திங்கள், 15 மே, 2023

தேசிய இனப் பிரச்சினை குறித்த கருத்தரங்கம் 
வெற்றிகரமாக நிறைவுற்றது!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------
சென்னை சூளைமேட்டில் 14.05.2023 அன்று காலை 
10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற 
தேசிய இனக் கோட்பாடு குறித்த கருத்தரங்கம் 
இனிதே நிறைவுற்றது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 
தோழர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுச் 
சிறப்பித்தனர். பங்கேற்றவர்களில் கணிசமான 
பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற 
இக்கருத்தரங்கில் பேச்சாளர்களின் சொற்பொழிவு 
மொத்தம் ஆறு மணி நேரம் நிகழ்ந்தது. அவற்றின் 
எடிட் செய்யப்பட்ட வீடியோ பதிவு விரைவில் 
வெளியாகும்.   

தேசிய இனக்கோட்பாடு குறித்த 
இக்கருத்தரங்கில்  அச்சிக்கல் குறித்த 
செழுமையான கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. 
இதுவரை பொதுவெளியில் பரவலாக கவனத்துக்கு 
வந்திராத கருத்துக்களும் கருத்தரங்கில் 
முன்வைக்கப் பட்டன. சுருங்கக் கூறின்
தேசிய இனச்சிக்கல் குறித்த சகல தரப்பின் 
கருத்துக்கள் முழுவதும் அநேகமாக இக்கருத்தரங்கில் 
வெளிப்பட்டு விட்டன. கருத்தரங்கம் தனது 
அறிவிக்கப்பட்ட நோக்கத்தில் வெற்றி அடைந்து 
விட்டது என்பதை இது உணர்த்துகிறது.
*********************************************
 
  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக