சனி, 29 ஏப்ரல், 2023

12 மணி நேரவேலை ஏற்கனவே கேரளத்தில் 
மார்க்சிஸ்ட் ஆட்சியில் செயல்பாட்டுக்கு வந்து விட்டது!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------
கேரளத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சியில் கடந்த ஆண்டிலேயே 
12 மணி நேர வேலை செயல்படுத்தப் பட்டு விட்டது.
KSRTC எனப்படும் கேரள அரசுப் போக்குவரத்து
நிறுவனத்தில் மார்க்சிஸ்டு முதல்வர் பினராயி
விஜயன் அவர்கள் 12 மணி நேர வேலை நேரத்தை 
செயல்படுத்தி விட்டார்.

KSRTC நிருவனத்தில் சுமார் 30,000 தொழிலாளர்கள் 
வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் 
அனைவரும் தற்போது 12மணி நேர வேலை 
(12 hours work in a single shift) பார்த்து வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் 
12 மணி நேர வேலை செயல்பாட்டுக்கு வரவில்லை,
மார்க்சிஸ்ட்களின் கேரளத்தைத் தவிர.

போலி மாவோயிஸ்டுகளுக்கு போலி நக்சல்பாரிகளும் 
கேரளா மார்க்சிஸ்ட் பினராயி விஜயனின் 
தொழிலாளி விரோதப் போக்கைக் கண்டிக்கவில்லை.  

முத்தரசனிடமும் கே பாலகிருஷ்ணனிடமும் 
எச்சில் காசு வாங்கித் திணற போலி மாவோயிஸ்டுகள் 
எப்படி பினராயி விஜயனை எதிர்ப்பார்கள்?
****************************************************   
  

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

ஆண்டுகளுக்குப் பெயரிடும் வழக்கம் 
தமிழ் மரபில் ஒருபோதும் இருந்ததில்லை!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
தமிழன் கிழமைகளுக்குப் பெயரிட்டான்
(ஞாயிறு, திங்கள், செவ்வாய்....). அடுத்து 
மாதங்களுக்குப் பெயரிட்டான் 
(சித்திரை, வைகாசி,ஆனி.....). ஆனால் 
ஆண்டுகளுக்குப் பெயரிடவில்லை.
ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கம் தமிழனிடம் 
ஒருபோதும் இருந்ததில்லை.

தொல்காப்பியம் தமிழின் தொன்மையான இலக்கண 
நூல். அதில் பெரும்பொழுது, சிறுபொழுது 
பற்றியெல்லாம் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.
ஆனால் ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டுவது பற்றியோ,
ஆண்டுகளின் பெயர்கள் பற்றியோ தொல்காப்பியத்தில் 
ஒரு சிறு குறிப்பும் இல்லை.

தொல்காப்பியத்தின் பின்னர் எழுந்த நன்னூல் 
இன்று நடைமுறையில் உள்ள தமிழிலக்கண நூல்.
அதிலும் ஆண்டுகளின் பெயர்கள் பற்றி எவ்விதக் 
குறிப்பும் இல்லை.

இலக்கண நூல்கள் மட்டுமின்றி, பத்துப்பாட்டு 
எட்டுத்தொகை பதினெண்கீழ்க்கணக்கு நீதிநூல்கள் 
பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட எந்த ஒன்றிலும் 
ஆண்டுகளின் பெயர்களைப் பற்றி எக்குறிப்பும் இல்லை.
இதனால் பெறப்படும் நீதி என்னவெனில், தமிழர்கள் 
ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டும் மரபைக் 
கொண்டவர்கள் அல்லர் என்பதுதான். 

 ஆங்கில, ஐரோப்பிய மரபுகளிலும்கூட, ஆண்டுகளுக்குப் 
பெயர் சூட்டும் வழக்கம் இல்லை என்பதை நாம் 
அறிவோம். கிழமைகளுக்கும் (Sunday, Monday) 
மாதங்களுக்கும் (January, February)  பெயர் சூட்டிய 
ஐரோப்பியர்கள் ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டவில்லை.

ஆண்டுகளை எண்களால் குறிப்பிட்டனர் பண்டைத் 
தமிழர்கள். 1,2 ,3 என்று 60 வரையிலான எண்களைக் 
கொண்டு ஆண்டுகளைக் குறித்தனர். 60 ஆண்டுச் 
சுழற்சி வானியல் அடிப்படையில் அமைந்தது.
(இது பற்றி தனிக் கட்டுரையில் காணலாம்).


ஆந்திரத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டை 
ஆக்கிரமித்த தெலுங்கு வந்தேறி நாயக்கர்கள்
தங்களோடு தங்களின் பெயர் சூட்டப்பட்ட 
ஆண்டுகளையும் இங்கு கொண்டு வந்து 
புகுத்தினார்கள். ஈ வே ராமசாமி, அண்ணாத்துரை 
போன்ற தெலுங்கர்கள் பிரபவ விபவ என்று 
தொடங்கும் அந்த ஆண்டுகளை வெகுவாக 
மக்களிடம் கொண்டு சென்றார்கள். தமிழ் 
மக்களிடம் இல்லாத ஆண்டுகளுக்குப் பெயர் 
சூட்டும் மரபை தெலுங்கர் ஈவே ரா தீய 
உள்நோக்கத்துடன் தமிழர்களிடம்  திணித்தார்.

இன்று சில தமிழக் கோமாளிப் பயல்கள் பிரபவ 
விபவ என்று தொடங்கும் 60 ஆண்டுகளின் 
பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு 
தங்களின் அறியாமையை வெளிப்படுத்திக் 
கொண்டிருக்கிறார்கள். கோமாளிகளே, தமிழன் 
ஆண்டுகளுக்குப் பெயர் சூட்டுவதில்லை; தமிழிலும் 
சரி, சமஸ்கிருதத்திலும் சரி.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அறிவியல், விண்ணியற்பியல் கற்றவர்களிடம் இருந்து
காத்திரமான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
*********************************************** 99
     

        





தமிழ்ப் பண்டிட் தற்குறிகள்!
---------------------------------------------

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்- சபைநடுவே 
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய 
மாட்டா தவன்நன் மரம்.  

1) மருத்துவன் தாமோதரனார் என்று ஒரு 
சங்கப் புலவர் இருந்தார். தொழில்வழியாக 
அவர் ஒரு மருத்துவர்.

2) கணியன் பூங்குன்றனாரை நாம் அறிவோம். 
அவர் ஒரு கணித வல்லுநர். அது போலவே 
பக்குடுக்கை நன்கணியாரும் கணிதம்  
பயின்றவர்.   

3) மேலும் அரசர்கள் பலர் பாடிய பாடல்கள் 
பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் உள்ளன.

4) தமிழர்களின் அறிவு, அறிவியல் ஆகியவை 
பல்துறை அறிஞர்களால் உருவாக்கப்பட்டு 
வளர்த்தெடுக்கப்பட்டவை. மாறாக 
தற்குறிகளான தமிழ்ப்பண்டிட்டுகள் 
உருவாக்கியவை அல்ல. எனவே தமிழர்களின் 
பண்டைய அறிவியலுக்கு இன்றைய 
தமிழ்ப்பண்டிட் தற்குறிகள் சொந்தம் 
கொண்டாட அருகதையற்றவர்கள்.

5) இன்றைய சமூகத்தில் ஒரு தமிழ்ப்பண்டிட் 
என்பவன் யார்? ஓர் இழிந்த தற்குறி.
அ) a plus b whole squared என்றால் என்னவென்று 
தெரியாதவன்.
ஆ) டி மோவிர் தேற்றம் தெரியாதவன்.
இ) tan 45ன் value தெரியாதவன்.
ஈ) ஒரு சபையில் கேட்கும் கேள்விக்குப் பதில் 
சொல்லத் தெரியாமல் பேந்தப்பேந்த 
முழிப்பவன்.  இத்தியாதி...இத்தியாதி.

5) எனவே இத்தகைய தமிழ்ப்பண்டிட் தற்குறிகள் 
பண்டைத் தமிழரின் வானியல் அறிவுக்குச் 
சொந்தம் கொண்டாடுவது கயமை ஆகும்.    
    

வியாழன், 13 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் 72 போலி டாக்டர்கள் கைது!
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசு நடவடிக்கை!
மார்க்சிஸ்டுகள் அல்லாதோர் இதைப் படிக்க வேண்டாம்!  
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
போலி டாக்டர்களைக் களையெடுக்க வேண்டும் என்று 
அண்மையில் ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 
தீர்ப்பளித்தது. அதன்படி தமிழக அரசு 72 போலி 
டாக்டர்களைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.
கைதானவர்களில் பலரும் ஹோமியோபதி போலி 
வைத்தியர்கள் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

இந்திய அரசு மாற்று மருத்துவம் என்ற பெயரில் 
ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி. 
யுனானி ஆகிய மருத்துவ முறைகளை அங்கீகரித்துள்ளது.
அந்தந்த மருத்துவத்தில் முறையாகப் படித்துத் தேறி, 
பட்டம்  பெற்று, இந்திய மருத்துவக் கவுன்சிலில் 
பதிவு செய்து கொண்டவர்களே முறையான 
மருத்துவர்கள் ஆவர்.

இதன்படி, ஒருவர் ஹோமியோபதி மருத்துவராகச் 
செயல்பட  வேண்டுமெனில் BHMS என்னும் ஐந்தாண்டு 
ஹோமியோபதி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் இந்திய 
மருத்துவ கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்து 
கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் ஹோமியோபதியின் துரதிருஷ்டம் என்னவெனில்
வேறெந்த மருத்துவ முறையையும் விட போலி மருத்துவர்கள் 
ஹோமியோபதியில்தான் அதிகம். ஹோமியோபதி 
மருத்துவன் என்று கூறிக்கொண்டு சாலைகளில் திரியும் 
1000 பேரை எடுத்துக்  கொண்டால், அவர்களில் 2 பேர் மட்டுமே 
முறைப்படி BHMS படித்துத் தேறியவர்களாக இருப்பார்கள்.
மீட்டி 998 பேர் படிப்பறிவே இல்லாத போலி மருத்துவர்கள்.

இப்போது 72 பேரைமட்டுமே அரசு கைது செய்துள்ளது.
இன்னும் கைது செய்யப்பட வேண்டிய ஹோமியோபதி 
போலி வைத்தியர்கள் குறைந்தது 70,000 பேர் இருப்பார்கள்.

இன்று கைதான் 72 ஆசாமிகளில் பெரும்பாலோர் போலி 
நக்சல்பாரிகள். எனக்குத் தெரிந்த பல போலி 
ஹோமியோபதி வைத்தியர்கள் VIII std பெயிலாய்ப் 
போனவர்கள். மேலும் X std பெயிலானவன், old SSLC
பெயிலானவன், பியூசி பெயிலானவன், எந்தப்படிப்பையும் 
ஒழுங்காகப் படிக்காமல், படிப்பு மண்டையில் ஏறாமல் 
discontinue ஆனவன் இத்தியாதி இத்தியாதி ஆசாமிகள்தான் 
ஹோமியோபதி வைத்தியார்களாக ஊரை ஏமாற்றிக் 
கொண்டு இருப்பவர்கள்.

இந்திய அரசு ஹோமியோபதியை  அங்கீகரிக்கிறது. ஆனால் 
மார்க்சியம் ஹோமியோபதியை அங்கீகரிக்கவில்லை.     
எனவே மெய்யான மார்க்சிஸ்டுகள் என்றால் அவர்கள் 
ஹோமியோபதியைப் புறக்கணிக்க வேண்டும்.

இக்கட்டுரை மார்க்சிஸ்டுகள் என்று ஊரை ஏமாற்றும் 
போலி ஹோமியோபதி ஆசாமிகளை மட்டுமே கண்டிக்கிறது.
வலதுசாரி முகாமில், பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ்வா 
ஆசாமிகள் ஹோமியோபதியையோ வீரன் எந்த ஒரு போலி 
அறிவியலையையோ பின்னாற்றலாம். அது பற்றி 
நியூட்டன் அறிவியல் மன்றம் கவலைப் படுவதில்லை.
இந்தப் பதிவு மார்க்சிஸ்ட் அல்லாதவர்களுக்கான 
பதிவு அல்ல, (Not meant for Non-Marxists.
------------------------------------------------------------------------------------------     
   
    


ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

கணவனை விட வயதில் இளைய மனைவிக்கு  
கணவனை விட வயது கூடியது எப்படி?
-------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
கணவன் மனைவி இருவரும் இனிய இல்லறம் 
நடத்தி வந்தனர். கணவனின் வயது 30. மனைவியின் 
வயது 25.

ஒருநாள் கணவன் ஒரு விண்கலத்தில் ஏறி விண்வெளிப் பயணம் மேற்கொண்டான். மனைவி பூமியிலேயே இருந்தாள். 
விண்கலமானது ஒளியின் வேகம் என்னவோ 
அதில் 95 சதவீத வேகத்தில் பறந்தது. ஒளியின் வேகத்தை 
c என்று குறிப்பிடுவர். அதன்படி விண்கலத்தின் வேகம் 0.95c ஆகும். 

ஒளியின் வேகம் = நொடிக்கு 3 லட்சம் கிமீ. 
துல்லியமாகச் சொன்னால் 299,792,458 மீட்டர்/ வினாடி   
(முதல் வரியில் கிலோமீட்டரில் சொல்லி இருக்கிறேன். 
இரண்டாவது வரியில் மீட்டரில் சொல்லி இருக்கிறேன்.
இயற்பியலில் அலகுகள் (units) மிகவும் முக்கியம்; 
இதில் கவனம் தேவை)

ஒளியின் வேகத்தில் 95 சதவீதம் வேகம் எவ்வளவு?
95 x 299,792,458 மீட்டர் என்பதை 100ஆல் வகுக்க வேண்டும்.  
அதாவது 284,802,835 மீட்டர்/வினாடி. 
அதாவது 284,803 கிலோமீட்டர்/வினாடி என்று புரிந்து கொள்க.     

விண்வெளிப் பயணம் நிறைவுற்று விண்கலம்  பூமிக்குத் 
திரும்பியது. இப்போது கணவனின் வயது 32 ஆகி இருந்தது. 
30 வயதில் விண்வெளிக்குச் சென்றவன் பூமி திரும்பியபோது 
32 வயது ஆகி இருந்தது.

அதே நேரத்தில் விண்வெளிப் பயணம் தொடங்கியபோது 
25 வயதாக இருந்த அவன் மனைவிக்கு இப்போது 40 வயது 
ஆகி இருந்தது. அவளின் காதோரம் மெலிதாக நரைக்கத் 
தொடங்கி இருந்தது. 

விண்வெளியில் கணவன் இருந்த 2 ஆண்டுகள் என்பது பூமியில் 
15ஆண்டுகளுக்குச் சமமாக இருந்திருக்கிறது என்பதை 
நம்மால் அறிய முடிகிறது. (இந்த உதாரணத்தில் கூறப்படும் 
கணவன் மனைவி வயதுகளில் நிகழ்ந்த மாற்றம் பெரிதும்  
தோராயமாகக் கணக்கிடப் பட்டுள்ளது. துல்லியமாகக் 
கணக்கிட இயலும் எனினும் புரிந்து கொள்ளச் சுலபமாக 
தோராயத்தைப் பயன்படுத்தி உள்ளேன்).   


இப்படி இருக்க முடியுமா? 
அ) ஆளைப் பொறுத்து காலம் மாறுமா?  
கணவனுக்கு 2 ஆண்டு என்பது மனைவிக்கு 15 ஆண்டா?  
ஆ) இடத்தைப் பொறுத்து காலம் மாறுமா? 
விண்வெளியில் ஆன காலம்தானே பூமியிலும் ஆகி இருக்க வேண்டும்? விண்வெளியில் 2 ஆண்டு என்பது பூமியில் எப்படி 15 ஆண்டு ஆனது? 
இ) வேகத்தைப் பொறுத்து காலம் மாறுமா?  வெவ்வேறு வேகத்தில் பயணம் செய்தால் வெவ்வேறு அளவில் காலம் மாறுமா?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஆம்! ஆம்!! ஆம்!!! 
ஆம் என்று அடித்துக் கூறுபவர் ஐன்ஸ்டைன்.  அவருடைய 
சார்பியல் கொள்கைப்படி (Relativity theory)  இது சாத்தியம். 
இது கால tநீட்சி (Time dilation) என்று அறியப் படுகிறது. கால நீட்சி என்றால்  என்ன பொருள்? காலம் நீள்கிறது என்று பொருள். அதாவது 
குறைவான வேகம் உள்ள இடத்தில் காலம் நீள்கிறது என்று பொருள்.

இரண்டு வெவ்வேறு இடங்களைக் கருதுங்கள். ஒன்று நமது பூமி.
இன்னொன்று விண்வெளியில் தொலைவில் உள்ள இன்னொரு கோள்.
நமது பூமியில் அன்றாட வாழ்க்கையின் வேகம் மிகவும் குறைவானது.
அதாவது ஒளியின் வேகத்தோடு ஒப்பிட்டால் பூமியில் நாம் 
உணரும் வேகம் மிகவும் குறைவு. எனவே இங்கு காலம் மிகவும் 
வேகமாகச் செல்லும்.   

விண்வெளியில் உள்ள ஒரு கோளில் வேகம் அதிகம் என்று 
வைத்துக் கொள்ளுங்கள். ஒளியின் வேகத்திற்கு நெருக்கமாக 
அந்தக் கோளின் வேகம் இருக்கிறது என்றால், அங்கு காலம் 
மிக மெதுவாகச் செல்லும். முன்னர்க்கூறிய உதாரணத்தில்,
அதிக வேகமுள்ள கோளில் காலம் மிகவும் மெதுவாகக் 
கழிகிறது. எனவேதான் கணவனின் வயது 2 ஆண்டு மட்டுமே 
கூடியுள்ளது. அதே நேரத்தில் பூமியில் வேகம் மிகவும் 
குறைவு என்பதால், அங்கு காலம் நீண்டு கொண்டே சென்று,
மனைவியின் வயது 15 ஆண்டு கூடி விட்டது.  

கால நீட்சியை (Time dilation) மிகவும் துல்லியமாகக் கணக்கிட உதவும் ஒரு சூத்திரம் உள்ளது. (இணைக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும்).இச்சூத்திரத்தைப்
பயன்படுத்தி வேகத்தைப் பொறுத்து காலம் மாறுபாடு அடைவதைத்
துல்லியமாக அளக்க இயலும்.   

ஐன்ஸ்டைன் கூறியது சரி என்று கணக்கற்ற பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப் பட்டு இருக்கிறது. காலம் என்பது எல்லா இடத்திலும் 
எல்லாச் சூழலிலும் மாறாமல் நிலையாக இருக்கக்கூடிய விஷயம் அல்ல 
என்பதுதான் சார்பியல் கொள்கை. இது நியூட்டனின் கொள்கையில் இருந்து மாறுபட்டது. காலம் என்பது தனிமுதலானது (absolute) 
என்று நியூட்டன் கருதினார். அப்படி அல்லாமல் வேகத்தைப் பொறுத்து
மாறும் தன்மை உடையது (Time is relative) என்று ஐன்ஸ்டைன் நிறுவினார்.    

ஐன்ஸ்டைன் இரண்டு சார்பியல் கோட்பாடுகளைச் சொன்னார்.
1) சிறப்புச் சார்பியல் கோட்பாடு (Special theory of relativity 1905)
2) பொதுச் சார்பியல் கோட்பாடு (General theory of relativity 1915). 
காலம் சார்புடையது (Time is relative) என்பது சிறப்புச் சார்பியல்
கோட்பாட்டில் வருகிறது.   

நிறையும் சார்புடையதே!
---------------------------------------
அடுத்து நிறை என்பது தனிமுதலானது (mass is absolute) என்று நியூட்டன் 
கருதினார்.  இதில் நியூட்டனுடன் முரண்பட்டார் ஐன்ஸ்டைன்.
நிறையும் சார்புடையதே (mass is relative) என்று நிறுவினார் ஐன்ஸ்டைன்.
வேகத்தைப் பொறுத்து மாறும் தன்மை உடையதே நிறை என்றார்
அவர். 

இங்கு பேசப்படுகிற வேகம் எல்லாம் அன்றாட வாழ்க்கையில் 
நாம் உணரும் வேகம் அல்ல. மாறாக ஒளியின் வேகத்தை  
ஒட்டியதும் அதற்கு நெருக்கமானதுமான வேகத்தையே 
சார்பியல் கோட்பாட்டைப் பற்றிப் பேசும்போது குறிப்பிடுகிறோம்.

ஒரு எளிய உதாரணத்தைப் பார்ப்போம்.  
ஒளியின் வேகம் என்னவோ அதில் 82 சதவீத 
வேகத்தில் பயணம் செய்யும் ஒரு நாய்க்குட்டியின் நிறை 
12 கிலோகிராம். உங்களில் சிலருக்கு முதன்முதலில் 
விண்வெளியில் பயணம் செய்த ரஷ்யாவின் லைக்கா என்ற நாய் 
நினைவுக்கு வரக்கூடும். இங்கு நாயின் வேகம் = 0.82c.
இயக்கத்தில் உள்ள நாயின் நிறை (relativistic mass) 12 கிலோகிராம்.
அப்படியானால் நாயின் ஓய்வுநிலை நிறை (rest mass) என்ன?  

உரிய சூத்திரத்தைப் பயன்படுத்தி இக்கணக்கிற்கு எளிதாக 
விடை காணலாம். 12ஆம் வகுப்பு மாணவனால் இக்கணக்கைச் 
செய்து விடை காண இயலும். ஒரு காலத்தில் ஐன்ஸ்டைன்,
எட்டிங்டன், லாரன்ஸ் (Lorentz) போன்ற வெகு சிலருக்கு 
மட்டுமே தெரிந்திருந்த இக்கணக்கை இன்று உலகெங்கும் 
கோடானுகோடி பள்ளி மாணவர்கள் எளிதாகச் செய்து 
விடுகிறார்கள்.

இக்கணக்கின் விடை 7 கிலோகிராம் (சற்றுத் தோராயமாக) ஆகும். 
அதாவது நாயின் ஓய்வுநிலை நிறை (rest mass) 7  கிலோகிராம் ஆகும்.
ஓய்வுநிலையில் 7 கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருள் 
ஒளியின் வேகத்தில் 82 சதவீத வேகத்தில் இயங்கும்போது
அதன் நிறை அதிகரிக்கிறது. 7 கிகி நிறை என்பது 12 கிகி நிறையாக 
அதிகரித்து விடுகிறது. எனவே நிறை என்பது நியூட்டன் 
கருதியது போன்று தனிமுதலானது அல்ல. மாறாக சார்புத் தன்மை 
கொண்டது என்பது ஐன்ஸ்டைனால் நிரூபிக்கப் பட்டுள்ளது.

நிறை (mass) பற்றி சிறு வகுப்புகளிலேயே கற்றுத் தரப்படுகிறது.
நியூட்டனின் இயற்பியலில் ஈர்ப்பு நிறை (gravitational mass), சடத்துவ நிறை
(inertial mass) என்று இரண்டு உண்டு. நிறை என்பதை இரண்டு விதமாக வரையறுப்பதால் இரண்டு வித நிறை உள்ளது. எனினும் 
இரண்டும் ஒன்றே.

சார்பியல் கொள்கை வந்தவுடன், அதிலும் நிறை என்பது
இரண்டு வகைப்பட்டது என்ற கருத்தும்  கூடவே வந்தது.
1. ஒய்வு நிறை (rest mass)
2. இயக்கத்தின் போது உள்ள நிறை (mass while on motion).
இவ்விரண்டும் ஒன்றல்ல; வேறுபட்டவை.

இவற்றை rest mass என்றும் relativistic mass என்றும் 
குறிப்பிடுகிறோம். ஓய்வுநிலையில் உள்ள
நிறையை rest mass என்கிறோம்.

இந்த வேறுபாடு சார்பியலில் மிகவும் முக்கியமானது.
இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள ஒரு
கணக்கைச் செய்வோம். இயற்பியல் மாணவர்கள் இக்கணக்கைச் செய்து 
விடைகாண வேண்டும் 

கணக்கு இதுதான்!
------------------------------ 
ஒரு எலக்ட்ரானின் ஒய்வு நிறை 9.1 x 10^-31
அந்த எலக்ட்ரான் ஒளியின் வேகத்தில் 4/5 பங்கு வேகத்தில்
செல்லும்போது அதன் நிறை என்ன?

(The rest mass of an electron is 9.1 x 10^-31. What will be its mass if it moves with 4/5th of
the speed of light?)

ஒரு எலக்ட்ரானின் நிறை ஓய்வில் இருக்கும்போது குறைவாகவும்
வேகமான இயக்கத்தில் இருக்கும்போது அதிகமாகவும் இருப்பதை 
இப்போது நம்மால் நன்கு உணர இயலும். அதாவது நிறையும் 
சார்புடையதே (mass is relative) என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது அல்லவா!

நீளம் சுருங்குமா?
---------------------------
நீண்டுகொண்டே செல்வதால் தமிழில் நீளம் என்று சொல்கிறோம்.
நீளம் என்றாலே சுருக்கம் என்பதற்கு எதிரானது. ஆனால் சிறப்புச் 
சார்பியல் கோட்பாட்டில் வேகமாகச் செல்லும் ஒரு பொருளின் 
நீளம் சுருங்கி விடும் என்று அறிகிறோம். இவ்வாறு நீளம் சுருங்குவது  
லாரன்ஸ்-ஃபிட் ஜெரால்டு சுருக்கம் (Lorentz Fit Gerald contraction)  என்று அதை முன்மொழிந்த விஞ்ஞானிகளின் பெயரால் அழைக்கப் படுகிறது. அன்றைய உலகில் யாரும் இதை நம்பவில்லை: யாருக்கும் அது புரியவும் 
இல்லை. "நீளம் எப்படி ஐயா சுருங்கும்?  இதென்ன பைத்தியக்காரத்தனம்!"
என்பதுதான் அன்று அனைவரின் அங்கலாய்ப்பாக இருந்தது.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஹர்திக் பாண்டியா என்பவர் 
நாம் நன்கறிந்த கிரிக்கெட் ஆட்டக்காரர். இவரின் உயரம் 6 அடி.
இவர் ஒளியின் வேகத்தில் முக்கால் பங்கு வேகத்தில் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவ்வளவு வேகத்தில் 
செல்லும்போது இவரின் உயரம் ஆறடியாக நீடிக்குமா?
நீடிக்காது; சுருங்கி விடும். ஆறடி உயரமுள்ள இவர் ஐந்து அடியாகச் 
சுருங்கி விடுவார், தோராயமாக. இதுவே சிறப்புச் சார்பியலில் 
நீளம் சுருங்குதல் (Length contraction)  எனப்படுகிறது.  

ஒரு கணக்கைச் செய்து நீளம் சுருங்குதலைப் புரிந்து கொள்வோம்.
10 மீட்டர் நீளமுள்ள ஒரு கனத்த கம்பி ஒளியின் 
முக்கால் பங்கு வேகத்தில் (0.75c) சென்று நீளச் சுருக்கம் அடைகிறது.
சுருங்கிய பின்னர் அக்கம்பியின் நீளம் என்னவாக இருக்கும்?

உரிய சூத்திரத்தைப் பயன்படுத்தி இக்கணக்கிற்கு 
துல்லியமாக விடை அறியலாம். சுருங்கிய பின் அக்கம்பி 
6.6 மீட்டர் நீளம் இருக்கும். இதுவே சரியான விடை.

நியூட்டனின் இயற்பியல் வரை மக்களால் எளிதாகப் புரிந்து கொள்ள 
முடிந்தது. சிறிது முயற்சி இருந்தால் போதும், புரிந்து விடும்,
ஆனால் சார்பியல் கோட்பாடு ஒரு கணிசமான காலத்துக்கு 
புரியாமையின் புகைமூட்டம் கவிந்து கிடந்தது. இன்று குவாண்டம் கொள்கையானது மனிதனின் புரிதலுக்குச் சவாலாகத் திகழ்கிறது.
எனினும் மானுடம் இதையும் கடந்து முன்னேறும்.
-----------------------------------------------------------------------------
   
 

 



       
 


  

 



புதன், 5 ஏப்ரல், 2023

போலி இடதுசாரிகள்!
----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
நிலவுடைமைச் சமூக அமைப்பில் பரந்துபட்ட
மக்களுக்கு எந்த ஜனநாயக உரிமைகளும் கிடையாது.
நிலவுடைமைச் சமூக காலத்திலேயே வலதுசாரி,
இடதுசாரி என்ற பிரிவுகள் உண்டு.

பின்னர் முதலாளியச் சமூகம் உருவானதும், கூடவே
ஜனநாயகமும் மலர்ந்தது. இடதுசாரிகளுக்குப் பல
ஜனநாயக உரிமைகளும் சமூக அந்தஸ்தும் கிடைத்தன.

இக்காலக்கட்டத்தில், ஒரு இடதுசாரி என்பவன்
அ) anti establishmentஆக இருக்க வேண்டும்
ஆ) கல்வி கற்றவனாக, அறிவுத்திறன் படைத்தவனாக
இருக்க வேண்டும்
இ) முற்போக்காக இருக்க வேண்டும்
என்ற தேவைகள் இருந்தன. உண்மையில் இவை
மூன்றும் ஒரு இடதுசாரியின் properties ஆகக்
கருதப் பட்டன.

முதலாளியம் தோன்றியதில் இருந்து, இரண்டாம் உலகப்
போர் முடிந்த பிறகும் கூட, இந்த நிலை மாற்றமின்றி
நீடித்தது. அதாவது ஒரு இடதுசாரி என்பவன்
படித்தவனாகவும் அறிவாளியாகவும் இருக்க வேண்டும் 
என்ற நிலை அப்படியே நீடித்தது.

இந்தக் காலக் கட்டத்தில்தான் பிரெஞ்சு தத்துவஞானி
சார்த்தர் (Jean Paul Sartre 1905-1980) அறிவுஜீவிகளைப்
பற்றிப் பின்வருமாறு கூறியதாகத் தெரிய வருகிறது.:
"ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரியே"

எனினும் சார்த்தர் வரையறுத்த இந்த நிலை
நீடிக்கவில்லை. கம்யூனிசத்தின் பெயரால் கயமைத்
தனத்தை அரங்கேற்றம் செய்து கொண்டிருந்த
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக
விழுந்தன. தொடர்ந்து சோவியத் ஒன்றியமே விழுந்தது.
அடுத்து சீனம் வீழ்ந்தது. உலகில் எந்த நாட்டிலும்
கம்யூனிச அல்லது சோசலிச அமைப்பு இல்லை
என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.

இதைத் தொடர்ந்து உலகளாவிய இடதுசாரி முகாம்
மண்ணில் வீழ்ந்தது. இதுநாள் வரை இடதுசாரிகளாக
இருந்தவர்கள் வலதுசாரிகளாக மாறிப்போனார்கள்.
Anti establishment  ஆட்கள் அனைவரும் Pro establishment
ஆட்களாக மாறிப் போனார்கள்.ரஷ்யாவில் சோசலிசம்
இருக்கிறது, சீனாவில் சோசலிசம் இருக்கிறது என்று
உளறிக் கொட்டி, pro establishment  ஆட்களாக ஆனார்கள்.
அதாவது கடைந்தெடுத்த வலது பிற்போக்கு
ஆட்களாக ஆகிப்போனார்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்னால் கொடுக்க முடியும்.
வினோத் மிஸ்ரா என்று ஒரு தலைவர். இவரது குழு
லிபரேஷன் குழு என்று அழைக்கப்படும். இவர்களின்
மத்தியக் கமிட்டி சார்பாக லிபரேஷன் என்று பத்திரிக்கை
வரும். அதில் அரிந்தம் சென் என்பவர் ஒரு தொடர் கட்டுரை
எழுதினர். ரஷ்யாவில் சோசலிசம் ஓரளவு சிதைந்த
வடிவில் இருப்பதாக முட்டுக் கொடுத்து தீராப் பழியைத்
தேடிக் கொண்டார். இவர்தான் முதன் முதலில் வலது
பிற்போக்காளராக ஆன இடதுசாரி.

இன்று தமிழ்நாட்டில் இடதுசாரிகள் என்று உரிமை
கோரும் அனைவரும் (அதாவது 98 சதத்திற்கும் மேல்)
1) படிக்காத முட்டாள்கள்
2) ஆங்கிலம் தெரியாதவர்கள்
3) அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்
4) சாராம்சத்தில் இவர்கள் வலதுசாரிகளாக மாறிப்
போனவர்கள்.

இதற்கும் என்னால் ஒரு நல்ல உதாரணம் கொடுக்க
முடியும். தமிழ்நாட்டில் உள்ள மாவோயிஸ்டுகள்,
மார்க்சிய லெனினிஸ்டுகள், நக்சல்பாரிகள் என்று
அனைவரும் இன்ஸ்டன்ட் முத்தலாக்கை ரத்து
செய்யும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து,
ஆணாதிக்க வெறிக்குச் சாதகமாக நின்றவர்கள்.
இது வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

படிக்காத முட்டாள்களும், வலதுசாரிக் கயவர்களும்
தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்வது
பெருங்காயமாய் மட்டுமல்ல தண்டனைக்கு உரிய
கிரிமினல் குற்றமும் ஆகும்.
*********************************************************** 


இதெல்லாம் total nonsense.
தீக்கதிரில் கட்டுரை எழுதிய கபோதியின்
கல்வித் தகுதி என்ன? அவனுக்கு எந்த அளவு
அறிவியல் தெரியும்? அதெயெல்லாம் சொல்லத்
துணிவு உண்டா? கல்வித் தகுதியை முதலில்
சொல்லுங்கடா! அதன் பிறகு கருத்தையோ என்ன
கருமத்தையோ சொல்லுங்கடா!

மின்தொகுப்பு என்பதன் மூலம் தீக்கதிர்க்காரன்
என்ன பொருள் கொள்ளுகிறான்?
இதெல்லாம் சில மணி நேரத்தில் தெரிந்து போய் விடும்.

அதன் பிறகு அந்த சேதம் இந்த சேதம் என்றெல்லாம்
சொன்னவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

எல்லா வீடுகளிலும் இதுதான் நிலைமை.
1) வீட்டில் டிவி ஓடும் (60 வாட்ஸ்)
2) பிரிட்ஜ் ஓடும்
3) ஏசி ஓடும்
4) மின்விசிறி ஓடும்.

அப்படியானால் எது மட்டும் அணையும்?
ஒன்றிரண்டு டியூப் லைட்டுகள் (each 40 வாட்ஸ்)
மட்டும் அணையும். இவ்வளவுதான்.


மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு எழுதுகிற கருத்து இது.
தங்களைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட அர்த்தமற்ற
வெறுப்புக்கு இரையாகி அவதூறுகளை மொழிவது
இயல்பே. நீங்கள் சொன்ன பொய் எவ்வளவு இழிந்தது
என்பதை இங்கு நான் வெளியிட்ட சுஜாதாவின் கதை
நிரூபித்துக் காட்டும். குறைந்தபட்சம் அதை முழுவதும்
படித்த பிறகாவது உங்களின் அவதூறை எழுதி இருந்தால்,
அது தேவையற்றது என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மதவெறியே அனைத்தையும் தீர்மானிக்கும் என்றால்
அப்படிப்பட்ட சமூகம் உயிர்வாழத் தேவையில்லை.


மொத்த சூட்சுமமும் அந்தக் கடைசி வரியில்
இருக்கிறது.


காழ்ப்புணர்ச்சி என்னும் குஷ்டரோகத்தின் சீழ்
ஒருவரின் மூளையை ஆக்கிரமித்துக் கொள்ளும் எனில்,
எந்த நல்ல விஷயமும் அந்த மண்டையில் ஏறாது.



அன்று அரிந்தம் சென் இந்தக் கட்டுரையை
எழுதியபோது பலரையும் குழப்ப முடிந்தது.
இன்று அரிந்தம் சென் ஒரு போலி என்பதும்
அரிந்தம் சென் ஒரு பிற்போக்குப்  பிண்டம்
என்பதும் காலத்தால் நிரூபிக்கப் பட்டு விட்டது.
காலம் ஈவிரக்கம் அற்றது. அது பலரையும்
கணக்குத் தீர்த்து விடும்.

ஐயா இது சிறுகதை.

என்னுடைய வாழ்நாளில் இவ்வளவு "அறிவுபூர்வமான"
கருத்தை நான் இதுவரை கேட்டதில்லை.
இது ஒரு சிறுகதை. கதைகள் எப்படி எழுதப்படும்
என்ற அறிவு இருந்தால் மட்டுமே கதைகளைப்
புரிந்து கொள்ள இயலும்.


உங்கள் கருத்து இப்படித்தான் இருக்க முடியும்.
உங்களின் கருத்துக்கு எந்த ஒரு சமூக
மதிப்பும் கிடையாது. அது முற்றிலுமாக மதவெறியின்
அடிப்படையில் தீர்மானிக்கப் படுவது.

மதவெறியின் விளைவாக எழுந்த காழ்ப்பேறிப்போன
வன்மமும் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்
வரையிலுமான வெறுப்புணர்வு என்னும் சீழும்
உள்ள நீங்கள் உங்கள் வன்மத்தை வெளிப்படுத்தலாம்.
அதைப் பொதுச் சமூகம் சீந்தாது.











ஏண்டா அரங்கநாதன் சுப்பிரமணியன் என்னும்
கூட்டிக் கொடுக்கிற பயலே,
என்னடா படிச்சிருக்கே? படிக்காத முட்டப் பயலே,
ஏண்டா உன்னையெல்லாம் அன்றைக்கே வெளியே
போகச் சொன்னேனாடா! புழுவினும் இழிந்த
ஈனப்பயலே. ஏண்டா திமுககார முட்டாப்பயலுக்கு
இங்கு ஏதடா இடம்? ஏண்டா நீயெல்லாம் இன்னும்
சாகாமல் இருக்கிறே? சாவுடா.