வியாழன், 18 மே, 2023

தமிழரசனும் மணியரசனும் 
தனித்தமிழ்நாடு கோரிக்கையும்!
RDX கட்டுரை!
----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
இந்திய ஏகாதிபத்தியத்திடம் இருந்து தமிழ்நாடு 
விடுதலை அடைய வேண்டும் என்றும் விடுதலை 
அடைந்த  தனித்தமிழ்நாடு என்பதே தங்களின் 
லட்சியம் என்றும் பகிரங்கமாகப் பிரகடனம் 
செய்தார் தோழர் தமிழரசன். இந்த நிலைபாடு 
எடுத்ததுமே தான் அதுவரை செயல்பட்ட 
மக்கள் யுத்தக் குழு என்னும் நக்சல்பாரி 
அமைப்பிலிருந்து வெளியேறினார்.

தனித்தமிழ்நாட்டை எப்படி அடைவது என்ற 
கேள்வியைப் பொறுத்தமட்டில் வன்முறையான 
போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்திய 
ஏகாதிபத்தியத்தில் இருந்து பிரிந்து தனிநாடு 
அமைக்க முடியும் என்று தெளிவுபட அறிவித்தார் 
தோழர் தமிழரசன்.

எனவே தமிழ்நாடு விடுதலைப் படை என்ற 
பெயரில் தமது இயக்கத்திற்கான ராணுவத்தைக் 
காட்டினார் தோழர் தமிழரசன். நவீன ஆயுதங்களை 
வாங்கி, தக்க இளைஞர்களைப் படையில்
சேர்த்து ஆயுதப் பயிற்சியும் அளித்தார் தோழர் 
தமிழரசன்.       

தனித்தமிழ்நாடு என்னும் லட்சியத்தை அடைய 
முடியாமல் தமிழரசன் தோற்றிருக்கலாம். ஆனால் 
தனித்தமிழ்நாட்டை அடைவதற்கான ஒரே பாதை 
தமிழரசன் காட்டிய பாதையே என்பது முக்கால 
உண்மையாகத் திகழ்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போர் புரியாமல்,
இந்தியாவின் துணை ராணுவப் படைகளை எதிர்த்துப் 
போரிட்டு முறியடிக்காமல், வன்முறையான 
இப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் 
இன்னுயிரைத் தியாகம் செய்யாமல் தனித்தமிழ்நாடு 
என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற நூலில் 
வர்ணித்தது போன்று ரஷ்யாவை போல்ஷ்விக்குகள்
பத்தே நாளில் கைப்பற்றியது போல தனித்தமிழ்நாட்டை 
பத்து நாளில் அடைய முடியாது.  இந்திய 
ராணுவத்துடனான யுத்தம் ஆண்டுக் கணக்கில்
நீடிக்கும். மேற்கூறிய அனைத்திலும் அதீதத் 
தெளிவுடனும் ஒரு பாறையைப் போல் உறுதியுடனும் 
இருந்தவர் தோழர் தமிழரசன். தமது கருத்துக்கள்,
தமது லட்ச்சியம், அதை அடையும் வழிமுறைகள் 
என அனைத்தையும் பகிரங்கமாக பிரகடனம் 
செய்தவர் தோழர் தமிழரசன்.

தமிழரசன் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகி 
இருக்கலாம். ஆனால் அவர் முன்வைத்த தமிழ்நாட்டு 
விடுதலைக்கான ராணுவ உத்திகள் எவையும் 
காலாவதி ஆகவில்லை. அவை இன்றளவும் 
பசுமை மாறாமல் அப்படியே நீடிக்கின்றன.
நாளையும் நீடிக்கும்.

எனவே எவர் ஒருவராவது இந்தியப் பேரரசில் 
இருந்து பிரிந்த தனித்தமிழ்நாடு வேண்டும் என்று 
நினைப்பாரேயானால், அதை இந்திய ராணுவத்தை 
எதிர்த்த வன்முறையான போராட்டத்தின் மூலமாக 
மட்டுமே அடைய முடியும் என்ற ஒளிவீசும் 
உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

அதற்கு மாறாக முகநூலில் புரட்சிகரமாக சில 
பதிவுகளை எழுதுவதன் மூலமோ, கருத்தரங்குகளை 
நடத்துவதன் மூலமோ, காலையில் கைதாகி 
மாலையில் விடுதலையாகும் சடங்குத்தனமான 
ஏமாற்றுப் போராட்டங்களை நடத்துவதன் 
மூலமோ அடைய முடியாது. இது முக்கால 
உண்மை ஆகும். இதை ஏற்க மறுப்பவன் 
செத்துப் போன பிணத்துக்குச் சமமாவான்.

தனித்தமிழ்நாடு வேண்டும் என்றும் இந்திய 
ஒன்றியத்தில் இருந்து பிரிந்து விட வேண்டும் என்றும் 
கூச்சல்கள் தமிழ்நாட்டில் கேட்கின்றன. சில 
தனித்தமிழ் தயிர்சாதப் பேர்வழிகளின் 
தொண்டைகளில் இருந்து புறப்படும் இக்கூச்சல்கள்
தேநீர்க் கோப்பைக்குள் புலாலை உருவாக்குவதுடன்  
முடிந்து விடுகின்றன.     

பெ மணியரசன், தியாகு மற்றும் சினிமாக் கூத்தாடிகள் 
செபாஸ்டியன் சைமன் என்னும் சீமான், 
வ கெளதமன் வகையறாக்கள் இவ்வாறு போலியாக 
தமிழ் தேசியம் பேசி மக்களை ஏய்த்து வருகின்றனர்.

தமிழ் தேசிய ராணுவம் இல்லாமல்,
தமிழ்நாட்டு விடுதலைப் படை இல்லாமல் 
தனித்தமிழ்நாடு என்று பேசுபவன் கோமாளி 
மட்டுமல்ல ஏமாற்றுக்காரனும் ஆவான்.

மணியரசன் சீமான் தியாகு வகையறாக்களிடம்  
ராணுவம் படை இப்படி எதுவும் கிடையாது.
ஒரு பொம்மைத் துப்பாக்கி கூட இல்லாத இவர்கள் 
தமிழ்நாடு விடுதலை பற்றிப் பேசுவது 
கனத்த மோசடியும் பெருத்த பித்தலாட்டமும் ஆகும்.

தனித்தமிழ்நாடு என்றாலும் தமிழ்நாட்டு விடுதலை 
என்றாலும் அதை தோழர் தமிழரசன் பிரகடனம் 
செய்த வன்முறைப் பாதையின் வழியாக மட்டுமே 
அடைய முடியும். வேறு மாற்று வழி எதுவும் இல்லை.  

பெ மணியரசன் ஏதேனும் படை காட்டுகிறாரா?
படை காட்டும் உத்தேசம் எதூவும் அவருக்கு உண்டா?
சினிமாக் கூத்தாடி சீமான் விடுதலைப் புலிகளிடம் 
பயிற்சி பெற்றவர் ஆயிற்றே! தேசியத்தலைவரிடம்  
நெருங்கிப் பழகியவர் ஆயிற்றே! அவர் ஏதும் 
படை கட்டுகிறாரா? இல்லையே! கண்ணுக்கெட்டிய 
தூரம் வரைக்கும் யாரும் படை காட்டவில்லையே!

படை இல்லை என்றால் தனித்தமிழ்நாடு இல்லை!
!படை இல்லை என்றால் தமிழ்நாட்டு விடுதலையும் 
இல்லை! அப்படியானால் சீமானும் மணியரசனும் 
மட்டுமல்ல, தனித்தமிழ்நாடு பற்றிப் பேசும் 
படை இல்லாத யார் எவருமே மோசடிப் பேர்வழிகள் 
என்றுதானே அர்த்தம்! இவர்கள் எல்லாருமே 
தயிர்சாதத் தலைவர்கள் என்றுதானே அர்த்தம்!

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் 
இந்த நாட்டிலே! சொந்த நாட்டிலே!
*************************************


   



    


      
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக