ஞாயிறு, 28 மே, 2023

 மோடி அரசு 8 மணி நேர வேலையை 
12 மணி நேரமாக உயர்த்திஎப்போது வாயில் 
கொழுக்கட்டை அடைத்துக் கொண்டிருந்த 
போலி கம்யூனிஸ்டுகளே, போலி நக்சல்பாரிகளே!
--------------------------------------------------------------------
இந்தியாவின் தொழிலாளர் துறை அமைச்சர் 
யார் என்று தெரியுமா போலி நக்சல்பாரி
போலி மாவோயிஸ்டு அன்பர்களே?  
தெரியாது!

இன்றைக்கு பூபேந்தர் யாதவ் என்பவர் தொழிலாளர் 
துறை அமைச்சராக இருக்கிறார். இவர் 
Labour and employment ministerஆக இருக்கிறார்.

இவருக்கு முந்தி ஒருவர் இருந்தார். அவர்தான் 
தொழிலாளர் மற்றும் தொழிசாலை சட்டத் 
தொகுப்புகளைக் கொண்டு வந்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
அவர் பெயர் சந்தோஷ் கங்வார்.

8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக 
ஆக்கி சட்டத் திருத்தம் செய்தவர் சந்தோஷ் 
கங்வார்.இதெல்லாம் 2019, 2020 ஆண்டுகளிலேயே 
நடந்து முடிந்து விட்டது.

தொழிலாளர் விரோதச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் 
கொண்டுவரப்பட்டபோது, நிறைவேற்றப் பட்டபோது 
1) போலி மாவோயிஸ்டுகள் 
2) போலி நக்சல்பாரிகள்
3) போலி இடதுசாரிகள் 
4) போலி முற்போக்குகள்
ஆகிய அனைத்துக் கபோதிகளும் வாயையும் 
ஆஸனத் துவாரத்தையும் பொத்திக் கொண்டு
இருந்தார்கள். ஒரு பயலும் எதிர்க்கவில்லை.

AITUCயும் CITUஉம் 12 மணி நேர வேலையை 
எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள்?
பூஜ்யம்! பூஜ்யம்!!

இன்றைக்கு, உப்புப்பெறாத நாடாளுமன்ற புதிய 
கட்டிடத் திறப்பு விழாவை  இவ்வளவு ஆரவாரத்துடன் 
எதிர்ப்பவர்கள், அன்று தொழிலாளர் சட்டத் 
தொகுப்பை எதிர்த்து மூச்சு விடவில்லையே!   

இன்றைக்கு குதித்துக் கும்மாளம் இட்டு நாடாளுமன்ற 
புதிய கட்டிடக் திறப்பு விழாவை எதிர்ப்பதாகக் 
கூச்சல் போடும் குட்டி முதலாளித்துவ விடலைகள் 
அன்று கோமாவில் இருந்தது ஏன்? 

12 மணி நேர வேலை சட்டமாகி விட்டதே 
கோமாளிகளே! கேரளத்தில் பினராயி விஜயன் 
அமல்படுத்தி விட்டாரே! உங்களால் என்ன செய்ய 
முடியும்? போங்கள் போய் பகிடுத்துத் தூங்குங்கள்!
*************************************************** 
           
ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு 
வீணான அலப்பறை!
சேக்ஸ்பியரின் நாடகத் தலைப்பு:
Much Ado about nothing!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------
பிரிட்டிஷ்காரன் போய்த்தொலைந்தான்!
நமக்கும் சுதந்திரம் கிடைத்தது!
நம்மை நாமே ஆளத் தொடங்கினோம்!

சுதந்திரம் கிடைத்த இந்த 75 ஆண்டுகளில் 
எவ்வளவோ மாற்றங்கள்! அந்த வரிசையில் 
நாடாளுமன்றத்திற்கு ஒரு புதிய கட்டிடம் 
வந்திருக்கிறது.

இது இயல்பு! 
பழையன கழிதலும் புதியன புகுதலும் 
வழுவல கால வகையி னானே.

அவ்வளவுதான்! 
அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.
ஆனால் இந்தியாவில் ஆளுமை வளராத 
IQ குன்றிய அரசியல்வாதிகள் புதிய 
கட்டிடத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு 
பெரும் ஆரவாரத்துடன் தங்களின் 
அறியாமையை இயலாமையை 
வெளிப்படுத்திக்  கொண்டு இருக்கிறார்கள்.

ஷேக்ஸ்பியர் இதை Much ado about nothing என்கிறார்.
சேக்ஸ்பியரின் இந்த நாடகத்தைப் படித்து
இருக்கிறீர்களா? படித்திருக்கிறேன் என்று 
கூறுபவர்கள் இந்நாடகத்தின் கதாநாயகியின் 
பெயர் என்ன என்று கூற வேண்டும். இது 
காமெடியா டிராஜெடியா என்றும் கூற வேண்டும்.
இன்னும் சில கேள்விகளை வைத்திருக்கிறேன்.
நிற்க.

தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் குறித்த 
பல சட்டத் தொகுப்புகளை மோடி அரசு 
2019, 2020 ஆண்டுகளில் கொண்டு வந்தபோது 
இதே எதிர்க்கட்சிகள் மௌன விரதம் இருந்தார்கள்.
இப்போது நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் 
குறித்து இவ்வளவு தூரம் வாய் கிழிய வேண்டிய 
அவசியம் என்ன?

CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகளே,
இப்போது நடந்து முடிந்த கர்நாடக சட்ட மன்றத் 
தேர்தலில் நீங்கள் வாங்கிய ஒட்டு என்ன?
பெற்ற இடங்கள் என்ன?
224 இடங்கள் உள்ள சட்ட மன்றத்தில் ஒரு இடம் கூட 
CPI, CPM போலிகளால் வெல்ல முடியவில்லையே ஏ?

வாக்கு சதவீதத்தில் நோட்டாவை விடக் குறைவாக
வாங்கிக் கேவலப்பட்டுப் போன போலிக் 
கம்யூனிஸ்டுகளே, கட்சியை வளக்கப் பாருங்கடா! 
வரம்பை மீறிய அளவில் பார்லிமென்ட் கட்டிட 
விவாதம் உங்களுக்கு ஏண்டா?

மோடியை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 
இந்தியாவை எதிர்க்கும் மூடர்களே, உங்களின் 
தப்பை உணருங்கடா!

தேசிய அந்தஸ்தைப் பறிகொடுத்த பாவிகளே,
பாஜகவை வீழ்த்தப் போகிறானாம்! உன்னால் 
எப்படியடா வீழ்த்த முடியும்? முதலில் நோட்டாவை 
வீழ்த்தப் பாருங்கடா!
****************************************************
     
     

     
கொண்டாட்டங்கள்!
தனிமனித வாழ்விலும் அரசியலிலும்! 
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
மானுட வாழ்வில் கொண்டாட்டங்கள் தவிர்க்க 
இயலாதவை. தனிமனித வாழ்வில் கணக்கற்ற 
கொண்டாட்டங்கள் இருக்கின்றன. சமகாலத்தில் 
குழந்தைகளும் இளைஞர்களும் ஏன் 
பெரியவர்களும் கூட தங்களின் பிறந்த
நாட்களைக் கொண்டாடி வருகிறார்கள்.
திருமணமானவர்கள் ஆண்டுதோறும் 
wedding day கொண்டாடி வருகிறார்கள்.

அதைப்போல் அரசியலிலும் சில கொண்டாட்டங்கள் 
இருந்து வருகின்றன. கலைஞர் நடத்திய உலகத்
தமிழ் மாநாடு என்பது கொண்டாட்டமே தவிர 
வேறன்ன? அது என்ன சோஷலிச நடவடிக்கையா?

மக்களவை எம்பிக்கள் 888 பேரும் 
மாநிலங்களவை எம்பிக்கள் 384 பேரும் 
அமரும் அளவு மிகப்பெரிய கட்டிடமாக புதிய 
நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளது.
மோடி நடத்தி வைக்கும் இத்திறப்புவிழா ஒரு 
கொண்டாட்டமே! அரசியல் கொண்டாட்டமே! 
பிரும்மாண்டமான ஓர் கொண்டாட்டம்! 
It is just that is all; nothing more or nothing less.

காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் இத்திறப்புவிழாவைப் 
புறக்கணிப்பதும் எதிர்ப்பதும் பாஜகவுக்கே 
அனுகூலமாக முடியும். வறட்டுத்தனமான இந்த 
எதிர்ப்பின் மூலம் மக்களின் அபிமானத்தை
காங்கிரஸ் இழக்க நேரிடும்.

புதிய கட்டிடத்தில் நாடாளுமன்றக் கூட்டம் 
நடைபெறும்போது ராகுல் காந்தியால் அக்கூட்டத்தில் 
பங்கேற்க இயலாது. ஏனெனில் அவர் தமது எம்பி 
பதவியை நீதிமன்றத் தீர்ப்பால் இழந்து 
விட்டார். எனவே புதிய கட்டிடத் திறப்பு 
விழா,  மோடி திறந்து வைக்கிறார் 
என்ற செய்தியே சோனியா காந்திக்கு எரிச்சல் 
ஊட்டுகிறது. எனவே காங்கிரசின் எதிர்ப்பு 
வரம்பை மீறுகிறது.    

காங்கிரசாலும் சரி, கம்யூனிஸ்டுகளாலும் சரி,
மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை 
எதிர்க்க முடியவில்லை. பாஜகவின் சித்தாந்தமான 
இந்துத்துவம் எனப்படும் இந்து தேசியவாதத்தை 
எதிர்கொள்ள இயலவில்லை. அவர்கள் செய்வதெல்லாம் 
நாடாளுமன்றப் புதிய கட்டிடக் திறப்பு விழாவைப் 
புறக்கணிக்கும் மக்களால் விரும்பப்ப்டாத 
செயல்கள் மட்டுமே.

வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிப்பதற்கோ அல்லது 
வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பதற்கோ 
நாடாளுமன்றப் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் 
ஒன்றுமில்லை! கொண்டாட்டங்கள் இயல்பானவை.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் இந்தியாவின் 
சொத்து. இதை மக்கள் வரவேற்கவே செய்கின்றனர்.
எனவே எதிர்ப்புக் கூச்சலுக்கு மக்களிடம் வரவேற்பு
இல்லாமல் போவதில் வியப்பில்லை.
************************************************


எனவே திறப்பு விழாவை எதிர்க்கும் காங்கிரசின்    நீண்ட   இந்தியாவின் 

புதிய கட்டிடக் திறப்பு என்பது அரசியலில் 
ஒரு trivial matter. இதன் அளவை விடப் பலமடங்கு 
உருப்பெருக்கி வைத்துக்கொண்டு இதை அணுகுவது 
பேதைமையுள் எல்லாம் பேதைமை! மார்க்சிய 
லெனினிய அணுகுமுறையில் இது ஒரு TRIVIAL 
MATTER. இதை மிகை மதிப்பீடு செய்பவன்
ஒரு CLOWNஆக மட்டுமே இருக்க முடியும்.

போங்க போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தாப் 
பாருங்க! வேலை எதுவும் இல்லாதவன் டிவி 
சீரியல்களைப் போய்ப் பார்த்து விட்டு
விமர்சனம் எழுதுங்க, போங்க!!
-----------------------------------------------------------------
இந்தியாவின் அரசியல் எப்போதுமே மிகவும் நீண்டது.
இந்நீண்ட அரசியலில் நாடாளுமன்றத்தின் புதிய 
கட்டிடத் திறப்பு விழா என்பது உண்மையிலேயே 
ஒரு trivial matter. ஒரு மனிதனின் வாழ்வில் 60 அல்லது 
70 பிறந்த நாட்கள் வரும். இதில் ஒரு பிறந்த நாள் 
போன்றதுதான் நாடாளுமன்றத் திறப்பு விழா.
எனவேதான் மார்க்சிய லெனினியம் இதை 
trivial matter என்கிறது. Out of 60 or 70 birthday parties 
in a man's life one single party may be  trivial; is it not?

புதிய கட்டிடக் திறப்புவிழாவை அளவுக்கு மேல் 
பெரிதாக்கிக் கொண்டு அஞ்சுவதும் புலம்புவதும் 
பேதைமையுள் எல்லாம் பேதைமை.      


முக்கிய அறிவிப்பு!
------------------------------
Inaugural ceremony is TRIVIAL என்று கூறியுள்ளேன்.
அது ஒரு theorem ஆகும். எதிர்மறையான கமெண்ட் 
எழுத விரும்பும் அன்பர்கள் அருள்கூர்ந்து  
Inaugural ceremony is TRIVIAL என்ற எனது கூற்றை 
DISPROVE செய்த பின்னர் கமெண்ட் எழுதுமாறு 
கேட்டுக் கொள்கிறேன். 
  
  

     
 



  







 
      

வெள்ளி, 26 மே, 2023

 2g case verdict and appeal  position as on may 2023
---------------------------------------
1) 2g is 3 in 1 case. 2 cases by CBI and the third by ED.
SPECIAL COURT VERIDCT ON DEC 2017.
ALL ARE ACQUITTED.

erroneous conclusions by spl court.
next hearing on May 29, 2023.
Acquitted
1. siddhartha behura 
2 a raja
3kanimozhi
chandolia
sarath reddi sun tv
Dhayalu ammal

witness given by
Neera Radia, Anil Ambani, his wife Tina Ambani as prosecution witness
 In the charge sheet filed in 2011 CBI HAD SAID A LOSS OF 30984 CRORE RUPEES.
122 LICENCES WERE CANCELLED IN Feb 2012 

ED said this is a typical money laundering case

புதன், 24 மே, 2023

நான் போற்றும் நயினார்!
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------- 
கணினி மென்பொருள் பொறியாளர் 
தோழர் சிவசங்கர நயினார் அவர்கள் 
நான் எழுதிய "மார்க்சியப் பார்வையில்
அத்வைதம்" என்ற நூலை அனுப்புமாறு 
கேட்டுக் கொண்டார். அஞ்சலில் 
அனுப்பினேன்.

அதற்கான விலையாக ரூ 700 அனுப்பி 
வைத்துள்ளார். நூலின் விலை ரூ 70
மட்டுமே. நூலின் விலையைப் போல 
10 மடங்கு பணத்தை அனுப்பி உள்ளார்.

நூலின் விலை போக மீதியை அவருக்கே 
G Pay மூலம் அனுப்ப எண்ணினேன். ஆனால் 
அனுப்பிய தொகையை ஏற்றுக் கொள்ளுமாறு 
தோழர் சிவசங்கர நயினார் கேட்டுக்கொண்டார்.
எனவே ஏற்றுக் கொண்டேன்.

நூல் வேண்டுவோர் கேட்கும்போது அஞ்சல் 
செலவு பற்றிக் கவலை கொள்ளாமல் 
SPEED POSTல் அல்லது கூரியரில் அனுப்ப 
தோழர் சிவசங்கர நயினார் வழங்கிய 
பணத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.

தோழர் சிவசங்கர நயினார் அறிவியல் கற்றவர்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவியல் சஞ்சிகையான 
"அறிவியல் ஒளி" ஏட்டுக்குச் சந்தா கட்டி
வாங்கிப் படிப்பவர். நான் தொடர்ந்து எழுதி வரும் 
கணக்கற்ற அறிவியல் கட்டுரைகளை அவர் 
விடாமல் வாசித்து வருபவர்.

எனவே கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற 
அடிப்படையில் அவர் என் அறிவியல் படைப்புகள் 
மீதும் என் மீதும் அபிமானம் கொண்டுள்ளார்.
எங்கள் இருவரையும் ஐக்கியப் படுத்தும்
காரணி அறிவியலே.

நானும் அவரும் கோனார் என்பதாலோ 
அல்லது நானும் அவரும் திருநெல்வேலி சைவப் 
பிள்ளைமார் என்பதாலோ அல்லது நானும் 
அவரும் நாடார் என்பதாலோ எங்களுக்கு இடையில் 
ஐக்கியம் ஏற்படவில்லை. எங்கள் இருவரையும் 
ஐக்கியப் படுத்தியது அறிவியலே!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
அறிவியல் கற்றாரை அறிவியல் கற்றாரே காமுறுவர்!
அறிவியல் கல்லாதார் காமுறார்! (காமுற மாட்டார்)
அவர்கள் அறிவியலாளர்கள் மீது கல்லெறிவர்; 
அதுவும் குட்டி முதலாளித்துவ அற்பப்பயல்களைக் 
கூட்டுச் சேர்த்து கொண்டு! 

"நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்- கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்"
(ஒளவையார், மூதுரை)
********************************************




      





     

      

திங்கள், 22 மே, 2023

புதியதொரு அறிவியல் கலைச்சொல்லை உருவாக்குவது 
குழந்தையைப் பெறுவது போன்றது!
அறிவியல் எழுத்தாளனுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது!
ஆனால் தற்குறித் தமிழ்ப்பண்டிட்டு நோகாமல் 
ரூ 2 லட்சம் விருது வாங்கி விடுவான்!
---------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
4G, 5G பற்றியெல்லாம் அறிவோம்.
அலைக்கற்றைகளைப் பற்றிப் பேசும்போது 
Backward compatibility என்ற சொல் அடிக்கடி 
புழங்கும். மிகவும்  டெக்னிக்கல்
முக்கியத்துவம் உடைய சொல் இது.  

அதாவது ஒரு 5G செல்போன் வாங்குகிறீர்கள்.
அது 5Gயிலும் வேல செய்கிறது. கூடவே 
5Gக்கு முந்திய 4Gயிலும் வேலை செய்கிறது 
என்றால், அந்த செல்போன் BACKWARD 
COMPATIBILITY உடைய போன் ஆகும்.

இதற்கு ஒரு நல்ல தமிழ்ச் சொல் வேண்டும்.
உருவாக்க வேண்டும். உருவாக்கினேன்.
"முற்பொருத்தம்" என்ற சொல்லை உருவாக்கினேன்.

BACKWARD COMPATIBILITY = முற்பொருத்தம்.

அறிவியல் கலைச்சொல்லை உருவாக்குவது தமிழில் 
மிகவும் சிரமம். இது போன்று நிறையச்ச சொற்களை 
உருவாக்கினால்தான் ஒரு கட்டுரையை எழுத 
இயலும்.

அறிவியல் கட்டுரை எழுதுவது தினத்தந்தியில் 
கன்னித்தீவு எழுதுவது போன்றதல்ல.

இதுவரை நூற்றுக் கணக்கான அறிவியல் 
கட்டுரைகளை எழுதி உள்ளேன். பல நூற்றுக்கும் 
மேற்பட்ட அறிவியல் கலைச்சொற்களை 
உருவாக்கி உள்ளேன். ஆனால் அரசின் 
அங்கீகாரமோ விருதோ ஒரு இழவும் கிடையாது.

ஆனால் ஒரு தற்குறித் தமிழ்ப் பண்டிட்
தொல்காப்பியர் பேரவை, பவணந்தி முனிவர் 
பேரவை என்று லெட்டர் பேட் வைத்துக் கொண்டு
அதிகாரிகளைக் காக்காய் பிடித்து விருது 
வாங்கி விடுவான்.

ரூ 2 லட்சம் பணம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ்,
அரசின் அங்கீகாரம், சமூக கவுரவம் என்று 
தற்குறித் தமிழ்ப் பண்டிட் மஞ்சள் குளிப்பான்.
ஆனால் கஷ்டப்பட்டு அறிவியலைத் தமிழில் 
சொல்கிறவனுக்கு தமிழ்ச் சமூகமோ  
அரசோ ஒரு மிகச் சிறிய அங்கீகாரத்தைக் 
கூடத் தராது.

கம்பர் விருது, வம்பர் விருது, சூத்துவேந்தர் 
விருது, கிழங்கு அடிகள் விருது, சுவருப்  
புலவர் விருது, ஈரமாமுனி விருது என்று 
கணக்கற்ற விருதுகள்.

ஆனால் சி வி ராமன் பெயரிலோ ராமானுஜன் 
பெயரிலோ எந்த விருதும் கிடையாது.

எந்தத் தகுதியும் இல்லாமல் காக்காய் பிடித்து 
விருதுகளை வாங்கியவன் வாழ்ந்து விடுவானா?
அவன் பாம்பு கடித்துச் செத்துப் போவான் 
என்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.

தகுதியற்ற பீடைகளை விருதுக்குத் தேர்ந்தெடுத்த
அதிகாரி குடும்பத்தோடு லாரியில் அடிபட்டுச் 
செத்துப் போவான் என்கிறார் இசக்கிமுத்து 
அண்ணாச்சி மேலும்.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
விருது கிடைக்கவில்லையே என்ற கோபத்திலோ 
ஆதங்கத்திலோ எழுதப்பட்டதல்ல இந்தப் 
பதிவு. பூர்ஷ்வா விருதுகள் என்னுடைய 
மலத்துக்குச் சமம். இது நக்சல்பாரிக்குரிய 
இடம். இது மார்க்சிய லெனினியக் களம்.
இது ANNIHILATION நடந்த இடம். எனவே 
பூர்ஷ்வா விருதுகள் மலத்துக்குச் சமமாகவே  .
கருதப்படும்.
*******************************************
 

  




 
     
 
      
























தமிழ்ப் பண்டிட்டுகள் தற்குறிகளா?
தமிழக அரசின் கல்விக்கொள்கை வகுப்புக்குழுவில் 
தமிழ்ப் பண்டிட்டுகள் இடம் பெறுவது 
பயனற்றது என்பதற்கான நிரூபணம்!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------  
1) மார்க்சியம் பொருளுற்பத்திக்கு முதன்மை அளிக்கும் 
தத்துவம். பொருளுற்பத்தியை அடிப்படையாகவும் 
மையமாகவும் கொண்டே மார்க்சிய ஆய்வுகள் 
அமைகின்றன. மார்க்சிய பாலபாடம் கற்றோர் 
அனைவரும் இவ்வுண்மையை நன்கறிவர்.

2) கல்வி என்பது என்ன? ஒரு சமூகத்தின் 
பொருளுற்பத்தியை மேற்கொள்வதற்குத் தேவையான 
அறிவையும் பயிற்சியையும் வழங்குவதே கல்வி.
குழந்தைகளும் சிறுவர்களும் வளர்ந்து பெரியவர்கள் 
ஆகும்போது, தங்கள் சமூகத்தின் பொருளுற்பத்தியை   
மேற்கொள்ள வேண்டும். அதற்கு அவர்களைத் தகுதி 
உடையவர்களாக்குவதுதான் கல்வி.

3) பொருளுற்பத்தி எவ்வாறு நிகழ்கிறது? 
பொருளுற்பத்தியை அறிவியல் நிகழ்த்துகிறது.
அறிவியல் இல்லாமல் பொருளுற்பத்தி நடக்காது.
கால்குலஸ் இல்லாமல், வெக்டர் அல்ஜீப்ரா இல்லாமல்,
முக்கோணவியல் (trigonometry) இல்லாமல், இயற்பியல் 
வேதியல் இல்லாமல் எந்த ஒரு சமூகத்திலும் 
பொருளுற்பத்தி நடைபெற இயலாது.

4) எனக்கு வெண்பா இயற்றத் தெரியும். இதுவரை 
பல நூற்றுக் கணக்கில் வெண்பாக்களை இயற்றி 
உள்ளேன். சான்றாக ஒரு வெண்பா. எட்டுத்தொகை 
நூல்களை மாணவர்கள் எளிதில் நினைவில் கொள்ள 
உதவும் கீழ்வரும் வெண்பாவை மனனம் செய்து 
கொள்ளுங்கள்.

5) வளையணிந்த பெண்ணே தொகையெட்டும் கேளாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.
  
6) என்றாலும் எனக்கு வெண்பா இயற்றத் தெரியும்
என்று சொல்லிக் கொண்டு, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் 
வேலை கேட்டுச் சென்றால் என்ன ஆகும்? அந்த 
நிறுவனத்தின் HR என்னைச் செருப்பால் அடித்து
விரட்டுவான். ஏனெனில் பொருளுற்பத்திக்கு 
வெண்பா இயற்றத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
    
7) மாறாக எனக்கு கால்குலஸ் தெரியும்; Integration by 
partsல் நான் நிபுணன்; எனக்கு நியூட்டன் ராப்சன் 
மெதட் தெரியும்; Partial differential equationsஐ அனாயாசமாக 
சால்வ் பண்ணைக் கூடியவன் நான் என்று சொன்னால் 
அந்த HR என்னை உட்கார வைத்துப் பேசுவான்.
அவனுடைய Bossஐ நான் சந்திப்பதற்கு ஏற்பாடு 
செய்வான். இதற்கெல்லாம் காரணம் மிக மிக 
சிம்பிள்! பொருளுற்பத்தியை நிகழ்த்த வல்லவனை 
சமூகம் மதிக்கும்; பொருளுற்பத்திக்குப் பயன்படாதவனை 
சமூகம் ஒதுக்கும்.   

8) மயில்சாமி அண்ணாத்துரை சந்திரயான் என்னும் 
கோள்சுற்றியை (orbiter) நிலவைச் சுற்றி வர வைத்தார்.
அவருக்கு வெண்பா இயற்றத் தெரியாது. 
ஆகுபெயருக்கும் அன்மொழித்தொகைக்கும் உள்ள 
வேறுபாடு தெரியாது. ஆனால் அவருக்கு celestial mechanics
தெரியும். எனவேதான் உலகம் அவரைக் கையெடுத்துக் 
கும்பிடுகிறது. Celestial mechanics படிக்காமல், இரண்டாம் 
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகைப் 
புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை பற்றி
மட்டுமே அறிந்தவர் என்றால், அவருக்கு இஸ்ரோவில் 
கக்கூஸ் கழுவும் வேலைகூடக் கிடைத்திருக்காது.        

9) தமிழ்ப் பண்டிட்டுகள் என்பவர்கள் யார்? 
சமூகத்தின் பொருளுற்பத்தியில் இருந்து 
முற்றிலுமாகத் தங்களைத் துண்டித்துக் கொண்டு 
பொருளுற்பத்திக்கு அப்பால் வெகுதூரம் தள்ளி 
நிற்பவர்களே தமிழ்ப் பண்டிட்டுகள். எனவே அவர்கள் 
பொருளுற்பத்திக்குப் பயன்படாதவர்கள். அதாவது 
சமூகத்திற்குப் பயன்படாதவர்கள்.

10) இந்த இடத்தில் இந்தியாவின் பொருளுற்பத்தி 
மொழி எது என்ற கேள்வி முக்கியமானது. தமிழோ 
இந்தியோ சமஸ்கிருதமோ அல்லது வேறெந்த இந்திய 
மொழியுமோ இந்தியாவின் பொருளுற்பத்தி 
மொழி அல்ல. இந்தியாவின் பொருளுற்பத்தி 
மொழி ஆங்கிலமே.

11) உற்பத்தி ஆங்கிலத்தில்தான் நடக்கிறது. 
உற்பத்திக்கு உரிய படிப்பு, கல்வி, செயல்முறை 
ஆகிய அனைத்துமே ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
ஒரு சமூகத்தில் உற்பத்தி மொழி மட்டுமே 
எல்லா அம்சங்களிலும் முதன்மை பெறும். 
உற்பத்தியில் இல்லாத மொழிகள் பண்பாட்டுத் 
தளத்தில் மட்டுமே எஞ்சி நிற்கும். தமிழும் சரி,
ஏனைய இந்திய மொழிகளும் சரி, உற்பத்தியில் 
இடம் பெறாமல் பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே 
நிலவுகின்றன என்ற உண்மையை உணராத 
எவருக்கும் மொழி குறித்துப் பேசும் தகுதி கிடையாது.    

12) பொருளுற்பத்தியில் இல்லாத தமிழைப் 
போதிக்கும் தமிழ்ப் பண்டிட்டுகள், கல்விக் 
கொள்கை வகுப்பதில் என்ன பெரிய பங்களிப்பைச் 
செய்து விட முடியும்? கல்வி என்றாலே பொருளுற்பத்தி 
என்றுதான் அர்த்தம். அப்படி இருக்கும்போது 
உற்பத்தியோடு தொடர்பற்ற தமிழ்ப் பண்டிட்டுகள் 
எப்படி கல்விக் கொள்கையை வகுக்க இயலும்?

13) சமூகத்தின் பொருளுற்பத்தி குறித்த எந்த 
அறிவையும் பெற்றிராத தமிழ்ப் பண்டிட்டுகளை 
அதிக அளவில் அரசின் துறைகளில், அரசின் கொள்கை 
வகுக்கும் அமைப்புகளில் நியமித்துக் கொண்டே 
போவது எப்படிச் சரியாகும்? எவ்விதத்தில் 
நியாயம் ஆகும்?

14) தமிழ்ப் பண்டிட்டுகள் தற்குறிகளா என்ற கேள்வி 
எழுகிறது. இதற்கு ஒரே ஒரு விடைதான் இருக்கிறது.
அது தீர்க்கமான விடை! The answer will be in the affirmative!   
அறிவு என்பது உற்பத்தி சார்ந்தது. உற்பத்தியில் 
இருந்து விலகி நிற்போர் எங்ஙனம் அறிவைப் 
பெற இயலும்?

15) கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் அறிவியல் 
அறிஞர்கள் அல்லவா இடம் பெற்றிருக்க வேண்டும்?
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தலைமையில் 
அல்லவா இக்குழு இயங்க வேண்டும்! ஒரு நீதியரசர் 
தலைமையில் இயங்குவதை விட சிவன் தலைமையில் 
இயங்குவது பெரும் பயன் தருமன்றோ! 
  
16) ஐயம்பெருமாள் (கோளரங்க முன்னாள் இயக்குனர்)
மயில்சாமி அண்ணாத்துரை (இஸ்ரோ)
ரமணன் (வானிலை ஆய்வு மையம்)
டாக்டர் சுதா சேஷையன் (முன்னாள் துணைவேந்தர்)
போன்ற அறிவியல் அறிஞர்கள் அல்லவா புதிய 
கல்விக் கொள்கை வகுக்கத் தகுதியானவர்கள்!

17) கொள்கை வகுக்கும் குழு பலரையும் சந்தித்து 
கல்வி குறித்து ஆலோசித்தாக குழுவின் தலைவர் 
நீதியரசர் முருகேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். 
ஆனால்  அக்குழு தமிழில் அறிவியலை எழுதும் 
அறிவியல் எழுத்தாளர்கள் எவரையும் சந்திக்கவே 
இல்லை. ரமணன், ஐயம்பெருமாள், மயில்சாமி 
அண்ணாத்துரை ஆகியோர் குழுவில் இடம் 
பெற்றிருந்தால், அவர்கள் முதல் வேலையாக 
அறிவியல் எழுத்தாளர்களான எங்களைக் கலந்து 
ஆலோசித்து இருப்பார்கள் அல்லவா?  நாங்களும் 
அவர்களை எளிதில் தொடர்பு கொள்ள இயலும் அல்லவா!         

18.. அடுத்து தமிழ்ப் பண்டிட் என்ற சொல்லே 
இளக்காரம் நிரம்பிய சொல் என்று சொல்லப் 
படுகிறது. என்னுடைய பள்ளிக் கல்வியை 
1960-70களில் முடித்தேன். அக்காலத்தில் 
தமிழாசிரியரை அனைவருமே தமிழ்ப் பண்டிட்
என்றுதான் சொல்லுவார்கள்; அழைப்பார்கள். அதில் 
எவ்வித இகழ்ச்சிக் குறிப்பும் (contemptuous connotation) 
இருந்தது இல்லை. பின்னாளில் தமிழ் சினிமாக்களில் 
தமிழ்ப் பண்டிட்டுகள் என்றாலே  லூசுப் பயல்கள் என்று 
கூத்தாடி இயக்குனர்கள் சித்தரித்தனர். அதன் 
விளைவாக தமிழ்ப் பண்டிட்டுகள் இகழ்ச்சிக்கு
இலக்காயினர். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக 
இயலும்?

19) புரட்சியின் பின் சீனத்தில் கல்லூரிக் கல்வியை 
சரி செய்ய முயல்கிறார் மாவோ. இலக்கியம், வரலாறு 
போன்ற arts group படிக்கும் மாணவர்களை உடனடியாக 
படிப்பைத் துறந்து கிராமங்களுக்குச் செல்லுமாறு 
கட்டளை இடுகிறார். ஆனால் அதே வேகத்தை 
மாவோ  அறிவியல் படிக்கும் மாணவர்களிடம் 
காட்டவில்லை. அறிவியல் படிப்புகள் உற்பத்தி 
சார்ந்தவை என்பதால் அறிவியல் மாணவர்களிடம் 
நிதானம் காட்டுகிறார் மாவோ; அவர்களும் 
கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற  
நிலை இருந்தபோதும். ஆக அறிவியல் 
படிப்பையும் இலக்கியப் படிப்பையும் பிரித்துப் 
பார்க்கும் எனது பார்வைக்கு மாவோவின் 
அங்கீகாரம் இருக்கிறது.
(பார்க்க: Selected works of Mao volume IX). 

20) கடந்த 15 ஆண்டுகளாக தமிழில் அறிவியலைத் 
தீவிரமாக எழுதி வருகிறேன். இதுவரை நூற்றுக்கும் 
மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். 
நாளிதழ் அறிவியல் ஏடுகளில் அவை பிரசுரமாகி 
உள்ளன. அறிவியல் வீடியோக்களை வெளியிட்டு 
உள்ளேன். Print media, Electronic media, Social media
ஆகியவற்றிலும் சமூகத்தின் பொதுவெளியிலும் 
அறிவியலைப் பரப்பி வருகிறேன்.அறிவியல் 
வட்டாரங்களில் நன்கு அறிமுகமான,  மக்களால் 
அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் பரப்புநர் நான்.
தமிழ் தமிழ் என்று நான் வெற்றுக் கூச்சல்
போடுவதில்லை. தமிழில் அறிவியலை எழுதி
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்கும் இமாலய 
முயற்சியில் ப்பீடு நடை போடும் வெகு சிலரின் 
நான் ஒருவன். வெண்பாவும் இயற்றுகிறேன்:
String theory என்பது இன்றைய இயற்பியலின் உச்சம்.
அவ்வளவு பிரசித்தி பெற்ற string theory பற்றி 
இதுவரை தமிழில் பொதுவெளியில் ஒரே ஒரு 
கட்டுரைதான் எழுதப் பட்டுள்ளது. அதை 
எழுதியவன் இந்தக் கட்டுரையாசிரியர்.

முடிவுரை:
---------------
 சமூகத்தின் பொருளுற்பத்தியோடு எவ்விதத் 
தொடர்புமற்ற தமிழ்ப் பண்டிட்டுகள் 
தங்களின் தகுதிக்கு மீறிய அங்கீகாரத்தை 
தமிழ்ச் சமூகத்தில் ஏற்கனவே பெற்று விட்டார்கள்.
பல்கலைகளின் துணைவேந்தர் பதவிகள் 
அனைத்தும் தமிழ்ப் பண்டிட்டுகளுக்கே.
(தெபொமீ, முவ, வ சுப மாணிக்கம், ஒளவை 
நடராசன் போன்றோர்). பாவேந்தர் விருது 
முதல் அரசு வழங்கும் அனைத்து விருதுகளும் 
தமிழ்ப் பண்டிட்களுக்கே. ஆனால் சி வி ராமன் 
பெயரிலோ ராமானுஜன் பெயரிலோ எவ்வித 
விருதும் கிடையாது. அரசு ஒரு கண்ணில் 
வெண்ணெயையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் 
வைக்கிறது. இதுதான் இன்றைய அவலம்.
*************************************************
மார்க்சியப் பார்வையில் அத்வைதம் 
என்ற நூலில் இருந்து......
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன், நூலாசிரியர்.
--------------------------------------------------------------- 
அத்வைதம் உயர்குடிப் பெண்களின் 
லேடீஸ் கிளப் தத்துவம். பட்டுச் சேலைக்கு மேல் 
ஒட்டியாணம் அணிபவர்களின் தத்துவம்.

அத்வைதத்தின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் 
மெய்யான புறவுலகை மாயை என்று மறுத்ததுதான்.
அத்வைதம் ஒரு வாழ்வு மறுப்புத் தத்துவம் 
(Life negation philosophy) .

இதற்கு மாறாக பொருள்முதல்வாதம் ஒரு 
வாழ்வு ஏற்புத் தத்துவம்.
(Life Affirmation Philosophy).
-----------------------------------------------------------        

ஞாயிறு, 21 மே, 2023

 தமிழ்நாட்டுக்கென்று தனியான கல்விக் கொள்கை!
கொள்கை வகுக்கும் குழுவில் மீண்டும் மீண்டும் 
தமிழ்ப் பண்டிட்டுகள் நியமனம்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
முனைவர் ஜி பழனி என்னும் சென்னை பல்கலை 
தமிழ் இலக்கிய பேராசிரியர் (ஒய்வு) அவர்கள் 
தமிழக அரசின் கல்விக் கொள்கை வகுப்புக்
குழுவின் உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இது மிகுந்த அருவருப்பைத் தருகிறது. எவ்வளவு 
காலம்தான் தற்குறிகளான தமிழ்ப் பண்டிட்டுகளையே 
முக்கியமான பதவிகளில் நியமித்துக் கொண்டு 
இருப்பீர்கள்?

அறிவியல் சார்ந்து இயங்கும் அறிஞர்களை 
கல்விக்குழுவில் நியமிப்பதற்குப் பதிலாக 
தற்குறித் தமிழ்ப் பண்டிட்டுகளையே 
நியமிக்கும் இழிவு என்றைக்கு முடிவுக்கு வரும்?

இஸ்ரோவின் முன்ன தலைவர் சிவன் இருக்கிறார்.
அவரை கல்விக் குழுவில் நியமித்தால் என்ன?
உலக அளவில் வழங்கப்படும் தியடோர் வான் கார்மன் 
விருது பெற்றவர் சிவன். அறிவியல் கல்வி குறித்து 
சரியான கொள்கையை அவரால் வகுக்க இயலும்.
ஆனால் தமிழ்ப்பண்டிட் பழனியால் என்ன முடியும்?

இஸ்ரோவில் பணியாற்றி ஒய்வு பெற்ற சந்திரயான் 
புகழ் மயில்சாமி அண்ணாத்துரை இருக்கிறார். அவரை 
கல்விக்குழுவில் நியமித்தால் என்ன?

வானிலை ஆய்வு மைய இயக்குநராகப் பணியாற்றி 
ஒய்வு பெற்ற முனைவர் ரமணன் அவர்கள் இருக்கிறார்.
அவரை கல்விக் குழுவில் நியமித்தால் என்ன?

அறிவியல் கல்வியைப் பற்றியே கவலைப்படாமல் 
தமிழ்ப் பண்டிட்டுகளையே கட்டி அழுது 
கொண்டிருந்தால் எப்படி?

நீதியரசர் முருகேசன் தலைமையில் இயங்கும் 
இக்கல்விக்குழு தமிழில் வெளிவரும் சிறந்த 
அறிவியல் பத்திரிகையான அறிவியல் ஒளியில் 
எழுதும் கட்டுரையாசிரியர்களிடம் கலந்து 
ஆலோசித்ததா? இல்லையே! பின்பு இந்தக் குழு 
எதற்குப் பயன்படும்?

*********************************************888 
  
    

வியாழன், 18 மே, 2023

தமிழரசனும் மணியரசனும் 
தனித்தமிழ்நாடு கோரிக்கையும்!
RDX கட்டுரை!
----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
இந்திய ஏகாதிபத்தியத்திடம் இருந்து தமிழ்நாடு 
விடுதலை அடைய வேண்டும் என்றும் விடுதலை 
அடைந்த  தனித்தமிழ்நாடு என்பதே தங்களின் 
லட்சியம் என்றும் பகிரங்கமாகப் பிரகடனம் 
செய்தார் தோழர் தமிழரசன். இந்த நிலைபாடு 
எடுத்ததுமே தான் அதுவரை செயல்பட்ட 
மக்கள் யுத்தக் குழு என்னும் நக்சல்பாரி 
அமைப்பிலிருந்து வெளியேறினார்.

தனித்தமிழ்நாட்டை எப்படி அடைவது என்ற 
கேள்வியைப் பொறுத்தமட்டில் வன்முறையான 
போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்திய 
ஏகாதிபத்தியத்தில் இருந்து பிரிந்து தனிநாடு 
அமைக்க முடியும் என்று தெளிவுபட அறிவித்தார் 
தோழர் தமிழரசன்.

எனவே தமிழ்நாடு விடுதலைப் படை என்ற 
பெயரில் தமது இயக்கத்திற்கான ராணுவத்தைக் 
காட்டினார் தோழர் தமிழரசன். நவீன ஆயுதங்களை 
வாங்கி, தக்க இளைஞர்களைப் படையில்
சேர்த்து ஆயுதப் பயிற்சியும் அளித்தார் தோழர் 
தமிழரசன்.       

தனித்தமிழ்நாடு என்னும் லட்சியத்தை அடைய 
முடியாமல் தமிழரசன் தோற்றிருக்கலாம். ஆனால் 
தனித்தமிழ்நாட்டை அடைவதற்கான ஒரே பாதை 
தமிழரசன் காட்டிய பாதையே என்பது முக்கால 
உண்மையாகத் திகழ்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போர் புரியாமல்,
இந்தியாவின் துணை ராணுவப் படைகளை எதிர்த்துப் 
போரிட்டு முறியடிக்காமல், வன்முறையான 
இப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் 
இன்னுயிரைத் தியாகம் செய்யாமல் தனித்தமிழ்நாடு 
என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற நூலில் 
வர்ணித்தது போன்று ரஷ்யாவை போல்ஷ்விக்குகள்
பத்தே நாளில் கைப்பற்றியது போல தனித்தமிழ்நாட்டை 
பத்து நாளில் அடைய முடியாது.  இந்திய 
ராணுவத்துடனான யுத்தம் ஆண்டுக் கணக்கில்
நீடிக்கும். மேற்கூறிய அனைத்திலும் அதீதத் 
தெளிவுடனும் ஒரு பாறையைப் போல் உறுதியுடனும் 
இருந்தவர் தோழர் தமிழரசன். தமது கருத்துக்கள்,
தமது லட்ச்சியம், அதை அடையும் வழிமுறைகள் 
என அனைத்தையும் பகிரங்கமாக பிரகடனம் 
செய்தவர் தோழர் தமிழரசன்.

தமிழரசன் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகி 
இருக்கலாம். ஆனால் அவர் முன்வைத்த தமிழ்நாட்டு 
விடுதலைக்கான ராணுவ உத்திகள் எவையும் 
காலாவதி ஆகவில்லை. அவை இன்றளவும் 
பசுமை மாறாமல் அப்படியே நீடிக்கின்றன.
நாளையும் நீடிக்கும்.

எனவே எவர் ஒருவராவது இந்தியப் பேரரசில் 
இருந்து பிரிந்த தனித்தமிழ்நாடு வேண்டும் என்று 
நினைப்பாரேயானால், அதை இந்திய ராணுவத்தை 
எதிர்த்த வன்முறையான போராட்டத்தின் மூலமாக 
மட்டுமே அடைய முடியும் என்ற ஒளிவீசும் 
உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

அதற்கு மாறாக முகநூலில் புரட்சிகரமாக சில 
பதிவுகளை எழுதுவதன் மூலமோ, கருத்தரங்குகளை 
நடத்துவதன் மூலமோ, காலையில் கைதாகி 
மாலையில் விடுதலையாகும் சடங்குத்தனமான 
ஏமாற்றுப் போராட்டங்களை நடத்துவதன் 
மூலமோ அடைய முடியாது. இது முக்கால 
உண்மை ஆகும். இதை ஏற்க மறுப்பவன் 
செத்துப் போன பிணத்துக்குச் சமமாவான்.

தனித்தமிழ்நாடு வேண்டும் என்றும் இந்திய 
ஒன்றியத்தில் இருந்து பிரிந்து விட வேண்டும் என்றும் 
கூச்சல்கள் தமிழ்நாட்டில் கேட்கின்றன. சில 
தனித்தமிழ் தயிர்சாதப் பேர்வழிகளின் 
தொண்டைகளில் இருந்து புறப்படும் இக்கூச்சல்கள்
தேநீர்க் கோப்பைக்குள் புலாலை உருவாக்குவதுடன்  
முடிந்து விடுகின்றன.     

பெ மணியரசன், தியாகு மற்றும் சினிமாக் கூத்தாடிகள் 
செபாஸ்டியன் சைமன் என்னும் சீமான், 
வ கெளதமன் வகையறாக்கள் இவ்வாறு போலியாக 
தமிழ் தேசியம் பேசி மக்களை ஏய்த்து வருகின்றனர்.

தமிழ் தேசிய ராணுவம் இல்லாமல்,
தமிழ்நாட்டு விடுதலைப் படை இல்லாமல் 
தனித்தமிழ்நாடு என்று பேசுபவன் கோமாளி 
மட்டுமல்ல ஏமாற்றுக்காரனும் ஆவான்.

மணியரசன் சீமான் தியாகு வகையறாக்களிடம்  
ராணுவம் படை இப்படி எதுவும் கிடையாது.
ஒரு பொம்மைத் துப்பாக்கி கூட இல்லாத இவர்கள் 
தமிழ்நாடு விடுதலை பற்றிப் பேசுவது 
கனத்த மோசடியும் பெருத்த பித்தலாட்டமும் ஆகும்.

தனித்தமிழ்நாடு என்றாலும் தமிழ்நாட்டு விடுதலை 
என்றாலும் அதை தோழர் தமிழரசன் பிரகடனம் 
செய்த வன்முறைப் பாதையின் வழியாக மட்டுமே 
அடைய முடியும். வேறு மாற்று வழி எதுவும் இல்லை.  

பெ மணியரசன் ஏதேனும் படை காட்டுகிறாரா?
படை காட்டும் உத்தேசம் எதூவும் அவருக்கு உண்டா?
சினிமாக் கூத்தாடி சீமான் விடுதலைப் புலிகளிடம் 
பயிற்சி பெற்றவர் ஆயிற்றே! தேசியத்தலைவரிடம்  
நெருங்கிப் பழகியவர் ஆயிற்றே! அவர் ஏதும் 
படை கட்டுகிறாரா? இல்லையே! கண்ணுக்கெட்டிய 
தூரம் வரைக்கும் யாரும் படை காட்டவில்லையே!

படை இல்லை என்றால் தனித்தமிழ்நாடு இல்லை!
!படை இல்லை என்றால் தமிழ்நாட்டு விடுதலையும் 
இல்லை! அப்படியானால் சீமானும் மணியரசனும் 
மட்டுமல்ல, தனித்தமிழ்நாடு பற்றிப் பேசும் 
படை இல்லாத யார் எவருமே மோசடிப் பேர்வழிகள் 
என்றுதானே அர்த்தம்! இவர்கள் எல்லாருமே 
தயிர்சாதத் தலைவர்கள் என்றுதானே அர்த்தம்!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே! சொந்த நாட்டிலே!
*************************************


   



    


      
     

 DIELECTICS ARTICLE FOR ARIVIYAL OLI  fresh today

--------------------------------------------------------
DIALECTICS IS A MERE EMPRICISM!
Dialectics always looks for a binary opposition but there are and maybe 1 or 3 or 4 or n.

கலைஞர் இறந்து விட்டார். இது monism. இதற்கு பைனரி இல்லை.
இந்தியா 1947 ஆகஸ்டு 15ல் சுதந்திரம் பெற்றது.
முக்கோணத்தின் 3 கோணங்களின் கூட்டுத்தொகை 180 டிகிரி.
தண்ணீர் ஒரு கரைப்பான்.
(a + b)^2= .........
இன்றைக்கு அமாவாசை. (This is an event celestial)

சூரியனுக்கு அடுத்து முதலில் உள்ள கிரகம் மெர்க்குரி.
---------------------------------------------------------------
கண்டதெல்லாம் பண்பு மாற்றம் என்றால், முதலாளித்துவம்
ஏகாதிபத்தியமாக மாறுகிறது. இதில் பண்பு மாற்றம் உள்ளது.
மார்க்ஸ் கூறியபடி முதலாளித்துவம் எந்த நாட்டிலும்
மார்க்ஸ் சூத்திரப்படி உருவாக்கப் போவதில்லை. எனவே மாபெரும்
பண்பு மாற்றம் உள்ளது.

ஆயின் முதலாளித்துவத்தின் நிலைமறுப்பு ஏகாதிபத்தியம்
என்று சொல்ல இயலும். இங்கு நிலைமறுப்பு வளர்ச்சிக்கானதா
நல்லதே மேலும் சுரண்டலுக்கானதா

எனவே உதாரணங்களை பிடித்துக் கொண்டு தொங்க
வேண்டாம். வடிவ உவமை வண்ண உவமை தொழில்
உவமை பண்பு உவமை. எனவே தேற்றம் என்ன
கோட்பாடு என்ன என்பதே முக்கியம். கோட்பாடு
நிரூபிக்கப்பட வேண்டும்.

ஹெக்களின் உதாரணங்கள் A என்க
ஏங்கல்ஸின் உதாரணங்கள் கணம் B என்க
நாம் எடுத்துக் கொள்வது A union B அல்ல.
மாறாக A intersection B. A diagram is necessary here 
----------------------------------------------
If there are two things in every one, one good and another bad, then no thing can e hated.

take religion. in religion too there are two things. what are they?
one good and another bad. then we have to accept the good.
then we cannot oppose religion totally

எந்த ஒன்றிலும் ஒன்றுக்கொன்று எதிரான, முரண்பட்ட
இரண்டு விஷயங்கள் இருக்கின்றன என்றால், அந்த
இரண்டு எதிர் எதிரான விஷயங்களும் இயங்கி கொண்டே
இருக்கின்றன என்றால், எந்த ஒரு பொருளும்
 stabilityயுடன் இருக்க இயலாது. ஆனால் அனுவின் இயல்பு
எனவென்றால் to attain stability. Upto atomic number 82, upto Lead
elements are stable.

Tke example Copper. What are te two opposing things in Cu?
Take example Au. ///do ////

இயங்கியல் விதிகள் இயற்கைக்குப் பொருந்தும் என்றால்,
அப்படிப் பொருந்தும் என்று இந்தப் பரிசோதனையிலாவது
நிரூபிக்கப் பட்டுள்ளதா?

சோவியத்தில் 1924-54 காலத்தில் 30 ஆண்டாக சுடாலின்
ஆட்சி நடந்தபோது நிரூபிக்கப்பட்டதா
சீனாவில் நிரூபிக்கப் பட்டதா
முதலாளிய நாடுகளில் நிரூபிக்கப் பட்டதா

எங்கல்சோ மாவோவோ விஞ்ஞானிகள் அல்ல.
அவர்கள் எப்படி இயற்கைக்கு இயங்கியல் பொருந்தும்
என்று கூற முடியும்?

lemma dilemma ஹொவ் டு how to decide which is correct? how to prove the correctness?
science includes logic but logic is not the sole thing
-----------------------------------------------------------------------------------------------
பொருள்முதல்வாதமும் மார்க்சியமும்!
பொருள்முதல்வாதத்தின் வயது 2500.
மார்க்சியத்தின் வயது 170.
பருப்பொருள் பற்றிய வரையறை சார்ந்து...
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
அறிவியலுக்கு வர்க்கச் சார்பு கிடையாது.
(Science is not class biased). பூர்ஷ்வா ரயில் என்றோ
பாட்டாளி ரயில் என்றோ எதுவும் கிடையாது.

பொருள்முதல்வாதம் என்பது முற்ற முழுக்க
அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
அறிவியலைச் சார்ந்தே அது பிறந்தது.
அறிவியலைச் சார்ந்தே காலந்தோறும் அது
வளர்ந்து வந்திருக்கிறது. பொருள்முதல்வாதமானது,
அந்தந்தக் காலக் கட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு
நேர் விகிதப் பொருத்தத்தில் (directly proportional)
இருந்து வந்திருக்கிறது. இனி இருக்கவும் வேண்டும்.

பொருள்முதல்வாதத்தின் வயது என்ன? எவ்வளவு
குறைத்து மதிப்பிட்டாலும் 2500 இருக்கும். சரி,
மார்க்சியத்தின் வயது என்ன? 1848ல் தோன்றிய
மார்க்சியத்திற்கு இன்று 170 வயது. மார்க்சும்
எங்கல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை
எழுதிய ஆண்டு 1848. இந்நூலை எழுதுவதற்கு
முன்பே மார்க்சும் எங்கல்சும் இணைந்து வேறு
சில நூல்களை எழுதி உள்ளனர். எனினும், கம்யூனிஸ்ட்
அறிக்கை எழுதப்பட்ட 1848ஆம் ஆண்டையே
மார்க்சியத்தின் பிறந்த ஆண்டாகக் கொள்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.

மார்க்சியம் பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டில்
பொருள்முதல்வாதமே தொன்மை மிக்கது. அது
மார்க்ஸ் (1818-1883) எங்கல்சுக்கு(1820-1895) முந்தியது.
மார்க்சின் ஆசான் லுத்விக் பாயர்பாக்கிற்கும்
முந்தியது. மார்க்சியத்திற்கும் பல நூற்றாண்டுகள்
முந்தியது.

லுத்விக் பாயர்பாக் (Ludwig Feuerbach 1804-1872) பல
நூல்களை எழுதியுள்ளார். அவரின் தலைசிறந்த
படைப்பாகக் (magnum opus) கருதப்படுவது 1841ல்
எழுதப்பட்ட "கிறிஸ்துவத்தின் சாரம்"
(The Essence of Christianity) என்ற நூல்.

மார்க்ஸ் ஏங்கல்சை இந்த நூல் பெரிதும் கவர்ந்தது.
அவர்களின் சிந்தனை மீது ஆற்றல் மிக்க
தாக்கத்தை ஏற்படுத்தியது. "இந்தப் புத்தகத்தைப்
படித்த உடனே நாங்கள் பாயர்பாக்கின் சீடர்களாகி
விட்டோம்" என்கிறார் எங்கல்ஸ்.

"இந்தப் புத்தகத்தைப் படித்தால்தான், அது தரும்
விடுதலை உணர்வை ஒருவர் அனுபவிக்க முடியும்"
என்று புகழாரம் சூட்டுகிறார் எங்கல்ஸ்.
" கிறிஸ்துவத்தின் சாரம்" உள்ளிட்ட பல்வேறு
புத்தகங்களில் பாயர்பாக் முன்வைத்த
பொருள்முதல்வாதக் கருத்துக்களே மார்க்சியப்
பொருள்முதல்வாதத்தின் மூலத் தோற்றுவாய்.

மார்க்சியம் என்பது ஒரு "த்ரீ  இன் ஒன்" (three in one)
தத்துவம். இயங்கியல் பொருள்முதல்வாதம்,
அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம்
என்னும் மூன்று உள்ளடக்கக் கூறுகளைக்
கொண்டதே மார்க்சியம் என்கிறார் லெனின்.
லுத்விக் பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தை
எடுத்துக் கொண்டு மார்க்சியத்தில் சேர்த்துக்
கொண்டார் மார்க்ஸ் என்கிறார் லெனின்.

இதன் பொருள் என்ன? பாயர்பாக்கின் பொருள்முதல்
வாதத்தைச் செழுமைப் படுத்திய பிறகே
மார்க்சியத்தில் சேர்த்துக் கொண்டார் மார்க்ஸ்
என்று பொருள். செழுமைப் படுத்துதல் என்றால்
என்ன? பாயர்பாக்கின் பொருள்முதல்வாதத்தில்
உள்ள தவறுகளைக் களைந்து, போதாமையை இட்டு
நிரப்பி, தேவையான இடங்களில் திருத்தம் செய்து
(addition, deletion and modification) பயன்படுத்தினார்
மார்க்ஸ் என்று பொருள்.

இது போலவே ஹெக்கலின் (Hegel 1770-1831)
இயங்கியலையும் எடுத்துக் கொண்டு
மார்க்சியத்தின் ஒரு கூறாக ஆக்கிக் கொண்டார்
மார்க்ஸ். இது குறித்து ஸ்டாலின்,
"Everybody knows that Hegel was the father of the dialectical
method.Marx purged and improved this method"' என்று கூறுகிறார்.
(பார்க்க: ஸ்டாலின் 1906-07ல் கூறியது).

சரி, மார்க்சியத்துக்கும் பொருள்முதல்வாதத்துக்கும்
உள்ள உறவு என்ன? மார்க்சியம் என்பது ஒட்டு
மொத்த மானுட விடுதலைக்கான தத்துவம்.
பொருள்முதல்வாதம் என்பது இயற்கை, பிரபஞ்சம்
ஆகியவை பற்றிய பொருளை முதன்மையாகக்
கொண்ட, கடவுளை மறுக்கிற, அறிவியல் வழிப்பட்ட
ஓர் உலகக் கண்ணோட்டம்.

கணித மொழியில் கறாராகச் சொல்வதானால்,
மார்க்சியத்தை ஒரு கணம் (set) என்று எடுத்துக்
கொண்டால், பொருள்முதல்வாதம் அதன்
உட்கணம் (sub set) ஆகும். (If Marxism were a set of collection
of theories, materialism would be its sub set).

பொருள்முதல்வாதம் ஒட்டு மொத்த  மானுடத்துக்கும்
சொந்தமானது. எந்த ஒரு அமைப்புக்கோ,
கட்சிக்கோ, இயக்கத்துக்கோ சொந்தமானது அல்ல.
லுத்விக் பாயர்பாக் ஆத்மா என்பதை
மறுப்பதற்கு முன்னாலேயே, அதுவும் 2000
ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஆத்மாவை
மறுத்தவர் புத்தர். அவரின் "நிராத்ம வாதம்"
(theory of no soul) ஆத்மா இல்லை என்று கூறும்
பொருள்முதல்வாதம் ஆகும். (பார்க்க; ராகுல
சாங்கிருத்தியாயன் எழுதிய "பௌத்தத்
தத்துவ இயல்"). புத்தர் யாரினும் மூத்த
ஆரம்ப காலப் பொருள்முதல்வாதி ஆவார்.

இந்தியத் தத்துவஞான வரலாற்றைப் படித்தால்,
இந்தியப் பொருள்முதல்வாதம் மேற்கத்தியப்
பொருள்முதல்வாதத்தை விட காத்திரமாகவும்
ஆழமாகவும் இருந்தது என்பது புலப்படும்.
மேற்கத்தியப் பொருள்முதல்வாதம் இரண்டாயிரம்
ஆண்டுகள் கழித்து அறிந்து கொண்டதை
இந்தியப் பொருள்முதல்வாதம் முன்னரே
சொல்லி இருந்தது என்பதும் கருதத் தக்கது.
==========================================
ளது. அந்த அளவுக்கு அது சரியானதே. ஹெக்கலின் இயங்கியலை இயற்கைக்குப் பொருத்தும்போது அது பொருந்தவில்லை. ஹெக்கல் மிகச் சிறந்த அறிஞர்தான்
என்றாலும், அவரின் இயங்கியல் இயற்கைக்குப் பொருந்துவதில்லை. தங்க ஊசி என்பதற்காக கண்ணில்
குத்திக் கொள்ள முடியாது.
=============================
 contradiction
--------------------
Is there any two opposing things or forces contained in matter?
Two opposing things in an object means, that twoo those opposites are in motion
means there is an inherent INSTABILITY. ut every object wants to e stable
and this STABILITY is the inherent property of matter.

Every atoms to attain stability.I there is no staility, then there wont be any objects and everything
would be ions.
If so, let us take a few objects and analyse.
Take Hydrogen. What are those two opposing forces/things in Hydrogen?
Binding energy, ionisation potential, ionisation energy  etc.
Take water. Take Al, Au,Fe. Cu,Zn
atoms, molecules, ions...three varieties
energy particles like Bosons, matter particles like fermions
quarks. up quark etc.

ஒவ்வொரு பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்
என்றால், ஹைட்ரஜன் என்பது வளர்ந்து வேறொன்றாக
ஆகியிருக்கும்.
118 தனிமங்கள் இன்றுண்டு.

எங்கல்சின் அறிவை விட இன்றுள்ள ப்ளஸ் டூ  மாணவனின்
அறிவியல் அறிவு அதிகம்.

தலைகீழாக நின்றவர் ஹெக்கல் அல்ல. எங்கல்சே.

மார்க்சியத்துக்கு எதிராக எமது கருத்துக்களைப்
பயன்படுத்துவது தடை செய்யப் படுகிறது.
அது தண்டனைக்குரிய குற்றமாகும். பிற்போக்குவாதிகள்
எமது கருத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது.

I am the only scientific Marxist. No other person is. There are science people.
there are marxists. but I am the only scientific marxist.

எனது நூலுக்கு எவராலும் மறுப்பு எழுத இயலாது.
மறுப்பு எழுதத் தகுதியான எவரும் இன்று எந்தக்
கம்யூனிஸ்ட் கட்சியிலும் இல்லை.

ஐன்ஸ்டின் நியூட்ரான் உதாரணம். Even Einstein did not know
about neutron இந்த 1921
-----------------=========================
1. சிந்தனை 2. சமூகம் 3. பொருள் இம்மூன்றுக்கும்
இயங்கியல் பொருந்தும் என்கிறார் ஏங்கல்ஸ்.
அடுத்து இயங்கியல் விதிகள் universal என்கிறார்.

அவை universal அல்ல.
பொருளுக்குப் பொருந்தும் என்று எவர் ஒருவரும்
இதுவரை சொல்லவில்லை, ஏங்கல்சைத் தவிர.
லெனின் மாவோ பிலக்கணவ் டிராட்ஸ்கி ரோசா
அன்வர் ஹோக்ஸ்சா யாரும் சொல்லவில்லை.

அது தப்பு என்று சொல்வது யாம் மட்டுமே.
வேறு எவரும் சொல்லவில்லை. இயங்கியல் தப்பு என்று
சிலர் சொல்லியிருக்கிறார்கள். அனால் இவ்வாறு தெளிவாக
பொருளுக்குப் பொருந்தாது என்று யாரும் சொல்லவில்லை.
அதைச் சொல்வது நான் மட்டுமே.


அடுத்து சமூகத்துக்குப் பொருந்துமா?
இது சமூகத்துக்குப் பொருந்தாது என்கிறார் மாவோ.

அடுத்து சிந்தனைக்குப் பொருந்துமா? பொருந்தும்.
அதைச் சொன்னவர் ஹெக்கல்.

சகலமும் சதா இயங்கி கொண்டே இருக்கின்றன.
இயக்கப் போக்கில் மாறிக் கொண்டே இருக்கின்றன
என்று சொன்னவர் ஹெக்கல். மார்க்ஸ் அதை வழி
மொழிந்தவர் மட்டுமே. அறிஞர் அண்ணா ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்றது போல.

சமூகத்துக்கு எப்படிப் பொருந்தாது? பொருளுக்குப்
பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்விக்கு
மாவோ போகவில்லை.
மாவோ கூறுகிறார்.
1) வளர்ச்சி என்பது cyclic. spiral அல்ல.
2) synthesis என்று கிடையாது.
3) 3 விதிகள் கிடையாது. ஒரே விதிதான்.
4) அடிமைச் சமூகம் அழிந்து  நிலவுடைமைச் சமூகம்
பிறக்கிறது. அடிமைச் சமூகத்தை அழிப்பதுதான்
நிலவுடைமைச் சமூக வளர்ச்சிக்கு நிபந்தனை. அடிமைச்
சமூகத்தில் இருந்து அதன் நல்ல அம்சங்களைத் தக்க
வைத்துக் கொள்வதோ அல்லது அதன் நல்ல கூறுகளை
அதிலிருந்து பெறுவதோ என்பதற்கு இடமில்லை. எனவே
SYNTHESIS என்பதற்கு இடமில்லை என்கிறார் மாவோ
5) முதலாளியச்  சமூகமாக மாறிய பிறகும் அமெரிக்க
சமூகத்தில் அடிமை முறை இருந்தது. அதை லிங்கன்
ஒழித்தார். அதை ஏன் அவர் தக்கவைக்கவில்லை?
தக்கவைத்தால் அது நான்சென்ஸ்
6) இந்தியாவில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
இது பழைய நிலவுடைமைச் சமூக வழக்கம். இதைத்
தக்க வைக்கலாமா? அழிக்கலாமா?
7) பெண் சிசுக் கொலை தக்க வைக்கலாமா? அழிக்கலாமா
8) பால்ய விவாகம் தக்க வைக்கலாமா அழிக்கலாமா
9) கலாச்சார புரட்சி ஏன் நடத்தினார் மாவோ?
10) சோஷலிச அமைப்பு உருவான பிறகும், பழைய
சமூகக் கூறுகளான பூர்ஷ்வா கூறுகள் அல்லது
நிலவுடைமைக் கூறுகள் இருந்தன. அதை வேரோடும்
வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்பதால்தானே
கலாச்சார புரட்சி.
ஆக SYNTHESIS எங்கே உள்ளது? இல்லையே.
SYNTHESIS என்றால் பழைய கருத்தில் இருந்தும் சிலவற்றைத்
தக்க வைத்துக் கொள்வது என்று பொருள்.

ஆக மனித சமூகத்திற்கு SYNTHESIS பொருந்தாது.

BINARYயை வலியுறுத்தும் இயங்கியல்
-------------------------------------------------------------------
இயங்கியலில் மிகப்பெரிய முக்கியமான உயிராதாரமான
அம்சம் பைனரி. எதிலும் பைனரியைத் தேடும் இயங்கியல்.
ஆனால் உலகில், பொருளைப் பொறுத்து  எல்லாவற்றிலும்
பைனரி என்பது கிடையாது. ஒருமை இருமை மும்மை
பன்மை என்று உண்டு. கணக்கில் இருமையுடன் நிற்க
இயலாது. upto n வரை போக வேண்டும். n =any number

க்ராவிட்டி is always attractive. இதற்கு எதிரான repulsionஐ
தேடித்தேடி சலித்தவர் ஏங்கல்ஸ். கிடைக்கவில்லை.
எனவே dialecticsofnature புத்தகத்தை கைவிட்டார்.
அவர் குப்பையில் வீசியதை 1927ல் ரஷ்யாவில்
பதிப்பித்து உலகிற்குத் தந்தனர். இது மூடத்தனம்.

ஏங்கல்ஸ் நியாயமானதை செய்யவில்லை.
செய்ததை நியாயப் படுத்த முயன்றார்.
அதுதான் dialectics of nature book. அதில் தோல்வி
கண்டதால் புத்தகத்தை கைவிட்டார்.

மார்க்சிய செல்வாக்கு வந்து, மார்க்சிங்க் கட்சி
ஆபீஸ் வாச்மேனுக்கு கூட செல்வாக்கு வந்த
புறச்ச சூழ்நிலை, எனவே மார்க்ஸ் ஏங்கல்ஸ் இன்சிட்டுட்டே
பதிப்பித்தது. கம்பன் வீட்டுக் காட்டுது
 திரியும் கவிபாடும்

புத்தகத்துக்கு எதிர்ப்பு வந்ததும் இங்கிலாந்து கட்சி
மோரிஸ் காணபிரேத jbs ஹால்டேன் ஆகியோரிடம்
பொறுப்பைக் கொடுத்தது. ஹால்டேனே preface
எழுதினர்
------------------------------------------------------
INDUSTRY DURING THE PERIOD OF MARX

Textile industry was the first industry and during Marxs 'period there was mainly
textile industry. During Marx period no electricity so there was no electric
industries. After Marx there was many many industries which
 Marx never predicted.

example, English Electric company in chennai.
Philips company, HMT watch company,
BHEL ig oiler production Avadi tank factory
so many industries.

Is histroy the history of class struggles/ if so it is REDUCTIONISM.
So many classes came into being.

அல்லாஹு அக்பர் மார்க்சுஹு அக்பர்.

dialectics என்பது வெறுமனே சிந்தனை சார்ந்து, சிந்திப்பதற்குப்
பயிற்சி அளிக்கும் ஒரு முறை. இயங்கியல் கற்றால்
சிந்திக்கவும் வாதம் புரியவும் தர்க்கத்தில் ஈடுபடவும்
இயலும். இயங்கியலில் செய்முறை என்பதற்கு எந்த
இடமும் கிடையாது.

உண்மைகளை வாதம் புரிந்து அறியவோ நிரூபிக்கவோ இயலாது.

இயங்கியல் முறையில் வாதம் புரிந்துதான்  புவிமையக்
கொள்கையைக் கண்டுபிடித்தார்கள்.
=====================================
Mahathma Gandhi is dead. Thi is an accepted truth.
So there is no need of dielectical investigation required here

Dielectics is needed only when there is an uncertainty regarding
the correctness off a statement.
----------------------------
எந்த ஒரு கோட்பாட்டையும், அது மார்க்சியக் கோட்பாடாக
இருந்தாலும் அல்லது அறிவியல் கோட்பாடாக இருந்தாலும்
திறனாய்வுப் பார்வையுடன் (critical outlook) அணுக வேண்டும். அப்போதுதான் அக்கோட்பாட்டைப் புரிந்து கொள்ள இயலும்.  அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும் என்று மார்க்ஸ் கூறியதன் பொருள் இதுதான். திறனாய்வுப் பார்வை இல்லாமல்
மார்க்சியத்தைக் கற்க இயலாது.

மார்க்சி யத்தைத் திறனாய்வு செய்வதா? ஐயோ என்ன கொடுமை
இது என்று பாராயணவாதிகளும் பத்தாம் பசலிகளும்
மார்க்சிய ஜெய்னுலாதீன்களும் கூச்சல் போடலாம். அப்படிக்
கூச்சல் போடுவோர் மார்க்சிய விரோதிகள்.

ஒலியின் வேகத்தைக் கண்டறிவதில் நியூட்டன் ஒரு சிறிய
பிழை செய்தார். நியூட்டனுக்குப் பின்வந்த பிரெஞ்சு விஞ்ஞானி
லாப்லேஸ் அதைத் திருத்தினார். 11ஆம் வகுப்பு  இயற்பியல்  புத்தகத்தில் இந்தப்பாடம் உள்ளது. நியூட்டன் தவறு செய்தார்
என்று பாடப்புத்தகத்தில் எழுதி இருப்பதால், நியூட்டன்
மீதான மரியாதை குறைந்து விட்டதா? இல்லையே!

மகத்தான புரட்சியாளர்கள் மார்க்சும் எங்கல்சும் தவறே
செய்யாதவர்கள் அல்ல. அவர்களின் தவறைத் திறனாய்வுப்
பார்வையுடன் அணுகுவதற்கு முன்வர வேண்டும். மார்க்சைத்
திறனாய்வுப் பார்வைக்கு உட்படுத்துவதே மார்க்சிய
விரோதம் என்று கூறுபவர்கள் மார்க்சிஸ்டுகளாக
இருக்க இயலாது. அவர்கள் மார்க்சிய மதவாதிகளே.
 
ஹெக்கலின் இயங்கியல் என்பது சிந்தனையின் விதிகளே!
---------------------------------------------------------------------------------------------------
இயங்கியல் என்பது குறைந்தது 2500 ஆண்டுத் தொன்மை மிக்கது.
கிரேக்க இயங்கியல் ஜீனோ  என்னும் தத்துவஞானியிடம்
இருந்து தொடங்கியதாக ஹெக்கல் கூறுகிறார். இந்தியா சீனா
போன்ற கீழ்த்திசை நாடுகளிலும் இயங்கியல் .இருந்தது. புத்த
மதத் துறவிகள் இயங்கியலைக் கையாண்டனர். சாக்ரட்டீஸ்
எலஞ்சஸ் (elenchus) என்னும்  கேள்விகளுடன் கூடிய விவாத
முறையைக் கையாண்டார்.

இயங்கியல் என்பது தத்துவம் அல்ல. அது ஒரு மெய்காண் முறை.
அதாவது உண்மையைக் கண்டறியும் முறை. ஹெக்கல் ஒரு
கருத்துமுதல்வாதி. அவர் மனித சிந்தனையின் விதிகளைக்
கண்டறிந்தார். அவையே ஹெக்கலின் இயங்கியல் எனப்படுகிறது.    ஹெக்கல் பருப்பொருளின் விதிகளைக் கண்டறியவில்லை.
அவர் சிந்தனையின் விதிகளையே கண்டறிந்தார் என்பதை
மனதில் பதிக்க வேண்டும்.

பொருள் என்பதே முதன்மையானது (primary). பொருளின்
பிரதிபலிப்புதான் சிந்தனை. எனவே சிந்தனை என்பது
இரண்டாம் பட்சமானது (secondary). கண்ணாடியில் முகம்
பார்க்கிறோம். கண்ணாடியில் நமது முகத்தின் பிம்பம் (image)
தெரிகிறது. கண்ணாடியில் தெரியும் பிம்பம் போன்றதே
சிந்தனை. ஹெக்கல் வகுத்தது சிந்தனைக்கான விதிகளை.
அதாவது கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான விதிகளை.

ஹெக்கலின் சிந்தனைக்கான விதிகள் பருப்பொருளுக்குப்
பொருந்தாது. கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்கான
விதிகள், அந்தப் பிம்பத்தை உண்டாக்கும்  மூலப்பொருளான
மனிதனுக்குப் பொருந்தாது. எனவே ஹெக்கலின் விதிகள்
பொருளுக்கானவை அல்ல. அவை பருப்பொருளான
இயற்கைக்குப் பொருந்தாதவை. ஒரு தீவிரக் கருத்துமுதல்வாதியான ஹெக்கல், பொருள் என்பதை
இரண்டாம் பட்சமாகக் கருதுபவர். எனவே பொருளுக்கான
விதிகளை அவர் உருவாக்கவில்லை.
-----------------------------------------------------------------------------------
நிலைமறுப்பின் நிலைமறுப்பு மட்டுமல்ல,
மார்க்ஸ் எங்கல்ஸ் கூறிய மூன்று இயங்கியல்
விதிகளும் ஹெக்கல் கூறிய விதிகளே.
கருத்து-எதிர்க்கருத்து-புதுக்கருத்து
(Thesis, anti thesis, synthesis) எனப்படும் இயங்கியலின்
முறைமையும் ஹெக்கல் கூறியதே. இதை
அப்படியே நாங்கள் எடுத்துக் கொண்டோம்
என்று மார்க்சும் எங்கல்சும் ஒப்புக்
கொண்டுள்ளனரே. இதில் எந்த ஒளிவு மறைவும்
இல்லையே.

இயங்கியலை ஹெக்கல் சிந்தனையின்
வளர்ச்சிக்கான விதிகளாகப் பயன்படுத்தினார்.
இந்த விதிகள் சிந்தனைக்கு மட்டுமல்லாமல்,
பொருளுக்கும் பொருந்தும் விதிகளாக
இருந்தன. எனவே ஹெக்கலின் இயங்கியலை
நாங்கள் அப்படியே எடுத்துக் கொண்டோம் என்று
மார்க்சும் எங்கல்சும் கூறி உள்ளனரே. 

------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இல்ல்ல்ல்லை = இல்லை.
இலக்கணப்படி இது சரி. ஏனெனில் இது ஒற்றளபடை.

இந்த வாக்கியம் சுய முரண்பாடாக உள்ளதே.
negation of negation என்பது நிலைமறுப்பின்
நிலைமறுப்புதானே. மாவோ எதை மறுத்தார்?
அருள்கூர்ந்து தெளிவாகக் கூறும்படி
வேண்டுகிறேன்.
 

தங்களின் கருத்து பின்நவீனத்துவக் கருத்து.
மார்க்சியம் துல்லியத்தை ஏற்கிறது.
பின்நவீனத்துவம் துல்லியத்தை மறுக்கிறது.
அறிவியல் என்பது துல்லியத்தைக் கொண்டது.
5ஐ 5ஆல் பெருக்கினால் 25 வரும் என்பது
துல்லியம் ஆகும். 5ஐ 5ஆல் பெருக்கினால்
24 வரும் என்பது துல்லியமற்றது. துல்லியம்
இல்லாமல் அறிவியல் இல்லை. அறிவியல்
இல்லாமல் மார்க்சியம் இல்லை. எனவே
மார்க்சியம் துல்லியத்திற்காக நிற்கிறது.
மார்க்சியம் எப்படி துல்லியத்துக்கு எதிராக
இருக்கும்?

நீண்ட தூரம் என்பது linear distance அல்ல.
எனவே கிரேன் மூலம் இதே அளவு தூரம்
பறக்க முடியும். ஒவ்வொரு திசையிலும்
கொஞ்சம் கொஞ்சம் தூரமாக இதே அளவு
தூரத்தை கிரேன் உதவியால் கடக்கலாம்.
அப்படித்தான் அவர் செய்துள்ளார். அவர்
கடந்தது linear ஆக அல்ல.

பிதற்றல் என்று நீங்கள் பயன்படுத்தும்
சொற்பிரயோகம் கண்ணியமற்றது. இதைத்
தவிர்க்க முயற்சி செய்யவும்.

கணிதச் சமன்பாடுகளின் வழியே இயங்கியலை
விளக்குவது யார்? எங்கல்ஸ். நான் அல்ல.
a, minus a, a squared ஆகியவற்றைக் கொண்டு
நிலைமறுப்பு விதியை விளக்குகிறார் எங்கல்ஸ்.
எங்கல்ஸ் என்ன சொன்னாரோ, அதை அப்படியே
நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான்.
இதெல்லாம் பிதற்றல் என்றால், தங்களின்
கூற்றுப்படி, அப்படிப் பிதற்றியவர் எங்கல்ஸ்தான்.

துல்லியம் இல்லாமல் அறிவியல் இல்லை
---------------------------------------------
பொருள்முதல்வாத இயங்கியல் வகுப்பில் (02.09.2018)
கூறப்பட்ட மேற்கோள்கள்:
------------------------------------------------------------------------------------
எனவே  இயற்கை மனித சமூகம் என்னும் இரண்டின் 
வரலாற்றில் இருந்துதான் இயங்கியலின் விதிகள் 
உருவாக்கப்பட்டன.

இயங்கியலின் மூன்று விதிகளையும் கருத்துமுதல்வாத
பாணியில், சிந்தனையின் விதிகளாக மட்டுமே 
உருவாக்கினார் ஹெக்கல்.

இயங்கியல் குறித்த ஒரு கையேட்டை எழுதுவது குறித்து 
நாங்கள் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் இயங்கியலின் 
விதிகள் மெய்யாகவே இயற்கையின் வளர்ச்சியின் விதிகள் 
என்பதையும் எனவே கோட்பாட்டு ரீதியான இயற்கை 
விஞ்ஞானத்துக்கும் அவை பொருந்தும் என்பதையும் 
உணர்த்தவே நாங்கள் விரும்புகிறோம்.

இயற்கை, சமூகம், சிந்தனை இம்மூன்றின் வளர்ச்சிக்கான 
பொது விதியானது சர்வாம்ச அளவில் செல்லத்தக்க விதியாக  
முதன் முதலாக உருவாக்கப் பட்டுள்ளது. இது வரலாற்று 
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனையாக என்றும் 
நிலைத்திருக்கும்.   

(பார்க்க  எங்கல்ஸ் எழுதிய இயற்கையின் இயக்கவியல் 
நூலின், 2ஆம் அத்தியாயம், தலைப்பு: இயக்கவியல்.)
-------------------------------------------------------------------------------------------------  
மாவோவின் மேற்கோள்கள்:
------------------------------------------------
“It is good to have criticism. It would not be good to have no criticism, or to suppress 
criticism. It is this mistake that Stalin committed. Stalin did a lot of good things, but he 
also did some bad things. He confused the two; he used the methods that are for dealing 
with the enemy to deal with the people, with contradictions among the people. He 
wouldn’t let people say bad things about the government, or about the Communist Party; 
if you said anything bad or if there were any rustling in the air, any movement in the grass, 
he would say that you were a spy and have you arrested.”
      —Speech at [a] Conference of Members and Cadres of Provincial-Level 
Organizations of [the] CPC in Shandong (March 18, 1957), 
The Writings of Mao Ze Dong volume II 1949 to 1976, pp. 419-420.

There were two sides to Stalin. One side was the elimination of true counterrevolutionaries; 
that was the correct side. The other side was the incorrect killing of numerous people, 
important people. For example, a high percentage of delegates to the Communist Party 
[National] Congress were killed. How many in the Central Committee did he kill? He 
seized and killed 80 percent of the Seventeenth Party Congress delegates, and he seized 
and killed 50 percent of the Central Committee members elected at the Seventeenth 
Congress [in 1934].”
      —“On the Correct Handling of Contradictions among the People” (Speaking Notes), 
(Feb. 27, 1957), The Secret Speeches of Chairman Mao: From the Hundred Flowers 
to the Great Leap Forward, ed. by Roderick MacFarquhar, Timothy Cheek, & 
Eugene Wu pp. 141-2, and footnote 11.

“Even in 1949 when we were about to cross the Yangtze River, someone [emphasis added] 
still wanted to prevent us. According to him we should under no circumstances cross the 
Yangtze. If we did so America would send troops to China and become directly involved 
in China’s Civil War and the South and North dynasties would reappear in China.
      “I did not listen to what they [sic] said. We crossed the Yangtze. America did not send 
troops to China and there were no South and North dynasties. If we really had followed 
his words surely there would be a situation of South and North dynasties.
      “Later on I met that person who intended to prevent us from crossing the Yangtze. 
His first words in our conversation were: ‘The victor bears no blame.’
      “I had not listened to him. As a result he not only did not blame me. On the contrary, 
he recognized me as the victor. It is very important that one should analyze and solve 
problems on one’s own and always seek truth from facts.”
      —Mao’s comments in 1957, as recorded by Wang Fangming of Beijing People’s University, People’s Daily, Jan. 2, 1979. English translation in NE, p. 15. The “someone” 
referred to was obviously none but Stalin.
----------------------------------------------------------------------------------------------
********************************

 







தேசியஇனச் சிக்கல் குறித்த மார்க்சியக் கருத்தரங்கம்!
கோட்பாட்டுப் பிரச்சினையில் தீர்வு காணும் முயற்சி!
சமகால அரசியலுக்கு முகம் கொடுக்க வேண்டாமா? 
--------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
கருத்தரங்கின் பாடுபொருள்:
தேசியஇனக் கோட்பாடு முதலாளித்துவத் தன்மை 
உடையதா? பாட்டாளி வர்க்கத் தன்மை உடையதா? 
இன்று இக்கோட்பாட்டால் யாருக்கு ஆதாயம்?
முதலாளி வர்க்கத்துக்கா? பாட்டாளி வர்க்கத்துக்கா?
******            ********         *******            **********

சென்னையில் கடந்த வாரம் 14.05.2023 ஞாயிறு அன்று    
காலை முதல் மாலை வரை ஒரு முழுநாள் 
கருத்தரங்கம் நடைபெற்றது. "மார்க்சியர் மேடை,"  
நியூட்டன் அறிவியல் மன்றம் ஆகிய இரு 
அமைப்புகளும் இணைந்து இக்கருத்தரங்கை நடத்தின.

அணுகுவதற்கு எளிதானதும் மிகவும் மையமானதுமான 
இடமாகிய சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள 
கரூர் வைஸ்யா வங்கியின் தொழிற்சங்கக் கட்டிடத்தின் 
மாநாட்டு அறையில் (conference hall) இக்கருத்தரங்கம் 
நடைபெற்றது. கருத்தரங்கை காலை 10.45க்கு 
தோழர் பி இளங்கோ தொடக்கி வைத்தார்.  

தோழர் நிர்மல் ராஜ் (கரூர்), தோழர் 
ஸ்டாலின் (சதுரங்கப் பட்டினம், கல்பாக்கம்) ஆகிய 
இருவரின் ஈடுபாட்டுடன் கூடிய சலியாத உழைப்பு 
இல்லாமல் இக்கருத்தரங்கை நடத்தி இருக்க இயலாது. 
   
உள்ளடக்கம் கருத்தரங்கமாக இருந்த போதிலும் 
வடிவத்தில் இக்கூட்டம் ஒரு கலந்துரையாடல் 
போன்றே நடத்தப் பட்டது. வட்ட மேஜை மாநாட்டில் 
பங்கேற்கும் அனைவரும் சமமதிப்பு  
சம மரியாதையைப் பெறுவது போல, இக்கூட்டத்திலும் 
பங்கேற்ற அனைவரும் முழுநிறைவான சமத்துவத்தை
உணர்ந்தனர். இக்கூட்டம் மேடை என்ற அமைப்பு 
இல்லாமலும், கூட்டத்தை நடத்தும் தலைவர் என்று 
எவரும் இல்லாமலும் மெய்யான வட்டமேஜை 
மாநாடு போன்றே ஒவ்வொரு அம்சத்திலும் 
சமத்துவத்துடன் நடத்தப்பட்டது. 

இக்கருத்தரங்கம் ஒரு சர்வ கட்சிக் கூட்டம் போன்றது.
ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை ஒட்டி அனைத்துக் 
கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்துவதைப் 
போன்றது இக்கருத்தரங்கம். 

மார்க்சிய முகாமில் உள்ள பல்வேறு 
கருத்தோட்டங்களையும் கொண்ட கணிசமான 
தோழர்கள் குறிப்பிடத்தக்க அளவு பெண்கள் உட்பட 
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இருந்து 
வந்திருந்து இக்கருத்தரங்கில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

பேச விரும்பிய எவர் ஒருவருக்கும், பேசுவதற்காகத் 
தங்கள் பெயரைப் பதிந்து கொண்ட அனைவருக்கும் 
பேசும் வாய்ப்பு தரப்பட்டது. எவர் ஒருவருக்கும் 
வாய்ப்பு மறுக்கப் படவில்லை. கருத்தரங்கின் 
பேசுபொருளான தேசிய இனக் கோட்பாடு குறித்து 
மார்க்சிய முகாமில் இன்று நிலவும் அனைத்துக் 
கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கு 
வாய்ப்புத் தந்து அவற்றைத் தொகுத்துக் கொள்ள 
வேண்டும் என்பதே கருத்தரங்கின் பிரதான நோக்கம்.
அந்த நோக்கம் நூறு சதம் நிறைவேறி உள்ளது 
என்பது நிகழ்வுகளில் இருந்து புலப்படுகிறது.

மார்க்சியம் அல்லாத முகாமில் (Non Marxist camp) 
குறிப்பாக பூர்ஷ்வா முகாமில் அல்லது குட்டி 
முதலாளிய முகாமில் அல்லது ஆளும் வர்க்கக் 
கட்சிகளின் முகாமில் நிலவும் இப்பொருள் பற்றிய 
கருத்துக்களில் நாம் பெரிதாக அக்கறை 
கொள்ளத் தேவையில்லை. மழைக்காலத் 
தவளைகளின் கூச்சல் என்பதற்கு மேல் அவற்றில் 
ஒன்றும் இல்லை. இந்திய ஆளும் வர்க்கமோ 
மத்திய அரசோ முறைத்துப் பார்த்தாலே 
குட்டி முதலாளியத் தவளைக் கூச்சல்கள் 
அடங்கி விடும்.

1962 இந்திய சீனப்போரின்போது பிரிவினைத் 
தடைச் சட்டத்தை அன்றைய பிரதமர் ஜவகர்லால் 
நேரு கொண்டு வந்ததுமே, அதுவரை "அடைந்தால்  
திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு" என்று      
கூச்சல் போட்டுக்கொண்டிருந்த அண்ணாத்துரை
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு 
விட்டோம் என்று அறிவித்து நேருவின் கால்களில் 
விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் 
அல்லவா! அன்றைய அண்ணாத்துரைதான் 
இன்றைய சீமான்! இன்றைய பெ மணியரசன்!   
மற்றும் இவர்களின் வகையறாக்கள் இத்தியாதி!

எனவே மார்க்சிய முகாமில் நிலவும் கருத்துக்களை 
மட்டும் கணக்கில் கொண்டாலே போதும். 
ஏனெனில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இனக் 
கோட்பாடு குறித்த நிலைபாடு என்ன என்பதை 
நாம் அறிவோம்; நாடறியும்.

மார்க்சிய முகாமில் நிலவும் கருத்துக்களைத் 
தொகுக்கையில், மார்க்சிய முகாம் ஒற்றைக் 
குரலில் பேசவில்லை (not monolithic) என்பதை 
அறிய முடிகிறது. அதே நேரத்தில் பல்வேறு 
கருத்துக்களின் பறவைக் கூச்சலும் மார்க்சிய 
முகாமில் இல்லை என்பது ஆறுதலைத் தருகிறது.

தேசிய இனக்கோட்பாடு பற்றிய கேள்வி 
பைனரியாக (binary) இருப்பதால், நமது 
கருத்தரங்கம் அதை பைனரியாக 
அமைத்திருப்பதால், இரண்டில் ஒன்றை 
(say yes or no) விடையாகச் சொல்ல வேண்டிய 
நிலை ஏற்பட்டுள்ளது.. கிடைத்துள்ள விடைகளைத் 
தொகுத்தபோது, ஒரு தரப்புக்கு வலுவான ஆதரவு 
இருப்பதும் இன்னொரு தரப்புக்கு ஆதரவு 
மிகவும் குன்றி இருப்பதும் புலப்பட்டது.

தேசிய இனம் என்னும் கோட்பாடு குறித்து 
சமகால இந்திய/தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிற
சர்ச்சைக்குச் சரியான தீர்வு காண்பதும் 
அத்தீர்வின்வழி அச்சர்ச்சைக்கு முடிவு கட்டுவதும்  
மார்க்சியர்களின் கடமை ஆகும். 

மார்க்சியத்தில் மெய்யான அக்கறை கொண்டுள்ள 
மார்க்சியர் எவரும் கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்குத் 
தீர்வு காணாமல் வாளாவிருப்பது தகாது. எனவே 
தேசிய இன்ச் சிக்கலுக்கு கோட்பாட்டுத் தீர்வு காணும் 
நோக்கத்துடன் இக்கருத்தரங்கை நடத்தத் 
திட்டமிட்டோம். இணையவழிக் கூட்டங்கள் 
தகுந்த அழுத்தமற்று (less serious) இருப்பதால் 
உரிய பலனைத் தராமல் இருந்து விடக்கூடும் 
என்பதால் நேரடிப் பங்கேற்புடன் கூடிய கருத்தரங்கை 
நடத்த முடிவு செய்தோம். அனைவரின் 
ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தி முடித்தோம்.
கருத்துக்களைத் தொகுத்துக் கொண்டோம்.
இனி தீர்வை நோக்கிய அடுத்த கட்டப் பயணம்  
எளிதாகும்..

கூட்டம் முழுவதும் வீடியோ எடுக்கப் பட்டுள்ளது.
சுமார் 6 மணி நேர வீடியோ பதிவு உள்ளது.
அது உரிய விதத்தில் எடிட் செய்யப்பட்டு 
அடுத்த வாரம் பொதுவெளியில் முன்வைக்கப்படும்.
இப்பணியில் தோழர் ஸ்டாலின் (சதுரங்கப் பட்டினம்)
மும்முரமாக இருக்கிறார்.

இக்கருத்தரங்கை நடத்தும் பொறுப்பில் 
வாக்களித்தபடி என்னால் பங்களிக்க இயலவில்லை.
கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக 
இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததைத் 
தவிர வேறெந்த வேலையும் நான் செய்யவில்லை; 
என்னால் செய்ய இயலவில்லை.

தோழர் நிர்மல் ராஜ் (கரூர்), தோழர் ஸ்டாலின்
(சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம்) ஆகிய இருவரும்   
இக்கருத்தரங்கம் நடந்தமைக்கும் அதன் 
வெற்றிக்கும்  பொறுப்பாளர்கள் ஆவர். அவர்கள் 
இருவருக்கும் எனது நன்றி.  

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும்
புறப்பட்டு சென்னைக்கு வந்து தங்குமிடம் உள்ளிட்ட 
செலவுகளை மேற்கொண்டு அக்கறையுடன் 
இக்கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை 
ஒளிக்காமல் வெளிப்படுத்தி கருத்தரங்கை 
வெற்றிகரமாக்கிய மார்க்சிய முகாமைச் சேர்ந்த 
தோழர்கள் அனைவருக்கும் நன்றியை 
உரித்தாக்குகிறேன்.
-----------------------------------------------------------
பின்குறிப்பு:
கருத்தரங்கில் நியூட்டன் அறிவியல் மன்றம் 
முன்வைத்த கருத்துக்களின் சாரம் அல்லது 
சுருக்கம் அடுத்த கட்டுரையாக வெளிவரும்.
*******************************************