வியாழன், 31 ஜனவரி, 2019

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலுமா?
-------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது
36 ஆண்டுகளுக்கு முன்பு, 1982ல் இந்தியாவில்
முதன் முதலாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரம்
(Electronic Voting Machine)  அறிமுகப் படுத்தப்பட்டது.
பரீட்சார்த்த முறையில் கேரள மாநிலம் வடக்கு பரவூர்
தொகுதியின் சில வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு
வாக்குப் பதிவு எந்திரங்கள்  மூலம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
(இனி இக்கட்டுரையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்பது
EVM என்று குறிக்கப்படும்).

தேர்தலில் EVMகளை அறிமுகப்படுத்தியதன் மூலம்
இந்திய அரசு அறிவியலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. .
1999ல் சிறிய மாநிலமான கோவாவில் தேர்தல்
முழுவதுமே EVM மூலமாக நடத்தப்பட்டது. இதுதான்
EVM மூலமாக நடைபெற்ற முதல் மாநில சட்டமன்றத்
தேர்தல் ஆகும்.

பின்னர் நாடு முழுவதும் 2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்
முற்றிலுமாக EVM மூலம் நடைபெற்றது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் EVM மூலம்
நடத்தப்பட்ட முதல் தேர்தல் இதுதான்.
அடுத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலும் ,
2014 நாடாளுமன்றத் தேர்தலும் EVM  மூலமாகவே நடைபெற்றன.

ஆக,  தொடர்ச்சியாக மூன்று நாடாளுமன்றத்
தேர்தல்கள் EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன.
இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து
மாநில சட்டமன்றத் தேர்தல்களும், பல்வேறு இடைத்தேர்தல்களும் EVM மூலமாகவே
நடைபெற்றன. 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு 113 சட்ட மன்றத் தேர்தல்களும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களும்
EVM மூலமாகவே நடைபெற்றுள்ளன. இவ்வாறு இந்தியத்
தேர்தல்களில் நிலைபேறு உடையதாக EVM ஆகிவிட்டது.

வாக்களித்த சின்னத்துக்கே வாக்கு பதிவாகுதல்!
---------------------------------------------------------------------------------
டாக்டர் சுப்பிரமணியம் சாமி EVM குறித்து பல்வேறு
சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடுத்தார்.வாக்காளர்கள் தாங்கள் என்ன
சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை
அறிந்திட ஏதேனும் ஒரு நிரூபணம்  தரப்பட
வேண்டும் என்றும் EVMகளில் அத்தகைய நிரூபணம்
இல்லை என்றும் டாக்டர் சுவாமி டில்லி உயர்நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது வழக்கு
தள்ளுபடியானது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாக்டர் சுவாமி
மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் மனுதாரர்
கோரியவாறு ஒரு நிரூபணத்தை வழங்க வேண்டும்
என்று தீர்ப்பளித்தது. பிரசித்தி பெற்ற இந்தத்
தீர்ப்பை வழங்கியவர் அன்றைய உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதியரசர் சதாசிவம் அவர்கள்.

இத்தீர்ப்பின் விளைவாக VVPAT (Voter Verifiable Paper Audit Trail)
என்னும் கருவி EVMகளில் பொருத்தப்
பட்டது. வாக்களித்த பின்னர் எந்தச் சின்னத்துக்கு
வாக்களித்தோம் என்று வாக்காளர் சரி பார்க்கும் வசதி இது.

ஒரு கண்ணாடிப் பேழைக்குள் உள்ள காகிதத்தில்
நாம் வாக்களித்த வேட்பாளரின் பெயரும் அவரின்
தேர்தல் சின்னமும் தெரியும். 7 நொடிகள் வரை தெரியும்
இந்தக் காட்சியை வாக்களித்தவர்கள் பார்க்கலாம்.

ஏழு நொடிகளுக்குப் பின்னர் அக்காகிதம் பேழையின் அடியில் சேமிக்கப்பட்டு விடும். வாக்களித்ததற்கான ரசீது போல இருக்கும்
இக்காகிதத்தை வாக்காளர்கள் தொடவோ வீட்டுக்கு
எடுத்துச் செல்லவோ முடியாது. பார்க்க மட்டுமே முடியும். இருப்பினும் தான் வாக்களித்த
சின்னத்திற்குத்தான் தனது வாக்கு பதிவாகி உள்ளது
என்னும் மன நிறைவை இதன் மூலம் வாக்காளர்
.அடைகிறார்.

பரீட்சார்த்த முறையில் முதன் முதலாக நாகாலாந்து
மாநிலத்தில் உள்ள நோக்சென் (Noksen) சட்டமன்றத்
தொகுதியில் செப்டம்பர் 2013ல் VVPAT பயன்படுத்தப் பட்டது.
தொடர்ந்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோடித்
திட்டம் என்ற பெயரில் 543 நாடாளுமன்றத்
தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டும் VVPAT அறிமுகப்
படுத்தப் பட்டது. அந்த எட்டில் மத்திய சென்னைத்
தொகுதியும் ஒன்று.

நாட்டின் 543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்
பட்ட EVM மூலமாகவே வாக்குப் பதிவு நடக்க
வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தேர்தல்
ஆணையத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. எனவே
நடைபெற்று வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில்
543 தொகுதிகளிலும் VVPAT இணைக்கப்பட்ட
EVMகளே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.. 

இந்த இடத்தில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா பற்றிக்
குறிப்பிட்டே  ஆகவேண்டும்.பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தில் பொறியாளராக இருந்த சுஜாதா EVMஐ
உருவாக்கியவர்களில் ஒருவர். 1982ல் நடந்த வடக்கு பரவூர் (கேரளம்) தேர்தலில், சுஜாதாவே நேரடியாக தொகுதிக்குச் சென்று
EVMஐ இயக்கிக் காட்டினார். இன்று பிரம்மாண்டமாக
வளர்ந்து நிற்கும் மின்னணு வாக்களிப்பின் மூலவித்து அவரே.

பிற நாடுகளில் EVM மூலம் வாக்களிப்பு இல்லையா?
----------------------------------------------------------------------------------------
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டபோது, நாம் ஏன் EVMகளைப்
பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி
EVM எதிர்ப்பாளர்களால் எழுப்பப் படுகிறது.

அமெரிக்கர்கள் பலரும் ஒரே மனைவியோடு
காலம் பூராவும் வாழ்வதில்லை. நாம் ஏன் ஒரே மனைவியுடன்
காலம் முழுவதும் வாழ வேண்டும் என்ற கேள்விக்கும் இதற்கும்
பெரிய வேறுபாடு இல்லை.

மேலும் அமெரிக்காவும் எல்லா ஐரோப்பிய நாடுகளும்
EVM முறையைக் கைவிட்டு காகித வாக்குச் சீட்டு
முறைக்கு வந்து விட்டன என்று கூறுவதும் உண்மையல்ல.
அமெரிக்காவில் 27 மாநிலங்களில் இந்தியாவில் உள்ளது
போன்ற EVM மூலம் வாக்களிக்கும் முறை இன்னமும் உள்ளது.
.
ஒரு சில நாடுகள் காகித வாக்குச்சீட்டு முறைக்குத்
திரும்பி இருப்பது உண்மையே. ஜெர்மனியில்
அந்நாட்டு உச்சநீதிமன்றம் (German Constitutional Court) 2009ல்
வழங்கிய தீர்ப்பின்படி, ஜெர்மனி காகித வாக்குச்சீட்டு
முறைக்குத் திரும்பி இருக்கிறது. இது போல ஒரு
சில நாடுகள், அங்குள்ள குறிப்பான சூழல்கள்
காரணமாக EVM முறையைக் கைவிட்டுள்ளன.

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது,
கள்ள ஓட்டுப் போடுவது, மக்களில் சில பிரிவினரை
வாக்களிக்க விடாமல் தடுப்பது,
தேர்தல் அதிகாரியை மிரட்டி தேர்தல் முடிவை
மாற்றிச் சொல்லுவது ஆகிய நடைமுறைகள்
மேற்கூறிய நாடுகளில் இல்லை என்பதால்
வாக்குச்சீட்டு முறைக்கே மீண்டும் திரும்புவதால்
அங்கெல்லாம் எந்த நஷ்டமும் கிடையாது.
இந்தியாவில் அப்படி அல்ல. வாக்குச் சீட்டு
முறைக்குத் திரும்புவதானது எவ்விதத்திலும்
நிலைமையைச் சீராக்காது என்பதுடன் முன்னிலும்
மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும்.

சரி, ஜெர்மனி போன்ற நாடுகள் ஏன் EVMகளைக்
கைவிட்டன? அங்கெல்லாம் ஒட்டு மொத்த தேர்தல்
நடைமுறையுமே முழுவதுமாகக் கணினிமயம்
ஆக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவிலும் அப்படியே.
அதாவது வேட்பு மனு தாக்கல் செய்வது முதல்
வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பது
வரை அனைத்துமே கணினிமயம்.

இதன் காரணமாக அந்நாடுகளின் EVMகள் தகவல்
தொடர்பு வலைப்பின்னலுடன் இணைக்கப்
பட்டவையாக இருந்தன (connected to a communication network).
வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட EVMகளில்
மிகவும் சுலபமாக மோசடி செய்ய முடியும்.
அதாவது அத்தகைய EVMகளின் முடிவுகளை
எவர் வேண்டுமானாலும் எங்கிருந்து கொண்டேனும்
எளிதில் முறைகேடாக மாற்றியமைக்க முடியும்.

நம் நாட்டின் தனித்த கணினிகள்!
------------------------------------------------------------
நம் நாட்டின் EVMகள் அனைத்தும் எந்த
வலைப்பின்னலுடன் இணைக்கப்படாத தனித்த
கணினிகள் (standalone and non networked).
நம் நாட்டில் ஒட்டு மொத்த தேர்தல் நடைமுறையும்
முழுவதுமாகக் கணினிமயம் ஆக்கப் படவில்லை.
வாக்குப்பதிவு மட்டுமே இங்கு கணினி மூலமாக
(அதாவது EVMகள் மூலமாக) நடைபெறுகிறது. மீதி
அனைத்தும் மனிதச் செயல்பாடுகள்தான் (manual actions).

எனவே மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், நமது
EVMகள் அனைத்தும்  தனித்தவையாக வலைப்பின்னலுடனும் இணைக்கப் படாதவையாக
(stand alone and non networked) இருப்பதால், இவற்றை
ஹேக் (hack) செய்வது எளிதல்ல.இந்த அம்சத்தில் இவை பிற நாடுகளின் EVMகளை விடப் பாதுகாப்பானவை.

வீட்டில் கதவைப் பூட்டிக் கொண்டு பாதுகாப்புடன்
இருக்கும் பெண் போன்றது தனித்த EVM.
வெளியில் நெரிசலில் சாலையில் நடந்து செல்லும் பெண்
போன்றது வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்ட EVM.

நம் நாட்டின் EVMகளுடன் எந்த ஒரு
"தொடர்புக்கருவி"யையும் (communication device)
பொருத்த முடியாது. அதாவது ஒரு ப்ளூ டூத் (Bluetooth) கருவியையோ
அல்லது வேறு ஏதாவது வயர்லெஸ் கருவியையோ
(Wi-Fi device) நம் நாட்டு EVMகளில் பொருத்த முடியாது.
பொருத்தவே முடியாதபோது, அதை வெளியே வேறொரு இடத்தில் இருந்து கொண்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குவது
என்ற பேச்சுக்கே இடமில்லை.

எந்த அதிர்வெண்ணில் (any frequency) சமிக்ஞைகள்
அனுப்பப் பட்டாலும், அதைப் பெறுவதற்கான
எந்தவொரு ஏற்பியும் (frequency receiver) நம் EVMகளில் கிடையாது. 
ஈரிலக்க முறையில் (digital) வரும் சமிக்ஞைகளை
குறியீட்டு நீக்கம் செய்யவல்ல எந்தவொரு குறியீட்டு
நீக்கியும் (decoder) நம் EVMகளில் கிடையாது.

அறிவியல் மாணவர்கள் பயன்படுத்தும் கால்குலேட்டர்
போன்றதே நமது EVM. உங்கள் வீட்டில் உங்கள் மேஜையில் இருக்கும் கால்குலேட்டரில் வெளியில் வேறெங்கோ இருந்து கொண்டு
ஒருவரால் திருத்தம் செய்ய இயலாதல்லவா! அதைப்போலவே
நம் நாட்டு EVMகளிலும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் திருத்தம் செய்ய இயலாது.


ஒருவேளை வாக்குச் சாவடிக்குள் புகுந்து EVMகளைக்
கைப்பற்றி விட்டால், EVMகளுடன் ஒரு  நேரடித்
தொடர்பு (physical access) கிடைத்து விடுகிறதே! அப்போது
தக்க தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு
EVMகளில் முறைகேடாகத் திருத்தம் செய்து, யாருக்கோ விழுந்த
வாக்குகளைத் தாம் விரும்பும் கட்சிக்குத் திருப்பி
விட இயலுமா? ஒருபோதும் இயலாது.
எப்படிஎன்பதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.


மூன்று வகை எந்திரங்கள்!
-----------------------------------------------
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும்
EVMகள் M1, M2, M3  என்னும் மூன்று வகைப்பட்டவை.
ஆரம்ப காலத்தில் M1 வகை எந்திரங்களே பெருமளவில்
தயாரிக்கப்பட்டு பல்வேறு  தேர்தல்களில் பயன்பட்டன.
இவற்றில் VVPATகளைப் பொருத்த இயலாது. எனவே இவை
இன்று பயன்படாது.

பின்னர் 2006-2012 காலக்கட்டத்தில் M2 வகை எந்திரங்கள்
தயாரிக்கப் பட்டன. விரும்பத்தகாத எவரும் இவற்றில்
உள்ள தரவுகளைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கில்
தரவுகளைக் குறியீடாக  (code) மாற்றிப் பாதுகாக்கும்
என்கிரிப்ஷன் (encryption) வசதி M2 வகை எந்திரங்களில்
செய்யப்பட்டு இருந்தது.

2013க்குப் பிறகு M3 வகை எந்திரங்கள் மட்டுமே
தயாரிக்கப் பட்டு வருகின்றன.
543 தொகுதிகளுக்கும் தேவையான எந்திரங்களை
வைத்திருக்கும் பொருட்டு, ஏற்கனவே உள்ளவை போக
மேலும் 9 லட்சம் M3 எந்திரங்கள் தருவிக்கப்பட்டன. இனி
மொத்தத் தேர்தலையும் M3 வகை எந்திரங்களை
மட்டுமே கொண்டு நடத்தக்கூடிய விதத்தில்
தேவையான அளவு M3 எந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.

2019 நாடாளுமன்றத்  தேர்தலுக்காக இந்தியத் தேர்தல்
ஆணையம் பின்வரும் M-3 வகை EVMகளை இருப்பில் வைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகள் = 10.6 .லட்சம்.
Ballot Units = 22.3 லட்சம்
Control Units = 16.3 லட்சம்
VVPATs = 17.3 லட்சம். 

M3 வகை எந்திரங்களின் சிறப்பு என்னவெனில்,
இவற்றில் முறைகேடு செய்ய  எவரேனும் முயற்சி
செய்தால், இந்த வகை எந்திரங்கள் உடனே
செயல்படாமல் நின்றுவிடும் (will stop functioning).
எனவே வாக்குச் சாவடிக்குள் புகுந்து EVMகளைக்
கைப்பற்றி, EVMகளைக் கையாள முடிகிற ஒரு நேரடித் தொடர்பு
(physical access) கிடைத்தாலும், எந்தத் தொழில்நுட்ப
வல்லுநராலும் முறைகேடு எதையும் செய்ய முடியாது. 

காலந்தோறும் EVMகள் குறித்து  வேட்பாளர்கள்,
மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்கள் கருத்தில்
கொள்ளப்பட்டு, தேவையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் EVMகள் தொடர்ந்து மேம்பாடு அடைந்து கொண்டே வருகின்றன. EVMகளின் வரலாற்றில், கடைசியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.எவரேனும் முறைகேடு  செய்ய முயலும்போது எந்திரம்  செயல்படாமல் நின்று விடும். இதன் மூலம் அனைத்து முறைகேடுகளுக்குமான கதவு நிரந்தரமாக அடைக்கப்பட்டு விடுகிறது. ஒரு சின்னத்துக்கு விழுந்த வாக்குகளை
இன்னொரு சின்னத்துக்கு மாற்றி விடுவார்களோ
என்ற அச்சத்திற்கு இனி இடமில்லை.
   
பொதுத்துறை நிறுவனங்களின் தயாரிப்பு!
---------------------------------------------------------------------------
EVMகளை (VVPAT உட்பட)   .
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ( BEL)
எலக்ட்ரானிக் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா (ECIL)
ஆகியு இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
EVMகளின்  மென்பொருளான சோர்ஸ் கோடை (source code)  இவ்விரு நிறுவனங்களிலும் உள்ள தெரிந்தெடுக்கப்பட்ட சில பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழு .தயாரிக்கிறது.
இந்த சோர்ஸ் கோட் சோதிக்கப்பட்டு மதிப்பிடப்படுகிறது.
பின்னர் இந்த சோர்ஸ் கோடானது  மெஷின் கோடாக மாற்றப்
படுகிறது (source code is converted into machine code). இவை அனைத்தும் மிகவும் பாதுகாப்பான கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடைபெறுகின்றன. 

சோர்ஸ் கோட் (source code) என்பது ஒரு கணினி என்ன வேலை
செய்ய வேண்டுமோ, அந்த வேலையைச் செய்வதற்கான
கட்டளைகளின் தொகுப்பு. இது கணினி நிரலாளர்களால்
(computer programmers) கணினி நிரல் மொழியில் (computer programming language) எழுதப்படுகிறது. ஜாவா, ஆரக்கிள், C, C++ ஆகியவை
பலரும் அறிந்த கணினி நிரல் மொழிகள் ஆகும்.

சோர்ஸ் கோடை கணினி பற்றித் தெரிந்த எவரும் படித்துப்
புரிந்து கொள்ளக் கூடும். ஏனெனில்  இது வாசிக்கத்தக்க
மொழியில்தான் (readable language) இருக்கும். இந்தியாவில் இது
ஆங்கிலத்தில் இருக்கிறது. எவரும் சோர்ஸ் கோடை படித்து  விடாமல் தவிர்க்கும் பொருட்டு, சோர்ஸ் கோடானது மெஷின் கோடாக மாற்றப் படுகிறது. மெஷின் கோட் என்பது
எந்திரத்துக்குப்  புரியக் கூடிய மொழியில் இருக்கும்.
அதாவது  பைனரி, ஹெக்சா டெசிமல் அல்லது இவற்றின் கலவையாக இருக்கும். தமிழோ ஆங்கிலமோ அல்லது சமஸ்கிருதமோ எதையுமே மெஷின் புரிந்து கொள்ளாது.

பழைய M1, M2 வகையிலான EVMகளில், மெஷின் கோடானது
நுண்கட்டுப்படுத்திகளில் (micro controllers) எழுதப்பட்டு இருக்கும்.  இதற்காக மெஷின் கோடை நுண்கட்டுப்படுத்திகளைத் தயாரிப்போரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள்  அதை
OTP (One Time Programmable) என்னும் முறையில் எழுதுவார்கள்.
OTP என்றால் ஒரு முறை எழுதப்பட்ட புரோகிராமை
மாற்றவோ திருத்தவோ அழித்து எழுதவோ முடியாது
மென்பொருள். தயாரிப்பின்போது எழுதப்படும் இந்த
புரோகிராமை பின்னர் வேறு எந்த நேரத்திலும் மாற்ற முடியாது.

2013க்குப் பிறகான M3 வகை EVMகள் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் மேம்பட்டவை. இவற்றில் மெஷின் கோடை OTP முறையில் எழுதுவதற்காக நுண்கட்டுப்படுத்திகளைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, BEL, ECIL நிறுவனங்களின் வளாகத்திலேயே
இந்த வேலை நடந்து விடும். அதாவது EVMன் சில்லுக்கு
உள்ளேயே (within the chip) மெஷின் கோடானது பதிந்து
வைக்கப்பட்டு விடுகிறது. பிற தனியார் நிறுவனங்களின்
தயவின்றி, EVMஐத் தயாரிக்கும் நமது பொதுத்துறை
நிறுவனங்களே இந்த வேலையைச் சொந்தமாகச் செய்து விடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது.
இதன் மூலம் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட வேண்டிய
மெஷின் கோட் பற்றிய விவரத்தை எந்த ஒரு வெளி
நிறுவனத்துக்கும் தெரியப் படுத்த வேண்டிய தேவை
இல்லாமல், அனைத்து ரகசியங்களும்  EVMகளைத் தயாரிக்கும்
BEL, ECIL நிறுவனங்களுக்கு உள்ளேயே அடங்கி விடுகின்றன.

EVM செல்லும் வழியெங்கும் கண்காணிப்பு!
----------------------------------------------------------------------------
இந்தியத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு EVMக்கும் ஒரு தனித்த எண்ணை (unique number) வழங்குகிறது. இந்த எண்ணே ஒரு
EVMன் அடையாளம் (identity) ஆகும். இந்த எண் தேர்தல் ஆணையத்தின் தரவகத்தில் (database) பதிவு செய்யப் படுகிறது.

மேலும் ஒரு EVM எங்கு கொண்டு செல்லப் பட்டாலும்
அதன் பாதை (track) முழுவதும் கண்காணிக்கப் படுகிறது.
இதற்காக "பாதை கண்காணிப்பு மென்பொருள்"
எனப்படும் ETS  (EVM Teacking Software)என்னும் மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது இதன் மூலம் எந்த ஒரு நேரத்திலும்
ஒரு EVMன் அடையாளத்தையும் அது எங்கு இருக்கிறது
என்பதையும் கண்டறிய இயலும்.

வாக்குச் சாவடிகளில் EVM!
----------------------------------------------
EVM குறித்து அறிய வேண்டிய பல்வேறு தொழில்நுட்ப
விவரங்களை விரிவாகப் பார்த்தோம். இவை தயாரிப்பு
மற்றும் வடிவமைப்பு சார்ந்தவை. இவை அனைத்தும் தொழில்நுட்ப  அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் (technological safeguards).
இவ்வாறு மிகுந்த அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட EVMகள் வாக்குச்
சாவடிகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் பார்ப்போம்.
இவை நிர்வாக அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் (Administrative safeguards)

எந்த EVM எந்தத் தொகுதிக்கு அனுப்பப் படுகிறது
என்பது முற்றிலும் தற்போக்காக (random) முடிவு செய்யப்படுகிறது.
அதே போல ஒரு தொகுதியில் எந்த வாக்குச் சாவடிக்கு
எந்த EVM என்பதும் முற்றிலும் தற்போக்காக முடிவு
செய்யப் படுகிறது. இவ்வாறு EVMகளை தொகுதிக்கும்
வாக்குச் சாவடிக்கும் அனுப்புவதில் இரண்டு தற்போக்குகள்
(two randomisations) நடைமுறைப் படுத்தப் படுகின்றன.

தேர்தல் நாளன்று, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்
EVMகளின் செயல்பாடு பரிசோதித்துக் காட்டப் படுகிறது. இரண்டு
மாதிரித் தேர்தல்கள் (mock polls) நடத்தப்பட்டு முடிவுகள்
அறிவிக்கப்பட்டு EVMன் சரித்தன்மை உறுதி செய்யப்
படுகிறது.ஒருவேளை ஏதேனும் ஒரு EVMன் செயல்பாடு
சரியில்லை என்றால், அது பழுதடைந்ததாகக் கொண்டு,
அதற்குப் பதில் வேறொரு EVM கொண்டு வரப் படுகிறது.
இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பின்னரே EVMகள் வாக்காளரின்
முன் வைக்கப் படுகின்றன.

யாராலும் முறைகேடு செய்ய முடியவில்லை!
-------------------------------------------------------------------------
லண்டனில் ஜனவரி 2019ல் நடைபெற்ற ஒரு
கூட்டத்தில்  திரு சையது சுஜா என்னும் தொழில்நுட்ப வல்லுநர் பங்கேற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐக் கைப்பற்றி (hack) முறைகேடு செய்ய முடியும் என்று காட்டப் போவதாக ஆரவாரமான அறிவிப்புக்கள் வெளியாயின. ஆனால் திரு சையது சுஜா அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; லண்டனுக்கே வரவில்லை. எந்த EVM எந்திரத்தையும் அவர் ஹேக் செய்து காட்டவில்லை. எனினும் அவர்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக்
செய்து விட்டதாக பொய்ச் செய்திகள் உலவின.

திரு சையது சுஜா லண்டனுக்கும் வர வேண்டாம்,
இந்தியாவுக்கும் வர வேண்டாம். தான் இருக்கும்
இடத்திலேயே இருந்து கொண்டு, இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக் செய்வதற்கு
உரிய  அல்காரிதம்-ஐ  (algorithm) பகிரங்கமாக வெளியிடலாமே!
(algorithm = step by step commands, அதாவது கணினியில்
படிப்படியாகச் செய்ய வேண்டிய உத்தரவுகளின்
தொகுப்பு).

அல்லது லண்டனில் அவர் செய்து காட்டப் போவதாக
அறிவித்த EVM hackingஐ, அவர் காமிரா முன்பாக
செய்து காட்டி, அதை யூடியூபில் வீடியோவாக
வெளியிடலாமே! அதை யாரும் தடுக்கவில்லையே!

உண்மையிலேயே EVM hacking செய்யும்  திறன் கொண்ட
ஒருவரால், இந்த இரண்டையும் வெகு சுலபமாகச்
செய்ய முடியும். இது  எலக்ட்ரானிக் யுகம். ஒரு
மொபைல் போன் இருந்தால் போதும். மொபைல்
போனில் உள்ள காமிராவில் EVM hackingஐ படம்
எடுத்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு உலகையே
அதிர .வைக்கலாம். ஆனால்  தன்னை ஒரு எலக்ட்ரானிக் நிபுணர் என்று சொல்லிக் கொள்ளும் திரு சையது சுஜா
இந்த எளிய செயல்களைக்கூடச்  செய்ய முன்வரவில்லை
என்பது அவரின் மோசடியை அம்பலப் படுத்தி விடுகிறது.

தேர்தல் ஆணையத்தின் EVM சவால்!
---------------------------------------------------------------
2017 பெப்ரவரி- மார்ச்சில்  இந்தியாவில் ஐந்து
மாநிலங்களின் (உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,
மணிப்பூர், கோவா) சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.
இத்தேர்தலில் தோல்வியடைந்த சில  கட்சிகள்
தங்களின் தோல்விக்குக் காரணம் EVMகளே என்று
குற்றம் சாட்டின.

எனவே EVMகளின் நம்பகத் தன்மையை உறுதி
செய்யவும், அரசியல் கட்சிகளின் ஐயங்களைப்
போக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் முன்வந்து
பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அவற்றுள் EVM சவால் (EVM Challenge) என்பது முதன்மையானது.
.
EVMகளில் மோசடி செய்ய முடியாது என்றும்
மோசடி செய்ய முடியுமானால் அதை நிரூபித்துக்
காட்டுமாறும் இந்தியத் தேர்தல் ஆணையம் பகிரங்கமாக
சவால் விடுத்தது. இந்தச் சவாலில் பங்கேற்குமாறு
தேசிய, மாநிலக் கட்சிகளை தேர்தல் ஆணையம் அழைத்தது.

2017 ஜூன் 3ஆம் தேதியானது சவாலுக்கான நாளாக
நிர்ணயிக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி (CPM), சரத் பவாரின் தேசியவாத (NCP) காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள்
மட்டுமே சவாலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருந்தன.
EVMகள் மீது புகார் கூறிய கட்சிகள் எவையும் சவாலில்
பங்கேற்க முன்வரவில்லை.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில்
பயன்படுத்தப்பட்ட எந்தவொரு EVM எந்திரத்தையும்
சோதித்துப் பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்து  இருந்தது. அதாவது  மேற்கூறிய ஐந்து
மாநிலங்களில் இருந்து எந்தத் தொகுதியில் இருந்தும்
எந்த பூத்தில் பயன்படுத்தப்பட்ட EVMஐயும்
சோதிக்கலாம் என்றும், தாங்கள் சோதித்துப் பார்க்க விரும்பும்  EVMகளை அரசியல் கட்சிகள் கேட்டுப் பெறலாம்  என்றும்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இருப்பினும் இன்னின்ன EVMகள் வேண்டும் என்று
எந்தக் கட்சியும் கோரவில்லை. எனவே தேர்தல்
ஆணையம்,  கட்டுக்காவல் மிகுந்த அறைகளில்
(strong rooms) பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த
EVMகளை முற்றிலும் தற்போக்கான முறையில்
தெரிவு செய்து (random selection) சவாலுக்கு முன்வைத்தது.
உ.பி, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று
மாநிலங்களில் உள்ள 12 சட்ட மன்றத் தொகுதிகளில்
இருந்து மொத்தம் 14 EVMகள் கொண்டு வரப்பட்டு
சவாலுக்கு முன்வைக்கப் பட்டன.

சவால் நாளான 3 ஜூன் 2017 அன்று, மார்க்சிஸ்ட்
கட்சியும், திருமதி வந்தனா சவான் எம்.பி தலைமையில் வந்த
தேசியவாத காங்கிரசும்  தாங்கள் சவாலில் பங்கேற்க
வரவில்லை என்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள
மட்டுமே வந்ததாகவும் கூறிப் பின்வாங்கின.

ஆக EVMகள் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் ஆதாயம் கருதி, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற அளவில்  கூறப்பட்டவையே என்பது புலப்பட்டது. EVMகளின் நம்பகத் தன்மை
உருக்குப் போன்று அசைக்க முடியாதது என்ற செய்தி
130 கோடி இந்திய மக்களையும் சென்றடைந்தது.

ஆக இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் EVMகளில் யார் எவராலும் எந்த முறைகேட்டையும் செய்ய முடியாது என்ற உண்மையை இக்கட்டுரை நிரூபிக்கிறது. QED.
***************************************************


googolplex is the number 10googol, or equivalently, 10(10100). Written out in ordinary decimal notation, it is 1 followed by 10100 zeroes, that is, a 1 followed by a googol zeroes

எப்போதுமே சீட்டு நாம் முடிவு பண்ணும் விஷயம்.
ஓட்டு மக்கள் முடிவு பண்ணும் விஷயம்.

ஒரு  நோக்கத்தை முனவ்

தோல்விதான்! வெற்றி இல்லை!
------------------------------------------------------
வரையறுக்கப் பட்ட நோக்கத்துடன்
மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும்
வெற்றி தோல்வி உண்டு. மேலும் ஒரு வேலைநிறுத்தம்
என்பது என்ன? அது ஒரு concerted action. லட்சக் கணக்கான
தொழிலாளர்களை சில பல கோரிக்கைகளுடன்
ஐக்கியப்படுத்தி, அவர்களின் கூட்டு பேர சக்தியை
மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. எனவே இதில்
வெற்றி தோல்வி நிச்சயமாக உண்டு.

தொழிற்சங்க இலக்கணப்படி
வேலைநிறுத்தங்களுக்கு வெற்றி தோல்வி உண்டு.
முற்றிலும் தோல்வி அடைந்த ஒரு வேலைநிறுத்தத்தை
"தோல்வியே இல்லை" என்று பார்ப்பது ஆன்மிகப்
பார்வை. வர்க்கப் போராட்ட அரசியலில் அத்தகைய
பிற்போக்கான ஆன்மிகப் பார்வைக்கு
இடம் கிடையாது.   

ஒரு வேலைநிறுத்தம் முடிந்ததுமே  சாதக பாதக
அம்சங்கள், வெற்றி தோல்விகள், படிப்பினைகள்
ஆகிய எல்லாவற்றையும் தொழிற்சங்க இயக்கம்
பரிசீலிக்கும். விமர்சன மற்றும் சுயவிமர்சன
நோக்கில் ஒரு வேலைநிறுத்தத்தின் நெட் ரிசல்ட்
பரிசீலிக்கப்படும். அப்படிப் பரிசீலிப்பது
தொழிலாளி வர்க்கத்தின் இயல்பு, நடைமுறை.
அதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை. 

இந்த வேலைநிறுத்தத்தைப் பொறுத்த மட்டில்,
அ) முன்வைத்த 9 அம்சக் கோரிக்கையில்
ஒன்றும் நிறைவேறவில்லை.
ஆ) பழிவாங்குதல் நடவடிக்கைகள் ரத்தாகவில்லை
இ) ஜாக்டோ ஜியோ தலைமை முடிவெடுத்து
அறிவிக்கும் முன்னரே வேலைநிறுத்தம் செய்த
ஆசிரியர்களில் 90 சதம் பேர் பணிக்குத்
திரும்பி  விட்டனர்.

அ), ஆ) என்னும் முதல் இரண்டும் வெற்றி
அடையாவிட்டாலும் பரவாயில்லை.  மூன்றாவதாக
உள்ள இ)யில் தோல்வி ஏற்பட்டது அமைப்பு ரீதியாகப்
பெரும் பின்னடைவைத் தருவது. இதை வெற்றி எனப்
பார்ப்பது புத்தி பேதலித்தால்தான் முடியும்.

எனவே  போராடும் தொழிலாளி வர்க்கமாகிய
நாங்கள் இந்தத் தோல்வியில் இருந்து பாடம்  கற்று
அடுத்த முறை வெற்றிக்குத் தயார் ஆவோம்.
தோல்வி அடைந்த வேலைநிறுத்தத்தையும் வெற்றி
எனப் பார்க்கும் ஆதி சங்கரரின் அத்வைத மனநிலை
பாட்டாளி வர்க்கத்திற்கு கிடையாது.


நாங்கள் deferred என்று சொல்லுவோம். deferred என்றால்
ஒத்திவைப்பு அர்த்தம். தமிழ்நாடு அரசு ஊழியர்
இயக்கத்தில் தற்காலிக வாபஸ் என்று சொல்கிறார்கள்.
இரண்டுக்கும் ஒரே பொருள்தான். மீண்டும்  சிறிது
காலம் கழித்து வேலைநிறுத்தம் செய்ய முயன்றால்
புதிதாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.  deferred என்றாலும்
தற்காலிக வாபஸ் என்றாலும் அது மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையின் endஐக் குறிக்கும்.

        
   

புதன், 30 ஜனவரி, 2019

சூனா சானா மீது எனக்கு எப்போதும் மரியாதை இருந்ததில்லை என்றாலும் அவர் ஒரு நாரதர் என்கிறவகையில் அவரை எனக்குப் பிடிக்கும்.
இப்போது காங்கிரஸின் புதிய ‘அன்னை’ பிரியங்கா வதேரா மீது நான்கு குண்டுகளை வீசியிருக்கிறார்.
ஒன்று, பிரியங்கா வதேரா என்கிற பிரியங்கா “காந்தி”க்கு Bipoloar disorder நோய் இருப்பதாகச் சொல்கிறார். இது சாதாரண நோயில்லை. இது இருப்பவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு எந்த நேரமும் உட்பட்டு இருப்பார்கள். திடீர் திடீரென அடுத்தவர்களை வெறிகொண்டு தாக்குவார்கள். காரணமே இல்லாமல் அடிப்பார்கள். பிரியங்கா வீட்டில் வேலை செய்கிற எஸ்.பி.ஜி. ஜவான்களையும் பிரியங்கா சாத்தியிருப்பதாகத் தெரிகிறது. அந்த ஜவான்கள் தன்னிடம் வந்து வேலைமாற்றல் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டதாகச் சொல்கிறார் சு. ஸ்வாமி.
இரண்டாவது, பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட்டுகளுடன் உள்ள தொடர்பு. பிரியங்காவின் கல்யாணம் யாரும் அறியாத ஓரிடத்தில் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட்டான ஃபரிதா அத்தவுலா என்கிற பெண்மணியால் நடத்தி வைக்கப்பட்டதாகச் சொல்கிறார் சுப்ரமண்யம் ஸ்வாமி. அந்தக் கல்யாயணத்திற்கு வர விரும்பிய ப. சிதம்பரத்தையும் வரவேண்டாம் என மேற்கண்ட காரணத்தைச் சொல்லி “அன்னை” சோனியா தடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த ஃபரிதா மூலமாகத்தான் பெருமளவு பணம் ஹவாலா மூலமாக வெளிநாடு சென்றதாகத் தகவல். திருடர்கள் திருடர்களுடன்தான் கூட்டணி வைப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
மூன்றாவது, பிரியங்காவுடைய மதம் எதுவென்று இன்றுவரை தெரியவில்லை. அவர் பிறந்தபோது பர்த் சர்ட்டிபிகேட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கிறார் ஸ்வாமி.
நான்காவது, பிரியங்காவுக்கு சீனாவில் பிஸினஸ் இருக்கிறது. அது என்னவென்று தெளிவுபடுத்த வேண்டியதும் அவசியம் என்கிறார்.
பிரியங்கா இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அனேகமாக ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் ப்ரியங்காவுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது. வந்தவுடன் வாண வேடிக்கைகள் இருக்கலாம். அல்லது புஸ்வாணமாகலாம். எப்படியிருந்தாலும் சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகியிருக்கிறது..!
ஆக்கம் : Narenthiran PS
தோல்வியில் முடிந்த ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்!
------------------------------------------------------------------------------------------------ 
முடிவுக்கு வந்து விட்டது ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்.
காலவரம்பற்ற வேலைநிறுத்தம் என்று அறிவித்து
ஒன்பது நாட்கள் வரை ஜாக்டோ ஜியோவால் நடத்த முடிந்திருக்கிறது இது பாராட்டுக்குரியது.

ஆனால் ஒன்பது நாட்கள் வேலைநிறுத்தம்  நடத்தியும்
உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை. குறைந்தபட்சம்
பழிவாங்கல் நடவடிக்கை எதுவும் இருக்காது என்ற
ஒரே ஒரு அம்சத்தைக் கொண்ட உடன்பாடு கூட
இல்லாமல் வேலைநிறுத்தத்தை ஜாக்டோ ஜியோ
ஒருதலைப்பட்சமாக முடித்துக் கொண்டுள்ளது.

இது அமைப்பு ரீதியாக பெரும் பின்னடைவு மட்டுமல்ல
இதன் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும். 

வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டோம் என்று
அறிவிப்பதைத் தவிர ஜாக்ட்டோ ஜியோ  தலைமைக்கு
வேறு வழியில்லை. ஏனெனில் இந்த அறிவிப்பு
வரும் முன்னரே 95 சதம் ஆசிரியர்கள் பணியில்
சேர்ந்து விட்டனர்.

செய்முறைத் தேர்வு (practical exam) பிப்ரவரியில்
அறிவிக்கப்படும் சூழலில், ஆசிரியர்கள் மீதான
சமூக நிர்பந்தம் அதிகமாகவே இருந்தது. எனினும்
இந்த நிர்ப்பந்தம் காரணமாகவே ஆசிரியர்கள்
பணியில் சேர்ந்தனர் என்று கூற இயலாது.

அரசு கெடு நிர்ணயித்துள்ள சூழலில், அதை மீறி
வேலைநிறுத்தம் செய்தால், நிகழவிருக்கும்
பாதிப்புகள் குறித்த அச்சமே வேலைநிறுத்தத்தை
முறித்துக் கொண்டு ஆசிரியர்களைப் பணியில்
சேர வைத்தது. இதுவே உண்மை.

இவ்வளவுக்கும் ஜெயலலிதாவைப் போல மூர்க்கத்
தனமான அடக்குமுறையை  எடப்பாடி அரசு
ஏவவில்லை என்பது கண்கூடு. தற்காலிக ஆசிரியர்கள்
எவரும் புதிதாக பணி நியமனம் செய்யப்படும்
நடைமுறை இன்னமும் ஆரம்பிக்கப் படவில்லை.

எஸ்மா சட்டமோ டெஸ்மா சட்டமோ பிரயோகிக்கப்
படவில்லை; வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்றும் 
அறிவிக்கப் படவில்லை.  அடக்குமுறையின் முதல்
கட்டமான அச்சுறுத்தலைக் கொண்டே எடப்பாடி
அரசு வேலைநிறுத்தத்தை முறியடித்து விட்டது.

வேலைநிறுத்தத்தை ஒன்பது நாள் வரை நீடிக்க
விட்டிருக்கக் கூடாது. மூன்றாவது நாள் முடிந்ததுமே
உடன்பாட்டை  நோக்கியே ஜாக்டோ  ஜியோவின்
தலைமை  காய் நகர்த்தி இருக்க வேண்டும்.
அதைச் செய்யத் தவறியது தலைமையின்
பெருந்தவறு.

பழிவாங்கல் நடவடிக்கைகள் ரத்து செய்யப் படாமல்
அப்படியே இருக்க, வேலைநிறுத்தத்தில் பங்கேற்று
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்குகள்
சஸ்பென்ஷன் ஆகியவை ரத்து  செய்யப்படாத
நிலையில், வேலைநிறுத்தத்தை ஒருதலைப்
பட்சமாக முடித்திருப்பது அமைப்பு ரீதியாகப்
பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

புறநிலைமைகள் (objective situation) சாதகமாக இல்லை
என்பதைக் கணக்கில் கொண்டு, ஒன்பது நாட்கள்
வரை வேலைநிறுத்தத்தை நீட்டிக்காமல், பழிவாங்கலை
மட்டும் ரத்து செய்யும் ஒரே ஒரு ஷரத்துடன்
ஒரு உடன்பாட்டை எட்டிவிட்டு வேலைநிறுத்தத்தை
முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்
ஜாக்டோ ஜியோ தலைமை.

ஆனால் ஏன் இதை ஜாக்டோ ஜியோ தலைமை
செய்யவில்லை? சொந்த முடிவை எடுக்கும்
ஆற்றலும், சுயேச்சையாகச் செயல்படும் ஆற்றலும்,
ஜாக்டோ ஜியோவின் குட்டி முதலாளித்துவத்
தலைமைக்கு இல்லை. அவர்கள் தங்களின்
எஜமானர்களான அரசியல் கட்சித் தலைவர்களின்
கட்டளைகளை அப்படியே ஏற்றுச் செயல்படும்
ஆமாம் சாமிகளாக மட்டுமே இருக்கிறார்கள்
என்பது இந்த வேலைநிறுத்தத்தின் மோசமான
தோல்வி மூலம் வெளிப்பட்டு இருக்கிறது.

சொந்த மூளையுள்ள சுய சிந்தனையுள்ள
தேவையான நேரத்தில் சுயேச்சையாகச்
செயல்படவல்ல ஆற்றல் மிக்க தலைமை
ஜாக்ட்டோ ஜியோவில் இல்லை என்பதை
இந்த வேலைநிறுத்தம் வெளிச்சம் போட்டுக்
காட்டி விட்டது.

ஒரு வேலைநிறுத்தத்தை எப்படி நடத்த வேண்டும்,
எப்படி முடிக்க வேண்டும், எப்படி உடன்பாடு
போட  வேண்டும் என்பது பற்றியெல்லாம்
ஜாக்டோ ஜியோ தலைவர்கள் BSNL தொழிற்சங்கத்
தலைவர்களிடம் (NFTE மற்றும் BSNLEU சங்கங்கள்)
பாடம் கற்க வேண்டும்.

வலிமையற்ற எடப்பாடியிடம் வலிமையான
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இயக்கத்தை 
தோல்வி அடை யச் செய்திருக்கிறது ஜாக்டோ ஜியோ தலைமை. இத்தோல்விக்கான
காரணங்கள் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
**********************************************************      

குப்தா இல்லைதான் என்றாலும் குப்தாவிடம்
பாடம் கற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
இப்படி 9 நாள் வேலைநிறுத்தம் நடத்தி, வேலைநிறுத்தம்
செய்த ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கும்
விவேகமற்ற நடைமுறையை யாரும் கைக்கொள்ள
மாட்டார்கள். இப்படி உடன்பாடே போடாமல் ஒரு
வேலைநிறுத்தத்தை ஒருதலைப் பட்சமாக முடித்துவிட்டு
எந்தத்  தலைவராவது வாயில் கூட்டத்தில் வந்து பேச
முடியுமா? 
           

எடப்பாடி  அரசு  வலிமையற்ற அரசுதான். நாங்கள்
ராமச்சந்திர மேனனின் அடுக்குமுறை,
ஜெயலலிதாவின் அடக்குமுறை ஆகியவற்றை
நேரடியாக எதிர்கொண்டவர்கள். அவற்றுடன்
ஒப்புநோக்கும்போது, எடப்பாடி அரசானது
வலிமையற்றதே. பாசிசம் என்பது தத்துவார்த்த
வரையறையைக் கொண்டது. கறார்த்தன்மையற்ற
நெகிழ்ச்சியான பொருளில் அந்தச் சொல்லை அருள்கூர்ந்து
பயன்படுத்த வேண்டாம்.

அதிமுக தலைமைக்கு  நெருக்கமான
 ஊடக நண்பர் அளித்த செய்தி

ஸ்டாலினுக்கு, அவருடைய அருகதைக்கு எடப்பாடி
என்பவர் பிரம்மாண்டமான எதிரியே. அது ஸ்டாலினின்
ஆளுமைக் குறைபாடு. இங்கு ஜாக்டோ ஜியோ தலைமை
என்பது மார்க்சிஸ்ட் கட்சியால் வழிநடத்தப் படுவது.
எமது விமர்சனம் மார்க்சிஸ்ட் தலைமை இந்த
வேலைநிறுத்தத்தைக் கையாண்ட விவேகமற்ற
அணுகுமுறையைக் குறிப்பதாகும்.


துணிச்சலுடன் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைச்
சொல்லுவதே எமது பணி. இக்கட்டுரைக்கு இரண்டாம்
பாகம் உண்டு. அது நாளைக்கு வெளிவரும்.


அநேகமாக 2000க்குப் பிறகே ஒவ்வொரு துறையாக
புதிய பென்ஷன்தான். மத்திய அரசில் BSNL துறையில்
1.10.2000க்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கு
புதிய பென்ஷன்தான். IAS, IPS அதிகாரிகளும்
அரசு ஊழியர்களே. மத்திய அரசில் புதிய பென்சன்
திட்டம் என்று வந்ததோ அன்று முதல்  மத்திய
அரசுப் பணியில் உள்ள IAS அதிகாரிகளுக்கு புதிய
பென்சன் மட்டுமே. அதே போலத்தான் நீதிபதிகளும்.  
     
டிக்கெட் நம்பர்  5165 31 2431 




கோட்ஸே வாக்குமூலம்
காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-
காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன்.
"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.
1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.
மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.
காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.
நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்
தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.
காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.
பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.
நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.
சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.
முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.
15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.
பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.
சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.
பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.
1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே

செவ்வாய், 29 ஜனவரி, 2019

NFTE CL, the trade union for the welfare and upliftment of casual/contract workers
(of BSNL) is organisationally kept in tact and has not merged with any other trade union or organisation. NFTE CL is an all India based trade union and has statewise (circlewise)
setups in many telecom circles including Tamilnadu, Chennai,............................................ etc.

We have come across an information that the Tamilnadu circle unit of NFTE CL
has allegedly merged with ...................................................... which is untrue.We, the Tamilnadu
unit of NFTE CL do hereby categorically deny this and we wish to reiterate that
no such merger has taken place.

There is a set of rules for the merger of any two or more organisations, especially
trade unions. Besides there are regulations and procedures to effect any merger.
In NFTE CL Tamilnadu circle unit there was not even a contemplation of any merger
with any organisation. There was no objective necessity which warrants a merger.

A merger, in order to get effected must pass through certain stages which are mandatory.
Of all these the first and foremost is the decision to the effect of a merger which
should be taken by way of passing a resolution at the properly convened meeting
of the Circle executive committee concerned or the Central Working committee.
(as the case may be).

Neither the Central Working Committee nor the Circle Executive Committee of
Tamilnadu circleof NFTE CL,has taken such a decision to merge with ........................
...............................................................

No such resolution was passed; no such resolution was drafted even.
No meeting of the Circle Executive Committee, Tamilnadu, NFTE CL was convened
to discuss and decide about the said alleged merger since nothing was contemplated
about a merger.

(The Circle Eecutive Committee meeting of
NFTE CL was held last during ............2018/2019 and therafter no meeting
was due and so no meeting was held).

Therefore the statement made by some vested interests (or disruptive elements)
that NFTE CL Tamilnadu Circle has merged with ........................ is purely imaginary
and absolutely false.

We wish to assert that in NFTE CL Tamilnadu Circle there is no proposal of a
merger with any other organisation and there is no idea even.
The organisation is kept in tact and we request all concerned to
brush aside such baseless statements about a merger.
================================================

திங்கள், 28 ஜனவரி, 2019

பாரத ரத்னா விருதுகள்!
-----------------------------------------
இதுவரை (2015 ஜனவரி) பாரத ரத்னா விருது
பெற்றவர்கள் = 46 பேர்.

தற்போது 2019 ஜனவரியில் பிராணாப் முகர்ஜி உட்பட
மூவருக்கு பாரத ரத்னா விருது
அறிவிக்கப் பட்டுள்ளது. இதையும்  சேர்த்தால்
பாரத ரத்னா விருது பெற்றோரின் எண்ணிக்கை
49 ஆகிறது.

ஜனவரி 2019ல் பாரத ரத்னா விருது
அறிவிக்கப்பட்ட மூவர்:
1. பிரணாப் முகர்ஜி
2. நானாஜி  தேஷ்முக்
3. பூபென் ஹசாரிகா     

இந்த 49பேரில் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் = 8 பேர்.


பாரத ரத்னா விருது பெற்ற 8 தமிழ்நாட்டவர்
-----------------------------------------------------------------------------
1) சர் சி வி ராமன்
2) ராஜாஜி
3) டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
4) காமராசர் 
5) எம் ஜி ராமச்சந்திர மேனன்
6) டாக்டர் அப்துல் கலாம்
7) சி சுப்பிரமணியம்
8) எம் எஸ் சுப்புலட்சுமி
---------------------------------------------------------
தமிழர்களான சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த்
இசைஞானி இளையராஜா
ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது இதுவரை
வழங்கப் படவில்லை. இது வருந்தத் தக்கது.
******************************************************


ஞாயிறு, 27 ஜனவரி, 2019

Where are the EVMs made?
EVMs and VVPATs are manufactured by Bharat Electronics Limited (PSU under Ministry of Defence, Govt. of India) and Electronics Corporation of India Limited (PSU under the Department of Atomic Energy, Govt. of India). The software of EVMs is developed in-house by a selected group of Engineers in BEL and ECIL independently from each other.
This select software development group of few engineers design and develop the source code. After completion of software development, testing and evaluation of the software is carried out by another independent testing group in the PSUs as per the software requirements specifications (SRS). This ensures that the software has been written as per the requirements laid down for its intended use only.
The original source code for the EVM is stored by PSUs under controlled conditions at all times and is not accessible to anyone outside the software development group of PSUs. There are three kinds of machines M1, M2 and M3.
In M1 and M2 EVMs machine code compiled from source programme code was given to the micro controller manufacturer for writing in ONE TIME PROGRAMMABLE (OTP) micro controllers. From this machine code, the exact original source code cannot be read. For such OTP microcontrollers, the code once programmed cannot be modified and cannot be read by any means.
Now technological advancements permit writing of machine code into the chips at PSU premises, hence in M3 (post 2013) EVMs, the program is burnt into the chip at PSU premises itself. Due to absence of requisite facilities to produce microcontrollers in India, these are procured from manufacturers abroad.
Up on receipt of machine code, the micro controller manufacturer verifies against any modifications during transit and programs this code in the micro controller in the OTP area and initially provides engineering samples of programmed chip to PSUs for evaluation.
These samples are then assembled into the EVM, evaluated and verified for authenticity of code and functionality at great length. Bulk production clearance by PSU is given to micro controller manufacturer only after successful completion of this verification.
EVM Tracking Software (ETS)
The Election Commission has introduced ETS as a modern inventory management system where the identity and physical presence of all EVMS/VVPATs is tracked on real time basis by the Election Commission of India and any movement of these machines ordered by ECI has to mandatorily be through this system
Comparison to the electoral processes in other countries:
The marriage between technology and election management goes back to at least 1892, when the first ‘lever voting machine’ was used in New York after using the paper ballot for a long time. In the 1960s, punch-card machines were introduced in the USA, and the first EVM was introduced there in 1975. Electronic Voting has moved quite ahead since then.
Netherlands
Electronic Voting machine was used in The Netherlands in between 1990-2007. The voting machines were manufactured by a private Dutch-company called NEDAP (Nederlandse Apparaten Fabriek NV). In 2006, the government ordered an independent testing of the voting machines.
Two independent commissions, The Voting Machines Decision-making Commission and the Election Process Advisory Commission (EPAC) were also established on December 19, 2006 and January 18, 2007, respectively, to review the security and reliability features of NEDAP machines. Following the observations of the two Commissions, the use of NEDAP machines and electronic voting was discontinued in 2007 on the following grounds:
The Ministry of Interior and Kingdom Relations (MOIKR) of The Netherlands lacked adequate technical knowledge vis-à-vis the NEDAP machines, leading officials to depend on external actors for the conduct of elections.
Technology vendors became part of the decision making process and the ministry was not in a position to exercise effective oversight.
The Dutch Organization for Applied Scientific Research (Toegepast Natuurwetenschappelijk Onderzoek, TNO) certified and tested these machines following “outdated standards” which were not immune to modern IT and security threats. Moreover, the certification and testing reports were not made public depriving independent experts to verify the analysis.
The legal framework, particularly the necessary security requirements, was inadequate to deal with the specificities of the electronic voting process.
Germany
In Germany, the e-voting machines manufactured by NEDAP were used in between 2005–2009 before it came under criticism and finally discontinued. The Bundesverfassungsgericht (the Federal Constitutional Court of Germany) ordered the discontinuation of the use of NEDAP machines in 2009 because of the following reasons:
The use of Nedap electronic voting machines violated the principle of the public nature of elections (Article 38 in conjunction with Article 20.1 and 20.2 of the Basic Law) that requires that all essential steps in the elections are subject to public examinability unless other constitutional interests justify an exception.
It also observed that “it must be possible for the citizen to check the essential steps in the election act and in the ascertainment of the results reliably and without special expert knowledge”.
Ireland
NEDAP machines were used in Ireland in between 2002–2004. The use of these machines was questioned following which two independent commissions were set up. The two Commissions on the Secrecy, Accuracy and Testing of the Chosen Electronic Voting System, concluded the NEDAP machines could not be used in elections in Ireland on the following grounds:
*Inadequate technological safeguards
*Insecure transfer of data by the use of CDs
*Absence of a comprehensive independent end-to-end testing, verification and *certification by a single accredited body. Inconsistencies in physical security of machines across constituencies
*Absence of a clear policy guideline via-a-vis storage, transport, set-up, use and disposal of voting equipment
*Absence of comprehensive electronic register to record the identity, location and movement of the electronic voting devices.
United States of America
In 2000, after the dispute on the voting method in the USA presidential elections, the voting method was reviewed. Accordingly, Direct Recording Electronic (DRE) Systems (like the widely used AccuVote TS developed by Premier Election Solutions, commonly called Diebold) were introduced. DRE Systems uses “one of three basic interfaces (pushbutton, touchscreen or dial)” through which “voters record their votes directly into computer memory. The voter’s choices are stored in DREs via a memory cartridge, diskette or smart card…Some DREs can be equipped with Voter Verified Paper Audit Trail (VVPAT) printers...” Currently, in the USA, the Direct Recording Machines are used in 27 states, among which paper audit trails are used in 15 states. The other voting methods include: Optical Scan Paper Ballot Systems, Ballot Marking Devices, and the Punch Card Ballot.
How are Indian EVMS different?
Indian EVMs are truly unique compared to the e-voting machines used in other parts of the world for the following reasons:
*ECI-EVMs are stand-alone non-networked machines
The ECI-EVMs are manufactured in two PSUs namely ECIL and BEL, unlike machines used in other countries, which were manufactured entirely by private entities. Hence there is no chance of involvement of vested interest of private players or technology vendors in decision making or production of the ECI-EVMs.
*ECI-EVMs have been time and again successfully verified and certified by an independent Technical Experts Committee after an end-to-end testing process. STQC under Ministry of Information and Technology, an accredited third party entity, conducts standardization and certification of ECI EVMs produced by manufacturers, unlike the machines used in Netherlands.
*Every EVM has a unique number attached to it, which is recorded in the Election Commission’s database through EVM Tracking Software. This number of the EVM can always be cross-checked against the database.
*The software used in these EVMs is One Time Programmable (OTP), which can’t be re-written after manufacture.
( Source: Status Paper on EVMs released by Election Commission)


Catch the Biggest Newsmakers and the Biggest Newsbreaks on CNN-News18, your favourite English TV news channel. Keep watching CNN-News18 at just 50 Paise per Month. Contact your cable /DTH operator Now!
*

வெள்ளி, 25 ஜனவரி, 2019

(4) சையது சுஜா என்பவர் EVMஐ ஹேக் பண்ணவில்லை!
ஹேக் பண்ணியதாகக்  கூறுவது பொய்!
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலாது!
கட்டுரைத் தொடரின் நான்காவது கட்டுரை!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
லண்டனில் ஒரு கூட்டம்  அண்மையில் ஏற்பாடு
செய்யப் பட்டது. சையது சுஜா என்பவர் இக்கூட்டத்தில்
பங்கேற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின்
EVMஐ ஹேக் (hack) செய்து காட்டப் போவதாக ஆரவாரமான அறிவிப்புக்கள் வெளியாயின.

ஆனால் திரு சையது சுஜா அந்தக் கூட்டத்திற்கு
வரவில்லை;  லண்டனுக்கே வரவில்லை. மாறாக
அமெரிக்காவில் இருந்து கொண்டு ஸ்கைப்
தொலைபேசி மூலம் பேசினார்.அவ்வளவுதான்.

இதை வைத்துக் கொண்டு திரு சையது சுஜா
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக்
செய்து விட்டதாக பொய்ச் செய்திகள் உலா
வந்தன.

திரு சையது சுஜாவோ அல்லது வேறு யாருமோ
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் EVMஐ இந்த
நிமிடம் வரை ஹேக் செய்யவில்லை. ஹேக்
செய்யவும் எவராலும் இயலவில்லை. இதுதான்
உண்மை.

மாறாக, திரு சையது சுஜா என்பவர் EVMஐ ஹேக்
செய்து காட்டி விட்டதாக நம்புபவர்கள் தமிழ்
நாட்டில் கணிசமாக இருக்கிறார்கள். இவர்கள்
முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறவர்கள்.
(They live in Fool's paradise).

இப்படிப்பட்டவர்கள் EVMகளால் ஆபத்து என்று
கூச்சல் இடுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது!
அந்தக் காலத்துப் பட்டிக்காட்டுக் கிழவிகள்
நம்பியாரால் எம்ஜியாருக்கு ஆபத்து என்று
பதறுவதைப் போல இவர்களும் பதறுகிறார்கள்.

திரு சையது சுஜா லண்டனுக்கு வர வேண்டாம்,
இந்தியாவுக்கும் வர வேண்டாம். இருக்கும்
இடத்திலேயே அவர் இருந்து கொண்டு, இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் EVMஐ ஹேக் செய்வதற்கு
உரிய algorithmஐ பகிரங்கமாக வெளியிடலாமே!
(algorithm = step by step commands, அதாவது கணினியில்
படிப்படியாகச் செய்ய வேண்டிய உத்தரவுகளின்
(தொகுப்பு).

அல்லது லண்டனில் அவர் செய்து காட்டப் போவதாக
அறிவித்த EVM hackingஐ, அவர் காமிரா முன்பாக
செய்து காட்டி, அதை யூடியூபில் வீடியோவாக
வெளியிடலாமே! அதை யாரும் தடுக்கவில்லையே!

நியூட்டன் அறிவியல் மன்றம் திரு சையது சுஜா
அவர்களிடம் இவ்விரு கேள்விகளையும் கேட்கிறது.

1) EVM hacking செய்வது பற்றிய algorithmஐ
வெளியிடுங்கள்.

2) அல்லது EVM hackingஐ நீங்களே உங்கள் நண்பர்கள்
முன்னிலையில் செய்துகாட்டி, அதை காமிராவில்
படமெடுத்து யூடியூப் வீடியோவாக வெளியிடுங்கள்.

உண்மையிலேயே EVM hacking செய்ய முடிந்த
ஒருவரால், இந்த இரண்டையும் வெகு சுலபமாகச்
செய்ய முடியும். இது  எலக்ட்ரானிக் யுகம். ஒரு
மொபைல் போன் இருந்தால் போதும். மொபைல்
போனில் உள்ள காமிராவில் EVM hackingஐ படம்
எடுத்து யூடியூபில் வீடியோவாக வெளியிடலாம்.
தன்னை ஒரு எலக்ட்ரானிக் நிபுணர் என்று
சொல்லிக் கொள்ளும் திரு சையது சுஜாவுக்கு
இந்த எளிய வழிமுறைகூடத் தெரியாதா?   

ஆனால் திரு சையது சுஜா இதைச் செய்யவில்லை;
செய்ய முன்வரவும் இல்லை. இதிலிருந்தே
திரு சையது சுஜா ஒரு மோசடிப் பேர்வழி என்பது
நிரூபணம் ஆகிறது.

திரு சையது சுஜா ஏதோ மலையைப் புரட்டி
விட்டதாக ஆர்ப்பாட்டம் செய்யும் அவரின் திடீர்
ரசிகர்கள், அவர் ஏன் தனது ஹேக்கிங்கை (hacking)
வீடியோவாக வெளியிடவில்லை என்று
சிந்தித்தாலே உண்மை விளங்கும்.

இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம்
(scientifically illiterate nation). அழுகிப் போன
நிலவுடைமைச் சமூகத்தின் பிற்போக்குச்
சிந்தனைகளில் இருந்து விடுபடாத, விடுபட
முயலாத மக்களைக் கொண்டுள்ள தேசம்.
எனவே திரு சையது சுஜா போன்ற மோசடிப்
பேர்வழிகள், இங்கு எந்த நச்சை வேண்டுமானாலும்
விதைத்து விட்டுப் போக முடியும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு.      .
******************************************************

 

    
        

 

     



வியாழன், 24 ஜனவரி, 2019

(3) வாயில் கொழுக்கட்டை வைத்துக் கொண்டிருந்த
குட்டி முதலாளித்துவ உதிரிகள்!
தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்க நாதி இல்லை! 
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்
மோசடி செய்ய இயலாது! தொடர் கட்டுரை பகுதி-3.
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
2017 பெப்ரவரி- மார்ச்சில்  இந்தியாவில் ஐந்து
மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப்,
மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களே
அவை. உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
மாயாவதியும் அகிலேஷ் யாதவும் படுதோல்வி
அடைந்தனர்.

தங்களின் தோல்விக்குக் காரணம் EVMகளே என்று
அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் மூலம் EVMகளின்
நம்பகத் தன்மை மீது ஐயத்தை ஏற்படுத்தினர்.

எனவே EVMகளின் நம்பகத் தன்மையை உறுதி
செய்யவும், அரசியல் கட்சிகளின் ஐயங்களைப்
போக்கவும் இந்தியத் தேர்தல் ஆணையம் முன்வந்து
பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அ) 12 மே 2017ல் நாட்டிலுள்ள தேசியக் கட்சிகளையும்
மாநிலக் கட்சிகளையும் அழைத்து EVM  குறித்து
விளக்கம் அளித்ததுடன் அவர்களின் ஐயங்களையும்
இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுத் தெரிந்து
கொண்டது. இதில் 42 கட்சிகள் பங்கேற்றன.
பெருவாரியான கட்சிகள் EVMகள் மீது  நம்பிக்கை
தெரிவித்தன.ஒரு சில கட்சிகள் மட்டுமே
ஐயங்களைக் கூறின. அனைவருக்கும் EVMகளின்
செயல்முறையை விளக்கியும், ஐயங்களைப்
போக்கியும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன

ஆ) 20 மே 2017ல் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு
செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இச்சந்திப்பில்
EVM Challenge எனப்படும் EVM சவாலை
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இ) EVMகளில் மோசடி செய்ய முடியாது என்றும்
மோசடி செய்ய முடியுமானால் அதை நிரூபித்துக்
காட்டுமாறும் இந்தியத் தேர்தல் ஆணையம் சவால்
விடுத்தது. செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக
விடப்பட்ட சவால் இது. இந்தச் சவாலில் பங்கேற்குமாறு
தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு அன்றைய தினமே
(20 மே 2017) அழைப்பு அனுப்பப் பட்டது.

ஈ) 2017 ஜூன் 3 தேதியானது சவாலுக்கான நாளாக
நிர்ணயிக்கப் பட்டது. சவாலில் பங்கேற்கும் அரசியல்
கட்சிகள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க 26 ஜூன் 2017
மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப் பட்டது.
எனினும் மார்க்சிஸ்ட் கட்சி (CPM), சரத் பவரின்
தேசியவாத (NCP) காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள்
மட்டுமே சவாலில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து
இருந்தன.

உ) நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில்
பயன்படுத்தப்பட்ட எந்தவொரு EVM எந்திரத்தையும்
சோதித்துப் பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையம்
அறிவித்து  இருந்தது. அதாவது  மேற்கூறிய ஐந்து
மாநிலங்களில் இருந்து எந்தத் தொகுதியில்,
எந்த பூத்தில் பயன்படுத்தப்பட்ட EVMஐயும்
சோதிக்கலாம் என்றும், எந்தெந்த EVMகள்
கொண்டுவரப் பட வேண்டும் என்று அரசியல்
கட்சிகள் விருப்பம் தெரிவிக்கலாம் என்றும்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

ஊ) இருப்பினும் இன்னின்ன EVMகள் வேண்டும் என்று
எந்தக் கட்சியும் கோரவில்லை. எனவே தேர்தல்
ஆணையம்,  கட்டுக்காவல் மிகுந்த அறைகளில்
(strong rooms) சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்த
EVMகளை முற்றிலும் தற்போக்கான முறையில்
தெரிவு செய்து (random selection) சவாலுக்கு முன்வைத்தது.
உ.பி, உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மூன்று
மாநிலங்களில் உள்ள 12 சட்ட மன்றத் தொகுதிகளில்
இருந்து மொத்தம் 14 EVMகள் இவ்வாறு கொண்டு
வரப்பட்டன.

எ) சவால் நாளான 3 ஜூன் 2017 அன்று, மார்க்சிஸ்ட்
கட்சி, தான் சவாலில் பங்கேற்க வரவில்லை என்றும்
தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள
மட்டுமே வந்ததாகக் கூறியது.

ஏ) திருமதி வந்தனா சவான் தலைமையில் வந்த
தேசியவாத காங்கிரசும் அவ்வாறே கூறியது.
வந்திருந்த இவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும்
தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்
குழுவினர் EVMகளின் செய்முறை விளக்கம்
அளித்தனர்.

(:ஆதாரம்: அ முதல் ஏ வரையிலான பத்திகளில்
கூறப்பட்ட விவரங்களுக்கான ஆதாரம், EVM சவால்
முடிவுற்ற உடன் (03 ஜூன் 2017) இந்தியத் தேர்தல்
ஆணையம் வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பு
மற்றும் செய்தியாளர் சந்திப்பு)

ஆக, வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி செய்ய
முடியும் என்று கூறியவர்கள்  எவரும் அதை நிரூபிக்க
முன்வரவில்லை. கொள்ளையடிப்பது, ஊழல்
செய்வது, பதவிச் சுகங்களை அநுபவிப்பது
ஆகியவை தவிர வேறெதிலும் அக்கறையற்ற
முற்றிலும் தற்குறிகளையும் கிரிமினல்களையும்
கொண்ட அரசியல் கட்சிகள் எவ்வளவு
பொறுப்பற்றவை என்பதையும் நம்பகத்தன்மை
துளியும் இல்லாதவை என்பதையும் EVM சவால் என்ற
இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.

EVMகளை எதிர்த்து இன்று போர்க்கோலம் பூணும் குட்டி
முதலாளித்துவ உதிரிகள், அன்று தேர்தல் ஆணையம்
EVM சவாலை அறிவித்தபோது வாயில் கொழுக்கட்டை
வைத்துக் கொண்டிருந்தது ஏன்?

சமூக ஊடகங்களின் மூலம் உலகப் புரட்சியையே
நடத்தி முடிக்கும் குட்டி முதலாளித்துவச்
சுயஇன்பவாதிகள் அன்று ஏன் EVM சவாலைப்
பற்றி ஒரு TRENDING உருவாக்கவில்லை?

"எந்த மாநிலத்தில் பயன்பட்ட EVM வேண்டும்?
எந்தத் தொகுதியில் பயன்பட்ட EVM வேண்டும்?
எந்த பூத்தில் பயன்பட்ட EVM வேண்டும்?
சொல்லுங்கள், நீங்கள் கேட்கும் EVMஐத் தருகிறோம்,
அதை ஹேக் செய்து காட்டுங்கள்"  என்று இந்தியத்
தேர்தல் ஆணையம் அறிவித்தபோது, EVM
எதிர்ப்பாளர்கள் எந்த சாராயக் கடையில் போதை
ஏற்றிக் கொண்டிருந்தனர்?    

"எனக்கு லக்னோ தொகுதியில் 38ஆவது பூத்தில் உள்ள
EVM வேண்டும், எனக்கு பஞ்சாப்பில் லூதியானா
தொகுதியில் 62ஆவது பூத்தில் உள்ள EVM வேண்டும்"  என்று 
கேட்டு தாங்கள் சந்தேகப்படும் EVMஜக் கேட்டு வாங்கி
அதில் மோசடி செய்ய முடியும் என்று நிரூபிக்க
EVM எதிர்ப்பாளர்கள் ஏன் முன்வரவில்லை? ஏன்? ஏன்?ஏன்?

புழுவினும் இழிந்த, கிரிமினல்களாலும் தற்குறிகளாலும்
நிறைந்த அரசியல் கட்சிகளை நம்புவேன், ஆனால்
அறிவியலை நம்ப மாட்டேன் என்று கூறும் எவரும்
சரியானவர்கள் அல்ல.

இதற்கப்புறமும் EVMகளை ஹேக் செய்ய முடியும்
என்று நம்பும் அப்பாவிகள் உண்மையை உணர வேண்டும்.
--------------------------------------------------------------------------------
தொடரும்
-----------------------------------------------------------------

கணினி அறிவியல்

EVM என்னும் கணினி எந்திரத்தின் அறிவியலைப்
பேசுகிற தொடர் கட்டுரை இது. தங்களின் அறிவின்
எல்லைக்குள் இந்த அறிவியல் விஷயம் வராது.
தங்களால் இதைப் புரிந்து கொள்ள இயலாததில்
தவறில்லை.

Whether an EVM can be hacked or not என்ற அறிவியல்
கேள்விக்கு பதிலளிக்கும் கட்டுரை இது.
கணினி அறிவியலில் சற்று ஆழமான பரிச்சயம் 
(a robust literacy) உடையவர்களால் மட்டுமே இதைப்
புரிந்து கொள்ள முடியும் என்று ஏற்கனவே
குறிப்பிட்டுள்ளேன்.

கணினி அறிவியலில் எதுவும் தெரியாதவர்கள்
அருள்கூர்ந்து வேறிடம் செல்லவும்.

இந்தக் கட்டுரை எந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது
என்ற விஷயத்தைக் கூடப் புரிந்து கொள்ளாமல்
எதையாவது கூற வேண்டாம். அது உங்களின்
அறியாமையை வெளிப்படுத்துகிறது.. 
  
 

   .



.



 


evm
=============================
"அறிவியல் வர்க்க சார்பற்றது; பூர்ஷ்வா ரயில்
என்றோ பாட்டாளி ரயில் என்றோ எதுவும் இல்லை."
இது மார்க்சிய மூல ஆசான் ஸ்டாலின் கூறியது

மார்க்சிய மூல ஆசான் ஸ்டாலின் மிகத்
தெளிவாகக் கூறிய கருத்துடன் முரண்படுவது
மார்க்சியம் ஆகாது.



முக்கிய அறிவிப்பு!
----------------------------------
EVM குறித்தும் அதன்  பாதுகாப்பு குறித்தும்
இரண்டு கட்டுரைகளை  நியூட்டன் அறிவியல்
மன்றம் எழுதி வெளியிட்டு உள்ளது. வாசகர்கள்
அவற்றைப் படிக்கலாம். அறிவியல்  ரீதியான
மறுப்புகள் இருப்பின் அவற்றைப் பின்னூட்டமாக
எழுதுவது வரவேற்கப் .படுகிறது.

மீண்டும் கூறுகிறோம்: அறிவியல் ரீதியான
மறுப்புகள்  மட்டும் பின்னூட்டமாக ஏற்கப்படும்.
நேர விரயத்தை ஏற்படுத்தும் வறட்டு வெட்டி
விவாதங்களை  இங்கு அனுமதிப்பதில்லை
என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.   
..........தோழமையுடன், நியூட்டன் அறிவியல் மன்றம்.
=======================================================
Press Information Bureau
Government of India
Election Commission
03-June-2017 18:32 IST
EVM Challenge Concludes
At the outset ECI thanks all the stakeholders for reaffirming their faith and confidence in the EVMs whether by participation or otherwise in the whole exercise of EVM Challenge. The Election Commission of India had, in an extraordinary measure, invited all national and state recognized political parties to come and participate in the EVM challenge announced by it on 20th May, 2017 as per the framework of the challenge. Only two political parties namely, NCP and CPI(M) submitted their interest in participating the EVM challenge till 5.00 PM on 26th May, 2017. Since none of the two political parties specified their choices for EVMs to be chosen from five poll gone states, the Commission brought 14 EVMs randomly in sealed condition kept in strong rooms from 12 Assembly Constituencies of Punjab, Uttrakhand and Uttar Pradesh for the EVM challenge scheduled for 3rd June, 2017.
Earlier, Commission had a meeting with all National and State Political Parties on 12 May 2017 in which 42 parties participated. While majority expressed full confidence on the integrity of EVMs, a few continued to raise doubts on functioning of the ECI-EVM.
Commission held a press conference on 20 May 2017 and explained in great detail why it has absolute confidence on non-tamperability of ECI-EVMs working within the technical and administrative safeguards. Commission then announced an EVM Challenge and spelt out a complete framework and send to all political parties on 20th May alongwith invitation.
Today both the parties (NCP and CPI-M) reported to the Challenge Venue on the 7th floor. However CPI(M) told they do not wish to participate in the challenge but only want to understand the EVM process. A detailed demonstration of the entire process was given to them by our technical team. They also expressed desire to interact with the TEC and had a detailed doubt clearing session in which in depth technical doubts were clarified by TEC of the Commission. CPI(M) team then expressed complete satisfaction and suggested that to allay any such doubts Commission should hold such demonstrations and awareness sessions with technical community proactively. Commission welcomes their very constructive suggestion.
NCP team led by Mrs Vandana Chavan, MP, informed that they too do not want to participate in any challenge but were only interested to participate in an academic exercise. She referred to her earlier request to provided them the memory number and battery number of the EVM four days in advance. The Director General Mr Sudeep Jain informed her that Commission had already replied to their request mentioning that the EVMs have to be kept under sealed conditions it is not possible for the Commission to open the EVMs to take out the memory and battery numbers in the absence of party representatives in the Commission. Commission had accordingly informed that the party can access these numbers at the time of the Challenge by opening themselves the sealed EVMs which is provided as per Challenge Framework. DG again informed her that they can choose an EVM and open the same to access these memory numbers. However NCP representative submitted a letter saying they cannot participate in the challenge because of non-provision of this information. In the letter NCP representative also raised an objection of last minute change in the EVM selection protocol by asking them to select an EVM out of the list of 14 EVMs.
Commission then offered her to have all her technical doubts clarified by interacting with TEC. NCP team then had a detailed discussion with TEC which clarified all their issues, including the 8 issues listed by them in their letter submitted today to which the response would be sent separately.
NCP team again met the Commission where the Commission reiterated their offer that they can still participate in the Challenge or by way of academic exercise by selecting the EVM and then accessing the memory and battery numbers by opening the machines themselves. Commission also offered them that they can come back, as they had demanded, to prove their point.
However NCP representative mentioned that the source of all their doubts had been alleged problems with EVMs during Municipal Elections in Maharashtra. Commission clarified that EVMs used by SEC, Maharashtra for urban local bodies elections do not belong to ECI. The NCP team then expressed their willingness to opt out requesting that Commission should evolve a system which clearly distinguishes ECI-EVMs from SEC EVMs. Commission has taken note of NCP’s suggestions.
The Commission has already stated publicly and before political parties that all future elections will be mandatorily held with VVPATs. The Commission firmly believes that use of VVPAT machines along with the EVMs in all polling stations, in all future elections, will bring utmost transparency and credibility in the EVM-based voting system. Audit trail will enhance confidence and trust of voters. Use of VVPATs with EVMs must conclusively put to rest all misinformed doubts and misgivings regarding EVMs.
Honourable Uttarakhand high court in its judgement yesterday said "Prima facie, it is evident from a combined reading of the entire press release of ECI that this system is seal proof. The EVMs are not hackable. There cannot be any manipulation at manufacturing stage. The results cannot be altered by activating a Trojan Horse through a sequence of key presses. The ECI-EVMs cannot be physically tampered with. The EVMs use some of the most sophisticated technological features like One Time Programmable (OTP) microcontrollers, dynamic coding of key codes, date and time stamping of each and every key press etc. These EVMs also cannot be tampered with during the course of transportation or at the place of storage. There are checks and balances to ensure tamper-proofing of EVMs".
It is clarified that for visual Inspection EVMs can be opened and visually inspected during Challenge-II as this is allowed during First Level Check (FLC).
The Commission is thankful to all the citizens, voters, political parties and all stakeholders for their unwavering faith in the Commission for more than 67 years. The Commission would further like to thank all political parties for showing their continuous trust and confidence in the Election Commission of India as expressed during interventions of political parties on 12th May in the All Party Meeting. The Commission would like to reassure the people of the country that the Commission would leave no stone unturned in preserving the purity, integrity and credibility of the Elections and reinforcing the faith and trust of the people in the electoral democracy of our country. I wish to reassure that citizens of the country that the Commission will never ever allow the faith of the people in the integrity of the election process to be shaken. The Commission desire all citizens and stakeholders to remain aware, vigilant and alert about our electoral processes so that Commission can further strengthen the conduct of free and fair elections in the country.