறைக்கு வந்து விட்டன. 
பங்கேற்பு ஆவணம் என்றால் என்ன?
Participatory Note என்றால் என்ன?
கறுப்புப் பணத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டா?
---------------------------------------------------------------------------------------------
நரசிம்மராவ் 1991-96 காலக்கட்டத்தில், இந்தியப் பிரதமராக
இருந்தார். டாக்டர் மன்மோகன்சிங் அவரிடம்
நிதியமைச்சராக இருந்தார். இவர்கள் இருவரின்
காலத்தில்தான் இந்தியப் பொருளாதாரம் முற்றிலுமாக
வலதுசாரிப் பொருளாதாரமாக மாற்றப் பட்டது.
உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகியவை
நடைமுறைப் படுத்தப்பட்டன. அதுவரை இருந்து
வந்த, உச்சரிக்க மட்டுமே பயன்பட்ட சோஷலிசம்
என்னும் சொல் அறுத்து எறியப் பட்டது.

அப்போது உலக அளவில் இருந்து வந்த
"பங்கேற்பு ஆவணம்" (Participatory Note) என்ற
முறையை இந்தியாவில் 1992இல் அறிமுகப்
படுத்தினர் நரசிம்ம ராவும் மன்மோகனும்.

பங்கேற்பு ஆவணம் (Participatory Note) என்பது
வெளிநாட்டினர் இந்தியப் பங்குச் சந்தையில்
முதலீடு செய்வதை அனுமதிக்கும் ஒரு முறை ஆகும்.
FII (Foreign Institutional Investors) என்ற அமைப்பு இந்த
P Notesஐ வெளியிடுகிறது. இதன் மூலம் எந்த ஒரு
வெளிநாட்டவரும், தமது அடையாளத்தை வெளிக்
காட்டிக் கொள்ளாமல், தமது நிறுவனங்கள் பற்றிய
விவரங்களைத் தெரிவிக்காமல் இந்தியப் பங்குச்
சந்தையில் முதலீடு செய்யலாம். இந்தியப் பங்குச்
சந்தையைக் கட்டுப் படுத்தும் செபி அமைப்புக்கு
எந்த விவரமும் தெரிவிக்காமலேயே, எந்த ஒரு
வெளிநாட்டவரும் இந்தியாவில் முதலீடு செய்யலாம்.
இதற்கு அனுமதிப்பவை இந்த P Notes.
(SEBI = Securities and Exchange Board of India).

கறுப்புப்பணம் பற்றிய ஒரு வழக்கு உச்சநீதி மன்றம்
சென்றது. வழக்கு விசாரணையைத் தொடர்ந்து,
கறுப்புப் பணத்தைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வுக்
குழு (SIT) அமைக்கப் பட்டது. கறுப்புப் பணத்தின்
ஊற்றாக P Notes இருப்பது நாடு முழுவதும் அம்பலம்
ஆனது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்,
செபி அமைப்பானது P Notes மீது ஓரளவு தன்னுடைய
பிடியை ஏற்படுத்தும் நோக்கில் ஒருசில
கட்டுப்பாடுகளை விதித்தது.

என்றாலும், காங்கிரசின் நிதியமைச்சர் ப சிதம்பரமும்
சரி, பாஜகவின் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சரி,
P Notes மீது கைவைக்கப் பயந்தனர். P Notes மீது
கடிவாளம் போட்டால், அந்நிய முதலீடு வெகுவாகக்
குறைந்து விடுமோ என்று இருவருமே அஞ்சினர்.

P Notes மீது கை வைப்பது முதலாளித்துவப்
பொருளாதாரத்தில் சுலபமான ஒன்றல்ல.
கைவைக்காமல் விட்டாலும், P Notes பெருமளவு
கறுப்புப் பணத்தை உருவாக்கி, மொத்தப்
பொருளாதாரத்தையும் சீரழித்து விடும்.

"முன்னே போனால் கடிக்கும்; பின்னே வந்தால்
உதைக்கும்" என்பதுதான்  P Noteகளின் சுபாவம்.
என்றாலும், இன்றைய உலகமயப் பொருளாதாரத்தில்,
P Notesஐ இந்தியா போன்ற முதலாளித்துவப் பொருளியல்
நாடுகளால் ஒழித்து விட முடியாது. ஆனால், அவற்றைக்
கட்டுப் படுத்தலாம்; அவற்றின் மீது கடிவாளம்
இடலாம். அறிவுள்ள ஒரு நிதியமைச்சரும் மனஉறுதி
உள்ள ஒரு பிரதமரும் இருந்தால், P Noteகளுக்கு
மூக்கணாங்கயிறு போட்டு, நாம் விரும்பும்
திசையில் அவற்றைக் கொண்டு செல்லலாம்.

எனவே, P Notes ஒடுக்கப் பட வேண்டும். கருப்புப்பண
ஒழிப்பில் மெய்யான அக்கறை இருந்தால் மோடி
அரசு இதைச் செய்ய வேண்டும். பின்விளைவுகள்
இருக்கும்; மோசமாகவே இருக்கும். அவற்றை
எதிர்கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------
           

செவ்வாய், 15 நவம்பர், 2016

கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பதன் பொருள் என்ன?
------------------------------------------------------------------------------------------------------
என்னிடம் ஒரு கோடி ரூபாய் கறுப்புப் பணம் உள்ளது.
இதை ஒழிப்பது என்றால் என்ன? இந்த ஒரு கோடி
ரூபாயையும் அரசாங்கம் கைப்பற்றுவது என்று 
பொருள் அல்ல. மாறாக, இந்த ஒரு கோடி ரூபாயை
வங்கியில் போட வைப்பது என்றே பொருள்.
வங்கியில் போடும்போது, இதுவரை நான் கணக்கு
காட்டாத ஒரு கோடி ரூபாய் என் கணக்கில்
வந்து விடுகிறது. கணக்கில் வந்த பிறகு இந்த
ஒரு கோடி ரூபாய்க்கு நான் வரி கட்ட வேண்டிய
நிலை ஏற்படுகிறது.
எவ்வளவு வரி கட்ட வேண்டும்? 30 சதம் வரி.
அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு ரூ 30 லட்சம்
வரி கட்ட வேண்டும். அவ்வளவுதான். மீதி
70 லட்சம் என்னிடம் இருக்கும்.
ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால்
ஏற்படும் நிகர பலன் இதுதான்.
---------------------------------------------------------------------------------------------------------
என்னுடைய இக்குறுங் கட்டுரை பொருளியல் கோட்பாடு சார்ந்து
எழுதப் பட்டுள்ளது. இது அரசியல் கட்டுரை அல்ல.
சதா சர்வ காலமும் மோடி ஜெபம் பண்ணிக்
கொண்டிருப்பது நம்மால் இயலாதது. ஒரு முதலாளித்துவப்
பொருளாதாரத்தில், கருப்புப்பணத்தை எப்படிக்
கையாள்வார்கள் என்பது குறித்தே எமது கட்டுரை.
இது ஏற்கனவே 1978இல் மொரார்ஜி தேசாய் காலத்தில்
செய்யப்பட்ட ஒன்று.
---------------------------------------------------------------------------------------------------------
எந்த ஒரு பொருளாதாரத்திலும் சில ஒழுங்குகள் உண்டு.
முதலாளியப் பொருளாதாரத்திலும் சில ஒழுங்குகள் உண்டு.
சில பல முதலாளிகள் (capitalists) இந்த ஒழுங்கை மீறும் போது,
அதுவும் அடிக்கடி மீறும் போது, அவர்களை ஓரளவு
கட்டுக்குள் வைக்க வேண்டிய தேவை முதலாளியப்
பொருளாதாரத்திற்கு ஏற்படுகிறது. அப்படி ஓரளவு கட்டுக்குள்
வைக்க முயலும் நடவடிக்கைதான் இது. இதற்கு மேல்
இதில் எதுவும் இல்லை. கருப்புப்பண ஒழிப்பு என்ற பெயரில்,
நமது வசீகரமான கற்பனைகளுக்கு முதலாளித்துவப்
பொருளியலில் இடம் இல்லை. இங்கு மோடி, மொரார்ஜி
தேசாய் என்பவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் கிடையாது.
அவர்கள் முதலாளிய பொருளியலில் பிரதிநிதிகள். அவ்வளவே.     

முதலாளித்துவப் பொருளாதாரம் ஒரு பிரச்சினையை
எப்படிச் சமாளிக்கும் என்பது பற்றி மட்டுமே எமது
கட்டுரையும் கருத்துக்களும் அமைந்துள்ளன. அவற்றில்
அரசியல் அம்சங்கள் குவிமையமாக இல்லை. மொரார்ஜி
தேசாய் காலத்தில், இணையதளம், முகநூல், மொபைல்
போன்ற வசதிகள் இல்லை. இன்று உள்ளது. ஆக தொழில்நுட்பம்
இந்த வேறுபாட்டை ஏற்படுத்தி உள்ளது.


எமது கட்டுரைகள் மோடி பற்றிய அரசியல் விமர்சனக்
கட்டுரைகள் அல்ல. அவை பின்னர் எழுதப்படும். தற்போது,
முதலாளித்துவப் பொருளாதாரம் குறித்த, academic தன்மையில்
அமைந்த குறுங் கட்டுரைகளே எழுதப் பட்டுள்ளன. அருள் கூர்ந்து
எல்லாக் கட்டுரைகளையும் படிக்கவும். அவை என்னுடைய
டைம்லைனில் உள்ளன.
கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பதன் பொருள் என்ன?
------------------------------------------------------------------------------------------------------
என்னிடம் ஒரு கோடி ரூபாய் கறுப்புப் பணம் உள்ளது.
இதை ஒழிப்பது என்றால் என்ன? இந்த ஒரு கோடி
ரூபாயையும் அரசாங்கம் கைப்பற்றுவது என்று 
பொருள் அல்ல. மாறாக, இந்த ஒரு கோடி ரூபாயை
வங்கியில் போட வைப்பது என்றே பொருள்.
வங்கியில் போடும்போது, இதுவரை நான் கணக்கு
காட்டாத ஒரு கோடி ரூபாய் என் கணக்கில்
வந்து விடுகிறது. கணக்கில் வந்த பிறகு இந்த
ஒரு கோடி ரூபாய்க்கு நான் வரி கட்ட வேண்டிய
நிலை ஏற்படுகிறது.
எவ்வளவு வரி கட்ட வேண்டும்? 30 சதம் வரி.
அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு ரூ 30 லட்சம்
வரி கட்ட வேண்டும். அவ்வளவுதான். மீதி
70 லட்சம் என்னிடம் இருக்கும்.
ரூ 500, ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால்
ஏற்படும் நிகர பலன் இதுதான்.
---------------------------------------------------------------------------------------------------------
கறுப்புப் பணம்
அரசாங்க கான்டராக்ட் மூலம் மார்க்சிஸ்ட் கயவர் சமர் ஆச்சார்ஜிக்கு கிடைத்த கமிஷன் ரூ 2.5 கோடி. இதற்கு
அவர் 30 சதம் வரி கட்ட வேண்டும். அதாவது ரூ 75 லட்சம்
வரி கட்ட வேண்டும். அதை அவர் கட்டவில்லை. இதுதான்
கறுப்புப் பணம். அதாவது வரி கட்டாத பணம்.

நடந்து விட்டது! (கவனிக்கவும்: இறந்த காலம்)
அண்ணல் அம்பேத்கார் அன்றே நடத்திக் காட்டி விட்டார். 
கறுப்புப் பணத்தின் அளவு (ரொக்கமாக)
--------------------------------------------------------------------------
1) கறுப்புப்பணம் ரொக்க வடிவில் இருக்கிறதா இல்லையா?
2) இருந்தால் எவ்வளவு இருக்கிறது?
என்பதுதான் இந்தப் பதிவு. எமது கட்டுரையில்
கறுப்புப்பணம் ரொக்க வடிவில் இருக்கிறது என்று
நிரூபித்துள்ளோம். இதை மறுப்பவர்கள் தங்களின்
கருத்தை நிரூபிக்க வேண்டும்.
**
இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள, அடிப்படையான
பொருளியல் கோட்பாடுகளில் பரிச்சயம் இருக்க
வேண்டும். இந்தப் பதிவுக்குத் தொடர்பற்ற கருத்துக்களில்
விவாதம் மேற்கொள்ள இயலாது.
ரொக்கமாக உள்ள கறுப்புப் பணம் பூஜ்யமா?
யெச்சூரி கூறுவது உண்மையா?
-------------------------------------------------------------------------------------
கறுப்புப்பணம் என்பது ரொக்கப்பணமாக இல்லை
என்கிற பொய்மையை மக்களிடம் பரப்பி வருகிறார்கள்
பலர். கறுப்புப் பணம் ரொக்கமாக இல்லை என்கிறார்
சீத்தாராம் யெச்சூரி. ஒருவேளை அவரிடம் உள்ள
கறுப்புப் பணத்தைச் சொல்கிறாரோ என்னவோ!

திபங்கர் பட்டாச்சார்யாவும் இதையே கூறுகிறார்.
யார் இவர்? இவர் CPI ML (Liberation) குழுவின் தலைவர்.
கறுப்புப் பணமானது ரொக்கமாக, அதாவது ரூ 500,
ரூ 1000 நோட்டுகளாக இல்லை என்கிறார்கள் இவர்கள்.

இது உண்மையா? இல்லை. கறுப்புப் பணம்
ரொக்கமாகவும் இருக்கிறது என்பது உண்மை.
அப்படியானால் ரொக்கமாக உள்ள கறுப்புப் பணம்
எவ்வளவு? பூஜ்யம் என்கிறார்கள் யெச்சூரியும்
திபங்கரும். நாம் இதை மறுக்கிறோம்.

கறுப்புப்பணம் ரொக்கமாகவும் இருக்கிறது என்று
அடித்துக் கூறுகிறோம் நாம். இங்கு "ரொக்கமாகவும்"
என்பதில் ஓர் "உம்மை" இருக்கிறது. இது அனைவரின்
கவனத்திற்கும் உரியது. உம்மை பல வகைப்படும்
என்று தமிழ் இலக்கணம் பயின்றோர் அறிவர்.
இங்குள்ள வாக்கியத்தில் அது எண்ணும்மை
என்கிறோம். எண்ணும்மை என்றால் என்ன என்பது
குறித்தெல்லாம் இங்கு விளக்கப் போவதில்லை.
விளக்கம் வேண்டுவோர் பேராசிரியர் முனைவர்
ந தெய்வசுந்தரம் அவர்களிடம் பாடம் கேட்கவும்.

ரொக்கமாக உள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பது
குறித்து ரிசர்வ் வங்கியிடம் புள்ளி விவரங்கள்
உள்ளன. நாம் அவற்றையெல்லாம் சிரமப் பட்டுப்
படிக்க வேண்டாம். நம்பவும் வேண்டாம்.
ரொக்கமாக உள்ள கறுப்புப் பணத்தைக் கணக்கிட
ஒரு விதி உள்ளது. இது ஒரு கட்டை விரல் விதி
(thumb rule). இதன்படி, இந்தியாவில்,
(repeat இந்தியாவில்) உள்ள ரொக்க வடிவிலான
கருப்புப்பணத்தின் அள்வு எவ்வளவு குறைத்து
மதிப்பிட்டாலும் 10 சதத்திற்குக் குறையாது என்பதே
கட்டை விரல் விதி.

மேலும் சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்
போதோ, தீவிர அரசியல் செயல்பாடுகளின் போதோ,
நாடு தழுவிய பயங்கரவாதச் செயல்பாடுகளின் போதோ,
ரொக்க வடிவிலான கறுப்புப் பணத்தின் அளவு
அதிகரிக்கும் என்கிறது இக்கட்டை விரல் விதி.

எவ்வளவு அதிகரிக்கும்? 30 சதம் வரை அதிகரிக்கும்.
ஆக, எப்படிப் பார்த்தாலும், ரொக்க வடிவிலான
கறுப்புப் பணத்தின் அளவு குறைந்தபட்சமாக
10 சதமும் அதிகபட்சமாக 30 சதமும் மட்டுமே
இருக்கும். மீண்டும் சொல்கிறோம், இந்தக் கணக்கு
இந்தியாவைப் பொறுத்தது மட்டுமே.

ஏன் இந்தியாவுக்கு மட்டும் என்று அழுத்தம் தர
நேர்கிறது? காரணம் இதுதான். இந்தியாவில் பணப்
பரிவர்த்தனை ரொக்கமாக மட்டுமே நடைபெறுகிறது.

ரொக்கமில்லாப் பரிவர்த்தனை (cashless economy)
இந்தியாவில் மிகவும் குறைவு. அமெரிக்க, ஐரோப்பிய
நாடுகளில் ரொக்கமற்ற பரிவர்த்தனை மேலோங்கி
நிற்கிறது. இந்தியாவில் நகர்ப்புறத்தில் மட்டுமே,
படித்த இளைஞர்கள் டெபிட் கார்டுகள், கடன் அட்டைகள்,
net banking ஆகியவற்றின் மூலம் ரொக்கமற்ற
பரிவர்த்தனையில் ஈடுபடுகிறார்கள். மெத்தப்படித்த
வயதானவர்கள் net banking வேண்டாம் என்று
தவிர்த்து விடுகிறார்கள்.

SBI buddy, pay tm போன்ற ஏற்பாடுகள் குறித்து அறிந்தோரும்
அவற்றைப் பயன்படுத்துவோரும் இந்தியாவில்
மிகவும் குறைவு. அமேசான், பிளிப்கார்ட் ஆகியவற்றை
எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?

ரயில் டிக்கட் புக் பண்ணுவது, ரெட் பஸ் மூலம் பஸ்
டிக்கட் புக் பண்ணுவது, தியேட்டரில் சினிமாவுக்கு
டிக்கட் புக் பண்ணுவது, மின்சாரக் கட்டணம்,
மொபைல் கட்டணம் செலுத்துவது, துணி வாங்குவது
என்று பல்வேறு பணிகளை ரொக்கமற்ற முறையில்
(cashless) மேற்கொள்ளுவோர் இந்தியாவில் மிக மிகச்
சிலரே. எனவே, ரொக்கப் பரிவர்த்தனை மட்டுமே
மேலோங்கி நிற்கும் ஒரு நாட்டில் கறுப்புப்பணம்
மட்டும் ரொக்கமற்றதாக இருக்கும் என்று கருதுவது
மடமையில் எல்லாம் மடமை ஆகும்.

ஆக, ரொக்க வடிவிலான கறுப்புப் பணம் என்பது
பூஜ்யம் தான் என்று சீத்தாராம் யெச்சூரி முதல்
திபங்கர் பட்டாச்சாரியா வரையிலான அறிஞர்கள்
கூறுவது முற்றிலும் தவறு. இதை இக்கட்டுரையில்
நிரூபித்துள்ளோம். QED.
------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
---------------------------
"கறுப்புப்பணம் என்பது ஓர் ஆக்டோபஸ். அதாவது
ஆயிரங்கால் பூச்சி.இந்தப் பூச்சியின் சில கால்கள்
தற்போது வெட்டப் படுகின்றன. If you want to quantify it,
let it be, say, 100. மீதமுள்ள 900 கால்கள் வெட்டப்படவில்லை." 
---- வின் தொலைகாட்சி விவாதத்தில் நியூட்டன்
அறிவியல் மன்றம் கூறியது. யூடியூப் காணொளியாக
உள்ளது. இங்கு முன்னரே பகிரப்பட்டது.
******************************************************************