புதன், 29 நவம்பர், 2023

 எலி வளை சுரங்கம்

41 தொழிலாளர்ளை மீட்க பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.
அதில் ஒன்று.
ஜேபிசி இயந்திரம் மூலம் மணலை அகற்றும் முயற்சி. ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.
பின்பு அடுத்த கட்ட முயற்சியாக ராட்சத எந்திரங்களை கொண்டு துளையிடும் வேலையை தொடர்ந்தனர்.
அது நல்லதொரு முன்னேற்றத்தை தந்தது.
ஆனால் 43 மீட்டர்கள் துளையிட்ட நிலையில் அமெரிக்க ராட்சத எந்திரமான ஆகர் எந்திரமும் பழுதானது.
அடுத்த கட்டமாக
மிக ஆபத்தான மேலிருந்து துளையிடும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் பக்கவாட்டு துளையிடும் எந்திரங்கள் துளையிட்ட 43 மீட்டர்கள் இருந்து மீதமுள்ள 13 மீட்டர்கள் மண் குவியலை மனிதர்கள் கையாளும் பழமையான முறையை கையாள முடிவு செய்யப்பட்டு அதில் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டனர்.
கடைசி முயற்சியாக எலிவளை சுரங்கம் தோண்டும் வழிமுறை
பின்பற்ற திட்டமிட்டு
திங்கள் இரவு களமிறங்கிய எலிவளை சுரங்க தொழிலாளிகள் அசுர வேகத்தில் இயங்கி வெறும் 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டி சிக்குண்டவர்களை மீட்க இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர்.
இந்த இரும்பு குழாய் மூலமாக, சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும்
நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த எலிவளை சுரங்கம் தோண்டுதல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று.
மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இவ்வாறான எலிவளை சுரங்கம் தோண்டுதல் மூலமாக நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள்.
அதாவது மூன்று தொழிலாளிகள் இந்த வேலையில் ஈடுபடுவார்களாம்.
ஒருவர் சுரங்க வழியை வெட்டிக் கொண்டு செல்வார். இன்னொருவர் வெட்டப்பட்ட கழிவுகளை அள்ளுவார்.
மூன்றாவது நபர் அக்கழிவுகளை அதற்குண்டான டிராலியில் போடுவார்.
அந்த டிராலியில் ஏற்கனவே தோண்டிய வழியில் வெளியே அனுப்பி விடுவார்களாம்.
இது எலிகள் தங்களது வளையை தோண்டும் வழிமுறை என்பதால் இதற்கு எலிவளை சுரங்கம் தோண்டுதல் என்று பெயர் பெற்றதாம்.
2018ல் மேகாலயாவில் நடந்த எலிவளை சுரங்க விபத்தில் சிக்கி எலிவளை ஊழியர்கள் உயிரிழந்ததையொட்டி பசுமை தீர்ப்பாயம் இந்த முறைக்கு தடை விதித்திருந்தது.
கடைசியில் மாபெரும் அமெரிக்க தொழில்நுட்பம் கூட தடுமாறிய நிலையில் இந்த பழமையான எலிவளை தோண்டுதல் வழிமுறைதான் கைகொடுத்தது. சிக்குண்ட தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
No photo description available.
All reactions:
Mayakooththan Govindarajan, Pugal Machendran Pugal and 56 others

திங்கள், 27 நவம்பர், 2023

விடுதலைப்போரை வெல்லுவோம்!
----------------------------------------------------- 
ஈழ விடுதலைச் சிங்கங்களே தமிழ் 
வீர வழிவந்த தங்கங்களே 

ஆழ நெடுங்கள் தாலாட்டும் அங்கு 
அனுதினமும் மரணப் போராட்டம் 

கண்டி கதிர்காம வேலனுக்கு இதைக் 
கண்டிக்காமல் வேல் எதற்கு? 

விடுதலைப் போருக்கு மரணம் இல்லை 
இரண்டாம் ஈழப்போர் தொடங்கட்டும்  

ஈழ விடுதலை வென்றெடுப்போம் 
தமிழீழம் தரணியில் உதிக்கட்டும்!

ஈழ விடுதலைச் சிங்கங்களே தமிழ் 
வீர வழி வந்த தங்கங்களே!   
********************************** 

ஞாயிறு, 5 நவம்பர், 2023

 இடதுசாரி முற்போக்கு முகாமில் இருப்போர் 

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படத் தொடர்!

தமிழில் வசனம் எழுதப் போவது யார்?

நக்சல்பாரிகள் மாவோயிஸ்டுகளுக்கு கட்டளை!

-------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------

நமது பூமியின் வரலாறு இது.

உயிரினங்கள் எப்படித் தோன்றின 

என்று விளக்கும் கதை இது.


இது தனி ஒரு படம் அல்ல. பல தொடர்களின் 

இணைப்பு. தொடர் ஆவளி. (ஆவளி = வரிசை). 

டேவிட் அட்டன் பரோ தெரியுமா?


இப்படங்களை யாரெல்லாம் பார்க்க வேண்டும்?

வலதுசாரிகள் கண்டிப்பாகப் பார்த்து விடுவார்கள்;

அறிவைப் பெற்று விடுவார்கள்.


இடதுசாரி முகாமில் உள்ள ஒவ்வொருவரும் 

பார்க்க வேண்டும். இது போன்ற அறிவியல் 

படங்களை பார்க்காமல் காலமெல்லாம் 

முட்டாளாகவே இருந்து கொண்டிருக்கிறான் 

நமது போலி இடதுசாரி மூதேவி!

நமது போலி நக்சல்பாரி மூதேவி!

நமது போலி மாவோயிஸ்ட் மூதேவி!


இந்தப் படங்களைப் பார்க்க வேண்டுமெனில் 

ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.

இடதுசாரி முகாமில் ஆங்கிலத்துக்கு எங்கே போவது?


புரிந்தவரை பாருங்கள்!

Something is better than nothing!


நியாயமாக இந்த அறிவியல் படங்களுக்கு 

தமிழில் வசனம் எழுத வேண்டும். தமிழில் 

மொழிபெயர்க்க வேண்டும்.


தமிழ் தமிழ் என்று போலிக் கூச்சல் போடும் 

எந்த இழிமகனாவது இந்த அறிவியல் படத்துக்கு 

தமிழில் வசனம் எழுத முன்வருவானா?


பெ மணியரசன், சீமான் போன்றவர்கள்  

தமிழ் முயற்சிகளை ஆதரிப்பார்களா?


தேவையான வசதி வாய்ப்புகளைச் செய்து

கொடுத்தால், இப்படங்களின் வசனங்களை 

தமிழில் மொழிபெயர்க்க நான் தயார்.

அதற்காக எனக்கு ஊதியம் தேவையில்லை.


ஆங்கிலம், தமிழ், அறிவியல் மூன்றிலும் நல்ல 

புலமை உடைய எவர் வேண்டுமானாலும் 

இப்படங்களின் வசனங்களை, விளக்கங்களை 

தமிழில் எழுதலாம்.


இந்த வேலைக்கு நான் தகுதியானவன் என்று 

கருதினால், என்னிடம் இந்த வேலையை 

ஒப்படைத்தால் நான் செய்து முடிப்பேன்.

எனக்கு ஊதியம் தேவையில்லை.


என்னைத் தவிர தகுதி படைத்த வேறு எவரிடமும் 

இந்த வேலையை ஒப்படைத்தால், அப்போதும் 

என்னால் இயன்ற அளவு அந்தப் பணிக்கு 

உதவியாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.


நான் பட்டினி கிடந்தாலும் தமிழை பட்டினி 

கிடக்க விட மாட்டேன்.    

***************************************************

  

சனி, 4 நவம்பர், 2023

தமிழக இந்திய அடிமைச் சமூகம் குறித்து 
இலக்கியச் சான்று எதுவும் இல்லையே, ஏன்?
--------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------- 
இலக்கிய வளம் படைத்த மொழி தமிழ் என்னும் 
உண்மையை எவரும் மறுக்க இயலாது. உலகின் 
வேறெந்த மொழியையும் விட பேரளவிலான 
இலக்கியங்களையும் தொன்மை மிக்கனவற்றையும்    
தமிழ் கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயரான நியூட்டன் தமது புகழ்மிக்க 
"பிலாசஃபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா" 
என்ற நூலை 1687ல் பதிப்பித்தார்; அதாவது இன்றைக்கு 
336 ஆண்டுகளுக்கு முன்பு. அந்நூல் ஆங்கிலத்தில் 
எழுதப்படவில்லை; லத்தீனில் எழுதப்பட்டு இருந்தது. 
அக்காலத்தில் நூல்கள் எழுதப்படும் அந்தஸ்தை 
ஆங்கிலம் பெறாமல் இருந்தது.     

ஆங்கிலத்தோடு தமிழை ஒப்பிட்டால், இரண்டாயிரம் 
ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தலைசிறந்த 
நூல்கள் எழுதப் பட்டிருந்தன. தொல்காப்பியம் 
அதற்குச் சிறந்த உதாரணம் ஆகும். ஆனால் ஆங்கிலம் 
இலக்கிய அந்தஸ்து பெற்றது முன்னூறு ஆண்டுகளுக்கு 
முன்புதான். 

1) பத்துப்பாட்டு என்னும் 10 நூல்கள்
2) எட்டுத்தொகை என்னும் தொகுப்பு நூல்கள் 
3) பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நீதி நூல்கள் 
4) சைவத் திருமுறை நூல்கள் பன்னிரண்டு 
5) வைணவ நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் 
6) ராமாயண, மகாபாரத இதிகாச வழிநூல்கள் 
7) ஐம்பெருங் காப்பியங்கள் 
8) ஐங்குறு காப்பியங்கள் 
9) சிற்றிலக்கியங்கள் 
10) தொல்காப்பியம், நன்னூல், காரிகை போன்ற 
இலக்கண நூல்கள் 
என்று இவ்வாறாக தமிழின் இலக்கியங்கள் மிகப்  
பரந்தவை மட்டுமின்றி ஆழமானவையும்கூட.

இவை யாவும் தமிழர் நிலத்தை, மக்களை, அவர்தம் 
வாழ்வியலை முழுமையாகப் படம் பிடித்துக் 
காட்டியுள்ளன. தமிழ்ச் சமூகத்தின் அவ்வக்  
காலக்கட்டத்தின் சித்திரங்கள் இலக்கியங்களில் 
துல்லியமாகப் படம் பிடிக்கப் பட்டுள்ளன. சுருங்கக் 
கூறின் தமிழ் இலக்கியப் பரப்பு என்பது தமிழ்ச் 
சமுகத்தின் பிரதிபலிப்பே!

தமிழின் இலக்கியங்களை கவனத்துடன் பரிசீலித்துப் 
பார்க்கையில், தமிழ்ச் சமூகத்தில் ஆண்டான்-அடிமை 
முறை நிலவியதற்கான அணுவளவு தடயமும் தமிழின் 
எந்த ஒரு இலக்கியத்திலும் பதிவாகவில்லை என்பது 
புலப்படுகிறது.

ஆண்டான்-அடிமைச் சமூக அமைப்பு நிலவுடைமைச் 
சமூக அமைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது என்றால், 
அது  ஒரு மாபெரும் வர்க்கப் போராட்டத்தின் 
மூலமாகவே நடந்திருக்க வேண்டும். ஆயின் 
அந்த வர்க்கப் போராட்டம் பற்றிய எந்தத் கடயமும்
தமிழின் எந்த இலக்கியத்திலும் இல்லை.

ஆண்டான்-அடிமைச் சமூக அமைப்பும் உற்பத்தி 
முறையும் தமிழ்நாட்டில் நிலவின என்றால்,
குறைந்தது சில நூற்றாண்டு காலமாவது அந்த 
அமைப்பு நீடித்து இருந்திருக்க வேண்டும் அல்லவா! 
அப்படியானால் அந்தக் காலங்களின் மக்களின் 
வாழ்வியல் அவர்தம் இலக்கியங்களில் பதிவு 
பெற்றிருக்க வேண்டும் அல்லவா!

ஆனால் தமிழின் எந்த ஒரு இலக்கியத்திலும் 
ஆண்டான்-அடிமைச் சமூகம் குறித்தோ அந்த உற்பத்தி 
முறை நிலவியது குறித்தோ குறித்தோ ஒரு சிறு 
குறிப்பும்கூட இல்லை. இதிகாசங்களாக அறியப்படும் 
ராமாயணம், மகாபாரதத்திலும் கூட அடிமை உடைமைச் 
சமூகம் குறித்து பேசப்படவில்லை. மகாபாரதப் 
போரில் வெற்றி அடைந்த பாண்டவர்கள் தோற்றுப் 
போன கெளரவர்களை அடிமைகளாக ஆக்கிக் 
கொள்ளவில்லை. அதற்கான தடயங்கள் நமது 
இதிகாசங்களில் இல்லை.

தமிழைப் போன்று சமஸ்கிருதமும் தொன்மை மிக்க 
மொழி ஆகும். சமஸ்கிருதம் அன்றைய சமூகத்தின் 
உற்பத்தி மொழியாக இருந்தது. சம்ஸ்கிருத 
இலக்கியங்களிலும்கூட ஆண்டான்-அடிமைச் சமூகம் 
குறித்து எந்தவொரு சிறு குறிப்பும் இல்லை.

விசாக தத்தரின் முத்ரா ராட்சசம் தொன்மை மிக்க 
சம்ஸ்கிருத நூல்களில் ஒன்று. இந்நூலில் அடிமைச் 
சமூகம் இந்தியாவில் நிலவியதற்கு ஆதாரமாக 
ஒரு சிறு குறிப்பும் இல்லை. சாணக்கியரின் அர்த்த 
சாஸ்திரம், காளிதாசரின் நாடகங்கள் ஆகிய 
சம்ஸ்கிருத இலக்கியங்களில் அடிமைச் சமூகம் 
குறித்து எந்தப் பிரஸ்தாபமும் இல்லை. 

பௌத்த இலக்கியங்களிலோ தொன்மை மிக்க 
பாலி  மொழியின் இலக்கியங்களிலோ இந்தியாவின்  
அடிமைச் சமூகம் குறித்து போகிற போக்கிலான 
ஒரு சிறு குறிப்பு கூட இல்லை.

வெளிநாட்டு யாத்ரிகர்கள் பலர் இந்தியாவுக்கு 
வந்துள்ளனர். ஆண்டுக் கணக்கில் இந்தியாவில் 
தங்கி உள்ளனர்; இந்திய பல்கலைக் கழகங்களில் 
கல்வி கற்றுள்ளனர். தங்களின் அனுபவங்களை,
தாங்கள் கற்று உணர்ந்ததை  நூல்களாக எழுதி 
உள்ளனர். ஆனால் எந்த ஒரு யாத்ரிகரின் எந்த ஒரு 
நூலிலும் அடிமைச் சமூகம் நிலவியதற்கான 
அணுவளவு ஆதாரம்கூட இல்லை.

கிரேக்க அரசர் செல்யூக்கஸ் நிகேடாரின் தூதராக 
மெகஸ்தனிஸ் இந்தியா வந்தார். அவர் வந்த காலம் 
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு; கிமு மூன்றாம் 
நூற்றாண்டு. நான்காண்டு காலம் இந்தியாவில் 
தங்கி இருந்த மெகஸ்தனிஸ் இண்டிகா என்ற நூலை 
எழுதினார். அக்கால இந்தியாவின் குறுக்கு வெட்டுத் 
தோற்றத்தைக் காட்டும் இண்டிகா என்னும் அவரின் 
அந்த நூலில் அடிமைச் சமூகம் குறித்து எக்குறிப்பும் இல்லை.

கிபி 5ஆம் நூற்றாண்டில், இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் 
பாஹியான் என்னும் சீன யாத்திரிகர் இந்தியா வந்தார்.
இவரின் பயணக் குறிப்புகளில் இந்தியாவில் அடிமைச் 
சமூக அமைப்பு முறை நிலவியதாக எந்த ஒரு 
தடயமும் குறிப்பிடப் படவில்லை.

தொடர்ந்து கிபி 7ஆம் நூற்றாண்டில் யுவான் சுவாங் 
என்னும் சீன யாத்திரிகர் இந்தியா வந்தார். அப்போது 
இந்தியாவை ஹர்ஷர் ஆண்டு வந்தார். யுவான் 
சுவாங்கின் பயணக்குறிப்புகள் சி-யு-கி என்னும் 
பெயரில் நூலாக எழுதப்பட்டன. அந்நூலிலும் 
இந்தியாவில் அடிமைச் சமூகம் நிலவியதற்கான 
எந்த ஒரு சிறு தரவும்  குறிப்பிடப் படவில்லை.

அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு, 1960களில்,
1970களில் தமிழ் வாசக உலகில் சரித்திர நாவல்கள் 
மிகவும் பிரசித்தம். கல்கி, சாண்டில்யன், கோவி 
மணிசேகரன், ஜெகசிற்பியன் என்று பலரும்
வரலாற்றைப் புனைவுகளாக எழுதித் தள்ளிக் 
கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்கூட 
தமிழகத்திலோ இந்தியாவிலோ அடிமைச் சமூக 
அமைப்பு நிலவியதாக ஒரு புனைவைக்கூட 
எழுதவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  

ரோமாபுரியின் வரலாற்றில் அடிமைகளின் 
கிளர்ச்சி பலமுறை நடைபெற்றுள்ளது. இக்கிளர்ச்சிகள் 
வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. கிமு முதல் 
நூற்றாண்டில், ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமைகளின் 
தலைவர் நடத்திய மாபெரும் கிளர்ச்சி ரோமாபுரி 
வரலாற்றில் குறிப்பிடத் தக்கது. இக்கிளர்ச்சி 
பெருமளவுக்கு அடிமைச் சமூக அமைப்பை 
முடித்து வைத்தது.

இந்தியாவிலும் தமிழகத்திலும் அடிமைச் சமூகம் 
நிலவியது என்றால், இந்தியாவின் ஸ்பார்ட்டகஸ் 
யார்? தமிழகத்தின் ஸ்பார்ட்டகஸ் யார்?

வரி வடிவ இலக்கியங்களில் குறிப்பு இல்லாவிடினும், 
நாட்டுப்புற இலக்கியத்தில், வாய்மொழி இலக்கியத்தில்
அடிமைச் சமூகம் பற்றிய குறிப்பு இருக்க வேண்டும் 
அல்லவா! இல்லையே!

மலையூர் மம்பட்டியானைப் பற்றியும், கரிமேடு 
கருவாயனைப் பற்றியும், திருநெல்வேலி 
செம்புலிங்கத்தைப் பற்றியும் வாய்மொழி
இலக்கியம் இருப்பது போல, கர்ண பரம்பரைக்
கதைகள் இருப்பது போல, தமிழகத்தின் ஸ்பார்ட்டகஸ் 
பற்றி ஏன் ஒரு வாயமொழிக் குறிப்பு கூட இல்லை?
இக்கேள்விக்கு பதில் தேடுவோம்!
--------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஸ்பார்ட்டகஸ் பற்றிய ஒரு ஹாலிவுட் படம் 1960ல் 
வெளியானது. ஆங்கிலம் நானறிந்த வாசகர்கள் 
அப்படத்தைப் பார்க்கலாம். ஐரோப்பிய அடிமைச்
சமூகம் குறித்தும், ரோமாபுரியின் வீழ்ச்சி குறித்தும் 
அறிந்து கொள்ளலாம். முதல் பின்னூட்டத்தில் 
ஸ்பார்ட்டகஸ் படத்தில் official trailorஐ கொடுத்துள்ளேன்.
விரும்புவோர் தேடிப்பிடித்து அப்படத்தைப் பார்க்கலாம்.
****************************************************    
  
 
  
 


 
    
  


 

  

    

 

 






 


வியாழன், 2 நவம்பர், 2023

ஆப்பிள் ஐபோன் மீது சீதாராம் யெச்சூரியின் காதல்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் 
கிரஹாம்பெல் (1847-1922) ஸ்காட்லாந்து விஞ்ஞானி. 
1876ல் இவர் தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.

2023ல், இந்த 147 ஆண்டுகளில், கிரஹாம்பெல்லின் 
தொலைபேசி அளவிலும் பண்பிலும் பாரதூரமான 
மாற்றங்களை அடைந்து விட்டது. இன்றைய உலகம்  
ஸ்மார்ட் ஃபோன்களின் உலகம். 2020ல் உலகில் இருந்த  
மொபைல் பேசிகளில் 75 சதவீதம் ஸ்மார்ட் ஃபோன்களே  
என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இங்கு SMART என்ற 
சொல் அட்ஜெக்ட்டிவ் அல்ல; அது ஒரு அக்ரோனிம் 
என்பதை அறிக! 
(SMART = Self Monitoring, Analysis and Reporting Technologies)  

சமகால உலகின் மக்கள்தொகை 800 கோடி என்பதை 
நாம் அறிவோம். 2022 என்னும் ஒரு ஆண்டில் மட்டும் 
1.43 பில்லியன் (143 கோடி) ஸ்மார்ட் ஃபோன்கள் 
ஏற்றுமதி ஆகியிருக்கின்றன என்னும் ஒரு செய்தி 
உலகின் தொலைபேசி அடர்த்தி மிகப் பெரிதும்  
செறிவு நிறைந்தது என்று நமக்கு உணர்த்துகிறது.

தொடுதிரை (Touch screen) தொழில்நுட்பமும், 
கணினியில் உள்ளது போன்று மொபைல் ஃபோனை 
இயக்க ஒரு OSம் (OS = Operating System) வந்த பிறகு 
மொபைல் ஃபோன்கள் புரட்சிகரமாகி விட்டன.

இன்று உலகெங்கும் உள்ள ஸ்மார்ட் ஃபோன்களை 
அவை பயன்படுத்தும் OSன் அடிப்படையில் இரண்டு 
பிரிவாகப் பிரிக்கலாம். 
1) ஆண்ட்ராய்ட் (Android) OSஐ பயன்படுத்துபவை 
2) ஆப்பிள் OSஐ (Apple iOS) பயன்படுத்துபவை.  
ஆண்ட்ராய்ட் OS கூகிள் நிறுவனத்தைச் சேர்ந்தது.
ஆப்பிள் iOS சடீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தைச் 
சேர்ந்தது.

இவ்விரண்டில் எது உயர்ந்தது? ஆண்ட்ராய்டா?
ஆப்பிளா? ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்த்து 
விடலாமா? சன் டிவியிடம் சொன்னால், அவர்கள்
சாலமன் பாப்பையா தலைமையில் வரும்
தீபாவளியன்று ஒரு பட்டிமன்றம் நடத்தி விட 
மாட்டார்களா?

நடத்தி விடுவார்கள்தான்! ஆனால் சாலமன் 
பாப்பையா இது போன்ற அறிவியல் 
பட்டிமன்றங்களுக்குப் பயன்பட மாட்டார். 
இதற்கு நீங்கள் மயில்சாமி அண்ணாதுரையை 
நாட வேண்டும்.

சீதாராம் யெச்சூரியிடம் கேட்டால், அவர் ஆப்பிள் 
ஐஃபோன்தான் உயர்ந்தது என்று சொல்லி நம்மை 
அதிர்ச்சி அடையச் செய்கிறார். அவரின் 
ஸ்மார்ட் ஃபோன் ஆப்பிள் iOSஐக் கொண்டது.   

பின்நவீனத்துவ ஆதரவாளர்களான சசி தரூரும்
திரிணமூல் பெண் எம்பி மொகுவா மொய்த்ராவும்
ஆப்பிள் ஐஃபோன் பிரியர்களாக இருப்பதில் 
வியப்பில்லை. ஆனால் யெச்சூரி எப்படி இவர்களுடன் 
சேர்ந்து பின்நவீனத்துவ அழுகலை உண்கிறார்?

ஆண்ட்ராய்ட் OS, ஆப்பிள் iOS ஆகிய இரண்டில்,
நான் ஆண்ட்ராய்ட் OSஐ ஆதரிக்கிறேன்.
தொலைதொடர்புத்துறையில் 35 ஆண்டு காலம்
பணிபுரிந்தவன் என்ற முறையிலும், ஸ்மார்ட் ஃபோன் 
தொழில்நுட்பம் குறித்த எளிய அடிப்படைகளை 
ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும் நான் 
தயக்கமே இன்றி ஆண்ட்ராய்ட் OSக்கு வாக்களிக்கிறேன்.
என்னுடைய முடிவில் அணுவளவுகூட அரசியல் 
செல்வாக்கு செயல்படவில்லை. தொலைதொடர்புப் 
பேரரசின் ஒரு எளிய குடிமகன் என்ற முறையில்
என்னுடைய கருத்து அது.

ஆப்பிள் iOS மிகவும் செக்டேரியன் தன்மை (sectarian) 
உடையது. இதற்கு மாறாக ஆண்ட்ராய்ட் OSக்கு 
universality அதிகம் உண்டு. தேவையான appகளை 
கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து தருவித்துப் 
பயன்படுத்தலாம். பேட்டரியின் வாழ்நாள் அதிகம்.
விரைவாக சார்ஜ் செய்து கொள்ள இயலும். எல்லா 
நிறுவனங்களின் ஃபோன்களும் ஆண்ட்ராய்டு
OSல் செயல்படும். ஆனால் ஆப்பிள் அப்படியல்ல.
அது செக்டேரியன் உலகம். 

என்றாலும் வாத்ஸாயனரை முழுவதுமாக தமது 
ஆப்பிள் மொபைலில் டவுன்லோடு செய்து 
வைத்திருக்கிறார் சசி தரூர். அதை தமது 
கணக்கற்ற பெண் சிநேகிதிகளுக்கும்
அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.  

பினராயி விஜய்னுக்கு தலைவலி வந்தால் அவர் 
சிகிச்சை மேற்கொள்வது அமெரிக்காவில்தான்.
யெச்சூரியின் மகள் படித்ததும் இங்கிலாந்துதான்;
இன்று வேலை பார்ப்பதும் இங்கிலாந்துதான்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் 
என்று யெச்சூரியும் விஜயனும் வீராவேசம் 
பேசுவதெல்லாம் சோத்துக்கு லாட்டரி அடிக்கும் 
குப்பனையும் சுப்பனையும் ஏய்த்துப் பிழைப்பதற்குத்தானே
தவிர, புரட்சி நடத்துவதற்கு அல்ல. அதே போல யெச்சூரி 
ஆப்பிள் ஐபோனைப் பயன்படுத்துவது  தொழில்நுட்பக் 
காரணங்களால் அல்ல; அரசியல் ஆதாயம் கருதியே!

மோடி அரசு ஆப்பிள் iOSஐ உடைய போன்களை 
மட்டும் ஒட்டுக் கேட்கிறது; ஆண்ட்ராய்ட் போன்களை 
ஒட்டுக் கேட்கவில்லை என்று சொல்வதைக் கேட்டு 
இந்தியாவில் 140 கோடி ஆசனத் துவாரங்களும்
சிரிக்கின்றன.    
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
சென்னை ஐஐடி மாணவர்கள் இந்தியாவுக்கென்று 
பிரத்தியேகமாக Bharath OS என்ற ஒரு OSஐ தயாரித்து 
உள்ளார்கள் என்று ஒரு கட்டுரையை சில 
நாட்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். அதற்கு 
வரவேற்பு இல்லை. இப்போது அந்தக் கட்டுரையை 
எடுத்துப் படித்துப் பாருங்கள். OS என்றால் என்ன,
அதன் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் ஓரளவேனும் 
தெரிய வரும். 
****************************************************