வெள்ளி, 31 ஜூலை, 2020

மாநிலங்கள் முரண்டு பிடிக்க வேண்டிய தேவை என்ன?
புதிய கல்விக் கொள்கை என்பது மாநிலங்களுக்கு
உடன்பாடானது. எனவே கற்பனைக்கெல்லாம்
இடமில்லை. ஏற்கனவே உள்ள பழைய கல்விக்
கொள்கைகளின் 80 சதம் இப்புதிய கொள்கையில்
உள்ளது.எனவே இதை மாநிலங்கள் எதிர்க்காது.    

இருமொழித் திட்டமும் பித்தலாட்டமும்!
---------------------------------------------------------------
தமிழ்நாட்டில் இருமொழித்திட்டம்தான் உள்ளது என்று 
அதிமுக அமைச்சர் சொல்வது பித்தலாட்டம் ஆகும்.
திமுக, அதிமுக என்று இரண்டு திராவிடக் கட்சிகளும்
இதே பித்தலாட்டத்தைத்தான் அரங்கேற்றி
வருகின்றனர்.

தனியார் பள்ளிகளில், மெட்ரிக் பள்ளிகளில் மும்மொழித்
திட்டம்தான் செயல்படுகிறது? பெரும்பாலான
குழந்தைகள் பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி என்றுதானே
மூன்று மொழிகளைப் படிக்கிறார்கள். இது மும்மொழித்
திட்டம் அல்லாமல் வேறு என்ன?

கருணாநிதி இதைத் தடுத்து சட்டம் ஏதாவது போட்டாரா?
இப்போது ஆட்சியில் இருக்கும் பழனிச்சாமி, தனியார்
பள்ளிகளில் இரண்டு மொழிகளை மட்டுமே
கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் போடுவாரா?

மு க ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தும்
சன்ஷைன் பள்ளியில் மும்மொழித் திட்டம்
செயல்படுகிறதா அல்லது இருமொழித் திட்டமா?
திராவிடக் கழிசடைகள்  தனியார் மெட்ரிக் பள்ளிகளின்
அதிபர்களிடம் இருந்து காசு வாங்கிக் கொண்டு
அங்கெல்லாம் மும்மொழித் திட்டத்தை அனுமதிப்பார்கள்.

தமிழ்நாட்டில் இருமொழித் திட்டம்தான் உள்ளது
என்று மக்களை ஏமாற்றுவார்கள். முட்டாள்கள்
மட்டுமே இதில் ஏமாறுவார்கள்.
***********************************************
     

இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகள்!  ரகுபதி

தேசிய மொழிகள் என்று அவை சொல்லப் படவில்லை.
அரசமைப்புச் சட்டப்படி, இந்தியாவில் எந்த ஒரு
மொழியுமே தேசிய மொழி இல்லை. இந்தி அலுவல்
மொழிதானே தவிர தேசிய மொழி இல்லை.

தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி உட்பட
மேற்கூறிய 22 மொழிகளும் தேசிய மொழிகளாக
அறிவிக்கப் பட வேண்டும் என்பது என் கருத்து.
இதற்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் 22 மொழிகள் இருந்தும், ஒரு மொழி கூட
தேசிய மொழி இல்லை என்பது கேவலம்; கெளரவக்
குறைச்சல்.

இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க மகாத்மா காந்தி
தலைகீழாக நின்றார். ஆனால் இந்திக்கு ஆதரவே இல்லை.
இந்தியின் லட்சணம் அவ்வளவுதான் என்பது இன்றைய
தலைமுறைக்குத் தெரியாது.

  
இந்திய அரசமைப்புச் சட்டம்!
8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகள்!
தற்கொலைகளைத் தடுக்க வழி!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
ஆங்கில அகர வரிசைப்படி.

1) அசாமியம் (Assamese)
2) வங்காளி (Bengali)
3) குஜராத்தி
4) இந்தி
5) காஷ்மீரி
6) கன்னடம்
7) மலையாளம்
8) மராத்தி
9) ஒரியா (Odia)
10) பஞ்சாபி
11) சமஸ்கிருதம்
12) தமிழ்
13) தெலுங்கு
14) உருது
15) சிந்தி
16) கொங்கணி
17) மணிப்புரி
18) நேபாளி
19) போடோ
20) டோக்ரி
21) மைதிலி
22) சந்தாலி

டாக்டர் அம்பேத்கார் அரசமைப்புச் சட்டத்தை இயற்றி
அது 195ல் செயல்பாட்டுக்கு வந்தபோது, உருது வரையிலான
14 மொழிகள் மட்டுமே அட்டவணையில் இருந்தன.

பின்னர் 1967ல், 1992ல்,2003ல் 8 மொழிகள் சேர்க்கப்
பட்டன. கொங்கணி மொழியை சில லட்சம் பேர்தான்
பேசுகின்றனர். அந்த மொழியும் அங்கீகரிக்கப்பட்ட
மொழியாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்
பட்டுள்ளது. பீகாரில் சந்தால் பழங்குடி இன மக்களின்
மொழியான சந்தாலியும் 2003ல் சேர்க்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------
போட்டித் தேர்வுகள், ஆசிரியருக்கான TET தேர்வு,
TNPSC, UPSC,SSC தேர்வுகள் எழுதுவோர்
தெரிந்திருக்க வேண்டிய செய்தி இது.

இதையெல்லாம் கண்டிப்பாகப் படியுங்கள்.
விதையில்லாத் திராட்சை போல கடினமான
விஷயங்களைக்கூட, ஒரு கேப்ஸ்யூல் வடிவில்
கொடுத்திருக்கிறேன்.

இதே விஷயங்களை நீங்கள் காசு கொடுத்து
ஒரு கோச்சிங் சென்ட்டரில் படிக்கலாம்.
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே
அனைத்தையும் இலவசமாகத் தருகிறது.

இதைப் படித்தால் வாழ்க்கை ஒளிமயமாகும்.
படிக்காமல் புறக்கணித்தால், தற்கொலை செய்து
கொண்ட செத்துப் போனவர்கள் பற்றிய செய்தியில்
உன் பெயரும் வரும்.
*****************************************************

  
   
  
22 மொழிகள் இருக்கின்றன!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
8ஆவது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன.
இந்த 22 மொழிகளும் பள்ளிக் கல்வியில் 
12 வகுப்பு வரை, பயிற்று மொழி ஆக வேண்டும்.
இது 30 ஆண்டுகளுக்குள் அதாவது 2050 வாக்கில்
சாத்தியப் படுமென்றால், உண்மையிலேயே அது
பொற்காலம் ஆகும்.

அதற்கு மேல் 22 மொழிகளிலும் PhD வரை கல்வி
என்பது, மேற்கூறிய 22 மொழிகளும்
உற்பத்தி மொழிகளாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
இந்தியாவில் 22 மொழிகளும் உற்பத்தி மொழிகளாக
இருப்பது நடைமுறை சாத்தியமற்றது.     


உற்பத்தியானது மென்மேலும் உலகமயம் ஆகிக்
கொண்டிருக்கிற ஒரு புறச்சூழ்நிலையில்,
அனைத்து மொழிகளும் உற்பத்தி மொழிகளாவது 
என்பது நடைமுறை சாத்தியமற்றது. எண்சாண்
உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது போல
பற்பல மொழிகள் இருந்தாலும் உற்பத்தி மொழியே
பிரதானம் ஆகும். எல்லா மொழிகளும் உற்பத்தி
மொழியாக முடியாது என்ற யதார்த்தத்தின் மீது
காலூன்றி நின்று கொண்டுதான் மொழிக்கொள்கையை
வகுக்க வேண்டும்.
*********************************************** 
வாசகர்களுக்குச் சில கேள்விகள்!

1) டாக்டர் அம்பேத்கார் அரசமைப்புச் சட்டத்தை
எழுதி முடித்து அது செயல்பாட்டுக்கு வந்தபோது,
அதில் எத்தனை அட்டவணைகள் இருந்தன?

2) தற்போது 2020ல் எத்தனை அட்டவணைகள் உள்ளன?

3) இந்திய மொழிகள் பற்றிய அட்டவணை எது?

4) 22 மொழிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்ட
மொழிகள் எவை?

இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். எதையும்
தெரிந்து கொள்ளாமல் வாழும் வாழ்க்கையில்
தரம் (quality) இருக்காது.
****************************************************

சமஸ்கிருதத் திணிப்பு என்னும் பூச்சாண்டியும்
மக்களை திசைதிருப்பும் ஊழல் பேர்வழிகளும்!     
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
1) இந்தியாவில் The Hindu, Express, Times என்றெல்லாம்
ஆங்கில தினசரிகள் வருகின்றன. அதைப்போல
சமஸ்கிருதத்தில் ஏதாவது தினசரிப் பத்திரிகை
வருகிறதா?

2) தமிழில் தினமணி, தினத்தந்தி, தினமலர் என்றெல்லாம்
தினசரிகள் வருகின்றன. அது போல சமஸ்கிருதத்தில்
ஏதேனும் தினசரி வருகிறதா?

3) தந்தி TV, விஜய் TV, புதிய தலைமுறை, நியூஸ் 18
என்றெல்லாம் தமிழில் TV சானல்கள் உள்ளது போல
சமஸ்கிருதத்தில் உள்ளதா?

4) பிரணாய் ராய், ரஜ்தீப் சர்தேசாய், அர்னாப் கோஸ்வாமி
ஆகியோர் ஆங்கில TV சானல் நடத்துவது போல
யாரேனும் சம்ஸ்கிருத TV சானல் நடத்துகிறார்களா?

5) BA,MA பட்டப் படிப்பில் தமிழ்நாட்டில் தமிழ் மீடியம்,
ஆங்கில மீடியம் என்று இரண்டு வகை உள்ளது.
அது போல சமஸ்கிருத மீடியம் உள்ளதா?

6) எந்தப் பொறியியல் கல்லூரியிலோ அல்லது
மருத்துவக் கல்லூரியிலோ சம்ஸ்கிருத மீடியத்தில்
கல்வி கற்பிக்கப் படுகிறதா?

7) நோய் வந்தால், டாக்டரிடம் போகிறோம். எந்த
டாக்டராவது மருந்துச் சீட்டில் சமஸ்கிருதத்தில்
மருந்து எழுதிக் கொடுக்கிறாரா?

8) உற்பத்தி மொழி என்றால் என்ன என்று தெரியுமா?
சமஸ்கிருதம் இந்தியாவில் எங்காவது உற்பத்தி
மொழியாக இருக்கிறதா?

9) மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை இல்லை
என்பதுதானே பதில்! சொல்லுங்கள்!

10) இப்படி எல்லாம் இல்லை இல்லை என்று இருக்கும்போது
சமஸ்கிருதத்தை எப்படியடா திணிக்க முடியும்?
யார் மீதடா திணிக்க முடியும்?

11) டாக்டர்களுக்கு உத்தரவு போட்டு, மருந்துச் சீட்டில்
சமஸ்கிருதத்தில் மருந்துகளை எழுதச் சொல்ல
முடியுமாடா? டாக்டர்கள் மீது திணிக்க முடியுமாடா?

12) ஏண்டா, மக்களை முட்டாளாக்கி, பொய்களைச்
சொல்லி, சதா திசை திருப்பிக் கொண்டு
இருக்கிறீர்கள்? சமஸ்கிருதத்தை யாராலும்
எவர் மீதும் திணிக்க முடியாது. இதுதான் உண்மை.
இந்த உண்மை மண்டையில் ஏறாதவன் உயிர் வாழத்
தகுதியற்றவன்.

13) அப்பன் பெயர் தெரியாத பயல்களே,
சமஸ்கிருதம் செத்துப் போச்சுடா! செத்து வருஷம்
ஆச்சுடா! அதை எப்படிடா திணிக்க முடியும்?
*******************************************************     

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கிலை ஒத்துக்கொள்
எத்தொழில் ஏதும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ!
...............கவிமணி..................................



இந்தியைத் திணிக்க முடியும்!
சமஸ்கிருதத்தைத் திணிக்க முடியுமா?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
மத்திய அரசு நினைத்தால் இந்தியாவின் எல்லா
மாநிலங்களிலும் இந்தியைத் திணிக்க முடியும்.
இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.

மதிப்புக்குரிய திமுக தலைவர் டி ஆர் பாலு
அவர்களை நாம் அறிவோம். இவர் 2004-2009
காலத்தில் டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையில்
காபினெட் அமைச்சகராக இருந்தார். அதுவும்
நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது டாக்டர் மன்மோகன்சிங் இவரைக்
கூப்பிட்டு, நெடுஞ்சாலைத் துறையில் கொஞ்சம்
இந்தியைத் திணிக்குமாறு உத்தரவிட்டார்.
பிரதமரின் உத்தரவுக்கு உடனே கீழ்ப்படிந்த
டி ஆர் பாலு அதிகாரிகளை அழைத்து இந்தியைத்
திணிக்குமாறு உத்தரவிட்டார். எப்படி என்று பார்ப்போம்.

தேசிய நெடுஞ்சாலைகள் பற்றித் தெரியுமா?
அந்தச் சாலையில் என்றாவது பயணம் செய்து
இருக்கிறீர்களா? அந்தச் சாலைகளில் குறிப்பிட்ட
இடைவெளியில் மைல்கற்கள் உண்டு தெரியுமா?
அந்த மைல்கற்களைப் பார்த்து இருக்கிறீர்களா?

தமிழ்நாட்டில் உள்ள மைல்கற்களில் இந்தியில்
ஊர்ப்பெயர்கள் எழுதப் பட்டன. இதுதான்
இந்தித் திணிப்பு! படத்தில் வேலூரில் உள்ள
மைல்கல்லில் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதைக்
காணுங்கள்.

ஆக இந்தியை ஏதேனும் ஒரு வழியில் திணிக்க
முடியும். ஆனால் சமஸ்கிருதத்தை அப்படித்
திணிக்க முடியாது. எனவே சமஸ்கிருதத்
திணிப்பு என்பது மக்களை திசைதிருப்பும்
நாடகம்.
*********************************************** 




 
    



















தமிழ் மீடியத்தை மூர்க்கத் தனமாக
எதிர்க்கும் தனியார் மெட்ரிக் பள்ளி அதிபர்கள்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
புதிய கல்விக் கொள்கையில் 5ஆம் வகுப்பு வரை
தமிழ் மீடியம் என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
இதைக் கேட்டதுமே தீயை மிதித்தது போல்
அலறுகிறார்கள் மெட்ரிக் பள்ளி அதிபர்கள்!

LKG, UKG முதற்கொண்டு, குழந்தையின் மழலைப்
பருவ காலத்திலேயே ஆங்கிலத்தைத் திணித்த
இந்தக் கயவர்கள் தமிழ் மீடியத்தை ஏற்றுக்
கொள்வார்களா? மாட்டார்கள்! வெறி கொண்டு
எதிர்ப்பார்கள்.

5ஆம் வகுப்பு வரை தமிழே பயிற்றுமொழி என்று புதிய
கல்விக் கொள்கையில் சட்டம் செய்யப் பட்டு உள்ளது
என்பதை மூர்க்கத் தனமாக எதிர்க்கிறது மெட்ரிக் லாபி.
இது மிகவும் சக்தி மிக்க ஒரு லாபி.

தமிழ்ப் பற்று உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
----------------------------------------------------------------------------------
1) 5ஆம் வகுப்பு வரை தமிழே பயிற்று மொழி என்பதை
நாம் வரவேற்க வேண்டும்.

2) காலப்போக்கில் இது 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்
பட்டு, பின்னர் குறைந்தது 10ஆம் வகுப்பு வரை
தமிழே பயிற்றுமொழி என்ற நிலை உருவாக வேண்டும்.

3) இந்தியாவில் உள்ள பல மாநில மொழிகளில் குறிப்பாக
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி,
மராத்தி, குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில்
10ஆம் வகுப்பு வரையிலான அறிவியலைச் சொல்ல
முடியும். அதற்கான ஆற்றல் உள்ள மொழிகள்தான் அவை.

4) தற்போது சற்றுத் தட்டுத் தடுமாறி 12ஆம் வகுப்பு
வரையிலான அறிவியலை தமிழ், தெலுங்கு ஆகிய
மொழிகள் சொல்கின்றன.

5) இந்தியாவின் பிரதானமான மாநில மொழிகள் (அதாவது
அரசமைப்புச் சட்டம் கூறுகிற மொழிகள்) அனைத்தும்
12ஆம் வகுப்பு வரையிலான அறிவியலைத் தங்கள்
மொழியில் சொல்லத் தகுதி பெற வேண்டும்.
அவற்றைத் தகுதி உடையதாக ஆக்குவதே அந்தந்த
தேசிய இனப் பற்றாளர்கள் மற்றும் போராளிகளின்
கடமையாக இருக்க வேண்டும்.

6) இன்னும் ஒரு 30 ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள
எல்லா மாநில மொழிகளும் 12ஆம் வகுப்பு வரையிலான
அறிவியலைத் தங்கள் மொழியில் சரளமாகச்
சொல்ல வேண்டும். இதை சாத்தியப் படுத்திக்
காண்பிக்க வேண்டும்.

7) இதுதான் Maximum possibility. மற்றப்படி PhD வரை
மாநில மொழியில் கல்வி என்பதெல்லாம் நடைமுறை
சாத்தியமற்றது. அது தேவையும் அற்றது.

8) இந்த லட்சியத்தை நம்மால் அடைய முடியுமா?
தனியார் மெட்ரிக் அதிபர்களை வீழ்த்தாமல்,
நம்மால் ஒருபோதும் இந்த லட்சியத்தை
அடைய முடியாது.

9) தனியார் மெட்ரிக் அதிபர்கள் பசை உள்ளவர்கள்.
தமிழ் உணர்வாளர்களை அவர்கள் விலைக்கு
வாங்குவார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

10) 5ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியம் என்பதை
ஆதரிக்க மறுப்பவன் எவனும் தமிழின் எதிரியே.
***************************************************
       

.
      



     

புதன், 29 ஜூலை, 2020

மருதுபாண்டியன்

புதிய தலைமுறை டிவியில் விவாதம்!
நாள்: 15.07.2019  இரவு 8 to 9.
பொருள்: புதிய கல்விக் கொள்கை.

பங்கேற்பு:
1. மகேஸ்வரி அதிமுக
2. ஆளூர் ஷா நவாஸ் விசிக
3. பி இளங்கோ நியூட்டன் அறிவியல் மன்றம்
4. எழிலரசன் திமுக
5. சத்யா குமார் பட்டயக் கணக்காளர்.
நெறியாளர்: கார்த்திகைச் செல்வன்.   

திங்கள், 27 ஜூலை, 2020

மருத்துவப் படிப்பில் OBCக்குரிய இடஒதுக்கீடு!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
-----------------------------------------------------------------------
OBCக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையான சட்டத்தை 
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அச்சட்டத்தை 
இன்னும் 3 மாத காலத்துக்குள் கொண்டு வர வேண்டும்.
இதுதான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பு ஒரு விஷயத்தை மண்டையில் அடித்துக் 
கூறுகிறது. அது என்ன? தற்போது அமலில் உள்ள சட்டம் 
எதுவும் OBCக்கு இடஒதுக்கீட்டை வழங்கப் போதுமானதாக 
இல்லை. எனவே புதிதாக ஒரு சட்டத்தை இயற்றினால் 
மட்டுமே, OBCக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும்.

உயர்நீதிமன்றம் கூறுவது உண்மை அல்ல. எப்போது 
93ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறி விட்டதோ 
அப்போதே OBCக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட சம்மதம் 
கிடைத்து விட்டது. (93rd amendment 2005)

93ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்ன கூறுகிறது?
இது குறித்து முன்பே நான் எழுதிய கட்டுரைகளில் 
செய்தி உள்ளது. OBCக்கு உயர்கல்வி நிலையங்களில் 
இடஒதுக்கீடு வழங்குவதை அனுமதிக்கும் சட்டத் 
திருத்தம் இது.

சரி, சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பின் பின்விளைவுகள் 
என்ன? மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றுகிற வரை 
OBCக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது. சட்டம் இயற்றுவது 
என்பது மூன்று மாத காலத்துக்குள் ஒருபோதும் முடியாது.

சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், அதை எதிர்த்து எவரேனும் 
நீதிமன்றத்திற்குச் செல்லலாம். வழக்குத் தொடரலாம்.
அதில் தீர்ப்பு வரவேண்டும். தீர்ப்பு வருவதற்கு யாரும் 
கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது.

ப சிதம்பரம்- ராஜ கண்ணப்பன் தேர்தல் வழக்கில் 
இன்னமும் தீர்ப்பு வரவில்லை. அப்பாவு ஜெயித்தாரா,
தோற்றாரா என்பதை ஓட்டுக்களை எண்ணிச் சொல்ல 
வேண்டும். இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வரும்?
அநேகமாக கிபி 3020ல் வரலாம்.

எனவே சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மகிழ்ச்சி 
அடைவதற்கு ஒன்றுமே இல்லை.
**************************************************************  
       

         

ஆரியபட்டர் காலத்தில் தசாம்ச முறை (base 10 number system)
அறிஞர்கள் நடுவில் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
அது வெகு மக்களால் உணர்ந்து கொள்ளப் பட்டது என்றும்
வெகுமக்கள் இயல்பாக அதைப் பயன்படுத்தி வந்தார்கள்
என்றும் கூற இயலாது.

நுண்ணிய சிறுபான்மையினரான அறிவாளிப் பகுதியினர்
சிலர் மட்டுமே அறிந்திருந்தனர். பின்னர் பிரம்ம குப்தர்
காலத்தில்தான் அதாவது ஏழாம் நூற்றாண்டில்தான்,
தசாம்ச முறையின் பிரயோகம் பரந்துபட்ட மக்களிடம்
செல்வாக்குப் பெற்றது. இதற்கு ஏழாம் நூற்றாண்டில்
வாழ்ந்த பிரம்ம  குப்தரும் முதலாம் பாஸ்கரரும்
காரணம் ஆவர்.

லீலாவதி நூலில் இரண்டாம் பாஸ்கரர் 10ன் மடங்குகளை,
ஏக, தஸ, ஸத, ஸகஸ்ர என்று தொடங்கி
அற்புதம், அப்ஜம், பத்மம், ஸங்கம் என்று
அடுக்கிக் கொண்டே  போகிறார். தசாம்ச முறை
மக்களிடம் வேர் கொண்டுவிட்டது என்பதற்கான
ஆதாரம் இது.  
   

தமிழில் உள்ள இந்நூலை மேற்குறிப்பிட்ட
இணைப்பில் சென்று வாசகர்கள் இலவசமாகப்
படிக்கலாம். படிக்குமாறு வேண்டுகிறேன்.


எந்திரத் தயாரிப்பில் சாத்தியம். ஏனெனில்
நிறை இவ்வளவு என்று குறித்து விடுகிறோம்.
ஆயிரக் கணக்கில் கையால் லட்டு பிடிக்கும்போது,
ஒரு கட்டத்தில் ஒரு சீரான லயம் வந்து விடும்.
அப்போது சம எடை உள்ள லட்டுக்களைப்
பிடிப்பது (அதாவது தயாரிப்பது) கைகூடும்.
இதற்கான probability 0.6 இருக்க வாய்ப்புள்ளது.

செயீன்-அலெக்சாந்திரியா இடையில் உள்ள
எல்லா ஊர்களிலும், நிழலின் நீளம் குறைவாக
இருக்கையில், அளந்து பார்த்தால் 7.2 டிகிரி
இருக்காது. ஏனெனில் இந்தக் கோணம் என்பது
தூரத்துடன் நேர்விகிதப் பொருத்தம் உடையது.

அளக்கும்போது நேரம் முக்கியம். இரண்டு
ஊர்களிலும் ஒரே நேரத்தில் அளக்க வேண்டும்.
உச்சி வெயிலின்போது அளப்பது பயன்தரும். 



வெவ்வேறு ஊர்கள் என்பவை ஒரு வட்டத்தின் பரிதியில்
அமைந்த புள்ளிகள் ஆகும். இங்கு ஒரு புள்ளிக்கும்
இன்னொரு புள்ளிக்கும் இடையில் தூர வேறுபாடு
உண்டு. இதுதான் எரோட்டஸ்தீனசின் புரிதல்.
இது சரியானதும் ஆகும்.

செயீனை மையமாகக் கொண்டு, 787 கிலோமீட்டரை
ஆரமாகக் கொண்டு ஒரு வட்டம் வரைந்தால், அந்த
வட்டத்தின் பரிதியில் உள்ள எல்லாப் புள்ளிகளிலும்
7.2 டிகிரி அளவிலான கோணம் கிடைக்குமா என்பது
இந்தப் பரிசோதனைக்கு எவ்விதத்திலும் தொடர்பற்றது;
தேவையற்றது. அதிலிருந்து முடிவுகளைத் தருவிப்பது
இப்பரிசோதனையின் நோக்கத்துடன் பொருந்தாதது.
    

 
   
இல்லை. அவருடைய காலத்தின் மாபெரும் சிக்கலே
இரண்டு ஊர்களுக்கு இடையிலான தூரத்தை
அளப்பதுதான். ஒட்டக வண்டிகள் இரண்டு ஊர்களைக்
கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கொண்டுதான்
தூரத்தை அன்று அளந்தனர். இது பெரிதும் தோராயமான
ஒரு முறை.

எனவே எரோட்டஸ்தீனஸ், பயிற்சி பெற்று தொழில்முறையில்
(professional) ஒரு சீராக அடி எடுத்து வைக்கவல்ல
ஆட்களின் உதவியை நாடினார்.  எகிப்து நாட்டின்
ஜியோகிராபியை வேறு எவரினும் கூடுதலாக
அறிந்து வைத்திருந்தார்.

செயீன்-அலெக்ஸாந்திரியா ஊர்களுக்கு இடைப்பட்ட
அத்தனை ஊர்கள், அவற்றின் தூரங்கள் ஆகியவை
அவருக்கு அத்துப்படியாக இருந்தன.

திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு
1. மணியாச்சி 2.கோவில்பட்டி 3.சாத்தூர்
4. விருதுநகர் 5. மதுரை 6. திருச்சி 7.விழுப்புரம்
8. செங்கல்பட்டு வழியாக, சென்னை வந்தடைவது
போல, அவருக்கு செயீன்-அலெக்சாந்திரியா
வழித்தடம் பழக்கமாகி இருந்தது. எனவே இங்கு
randoms electionக்கு இடமே இல்லை. நன்கு தெரிந்த,
பரிசோதிக்கப்பட்ட தரவுகளைக் கொண்ட ஊர்களை
மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். இன்றைய வசதி
வாய்ப்புகளை மனத்தில் இருந்து அகற்றாமல்,
2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலை
 மனத்தில் உள்வாங்குவது கடினம்தான்.   

இந்தப் பரிசோதனை ஒரு நாளில் முடிவெடுத்து
ஒரு நாளில் நடந்தது அல்ல. இப்பரிசோதனை
கைகூட சில ஆண்டுகளின் முயற்சி அன்று தேவைப்பட்டது

பிரதான சாலையில் இருந்து விலகி, தனியாகப்
பிரிந்து செல்லும் ஒரு கிளைச்சாலையில் நீங்கள்
செல்கிறீர்கள். இது இப்பரிசோதனையில் இருந்து
விலகுவதாகும். எரோட்டஸ்தீனஸ் சொல்வது
ஒரே ஒரு வட்டம்தான். ஊர்களை வட்டத்தின்
பரிதியில் உள்ள புள்ளிகளாகக் கருதினார் அவர்.

நீங்கள் கூடுதலாக இன்னொரு வட்டத்தைப்
போடுகிறீர்கள். செயீன் என்ற ஊரை மையமாகக்
கொண்டு 787 கிமீ தோற்றத்தை ஆரமாகக் கொண்டு
இன்னொரு வட்டத்தை வரைகிறீர்கள். இந்த வட்டம்
தேவையற்றது.
 

கிமு நான்காம் நூற்றாண்டிலேயே பூமி உருண்டை
என்பதை அரிஸ்ட்டாட்டில் எழுதி இருக்கிறார்.
அவருக்கும் முன்னதாகவே பித்தகோரஸ் பூமி
உருண்டை என்று சொல்லி இருக்கிறார்.

கிரகணங்களின்போது சந்திரனின் நிழல் வட்டமாக
விழுவதையும், பூமியின் நிழல் வட்டமாக விழுவதையும்
தொடர்ந்து கூர்நோக்கிய கிரேக்க வானியலாளர்கள்
பூமி சந்திரன் இரண்டுமே உருண்டை வடிவம் என்பதை
அரிஸ்ட்டாட்டிலுக்கு முன்பே நிறுவி இருந்தனர்.

இவர்களை விட காலத்தால் பிந்தியவர் எரோட்டஸ்தீனஸ்.
எனவே பூமி உருண்டை என்பது அவர் காலத்தில்
நன்கறியப்பட்ட ஒரு உண்மை.

இந்தியாவிலும் ஆரியபட்டர் கிபி 5ஆம் ஆண்டு
காலத்திலேயே பூமி ஒரு கோளம் என்பதை நிறுவி
இருந்தார்.

இங்கு கோப்பர் நிக்கசுக்கும் கலீலியோவுக்கும்
வேலையே இல்லை. 
   

ஜியோடெஸிக் (Geodesic) என்றால் என்ன?

ஞாயிறு, 26 ஜூலை, 2020


மறுப்பு!
------------
1) சுஜாதா ஒரு தீவிர வைஷ்ணவர்.
இது மறுக்க முடியாத  உண்மை. 
எனவே வைஷ்ணவரான சுஜாதா ஸ்ரீரங்கம்
ரங்கநாதரை வணங்கினார். இதுவும் உண்மை.

2) சுஜாதா ஒரு தீவிர அறிவியல் பரப்புநர்.
இதுவும் மறுக்க முடியாத உண்மை.
அறிவியலை அறிந்த சுஜாதாவால், கடவுள் இருக்கிறார்
என்று உறுதிபடக் கூற முடியவில்லை.

3) இங்கு மிகுந்த நுட்பத்தோடு ஒருவர் புரிந்து கொள்ள
வேண்டியது என்னவெனில், அறிவியலின் மீதும் அது
வலியுறுத்தும் நிரூபணவாதத்தின் மீதும் அசைக்க
முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் சுஜாதாவால்
கடவுள் இருக்கிறார் என்று உறுதியுடன் கூறவோ
கூறியதை நிரூபிக்கவோ முடியவில்லை.
  
4) இதைத்தான் நியூட்டன் அறிவியல் மன்றம் கூறியுள்ளது.
இதன் பொருள் சுஜாதா நாத்திகர் என்பதல்ல. சுஜாதா
ஒருபோதும் நாத்திகராக இருந்ததே இல்லை. அவர்
agnostic கூட அல்ல. நாத்திகர் அல்லாத சுஜாதாவுக்கு
நாத்திக அந்தஸ்தை வழங்க இயலாது.

5) அறிவியல் பூர்வமாக கடவுள் இருக்கிறார் என்பதற்கான
வலுவான தர்க்கமோ அல்லது நிரூபணமோ சுஜாதாவால்
முன்வைக்கப் படவில்லை என்ற உண்மையை மட்டுமே
நியூட்டன் அறிவியல் மன்றம் வலியுறுத்துகிறது.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர், தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்.
********************************************************  

சனி, 25 ஜூலை, 2020

கணிதத்துக்கான பரிசுகள்
------------------------------------------
கணிதத்துக்கு நோபெல் பரிசு இல்லை என்ற குறையைத்
தீர்க்கும் பொருட்டு,  கணிதத்துக்கு மட்டுமேயான பரிசாக
ஏபெல் பரிசு (Abel prize) 2003ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு
வருகிறது. நார்வே நாட்டுக் கணித மேதையான நியல்ஸ் ஹென்ரிக்
ஏபெலின் பெயரால், (Niels Henrik Abel 1802-1829) நார்வே அரசு
இப்பரிசை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இது கணிதத்தின்
நோபல் பரிசு என்று கருதப்படுகிறது.

இஸ்ரேல் நாடு ஆறு துறைகளில் உல்ஃப் பரிசை (Wolf prize)
அநேகமாக ஆண்டுதோறும் வழங்குகிறது. இவற்றுள்
கணிதத்திற்கான உல்ஃப் பரிசு பெரும் கெளரவம்
உடையதாகும். 1978 முதல் இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

கணிதத்திற்கான பரிசுகளில் அடுத்துச் சிறப்பிடம்
பெறுவது பீல்டு மெடல் (Fields medal) ஆகும். கனடா நாட்டின்
கணித மேதை ஜான் சார்லஸ் ஃபீல்ட்ஸ் என்பவரின்
(John Charles Fields 1863-1932) பெயரால் அமைந்தது
இப்பதக்கம். 40 வயதுக்கு உட்பட்ட இளம் கணித
மேதைகளில் அதிகபட்சம் நான்கு பேருக்கு
நான்காண்டுக்கு ஒருமுறை இப்பரிசு வழங்கப்
படுகிறது. 

சதுரங்க வீரர்களும் கணித மேதைகளே. எனவே கணித
மேதைகளின் பட்டியலில் அவர்களும் இடம் பெறத்
தக்கவர்களே. 1935ஆம் ஆண்டிற்கான  உலக சதுரங்க
சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றவர்
மாக்ஸ் யூவ் என்ற கணித நிபுணரே (Max Euwe 1901-1981)
என்பது வரலாறு.  காரி காஸ்பரோவ், விஸ்வநாதன் ஆனந்த்
ஆகிய இருவரும் இன்றைய சதுரங்க  வீரர்களில் தலைசிறந்த
கணித நிபுணர்கள் ஆவர். 

இமானுவேல் லஷ்கர் தெரியுமா? ஜெர்மனியின் கணித மேதை.
இவர் சதுரங்க சாம்பியனும்கூட.  

வெள்ளி, 24 ஜூலை, 2020

சரியான விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------
செயற்கைக்கோள் 36,000 கிமீ உயரத்தில் உள்ளது.
சேப்பாக்கத்தில் நடக்கும் நிகழ்வானது, சேப்பாக்கத்தில்
இருந்து செயற்கைக் கோளுக்கும் பின்னர் செயற்கைக்
கோளில் இருந்து பூமிக்கும் (அதாவது சேப்பாக்கத்துக்கும்)
வர வேண்டும். இதில் 36,000 கிமீ plus 36,000 கிமீ என்பதாக
மொத்தம் 72,000 கிமீ போக வேண்டும்.

ஆக, தூரம் = 72,000 கிமீ
வேகம் (velocity of the signals) = ஒளியின் வேகம்
= 300,000 கிமீ/ வினாடி

நேரம் = தூரம் divided by வேகம்
= 72,000 divided by 300,000
= 0.24 வினாடி.

எனவே செயற்கைக்கோள் ஒளிபரப்பில் 0.24 வினாடி
தாமதம் ஆகும்.
**************************************************   

Euler's formula states that for any real number x:

மார்க்சியம் என்று சொன்னாலே அது மண்ணுக்கு ஏற்ற,
மக்களுக்கு ஏற்ற, சமுக அமைப்புக்கு ஏற்ற மார்க்சியம்
என்றுதான் பொருள்படும். எனவே தனியாக மண்ணுக்கு
ஏற்ற மார்க்சியம் என்று சொல்லத் தேவையில்லை.

வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து,
பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வேறுபட்ட
சமூக அமைப்பைக் கொண்டது அன்றைய ஜாரின் ரஷ்யா.
மேற்கூறிய மூன்று நாடுகளுடன் ஒப்பிடும்போது,
ஜாரின் ரஷ்யா பின்தங்கிய உற்பத்தி முறையைத்தான்
கொண்டிருந்தது. எனவே அங்கு மார்க்சியத்தைப்
பிரயோகிப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தபோது
அதற்கு விடை கண்டார் லெனின்.

அதுதான் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்ப குறிப்பாகப்
பிரயோகிப்பது என்ற லெனினின் கொள்கை.
Concrete analysis of the situation and concrete application of Marxism
என்று லெனின் கூறியது இதுதான்.  ஸ்தூலமான
பிரயோகம் என்பது இதுதான்.

இந்திய நாட்டுக்கென்று மாலெ கட்சியின் ஒரு
வேலைத்திட்டம் வகுத்துக் கொள்கிறோம் அல்லவா?
அதன் பெயர் என்ன? அதன் பொருள் என்ன?
அதுதான் ஸ்தூலமான பிரயோகம் (concrete application) ஆகும்.
இந்த ஸ்தூலமான பிரயோகம்தான் மண்ணுக்கேற்ற
மார்க்சியம் ஆகும். எப்போது லெனினியம் வந்ததோ,
அப்போதே மண்ணுக்கேற்ற மார்க்சியம், நாட்டுக்கேற்ற
மார்க்சியம் இவையெல்லாம் வந்து விட்டன.

ஜாரின் ரஷ்யாவுக்கு போல்ஷ்விக் கட்சி ஒரு
வேலைத்திட்டத்தைத் தயாரித்தது. அதையா நாம்
இந்தியாவுக்கு அப்படியே வைத்துக் கொண்டோம்?
இல்லையே!

இந்தியாவுக்கென்று தனியாக ஒரு வேலைத்திட்டத்தைத்
தயாரித்தோம் இல்லையா? அந்தத் தனியான
வேலைத்திட்டம்தானே மண்ணுக்கேற்ற  மார்க்சியம்!
இதற்கு மேலும் தனியாக மண்ணுக்கேற்ற மார்க்சியம்
என்று ஏதாவது உள்ளதா? இல்லையே!

எனவே இதற்கப்புறமும் மண்ணுக்கேற்ற மார்க்சியம்
என்று பேசுவது ஒன்று அறியாமையாக இருக்க
வேண்டும்; அல்லது கிரிமினல் நடவடிக்கையாக
இருக்க வேண்டும். அவ்வள்வுதான்.




வியாழன், 23 ஜூலை, 2020

முதல் பத்து கணித மேதைகள்!
-------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
உலகின் தலைசிறந்த கணித மேதைகளாக மூன்று பேர்
கருதப்படுகின்றனர். 1) ஆர்க்கிமெடிஸ் 2) நியூட்டன்
3) கார்ல் காஸ் ஆகிய மூவரே அவர்கள். மொத்த உலகமுமே
எவ்விதக் கருத்து வேறுபாடும் இன்றி, இம்மூவரையும் மாபெரும்  மேதைகளாக ஏற்றுக் கொண்டது.

ஆர்க்கிமெடிஸ் (Archimedes of Syracuse ca BCE 287-212) கிரேக்க
நாட்டின் கணித, வானியல், இயற்பியல் மேதை ஆவார். கிறிஸ்து
பிறப்பதற்கு 250ஆண்டுகளுக்கு முன்னரே, கணிதம்
இயற்பியலில் பிரமிக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்
இவர். இவரின் நெம்புகோல் விதிகளை அறியாதோர் இல்லை.

ஆர்க்கிமெடிஸ் சைரக்கியூஸ் (Syracuse) என்ற நகரில் வாழ்ந்தார்.
சிசிலித் தீவின் தென்கிழக்கு ஓரத்தில் உள்ள ஒரு நகர அரசு
(city state) இது. இதன் மீது அடிக்கடி ரோமானியர்களின்
படையெடுப்பு நிகழ்ந்தது.

தகுந்த ஆடிகள் (mirrors) வாயிலாக, சூரிய ஒளியைக்
குவித்து எதிரிக் கப்பல்களைத் தீப்பற்றச் செய்தும், தான்
உருவாக்கிய எந்திரங்கள் மூலம் எதிரிகளின் நிலைகள் மீது
கற்களை மழையாகப் பொழிந்தும் இந்தப் படையெடுப்புகளை
முறியடித்து சைரக்கியூஸை பாதுகாத்தவர் ஆர்க்கிமெடிஸ்.

ஏடறிந்த அறிவியல் வரலாற்றில், பித்தகோரஸ்,
அரிஸ்டாட்டில், யூக்ளிட் ஆகியோருக்குப் பிந்தியவர்
ஆர்க்கிமெடிஸ். அதே நேரத்தில், கிரேக்கத்தின்
பண்டைய அறிவியல் மேதைகளில் இவரே தலைசிறந்தவர்
என்று அறிவியல் உலகம் கணித்துள்ளது.

ஐசக் நியூட்டன்:
--------------------------
தலைசிறந்த கணித மேதைகளில் அடுத்து இரண்டாவதாக
வருபவர் இங்கிலாந்தின் ஐசக் நியூட்டன் (Sir Issac Newton  1643-1727).
பொதுவாக நியூட்டன் இயற்பியல் அறிஞராக அறியப் பட்டாலும்
கணிதத்திலும் அவரின் பங்களிப்பு மகத்தானது.
கால்குலஸ் கணிதத்தை (calculus of infinitesimals) நியூட்டன்தான்
கண்டறிந்தார். இதன் மூலம் கணிதத்தை அவர் சிகரத்தில் வைத்தார். பொதுரூபம் செய்யப்பட்ட ஈருறுப்புத் தேற்றம்
(Generalised Binomial theorem), வரம்புறு வேற்றுமைகள் (finite differences),
ஒரு கோவையின் மூலங்களை நெருக்கமான தோராயங்கள் மூலம் கண்டறிதல் ஆகியவை பெரிதினும் பெரிதான நியூட்டனின்
பங்களிப்புக்குச் சில உதாரணங்கள்.
.
நியூட்டனின் காலத்தில் அறிவியல் மிகவும் குழந்தைப்
பருவத்திலேயே இருந்தது. அறிவியலின் மாளிகை
இருள் சூழ்ந்து கிடந்தது. நியூட்டன் வந்துதான் அதன்
ஜன்னல்களை  ஒவ்வொன்றாகத் திறந்து வெளிச்சத்தைக்
கொண்டு வந்தார்.

நியூட்டனின் அறிவியல் பங்களிப்பைப் போற்றி,
ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் எழுதிய
ஒரு கவிதை உலகம் முழுவதும் பரவி உள்ளது.

"இயற்கையும் அதன் விதிகளும்
இருளில் மூழ்கிக் கிடந்தன.
கடவுள் பார்த்தார்
நியூட்டனை வரச் சொல் என்றார்
நியூட்டனும் வந்தார்
வந்ததும் எங்கும் ஒளிவெள்ளம்!"
    .
(Nature and Nature's laws lay hid in night
God said Let Newton be! and All was light.
Alexander Pope)

கார்ல் காஸ்:
-------------------
இனி மூன்றாவதாக ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் காஸ்
(Carl Friedrich Gauss 1777-1885) வருகிறார். தமது 22ஆம் வயதில்
அல்ஜிப்ராவின் அடிப்படைத் தேற்றத்தை (fundamental theorem of algebra)
நிரூபித்தவர் காஸ். தமது 24ஆம் வயதில், இவர் எழுதி
வெளியிட்ட Arithmetical investigations என்ற நூல் "எண் கோட்பாடு"
(Number theory) பற்றி எழுதப்பட்ட மிகவும் புரட்சிகரமான
நூலாகக் கருதப் படுகிறது.   

புள்ளியியலில் இவர் உருவாக்கிய நிகழ்தரவுப் பரவல்
(Normal distribution or Gaussian probability distribution)
இவர் பெயராலேயே வழங்கப்படுகிறது. வளைதலப்
பரப்புகளுக்கு ஏற்ற வடிவியலை (Differential geometry of
curved surfaces) வளர்த்தெடுத்து அதில் சில தேற்றங்களை
நிரூபித்தவர் இவர். கணிதத்தில் இவரின் பல்துறைப்
பங்களிப்புகளைப் பட்டியலிட்டு மாளாது.

உலகில் இதுவரை தோன்றிய அனைத்து கணித
மேதைகளிலும் தலைமையிடத்தில் உள்ளவராக
காஸ் கருதப் படுகிறார். நியூட்டன் இயற்பியலின் தந்தை
என்றால், காஸ் கணிதத்தின் தந்தை என்று போற்றத் தக்கவர்.

ஆக, ஆர்க்கிமிடிஸ், நியூட்டன், காஸ் ஆகிய மூவரும்
கணிதத்தில் முதல் மூன்று இடங்களில் வருகிறவர்கள்
என்ற உண்மையை கணித உலகம் இருபதாம்
நூற்றாண்டிலேயே ஏகமனதாக ஏற்றுக் கொண்டு விட்டது..

லியனார்டு ஆய்லர்:
--------------------------------
21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாம், முதல் மூவருடன்
நின்று விடாது, குறைந்தது, முதல் பத்து இடங்களின்
கணித மேதைகளை அடையாளம் கண்டு, மக்களுக்கு
அறிவிக்க வேண்டும். ஆகவே 4 முதல் 10 வரையிலான
இடங்களை நிரப்பத் தொடங்குவோம்..

நான்காம் இடத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின்
லியனார்ட் ஆய்லர் (Leonhard Euler 1707-1783) வருகிறார்.
அவர் காலத்திய கணக்கற்ற கணிதப் புதிர்களை
அவர் விடுவித்தார். கணிதத்தில் இன்று பயன்படுத்தும்
பல்வேறு குறியீடுகளையும் அவரே உருவாக்கினார்.

உதாரணமாக கற்பனை எண்ணுக்கு i  என்ற குறியீட்டை
(i stands for imaginary unit) உருவாக்கியவர அவரே.
நாம் நன்கறிந்த, இயற்கை மடக்கையின்
அடிமானமாகிய  (base of natural logarithm) e என்னும் எண்
(e = 2.71828182....) ஆய்லரின் எண்ணாக அறிவிக்கப்பட்டு
அவருக்குப் புகழ் சேர்க்கிறது.

ஆய்லரைப் பற்றி எழுதும்போது அவரின் பிரசித்தி பெற்ற
சூத்திரத்தையும், அதன் விளைவான ஆய்லரின் முற்றொருமை
(Euler's identity) பற்றியும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

ஆய்லரின் சூத்திரம் இதுதான்! எந்த ஒரு மெய்யெண் xஐப் பொறுத்தும்   
 

இந்தச் சூத்திரத்தில் x = pi என்று பிரதியிட்டால்,  
 
      என்பது கிடைக்கும்.
இதுவே ஆய்லரின் முற்றொருமை. இதை கணிதத்தின்
அதியற்புதமான சூத்திரம் என்று இயற்பியல் அறிஞர்
ரிச்சர்டு பெயின்மேன் (Richard Feynman 1918-1988) புகழ்ந்தார்
என்பது வரலாறு.

முக்கோணவியலில் வரும் டி மோவிர் தேற்றம் பற்றி
(De Movir's theorem) கணிதம் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்கள்
அறிவார்கள். டி மோவிரின் தேற்றமானது
(cos theeta + i sin theeta whole raised to n = cos n theeta + i sin n theeta)
ஆய்லரின் சூத்திரத்தில் இருந்து நேரடியாகப் பெறப்பட்டதாகும்.

ஸ்ரீனிவாச ராமானுஜன்:
-------------------------------------
அடுத்து, ஐந்தாம் இடத்தில் இந்திய தமிழகக் கணித மேதை
ஸ்ரீனிவாச ராமானுஜன் (1887-1920) வருகிறார்.
முந்திய நால்வரிடம் இருந்து காலத்தால் வெகுவாகப்
பிந்தியவர் ராமானுஜன். இளமையில் கொடிய
வறுமையில் வாடிய இக்கணித மேதை, பின்னாளில்
எலும்புருக்கி நோயுடன் போராடி தமது 33ஆம் வயதிலேயே
உலக வாழ்வை நீத்தார். கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல,
ஆங்கிலக் கணித அறிஞர் ஹார்டி என்பவர்
(G H Hardy 1877-1947) ராமானுஜனுக்கு வாழ்வளித்து
அவரின் மேதைமையை உலகறியச் செய்தார்.

முறையான கல்லூரிக் கல்வியைப் பெறும் முன்னரே
ராமானுஜன்.பெரும் கணித மேதையாகி விட்டார்.
தமது அபாரமான மேதைமையின் வெளிப்பாடாக
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கணித முடிவுகளை,
தேற்றங்களை உருவாக்கி இருந்தார் ராமானுஜன்.
அவற்றைத் தமது நோட்டுப் புத்தகங்களில்
(Ramanujan's Note books) எழுதி வைத்திருந்தார்.
ஹார்டியின் பராமரிப்பில் கேம்பிரிட்ஜ் பல்கலையில்
நான்காண்டுகள் (1914-1918) கழித்த ராமானுஜன் கணிதத்தின்
பல்வேறு துறைகளில் தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.
குறிப்பாக மாக் தீட்டா ஃபங்ஷன்ஸ் (mock theeta functions) குறித்த அவரின் முடிவுகள் உயர் கணிதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இயல் எண்களின் வரம்பற்ற ஒரு தொடரின் (infinite series)
கூட்டுத்தொகையானது (sum) மைனஸ் 1/12 ஆகும் என்ற
ராமானுஜனின் முடிவு கணித உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. (1+2+3+4+5+.............upto infinity  = minus 1/12)
ராமானுஜனின் இம்முடிவு இன்று இழைக்கொள்கையில்
(string theory) பயன்படுகிறது.   

ஒருமுறை ஹார்டி இப்படிக் கூறினாராம்! உலகில் உள்ள
எல்லா கணித மேதைகளுக்கும் அவர்களின் மேதைமையைப்
பொறுத்து மதிப்பெண் வழங்கினால் எனக்கு 25ம்,
லிட்டில்வுட்டுக்கு (J E Littlewood 1885-1977) 30ம், ஹில்பர்ட்டுக்கு
(David Hilbert 1862-1943) 80ம், ராமானுஜனுக்கு 100ம்
வழங்கலாம் என்றாராம். முதல் இடத்தை ராமானுஜனுக்கு
அட்டியின்றித் தந்துள்ளார் ஹார்டி.

பெர்னார்ட் ரீமன்:
----------------------------
ஆறாவதாக வருபவர் ஜெர்மனியின் பெர்னார்ட் ரீமன்
(Bernhard Riemann 1826-1866). நாற்பது வயதிலேயே இவர்
இறந்து விட்டது கணிதத்திற்குப் பேரிழப்பு.
இவர் கார்ல் காசின் மாணவர். 1915ல் தமது பொதுச்சார்பியல்
கோட்பாட்டை (General relativity) வெளியிட்ட ஐன்ஸ்டின்,
வளைதலப் பரப்புக்கான வடிவியலை (geometry of curved space)
தேடித் திரிந்தார். நடப்பில் உள்ள யூக்ளிட்டின் வடிவியலானது
சமதளப் பரப்புக்கானது. இதை வைத்துக்கொண்டு ஐன்ஸ்டினின்
வளைந்த வெளியை (space-time curvature) விளக்க இயலாது. எனவே
ரீமனின் வடிவியலையே ஐன்ஸ்டின் தேர்ந்தெடுத்தார்.

ரீமன் கருதுகோள் (Riemann's hypothesis) சாகாவரம் பெற்றது போலும்!
1859ல் ரீமன் முன்மொழிந்ததே இது. (The real part of every non-trivial zero of the
Riemann zeta function is 1/2 என்பதே ரீமன் கருதுகோள்). இதன் விளக்கம் இக்கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது. 160 ஆண்டுகளைக் கடந்த
பின்னரும் இக்கருதுகோள் சரியென்றோ தவறென்றோ
இன்று வரை நிரூபிக்கப் படவில்லை.

இந்த மில்லேனியத்தின் தீர்க்கப் படாத கணிதப் புதிர்களாக
2000ஆம் ஆண்டில் ஏழு புதிர்களை அறிவித்தது அமெரிக்காவில்
உள்ள கிளே கணித நிறுவனம் (Clay Mathematical Institute).
அப்புதிர்களில் ரீமன் கருதுகோளும் ஒன்று. இப்புதிரை விடுவித்தால்
ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு (இந்திய மதிப்பில்
7 கோடி ரூபாய்) என்றும் கிளே நிறுவனம் அறிவித்துள்ளது.

டேவிட் ஹில்பர்ட்:
---------------------------
ஏழாவதாக வருகிறார் டேவிட் ஹில்பர்ட் (David Hilbert 1862-1943).
இவரும் ஜெர்மானியரே! கணிதவியல் தர்க்கம், நிரூபணக்
கோட்பாடு (proof theory). ஆகியவற்றின் அடிப்படைகளை
உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

யூக்ளிட்டின் வெளி (Eucledean space) என்பது வரம்புறு
பரிணாமங்களை (finite dimensions) உடையது. இதற்கு
மாற்றாக வரம்பற்ற பரிமாணங்களைக் கொண்ட
வெளியை உருவாக்கினார் ஹில்பர்ட். குவாண்டம்
இயற்பியலில் பெரிதும் பயன்படும் இவ்வெளி
ஹில்பர்ட்டின் வெளி (Hilbert's space) என்று அழைக்கப் படுகிறது.

1900ஆம் ஆண்டில், அக்காலத்தில் தீர்க்கப் படாமல் இருந்த
கணிதப் புதிர்களைத் தொகுத்து, 23 புதிர்களை வெளியிட்டார்
ஹில்பர்ட். இவற்றில் எட்டாவது புதிராக ரீமன் கருதுகோள்
இருந்தது. காலப்போக்கில் இவரின் 23 புதிர்களில் சில பல
தீர்க்கப் பட்டன. 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த
மில்லேனியத்தின் தொடக்கத்தில், தீர்க்கப்படாத புதிர்கள்
ஏழாகக் குறைந்து விட்டன. இவற்றைத் தீர்க்கக் கோரி
அமெரிக்காவின் கிளே நிறுவனம் (Clay Mathematical Institute)
பரிசு அறிவித்துள்ளதை முன்பத்திகளில் பார்த்தோம்.

உறுதி வாய்ந்ததும் முழுமையானதுமான தர்க்க அடித்தளத்தின்
மீது கணிதத்தை நிறுத்த வேண்டும் என்று கருதிய  ஹில்பர்ட்
அதற்காக ஹில்பர்ட் வேலைத்திட்டத்தை (Hilbert's programme)
உருவாக்கினார். பல்வேறு கணித நிபுணர்கள் இதில்
பணியாற்றினர். இத்திட்டம் முழுமையாக வெற்றி
அடையாவிடினும், கணினி அறிவியலுக்குத் தேவையான
கோட்பாட்டு அடித்தளத்தை அளித்தது. ஆலன் டூரிங்
(Alan Turing 1912-1954) போன்ற கணினி நிபுணர்களின்
கோட்பாட்டு ரீதியான வளர்ச்சிக்கு வித்திட்டது. 

ஹென்றி பாயின்கேர்:
----------------------------------
எட்டாவதாக வருகிறார் பிரெஞ்சுக் கணித மேதையான
ஹென்றி பாயின்கேர் (Henri Poincare 1854-1912). இவர் கணிதத்தின்
பல்துறைகளிலும் மேதைமை உடையவர். இடவியல் (topology),
அதிபரவளைய வடிவியல் (hyperbolic geometry), விண்பொருள்
விசையியல் (celestial mechanics), சிறப்புச் சார்பியல் உள்ளிட்ட
பல்வேறு துறைகளில் இவரின் பங்களிப்பு மகத்தானது.

பாயின்கேர் அனுமானம் (Poincare conjecture) என்பது கணித உலகில்
பெரும்புகழ் பெற்றது. 1904ல் இதை பாயின்கேர் உருவாக்கினார்.
இது என்னவென்று தெரிந்திடவும் புரிந்திடவும் உயர்கணிதத்தில்
போதிய பயிற்சி தேவை. இது ஜனரஞ்சக அறிவியலின்
(popular science) வரம்புக்கு அப்பாற்பட்டது. எனவே இக்கட்டுரை
பாயின்கேரின் அனுமானம் பற்றிய விளக்கத்தைத் தவிர்க்கிறது.

இந்த மில்லேனியம் வரை பாயின்கேரின் அனுமானம் நிரூபிக்கப்
படாமல் இருந்ததால், மில்லேனியத்தின் தீர்க்கப்படாத ஏழு
புதிர்களில் அது இடம் பெற்று இருந்தது. நூறு ஆண்டுகள்
கழித்து, 2003ல்  ரஷ்யக் கணித மேதையான
கிரிகோரி பெரல்மான் (Grigori Perelman) பாயின்கேரின்
அனுமானத்தை நிரூபித்தார். இந்த நிரூபணத்தை கணித உலகம்
ஏற்றது. இதற்கான பரிசை கிளே நிறுவனம் வழங்கியபோது, பரிசு தேவையில்லை என்று கூறி, பெற மறுத்து விட்டார் பெரல்மான்.     

யூக்ளிட்:
------------
ஒன்பதாவதாக வருபவர் கிரேக்க நாட்டில் அலெக்சாந்திரியாவில்
வாழ்ந்த யூக்ளிட்  (Euclid BCE 325-265). இவர் வடிவியலின் தந்தை
(Father of geometry) என்று போற்றப் படுகிறார். உலகப் பிரசித்தி
பெற்ற எலிமென்ட்ஸ் (Elements) என்ற நூலை இவர் எழுதினார்.

இந்நூல் 13 பாகங்களைக் கொண்டது. இது பொசமு (BCE) 300ல்
எழுதப் பட்டிருக்கக் கூடும். இதுவே மிகவும் தொன்மையான
கணித நூலாக இருக்கக் கூடும். இவரின் வடிவியல்
கொள்கைகளே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக,
19ஆம் நூற்றாண்டு வரை கணித உலகில் ஆட்சி செலுத்தின.
கணிதத்தில் இவரின் கறாரான தர்க்கம் இன்று வரை
கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

ஆரியபட்டர்:
----------------------
இறுதியாக வருபவர் பண்டைய இந்தியக் கணித மேதை
ஆரிய பட்டர் (Arya Bhatta CE 476-550). இவருடைய பிறப்பிடம்
குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. எனினும்
பாடலிபுத்திரத்தில் (இன்றைய பாட்னா) உயர் கல்வி கற்ற
இவர் அங்கேயே வாழ்ந்தார் என்று ஏற்பதற்கு நிறையச்
சான்றுகள் உள்ளன.

தமது 23ஆம் வயதில் இவர் எழுதிய நூல் ஆரிய பட்டியம்.
இது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இத்துடன் ஆரிய சித்தாந்தம் 
என்ற நூலையும் இவர் எழுதினார்.அது தொலைந்து போனது.

பையின் மதிப்பை நான்கு தசம இடங்களுக்குத் துல்லியமாகக் 
கண்டறிந்தது, பூமியின் சுற்றளவைக் கண்டறிந்தது, கிரகணங்கள் 
குறித்து சரியான அறிவியல் விளக்கம் அளித்தது, முக்கோணவியலில் 
கோணங்களில் சைன் மதிப்பு அட்டவணையை உருவாக்கியது,
இருபடிச் சமன்பாடுகளின் தீர்வுகள், வர்க்க மூலம் கனமூலம் 
கண்டறியும் வழிகள் என்று ஆரிய பட்டரின் பங்களிப்புகள் அதிகம்.

ஆரிய பட்டர், எண்களின் அமைப்பில்  இட மதிப்பை (place value) 
அறிமுகம் செய்தார். இது காலத்தை வென்று நிற்கிறது.
இவை எல்லாம்  இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே 
ஆரிய பட்டர் நிகழ்த்திய சாதனைகள் என்பது பெருமைக்குரியது.  
     
பட்டியல் உருவாக்கியது எப்படி?
---------------------------------------------------
ஆக உலகின் முதல் 10 கணித மேதைகளின் பட்டியலைத்
தயாரிக்கும் பணி இனிதே நிறைவுற்றது. எனினும் இப்பணி
எளிதானதல்ல. நூற்றுக் கணக்கான கணித மேதைகளை
அடையாளம் கண்டு, அவர்களின் பங்களிப்பைப் பரிசீலித்து,
வட்டத்தைச் சுருக்கிக் கொண்டே வந்து, இறுதியில்
இந்தப் பத்துப் பேரின் பட்டியலை இறுதி செய்துள்ளோம்.

2500 ஆண்டுகளுக்கு முந்திய பண்டைக் காலந்தொட்டு
இருபதாம் நூற்றாண்டு வரையிலான கணித மேதைகளை
அலசி ஆராய்ந்து இப்பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது.
இப்பட்டியல் கூறும் முதல் பத்துப்பேர் எக்காலத்துக்கும்
பொருந்தும் தலைசிறந்த கணித மேதைகள் ஆவர்.

பத்துப் பேரைத் தேர்ந்தெடுப்பதை விட, அவர்களை
வரிசைப் படுத்துவது கடினம். நியூட்டனின் பங்களிப்பு
எவரையும் விஞ்சும் என்ற போதிலும்,
நியூட்டன் காலத்தால் பிந்தியவர்; 17ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர் என்பதையும் கருத வேண்டும்.
ஆர்க்கிமெடிசோ கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர். இருவருக்கும் இடையிலான இடைவெளி 2000 ஆண்டுகள்.

2000 ஆண்டுகளின் அறிவியல் வளர்ச்சியின் ஆதாயங்களைப்
பெற்ற நியூட்டனையும், இது எதையுமே பெறாத ஆர்க்கிமெடிசையும்
சமதளத்தில் இருப்பவர்களாகக் கருத இயலாது.எனவே
ஆர்க்கிமெடிசுக்கு, தக்க எடையூட்டு (weightage) வழங்கப்பட்டு
அவர் முதலிடத்தில் வைக்கப் படுகிறார். இப்படி அமைகிறது
எமது modus operandi.

எவ்வளவோ முயற்சி செய்தும் ஆலன் டூரிங் (Alan Turing 1912-1954)
என்னும் இங்கிலாந்துக் கணித மேதையை இப்பட்டியலில்
சேர்க்க இயலவில்லை. முதல் பத்துக்கு வெளியே நிற்கிறார் அவர்.
அடுத்து, இந்த மில்லேனியத்தின் பட்டியல் இது என்பதால்,
21ஆம் நூற்றாண்டின் மேதைகள் இங்கு இடம்பெறவில்லை.

இந்தப் பட்டியல்  நியூட்டன் அறிவியல் மன்றத்தின் படைப்பு.
இதற்கான முழுப் பொறுப்பையும் மன்றம் ஏற்கிறது. இதன்
சரித்தன்மையை அங்கீகரித்து, தமிழ்ச் சமூகம் இப்பட்டியலை
ஏற்றுக் கொள்ளும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
நம்பிக்கை கொள்கிறது.

உலகின் முதல் 10 கணித மேதைகள்!
---------------------------------------------------------
1) ஆர்க்கிமெடிஸ் (கிரேக்கம்)
2) ஐசக் நியூட்டன் (இங்கிலாந்து)
3) கார்ல் காஸ் (ஜெர்மனி)
4) லியனார்டு ஆய்லர் (சுவிஸ்)
5) ஸ்ரீனிவாச ராமானுஜன் (இந்தியா)
6) பெர்னார்டு ரீமன் (ஜெர்மனி)
7) டேவிட் ஹில்பெர்ட் (ஜெர்மனி)
8) ஹென்றி பாயின்கேர் (பிரான்சு)
9) யூக்ளிட் (கிரேக்கம்)
10) ஆரிய பட்டர் (இந்தியா)
----------------------------------------------------

21ஆம் நூற்றாண்டின் கணித மேதைகள்!
----------------------------------------------------------------
சமகால உலகில் பல்வேறு பரிசுகள், விருதுகள், பதக்கங்கள்
வாயிலாக மேதைகள் அங்கீகரிக்கப் படுகிறார்கள். முந்தைய நூற்றாண்டுகளில் இல்லாத நடைமுறை இது.
மாபெரும் மேதைகள் எவரும் குடத்திலிட்ட விளக்காக
இன்று இருப்பதில்லை. எனவே 21ஆம் நூற்றாண்டின் கணித
மேதைகளை அடையாளம் காண்பதில் சிரமமில்லை.
விருதுகளின் தேர்வுக் குழுக்களே இவ்வேலையைச்
செய்து விடுகின்றன.

370 ஆண்டுகளாக நிரூபிக்கப் படாமல் கிடந்த  ஃபெர்மட்டின்
கடைசித் தேற்றத்தை நிரூபித்த ஆக்ஸ்போர்டு பல்கலைப்
பேராசிரியர் ஆண்ட்ரூ வைல்ஸ் (Andrew Wiles born.1953)
2016ஆம் ஆண்டுக்கான ஏபெல் பரிசைப் பெற்றார்.
நூறு ஆண்டுகளாக நிரூபிக்கப் படாத, பாயின்கேரின்
அனுமானத்தை நிரூபித்து அதற்கான பரிசை வென்றார்
ரஷ்யக் கணித மேதை கிரிகோரி பெரல்மான். இந்தச்
சாதனைகளின் மூலமாக 21ஆம் நூற்றாண்டின் கணித
மேதைகள் பட்டியலில் இவர்கள் எளிதாக இடம் பெற்று
விடுகின்றனர். மேதைகளின் பட்டியலைத் தயாரிப்பதை
மிகவும் எளிதாக்கி விட்டது 21ஆம் நூற்றாண்டு!
---------------------------------------------------------------------------------------------

 

 









 .




ஆளும் வர்க்கக் கட்சிகள் எவை, யாவை என்று
பார்ப்பதுதான் மார்க்சியப் பார்வை. ஆளும் கட்சி
எதிர்க்கட்சி என்று பார்ப்பது குட்டி முதலாளியப்
பார்வை. காங்கிரஸ் இன்று மத்தியில்
எதிர்க்கட்சியாக இருக்கலாம்; ஆனால் அது
ஆளும் வர்க்கக் கட்சி. திமுக தமிழ்நாட்டில்
எதிர்க்கட்சியாக இருந்த போது, எத்தனையோ முறை
மத்தியில் ஆளும் கட்சியாக இருந்துள்ளது.

பிரசித்தி பெற்ற கருணாநிதி கைதின் போது, திமுக
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால்
மத்தியில்  முரசொலி மாறன் அமைச்சராக இருந்தார்.
எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்கிற
குட்டி முதலாளியப் பார்வையைக் கைவிட்டு,
ஆளும் வர்க்கக் கட்சி, உழைக்கும் வர்க்கக் கட்சி
என்ற மார்க்சியப் பார்வையைக் கைக்கொள்ளவும்.

கடத்த 20 ஆண்டுகளாக அறிவியலையும்
பொருள்முதல்வாதத்தையும் பரப்பி வரும் ஒரே
அமைப்பு  நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.
எமது பங்களிப்பில் லட்சத்தில் ஒரு பங்கு கூட
வேறு யார் எவரும் அல்லது எந்த அமைப்பும்
எந்தக்  கட்சியும் செய்தது இல்லை. இது அறிவியல்
வட்டாரங்களிலும், பள்ளி கல்லூரி பல்கலைக்கழக
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும்
நன்கறிந்த செய்தி.


அறிவியலைப் பரப்பாமல் சமூகத்தில் உள்ள
மூட நம்பிக்கையை, மதத்தின் செல்வாக்கை
ஒருபோதும் ஒழிக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள
எந்தக் கட்சியோ அல்லது அமைப்போ, அறிவியலைப்
பரப்புவதில், நியூட்டன் அறிவியல் மன்றம் செய்ததில்
கொஞ்சமாவது செய்துள்ளது என்று நிரூபிக்க
முடியுமா?

பொருள்முதல்வாதம் பற்றிப் பேசுவதற்கு
அருகதை உள்ள அமைப்பு நியூட்டன் அறிவியல்
மன்றம் மட்டுமே. எனவே போலி நாத்திகர்களை
அடையாளம் கண்டு களையெடுக்கவும், மெய்யான
நாத்திகத்தைப் பரப்பவும், யாரெல்லாம் நாத்திகர்கள்
என்று சான்றிதழ் வழங்கும் பொறுப்பை நியூட்டன்
அறிவியல் மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. வேறு எந்த
அமைப்பும் போலி நாத்திகர்களை அடையாளம் கண்டு
களையெடுக்கத் தயாராக இல்லை. சோவியத் ரஷ்யாவில்
லெனின், ஸ்டாலின் காலத்தில் தீவிர ஆத்திகர்களும்
அவர்களை ஆதரிக்கும் போலி நாத்திகர்களும்
களையெடுக்கப் பட்டார்கள். இது போல்ஷ்விக்குகளின்
வரலாறு.

உங்களை போன்றவர்கள் செய்வது என்ன?
நீங்கள் அறிவியலைப் பரப்ப மாட்டீர்கள்.
பரப்புகின்ற எனக்கும் ஆதரவு அளிக்க மாட்டீர்கள்.
போலி நாத்திகர்களை நாங்கள் இழுத்துப் போட்டு
அடிக்கும்போது, குறுக்கே வந்து போலிகளைக்
காப்பாற்ற வருவீர்கள் என்றால், இது கடைந்தெடுத்த
பிற்போக்குத் தனம் ஆகும். கேவலம், திமுகவின்
போலி நாத்திகத்துக்கும் வாரிசு அரசியல் என்னும்
வருணாசிரமத்துக்கும் வக்காலத்து வாங்குவது
மார்க்சியம் ஆகாது. மாறாக அது மார்க்சியத்தை
இழிவு படுத்துவதாகும்.








  





      
இடஒதுக்கீடு என்றால் என்ன?
இந்தியாவில் முதன்முதலாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசு பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை 1902, ஜூலை 26 ல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் கோலாப்பூர் சமஸ்தான மன்னர் சத்ரபதி சாகுமகராஜா.
சாகு மகாராஜா இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததும் பார்ப்பனர்கள் மற்ற சமஸ்தான மன்னர்கள் இவரைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தந்து தொலைத்தால் என்ன செய்வது என அஞ்சினர். சமஸ்தான மன்னர்களிடம் இடஒதுக்கீடு திட்டத்தைப் பற்றி குறைகூறினர். மன்னர்களும் பார்ப்பனர்கள் குடைச்சல் கொடுத்தால் தாங்கமுடியாதே என்றும், பார்ப்பனரல்லாதார் இடஒதுக்கீடு கேட்டு போராடத்தில் இறங்கிவிடக்கூடாதே என்றும் கவலைப்பட்டனர். எனவே எப்படியாவது சாகு மகாராஜாவை மனம்மாற்றி இடஒதுக்கீட்டை கைவிட வைக்க சிலர் விரும்பினர். சங்லி எனும் சமஸ்தான மன்னர் பட்வர்தன் தன் பார்ப்பன வழக்கறிஞர் கண்பத்ராவ் அபயங்கர் என்பரை சாகு மகாராஜாவை கன்வின்ஸ் பண்ண அனுப்பினார். அபயங்கர் கோலப்பூர் சென்று சாகு மகாராஜாவை சந்தித்து "எங்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) ஏன் இத்தகு அநீதியை (பிற்பட்டோர் இடஒதுக்கீடு) இழைக்கிறீர்கள்?" என்று கேட்டார். இடஒதுக்கீட்டை கைவிடக் கோரிக்கை வைத்தார். சாகு பொறுமையாக அபயங்கள் சொல்வதைக் கேட்டார். பிறகு வாருங்கள் பேசிக்கொண்டே ஒரு முக்கிய இடத்துக்குக் செல்வோம் என வழக்கறிஞரை தன் குதிரைலாயத்திற்கு அமைத்துக் சென்றார். குதிரைகளுக்கு அது தீவனம் வைக்கும் நேரம். ஒவ்வொரு குதிரையின் வாயோடு தீவனம் வைக்கப்பட்ட கூடை பிணைக்கப்பட்டிருந்தது. அது அது அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. மகாராஜா எல்லா குதிரைகளின் முகத்தில் பிணைக்கப்பட்ட தீவனக் கூடைகளை கழட்டச்சொன்னார். பணியாளர்கள் உடன் கழட்டினர். இப்போது ஒரு விரிப்பை விரித்து அதில் தீவனத்தை கொட்டக் சொன்னார். பின் ஒரே நேரத்தில் குதிரைகளை அவிழ்த்துவிடச்சொன்னார். குதிரைகள் பாய்ந்து கொண்டு விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஓடின. வலிமையான குதிரைகளும் வளர்ந்த குதிரைகளும் பாய்ந்து ஓடி விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஆரம்பித்தன. நலிவுற்ற வலிமையற்ற குதிரைகள் தீவனத்தை உண்ண முயன்றும் வலிமையான குதிரைகள் நெட்டித் தள்ளியும் பின்னங்கால்களால் உதைத்தும் வலிமையற்றவையைத் துரத்தின.சிறிது நேரத்தால் நோஞ்சான் குதிரைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு ஒதுங்கி அமைதியாக நின்று தீவனத்தையே பார்த்தவண்ணம் இருந்தன. இதை எல்லாம் பார்ப்பன வழக்கறிஞர் அபயங்கர் பார்த்தார். இப்போது அபயங்கரிடம் சாகு மகாராஜா பேசத்தொடங்கினார். திரு.அபயங்கர், என்ன செய்யலாம் ? வலிமையற்ற குதிரைகளை சுட்டுக்கொன்றுவிடலாமா? அப்படி செய்வது சரியா? அதனால்தான் நான் எவ்வொரு குதிரைக்கும் அதற்கான தீவனத்தை அது மட்டுமே உண்ணும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்த ஏற்பாடு இல்லாமல் இப்போது பார்த்தோமே அது போல் தீவனத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு அனைத்து குதிரைகளுக்கும் போட்டியை உருவாக்கினால் வலிமையான குதிரைதான் ஜெயிக்கும். வலிமை இல்லாதது பட்டினி கிடக்கும். இதற்கு மாற்றாக நான் எவ்வொரு குதிரைக்கும் உரிய தீவனத்தை உத்ரவாதப்படுத்தும் ஏற்பாட்டுக்குப் பெயர்தான் இடஒதுக்கீடு. இந்த விலங்குகளுக்கான ஏற்பாட்டை நான் என் குடிமக்களுக்கு செய்கிறேன். நீங்கள் (பார்ப்பனர்கள்) மனிதர்களில் சாதியை உருவாக்கி சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் காலங்காலமாக விலங்குகளைப்போல நடத்தி வந்துள்ளீர்கள். இப்போது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைப் பெற அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன்" என்றார். அபயங்கரால் எதுவும் பேசமுடியவில்லை. மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டார்.
(சாகு மகாராஜா பற்றி நான் எழுதி வரும் சிறு நூலின் ஒரு பகுதி)
Devikapuram Siva.
கறுப்பர் கூட்டம் என்பது நாத்திகக் கூட்டம் அல்ல!
பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே
தெரியாத முழுமூடர் கூட்டமே கறுப்பர் கூட்டம்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
ஆர் எஸ் எஸ், பாஜக ஆசாமிகள் கறுப்பர் கூட்டத்தை
நாத்திகர் கூட்டம் என்று சொல்லி வருகிறார்கள்.
இது பெருந்தவறு.

மலத்தை பாதாம் அல்வா என்று கூறுவது எவ்வளவு 
முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனம் கறுப்பர்
கூட்டத்துக்கு நாத்திக அந்தஸ்து கொடுப்பதாகும்.

புழுவினும் இழிந்த பெரியார்தாசன் என்பவனைப்
பற்றி தமிழர்கள் அறிவார்கள். புழுத்த அரசியல்வாதி
கட்சி மாறுவது போல இவன் மதம் மாறினான்.
1. இந்து என்றான். 2.நாத்திகன் என்றான் 3.ஆதிசங்கரரைச் 
சிறப்பித்தான் 4. பௌத்த மதத்துக்கு மாறி வீ சித்தார்த்தா
என்று பெயர் வைத்துக் கொண்டான். 5. பின்பு அதிலும்
நிலைக்காமல் இஸ்லாம் மதத்துக்கு மாறி அப்துல்லா
என்று பெயர் வைத்துக் கொண்டான். கொஞ்ச காலத்தில்
செத்தும் போனான்.

பிரபல மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மருதையன்
இவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.  
இவன்தான் பிளக்கானாவ் என்றார். மகஇக மாநாடுகளில்
பெரும் தத்துவ ஆசிரியனாக இவனை அழைத்து வந்து
சிம்மாசனத்தில் அமர வைத்தார் மருதையன். கடைசியில்
இவன் மருதையனின் தலையில் மலம் கழித்தான்.

தவறான நபரை அறிமுகம் செய்து மக்களுக்குத்
தவறான வழிகாட்டியமைக்காக மக்களிடம்
மகஇகவும் மன்னிப்புக் கேட்கவில்லை. மருதையனும் 
தன் தலையில் வழிந்த மலத்தைத் துடைக்கவும் இல்லை.

இதையெல்லாம் ஏன் இங்கு சொல்கிறோம் என்றால்,
இன்று கறுப்பர் கூட்டத்தை நாத்திகர்கள் என்று
தவறாக உணரும் மூடர்கள் நாளைக்கு மருதையனைப்
போல அவமானப்  படவேண்டியது வரும்.

பொருள்முதல்வாத அறிவு இல்லாத எவரும்
பொருள்முதல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாத எவரும்
நாத்திகர்களோ கடவுள் மறுப்பாளர்களோ
கிடையாது. எனவே கறுப்பர் கூட்டம் ஒரு மூடர்
கூட்டமே தவிர, நாத்திகக் கூட்டம் ஆகாது.

கறுப்பர் கூட்டத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும்
ஸ்நானப் பிராப்தி கிடையாது. இதை ஆர் எஸ் எஸ்
ஆசாமிகள் மட்டுமல்ல, மற்றவர்களும் நன்கு உணரட்டும்.

தமிழ்நாட்டில் அறிவியல் வழிப்பட்ட கடவுள் மறுப்பை
பொருள்முதல்வாத வழியிலான கடவுள் மறுப்பை
ஏற்றுக் கொண்டுள்ள பின்பற்றுகிற ஒரே அமைப்பு
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே. மற்றப்படி
கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய லெனினியக் கட்சிகளில்
உள்ள ஒரு சிலர் ( நன்கு கவனிக்கவும்: ஒரு சிலர்)
சற்று மாற்றுக குறைந்த பொருள்முதல்வாதிகளாக
உள்ளனர். இவர்களைத் தவிர வேறு யார் எவரும்
தமிழ்நாட்டில் நாத்திகர்களோ பொருள்முதல்வாதிகளோ
கிடையாது.

யார் நாத்திகர் என்று பரிசீலித்து சான்றிதழ் வழங்கும்
பொறுப்பை நியூட்டன் அறிவியல் மன்றம் ஏற்றுக்
கொண்டுள்ளது. அத்தகைய சான்றிதழ் வழங்குவதற்கான
உரிமையும் அருகதையும் உள்ள ஒரே அமைப்பு
இந்தியாவில் நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.

பொருள்முதல்வாதமற்ற எந்த ஒரு நாத்திகமும்
போலி நாத்திகமே. தமிழ்நாட்டில் இயங்கி வரும்
பல்வேறு திராவிட இயக்கங்கள் மற்றும் பெரியாரிய
அமைப்புகள் அனைத்தும் பொருள்முதல்வாதமற்ற
அமைப்புகளே. அவை யாவும் போலி நாத்திக
அமைப்புகளே.

தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்
நிறுவனர், தலைவர்: நியூட்டன் அறிவியல் மன்றம்.
சென்னை நாள்: 23.07.2020.
***********************************************************    

 ஊர் ஊராகச் சென்று பசுமாட்டின் மூத்திரத்
துவாரத்தைத் தொட்டு வணங்கி கோமியம்
குடிப்பார் துர்கா ஸ்டாலின். மு க ஸ்டாலினோ
பகுத்தறிவு பேசி ஊரை ஏமாற்றுவார். இதெல்லாம்
போலி நாத்திகம்.



 

   


செவ்வாய், 21 ஜூலை, 2020


பிருந்தாவன விதவைகளும் SOC விதவைகளும்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
ஆண்டு 2002. திருபாய் அம்பானி செத்துப் போனார்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சொத்துத்
தகராறு! அடித்துக் கொண்டனர் முகேஷும் அனிலும்!
துடிதுடித்துப் போனார் ப சிதம்பரம். மத்தியஸ்தத்தில்
இறங்கினார்.

இன்று ஆண்டு 2020! அம்பானி குழுமத்தின் நியூஸ் 18
தொலைக்காட்சி, தன் ஊழியர்களில் சிலர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது! துடித்துப் போகிறார்
மருதையன்! பிரபல முன்னாள் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு!

மாதம் ரூ 4 லட்சம் சம்பளம் வாங்கும் குணசேகரன்
என்னும் நியூஸ் 18 ஊழியரிடம் இருந்து சில பொறுப்புகள்
நீக்கப் பட்டு இருக்கின்றன. துடித்துப் போகிறார் மருதையன்!
ஆர் எஸ் எஸ் பூச்சாண்டி காட்டி, அம்பானியின் கைக்கூலி
குணசேகரனை ஆதரிக்கச் சொல்கிறார் மருதையன்.
இந்த விவகாரத்தைப் பேசும்போது, மாதம் ரூ 4 லட்சம்
சம்பளம் வாங்குவதை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.

குணசேகரனோ அவரது கூட்டாளிகளோ மார்க்சிஸ்டுகள்
அல்லர். கேவலம் குட்டி முதலாளித்துவ அற்பர்கள்.
தனியுடைமைச் சிந்தனையில் இருந்து அணுவளவும்
விடுபடாதவர்கள். அவர்களை ஆதரிப்பதும் அம்பானியை
ஆதரிப்பதும் ஒன்றுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் நவீனா
என்ற சிறுமி செந்தில் என்ற கயவனால் உயிருடன்
எரித்துக் கொல்லப் பட்டாள். பத்ரி சேஷாத்ரி,
சிவகாமி ஐஏஎஸ் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு சிறுமி
நவீனா எரித்துக் கொல்லப்படக் காரணமாக இருந்த
கயவன் இந்த குணசேகரன். ஒரு கொலைகாரப் பாவியை
ஆதரிக்கச் சொல்லி அறைகூவல் விடுக்கிறார் மருதையன்!  

வீரமணி தலைமையில் இயங்கும் திகவின் லட்சம் கோடி
ரூபாய்  மதிப்புள்ள அறக்கட்டளையின் உறுப்பினராக
இருக்கும் கலி பூங்குன்றனின் மருமகன் இந்த
குணசேகரன்.

தமிழ்நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சி நடந்து, புதிய
ஜனநாயக அரசை அமைத்த பிறகு, பல லட்சம் கோடி
ரூபாய் மதிப்புள்ள திக அறக்கட்டளையின்
சொத்துக்களை தேசவுடைமை ஆக்க வேண்டி
இருக்கும் அல்லவா? அப்போது அதற்கு குணசேகரன்
ஆதரவு தருவாரா? அல்லது எதிர்ப்பாரா? நிச்சயம்
எதிர்த்துத்தான் நிற்பார்! அப்போது அவரை மக்கள்
மத்தியில் தூக்கில் இடுவதைத் தவிர புரட்சியாளர்களுக்கு
வேறு என்ன வாய்ப்பு இருக்கப் போகிறது?

எதிர்காலத்தில் தூக்கிலிடப் பட வேண்டிய ஒருவரை
இப்போது ஆதரிப்பதற்கு அப்படி என்ன புரட்சிகரமான
காரணங்கள் இருக்கின்றன மருதையன் அவர்களே!

வெளிப்படையாக சொல்லத்தக்க காரணம் எதுவும்
இதற்கு இல்லை என்பது மருதையனின் பலவீனம். ஆனால்
அதுவே நமது பலம்! மக்களின் பலம்!

இதுவரை கட்சியில் இருந்தார் மருதையன். அதுவும்
முழுநேர ஊழியராக இருந்தார். அதற்காக அவருக்கு
கட்சி சம்பளம்  வழங்கியது. அவருடைய தேவைகளைக்
குறைவின்றி கட்சி நிறைவேற்றி வைத்தது.

தற்போது மருதையன் கட்சியில் இல்லை. கட்சியில்
இருந்து விலகி விட்டார். அல்லது விலக்கப் பட்டு விட்டார்.
(SOCயில் செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும்
வேறுபாடு பார்க்க மாட்டார்கள்). கட்சியில் இருந்து
இனிமேல் அவருக்கு சம்பளம் எதுவும் கிடைக்காது.

அவரும் அவரின் துணைவியாருமாக இருவர் கொண்ட
குடும்பத்திற்கு குறைந்தது மாதம் ரூ 30,000 செலவாகும்.
(அவருக்கு மனைவியா? என்று கேட்டு யாரும் புருவத்தை
நெறிக்க வேண்டாம்! மணிவிழா வயதில் மணம் செய்து
கொண்டு கின்னஸ் சாதனை புரிந்தவர் மருதையன்).

நுகர்வை மறுக்கிற, சுகங்களை மறுக்கிற மனப்பான்மை
கொண்டவர்தான் மருதையன். என்றாலும் வீட்டு வாடகை,
மளிகைச் சாமான், காய்கறி, மருத்துவம் என்று குடித்தனம்
நடத்துவதற்கான மாதச் செலவு ரூ 30,000 ஆகிவிடும்.
இந்த ரூ 30,000ஐ சம்பாதிக்கும் உடல்நிலையோ
மனநிலையோ திறமையோ மருதையனிடம் தற்போது
கிடையாது. சாற்றைப் பிழிந்து கொண்ட பின்பு, சக்கையாக
வெளியே வீசப்பட்ட ஒருவரிடம் சம்பாத்தியம் பண்ணும்
சக்தியோ மனப்பாங்கோ கிடையாது. எனவே இந்தச்
சூழலில், கையறு நிலையில் உள்ள மருதையன்
தனது வாழ்நிலை சார்ந்து எடுக்கிற முடிவுகளை
விமர்சிக்க விரும்பவில்லை. கோடீஸ்வர குணசேகரனைச்
சார்ந்துதான் மருதையன் வாழவேண்டி இருக்குமென்றால்,
அது மருதையனின் குற்றம் அல்ல.

தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்தைத் தோற்றுவித்த
மூவரில் மூத்தவர் புலவர் கலிய பெருமாள். பல
ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாடத்திலோ
தருமபுரியிலோ அவர் காய்கறி விற்றுச் சம்பாதித்து
தன் வாழ்க்கையை ஓட்ட வேண்டி இருந்தது. அவர்
காய்கறி விற்கும் காட்சிகள் குமுதம் ஏட்டில் வெளியாயின.

SOCயில் இருந்து வெளியேற்றப் பட்ட துரை சண்முகத்தின்
நிலையும் இறங்காத தக்கதாகவே உள்ளது. பிருந்தாவன
விதவைகளின் வாழ்க்கை போன்றதுதான்
SOC விதவைகளின் வாழ்க்கையும்.

degeneration என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு.
உணவுப்பண்டங்கள் ஊசிப்போவதைக் கூட
degenerate ஆகிவிட்டன என்று சொல்லலாம். மருதையன்
போன்றவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே degenerate
ஆகி விட்டவர்கள். மருதையன் மட்டுமல்ல, SOC
அமைப்பும் DEGENERATE ஆகி ஆண்டுகள் ஓடிவிட்டன.

SOC is no more a Marxist Leninist party! It has turned into a radical
Dravidian party! So are its leaders and Marudhaiyan is no exception.
****************************************************************






குணசேகரன் என்ன லெனினா அல்லது
சே குவேராவா? IQ குன்றிய ஒரு குட்டி முதலாளித்துவ
எடுபிடியால் அம்பானியை எதிர்த்து என்ன செய்ய
முடியும்? கார்ப்பொரேட் ஊடகமான நியூஸ் 18ல்
குணசேகரனுக்கு அப்படி என்ன சுயேச்சையாகச்
செயல்படும் அதிகாரம் இருக்கிறது? ஒரு புண்ணாக்கும் 
கிடையாது. மருதையன் வீண் பிரமையில் மூழ்கிக்
கிடக்கிறார். குட்டி முதலாளித்துவ குணசேகரன்
மருதையனுக்கு சே குவராவாகத் தெரிகிறார். இது
எங்கு இட்டுச் செல்லுமெனில், நாளை தமிழக
உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவர் பதவிக்கு
மருதையன் போட்டி போடுவதில் போய் முடியும்.











  


 


திங்கள், 20 ஜூலை, 2020

2000 ஆண்டுகளுக்கு முன்பே
பூமியின் சுற்றளவைக் கண்டறிந்தது எப்படி?
------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ஒரு லட்டு உங்கள் கைக்குள் அடங்குகிறது.
எலுமிச்சம் பழமும் கிரிக்கெட் பந்தும் அப்படியே.
ஆனால் கால்பந்து ஒரு கையில் அடங்காது. இரண்டு
கைகளாலும் அதைப் பிடித்துக் கொள்ளலாம்.
இவையெல்லாம் கோள (sphere) வடிவங்கள்.நமது
பூமியும் சற்றேறக்குறைய ஒரு கோளம்தான்.
ஒரு ராட்சச மனிதனைக் கற்பனை செய்யுங்கள்.
அவன் தன் இரண்டு கைகளாலும் முழு பூமியையும்
கட்டிப் பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். 
அதாவது அவனின் இரண்டுகைகளின் நீளத்தையும் சேர்த்தால்  
பூமியின் சுற்றளவு (circumference) கிடைத்து விடுகிறது அல்லவா!
அப்படியானால், அவனின் ஒவ்வொரு கையும்  எவ்வளவு 
நீளமாக இருக்க வேண்டும்? 

எந்தப் புத்தகத்திலாவது இதற்கு விடை இருக்கிறதா
என்று தேட வேண்டாம். நீங்களே இதற்கு விடை
காணலாம். கணிதத்தில் ஓரளவு எளிய அறிவு
இருந்தால், நாமே பூமியின் சுற்றளவைக்
கணக்கிடலாம். இதற்கு ஒரே ஒரு விவரம் மட்டுமே
தேவை. அதாவது பூமி என்ற கோளத்தின் ஆரம்
என்ன என்று தெரிய வேண்டும்.
பூமியின் சராசரி ஆரம் (mean radius of earth) = 6371 கி.மீ.
பூமத்திய ரேகையின் அடிப்படையில் கணக்கிட்டால்,
பூமியின் ஆரம் (equatorial radius) = 6378 கி.மீ ஆகும்.
வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் இடையிலான
தூரத்தின் அடிப்படையில், பூமியின் ஆரத்தைக்
கணக்கிட்டால், ஆரம் (polar radius) = 6356 கி.மீ ஆகும்.
பூமத்திய ரேகைப்படியான ஆரத்தை விட, துருவ ஆரமானது
சற்றுக் குறைவாக இருப்பதை கவனியுங்கள்.
ஏனெனில், துருவங்களில் பூமி தட்டையாக
இருக்கிறது. எனவேதான் ஆரம் குறைகிறது.
அதே நேரத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியானது 
சற்றே வீங்கி இருப்பதால், ஆரம் அதிகமாக இருக்கும்.
அதாவது பூமி என்பது ஒரு முழு நிறைவான
கோளம் அல்ல (not a perfect sphere).
சரி, இப்போது பூமிக் கோளத்தின் ஆரம் கிடைத்து
விட்டது. இந்த ஆரம் ஒரு வட்டத்தை
உருவாக்குகிறது.
அந்த வட்டத்தின் சுற்றளவே பூமியின் சுற்றளவு ஆகும்.
வட்டத்தின் சுற்றளவு = 2 x pi x r
= 2 x 3.14 x 6371 km
= 40010 கி.மீ
அதாவது பூமியின் சுற்றளவு 40,000 கிமீ (rounded figure).

முன்பத்தியில் கூறப்பட்ட ராட்சச மனிதனின்
ஒவ்வொரு கையும் 20,000 கி.மீ நீளம் இருந்தால்,
அவனால் தன் இரண்டு கைகளையும் பயன்படுத்தி
பூமியை முழுவதுமாகக் கட்டிப் பிடிக்க முடியும்.
சரி, பூமியின் சுற்றளவு நாற்பதாயிரம் கி.மீ என்று
அறிந்து கொண்டோம். சந்திரனின் சுற்றளவு என்ன?
10,910 கி.மீ ஆகும். அதாவது பூமியின் சுற்றளவில்
தோராயமாக கால் பாகமே ஆகும்.

முதன் முதலில் கண்டறிந்த எரோட்டஸ்தீனஸ்!
-------------------------------------------------------------------------
ஆக மிக எளிதாக நம்மால் இன்று பூமியின் சுற்றளவைக் கண்டுபிடிக்க
முடிகிறது. ஒரு பள்ளிச் சிறுவனால் இதைச் செய்ய இயலும். எனினும்
இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்க அறிஞர்
எரோட்டஸ்தீனஸ் (Erotesthenes BCE 276-194) என்பவர் பூமியின் சுற்றளவை
மிகவும் துல்லியமாகக் கண்டறிந்தார். இது பெரும் வியப்புக்கு உரியது.
பூமியின் சுற்றளவை முதன் முதலில் கண்டறிந்த பெருமைக்கு உரியவர்
இவரே. இவர் கண்டறிந்தபடி பூமியின் சுற்றளவு 39,375 கிமீ ஆகும். இது 
இன்றைய நவீன மதிப்பீடான 40,075 கிமீக்கு மிகவும் நெருக்கமானது.


இன்று பள்ளி மாணவர்கள் அட்லாஸ் (Atlas)
எனப்படும் உலக வரைபடப் புத்தகம் வைத்து
இருக்கிறார்கள். எரோட்டஸ்தீனஸ் காலத்தில்,
அதாவது 2200 ஆண்டுகளுக்கு முன்பு, உலக வரைபடம்
(world map) என்று எதுவும் கிடையாது. இல்லாத ஒன்றைப்
புதிதாக உருவாக்க விரும்பினார் எரோட்டஸ்தீனஸ்.

இதற்கான வாய்ப்புகளை வரலாறு அவருக்குக் குறைவின்றி 
வழங்கி இருந்தது. எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் உள்ள மாபெரும்
நூலகத்தின் தலைவராக (Librarian) இருந்தார் எரோட்டஸ்தீனஸ்.
அதன் மூலம் அறிவின் திறவுகோல்களை அவர் தம்மிடம்
வைத்திருந்தார்.

எல்லா ஊர்களின் புவியியல் சார்ந்த தரவுகள்,
நில அளவுகள் (land survey and geographic details) ஆகியன
அந்நூலகத்தின் வாயிலாக அவருக்குக் கிடைத்தன. தேவையான விவரங்கள் அனைத்தையும் நூலகத்தின் தலைவராக இருந்தமையால்  அவரால் 
தம் விரல்நுனியில் பெற முடிந்தது.    

மேலும் அவர் காலத்தில் பூமி உருண்டை என்று நிறுவப்பட்டு மக்களால்
நன்கறியப்பட்ட உண்மையாக அது விளங்கியது. பூமி உருண்டை 
என்ற கருத்தை முதன் முதலில் பொ ச மு 500களிலேயே முன்மொழிந்தவர்  
பித்தகோரஸ் ஆவார். பின்னர் அரிஸ்டாட்டில் 
பொசமு 350களில் பூமி உருண்டை என்பதை தமது நூலில் 
பதிவு செய்தார். கிரகணங்களின்போது சந்திரன், பூமி 
ஆகியவற்றின் நிழல் வட்டவடிவமாக விழுவதில் இருந்து 
பூமி உருண்டை என்பது கிரேக்கர்களால் உறுதி செய்யப்பட்டது.
அரிஸ்டாட்டிலுக்கு  காலத்தால் பிந்திய எரோட்டஸ்தீனஸ், பூமி உருண்டை
என்பது உறுதியானதால் வானியல் ரீதியாக சௌகரியமான ஒரு நிலையில்
இருந்தார். 

ஒரு உலக வரைபடம் தயாரிக்க விரும்பிய எரோட்டஸ்தீனசுக்கு
பூமியின் சுற்றளவு என்ன என்று தெரிந்து கொள்ள
வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன்படியே அவர் பூமியின்
சுற்றளவைக் கண்டறிந்தார். அதைக் கண்டுபிடித்தது
எப்படி என்றும் விரிவாக ஒரு நூலில் அவர்
பதிவு செய்திருந்தார். கெடுவாய்ப்பாக அந்நூல்
இன்று கிடைக்கவில்லை; அழிந்து விட்டது. எனினும் கிரேக்க வரலாற்று
ஆசிரியர்கள், எரோட்டஸ்தீனஸின் சமகால எழுத்தாளர்கள்
ஆகியோரின் குறிப்புகளில் இருந்து, எரோட்டஸ்தீனஸ் பூமியின்
சுற்றளவை எப்படிக் கண்டறிந்தார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

மறைந்த அறிவியல் எழுத்தாளர் காரல் செகன் தமது காஸ்மாஸ்
என்ற நூலில் (The Cosmos) எரோட்டஸ்தீனசின் இச்சாதனையைக்
குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனை செய்தது எப்படி?
------------------------------------------------
எரோட்டஸ்தீனசின் பரிசோதனையில் இரண்டு
ஊர்கள் பங்கேற்றன. செயீன், அலெக்சாந்திரியா
ஆகிய இரண்டு ஊர்களே அவை. இவை அன்றைய எகிப்தில்  
உள்ள ஊர்கள். இவை முற்றிலும் தற்போக்காகத் (randomly) 
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்கள் அல்ல. Made for each other தம்பதிகளைப் 
போன்று இவ்விரு ஊர்களையும் தெரிவு செய்திருந்தார்
எரோட்டஸ்தீனஸ்.

அலெக்சாந்திரியா வட எகிப்திலும், செயீன் (Syene) தெற்கு எகிப்திலும் 
உள்ள ஊர்கள். இவ்விரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரம் 
787 கிமீ ஆகும். இவ்வூர்களை திருநெல்வேலி, சென்னைக்கு 
ஒப்பிடலாம். திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு,
மணியாச்சி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், 
செங்கல்பட்டு வழியாக சென்னைக்கு வந்து சேர்வது போன்றதே  
தெற்கிலுள்ள செயீனில் இருந்து வடக்கில் உள்ள அலெக்சாந்திரியாவுக்கு  
வந்து சேர்வதாகும்.
   
இவ்விரு ஊர்களுக்கும் இடையிலான பிற ஊர்களின் 
நில அளவைத் தரவுகள் உள்ளிட்ட
தேவையான பிற புவியியல் தரவுகள் அனைத்தும்
அவர் தலைவராக இருந்து செயல்பட்ட நூலகத்தில்
இருந்து அவருக்குக் கிடைத்தன. அவற்றை அவர் முழுமையாகப் 
பரிசீலித்து, செயீன், அலெக்சாந்திரியா ஆகிய இரு ஊர்களையும் 
தமது பரிசோதனையின் களங்களாகத் தெரிவு செய்தார்.   

பரிசோதனைக்கு உரிய நாளாக கோடைகால கதிர்த்திருப்ப 
நாளை (summer solstice) எரோட்டஸ்தீனஸ் தேர்வு செய்தார்.
வானியல் ரீதியாக ஒவ்வொரு ஆண்டிலும் நான்கு நாட்கள்
மிகவும் முக்கியமானவை. இரண்டு சம இரவு நாட்கள்
(Vernal equinox and autumnal equinox) மற்றும் இரண்டு
கதிர்த்திருப்ப நாட்களே அவை (summer and winter solstices).
கதிர்த் திருப்ப நாட்களை அடையாளம் கண்டு அவற்றின்
அடிப்படையிலேயே பண்டைக் காலத்தில் புத்தாண்டை
நிர்ணயம் செய்வது மற்றும் காலண்டரை நிர்ணயம் செய்வது
ஆகிய செயல்கள் நடைபெற்றன.

பூமியில் இருந்து பார்க்கும்போது, நமக்குத் தோன்றுகின்ற
சூரியனின் பாதையில் (apparent path of the sun)
வடக்கு அல்லது தெற்கு என ஒரு எல்லைக்குச் சென்று விட்ட
சூரியன் அங்கிருந்து திசைமாறித் திரும்புவதே கதிர்த் திருப்பம் ஆகும்.


செயீன் என்ற ஊரில் கோடைகால கதிர்த்திருப்ப நாளன்று 
(summer solstice) உச்சி வேளையில் சூரியனின் நிழல் தரையில் 
விழுவதில்லை என்ற நிகழ்வு எகிப்தில் பிரசித்தம்.
இது ஆண்டுதோறும் நிகழ்கிற நிகழ்வு என்பதால், செயீனைத்
தாண்டிய பிற ஊர்களிலும் இச்செய்தி நன்கு பரவி இருந்தது.
எரோட்டஸ்தீனஸின் வானியல் மூளையில் இது பெரும்
முக்கியத்துவம் உடைய நிகழ்வாகப் பதிந்து இருந்தது.

நிழலின் கோணத்தை அளத்தல்!
--------------------------------------------------
செயீனில் உச்சி வேளையில் தரையில் நடப்பட்ட ஒரு குச்சியின்
நிழல் தரையில் விழுவதில்லை என்பதன் பொருள்
அந்நிழலானது உருவாக்கும் கோணம் பூஜ்யம் டிகிரி என்பதே.
இது நன்கு நிறுவப்பட்ட மற்றும் தயார்நிலையில்
உள்ள தரவும் (well established and ready made) ஆகும். இதை
எடுத்துக் கொண்டார் எரோட்டஸ்தீனஸ்.

அடுத்து இன்னும் ஒரே ஒரு தரவு அவருக்குத் தேவை.
அதை அலெக்ஸாந்திரியாவில் இருந்து பெற வேண்டும்.
அது அவர் வாழும் ஊர். எனவே எரோட்டஸ்தீனஸ்
தம்மூரில், அதே கதிர்த்திருப்ப நாளன்று, ஒரு குச்சியைத் தரையில்
நட்டார். அதன் நிழலைக் கண்காணித்தார். காலை 10 மணிக்கே
குச்சியை நட்டு விட்டால், வெயில் ஏற ஏற குச்சியின் நிழலானது
நீளத்தில் குறைந்து கொண்டே வரும்.

உச்சி வேளையின்போது, நிழலின் நீளம்  மிக மிகக் குறைவாக
இருக்கும்போது,நிழலின் கோணத்தை அளந்தார் எரோட்டஸ்தீனஸ்.
அது 7.2 டிகிரி என்று காட்டியது. அவ்வளவுதான் பரிசோதனை
வெற்றிகரமாக முடிவுற்றது. இனி கணக்கீடுதான்(calculation).

பூமியை ஒரு வட்டமாகக் கருதினார் எரோட்டஸ்தீனஸ். அந்த
வட்டத்தின் பரிதியில் உள்ள புள்ளிகளாக (points on the circumference)
ஊர்களைக் கருதினார். செயீனும் அலெக்ஸாந்திரியாவும்
அவ்வட்டத்தின் பரிதியில் உள்ள புள்ளிகள். இவற்றுக்கு
இடையிலான கோண வேறுபாடு 7.2 டிகிரி.

செயீன் (S), அலெக்ஸாந்திரியா (A) ஆகிய இரண்டு புள்ளிகளும்
வட்டத்தின் மையத்துடன் (O) ஏற்படுத்திய கோணம் அதாவது
கோணம் SOA 7.2 டிகிரி ஆகும். வட்டத்தின் மொத்தக் கோணமான
360 டிகிரியில் இது 50ல் ஒரு பங்கு  (50 x 7.2 = 360). இவ்விரு ஊர்களுக்கும்
இடையிலான தூரம் 787 கிமீ ஆகும். இந்த 787 கிமீ என்பது
வட்ட வில்லின் நீளம் (length of the arc) ஆகும்.

OSA என்பது ஒரு வட்டக் கோணப்பகுதி (sector of the circle) ஆகும்.
செயீன்-அலெக்சாந்திரியா இடையிலான கோணம் = 7.2 டிகிரி
இரு ஊர்களுக்கு இடையிலான தூரம் = 787 கிமீ.
எனவே மொத்தப் பரிதி = 787 x 50 = 39,350 கிமீ.           
அதாவது பூமியின் சுற்றளவு = 39,350 கிமீ.

இவ்வாறு எரோட்டஸ்தீனஸ் பூமியின் சுற்றளவைக் கண்டறிந்து
வரலாற்றில் இடம் பெற்றார். (தற்கால மதிப்பில் பூமியின்
சுற்றளவு 40,075 கிமீ ஆகும். செயற்கைக் கோள்களின் மூலம்
துல்லியமாக அளக்கப் பட்டது இது). தோராயமாக பொசமு 240
ஜூன் மாதத்தில் எரோட்டஸ்தீனஸ் பூமியின் சுற்றளவைக்
கண்டறிந்ததாக அனுமானிக்கப் படுகிறது. எனினும் இந்தப்
பரிசோதனை ஒரே நாளில் முடிந்து விட்டதல்ல. குறைந்தது
ஒரு சில ஆண்டுகளின் கடின உழைப்பின் விளைபொருளாகவே
இப்பரிசோதனையின் வெற்றியைப் பார்க்க வேண்டும்.

தூரத்தை அளப்பது கடினம்!
--------------------------------------------
இந்தப் பரிசோதனையின் மிகக் கடினமான பகுதி
செயீன், அலெக்சாந்திரியா ஆகிய இரு ஊர்களுக்கும்
இடையிலான தூரத்தைத் துல்லியமாகக் கண்டறிவதே.
 ஒட்டக வண்டிகள் இரண்டு ஊர்களைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கொண்டுதான் தூரத்தை அன்று அளந்தனர். இது பெரிதும் தோராயமான
ஒரு முறை.

எனவே எரோட்டஸ்தீனஸ், பயிற்சி பெற்று தொழில்முறையில்
(professional) ஒரு சீராக அடி எடுத்து வைக்கும் பணியாளர்களின் 
உதவியை நாடினார். நிலஅளவை, நிலத்தின் வரிவசூல்
ஆகியவற்றுக்காக அக்காலத்தில் அரசாங்கமே இத்தகைய
தொழில்முறை ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பணியில்
அமர்த்தி இருந்தது.அடுத்தடுத்த தோராயங்களுக்குப் பின்,
(after successive approximations) இறுதியில் செயீன் அலெக்சாந்திரியா
ஆகிய ஊர்களுக்கு இடையிலான தூரம் 787 கிமீ என்ற முடிவுக்கு
அவர் வந்தார். இதில் அவருக்குக் கிடைத்த துல்லியமே பூமியின்
சுற்றளவை அளப்பதில் அவருக்கு வெற்றி தேடிக் கொடுத்தது.

கணக்கிடுதலின்போது, சில தரவுகளைப் பொறுத்து எரோட்டஸ்தீனஸ்
மேற்கொண்ட அனுமானங்கள் பிழையானவை என்று பின்னர்
தெரிய வந்தது. உதாரணமாக செயீன், அலெக்சாந்திரியா
ஆகிய ஊர்கள் எந்தத் தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன
என்று முடிவ செய்வதில் அவரின் அனுமானங்கள்
பிழையானவையாக இருந்தன. என்ற போதிலும் அவரின்
பரிசோதனை முறைமையானது அடிப்படையில் பிழையற்றது
என்பதால், இத்தகைய பிழையான அனுமானங்கள் பரிசோதனை
முடிவுகளின் துல்லியத்தைப் பாதிக்கவில்லை.  

எரோட்டஸ்தீனசுக்குப்  பிந்தியவரான, இதே எகிப்து நாட்டைச்
சேர்ந்த தாலமி (Claudius Ptolemy) கிபி 2ஆம் நூற்றாண்டில்,
பூமியின் சுற்றளவைக் கண்டறிவதில் படுதோல்வி அடைந்தார்.
தாலமியின் கணக்குப்படி, பூமியின் சுற்றளவு வெறும் 25,750 கிமீ.
இது மிகவும் பிழையான கணக்கீடு ஆகும். பூமியின் மெய்யான
சுற்றளவை விட (40,075 கிமீ) தாலமியின் கணக்கு மிகவும் குறைவாகும்.
இதைப் பார்க்கும்போது, மிகுந்த துல்லியத்துடன் பூமியின் சுற்றளவை
முதன் முதலில் கணக்கிட்ட எரோட்டஸ்தீனசின் மேதைமை நன்கு
புலப்படுகிறது. எரோட்டஸ்தீனசின் சாதனைகள் இதைத் தாண்டியும்
விரிகின்றன. எனினும் அவற்றை விவரிப்பது இக்கட்டுரையின் வரம்புக்கு
அப்பாற்பட்டது.

ஆரியபட்டரின் மதிப்பீடு!
--------------------------------------
இந்தியக் கணித அறிஞர் ஆரிய பட்டர் (பொச 476-550) பூமியின் சுற்றளவை
அசாத்தியமான துல்லியத்துடன் மதிப்பிட்டுள்ளார். அவரின் கணக்குப்படி
பூமியின் சுற்றளவு 39,968 கிமீ ஆகும். இன்றைய நவீன மதிப்பீடான
40,075 கிமீ என்பதுடன் 39,968 கிமீயை ஒப்பு நோக்கினால்,
பிழை வெறும் 0.24 சதவீதம் மட்டுமே. இப்பிழை  எவ்விதத்திலும்
பொருட்படுத்தத் தக்கதல்ல.

ஆரிய பட்டர் எழுதிய ஆரியபட்டியம் என்ற நூலில், பூமியின் விட்டம்
1050 யோஜனை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதைக் கொண்டு
சுற்றளவைக் கணக்கிட்டால் அது 3300 யோஜனை என்று வருகிறது.
வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிட ஆரிய பட்டரின்
மிகத் துல்லியமான "பை"யின் மதிப்பு (3.1416) பயன்படுத்தப்
பட்டது. ஆரியபட்டரின் யோஜனை என்ற அளவுக்கும்
அவரின் மதிப்பீடான பூமியின் விட்டத்துக்கும் முதலாம்
பாஸ்கரர் மற்றும் இரண்டாம் பாஸ்கரர் ஆகியோர் தத்தம்
காலங்களில் விளக்கம் அளித்துள்ளனர். பூமியின் சுற்றளவு பற்றிய
ஆரிய பட்டரின் மதிப்பீடு தற்கால அறிஞர்களின் விளக்கப்படி
39,968 கிமீ ஆகும்.

(தகவல் ஆதாரம்: Aryabhatia written by Aryabhatta, critically edited by
K S Shukla and KV Sharma, Indian National Science Academy)

எத்தகைய தொலைநோக்கியும் இல்லாத, கண்டுபிடிக்கப்
படாத பண்டைக் காலத்தில், வெறுங்கண்ணால் வானத்தைப்
பார்த்தே, பூமி, சந்திரன், சூரியன் பற்றிய அறிவியல் உண்மைகளை
உலகுக்கு வழங்கிய எரோட்டஸ்தீனஸ் மற்றும் ஆரிய பட்டருக்கு
அறிவியல் உலகம் தலைவணங்குகிறது.
*************************************************************************************   








     




  
போலி நாத்திகக் கயமை!
------------------------------------------
இவற்றை விளக்குவதில் என்ன கடினம் அல்லது
இயலாமை இருக்க முடியும்?
1) தஞ்சைப் பெரிய கோவில் மானுட முயற்சியின்
மகத்துவத்தை முரசறைந்து கொண்டிருப்பது.
அஃது ஓர் மகத்தான கலைப் படைப்பு: அறிவியல்
படைப்பு. அக்கோவில் மனிதர்களால் கட்டப் பட்டது.
கடவுளால் கட்டப்படவில்லை.

2) திருச்செந்தூருக்கு பக்தர்கள் செல்கிறார்கள்.
உலகெங்கும் பக்தர்கள் சிறப்பிக்கப்பட்ட இடங்களுக்குச்
செல்கிறார்கள். மெக்காவுக்கு ஆண்டுதோறும் ஹஜ்
யாத்திரை செல்லும் இஸ்லாமிய பக்தர்கள் உலகெங்கும்
உள்ளனர்.

3) இந்தியாவில், அறிவியல் வழியில் கடவுளை மறுத்து
கடவுள் இல்லை என்று நிரூபிக்கும் பொருள்முதல்வாதம்
என்னும் தத்துவம் மக்களிடம் பரவவில்லை; செல்வாக்குப்
பெறவும் இல்லை. மாறாக கருத்துமுதல்வாதம் என்னும்
கடவுளை வணங்கும் தத்துவமே 99.9999999 சதம்
மக்களால் ஏற்கப்பட்டுப் பின்பற்றப் படுகிறது.

4) இங்கு பொருள்முதல்வாதம் ஏன் மக்களிடம்
பரவவில்லை. பெரும் நாத்திகர்கள் என்று
கருதப்படும்  அண்ணாத்துரை, கருணாநிதி
வகையறாக்கள் அனைவருமே போலி நாத்திகர்கள்; 
கருத்துமுதல்வாதிகள். இவர்களுக்கு பொருள்முதல்வாதம்
என்றால் என்னவென்றே தெரியாது.

5) இங்குள்ள கம்யூனிஸ்டுகளும் பொருள்முதல்வாதத்தை
மக்களுக்கு கற்றுக் கொடுக்க முயலவில்லை.

ஆக மேற்கூறிய காரணங்களால், அறுபடை வீடுகளுக்கு
மட்டுமல்ல, மேல்மருவத்தூருக்கும் ஆண்டுதோறும்
அல்லது ஆண்டில் பல்வேறு விஷேச நாட்களில்
மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவது நிகழவே செய்யும்.  
 
Antony Valan




அன்பார்ந்த வீரராகவன் சார்,

எவ்வளவு வன்மத்தோடு இந்த வேசி மகன்
அந்தோணி வளன் என்கிற மதவெறியன் எழுதுகிறான்
பாருங்கள். எங்கெங்கோ இண்டு இடுக்கில் எழுதுவதால்
இப்போதுதான் பார்க்க நேர்ந்தது.

குலத்தொழிலாக pimp தொழிலைப் பார்க்கும்
இந்த ஈனப்பயல் உயிர் வாழும் தகுதி உடையவன் அல்ல.
நாத்திகக் கருத்துக்களை எதிர்த்து இவன் கருத்துச்
சொன்னதால், இவனை நான் இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பே பிளாக்/ unfriending செய்து விட்டேன். அத்தோடு
அவனை நான் மறந்து விட்டேன். ஆனால் அவன் சதா
என்னுடைய நினைவாகவே இருந்திருக்கிறான்.

என் கருத்துக்கு மறுப்புச் சொல்ல இயலாத நிலையில்
desperate conditionல் வசவுகளில் இறங்குகிறான்.
இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது
என்று கருதும் எவர் ஒருவரும் நேர்மையுடன்
அந்தோணி வளனைக் கண்டிக்கட்டும்.



Physics என்ற சொல் இயற்கையைக் குறிக்கும்.
இயற்கையை அறிவது அதாவது
பிரபஞ்சத்தை அறிவது, அதன் இயக்கத்தை அறிவது,
அது இயங்குவதற்கான விதிகளை அறிவது
ஆகியவை இயற்பியலின் வேலைகள். அவ்வாறு
இயற்கையை அறிந்து இயற்பியல் என்ன
சொல்கிறதோ அதுவே உண்மை எனப்படும்.
 

உண்மையைக் கண்டறிந்து சொல்வது அறிவியலின்
வேலை; அதாவது இயற்பியலின் வேலை.
வேறு யார் உண்மைகளைக் கண்டறிந்து சொல்லும்
வேலையில் ஈடுபட்டுள்ளனர்? அந்தப் பொறுப்பும்
கடமையும் வேறு யாருக்கு உள்ளது? மதங்களுக்கு
நிச்சயம் இல்லை.

எனவே உண்மை என்பது யாதெனில்,
அறிவியல் எதை உண்மை என்று சொல்கிறதோ
அது மட்டுமே உண்மை ஆகும். நிரூபிக்கப்பட்ட
ஒன்றை மட்டுமே உண்மை என்று அறிவியல்
சொல்கிறது.

கார்மன் கோட்டுக்கு (Karman line) மேலேயா கீழேயா?
சர்வதேச விண்வெளி நிலையம் எங்குள்ளது?
பதில் தருக!

  

இரண்டு சரியான விடைகள் வந்திருக்கின்றன.
உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இந்தப் பதிவு தேவையற்றதாகக் கருதப்படும்
என்றே நினைத்தேன். ஆனால் மிகச் சரியான
விடைகள் இரண்டு வந்திருக்கின்றன.

கார்மன் கோடானது வளிமண்டலத்தையும்
விண்வெளியையும் பிரிக்கும் எல்லைக் கோடு.
வளிமண்டல எல்லைக்குள் யாரும் ஒரு விண்வெளி
நிலையத்தை அமைக்க மாட்டார்கள். எனவே சற்று
காமன் சென்சைப் பயன்படுத்தினாலே போதும்,
இக்கேள்விக்குச் சரியான விடையளிக்கலாம் என்ற
நினைப்பில்தான் இக்கேள்வியைத் தயாரித்தேன்.
அது வெற்றி அடைந்துள்ளது.



வளி மண்டலம், வெளி மண்டலம் என்பதாக
எதுகை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்
எனக்கு பயமாக இருக்கிறது. மாணவர்களுக்குப்
புரியாமல் போய்விடுமோ  அல்லது பிறழ்புரிதலுக்கு
இலக்காகி விடுவார்களோ என்று எனக்கு பயம் உள்ளது.
வளிமண்டலத்தையம் ஆழ்வெளியையும் (deep space)
பிரிக்கும் எல்லைக்கோடே கார்மன் கோடு. இந்தப்
புரிதல் மாணவனுக்கு ஏற்பட வேண்டும். அதுதான்
எனது அக்கறை.

ஒவ்வொரு ப்ளஸ் டூ மாணவனும், நீங்கள் காட்டிய
வீடியோவில் உள்ளபடி,  சர்வதேச விண்வெளி
நிலையத்தை (ISS) தன் வீட்டில் இருந்தபடியே
அல்லது ஒரு வசதியான இடத்தில் இருந்தபடி
பார்த்திருக்க வேண்டும். ISSஐப் பார்க்காதவனை
என்ன செய்வது?


நல்லதொரு கேள்வியே இது. கடவுளை


கடவுளை சான்றோர்கள் உணர்ந்தார்களா?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
கடவுளை உணர்ந்ததாகக் கூறிய சான்றோர்கள்
எவரும் எந்த ஒரு malafide intentionம் இல்லாமல்
நேர்மையுடனும் உள்ளத் தூய்மையுடனும்தான்
கூறிச் சென்றனர் என்பதை தாராளமாக ஏற்றுக்
கொள்ளலாம். ஏனெனில்  சான்றோர்களின் நோக்கம்
மோசடி புரிவதல்ல.

ஆனால் சான்றோர்கள் உணர்ந்தார்கள் என்பதாலேயே,
அவர்கள் உணர்ந்த ஒன்று மெய்யானது என்று ஏற்க
இயலாது. அது அவர்களின் கற்பனையே.

இத்தகைய கூற்றுக்களை காலங்காலமாக ஆராய்ந்த
அறிவியலாளர்கள், இவை அனைத்தும் சார்புநிலை 
உளவியல் (para psychology) விளைவுகள் என்ற
முடிவுக்கு வந்தார்கள்.

சான்றோர்கள் மானசீகமாக உணர்ந்தார்கள் என்பதன் 
அறிவியல் இணைவைப்பு Thought Experiment என்று கூறலாம்.
பிரசித்தி பெற்ற எர்வின் ஷ்ராடிங்கரின் பூனைப்
பரிசோதனை ஒரு Thought Experiment ஆகும்.

சான்றோர்கள் கடவுளை உணர்ந்தார்கள் என்பதன்
பொருள் அவர்கள் ஒரு Thought Experimentஐச் செய்தார்கள்
என்பதுதான். ஷ்ராடிங்கர் செய்தால் அது அறிவியலின்
Thought Experiment. வள்ளலார் அல்லது ரமண மகரிஷி
செய்தால், அது ஆன்மிகத்தின் Thought Experiment.
அவ்வளவுதான்.

ஆக இவற்றையெல்லாம் அறிவியல் இனிமேல்தான்
ஆராய வேண்டும் என்றில்லை. ஏற்கனவே ஆய்ந்தறிந்து
வந்தடைந்த முடிவுகளைத்தான் நியூட்டன் அறிவியல்
மன்றம் சுட்டுகிறது. இவையெல்லாம் para psychological
effects மட்டுமே.  

இறுதிக்கும் இறுதியான பரிசோதனையில், கடவுள்
இருக்கிறார் என்றால், நல்லது, அவரின் பௌதிக
இருப்பைச் சுட்ட வேண்டும். இங்கு தேவை
Thought Experiment அல்ல. Actual physical experiment.
குறைந்தபட்சம் ஒரு கார்ட்டீசியன் அச்சிலாவது
கடவுளின் இருப்பைச் சுட்ட வேண்டும். 
பௌதிக இருப்பு இல்லையேல் கடவுள் இல்லை!

நான் ஒரு Hilbert spaceல் உட்க்கார்ந்து கொண்டு
கடவுளின் வருகைக்காக காத்துக் கொண்டு
இருக்கிறேன். கடவுள் வரட்டும்!
****************************************************     
 

.





   











ஞாயிறு, 19 ஜூலை, 2020

நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
அறிவியல் பதிவுகளை படிக்காதோருக்கு ,
குஷ்டரோகம் வரும் வாய்ப்பு
99.8 சதவீதம் ஆகும்!

அன்பார்ந்த வீரராகவன் அவர்களுக்கு,

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்து தவறு என்று,
(அதாவது 2007 முதலே மருத்துவப் படிப்பில் AI Quotaவில்
OBCக்கு உரிய 27 சதம் இடஒதுக்கீடு இல்லை என்ற கருத்து)
எவரேனும் நிரூபித்தால், அவ்வாறு நிரூபிக்கப்பட்ட
மறுகணமே நான் தற்கொலை செய்து என்னுடைய
உயிரை விடத் தயார்.

என்னுடைய கருத்தைத் தவறு என்று நிரூபியுங்கள்
என்று ஆயிரம் முறை சவால் விட்டும் ஒருவர் கூட
அதற்கு இன்னும் முன்வரவில்லை.

2007ல் OBC இடஒதுக்கீட்டுக்கு கொள்ளி வைக்கத்
துணை போன திமுக, பாமக கட்சிகள் இன்று
புரட்ச்சி வேஷம் போடுவது கயமையிலும்
கயமை ஆகும். தமிழர்கள்தான் எவ்வளவு முட்டாள்களாக 
இருக்கிறார்கள்?
   

இந்தக் கட்டுரை இன்று நேற்று எழுதப் பட்டதல்ல.
கடந்த ஆண்டு MD MS படிப்புக்கான சேர்க்கையின்போதே
2019 செப்டம்பரில் எழுதினேன். தொடர்ந்து எழுதி
வருகிறேன். எனினும் எவரும் .பொருட்படுத்துவது
இல்லை. காரணம் எல்லாருமே திருட்டுப் பயல்கள்.
ஊடக வேசிமகன்கள் எவனும் என்னை விவாதத்துக்கு
அழைக்கவில்லை. இவ்வளவுக்கும் ஊடக விவாதங்களில்
நான் கடந்த பல ஆண்டுகளாகவே பங்கு பெற்று
வருபவன்தான்.

தங்களின் கயமை அம்பலப்பட்டு விடும் என்பதால்,
திராவிட ஊடக வேசிமகனாக்கள் எவனும் என்னைக்
கூப்பிடவில்லை. புழுவினும் இழிந்த ஈனப் பயல்கள்.
இன்றைய ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்
களவாணிப் பயல்கள் அவர்கள்தானே.


 ளுக்கு தைரியம் இருந்தால், நேர்மை இருந்தால்,
இந்தப் பொருளில் என்னை விவாதத்துக்கு
அழைக்கட்டும். அழைக்க மாட்டார்கள்.
புழுவினும் இழிந்த ஈனப் பயல்கள்.





புழுவினும் இழிந்த வேசிமகன்கள்!
------------------------------------------------------
புரோகித ஐயங்காரிடம் மடிப்பிச்சை கேட்டு
யாசித்து நிற்கும் புரட்சிப் பாடகர் கத்தார்!

ஏற்கனவே புழுவினும் இழிந்த போலி நாத்திகன்
பெரியார்தாசன் காசு வாங்கிக் கொண்டு
இஸ்லாம் மதத்துக்கு மாறி அப்துல்லா என்று
பெயர் வைத்துக் கொண்டான்.

தற்போது மாவோயிஸ்ட்  புழுத்தி கத்தார் என்பவன்
ஐயங்காரின் ஆசனத் துவாரத்தை நக்குகிறான்.
போலிப் பயல்கள்!

கொள்கையை மாற்றியவுடன் செத்துப் போங்கடா
தேவடியாப் பயல்களா!
பெரியார்தாசன் செத்துப் போனான். புழுத்துச் செத்தான்.


புழுவினும் இழிந்த இந்த மதவெறியரை இதற்கு
முன்னரே பிளாக்/unfriending செய்து இருக்கிறேன்.
தற்போது தனது மூளையின் இழிந்த காழ்ப்புச் சீழை
இங்கு வந்து வடிக்கிறார். காழப்பையும் வன்மத்தையும்
பாருங்களேன்! குட்டி முதலாளித்துவ அற்பப்
பயல்களுக்கும் மத வெறியர்களுக்குமே உண்டான
வன்மம்!

பத்து வரி எழுதியவருக்கு ஒரு வரியில் கூட
என் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க இயலவில்லை.
இவர் களத்தில் இறங்கிப் போராடாதவர். வெறும்
சாய்வு நாற்காலி விமர்சகர்.

தீக்குளிக்கப் போவது யாரென்று பார்ப்போம்.
நேர்மை இருந்தால் 2007ல் டாக்டர் மன்மோகன்சிங் 
மருத்துவப் படிப்பில் OBCக்கு 27 சதம் வழங்கியதை
ஆதாரத்துடன் நிரூபிடிக்கட்டும். நிரூபிக்க
முடியாவிட்டால் மேற்படி மதவெறியர் தீக்குளிக்க
வேண்டும்.
 

புழுவினும் இழிந்த முற்போக்குச் சுயஇன்ப


அரசை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடாமல்
முகநூலில் சுயஇன்பம் அனுபவித்துக் கொண்டு
இருக்கும் போலி முற்போக்காளனை ஒரு
பொருட்டாகக் கருதி பதிலளிக்க முடியாது.

தன்னுடைய மனத்தின் அழுக்குகளை வெளியேற்றும்
மதவெறிக் கழிசடைப்பயலை மனிதனாகவே மதிக்க
இயலாது.

எந்தப் போராட்டத்திலாவது சிறைக்குப் போயிருக்கிறான்
என்றால் அவனை ஒரு போராட்டவாதியாகக் கருதலாம்.
அவனை மதித்துப் பதிலளிக்கலாம்.
தொழிற்சங்கப் போராட்டங்களில் நாங்களெல்லாம்
பங்கேற்று, 124A  பிரிவில் (Sedition charges) சிறையில் இருந்த
போது, pimp வேலை பார்த்துக் கொண்டிருந்த கழிசடைப்
பயலும், இடஒதுக்கீட்டின் எதிரியும் தண்டிக்கப்பட
வேண்டிய சமூக விரோதியே.

நீட் தேர்வு முதன் முதலாக 2012/2013ல்  வந்தது. ஆனால்
2007ஆம் ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் OBC
இட ஒதுக்கீடு  இல்லாமல் போய்விட்டது. இந்த
உண்மையை மறைத்து, இடஒதுக்கீட்டின் எதிரிகளைப்
பாதுகாப்பதற்காக நீட் தேர்வு பற்றி பேசி
திசை திருப்ப முயற்சி செய்வது கயமைத் தனமாகும்.

2007 முதலே OBCக்கு இடஒதுக்கீடு இல்லை என்கிறேன் நான்.
அதை மறுத்துப் பாருங்கடா, பார்ப்போம். (ஆனால் SC,STக்கு
உள்ளது) 

   


உண்மைகளும் புள்ளி விவரங்களும்
பொதுவெளியில் உள்ளன!
---------------------------------------------------------
2007ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையிலான
மருத்துவப் படிப்பு அட்மிஷனில், அகில இந்திய கோட்டா
இடங்களில் எந்த விதமான இடஒதுக்கீடும் OBCக்கு
வழங்கப் படவில்லை. இது BLACK AND WHITEல் உள்ள
அரசுப் புள்ளி விவரம் ஆகும். 2007ஆம் ஆண்டு
முதற்கொண்டு உள்ள AI quota வழங்கப்பட்ட
விவரங்கள் அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில்
உள்ளன. அவை பொதுவெளியில் உள்ளன.
ஆங்கிலம் தெரிந்த எவர் வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம். RTIயில் கேள்வி கேட்டும்
எவர் வேண்டுமானாலும் பதிலைப் பெறலாம்.

நான் மீண்டும் அடித்துக் கூறுகிறேன்; AI Quotaவில்
2007 முதல் OBCக்கு உரிய 27 சதம் வழங்கப் படவில்லை .
வழங்கப் பட்டிருந்தால் அதற்குரிய ஆதாரத்தை
யாரும் காட்டலாம்.

கட்ட முடியாமல், வெறுமனே வசதிகளையும்
அவதூறுகளையும் எழுதிக் கொண்டிருக்கிற
புழுவினும் இழிந்த கழிசடைகளுக்கு உயிர் வாழும்
உரிமை இல்லை.    

வு


மூல வினை எப்படி இருந்ததோ, அதே பாணியில்தான்
எதிர்வினையும் இருக்கும். என்னுடைய கருத்துக்கு
மறுப்புச் சொல்லாமல், மறுப்புச் சொல்ல முடியாமல்,
என்னைத் தீவைத்துக் கொளுத்துவதாகச்
சொன்னானே ஒரு புழுவினும் இழிந்த கழிசடைப்
பயல்! அவனைக் கண்டிக்கும் நேர்மை உங்களிடம்
உண்டா?

இடஒதுக்கீட்டின் எதிரி எவனாக இருந்தாலும்
அவனை முறியடிப்பது என் கடமை. இடஒதுக்கீட்டுக்கு
கொள்ளி வைத்த அரசியல் தலைவர்களுக்கு
முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதை
ஏற்க முடியாது.