ஞாயிறு, 29 டிசம்பர், 2019

(மீள் பதிவு)!   மருதுபாண்டியன்

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  சரி.
"இலக்கங்களின்" கூட்டுத்தொகை என்பதில்
உள்ள பன்மை (இலக்கங்கள்) சுழியைத் தவிர்த்து
 விடுகையில் சுழி எங்ஙனம் விடையாகும்?
சகுந்தலாதேவி அம்மையார் சுழியும் ஒரு
விடையே என்று கூறவில்லையே!

வேட்டுவச் சமூகம் இடம் பெயரும் தன்மை
கொண்டிருந்தது. அங்கு பறை என்பது வெறும்
கேளிக்கைக் கருவி மட்டுமன்று; அது செய்திப்
பரிமாற்றத்துக்கானது. மேய்ச்சல் சமூகத்தில்
நிலைத்த குடியிருப்பு வந்து விட்டது. Settlement என்பது
மானுட வாழ்வில் பெரும் முக்கியத்துவம் உடையது.

ஆண்டாள் வர்ணிக்கும் காலத்தில், மேய்ச்சல் சமூகம்
வேளாண் சமூகத்தின் கூறுகளைப் பெறத்
தொடங்கி இருந்த காலம். இங்கு இடம் பெயர்தல்
அரிதானது; பெரும் இயற்கைப் பேரிடர்களின்போது
மட்டுமே இடம் பெயர்தல் நிகழும். மதுராவில்
கண்ணன் நிலையான ஆட்சி புரிந்ததாக ஆண்டாள்
கூறுகிறாள். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
என்று கூறுகையில் நிலையான ஆட்சி நடைபெற்றதை
ஆண்டாள் கூறுகிறாள்.
     

2020இல் கேட்டு விடுவோம்.


ஆ என்பதும் ஆய் என்பதும் மிகவும்
தொன்மையான தமிழ்ச் சொற்கள்.
ஆ என்பது ஓரெழுத்தொரு மொழியாய் நின்று
பசுவைக் குறிக்கும். ஆயர் என்போர் பசுக்களை
உடையோர். ஆயர்பாடி ஆயர்களின் வாழிடம்.
"ஆவிற்கு நீரென்று இரப்பினும்" என்ற குறளிலும்
"ஆபயன் குன்றும்" என்ற தொடரிலும் ஆ என்ற சொல்
பசுக்களைக் குறிக்கிறது. இன்றைய ஆவின் பால் என்ற
சொல் ஆ என்ற சொல்லில் இருந்து பிறந்ததே.

அடுத்து ஆய் என்ற சொல்லை பற்றிப் பார்ப்போம்.
ஆய் அண்டிரன் என்ற மன்னனைத் தமிழ் வரலாறு
அறியும்.
"யாயும் ஞாயும் யாரா கியரோ" ஆய் என்ற சொல்
தாயைக் குறிக்கிறது. கருப்பாயி என்ற சொல்
கருப்பு ஆயி (கருப்புத்தாய்) என்று பொருள்படும்.
செல்லாயி என்ற சொல் செல்லத்தாய் என்று பொருள்படும்.

இந்த ஆய் என்ற சொல்லே இன்று ஆயா என்ற சொல்லாக
திரிந்து நிற்கிறது. அப்பன் ஆயி என்ற பேச்சு வழக்குச்
சொல்லும் ஆய் என்ற சொல் காலப்போக்கில் திரிந்ததன்
அடையாளமே.
    
ஆக, ஆ என்ற சொல்லும் ஆய் என்ற சொல்லும்
வெவ்வேறு பொருள் கொண்டவை என்பது நிறுவப்
படுகிறது.



மதுராவையும் கண்ணனே ஆண்டான் என்கிறார்
கண்ணனின் தாசனான கவிஞர் கண்ணதாசன்.

"குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்"
என்கிறார் கண்ணதாசன். தான் பிறந்த ஊரை
ஆள  இயலாத பலவீனம் உடையவன் கண்ணன் என்ற
தங்களின் கருத்து ஏற்புடையதல்ல.

 கண்ணன்


மெத்தச்சரி; பிதுரார்ஜித மண்ணை கண்ணன்
பகைவரிடம் விட்டு வைத்தான் என்பது தர்க்கப்
பொருத்தமற்றது.


சரியான விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

---------------------------------------------------------

13...sum 4, 3x=12, எண்ணை விட sum 1 குறைகிறது.

14....sum 5, 5x 3= 15, எண்ணை விட sum 1 கூடுகிறது.

15.... sum 6, 6x3 =18 எண்ணை விட sum 3 கூடுகிறது.

இதிலிருந்து 10 to 19 வரையிலான எண்களில்
தீர்வு இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

அடுத்து 20 to 29 வரை பார்க்க வேண்டும்.
இதில் 27 விடையாக அமைந்து விடுகிறது.

அடுத்து வேறு எதுவும் விடையாக அமைகிறதா
என்று பார்க்க வேண்டும். அதாவது இக்கணக்கிற்கு
UNIQUE SOLUTION உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மூன்று இலக்க எண்ணைக் கருதுக. அதிகபட்சமாக
999 என்ற எண்ணை எடுத்துக் கொண்டால்,
SUM= 9+9+9 =27 என்று வரும். 27x 3 =81தான். இதிலிருந்து
மூன்று இலக்க எண் விடையாக அமைவதில்லை
என்று புரிகிறது.

ஆக, 27 என்பது சரியான விடை என்பது
மட்டுமல்ல, இது மட்டுமே சரியான விடை
என்பதும் புலப்படுகிறது.

இக்கணக்கை "ஒருபடிச்சமன்பாடுகள்" என்ற
வகையில் தீர்ப்பதற்கு 10ஆம் வகுப்பில்
சொல்லித் தரப்பு படுகிறது. அந்த எண்ணை
10x+y என்று எடுத்துக் கொண்டு முறையாகச்
செய்தால் விடை வாசலில் வந்து கதவைத் தட்டும்.

கணக்கை முயற்சி செய்த, விடை எழுதிய,
விடைக்கு விளக்கமும் எழுதிய அனைவருக்கும்
நன்றி.

நேரடியாக ஃபார்முலாவைப் பயன்படுத்தி
விடையைக் கண்டுபிடிப்பது போல
எளிதானவை அல்ல சகுந்தலா தேவியின்
கணக்குகள். சிந்திக்க வைப்பவை அவை.

எனவேதான் இன்றும் கூட சகுந்தலாதேவியின்
கணக்குகள் அதிக அளவில் விற்பனை
ஆகின்றன. பல்வேறு பிரபல நிறுவனங்களில்
வேலை தேடுவோர் எழுதும் போட்டித் தேர்வில்
சகுந்தலா தேவி கணக்குகள் கேட்கப்
படுகின்றன.

இந்த ஆண்டுப் புத்தகச் சந்தையில் சகுந்தலா
தேவியின் கீழ்வரும் புத்தகங்களை வாங்குங்கள்.
உங்கள் பிள்ளைகள் போட்டித் தேர்வு எழுதும்
பருவத்தில் இருப்பவர்களா? கண்டிப்பாக
சகுந்தலா தேவியின் புத்தகங்களை வாங்குங்கள்.

1. Puzzles to puzzle you.
2. More puzzles to puzzle you.
And many more.
*******************************************
ஏற்கனவே மூன்று முறை கெளரவ டாக்டர்
பட்டம் பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு
நான்காவதாக டாக்டர் பட்டம் ஏன் பாரிவேந்தரே?
----------------------------------------------------------------------------
1) தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலை 2007ல்
கவிஞர் வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
வழங்கியது.

2) அடுத்த ஆண்டே 2008ல் மதுரை காமராசர் பல்கலை
அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

3) 2009ல் பாரதியார் பல்கலை அவருக்கு கெளரவ டாக்டர்
பட்டம் வழங்கியது.

இது போதாதா பாரிவேந்தரே? மீண்டும் மீண்டும்
ஒருவருக்கே ஏன் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க
வேண்டும்?

After all வைரமுத்து ஒரு தமிழ்ப் பண்டிட்! அவர் என்ன
அளப்பரிய சாதனைகளைச் செய்த விஞ்ஞானியா?

சந்திரயான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரைக்கு
கொடுத்தால் என்ன பாரிவேந்தரே?

சந்திரயான்-2  திட்ட இயக்குனர் வனிதா முத்தையாவுக்கு
டாக்டர் பட்டம் கொடுத்தால், உம் கையில் குஷ்டம்
வந்து விடுமா பாரிவேந்தரே?

வைரமுத்துவுக்கு வாஜ்பாய் அரசு 2003ல் பத்மஸ்ரீ வழங்கியது.
மன்மோகன்சிங் அரசு 2014ல் பதமபூஷண் வழங்கியது.
வாஜ்பாய் அரசுக்கும் மன்மோகன் அரசுக்கும்
ஒரே நேரத்தில் வேண்டப்பட்டவர் வைரமுத்து.
அதாவது காக்காய் பிடிப்பதில் வல்லவர்.

தமிழக அரசும் தன் பங்குக்கு கலைமாமணி,
தாலியறுத்த மாமணி என்று விருது வழங்கி உள்ளது.

கேவலம் ஒரு தமிழ்ப் பண்டிட்டுக்கு இத்தனை
விருதுகளா?

ப சிதம்பரம், மயில்சாமி அண்ணாத்துரை,
இஸ்ரோ அருணன், வனிதா முத்தையா, விஸ்வநாதன்
ஆனந்த் ஆகிய பேராளுமைகளுக்கு கெளரவ
டாக்டர் பட்டம் வழங்கத் துப்பற்ற புழுவினும் இழிந்த
தனியார் பல்கலை வேந்தர்கள், மீண்டும் மீண்டும்
வைரமுத்துவுக்கே வழங்குவது கல்விப்பணி அல்ல.

மயில்சாமி அண்ணாத்துரையின் மூத்திரத்தைக்
குடிங்கடா, புழுவினும் இழிந்த ஈனப் பயல்களே!
******************************************************    

அவருக்கும் இவருக்கும் தொழில் கூட்டு.
அதுதான் டாக்டர் பட்டமாகப் பல்லிளிக்கிறது.
சீனியர் சுரண்டல்காரர் ஜூனியர் சுரண்டல்காரரை
கெளரவிக்கிறார்.

கிரிமினல் என்பதற்காக ஒருவரின் அறிவுடைமையை
மறுக்க இயலாது.


கலைஞருக்கு கெளரவ டாக்டர் பட்டம் எப்போது
வழங்கப் பட்டது? 1971ல். நன்கு கவனிக்கவும்: 1971ல்
அப்போது அவர் வெறும் வசனகர்த்தா!

அவரின் சிறந்த நூல்களான குறளோவியம், தொல்காப்பியப்
பூங்கா, ரோமாபுரிப் பாண்டியன் என்று எந்த நூலையும்
அவர் 1971ல் எழுதியதில்லை. அவரின் இலக்கியப்
படைப்புகள் யாவும் 1971க்குப் பிறகுதான் எழுதப்
பட்டன. அனைத்துமே பிற்காலப் படைப்புகளே!

ஆக, 1971ல் வெறும் சினிமா வசனகர்த்தாவாக
மட்டும் இருந்த கலைஞர், தமது தகுதி எதையுமே
நிரூபிக்காத கலைஞர் கெளரவ டாக்டர்  பட்டத்துக்குத்
தகுதியற்றவர் என்று மொத்தத் தமிழ்நாடுமே
கருதியது.


படிப்பின் அருமை தெரிந்தவர்களால் அன்று
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியதை
ஏற்க இயலாது. தூக்கத்தைத் தியாகம் செய்து,
சிரமப்பட்டு கஷ்டப்பட்டும் படித்து, தியரி எக்ஸாம்
முடிந்த பிறகும் practicalsக்கு தயார் செய்து மே மாதக்
கோடையிலும் practical exam எழுதும் மாணவர்கள்
கஷ்டப்பட்டே ஒரு பட்டம் பெறுகிறார்கள்.

கண்ட விபச்சாரிகளையும் தடவிக் கொண்டு
டாக்டர்பட்டம் வாங்குவது பெரிய விஷயமா?
ஒரு பத்தாங்கிளாஸ் கூடப் பாஸ் பண்ணத் துப்பற்ற
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் என்பது  அன்று எந்த
மாணவனால் ஏற்க முடியாத கயமையாக இருந்தது.

திமுகவின் மிகச் சிறந்த சிந்தனையாளர் முரசொலி
மாறனோ அல்லது இரா செழியனோ ஏன் ஒரு
கெளரவ டாக்டர் பட்டத்தைப் பெற முயலவில்லை?
முரசொலி மாறன் ஆணையிட்டு இருந்தால்,
தமிழ்நாட்டில் உள்ள  துணைவேந்தர்கள் அவருக்கு
தாம்பாளத்தில் வைத்து டாக்டர் பட்டம் கொடுத்திருக்க
மாட்டார்களா?

ஆனால் முரசொலி மாறனோ, இரா செழியனோ
அதில் நாட்டம் இல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்குத்
தாழ்வு மனப்பான்மை எதுவும் கிடையாது.

கருணாநிதி, மேனன் இருவரும் தற்குறிகள். தாழ்வு
மனப்பான்மை அவர்களின் மூளையில் சீழாகச்
சுரந்து கொண்டே இருந்தது. எனவே தங்களுக்குத்
தாங்களே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொண்டார்கள்.


       
 




  





மேலே கூறப்பட்டவை கருத்துக்கள் அல்ல.
அவை வரலாற்று உண்மைகள். 1971ல் கருணாநிதி
எந்த ஒரு இலக்கியப் படைப்பையும் எழுதி
இருக்கவில்லை என்பது கருத்து அல்ல; மாறாக
அது உண்மை.


உண்மைகளை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.
அதைத்தவிர வேறு வழியில்லை.

அவரின் மிகச்சிறந்த நச்சிலக்கியம் "வான்கோழி"
1970களின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. அப்போது
அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.


அரசியலில் கலைஞருக்கு உரிய பங்கை எவரும்
மறுத்திட இயலாது. அது குறித்து நான் எதுவும்
கூறவில்லை. ஆனால் டாக்டர் பட்டம் என்பது
கல்விப்புலம் சார்ந்த ஒரு விஷயம். அதை அவர் வலிந்து
பெற்றபோது, அதற்கான அவரின் அருகதையைத்
தட்டிக் கேட்க சமூகத்துக்கு உரிமை உண்டு.
சமூகநீதி சார்ந்த அவரின் பங்களிப்பை இங்கு
யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.








உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு. மார்கரெட்
தாட்சருக்கு அவர் படித்த ஆக்ஸ்போர்டு பல்கலை
டாக்டர் பட்டம் வழங்கியது. இது கல்விப்புலம்
சார்ந்த நடவடிக்கை.

புழுவினும் இழிந்த விஜய் ஜோசப்புக்கு பட்டம்
வழங்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது.
கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும்போது
மட்டும் மொத்தத் தமிழ்நாடே பற்றி எரிந்தது.
அண்ணாமலைப் பல்கலை மாணவர் உதயகுமார்
கொல்லப்பட்டார். இதெல்லாம் தற்போது
தமிழ்நாட்டின் legends and stories ஆகி விட்டது.

அண்ணா குறித்தும் நாவலர் குறித்தும் நான்
எதிர்மறையாக எதையுமே கூறவில்லையே!


ஒன்றிரண்டு வரிகளில் சொல்ல இயலாது.
நேரம் கிடைக்கும்போது எமது methodology குறித்து
எழுதுவேன்.


இசையில் சாதனை புரிந்த பலரும் டாக்டர் பட்டம்
பெறுகிறார்கள். இது இயல்புதானே! ஆனால் திருமதி
சின்மயி எந்த அளவு இசையில் சாதனை புரிந்துள்ளார்
என்று எனக்குத் தெரியாது.


டாக்டர் மு வ அவர்களைச் சந்தித்த நாங்களும் சரி,
சந்திக்காத பிற மாணவர்களும் சரி, அவரின் நாவல்கள்
அனைத்தையும் வாசித்தவர்கள். அவர் மீது அபிமானம்
உள்ளவர்கள். மேலும் டாக்டர் மு வ அவர்கள்
திறந்த மனதுள்ளவர். உளவியல் நன்கறிந்தவர்.
அவரிடம் mental block எதுவும் இல்லை.

ஆனால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை
அவர் ஒரு தமிழ்ப் பண்டிட்; தமிழ்ப்பண்டிட் மட்டுமே.
அக்காலத்து தமிழ்ப் பண்டிட்டுகள் அனைவரும்
விதிவிலக்கின்றி  அறிவியலோடு எந்தத் தொடர்பும்
அற்றவர்கள். டாக்டர் மு வ அவர்களில் ஒருவர்.

ஆங்கிலத்தில் கையெழுத்திடுவது என்று அக்காலத்தில்
எந்தச் சட்டமும் இல்லை. அதைக் குறையாகவும் நான்
சொல்ல விரும்பவில்லை. நான் என்னுடைய முதல்
கையெழுத்தை என்னுடைய SSLC புத்தகத்தில்
போடும்போது ஆங்கிலத்தில்தான் அது இருந்தது.
வாத்தியார் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை
அப்படியே செய்தோம்.

திராவிட இயக்கத்திலேயே அறிவாற்றல் மிக்கவராகவும்
IQ அதிகம் உள்ளவராகவும் இருந்த ஒரே ஒருவர் மறைந்த
முரசொலி மாறன் அவர்கள் மட்டுமே. அதிகாரம் மிக்க
பெரும் பதவிகளில் இருந்தவர் இவர். வாஜ்பாய்
அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக
இருந்தவர்.

இவர் விரும்பி இருந்தால் பல்கலைகளின் துணை
வேந்தர்களை வீட்டுக்கே வரச்சொல்லி மிரட்டி
கணக்கற்ற கெளரவ டாக்டர் பட்டங்களைப் பெற்று
இருக்கலாம். ஆனால் அவருக்கு அதில் நாட்டம்
எதுவும் இல்லை. காரணம் அவருக்கு IQ அதிகம்.

தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களிலேயே IQ அதிகம்
கொண்ட ஒரே தலைவர் பி ராமமூர்த்தி மட்டுமே.
உமாநாத்துக்கு திருப்திகரமான IQ எதுவும் கிடையாது.
தற்போதைய தமிழக மார்க்சிஸ்ட் தலைவர்களின்
IQ < 100 ஆக உள்ளது. 100 ஐ விடக் குறைவு.

  
 


கெளரவ டாக்டர் பட்டம்  என்பது
தமிழ்ப் பண்டிட்களுக்கு மட்டுமா?
---------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
கவிஞர் வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை
SRM  பல்கலை வழங்க இருக்கிறது. அதற்கு எதிரானதல்ல
இந்தக் கட்டுரை.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஏற்கனவே ஒரு பல்கலை
கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது.SRM பல்கலையும்
வழங்குமானால், அவருக்குக் கிடைக்கும் இரண்டாவது
டாக்டர் பட்டம் இதுவாகும்.

ஏன் ஒருவரிடமே எல்லா டாக்டர் பட்டங்களையும் குவிக்க
வேண்டும்? தமிழ்ப் பண்டிட்டுகளை விட்டால் நாட்டில்
வேறு யாருமே அறிவாளிகள் இல்லையா?

அறிவியலில் வியத்தகு சாதனைகளைச் செய்த எவருமே
பல்கலைகளின் கண்ணில் படவில்லையா?

1967 முதல் புழுத்த அரசியல்வாதிகளுக்கு பல்கலைகள்
டாக்டர் பட்டத்தை வழங்கின. அண்ணாத்துரை,
கருணாநிதி, நெடுஞ்செழியன், மேனன், ஜெயலலிதா
என்று பலருக்கும் மலிவு விலையில் கெளரவ டாக்டர்
பட்டங்கள் வழங்கப் பட்டன. ஆனால் கவிஞர்
கண்ணதாசனுக்கு (நானறிய) வழங்கப் படவில்லை.

தெலுங்கானாவின் விளையாட்டு வீராங்கனை சானியா
மிர்சாவுக்கு ஏ சி சண்முகத்தின் பல்கலை டாக்டர்
பட்டத்தை வழங்கியது. நடிப்பு மற்றும் சினிமாவுக்காக
கமலஹாசன் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். சிறந்த
இசை மேதை கே ஜே யேசுதாஸ் டாக்டர் பட்டம்
பெற்றுள்ளார். இவற்றை எவரும் ஆட்சேபிக்க இயலாது.
ஏனெனில் துறை சார்ந்த திறனை இவர்கள் வெளிப்படுத்தி
உள்ளனர்.

ஆனால், மனிதகுல வரலாறு கண்டும் கேட்டும் இராத
மகத்தான சதுரங்க மேதை விஸ்வநாதன் ஆனந்துக்கு
தமிழகப் பல்கலைகள் எதுவும் இதுவரை டாக்டர் பட்டம்
வழங்கவில்லை. இது நாணத்தக்கது. சதுரங்கம்
என்பது விளையாட்டு மட்டுமல்ல; கணிதமும் ஆகும்.
(சதுரங்கம் கணிதமே என்ற அறிவியல் ஒளி ஏட்டில்
வெளியான  என் கட்டுரையை விரும்புவோர் படிக்கலாம்);

ப சிதம்பரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய
அரசியல்வாதிகளிலேயே அதிகமான IQ உள்ளவர்.
பச்சைத் தமிழர். பொருளாதாரம் சட்டம் ஆகிய
துறைகளில் நிபுணர். ஏன் அவருக்கு ஒரு டாக்டர்
பட்டம் வழங்க நம் பல்கலைகள் முன்வரவில்லை?
IQ குன்றிய வைரமுத்துவை விட, சிதம்பரம் எந்த
விதத்தில் குறைந்து விட்டார்?

சிதம்பரம் பெரும் அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்.
அவர் விரும்பி இருந்தால், தமிழகத்தில் உள்ள எல்லாப்
பல்கலைகளிலும் கெளரவ டாக்டர் பட்டத்தைப்
பெற்றிருக்கக் கூடும். துணைவேந்தர்களிடம் வேண்டுகோள்
விடுத்தல்ல, அவர்களைச் செருப்பால் அடித்தே சிதம்பரம்
இதைச் சாதித்து இருப்பார்.

ஆனால் சிதம்பரம் அவ்வாறு செய்யவில்லை. அவர்
கெளரவ டாக்டர் பட்டத்துக்கு ஏங்கவில்லை; இத்தகைய
பட்டங்களை அவர் இகழ்ச்சியுடன் நிராகரித்தார். காரணம்
அவர் IQ அதிகமுள்ளவர்.

IQ  120 உள்ள சிதம்பரம் கெளரவ டாக்டர் பட்டத்தை
வெறுத்து ஒதுக்குவதும், IQ 98.5 உள்ள வைரமுத்து
கெளரவ டாக்டர் பட்டத்துக்கு நாயாய் அலைவதும்.
இயல்பானதே. அது வைரமுத்துவின் குற்றம் அல்ல;
அவரின் IQவின் குற்றம்; அதாவது கருவின் குற்றம்.

சிறந்த மார்க்சிய சிந்தனையாளர் (Marxist theoretician)
என்ற முறையில் IQ அதிகமான சீதாராம் யெச்சூரிக்கு
டாக்டர் பட்டம் வழங்கு என்று கேட்பதற்குத்
துப்பில்லாத புழுவினும் இழிந்த CPM பாலகிருஷ்ணன்,
வைரமுத்துவுக்கு வழங்கு என்று முழங்குகிறார்.
இது வீசியெறிந்த காசுக்கு விலை போன
இழிநிலையையே சுட்டும்.

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் அன்றாடம் ஆயிரம்
சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதன்
காரணமாகவே சராசரி மனிதனின் வாழ்க்கை
அனுதினமும் மேம்பட்டு வருகிறது. எனினும் தமிழ்ச்
சமூகமானது அறிவியல் தற்குறிச் சமூகமாக இருந்து
வருவதால், அறிவியலையும் அறிவியல் அறிஞர்களையும்
புறக்கணிக்கிறது.

தமிழ்ச் சமூகத்திற்குத் தெரிந்ததெல்லாம் கூத்தாடிப்
பயல்களைத்தான். இந்தத் தற்குறிச் சமூகம் போற்றுவதும்
கூத்தாடிப் பயல்களைத்தான். மயில்சாமி
அண்ணாத்துரையின் மகத்துவம் அறியாத
வேசிப்பயல்கள்தான் வைரமுத்துவின் பாடல்களில்
"எழுச்சி"யைக் கண்டடைந்து புளகாங்கிதம் அடைவான்.  

1960களிலும் 1970களிலும் தமிழ்ப் பண்டிட்டுகளே
பல்கலைகளின் துணைவேந்தர்களாக நியமிக்கப்
பட்டனர். தெ பொ மீ, மு வரதராசனார், வ சுப மாணிக்கனார்
என அன்றைய துணைவேந்தர்கள் யாவரும் தமிழ்ப்
பண்டிட்டுகளே. கருணாநிதி ஆட்சியில் இந்த இழிநிலை
தொடர்ந்தது. அறிவியல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே
வந்தது.

1970களில் மதுரைப் பல்கலையில் B.Sc special என்ற பட்டப்
படிப்பு ஆரம்பிக்கப் பட்டது. இதில் மொழிப்பாடம்
கிடையாது. subject portions அதிகம். இதற்கு முந்திய
B.Sc Honours போன்றது இது.

இதைப்படிக்கும் மாணவர்களுக்கு நிறையக் கோரிக்கைகள்
இருந்தன. அவற்றை  VC யிடம் கூறி முறையிட அனைத்துக்
கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
அன்றைய VC மு வரதராசனார் அவர்களைச் சந்தித்தோம்.

எந்த appointmentம் வாங்கவில்லை. வாங்கத் தேவையும்
இல்லாத காலம் அது. நானும் நண்பர்களும்  காலை
7 மணிக்கு நெல்லையில் இருந்து பஸ் ஏறி மதுரை
சென்றோம். காலை 11 மணிக்கெல்லாம் பல்கலை
வளாகம் வந்து VC அறை முன்பு காத்திருந்தோம்.

உடனேயே VC வரச் சொல்லி விட்டார். அவரின் மேசையைச்
சுற்றி வட்டமாக நின்று கொண்டு அவரிடம் எங்கள்
கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். அவர் ஏற்கவில்லை.
அவரால் எங்களின் கோரிக்கைகளையே புரிந்து கொள்ள
முடியவில்லை. "போய்ப் படிச்சுப் பாஸ் பண்ற வழியைப்
பாருங்க" என்று எங்களை அனுப்பி வைத்தார்.

1970களில் நடந்த சம்பவம் இது. இன்று 2020ல் இதைப்
படிக்கும் சிலர், "என்ன, மாணவர்களை உட்காரச்
சொல்லாமல், நிற்க வைத்துப் பேசி அவமதித்து
விட்டாரா VC" என்று போர்க்கோலம் பூணலாம்.

ஆனால் நாங்கள் யாரும் அப்படி நினைக்கவில்லை.
VC என்பவர் வாத்தியாருக்கெல்லாம் வாத்தியார்!
பிரின்சிபாலுக்கெல்லாம் பிரின்சிபால்! அவருக்கு
முன்னால்  நாங்கள் நிற்பதுதான் தர்மம்! VC அவமதித்து
விட்டாரே என்று எங்களில் யாரும் புழுங்கவில்லை.
அப்படி ஒரு நினைப்பே கூட எங்களில் யாருக்கும் இல்லை.
காரணம் VCயைச் சந்தித்த எங்களின் டெலிகேஷனில்
தேவடியாளுக்குப் பிறந்தவர்கள் யாரும் இல்லை!

நாங்கள் படிக்க வந்தவர்கள். பணிவு இல்லாமல் படிப்பு
வராது என்று நாங்கள் உணர்ந்தவர்கள். கோடல் மரபே
கூறுங்காலை என்ற நன்னூல் சூத்திரத்தை நன்கு
அறிந்தவர்கள். வாசகர்கள் இந்தச் சூத்திரத்தை அறிந்து
கொள்ள வேண்டும்..இதை அறியாமல் இந்தக் கட்டுரையைப்
புரிந்து கொள்ள முடியாது.

பின்னர் பல்கலை கேண்டீனில் சாப்பிட்டோம். ஏன்
VC நமது கோரிக்கைளை ஏற்கவில்லை என்று
விவாதித்தோம். அறிவியல் பாடம் மற்றும் PRACTICAL
சார்ந்த எங்களின் கோரிக்கைகளை VCயால் புரிந்து
கொள்ள முடியவில்லை என்று கண்டறிந்தோம். எந்த
ஒரு தமிழ்ப் பண்டிட்டாலும் இது போன்ற அறிவியல்
சார்ந்த கோரிக்கைகளை ஒருபோதும் புரிந்து கொள்ள
முடியாது என்ற ஒரு தியரியையும் வந்தடைந்தோம். நிற்க.

என்னுடைய டிகிரி சர்ட்டிபிகேட்டில் மு வரதராசனார்தான்
கையெழுத்திட்டு உள்ளார். M Varadarajan என்று ஆங்கிலத்தில்
கையெழுத்திட்டு இருப்பார். ஆம், ஆங்கிலத்தில்தான்!
வீட்டில் இருக்கிறது; யார் வேண்டுமானாலும் வந்து
பார்த்துக் கொள்ளலாம்!
***********************************************************


   
      


 

    

சனி, 28 டிசம்பர், 2019

தமிழை அகற்றி விடும் ஆங்கிலம்!
-------------------------------------------------------
அன்றாட வாழ்வில் OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டை
நாம் எதிர்கொள்கிறோம். கால் டாக்சியில் ஏறும்போது
OTP  நம்பரை நினைவில் இருத்துகிறோம். இணைய வழிப்
பரிமாற்றங்களில் OTP இடம் பிடிக்கிறது.

OTP என்பதற்கான தமிழ்ச்சொல்லாக ஒரு முறை மட்டுமே
பயன்படுத்தும் கடவுச் சொல் என்று நீட்டி முழக்குகிறோம்.
அல்லது ஒரு நேரக் கடவுச்சொல் என்றும் சொல்லலாம்.

ஆனால் எவர் ஒருவரும் OTP என்ற ஆங்கிலச் சொல்லையே
பயன்படுத்துகிறார்கள். ஏன்? எவருக்குமே தமிழ்ப்பற்று
இல்லையா? அப்படி அல்ல.

உபியில் உள்ள இந்தி வெறியனும் கொல்கத்தாவில்
உள்ள வாங்க மொழி பேசுபவனும் கூட OTP என்ற
சொல்லையே பயன்படுத்துகின்றனர். OTP க்கு
இணையான இதைச் சொல்லோ வங்கமொழிச்
சொல்லோ கிடையாது.

ஏன் இப்படி நிகழ வேண்டும்? OTP என்ற சொல்
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் உள்ள சொல்.
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் ஆங்கிலம்தான்
உள்ளது. எனவேதான் OTP என்ற சொல் கோலோச்சுகிறது.

OTP என்பது ஒரு உதாரணம் மட்டுமே. OTP போன்று
ஆயிரம் சொற்கள் அன்றாட வாழ்வில் இடம் பெற்று
மாநில மொழிகளை அகற்றி விடுகின்றன.

இது பற்றி எந்த ஓர்மையும் இல்லாமல், வெறுமனே
தமிழ்ப்பற்று என்று பேசிக்கொண்டு இருப்பதால்
தமிழுக்கு எப்பயனும் இல்லை!
****************************************************       
குவாண்டம் துகள்களின் செயற்பாடுகள், பல நிலைகளில் இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்படாதவை. அதில் ஒன்றுதான் ‘குவாண்டம் என்டாங்கிள்மென்ட்’ என்று சொல்லப்படும் ‘நுண்துகள் பின்னல்’. இதுபற்றி அலுக்க அலுக்கப் பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். ஆனால், நிச்சயம் அதை மறந்துபோய் இருப்பீர்கள். அணுவின் அடிப்படைத் துகள்கள் இரண்டை, ஒன்றுடன் ஒன்று காதலன் காதலிபோலப் பிணைத்து வைத்துப் பின்னர் பிரித்தெடுத்து, ஒன்றை ஓர் இடத்திலும், மற்றதை இந்த அண்டத்தில் வேறு எந்த இடத்திலாவது வைத்துவிட்டு, ஒருவரின் இடுப்பில் கிச்சுக் கிச்சு மூட்டினீர்களாயின், எங்கோ இருக்கும் மற்றவர் தன் இடுப்பை அந்தக் கணமே அசைப்பார். இருவருக்குமான இடைவெளி எத்தனை ஒளியாண்டுகளாக இருந்தாலும், இவர் இடுப்பாட்டும் தகவல் அந்தக் கணத்திலேயே அடுத்தவருக்குத் தெரிந்துவிடும். இந்தத் தகவல் பரிமாற்ற வேகம், ஒளியின் வேகத்தைவிடப் பல மடங்குகள் அதிகமானது. இயற்பியல் விதிகளில் இது சாத்தியமே இல்லாதது. “அடப் போங்கடா! இந்த விதிகளெல்லாம் உங்களுக்குத்தான். எங்களுக்கில்லை” என்று சொல்லிச் சிரிக்கின்றன குவாண்டம் துகள்கள். இந்தக் குவாண்டம் என்டாங்கிள்மென்ட் பற்றி எத்தனை தடைவைதான் சொல்லியிருப்பேன். முருகா...!
குவாண்டம் எண்டாங்கிள்மெண்டை அடிப்படையாக வைத்துப் பல பரிசோதனைகள் கடந்த தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் குவாண்டம் டெலிபோர்டேசன் (quantum teleportation) என்பது மிகமுக்கியமானது. குவாண்டம் நிலைத் தகவல்களை, ஒரு இடத்திலிருந்து தொலைவிலிருக்கும் வேறோர் இடத்திற்கு, அதே கணத்தில் அனுப்பி வைப்பது. இதைக் குவாண்டம் கணணி (quantum computers) மற்றும் குவாண்டம் இணையத்தளம் (quantum internet) ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று அதற்கான மாபெரும் சாத்தியக் கதவு உடைத்துத் திறக்கப்பட்டிருக்கிறது.
டென்மார்க் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், பிரிஸ்டல் பல்கலைக்கழகமும், வெவ்வேறு இடங்களில் இருக்கும் இரண்டு கணணிகளின் சிப்களுக்கிடையே (Computer chips), தகவல்களைப் பரிமாறியிருக்கின்றனர். இந்தக் கணணிகள் எந்த வகையிலும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாதவை என்பது இங்கு முக்கியமானது. நான் மேலே சொன்ன குவாண்டம் என்டாங்கிள்மென்ட் மூலமாக இந்தத் தகவல் பாய்ச்சல் நடந்திருக்கிறது. அதாவது, கால இடைவெளியற்ற அதே கணத்தில். இந்த இரண்டு கணணிகளும் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்னும் பேச்சுக்கு, இங்கு அர்த்தமே கிடையாது. முதலில் ஒரே அறையில் தகவலைப் பரிமாறிப் பரிசோதித்தார்கள். பின்னர் 25 கிமீ தூர இடைவெளியில் பரிசோதித்தார்கள். அப்புறம் 100 கிமீ நகர்த்திப் பின்னர் 1200 கிமீ இடைவெளியில் தகவலைப் பரிமாறிப் பரிசோதனை செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள். எல்லாத் தொலைவிலும் பரிமாற்ற நேரம் பூச்சியம்.
ஐன்ஸ்டைன் காலிடறி, ‘இதுவொரு spooky action’ என்று வர்ணித்த குவாண்டம் எண்டாங்கிள்மெண்டை, கணணிகளில் நிஜமாக்கியிருக்கிறார்கள். குவாண்டம் கணணிகளின் ஆராய்ச்சியில் இன்னும் பல மைல் கற்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது. ஆனால், பெருவெளியின் முதல் வாசல் திறக்கப்பட்டுவிட்டது
K சக்தி
தென்மேற்கு மாவட்டச் செயலாளர்

M மணிகண்டன்
தொகுதிப் பொறுப்பாளர்

P சரவணன்

I பார்த்திபன்

M நிர்மல்

S சத்ய நாராயணன் 

புருஷோத்

யுவராஜ்

V ஆனந்தன்

ஆனந்த்

J கண்ணன்

சரவணன்

மக்கள் நீதி மய்யம்
ஆயிரம் விளக்குத் தொகுதி
மத்திய சென்னை தென்மேற்கு மாவட்டம்
நம்மவர் கமலஹாசன்
நாளைய முதல்வரே!

வெள்ளி, 27 டிசம்பர், 2019

கிரகணத்தின்போது உலக்கை நிற்பது எப்படி?
இதற்கான அறிவியல் விளக்கம் என்ன?
நாளைக்கு எழும் கேள்விக்கு இன்றே பதில்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
சூரிய கிரகணத்தின்போது, தமிழகத்தின்
ஒரு சிற்றூரில் உலக்கையைத் தரையில் செங்குத்தாக
ஊர்மக்கள் நிறுத்தி உள்ளனர். உலக்கை செங்குத்தாக
நின்றுள்ளது.

உலக்கை செங்குத்தாக நிற்பதில் எந்த ஆச்சரியமும்
இல்லை. இந்தக் கட்டுரையை எழுதும் முன், என் மேசை
மீது ஒரு பென்சிலை செங்குத்தாக நிறுத்தி வைத்துள்ளேன்.

கிரகண நேரத்திலும் கிரகணம் அல்லாத நேரத்திலும்
உலக்கை செங்குத்தாக நிற்கும். பென்சிலும்
செங்குத்தாக நிற்கும். அவற்றின் புவியீர்ப்பு விசை மையம்
(centre of gravity) சார்ந்த விஷயம் இது. இதற்கு கிரகணம்
.காரணம் அல்ல.

கயிற்றின் மீது நடக்கும் சிறுவர் சிறுமியரை
நம்மில் பலரும் பார்த்து வியந்திருக்கக் கூடும்.
கயிற்றின் மீது நடப்பதை விடவா, உலக்கை செங்குத்தாக
நிற்பது  வியப்பைத் தருகிறது?

கிரகணம் ஆரம்பிக்கும்போது செங்குத்தாக நிறுத்தப்பட்ட
உலக்கை, சரியாக கிரகணம் முடிந்ததும் விழுந்து
விட்டதாக செய்தி தெரிவிக்கிறது.

கிரகணத்தின்போது சந்திரனின் ஈர்ப்புச் சக்தி மிக
அதிகமாக இருப்பதாலேயே உலக்கை நிற்பதாகவும்,
கிரகணம் முடிந்ததும் ஈர்ப்புச் சக்தி குறைந்து
விடுவதால் உலக்கை விழுந்து விடுவதாகவும் சிலர்
கூறி வருகின்றனர்.

கிரகணங்கள் அமாவாசை பௌர்ணமி நாட்களில்
மட்டுமே  ஏற்படும். சூரிய கிரகணம் எப்போதுமே
அமாவாசையின்போது நிகழும். அது போல சந்திர
கிரகணம் பௌர்ணமியின்போது நிகழும்.

ஜூன் 21 அன்று நிகழ்ந்த வளையம் போன்ற சூரிய
கிரகணம் அமாவாசையன்று நிகழ்ந்தது.
அமாவாசையன்று கடல் அலைகளின் ஏற்ற இறக்கம்
வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதை
அறிவியல் முன்பே கூறியுள்ளது.

உலக்கை விழுந்ததற்கு கிரகணமே காரணம் என்று
கூறும்  அன்பர்கள், அது அமாவாசையால் நிகழவில்லை
என்பதை நிரூபிக்க வேண்டும்.

வளையம் போன்ற சூரிய கிரகணத்தின்போது, சந்திரன்
வழக்கத்தை விட பூமிக்கு மிகவும் அப்பால் இருக்கிறது.
அதாவது சேய்மைப்புள்ளி (apogee) அதிகமாக உள்ளது.
சேய்மைப்புள்ளி அதிகமாக இருக்கும்போது, பூமியின் மீதான
சந்திரனின்  ஈர்ப்புச் சக்தி கூடுதலாக இருக்குமா அல்லது
குறைவாக இருக்குமா?

தூரம் அதிகமாக ஆக, ஈர்ப்பு குறைந்து விடும் என்பதுதானே
நியூட்டனின் விதி (inverse square law)!

நிற்க. கிரகணம் முடிந்த உடன் உலக்கை விழுவது தமிழரின்
பண்டைய வானியல் அறிவுக்கான சான்று என்று பலரும்
கூறுகின்றனர்.

1) உலக்கை செங்குத்தாக நிற்பது இயல்பே.
இது புவியீர்ப்புவிசையின் மையம் எங்கு அமைகிறது
என்பதைப் பொறுத்தது. எனவே உலக்கை  நிற்பது
இயற்பியலின் விதிப்படியே.

2) கிரகணம் முடிந்ததும் உலக்கை விழுந்து விடுகிறது.
கிரகணத்தின்போது செயல்பட்ட அதிகப்படியான
ஈர்ப்பு விசை, கிரகணம் முடிந்ததும் நின்று விடுகிறது
என்று கூறுகிறார்கள். இது தமிழரின் பண்டைய
வானியல் அறிவு என்றும் கூறுகிறார்கள்.
கிரகணத்தின்போது  பூமியின் மீதான ஈர்ப்புவிசை
எவ்விதத்திலும் அதிகரிக்கவில்லை என்று இதுவரை
கிடைத்துள்ள தரவுகள் கூறுகின்றன. இதுதான் பதில்!
*********************************************************


 
       


        



   

திங்கள், 23 டிசம்பர், 2019

சென்னை மேற்கு மாம்பலம் பள்ளியில்
சூரிய கிரகண விளக்கக் கூட்டம்!
புகைப்படக் காட்சிகள்!
---------------------------------------------------
இடம்: சென்னை மேனிலைப்பள்ளி, மாம்பலம்.
நாள்: 23.12.2019 பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை.
தலைமை: டாக்டர் சீதாலட்சுமி M.Sc PhD, தலைமை ஆசிரியை.

சூரிய கிரகண விளக்கம் மற்றும்
கருவிகள் மூலம் கிரகணம் பார்த்தல்: செய்முறை விளக்கம்!

பி இளங்கோ (நியூட்டன் அறிவியல் மன்றம்)
சரவண குமார் (Breakthrough Science Society)
-------------------------------------------------------------------------


உங்கள் ஊரில்  எத்தனை சதவீதம் தெரியும் என்பதையும்
எந்த நேரத்தில் தொடங்கி எப்போது முடியும் என்பதையும்
இந்த மேப்பின் மூலம் அறியவும்.

நீங்கள் செய்ய வேண்டியது!
----------------------------------------
இந்த மேப்பில் உள்ள search your location  என்பதில்
உங்கள் ஊரின் பெயரை டைப் அடியுங்கள். உதாரணம்
திருச்சி என்று டைப் அடிக்கிறேன்.

உடனே திருச்சியில் கிரகணம் பற்றிய விவரங்கள்
கிடைக்கும்.

திருச்சியில் தெரியும் அளவு (magnitude of eclipse)
0.96. ஆதாவது 96 சதம் தெரியும். வளைய
வடிவ கிரகணம் தெரியும்.
கிரகணம் தொடங்கும் நேரம்: காலை 8 மணி 07 நிமிடம்
கிரகணம் முடியும் நேரம்:  11 மணி 17 நிமிடம்.
---------------------------------------------------------------
சென்னையில் கிரகணம் தெரியும் நேரமும் அளவும்:
சென்னையில் partial eclipse தெரியும். அதாவது
வளைய வடிவ கிரகணம் தெரியாது.
அளவு (magnitude): 0.88
தொடங்கும் நேரம்: காலை 8 மணி 8 நிமிடம்
முடியும் நேரம்: 11 மணி 19 நிமிடம்.
------------------------------------------------------------------------------

கிரகணத்தின்போது (காலை 8 to 11.30)
வெளியில் வரலாம். உணவு .உண்ணலாம்.
சூரியனை வெறுங் கண்ணால் பார்ப்பது மட்டும் கூடாது.
இதைத் தவிர





இந்திய மாநிலம் மணிப்பூருக்குச் செல்ல விசா வேண்டும்!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்!
2004ல் மணிப்பூர் பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
1) வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால் விசா (visa)
வேண்டும் என்பதை நாம் அறிவோம். தற்போது இந்திய
மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்குச் செல்ல
வேண்டுமென்றால் அதற்கு விசா வாங்க வேண்டும் என்று
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2) அனைவரும் சுலபமாகப் புரிந்து கொள்ள வசதியாக
விசா என்று குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் அதன்
அதிகாரபூர்வமான பெயர் ILP என்பதாகும்.

3) ILP என்றால் என்ன? ILP = Inner Line Permit என்று அறிக.
இன்னர் லைன் பெர்மிட் என்றால் என்ன என்று வாசகர்கள்
அறிந்து கொள்ள வேண்டும்.

4) மணிப்பூருக்குச் செல்ல விரும்பும் ஒருவர், அங்கு செல்லும்
முன்னர், மணிப்பூர் மாநில அரசின் அனுமதியைப் பெற
வேண்டும். நன்கு கவனிக்கவும்: மாநில அரசின் அனுமதி.

5) என்ன நோக்கத்துக்காக மணிப்பூருக்குச் செல்கிறேன்,
எத்தனை நாட்கள் அங்கிருப்பேன் என்பன போன்ற
எல்லா விவரங்களையும் தெரியப்படுத்தி, மாநில
அரசிடம் இருந்து அங்கு செல்வதற்கான அனுமதியைப்
பெற வேண்டும். இதுதான் ILP எனப்படும் இன்னர் லைன்
பெர்மிட் ஆகும். சாராம்சத்தில் இது விசாதான் என்று
உணர்க.

6) மணிப்பூருக்கு ILP வழங்கப்படும் என்று உள்துறை
அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதற்கான
உத்தரவை டிசம்பர் 11, 2019 அன்று பிறப்பித்தார்.

7) மணிப்பூரின் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றைப்
பாதுகாக்கவும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமானது
வங்க தேசத்தில் இருந்தும் மேற்கு வங்கம் போன்ற
மாநிலங்களில் இருந்தும் வரும் வந்தேறிகளால்
அபகரிக்கப் படாமல் பாதுகாக்கவும் மணிப்பூருக்கு
இந்த இன்னர் லைன் பெர்மிட் முறை தேவைப்படுகிறது.

8) மணிப்பூர் மக்கள் தங்களின் வீரஞ்செறிந்த
போராட்டத்தாலும், உயிர்த் தியாகத்தாலும்  இந்த
உரிமையைப் பெற்றுள்ளார்கள். மணிப்பூரின்
போராட்ட வரலாறு என்ன? அதை அறிந்து கொள்ளாமல்
இந்த இன்னர் லைன் பெர்மிட்டின் தேவையைப்
புரிந்து கொள்ள இயலாது.

9) இரோம் ஷர்மிளா என்ற மணிப்பூர் பெண்ணைப் பற்றித்
தெரியுமா? 16 ஆண்டுகள் தொடர்ந்து உண்ணாவிரதம்
இருந்தவர். உலகின் மிக நீண்ட உண்ணாவிரதம் இது.

10) தற்போது 47 வயதாகும் இந்தப் பெண், அண்மையில்
திருமணம் செய்து கொண்டு இரட்டைக் குழந்தைகளைப்
பெற்றுள்ளார். ப சிதம்பரத்துக்குக் கொஞ்சமும் ஆகாதவர்
இந்தப் பெண். தற்போது தமிழ்நாட்டில் கொடைக்கானலில்
தங்கி இருக்கிறார். இவரை தமிழ்நாட்டில் இருந்து
விரட்டி அடிக்கும் நோக்கத்துடன் ப சிதம்பரம் பல்வேறு
இன்னல்களை விளைவித்தார்; பயனில்லை.

11) 2004ல் மணிப்பூர் பெண்கள் இந்திய ராணுவத்திற்கு
எதிராக நடத்திய நிர்வாணப் போராட்டம் நினைவிருக்கிறதா?
15 ஜூலை 2004ல் மணிப்பூரில் உள்ள ஒரு ராணுவ
முகாமின் வாசலில் முழு நிர்வாணமாக நின்று கொண்டு
மணிப்பூர் பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது
டாக்டர் மன்மோகன்சிங் பிரதமர். புழுவினும் இழிந்த
சிவராஜ் பட்டீல் உள்துறை அமைச்சர்.

12) தேசிய இன சுயநிர்ணய உரிமைக்காக மணிப்பூர்
மக்கள் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.
பெருந் தியாகங்களைச் செய்துள்ளனர். இந்நிலையில்
இன்னர் லைன் பெர்மிட் என்பது  அம்மக்களுக்குக்
கிட்டியுள்ள ஒரு மிகச் சிறிய நிவாரணம்.

13) வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் ஏற்கனவே
இன்னர் லைன் பெர்மிட் முறை இருப்பதை வாசகர்கள்
அறிந்து கொள்ள வேண்டும். இந்த முறை எப்போது
முதல் அமலுக்கு வந்தது? வாசகர்கள் இதற்கு விடை
சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறேன்.

14) அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம்
ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஏற்கனவே இன்னர்
லைன் பெர்மிட் முறை உள்ளது. தற்போது நான்காவது
மாநிலமாக மணிப்பூர் இதை பெற்றுள்ளது.

15) வடகிழக்கு மாநிலங்கள் தனித்துவம் ஆனவை.
அங்கு குட்டி முதலாளித்துவ வர்க்கம் மிக மிகக் குறைவு.
எனவே வீரியமான போராட்டங்கள் அங்கு சர்வ
சாதாரணம்.

16) சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் இன்னர் லைன்
பெர்மிட் உள்ள சூழலில், அசாமை மட்டும் வங்கதேச
வந்தேறிகளை ஏற்கத் சொல்லிக் கட்டாயப் படுத்துவதா?

17) அசாம் பற்றியோ CCA பற்றியோ கருத்துச் சொல்லும்
முன், வட  கிழக்கு மாநிலங்கள் பற்றி நன்கறிந்த
பின்னரே குட்டி முதலாளித்துவம் கருத்துக் கூற வேண்டும்.
அரங்கின்றி வட்டாடக் கூடாது.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
************************************************      
இன்னர் லைன் பெர்மிட் மணிப்பூரில்
இப்போதுதான் அமலுக்கு வருகிறது.
ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்புதான்
கையெழுத்திட்டார். இதுதான் உண்மை நிலை.

இதற்கு முன்பு இன்னர் லைன் பெர்மிட் முறை இல்லை.
ஆனால் மாநில அரசானது இன்னர் லைன் பெர்மிட்டுக்குரிய
கெடுபிடிகளை, இன்னர் லைன் பெர்மிட் முறை
இல்லாமலேயே   unofficialஆக நடைமுறைப் படுத்திக்
கொண்டிருந்தது. இது அதிகாரவர்க்கக் கெடுபிடி.
அவ்வளவே. இப்போதுதான் சட்ட பூர்வமாகி உள்ளது.


சரி, அவரின் வாலை நிமிர்த்தி கின்னஸ் சாதனை
புரிய வாழ்த்துகிறேன்.


  

 நிலை 

--------------------------------------------------------------------------------
திருப்பூர் குணா என்னும் சி ஐ ஏ ஏஜென்ட்
(சாராம்சத்தில் ஏகாதிபத்திய ஆதரவாளர்)
அவர்களுக்கு,
----------------------------------------------
நண்பரே, இப்படி நான் எழுதினால் அது எவ்வளவு
அபத்தமோ அது போன்ற அபத்தமே நீங்கள்
எழுதியிருக்கும் "சாராம்சத்தில் அரசு ஆதரவாளர்"
என்ற அவதூறு.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இதுவரை ஐந்தாறு
கட்டுரைகளை எழுதி உள்ளேன். தங்களை மதித்து
தங்களையும் அதில் tag செய்துள்ளேன். எனவே தாங்கள்
அவை அனைத்தையும் படித்தால் மட்டும் போதாது.
புரிந்து கொள்ளவும் வேண்டும்.

தங்களது கூற்று முற்றிலும் பிறழ் புரிதல். CAA சட்டத்தை
நான் ஆதரிப்பதாக நீங்களே கருதிக் கொண்டால்,
அதற்கு நான் பொறுப்பல்ல.

CAA சட்டம் என்பது இந்து வந்தேறிகளுக்கு சலுகை
அளிக்கக் கூடிய சட்டம். இந்து வந்தேறி, இஸ்லாமிய
வந்தேறி ஆகிய  இருதரப்பு வந்தேறிகளையும்
மொத்தமாக அசாமை விட்டு வெளியேற்ற வேண்டும்
என்று திரும்பத் திரும்ப எழுதி வருகிறேன். அசாம்
மக்களைப் பொறுத்த மட்டில், 19 லட்சம் வந்தேறிகளில்
எந்த ஒரு வந்தேறியையும் ஏற்கத் தயாராக இல்லை.
இதுவேதான் எனது நிலைபாடு.

19 லட்சம் வந்தேறிகளையும் மூன்று மாத அவகாசம்
கொடுத்து அசாமை விட்டு வெளியேற்று என்று
ஆயிரம் முறை எழுதி இருக்கிறேன். இந்த 19 லட்சம்
பேரில் இந்து முஸ்லீம் அனைவரும் அடக்கம்.

வந்தேறிகளை மோடி அரசு வெளியேற்றாவிட்டால்,
அசாம் மக்களே பெருத்த வன்முறையுடன் 
வெளியேற்றுவார்கள் என்றும் அப்படி வெளியேற்றுவதை
ஆதரிப்போம் என்றும் எழுதி இருக்கிறேன். இதை
மறுக்க இயலுமா?

அசாம் பிரச்சினையைப் பேசும்போது அதில் ஆழ்ந்த
கவனத்துடன் பேச வேண்டும். பேசுவதற்கு விஷயம்
இல்லை என்பதற்காக அணுஉலை போன்ற விஷயங்களை 
இழுத்துத் திசை திருப்பிக் கூடாது. இப்படிச் செய்வது
பேசுபொருளில் தங்களுக்கு உரிய பலவீனத்தையே
குறிக்கும்.

என்னுடைய 35 ஆண்டு காலத் தீவிரமான தொழிற்சங்க
வாழ்க்கையில் எனது தானைத் தலைவர் தோழர்
ஓ பி குப்தா அவர்கள்தான். அதே போல அரசியலில்
எனது தானைத் தலைவர் மறைந்த தோழர் அவர்கள்தான்.
இவர்கள் இருவருமே பெரும் சிந்தனையாளர்கள்.
சகல முடிவுகளையும் இவர்கள் சொந்தமாகவே
எடுத்தார்கள். இதுதான் உண்மை.

நான் தெளிவாக ஆறேழு கட்டுரைகளை மிகுந்த
கவனத்துடனும் பாடப்புத்தகத் தரத்துடனும் சரிபார்க்கப்
பட்ட தரவுகளுடனும் எழுதி வருகிறேன். ஏனோ தானோ
என்று எழுதுவதில்லை.  நான் முன்வைக்கும் கருத்துக்களில்
தங்களுக்கு மறுப்பு இருக்குமானால், அருள் கூர்ந்து
ஒரு கட்டுரை எழுதி என்னுடைய தரப்பை மறுக்கலாம்.
அதுதான் நேர்மையான நியாயமான வழி. மற்றப்படி
அவதூறு மொழிவதல்ல.

நான் முன்வைக்கும் அறிவியல் விளக்கங்கள் உப்புச்
சப்பற்றவை என்றும் உண்மையில் அறிவியலுக்கு
எதிரானவை என்றும் தாங்கள் எழுதி உள்ளது எனக்குச்
சிரிப்பை வரவழைக்கிறது. தாங்கள் சொன்னதை
தங்களால் நிரூபிக்க இயலுமா?  x plus a whole raised to n
என்றால் என்ன என்று எனக்குத் தங்களால் விளக்க
இயலுமா?

நிற்க. நிதானமாகத் தங்களின் பதிலை ஒரு
கட்டுரையாக அவதூறுகளோ வசைகளோ இல்லாமல்
எழுத முயற்சி செய்யவும். ஒரு கட்டுரைக்கு இன்னொரு
கட்டுரை மூலம் பதிலளிப்பதுதான் முறை. அதைத்தான்
மார்க்சிய இலக்கியத்தில் polemics என்று சொல்வார்கள்.

நிற்க. மதியம் 1.30 மணிக்கு மேற்கு மாம்பலத்தில்
உள்ள ஒரு பள்ளியில் சூரிய கிரகணம் குறித்த
விளக்கம் அளிக்கச் செல்கிறேன். தாங்களும்
விரும்பினால் வரலாம். வரவேண்டும் என்று
அழைக்கிறேன். சரியாக மதியம் ஒரு மணிக்கு
(1.00 PM) மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வரவும்.
ரயில் நிலையத்துக்கு வெளியில் மேற்கு மாம்பலம்
சைடில் நிற்கவும். தங்களை நானே அழைத்துச் செல்கிறேன்.
         




சகோதரி கோதை நாச்சியார் அவர்கள் மறைந்த
கம்யூனிஸ்ட் தலைவரும் AITUC தொழிற்சங்கத்
தலைவரும் ஆகிய கே டி கே தங்கமணி அவர்களின்
பேத்தி ஆவார். அவரின் குடும்பம் அன்று முதல்
இன்று வரை தொழிற்சங்கக் குடும்பம் ஆகும்.

அவர் பொதுவெளிக்கு வராதவர்; அரசியலுக்கு
வராதவர். இல்லத்தரசியாக இருந்து வருகிறார்.
எனவே அவரை நாய் என்று திட்டுவது ஈவ் டீசிங்
என்ற கிரிமினல் குற்றத்தில் வரும். அவரின்
குடும்பத்தில் எல்லாரும் வழக்கறிஞர்கள்.
குறைந்தது மூன்றாண்டு சிறைத்தண்டனை
பெற்றுத் தந்து விடுவார்கள்.
 

அசாம் ஒப்பந்தத்தில் இரண்டு CUTOFF DATES உள்ளன.
அதில் இல்லாத ஒரு cut off dateஐ அமித்ஷா கொண்டு
வருகிறார். இதன் விளைவாக 40 லட்சம் என்று வந்திருக்கக்
கூடிய வந்தேறிகளின் எண்னிக்கை 19 லட்சமாகக் 
குறைந்து இருக்கிறது. அசாமியர்கள் இந்த
எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

எண்ணிக்கையை வெளியில் இருந்து நாம் யாரும் முடிவு
செய்ய இயலாது.அசாமியர்கள் எந்த எண்ணிக்கையை
ஏற்றுக் கொண்டார்களோ, அதே எண்ணிக்கையைத்தான்
நாமும் ஏற்றுக் கொள்ள இயலும்.

இந்த 19 லட்சம் பேரை முதலில் அசாமில் இருந்து
வெளியேற்றுங்கள். அவர்களை மேற்கு வங்க
மாநிலத்தில் தங்க வையுங்கள். இதை முதல்
கட்ட நடவடிக்கையாக மோடி அரசு செய்ய வேண்டும்.

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த வந்தேறிகள் தங்க
வைக்கப்பட்ட மறுநாளே அவர்களை யாரும்
நாட்டை விட்டு வெளியேற்றி விட முடியாது.
வெளியேற்றுவது என்பது ஒரு நீண்ட காலம்
பிடிக்கும் ஒரு process. குறைந்தது நாலைந்து ஆண்டுகள்
ஆகும்.

இந்த நாலைந்து ஆண்டு காலக்கட்டத்தில் அவர்களை
வெளியேற்றுவதா, அல்லது வேறெந்த மாநிலமாவது
அனுமதித்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதா
என்பதையெல்லாம் சாவகாசமாக முடிவ செய்யலாம்.

வந்தேறிகள் வெளியேற்றப்பட்ட உடனேயே அசாமில்
கொந்தளிப்பு அடங்கி விடும். வந்தேறிப் பிரச்சினை
முடிந்து விடும். அவர்களுக்கு வேறு மாநிலங்களில்
(வடகிழக்கு அல்லாத) குடியுரிமை வழங்கினால்,
அதை அசாமியார்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை.

இப்போது போர்க்கால அடிப்படையில் அசாமில் இருந்து
வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும். இதுதான்
அசாமில் கோரிக்கை. இதை ஆதரிக்காத எவரும்
அசாமியர்களுக்கு எதிரானவர்களே.

பின்குறிப்பு: கேள்விகளை மொத்தமாக எழுதி விட்டால்
ஒரே தவணையில் பதில் எழுத இயலும். மிச்சக்
கேள்விகளைக் கேட்டு வையுங்கள். நாளை மாலை
பதில் அளிக்கிறேன்.
.    



இலக்கியப் பக்கங்கள்:
இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமானது!
மீள்பதிவு!
-----------------------------------------
கருக்கல் மறைந்து வானம் வெளுத்தது!
(ஆண்டாள் திருப்பாவை விளக்கவுரை)
-----------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------
பாசுரம்-8
--------------------
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
---------------------------------------------------------------------------------
விளக்கவுரை:
ஆண்டாள் தன் தோழியருடன் ஆய்ப்பாடியில் உள்ள
பிற பெண்களைத் துயில் எழுப்பச் செல்கிறாள்.
இப்போது பொழுது நன்கு புலர்ந்து விட்டது. கருக்கலுக்கே
உரிய இருட்டு மறைந்து கீழ்வானம் நன்கு வெளுத்து
விட்டது.
இதற்கு முந்திய பாசுரத்தில் இருள் பிரியவில்லை.
ஆறாம் பாசுரத்தில்
"புள்ளும் சிலம்பின காண்" என்கிறாள்.
ஏழாம் பாசுரத்தில்
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின
பேச்சரவம்" பற்றிக் கூறுகிறாள்.
உயிரினங்களில் பொழுது புலர்வதை முதலில்
உணர்வன பறவைகளே. பின்னரே விலங்குகளும்
மனிதர்களும் உணர்கின்றனர். சேவல்தான் முதலில்
கூவிப் பொழுது விடிவதை இன்றும் அறிவிக்கிறது.
ஆறாம் பாடலை விட, ஏழாம் பாடலில் மேலும்
நேரம் கூடிவிட்டது என்பதை உணர்த்துகிறாள் ஆண்டாள்.
ஆறாம் பாடலில் புள்ளும் சிலம்பின காண் என்பதன் மூலம்
ஒரு சில பறவைகள் ஓசை எழுப்பின என்ற ஆண்டாள்,
ஏழாம் பாடலில் கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின பேச்சரவம் என்பதில், "எங்கும்" என்ற
சொல்லால் எல்லா இடங்களிலும் பறவைகள் ஓசை
எழுப்பத் தொடங்கி விட்டன என்று கூறுவதன் மூலம்
ஆய்ப்பாடியின் மொத்தப் பறவைக் கணமும் கூடு
துறந்து வெளியில் பறந்து விட்டன என்று உணர்த்துகிறாள்.
இந்த எட்டாம் பாசுரத்தில் பொழுது மேலும் அதிகரித்து
விட்டது. பறவைகளுக்கு அடுத்து எருமைகளும்
தொழுவம் நீங்கி மேயச் சென்று விட்டன. பசும்புல்
தரை முழுவதும் எருமைகள் பரவி நின்று மேய்கின்றன.
சிறுவீடு என்பதில் வீடு என்றால் தொழுவத்தில் இருந்து
விடுதலை என்று பொருள்படும். ஆயின், வீடு என்று
சொன்னால் போதுமே, சிறுவீடு என்று ஆண்டாள் சொன்னது
ஏன்? .
பொழுது புலர்ந்ததுமே கறவைகளிடம் பால் கறப்பதில்லை.
அதிகாலையில் சிறிது மேய்ந்த பின் தொழுவம்
திரும்பிய பின்னரே பால் கறப்பர்.பால் கறப்பதற்கு .
முன்னர் கறவைகளுக்கு அதிகாலையில் கிடைத்த
இந்த விடுதலையை சிறுவீடு என்கிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடலில் ஆண்டாள் எழுப்பச் செல்லும் பெண்
ஒரு கோதுகலமுடைய பாவை. எந்நேரமும் மனம் நிறைந்த
மகிழ்ச்சியுடன் இருப்பவள். தான் இருக்கும் இடத்தை
மகிழ்ச்சியால் நிரப்பி விடுபவள் இவள் எனவே இவள்
இல்லாமல் ஆண்டாள் செல்ல விரும்பவில்லை.
ஏற்கனவே நமது தோழியரில் பலர் நீராடச் சென்று
விட்டார்கள். மீதியிருப்பவர்களும் நீராட .விரைகிறார்கள்.
அவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டு உன்னைக்
கூப்பிட வந்திருக்கிறேன், எழுந்து வா என்கிறாள் ஆண்டாள்.
குதிரை வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து
கொன்றவனும், கம்சனின் அரசவை மல்லர்களை
மற்போரில் வென்றவனும் ஆகிய, தன் வீரத்தால்
தலைவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய கண்ணனை
வணங்கச் செல்வோம், வா.
நம்மைக் கண்டு கண்ணனே வியந்து நிற்பான். நம்மில்
எவர் எவர்க்கு என்ன வேண்டும் என ஆராய்ந்து அருள்
புரிவான், எனவே விரைந்து வா பெண்ணே என்கிறாள்
ஆண்டாள்.
இப்பாசுரத்தில் வரும் மேய்வான், போவான், கூவுவான்
ஆகிய சொற்கள் எதிர்கால வினைமுற்றுகள் அல்ல.
அவை ஆண்டாள் காலத்துத் தமிழில் பயின்ற வினையெச்ச
வாய்பாடுகள். தமிழ் இலக்கணம் கற்றோர் "வான், பான்,
பாக்கு" என்னும் வினையெச்சங்கள் பற்றிக் கற்றதை
ஈண்டு நினைவு கூர்க.
**********************************************************************
-
அசாம் மக்களுக்கு எதிரான திமுகவின் போராட்டம்!
அசாமில் இருந்து வங்கதேச வந்தேறிகளை வெளியேற்றக்
கூடாது என்று நடத்தும் பிற்போக்கான போராட்டம்!
ஏகாதிபத்தியக் கைக்கூலிகளின் போராட்டம்!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்பட்ட படத்தைப் பாருங்கள்.
அதில் 855 என்ற நம்பர் உள்ளது. அந்த நம்பர் தீபங்களால்
ஒளிர்கிறது.

இஸ்லாமிய அன்பர்களிடம் 786 என்ற நம்பர் பிரசித்தம்.
கிறிஸ்துவ அன்பர்களில் சிலர் யோவானுக்கு வெளிப்படுத்தின
விஷேசத்தைப் படித்திருக்கலாம். அதில் ஒரு நம்பர் வரும்.
அந்த நம்பர் 666.

855 என்ற நம்பர் 666ஐ விடவும் 786ஐ விடவும் பெரியது.
இது எதைக் குறிக்கிறது?

1979 முதல் 1985 வரை ஆறு ஆண்டுகளாக நடந்த அசாம்
போராட்டத்தில் இந்திரா காந்தி அரசின் அரச
பயங்கர வாதத்துக்கு உயிர்ப் பலியான அசாமிய
மக்களின் எண்ணிக்கையே இந்த 855.

855 பேர் உயிரிழந்தனர் என்ற இந்த எண்ணிக்கையை
மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அசாம் மாநில
அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அசாம் போராட்டக்குழு
ஏற்றுக் கொண்டுள்ளது.

உயிரிழந்த இந்த 855 பேருக்கும், ஒரு உயிருக்கு ஒரு தீபம்
என்ற அளவில் 855 தீபங்கள் ஏற்றி வைத்து அசாமியர்கள்
அஞ்சலி செய்கின்றனர். அந்தப் புகைப்படத்தைத்தான்
இங்கு நீங்கள் பார்க்கிறீர்கள்!

855 உயிர்கள் பலியானது பற்றி  திமுகவுக்கு கவலை இல்லை.
அவர்களின் ஒரே கவலை புழுவினும் இழிந்த தற்குறிக்
கூத்தாடியை தலைவர் ஆக்குவதுதான். மூன்று பிரபல
ஜோசியர்களிடம் அபிப்பிராயம் கேட்டு அதன் பிறகே
டிசம்பர் 23 பேரணியை திமுக நடத்துகிறது. 23 என்ற
தேதியும் ஜோசியர்களைக் கேட்டுத்தான் முடிவு
செய்யப் பட்டுள்ளது.

திமுகவின் இந்தப் போராட்டம் தேசிய இனங்களின்
சுயநிர்ணய உரிமைக்கு எதிரான போராட்டம்.
அசாமிய தேசிய இனத்தை அழிக்கும் போராட்டம்.
மொத்த அசாமியும் சுடுகாடாக்கத் திட்டமிடும் போராட்டம்.
கடைந்தெடுத்த பிற்போக்கான போராட்டம்.

ஏகாதிபத்திய அஜெண்டாவை நிறைவேற்றும் நோக்கில்
நாற்பதாண்டு கால அசாம் போராட்டம் முடிவுக்கு
வந்து விடக்கூடாது என்ற தீய உள்நோக்கத்துடன்
நடக்கும் போராட்டம்.

சில லட்சம் வந்தேறிகளுக்கு மட்டுமேயான CAA சட்டத்தை
137 கோடி இந்திய மக்களுக்கான சட்டம் என்று
பொய்யும் புனைசுருட்டும் கலந்து நாட்டு மக்களை
ஏமாற்றி, செயற்கையாக உருவாக்கப்பட்ட போராட்டத்தை
திமுக நடத்துகிறது. இதற்கான விலையை திமுக
கொடுக்கும்போது, அது திமுகவுக்கு பெருத்த நஷ்டத்தை
ஏற்படுத்தும்.

40 ஆண்டு கால அசாம் போராட்டத்தையும் அதன் விளைவான
அசாம் ஒப்பந்தத்தையும் நிறைவேறுவது பற்றிப் பேசாமல்
வங்கதேச வந்தேறிகளுக்கு பிரியாணியில் லெக்பீஸ்
வேண்டும் என்று போராடும் திமுக, தன் வரலாற்றிலேயே
இதுவரை இல்லாத பெருந் தற்குறித்தனமான போராட்டத்தை
நடத்தி அழியப் போகிறது.

1) தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை
உயர்த்திப் பிடிப்போம்!
2) வந்தேறிகளை வெளியேற்றும் அசாமிய தேசிய இனத்தின்
போராட்டத்தை உறுதியுடன் ஆதரிப்போம்!
3) 19 லட்சம் வந்தேறிகளையும் மோடி அரசு
வெளியேற்றாவிட்டால் பெரும் வன்முறையுடன் அசாமிய
மக்களே வெளியேற்றும்போது அதை ஆதரிப்போம்!
**************************************************
  மை
உதயநிதி    திருப்பூர் குணா மருதுபாண்டியன்


தாங்கள் தலைகீழாக நின்று கொண்டு
பார்ப்பதால் அப்படித் தெரிகிறது.


இப்பொருளில்  இதுவரை ஐந்து கட்டுரைகளை
எழுதியுள்ளேன். எல்லாக் கேள்விகளுக்கும்
விளக்கம் அவற்றில்  சொல்லப் பட்டுள்ளது.


வாசக அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு!
------------------------------------------------------
அருள்கூர்ந்து இப்பொருளில் இதுவரை எழுதியுள்ள
ஐந்து கட்டுரைகளையும் படியுங்கள் என்று
வேண்டுகிறோம். அப்போதுதான் ஒருங்கிணைந்த
ஒரு புரிதல் கிடைக்கும். அசாம் ஒப்பந்தம் என்றால்
என்னவென்றே தெரியாத அன்பர்களால்,
CAA பிரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது.


இதையெல்லாம் நானோ நீங்களோ முடிவு செய்ய
முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி,
மேற்கொள்ளப்பட்ட கணக்கீடு இப்படி முடிவு
செய்துள்ளது.


1) அசாம் ஒப்பந்தம் பற்றியும்
2) 40 ஆண்டு  கால அசாம் போராட்டம் பற்றியும்
3) 855 உயிரிழப்பு பற்றியும் இவர்களுக்கு எதுவும் தெரியாது.
முதல் முறையாக எமது கட்டுரைகள் மூலம்
அறிந்து கொள்கிறார்கள். அது அதிர்ச்சியைத்
தருகிறது. மேலும் படித்து விவரம் அறியும்
பழக்கமே அவர்களிடம் கிடையாது.

இந்தியாவிலேயே அதிகமான நுனிப்புல் கூட்டம்
தமிழ்நாட்டில்தான் உள்ளது. அது திராவிட
இயக்கத்தின் கொடை.

இவர்களின் அறியாமையே சகல தீமைகளுக்கும்
இவர்களை அழைத்துச் செல்கிறது. நாம் தளரக் கூடாது.
தொடர்ச்சியாகவும் இடைவிடாமலும் இவர்களின்
மண்டையில் விஷயத்தை ஏற்றும் பொறுப்பில் இருந்து
விலகி விடக் கூடாது.


செல்ல மறுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
வெளியேற்றப் படுவார்கள். அல்லது சிறை வைக்கப்
படுவார்கள். இதுதான் உலகம் முழுவதும் உள்ள சட்டம்.







   







  

சனி, 21 டிசம்பர், 2019

கணித மேதை இராமானுஜன் பிறந்த நாள்!
பை கணிதக் கழகத்தில் சிறப்புக் கூட்டம்!
நியூட்டன் அறிவியல் மன்றம் சிறப்புரை! 
-------------------------------------------------------------
டிசம்பர் 22, 1887ல் இராமானுஜன் பிறந்தார்.
இராமானுஜனின் 133ஆவது பிறந்த நாளன்று (22.12.2019)
விழா எடுக்கிறது பை கணிதக் கழகம்!

இவ்விழாவில்
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றத் தலைவர்   
பங்கேற்றுச் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
டாக்டர் சிவராமன் எழுதிய
இயற்கையில் கணிதம்
என்ற நூலையும் திறனாய்வு செய்கிறார்.

இடம்: டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24.
நாள்: ஞாயிறு 22 .12.2019 காலை 10 மணி.
அனைவரும் வருக!
*************************************** 

பி இளங்கோ சுப்பிரமணியன்
 கட்டுரையாளர் பற்றிய விவரக் குறிப்பு!
-----------------------------------------------------------
மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையிலும்
BSNL நிறுவனத்திலும் பல்லாண்டுகள் பணியாற்றி
ஒய்வு பெற்றவர்.

இயற்பியலில் முதுநிலை பயின்ற இவர் கடந்த
20 ஆண்டுகளாக நன்கறியப்பட்ட அறிவியல் பரப்புநராக
(Science communicator) தீவிரமாகச் செயல்பட்டு வருபவர்.
இவர் ஓர் அறிவியல் எழுத்தாளரும் ஆவார்.

நியூட்டன் அறிவியல் மன்றம் என்ற அமைப்பை நிறுவி
அதன் மூலம் அறிவியல் பரப்பும் பணியைத் திறம்படச்
செய்து வருபவர். அச்சு ஊடகம், மின்னணு ஊடகம்,
சமூக ஊடகம் ஆகிய மூன்றிலும் இவரின் அறிவியல்
பரப்பும் பணிகள் நிகழ்ந்து வருகின்றன.

சமூகத் தாக்கம் உடைய அறிவியல் விஷயங்களில்
சரியான அறிவியல் நிலைபாட்டை எடுத்துரைப்பது
இவரின் பணி. அகில இந்திய வானொலிமற்றும் பல்வேறு
தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக
அறிவியல் விளக்கம் அளித்து வருகிறார்.

சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்போது
இரண்டு தொலைக்காட்சி சேனல்களில் (நியூஸ் 7, கலைஞர்)
பங்கேற்று ரன்னிங் கமென்டரி அளித்ததை  
வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) வரையறுத்துள்ள
இந்தியக் குடிமக்களின் கடமையான
"சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை ஏற்படுத்துதல்"
 (to develop the scientific temper) என்ற கடமையை தமது
நியூட்டன் அறிவியல் மன்றம் மூலமாகச் செயல்படுத்தி
வருபவர் இவர்.
**************************************************






தேசிய குடிமக்கள் பதிவேடும் குடியுரிமை திருத்தச் சட்டமும்
‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், தற்போது நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்தும் கலவரங்கள் காட்டுகின்றன.
மத்திய அரசு குடியுரிமைத் திருத்த சட்டத்தை நிறைவேற்றியவுடன் (டிச. 12), அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில் ஒரு நியாயம் இருந்தது. அங்கு ஏற்கனவே அமலில் உள்ள 1985ஆம் வருடத்திய அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மீறுவதாக புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்துவிடுமோ என்ற சந்தேகம் அம்மாநில மக்களுக்கு எழுந்ததில் வியப்பில்லை. அதனால் அங்கு கலவரம் வெடித்தது. (டிச. 12-14) ஆனால், மத்திய அரசும் அங்கு ஆளும் மாநில அரசும் தகுந்த விளக்கம் அளித்தவுடன், அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று நாட்களில் அமைதி திரும்பிவிட்டது. தவிர, கு.தி.சட்டத்துக்கு ஆதரவாக மக்கள் லட்சக் கணக்கில் திரண்ட பேரணியும் (டிச. 19) அங்கு நடந்திருக்கிறது.
அகதிகள் பிரச்னையால் தத்தளிக்கும் மேற்கு வங்கத்திலும் டிச. 12 முதலே வன்முறைகள் நடந்தவண்னம் இருந்தன. ஆனால், அஸ்ஸாம் அமைதியான பிறகும்கூட, அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே வீதிக்கு வந்து 3 நாட்கள் (டிச. 16- 18) நடத்திய போராட்டங்களால், அங்கு மட்டும் அமைதி திரும்பவில்லை. தவிர, பாஜக அரசுக்கு எதிரான அவரது அரசியல்ரீதியான வெறுப்பு முழக்கங்கள் நாடு முழுவதும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், இஸ்லாமியர்களிடையே சந்தேகத்தைப் பரப்பவும் பயன்பட்டன.
ஒருவாரம் கடந்து மேற்கு வங்கம் அமைதிக்கு திரும்பியபோது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வன்முறையாளர்களும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு பல மாநிலங்களில் வன்முறைகளை அரங்கேற்றினர். அதற்கு தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டு (டிச. 15) வாகனங்களை எரித்த மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த கடும் நடவடிக்கை அவர்களுக்கு பிரசார சாதனமாகிவிட்டது.
இதைக் கொண்டு, நாடு முழுவதும் மாணவர்களை போராட்டக் களத்தில் இறக்கின இடதுசாரி மாணவர் சங்கங்கள். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த விழைந்ததன் விளைவே, பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம்.
மாணவர்களை முன்னிறுத்திய போராட்டக்காரர்களால் அரசை நிலைகுலைய வைக்க முடிந்தது. மாணவர்களும், எதற்காகப் போராடுகிறோம் என்றே அறியாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அராஜகவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மோடி அரசுக்கு எதிரான கோஷங்களை முழங்கினர். நாடு முழுவதும் இதுவரை அச்சத்துடன் இருந்த வன்முறையாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகிவிட, ஆங்காங்கு வாகனங்கள் கொளுத்தப்பட்டன; காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். உ.பி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வேறு வழியின்றி காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி வந்தது.
இந்த நேரம் (டிச. 21) வரை, நாட்டில் அமைதி முழுமையாகத் திரும்பவில்லை. இதில் வேதனை என்னவென்றால், போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை சில லட்சங்கள் மட்டுமே. இதனை நமக்கென்ன என்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் குடிமக்களோ 100 கோடிக்கு மேல்.
இந்நிலையில் டிச. 20 அன்று, உலேமாக்கள் சபை உள்ளிட்ட இஸ்லாமிய மத அமைப்புகள் வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து தமிழகம் எங்கும் மாபெரும் திரளைக் கூட்டி தங்கள் பலத்தைக் காட்டி அரசை எச்சரித்திருக்கின்றன. இன்னமும் அவர்கள், கு.தி.சட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது அவர்களது வெறித்தனமான மேடைப் பேச்சுகளில் புலப்பட்டது. தவிர, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் குடியுரிமை திருத்த சட்டத்தையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வதும் தெளிவாகவே தென்பட்டது.
இந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்த அரசு முயன்றாலும், எதிர்க்கட்சிகள் அவர்கள் தெளிவு பெற விடத் தயாரில்லை. அதனால்தான் வன்முறை பரவுகிறது. இதனை பாஜக அரசு மீதான கரும்புள்ளியாக்க அவர்கள் துடிப்பதும் நன்றாகவே தெரிகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கு.தி.சட்டத்தை விளக்கியும், இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. அஸ்சாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும்கூட லட்சக் கணக்கான மக்கள் பேரணி நடத்தி கு.தி.சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனாலும், இந்த சட்டங்களை ஆதரிக்கும் பலருக்கும் கூட, இன்னமும் முழுமையான விவரங்கள் தெரிவதாகத் தோன்றவில்லை. அவர்களுக்காக சில விளக்கங்களை அளிப்பது கடமை மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் கூட. இது, வன்முறையை நம்பி, நாட்டின் மீதும் அரசியல் சாசனத்தின் மீதும் கல்லெறிந்து கொண்டிருக்கின்ற மதவெறிக் கும்பல்களும் அறிய வேண்டிய விஷயமே.
எனவே, இங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடிமக்கள் திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய தெளிவான, சுருக்கமான விளக்கங்கள் இங்கு கேள்வி – பதில் வடிவில் வழங்கப்பட்டிருக்கின்றன…
1. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது என்ன?
இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை வரையறுப்பதே தேசிய குடிமக்கள் பதிவேடு. 1951ஆம் வருடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 1955ஆம் வருடத்திய குடிமக்கள் சட்டத்தால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் பதிவேடு இது. துரதிர்ஷ்டவசமாக இத்தனை ஆண்டுகாலமாக இந்தப் பதிவேடு புதுப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் யார் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான தெளிவான ஆவணங்கள் இருக்கும். நமது நாட்டில் இதுவரையிலான அரசுகள் இம்முயற்சியை மேற்கொள்ளாததால், 1955ஆம் வருடத்திய தேசிய குடிமக்கள் பதிவேடே (National Register of Citizens-NRC) இறுதியானதாக உள்ளது. 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாரக இருந்தபோதுதான் குடிமக்கள் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்தச் சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது.
2. தே.கு.பதிவேடு புதுப்பிக்கப்படாததால், யார் இந்தியர் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறதா?
இதில் குழப்பம் இருக்கவே செய்கிறது. கடந்த 65 ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்ட சூழலில், உண்மையான இந்தியக் குடிமகன் யார் என்பதைத் தீர்மானிப்பது சவாலானதே. ஆனால், தனது பூர்வீக ஆவணங்கள் (முன்னோரின் சொத்து பத்திரங்கள்), வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் எந்த ஒருவரும் தான் தேசியக் குடிமகன் என்பதை நிரூபிக்க முடியும். 1971க்கு முந்தைய பூர்வீக ஆவணங்கள் எதையும் மக்கள் வழங்கத் தேவையில்லை என்று டிச. 31இல் அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இவை எதுவும் இல்லாதவர்களும், கல்வி அறிவு இல்லாதவர்களும் கூட சாட்சியங்களின் அடிபப்டையில் குடிமகன் பதிவேட்டில் சேர முடியும். குடிமகன் என்பது எந்த மத, மொழி, இன அடிப்படையும் அற்றது என்பதையும் மறக்கக் கூடாது.
3. தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் அமலாக்க பாஜக துடிப்பது ஏன்?
இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும். எனவேதான், தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்தது. தற்போது தேர்தலில் வென்ற பிறகு ஜனநாயக முறையில் அதற்கான முயற்சிகளில் பாஜக அரசு இறங்கி இருக்கிறது.
இந்தப் பதிவேட்ட்டில் இஸ்லாமியர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் காரணமாகவே முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறைகளில் இறங்கி உள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மத அடிப்படையிலானது அல்ல. இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், அவர்கள்து கோரிக்கைகளிப் பரிசீலிக்கவும் தயாராக இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.
4. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்பது என்ன?
1947 தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பிரிந்த பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர்களில் லட்சக் கணக்கானோர் முஸ்லிம் அல்லாதவர் என்ற ஒரே காரணத்துக்காக மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு துரத்தப்பட்டு இந்தியாவுக்கு பல்லாயிரக் கணக்கானோர் வந்தனர். அவர்களுக்கு இந்தியா புகலிடமும் குடியுரிமையும் அளிக்க உருவான சட்டமே 1955ஆம் வருடத்திய குடியுரிமைச் சட்டம். இந்தச் சட்டம், இந்தியாவில் யார் குடிமகனாக இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஒருவர் இந்தியாவில் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும் என்பதே அந்த சட்டத்தின் அடிப்படை. அரசியல் சாசனத்தில் பாகம்-2, ஷரத்துகள் 5-11 இல் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் இச்சட்டம் இதுவரை 6 முறை (1985, 1992, 2003, 2005, 2015, 2019) திருத்தப்பட்டுள்ளது.
5. 2019ஆம் வருடத்திய குடியுரிமை சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?
இந்தியாவின் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய (இஸ்லாமிய) நாடுகளில் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கிருந்து புகலிடம் தேடி இந்தியா வந்துள்ள மக்களுக்கு அடைக்கலமும், குடிமகன் என்ற உரிமையும் அளிக்க 2019ஆம் வருத்திய குடிமக்கள் திருத்தச் சட்டம் வகை செய்கிறது. அதற்கு அவர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (முன்னர் இது 11 ஆண்டுகளாக இருந்தது); 2014 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்தவராக இருக்க வேண்டும்; அவர்கள் ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மை (எந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்தார்களோ அந்த நாட்டில்) மக்களாக இருக்க வேண்டும். அவர்கள் முறைப்படி அரசுக்கு மனுச் செய்து, இந்தியக் குடியுரிமை பெறலாம் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம்.
இந்த நாடுகளில் நடைபெறும் இஸ்லாமியர்களின் வன்முறையும், சிறுபான்மையினரின் வேதனையும் உலகம் அறிந்த உண்மை. 1947இல் இந்நாடுகளில் இருந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கையையும் இப்போதைய எண்ணிக்கையையும் ஒப்பிட்டாலே ஆபத்தின் வீரியம் புரியும். இந்த நாடுகளில் நிம்மதியாக வாழ முடியாமல், உயிரையும் மானத்தையும் காத்துக்கொள்ள சொத்துகளையும் உறவுகளையும் இழந்து தப்பியோடி வரும் அபலைகள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அவர்களுக்கு உதவுவது நமது கடமை.
6. இந்த சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை?
இந்தக் கேள்வியே அடிப்படைப் புரிதல் அற்றது. ஏனெனில் அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அவர்களால் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் தான் அடைக்கலம் நாடி இந்தியா வருகின்றனர். அவர்களையும், அவர்களை அந்த நாடுகளில் கொடுமைப்படுத்திய பெரும்பான்மை மதத்தினரையும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்கக் கூடாது. இருப்பினும், இஸ்லாமியர்கள் வரவே கூடாது என்று இந்தச் சட்டத்தில் கெடுபிடி ஏதும் இல்லை. தேவை இருப்பின் அவர்கள் முறைப்படி விண்ணப்பித்து இந்திய குடியுரிமை பெற முடியும். ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய ஆறு மதத்தினருக்கு விசேஷமாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அடைந்துள்ள பாதிப்பின் அடிப்படையில் மட்டுமே. இந்தியாவை விட்டால் அவர்களுக்கு நாதி ஏது?
7. அப்படியானால், பாகிஸ்தானில் அகமதியாக்களும் ஷியாக்களும் முஸ்லிம்கள் என்றபோதும் அங்குள்ள ஷன்னி முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே? அவர்களை இந்தியா புறக்கணிப்பது மதரீதியான பாரபட்சம் ஆகாதா?
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு; மதரீதியாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள நாடு. ஷியாக்களும் அகமதியாக்களும் இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுகள். ஒருகாலத்தில் அவர்களும் சேர்ந்துதான் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனவே, இஸ்லாம் மதத்தின் உட்பிரிவுகளுக்குள் நடைபெறும் மோதலுக்காக நாம் பரிதாபப்பட முடியாது. அது அந்நாட்டின் உள்விவகாரம். அதில் இந்தியா தலையிடக் கூடாது.
இருப்பினும் தஞ்சம் வேண்டி வந்தால், பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு அளிக்கப்பட்டது போல புகலிடம் அளிக்கத் தடை ஏதும் இல்லை. தவிர, பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்துவரும் வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே எந்த அரசும் செயல்பட முடியும். எதிர்காலத்தில் அகமதியாக்கள் இந்தியக் குடியுரிமை கோரினால், அதை அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
8. அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும் தற்போதைய குடிமக்கள் திருத்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஏன்?
1951 முதல் 1971 வரை, அண்டை நாடான கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போதைய பங்களாதேஷ்) லட்சக் கணக்கான ஹிந்து, முஸ்லிம் மக்கள் அகதிகளாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஊடுருவினர். அவர்கள் வங்கமொழி பேசியதால் மேற்கு வங்கத்தில் பிரச்னை ஆகவில்லை. ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேகப் பண்பாட்டு அடையாளங்களும் தங்கள் அரசியல் அதிகாரமும் இந்த அகதிகளால் பாதிக்கப்படுவதாகக் கருதிய அஸ்ஸாம் மாநிலப் பிரிவினைவாதிகள் 1979 முதல் 1985 வரை நடத்திய வன்முறைகளால் 900க்கு மேற்பட்டோர் அங்கு உயிரிழந்தனர். அதையடுத்து, 1985இல் அஸ்ஸாம் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் அப்போதைய மத்திய அரசுக்கும் (ராஜீவ் காந்தி பிரதமர்) அஸ்ஸாம் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்துக்கான தே.கு.பதிவேடு உருவாக்கப்பட்டு, 1971 மார்ச் 25க்குப் பின்னர் அம்மாநிலத்தில் நுழைந்தவர்கள் அந்நியர்களாகக் கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.
பிற மாநிலங்களைப் பொருத்த வரை, 1951ஆம் வருடத்துக்குப் பின் இந்தியாவுக்குள் வந்தவர்கள் அந்நியர்களாவர். (அதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது வேறு விஷயம்). அஸ்ஸாமிலோ, 1971க்குப் பிறகு வந்தவர்கள், 1985 வருடத்திய ஒப்பந்தப்படி அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமே நேரடிக் கண்காணிப்பில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி உள்ளது. இப்போதைய கணக்கெடுப்பின்படி, சுமார் 19 லட்சம் பேர் அஸ்ஸாம் தே.கு.பதிவேட்டில் தகுந்த ஆதரங்களை சமர்ப்பிக்காததால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என இரு தரப்பினரும் உண்டு. அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேக நலனுக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, குடிமக்கள் திருத்தச் சட்டப்படி புதிய குடியுரிமை பெறுவோர் அங்கு குடிபுக முடியாது.
9. வேறு சில வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்துக்கு விலக்கு உள்ளதா?
ஆம். பழங்குடியின மக்கள் மிகுந்த மேகாலயம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின்படி, இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் செல்லாது. அதாவது, இம்மாநிலத்தவர் அல்லாத ஒருவர் புதிதாக இம்மாநிலங்களில் யாரும் குடிமகனாக முடியாது. அதேபோல, உள்நுழைவு உரிம அனுமதிச் சட்டம் (Inner Line Permit) கொண்டுள்ள அருணாசல பிரதேசம், நாகலாந்து, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் 370வது ஷரத்தின் படி இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.
10. இந்தியாவின் அண்டைநாடான ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சட்டத்தின் ஏன் குடியுரிமை அளிக்கப்படவில்லை?
இந்த சட்டத் திருத்தம் மதரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளியினரின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவைப் பொருத்த வரை, அங்குள்ள மொழி அடிப்படையிலான, இன அடிப்படையிலான பாரபட்சத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அந்த நாட்டில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள்; ஆனால், பெரும்பான்மை சிங்களவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் நாடுகளில் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடக் கூடாது. தவிர, தமிழகத்தில் அகதியாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் (ஸ்ரீலங்கா) திரும்பவே துடிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போதும் சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் குடும்பத்துடன் ஸ்ரீலங்கா செல்லும் ஈழத் தமிழர்கள் பலர் உள்ளனர். மேலும், அவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்வது அவர்களது பல்லாண்டுகால உரிமைகளை தங்கள் சொந்த நாட்டில் இழப்பதாகிவிடும்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்நாட்டு அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள். இன்று அரசியல் சூழல் மாறியுள்ளது. விடுதலைப்புலிகளும் இப்போது இல்லை. எனவே மாறியுள்ள சூழலின் அடிப்படையில், நட்பு நாடான ஸ்ரீலங்கா அரசுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.
1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் பலர் அந்நாட்டுக்கே திரும்பிவிட்டனர். தற்போது, 107 இலங்கை அகதி முகாம்களில் சுமார் 64,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீள அவர்களது நாட்டிலேயே குடிபுகச் செய்வதுதான் அவர்கள் இழந்த உரிமைகளை மீட்க உதவியாக இருக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை அளிப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். இருப்பினும், இப்போதுதான் இதற்கான விவாதம் துவங்கி உள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக, ஏற்கனவே, ஸ்ரீலங்காவிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழர்களுக்கு 1964ஆம் வருடத்திய சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் தேவைப்படின் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டுகோளை முன்வைத்தால் அவர்களுக்கென புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே விவாதத்தைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது ஈழத் தமிழ் அகதிகளுக்காக தமிழகத்தில் நீலிக் கண்ணீர் விடும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஏன் அவர்களை இந்தியக் குடிமக்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையில், அதற்கான வேண்டுகோள் ஈழத் தமிழ் அகதியிடமிருந்து இதுவரை வரவில்லை. அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் கனவுடன்தான் அகதிகள் முகாம்களில் தவிக்கின்றனர்.
11. இந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சிலர் கூறுகிறார்களே? நீதிமன்றம் இதற்குத் தடை விதிக்க வாய்ப்புள்ளதா?
கண்டிப்பாக இல்லை. அரசியல் சாசனத்தின் ஐந்தாவது அட்டவணைப்படி, குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் வரம்புக்கு உள்பட்டது. இதைத் திருத்த அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள 11வது ஷரத்தின்படி, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. யாருக்கு குடியுரிமை வழங்குவது என்பது தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றம் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல் சாசனம் கூறுகிறது. அதாவது அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை வலிமை கொண்ட மோடி அரசு தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை (Citizenship Amendment Bill- CAB) நிறைவேற்றி, சட்டமாக்கி (CAA) இருக்கிறது. இதனைத் தடை செய்ய முடியாது என்பதே ஹரீஷ் சால்வே போன்ற மூத்த சட்ட வல்லுநர்களின் கருத்து.
அடுத்த குற்றச்சட்டு மதரீதியான பாரபட்சம் தொடர்பானது. இந்திய அரசியல் சாசனத்தில், சமத்துவத்துக்கான உரிமை அதன் 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும். இதனையும் குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) மீறவில்லை. இதில் எந்த இடத்திலும் மதப் பாகுபாட்டுக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம், ஏற்கனவே இந்தியாவில் உள்ள குடிமக்கள் தொடர்பானது அல்ல. இது மூன்று முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்ட ‘சிறுபான்மை’ இந்திய வம்சாவளியினருக்கான விசேஷச் சட்டம். இதனையும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றல்ல. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. தவிர, குடிமக்கள் பதிவேட்டின் மூல ஆதாரத்தில் மதம் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.
12. இந்தச் சட்டத்தை தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று சில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனரே! அது சாத்தியமா?
நிச்சயமாக இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது. இதை நடைமுறைப்படுத்த மறுக்கும் மாநில அரசுகள் அதற்கான விலையை அரசியல் சாசனப்படி கொடுக்க வேண்டியிருக்கும். மத்திய அரசுக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைக்க இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு; அதில் உச்ச நீதிமன்றமும் தலையிடாது. இதேபோலத் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணிகளையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கவோ, தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. ஆனால், பரபரப்புக்காக சிலர் வாய்க்கு வந்தபடி அறிக்கை வெளியிடுகின்றனர். உண்மை என்னவென்று அவர்களுக்கே தெரியும்.
13. எத்தனையோ பொருளாதார சீர்திருத்தப் பணிகள் காத்திருக்கையில், இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் என்ன அவசரம்?
நல்ல கேள்வி. இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்றே தெரியாத நிலையில் தான் நமது நாடு இருக்கிறது என்பதே அவமானம். இந்தப் பணி கடந்த 70 ஆண்டுகளில் எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யக்கூட நரேந்திர மோடி அரசு வர வேண்டி இருக்கிறது. இதையும் 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில் மோடியால் செய்ய முடியவில்லை. ஏனெனில் அப்போது ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்தது. தற்போது ஜனநாயகரீதியாக தேர்தல்களில் தனது வெற்றிகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளதால்தான் இவை சாத்தியமாகி உள்ளன. இதனை அசுரப் பெரும்பான்மை கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் செய்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திராது.
நமது குடிமக்களின் நிலை தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கான திட்டங்களை விரயமின்றித் தீர்மானிக்க முடியும். எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் அத்தியாவசியமாகும். அதேபோல, இந்த நாட்டை நம்பி அடைக்கலம் புகுந்தோர் எத்தனை நாட்களுக்கு அவநம்பிக்கையுடன் காத்திருப்பது? அவர்களும் நமது சகோதரர்கள் அல்லவா? அவர்களது கண்ணீரைத் துடைக்க இனியும் தாமதிப்பது சரியா?
இவ்விரு சட்டங்களும் தனித் தனியானவை. என்றபோதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளவை. எனவே, ஏற்கனவே தாமதத்தால் மறுக்கப்பட்ட நீதியை அவர்களுக்கு வழங்குவதே நியாயமாக இருக்க முடியும்.
14. தே.கு.பதிவேடு, கு.தி.சட்டம் ஆகிய விவகாரங்களில் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற பாஜக அரசு தவறிவிட்டது என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றனவே?
இந்திய ஊடகங்கள் பாஜக அரசின் எந்த நல்ல திட்டங்களை இதுவரை ஆதரித்திருக்கின்றன? ‘ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்ற பழமொழி உண்டு. இடதுசாரி மயமான ஊடகங்களுக்கும், புரட்சிகர ஜனநாயகம் பேசும் லிபரல்களுக்கும் பாஜக எப்போதும் எட்டிக்காயாகவே இருந்துள்ளது. இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் இத்தகைய தவறான நபர்களால் வழிநடத்தப்படுகின்றனர். அதுவே இப்போதைய கலவரங்களுக்கு காரணம். உண்மை நிலையை நாம் மக்களிடம் எடுத்துச் செல்லும்போது, இந்த தவறான நபர்களின் அபத்தங்கள் வெளிப்படும். இஸ்லாமியர்கள் உண்மை நிலையை உணர வேண்டும். அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கத் தயார் என்று அதனால்தான் அரசு தற்போது கூறி இருக்கிறது.
15. முன்கூட்டியே இஸ்லாமியர்களுடன் பேசி இருந்தால் தற்போதைய கலவரங்களைத் தடுத்திருக்கலாம் என்ற கருத்து சரியா?
உண்மையில், இந்தக் கலவரத்துக்கான அடிப்படை வெறுப்புணர்வு, அயோத்தி ராமஜன்மபூமி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோதே (நவ. 9, 2019) துவங்கிவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடைச் சட்டமும் முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது ஆகியவற்றையும் அப்போது எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் அமைதி காத்தன. அப்போது அடங்கி இருந்த அடிப்படைவாத சக்திகள், இப்போது எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் வன்முறையில் இறங்கி உள்ளனர் என்பதே யதார்த்த உண்மை.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அனைவரின் கருத்துகளும் செவி மடுக்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஜனநாயகரீதியாக நிறைவேறி இருக்கிறது. இப்போது அரசியல் சாசன அடிப்படையில் அது மீறப்பட இயலாத சட்டம். எனவேதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்ப்பதாகக் கூறாமல், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை (CAB) எதிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தவர்களின் மனுக்களை உடனடியாக விசாரிக்கவும், இடைக்காலத் தடை விதிக்கவும் நீதிமன்றங்கள் மறுத்ததில் இருந்தே, இந்தச் சட்டத்தின் அரசியல் சாசன அடிப்படை வெளிப்படுகிறது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை மக்கள் மன்றத்தில் பாஜக தனது தேர்தல் அறிக்கையாக முன்வைத்து தேர்தலில் வென்றுள்ளது. அதனை நிறைவேற்றுவது பாஜகவின் கடமை. இதுவும் இஸ்லாமியர்கள் அறிந்ததே. அவர்களும் வாக்களித்ததால்தான் இந்த அரசு முழுப் பெரும்பான்மையுடன் அமைந்துள்ளது. இதனை மாற்ற வேண்டுமானால், இதனை விரும்பாதோர் ஜனநாயக முறையில் வென்று சட்டத்தைத் திருத்துவது தான் சரியானது. (ஷாபானு ஜீவனாம்ச மறுப்பு சட்டம் உதாரணம்). அதை விடுத்து வன்முறையில் இறங்கி மிரட்டல் அரசியலைக் கைக்கொள்வது முறையல்ல. இதனால் பாஜகவுக்கு மக்கள் மன்றத்தில் மேலும் ஆதரவு கூடும் என்பதை விரைவில் எதிரிகள் உணர்வார்கள்.
16. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட ஹிந்துக்களைக் காப்பாற்றுவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற முஸ்லிம் தலைவர்களின் கருத்து உண்மையா?
உண்மையல்ல. அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளோருக்கு (சுமார் 19 லட்சம்) அம்மாநிலத்தில்தான் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அது அம்மாநிலத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்து காரணமாக சாத்தியமில்லை. எனவேதான் விடுபட்டவர்களின் ஆவணச் சரிபார்ப்புக்கு மேலும் கால அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அது தனி விவகாரம்.
அரசு மதிப்பீட்டின்படி, மூன்று முஸ்லிம் நாடுகளில் இருந்து தப்பிவந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் சுமார் 30,000 பேருக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும். இதனை தவறாகப் பிரசாரம் செய்வது அரசியல் சாசனத்தை மீறுவதாகும். அத்தகையோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும்போதுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிக்கல்கள் தெரியவரும். அப்போது நடைமுறை அனுபவத்திலும், சூழ்நிலைக்குத் தக்கபடியும் மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு அந்தப் பிரச்னைகளைக் களைய வேண்டும்.
17. அண்டை நாடான மியான்மரில் மதக்கலவரங்களால் வெளியேறும் ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏன் இந்த சட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?
இதுபோன்ற கேள்விகளை இந்தியாவில் மட்டும் தான் கேட்க முடியும். ரோஹிங்க்யா முஸ்லிம்களால் மியான்மரில் ஏற்பட்ட பிரச்னைகளால்தான் அங்கு கலவர்ம் ஏற்பட்டது; அந்நாட்டு அரசும் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தது. அதனால் அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை அண்டை நாடான பங்களாதேஷ் (அது ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும்) ஏற்கவில்லை. மற்றொரு முஸ்லிம் நாடான மலேசியாவும் அவர்களைத் துரத்துகிறது. எனவே அவர்கள் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் முறைப்படி வந்த அகதிகள் அல்லர். எனவே மியான்மர் நாட்டுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவதே முறையானது. அந்நாட்டு அரசும் அவர்களை திரும்ப ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது. ரோஹிங்க்யா முஸ்லிம்களை பாகிஸ்தானோ, பங்களாதேஷோ கூட வரவேற்காத நிலைக்குக் காரணம் என்ன என்று நமது ‘லிபரல்கள்’ ஆராய வேண்டும்.
அடுத்து சீனாவில் அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ள உய்கர் முஸ்லிம்களுக்கும் புகலிடம் கொடுக்குமாறு கோரிக்கைகள் நமது இடதுசாரிகளால் முன்வைக்கப்படலாம். அவர்களின் அதிகாரப்பசி அப்படிப்பட்டது. ஆனால், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி நுழையவும், குடிமகன் உரிமை பெறவும் இந்தியா சந்தை மடமல்ல.
அகதிகள் விவகாரம் உலகளாவிய பிரச்னையாகி வருகிறது. இதனைத் தீர்க்க இந்தியா மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்வதே சரியாக இருக்கும்.
18. ‘வசுதைவ குடும்பகம்’; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றெல்லாம் சொன்ன பாரதத்துக்கு, பிற நாடுகளால் கைவிடப்பட்ட மக்களைக் காக்கும் தார்மிகக் கடமை இல்லையா?
கண்டிப்பாக உண்டு. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டிய முதன்மைக் கடப்பாடும் இந்திய அரசுக்கு உண்டு. தனக்கு மிஞ்சியே தானம் என்ற பழமொழி உண்டு. அதை நிறைவேற்றிய பிறகு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சமூக உறவுகள், பண்பாட்டு மாற்றங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றை உத்தேசித்த பிறகு, வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு கருணை காட்டலாம். அதற்கான காலம் வரும்போது பாரதம் தனது கடமையை நிச்சயம் நிறைவேற்றும்.
கட்டுரையாளர்: சேக்கிழான்
நன்றி: தமிழ் ஹிந்து இணையதளம்
ஆண்டாள்
ஸ்ரீ : ஆழ்வார்கள் காலநிலை திரு .மு . ராகவையங்கார் அவர்கள் ,ஆழ்வார்கள் பற்றி ஆராய்ந்து எழுதிய நல்ல ஒரு ஆராய்ச்சி நூல் .
மதுரையில் பிப்ரவரி 1926 ல் இவர் ஆற்றிய உரையின் நூல் வடிவம் தான் இந்த நூல் என்று திரு .மு . ராகவையங்கார் அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் . திரு .மு . ராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சிப்படி பொது ஆண்டு 731 ம் வருடம் மார்கழி பௌர்ணமி திருப்பாவை அவதரித்த காலம் என்று குறிப்பிட்டுள்ளார் .
அசாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியமா?
வந்தேறிக்கு லெக் பீஸ் கேட்டுப் போராடுவது முக்கியமா?
---------------------------------------------------------------------------------------
நாடே இரண்டுபட்டுக் கிடக்கிறது.
இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடக்கிறது.

வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் என்று ஒரு முகாம்.
வெளியேற்றக் கூடாது என்று ஒரு முகாம்.

இந்த இரண்டில் நீ எந்த முகாமில் இருக்கிறாய்?
சொல் குட்டி முதலாளித்துவமே!

குடியுரிமை கேட்கும் குட்டி முதலாளித்துவமே,
நீ அசாம் மக்களுக்கு எதிராக நிற்கிறாய் என்று
உன் மண்டையில் உறைக்கவில்லையா? 

19 லட்சம் வந்தேறிகளையும் வெளியேற்றாமல்
அசாம் மக்கள் ஓய மாட்டார்கள் என்று உனக்குத்
தெரியாதா?  அசாம் மக்களுக்கு என்ன பதில்
வைத்திருக்கிறாய்? சொல் குட்டி முதலாளித்துவமே!

யாரை வெளியேற்ற வேண்டும் என்று அசாமியன்
சொல்கிறானோ, அவனுக்குக் குடியுரிமை கேட்கிறாயே
குட்டி முதலாளித்துவமே,
உனக்கு மனச்சாட்சியே  கிடையாதா?

CAB, CAA, குடியுரிமைச் சட்டம் இதற்கெல்லாம் மூல காரணம்
அசாம் பிரச்சினைதான் என்பதை ஏன் திட்டமிட்டு
மறைக்கிறாய், குட்டி முதலாளித்துவமே?

அசாம் பிரச்சினையைப் பேசாமல், அசாம் ஒப்பந்தத்தை
அமல் படுத்துவது பற்றிப் பேசாமல், வெறுமனே
வந்தேறிக்குக் குடியுரிமை இல்லை என்று பேசுவது
நேர்மையா? சொல் குட்டி முதலாளித்துவமே!

அசாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முக்கியமா?
வந்தேறிகளில் சிலருக்குக் குடியுரிமை வழங்குவது
முக்கியமா? எதற்கு முன்னுரிமை?
சொல் லிபரல் பூர்ஷ்வாவே!

நீ அசாமியர்களின் தேசிய இன உரிமையை
மதிப்பதானால், குடியுரிமைப் போராட்டம் நடத்தி
அசாம் போராட்டத்தைச் சீர்குலைக்காதே! 

நான் அசாம் போராட்டத்தையும் ஆதரிக்கிறேன்;
குடியுரிமைப் போராட்டத்தையும் ஆதரிக்கிறேன்
என்று நீ சொல்வாய் என்றால், பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழன் என்ற இரண்டக நிலையை
நீ எடுக்கிறாய் என்றே பொருள்!

அசாமே பற்றி எரியும்போது, சில வந்தேறிகளுக்கு
லெக் பீஸ் இல்லை என்று போராடுகிறாயே,
நீ மனிதன் தானா?

860 அசாமியர்கள் செத்தது போதாதா?
இன்னும் எத்தனை அசாமியனின் உயிரைப்
பலி கேட்கிறாய், ரத்த வெறி பிடித்த மிருகமே?
***************************************************
NRC என்பதில் National என்ற சொல் இருந்தாலும்,
அது அசாமுக்கு மட்டும்தான். இது அசாம் மக்களுக்கு
நன்கு தெரியும். உச்சநீதி மன்றம் கிடுக்கிப்பிடி
போட்ட பின்னரே வந்தேறிகளை அடையாளம்
காணும் பணி வேகம் எடுத்தது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் நடைபெறும்
போராட்டம் அசாம் போராட்டத்தைச் சீர்குலைக்கும்
தீய உள்நோக்கம் கொண்டது. என்ஜிஓக்கள்
தலையிட்டு நடத்தும் போராட்டம் இது.
ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டப்படி நடக்கும்
போராட்டம் இது. இது அசாம் மக்களுக்கு எதிரானது.


அது சரி.

தங்கள் மாநிலத்தில் போராட்டம் வெடிக்காமல்
இருப்பதற்காக, மாநில முதல்வர்கள் சில
வாக்குறுதிகளை அளித்து போராட்டக்காரர்களை
சமாதானப் படுத்தும் உத்தியைக் கையாள்வார்கள்.
அப்படிப்பட்ட விஷயம்தான் இது. இதையெல்லாம்
பெரிது படுத்துவது தேவையற்றது.

மாநில முதல்வர்கள் சட்டம் ஒழுங்கைக் காக்கும்
பெரிய பொறுப்பை உடையவர்கள். அதற்காக
அவர்கள் CAAயை அமல்படுத்த மாட்டேன்
என்றெல்லாம் பேசுவார்கள். இதனால் அரசு
தமக்கு சாதகமாக இருக்கிறது என்ற பிரமையை
போராட்டக்காரர்கள் அடைவார்கள். இதெல்லாம்
பூர்ஷ்வா அரசியலின் உத்தி. அதே நேரத்தில் CAAஐ
சந்தடி இல்லாமல் அமல் படுத்தி விடுவார்கள்.


ரகுபதி

இதுதான் சரி. ஆனால் அன்றைய காங்கிரஸ்
அரசும் அதைச் செய்யவில்லை. இன்றைய
மோடி அரசும் இதைச் செய்யவில்லை.
இந்திய-பாக் எல்லை கட்டுக்காவல் மிக்கது.
ஆனால் இந்திய-வங்கதேச எல்லை திறந்து கிடப்பது.
Barbed wire fence அமைக்க வேண்டும்.
  

 




 



பந்தியில் உட்க்கார்ந்து சாப்பிடுபவன் யார்?
மாப்பிள்ளை வீடா. இல்ல பொண்ணு வீடா?

ரெண்டும் இல்ல சார், யாரோ பிச்சைக்காரன்
அவனுக்கு லெக் பீஸ் இல்லை என்பதற்காக
கல்யாணத்தை நிறுத்தப் பார்ப்பது நியாய மா

வெளியேற்ற முகாம் குடியுரிமை முகாம் என்று
நாடே இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடைக்கிறது.
நீ எந்த முகாமில் இருக்கிறாய்?

குடியுரிமை கேட்டுப் போராடுகிறாயே நீ அசாம் மக்களுக்கு
எதிராக நிற்கிறாய் என்பதை நீ உணரவில்லையா?

இன்னும் அசாமில் எத்தனை பேர் சாக வேண்டும் என்று
நீ எதிர்பார்க்கிறாய்?
860 பேர் செத்தது போதாதா?
இன்னும் எத்தனை அசாமியனின் உயிர் உனக்கு வேண்டும்?

அசாமியார்கள் யாரை வெளியேற்றச் சொல்கிறார்களோ
அவர்களுக்கு குடியுரிமை கேட்கிறாயே, நீ மனிதனா மிருகமா

குடியுரிமை கேட்டுப் போராடும் மிருகமே, நீ 40 ஆண்டு கால
அசாம் போராட்டத்துக்கு கொள்ளி வைக்கிறாய் என்பதை
உணர்கிறாயா உனக்கு குற்ற உணர்வு இல்லையா மிருகமே

அசாம் எரிமலையாக வெடிக்கும்போது சிலருக்கு லெக் பீஸ்
கிடைக்கவில்லை என்று போராடுகிறாயே மானங் கெட்டவனே

CAB எதிர்ப்பைப் போராட்டத்தில் பேசிய எவனாவது
அசாம் போராட்டம் அசாம் ஒப்பந்தம் பற்றிப் பேசினானா
உச்சந்தியை மன்றத்தின் உத்தரவின்பேரில்தான்
அந்நியர்களைக் கணக்கிடும் பனி நடந்தது இரு
எவனாவது பேசினான்னா


மருதுபாண்டியன் திருப்பூர் குணா   எதை?