வியாழன், 31 அக்டோபர், 2019

மருத்துவர்களின் போராட்டம்!
உண்மையான உண்மை இதுதான்!
ஆதரவு இயக்கங்களை ஏன் CPI, CPM நடத்தவில்லை?
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
1) தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள்
ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில்
மொத்தம் 18,000 மருத்துவர்கள் உள்ளனர். இவர்களில்
15,000 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
மீதி 3000 பேர் விபத்து, அவசரப் பிரிவு, பிரசவம்
ஆகிய பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.
2) போராட்டக்குழு முடிவெடுத்தன் அடிப்படையிலேயே
3000 மருத்துவர்கள், மக்கள் பாதிக்கப்படக் கூடாது
என்று பணி செய்து வருகின்றனர்.
3) அரசு ஆதரவு தொழிற்சங்கம் ஒன்றும், மருத்துவர்களின்
ஆதரவு பெற்ற சங்கம் மற்றொன்றும் ஆக இரண்டு
சங்கங்கள் உள்ளன.
4) இன்று ஏழாவது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்று
வருகிறது. மொத்தமே நான்கு கோரிக்கைகளை
முன்வைத்து வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.
5) பிரதானமாக இரண்டே இரண்டு கோரிக்கைகளை
வலியுறுத்தியே போராட்டம் நடந்து வருகிறது.
அ) MCIயின் புதிய அளவீடுகளை (new norms) அரசு
செயல்படுத்தி வருகிறது. இதன்படி மருத்துவ
மனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையைக்
குறைக்கிறது. இதை மருத்துவர்கள் ஏற்கத்
தயாராக இல்லை. இது மருத்துவர்களின் வேலைப்பளுவை
அதிகப் படுத்தும். அன்றாடம் மருத்துவமனைக்கு வந்து
வேலை செய்து விட்டு வீடு திரும்புவதே நரகம் ஆகிவிடும்.
6) மறுபுறம் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு
உள்ளாவார்கள். சிகிச்சைக்காக நீண்ட நேரம்
கியூவரிசையில் காத்திருக்க நேரிடும். அறுவை
சிகிச்சைகளை உரிய நேரத்தில் பெற இயலாது.
அரசு மருத்துவமனைகளின் சேவைத்தரம் குறையும்.
தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்கள்
தள்ளப் படுவார்கள்.
7) ஆ) MD, MS மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு
50 சதம் ஒதுக்கீடு இருந்து வந்தது. MCI முடிவின்படி
அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப்
பதிலாக REMOTE AREASல் உள்ள மருத்துவ மனைகளில்
பணிபுரியும் மருத்துவர்களுக்கு மேற்படிப்பில்
கூடுதலாக மதிப்பெண் வழங்கப் படுகிறது.
8) இதற்கு முன்பு சென்னை GHல் பணியாற்றிய
மருத்துவருக்கும், நீலகிரியில் பணியாற்றிய
மருத்துவருக்கும் இப்படி அனைவருக்கும் 50 சத
ஒதுக்கீட்டால் பயன் கிடைத்தது. தற்போது 30 சதம்,
60 சதம் என்று கூடுதல் மதிப்பெண் (bonus marks)
வழங்கப் பட்டாலும் அது remote areasல் பணியாற்றும்
மருத்துவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நகர்ப்
புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்குக்
கிடைப்பதில்லை.
9) எனவே முன்பு போல 50 சத ஒதுக்கீடு வேண்டும்
என்று ஒரு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இது unrealistic demand ஆகும். இதற்கு தமிழக அரசு
இணங்கினாலும், மருத்துவக் கவுன்சில் அனுமதிக்காது.
10) மத்திய அரசு மருத்துவருக்கு இணையான ஊதியம்
கேட்பதில் தவறில்லை. இதனால் அரசுக்குப் பெரிய
செலவு எதுவும் ஆகப் போவதில்லை. அப்படி மத்திய அரசு
வழங்கும் ஊதியத்தைக் கொடுக்க மறுத்தாலும், வேறு
மாற்று வழிகள் உள்ளன. ACP (Assured Career Progression)
எனப்படும் TIME BOUND முறையிலான பதவி உயர்வுத்
திட்டத்தை அரசு அறிமுகப் படுத்தினாலே போதும்.
11) ஆனால் அமைச்சர் விஜய பாஸ்கர் முற்றிலும்
முதிர்ச்சியற்ற முறையில் இந்த வேலைநிறுத்தத்தைக்
கையாள்கிறார். மருத்துவர்களின் கோரிக்கையை
ஏற்பதால் அரசுக்குப் பெருஞ்செலவு எதுவும் கிடையாது.
எடப்பாடியும் அடக்குமுறையின் மூலம் மருத்துவர்களை
ஒடுக்கி விடலாம் என்று கருதுகிறார்.
12) இது பஞ்சாலைத் தொழிலாளரின் வேலைநிறுத்தம் அல்ல.
பேருந்துத் தொழிலாளரின் வேலைநிறுத்தம் அல்ல.
இதை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குவதால்
தற்காலிக வெற்றியை அரசு அடையலாம். ஆனால்
காலப்போக்கில் மருத்துவர்களின் ஒத்துழைப்பு
இல்லாமல், அதிமுக அரசு மக்களின் ஆதரவை
இழக்க நேரிடும்.
13) கொடும் அடக்குமுறையை ஏவிய ப சிதம்பரம்
இன்று 74 வயதில் திகாரில் கம்பி எண்ணிக் கொண்டு
இருக்கிறார் என்பதை அமைச்சர் விஜய பாஸ்கர்
எண்ணிப் பார்க்க வேண்டும். IQ 121 கொண்டுள்ள
சிதம்பரத்துக்கே இந்தக்கதி என்றால், நாளை
தனக்கு என்ன கதி என்று IQ 102 உடைய விஜய பாஸ்கர்
எண்ணிப் பார்ப்பது நல்லது.
14) இன்று (31.10.2019) ஏழாவது நாளாக வேலைநிறுத்தம்
நீடிக்கிறது. தமிழ்ச் சமூகம் ஒரு நோயுற்ற சமூகம்
என்பதை மருத்துவர்களின் நீடித்த வேலைநிறுத்தம்
சுட்டிக் காட்டுகிறது. இந்த வேலைநிறுத்தத்தை
ஆதரிப்பதும், போராடும் மருத்துவர்களின் பக்கம்
நிற்பதும், அரசை நிர்ப்பந்திப்பதும் சமூகப் பொறுப்புள்ள
ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
15) அடக்குமுறையால் ஒரு மயிரும் பிடுங்க முடியாது.
35 ஆண்டுக்கு மேல் நீண்ட என்னுடைய தொழிற்சங்க
அனுபவத்தில் எத்தனையோ அடக்குமுறைகளின்
முதுகெலும்பை முறித்துப் போட்டுள்ளோம். எஸ்மா
சட்டம், 124ஏ பிரிவில் வழக்கு, கணக்கற்ற சேவை முறிவுகள்
(BREAK IN SERVICE) ஆகியவற்றை எதிர்கொண்டு
முறியடித்துள்ளோம்.
16) போராடும் 18,000 டாக்டர்களையும் கொலை செய்ய
வேண்டும்; அல்லது 18,000 போரையும் டிஸ்மிஸ் செய்ய
வேண்டும். அப்போதுதான் அடக்குமுறை வென்றதாக
அர்த்தம் ஆகும். இதை எந்த அரசும் செய்ய இயலாது.
17) ஏழு நாட்களாக நீடிக்கும் இந்த வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவாகத் தீவிரமான ஆதரவுப் போராட்டங்களை
CPI, CPM கட்சிகள் நடத்தி இருக்க வேண்டும். AITUC, CITU
சங்கங்கள் மூலமாகத் தீவிரமான ஆதரவு இயக்கங்களை
நடத்தி, மருத்துவர்களின் பக்கம்
சமூகம் நிற்கிறது என்று உணர்த்தி இருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால், விஜய பாஸ்கருக்கும்
எடப்பாடிக்கும் அடக்குமுறையைப் பிரயோகிக்க
அச்சம் அல்லது தயக்கம் ஏற்பட்டு இருக்கும்.


18) ஆனால் மு க ஸ்டாலினிடம் ரூ 25 கோடிக்கு சோரம்
போனவர்கள், விஜய பாஸ்கரிடம் சில கோடிக்கு
விலை போகாமல் இருப்பார்களா? IQ 102 உடைய
விஜய பாஸ்கர் இந்தப் போலிகளை மலிவாக
விலைக்கு வாங்கி விட்டார். எனவேதான் ஆதரவு
இயக்கங்களை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து
ஏமாந்த மருத்துவர் சங்கங்கள் தங்கள் சொந்த
பலத்தில் உறுதியாகப் போராட முடிவு செய்து விட்டனர்.
******************************************************
அறிவியலுக்கு எதிராகத் திரளும் கருத்துக்களும்
அவற்றுக்கான அறிவியல் விளக்கமும்!
(குழந்தை சுஜித் மீட்பு குறித்து)
-----------------------------------------------------------------
  நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
குறிப்பு:
மீட்புப்பணி குறித்த இரண்டாவது அறிவியல் கட்டுரை இது.
எமது முதல் கட்டுரையைப் படிக்காதவர்கள் படித்திடுக!
------------------------------------------------------------------------------------
மீட்புப்பணியில் மொத்தம் 600 பேர் கொண்ட குழு
ஈடுபட்டது. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஜியாலஜி
நிபுணர்கள், டெக்னீஷியன்கள், பிளம்பர்கள், தீயணைப்புப் படை
வீரர்கள், தனியார் நிபுணர்கள், மருத்துவர்கள்  என்று
பலதரப்பட்ட வல்லுனர்களின் கூட்டு முயற்சியே
இந்த மீட்புப்பணி. ஒரு குழந்தையை மீட்க 600 பேர்
தீபாவளிக்கு கொண்டாட்டத்தைத் துறந்து கருமமே
கண்ணாயினாராக 80 மணி நேரம் போராடினர்.

ஆழ்துளையிடுவதிலும் (drilling), சுரங்கம் தோண்டுவதிலும்
கட்டுமானப் பணிகளிலும் நல்ல அனுபவம் பெற்றிருந்த
ONGC, NLC, Larsen and Toubro, KNR constructions ஆகிய நான்கு
நிறுவனங்களின் நிபுணர்கள் மீட்புப் பணியில் தொடர்பு
கொண்டிருந்தனர்.

30 உறுப்பினர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப்படையும்
(NDRF), 40 உறுப்பினர் கொண்ட மாநிலப் பேரிடர் மீட்புப்
படையும் (SDRF) மீட்புப் பணியை ஒழுங்கமைத்தன.    

மீட்புப் பணிக்கு ரூ  ஐந்து லட்சமும் 5000 லிட்டர் டீசலும்
மட்டுமே.செலவானது. இதை திருச்சி மாவட்ட ஆட்சியர்
எஸ் சிவராசு தெளிவுபடுத்தி உள்ளார். எனினும்
ரூ 11 கோடி செலவானதாக முகநூலில் வதந்தி பரவியது.


இந்த மீட்புப்பணி குறித்து நாம் அனைவரும் ஒரு
உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அது
ஒரு ஒளிவீசும் பேருண்மை. மீட்புப்பணியை
மேற்கொண்டவர்கள் அரசியல் கட்சியினர் அல்லர்.

மீட்புப் பணியில் 600 பேர் கொண்ட ஒரு தொழில்நுட்பக்
குழுதான் 80 மணி நேரமாக மெய்யான அக்கறையுடன்
ஈடுபட்டது. மாநிலத்திலும் மத்தியிலும்
எந்த ஆட்சி இருந்தாலும் ஒரு தொழில்நுட்பக் குழுதான்
மீட்புப்பணியைச் செய்ய முடியும்.

எனவே அரசியல் கட்சிகளின் மீதான விருப்பு வெறுப்பின்
அடிப்படையில், அறிவியல் தொழில்நுட்பக் குழுவின் மீது
பொய்ப்பழி கூறுவதும் அக்குழுவின் தன்னலங் கருதாப்
பணியை இழிவு செய்வதும் நேர்மையற்ற செயலாகும்.
மேலும் அது மானுடத்துக்கே எதிரானதாகும்.

ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்கும் தொழில்நுட்பமும்
அதற்கான கருவிகளும் இல்லை:
மீட்புக் குழுவை வழிநடத்த ஒரு தலைமை (Nodal Officer)
இல்லை; SOP (Standard Operating Procedure) இல்லை;
இப்படி அறிவியல் அறிவு ஒரு சிறிதுமற்ற ஊடகத்தினர்
தொழில்நுட்பக் குழுவினர் மீது கூறிய
 அவதூறுகளில் உண்மை உண்டா? பார்ப்போம்!
விரிவாகப் பார்க்கலாம்.

ஊடகத்தினரின் அறிவியலுக்கு எதிரான கேள்விகளும்
அறிவியலின் பதில்களும்!
-----------------------------------------------------
1) கேள்வி: மீட்புப் பணிக்கான SOP எனப்படும்
Standard Operating Procedure  இல்லை! இது நியாயமா?

பதில்: 2004 சுனாமிக்குப் பிறகு இந்தியாவில் பேரிடர்
மேலாண்மையின் தேவை உணரப்பட்டு, மன்மோகன்சிங்
பிரதமராக இருந்தபோது, 2005ல் தேசியப் பேரிடர்
மேலாண்மை நிறுவனம் அமைக்கப் பட்டது. இது ஒரு
மூவடுக்கு அமைப்பு (A three tier setup). (மாவட்ட, மாநில,
அகில இந்திய அளவிலான மூவடுக்கு). இதற்கான
SOP 2011ல் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

2) எடுத்த எடுப்பிலேயே தேசியப் பேரிடர் மேலாண்மை
அமைப்பை ஏன் கூப்பிடவில்லை? தாமதமாகக்
கூப்பிட்டதால், GOLDEN HOUR எனப்படும் முதல்
10 மணி நேரம் வீணாகி விட்டது. இது சரியா?

பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி, ஆழ்துளைக் கிணற்றில்
ஒரு குழந்தை விழுவது என்பது ஒரு தனித்த நிகழ்வு
ஆகும் (an isolated incident).இது போன்ற ஒற்றை நிகழ்வுகள்
தொடக்கநிலைப் பேரிடர் என்பதால், இதற்கு மாவட்ட
அளவிலான பேரிடர் மேலாண்மை அமைப்பையே
அழைக்க வேண்டும். இதுதான் சட்டம். இந்தச் சட்டப்படி
மாநிலப் பேரிடர் மேலாண்மை அமைப்பு நிகழ்விடத்துக்கு
வந்து மீட்புப் பணியைத் தொடங்கியது.

3) மீட்புப்பணிகளின் ஒருங்கிணைக்கும் அதிகாரி
(Nodal officer) இல்லை. இது சரியா?

ஏன் இல்லை? யார் பொறுப்பு அதிகாரியோ (in charge)
அவர்தான் Nodal Officer. இதெல்லாம் goes without saying.
Nodal Officer பதவி என்பது constitutional post அல்ல.
எனவே Nodal Officerஆக நியமிக்கப் படுகிறவர் வள்ளுவர்
கோட்டத்தில் பதவி ஏற்க வேண்டிய தேவை இல்லை.
Nodal Officer யார் என்று தெரிய வேண்டிய அவசியம்
யாருக்கு உள்ளது? அவரிடம் ரிப்போர்ட் பண்ண வேண்டிய
அவசியம் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே.அது தேவை.

4) குழியில் இறங்கித் தன்னால் காப்பாற்ற முடியும் என்று
கூறிய ஒரு உள்ளூர்க்காரரை அனுமதிக்கவில்லை என்று
அவரின் 15 வயது மகன் கூறினான். இது சரியா?

ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் நாலரை அங்குலம்
மட்டுமே.(length of the drilling bit). எனவே சுற்றளவு என்ன?
3.14ஆல் பெருக்குங்கள். ஒன்றேகால் அடியை விடக்
குறைவு. இந்தச் சுற்றளவுள்ள ஒரு குழியில் ஒரு
ஒல்லியான உடல்வாகுள்ள சிறுவனைக்கூட இறக்க
முடியாது.

5) இதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே
இல்லையே?

.இருக்கிறது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த
குழந்தையை மீட்கும் தொழில்நுட்பம் அணுஉலைத்
தொழில்நுட்பமோ செயற்கைக்கோள் தொழில்நுட்பமோ
அல்ல. அது மிகவும் எளிய மெக்கானிக்கல் தீர்வைக்
கொண்டது. நியூட்டனின் இயற்பியலிலேயே இதற்கான
தீர்வு கிடைத்து விடுகிறது.

6) மீட்பதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப் படவே
இல்லையே?

என்னென்ன கருவிகள் வேண்டுமோ அவை அனைத்தும்
இருக்கின்றன. இதற்கு என்ன கருவிகள் வேண்டும்?
GM counter எனப்படும் Geiger Muller கவுன்டர் வேண்டுமா?
அல்லது Cathode Ray Oscillograph வேண்டுமா? அல்லது
சந்திரயான்-2வில் அனுப்பிய ஸ்பெக்ட்ரா மீட்டர்
வேண்டுமா? என்ன கருவி இல்லை? என்ன கருவியைக்
கண்டுபிடிக்க வேண்டும்?

7) கயிறுகள் மட்டும்தானே இருந்தன? இது கருவி ஆகுமா?

கயிறுகள்தான். ஆனால் அவை கணினியோடு பிணைக்கப்
பட்டவை. கணினியின் கட்டளைக்கு ஏற்பச் செயல்படும்
கருவிகள் அவை.

மீட்புப் பணிக்கான கருவிகள் அனைத்துமே ரெடிமேட்
சட்டைகள் போன்றவை. தேவையான ஒரு கருவியை
மீட்புப்பணி நடக்கும் இடத்திலேயே (in situ) உருவாக்கிக்
கொள்ள முடியும். இதற்கான தொழில்நுட்பம் நம்மிடம்
உள்ளது. எனவே கருவி இல்லை என்பதெல்லாம்
தொழில்நுட்ப அறிவே இல்லாதவர்கள் கூறும் அவதூறு.

8) குழந்தையின் இறப்புக்கு யார் காரணம்?

குழந்தையின் மீது செயல்பட்ட stress tensor, குழியின்
மிகக் குறுகலான நாலரை அங்குல விட்டம், மிகவும்
tenderஆன இரண்டு வயதுக் குழந்தையால் மீட்புப்
பணிக்கு ஒத்துழைக்க இயலாத நிலை ஆகிய
மூன்றுமே காரணம். ஒரு பலூனை உள்ளே செலுத்தி,
அதை ஊதி, விரித்து, அதனுள் குழந்தையை
அடக்கி, மேலே கொண்டு வர இயலவில்லை. இதற்குக்
காரணம் குழியின் குறுகலான விட்டமே.
****************************************************


பல ஊடக நண்பர்களை அவர்களின் அனுமதி இன்றி
இப்பதிவில் tag செய்துள்ளேன். மன்னிக்கவும்.
படித்து முடித்தபின் remove tag செய்து கொள்ளலாம்.

கட்டுரையுடன் இணைக்கப்பட்ட ஐந்து
படங்களையும் பார்க்கவும். SOP புத்தகத்தின்
அட்டைப்படத்தைப் பாருங்கள். SOP இல்லை
என்று சொன்ன கயவர்களை என்ன செய்யலாம்?
 


   

  

 




KNR constructions, ONGC, NLC, Larsen and Toubro, 30 member NDRF, 400 member SDRF
Using a thermal device, a team from Anna University in Chennai was able to detect the body temperature of Sujith at around 4 p.m. on Saturday.
15 attempts were made by various teams மதுரை நாமக்கல் கோவை
SOP பிரகாரம் BOREWELL INCIDENTS ஆர் லெவல்-1 AND DEMAND
a district level response

SOP NODAL OFFICER  RIGOURMORTIS IN AC ROOM

Even if the child is rescued the chances of life is remote bec of lung infection


குழந்தையின் தாய், தந்தை, மாமன் அடிக்கடி குழாய்க்குள்
தங்கள் குறளை செலுத்தினர்.


குழந்தை சுஜித் மீட்புப் பணி!
அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துக்களின்
முதுகெலும்பை முறிக்கும் பதில்!
இந்த வீடியோவைப் பாருங்கள்!  சூரிய


பொறியியல் மாணவர் சுந்தர மூர்த்திக்கு
அவரின் நிறைவான சொற்பொழிவைப் பாராட்டி
நூலைப் பரிசளித்தபோது எடுத்த படம்!
நாள்: ஞாயிறு 03.11.19 மாலை .30 மணி to 9 மணி.
கூட்ட ஏற்பாடு: வே சோதிராமலிங்கம், ஊடகவியலாளர்.


பின்குறிப்பு: STRESS TENSOR என்று கரும்பலகையில்
எழுதி இருப்பதைப் பார்த்தீர்களா?
Stress Tensor குறித்து இக்கூட்டத்தில்
நியூட்டன் அறிவியல் மன்றம் விளக்கியது.

-------------------------------------------------

நான் கேள்விப்படவில்லை. நான் ஏழாம் வகுப்புடன்
படிப்பை நிறுத்தி விட்ட கபோதி. நான் படித்த
காலத்தில் ஏழாம் வகுப்பின் பாடத்திட்டத்தில்
இலக்கணப்போலி இல்லை.



இலக்கணப் போலி என்றால் என்ன?
-------------------------------------------------------
நன்னூல் ஆசிரியர் கூறும் இலக்கணப் போலி
பற்றிப் பார்ப்போம்.

பேச்சு வழக்கில் போலி தோன்றி விட்டது. எனவே
அதற்கு இலக்கணம் சமைக்கப் படுகிறது.மூவகைப்
போலியைச் சுட்டுகிறது இலக்கணம்.
1)  முதற்போலி (எ.கா: மயல் என்ற சொல் மையல் என்று
வழங்கப் படுதல். அதாவது அகரத்துக்குப் பதிலாக
ஐகாரம் போலியாக வருதல்) .

இடைப்போலி (எ.கா: அரயன் என்ற சொல் அரையன் என்று
வழங்கப் படுதல்.இங்கும் அகரத்துக்குப் பதிலாக
ஐகாரம் போலியாக வருகிறது.

கடைப்போலி (எ.கா: அகம் என்ற சொல்லுக்குப் பதிலாக
அகன் என்ற சொல் வருதல்.
"அகனமர்ந்து செய்யாள் உறையும்"  என்ற குறளைக்
கருதுக.

ஐ என்ற எழுத்தை அய் என்று எழுதுவது மூடத்தனம்.
அது இலக்கணப் போலியன்று.
ஒள என்ற எழுத்தை அவ் என்று எழுதுவது
இலக்கணப் போலியில் வராது.
   


இதற்கெல்லாம் விளக்கம் அளித்தாயிற்று.
அருள்கூர்ந்து அதைப் படித்துப் புரிந்து கொள்ள முயலவும்.




  

அறிவியலுக்கு வர்க்கச் சார்பு கிடையாது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
1) இந்தக் கட்டுரை அறிவியல் சார்ந்த ஒரு விஷயத்தைத்
தெளிவு படுத்துவதற்காக எழுதப்பட்டது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கவல்ல
தொழில்நுட்பம் என்ன? அது இந்தியாவில் உள்ளதா?
இந்தக் கேள்விக்கு அறிவியலின் விடை என்ன என்பதைச்
சொல்வது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம்.

2) அறிவியல் அறிவே இல்லாத சில மலினமான
அரசியல்வாதிகள் கூறுவது போல, அணுஉலைத்
தொழில்நுட்பம் போன்ற அதிஉயர் தொழில்நுட்பம்
எதுவும் தேவையில்லை என்று இக்கட்டுரை நிரூபிக்கிறது.
நியூட்டன் காலத்திய எளிய இயந்திரவியல் தொழில்நுட்பமே
(simple mechanics) போதுமானது என்றும் அது இந்தியாவில்
உள்ளது என்றும் இக்கட்டுரை நிரூபிக்கிறது.

3) இதில் ஆளும் வர்க்கக் குரல் கேட்கிறது என்று சொல்லுவது
அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கருத்தாகும்.
Psycho analysis செய்யும் உளவியல் மருத்துவரிடம் நோயாளிகள்
தங்கள் காதில் அடிக்கடி ஒரு குரல் கேட்பதாகக் கூறுவதுண்டு.
அதை போன்றதுதான் சிலருக்கு மட்டும் கேட்கும்
ஆளும் வர்க்கக் குரல்.

4) மீட்பு முயற்சி ஏன் தோல்வியுற்றது என்பதைக்
காரணங்களுடன் விளக்குகிறது இக்கட்டுரை. அதைத்
தாண்டிய வேறு காரணம் எதுவும் இல்லை.

5) தோல்விக்கான காரணத்தைக் கூறுகையில்,
stress tensor பற்றி இக்கட்டுரை குறிப்பிடுகிறது. stress tensor
என்பது ஒரு இயற்பியல் விஷயம். எனவே பரந்துபட்ட
வாசகர்கள் அதைப் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில்
stress tensor பற்றி புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
ஒருவர் TENSOR ALGEBRA படித்திருக்க வேண்டும்.
துரதிருஷ்ட வசமாக TENSOR ALGEBRA என்பது இந்தியப்
பல்கலைக் கழகங்களில் M.Sc Physics படிப்பிலும்
B.Tech படிப்பிலும் மட்டுமே சொல்லித் தரப் படுகிறது.

6) STRESS TENSORஐப் புரிந்து கொள்ளாமல் இக்கட்டுரையைப்
படித்தால் பிறழ்புரிதல்தான் ஏற்படும். நிற்க.

7) மார்க்சிய மூல ஆசான்களில் ஒருவரான ஸ்டாலின்
அறிவியலைப் பற்றி மிகத் தெளிவாக ஒன்றைக்
குறிப்பிடுகிறார். " அறிவியலுக்கு வர்க்கச் சார்பு
கிடையாது" என்கிறார் ஸ்டாலின். "பூர்ஷ்வா ரயில்
என்றோ பாட்டாளி வர்க்க ரயில் என்றோ எதுவும்
கிடையாது" என்கிறார் ஸ்டாலின். எனவே இந்த அறிவியல்
கட்டுரையில், ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கான
தீர்வு என்ன என்பதை மட்டும் சொல்லும் இக்கட்டுரையில்
ஆளும் வர்க்கக் குரல் கேட்பதாகக் கூறுவது
மார்க்சியத்துக்கு எதிரானது. தங்களை அறியாமலேயே
பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு இரையானவர்கள்
மட்டுமே அப்படிக் கருத இயலும்.
-------------------------------------------------------------------------------------



செவ்வாய், 29 அக்டோபர், 2019

குழந்தை சுஜித் மீட்பு? நடந்தது என்ன?
நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
உலகெங்கும் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள்
விழுந்து விடுவது அடிக்கொருதரம் நடக்கும் நிகழ்வே.
முதலாளித்துவ அமெரிக்காவிலும் சரி, கம்யூனிஸ்ட்
சீனாவிலும் சரி, இரண்டுங்கெட்டான் இந்தியாவிலும் சரி,
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து
உயிருக்குப் போராடிய நிகழ்வுகள் வரலாறாக உள்ளன.

மணப்பாறைக்கு அருகில் உள்ள சிற்றூரில் இரண்டு வயதுக்
குழந்தை சுஜித் வில்சன் விழுந்து, 80 மணி நேரம் நீடித்த
மீட்புப் பணிகள் பலன் தராத நிலையில் உயிரிழந்தது
நெஞ்சைப் பிழியும் சோகமாக இருக்கிறது.

இந்நிகழ்வை ஒட்டி, ஆழத்தில் விழுந்த குழந்தையை
மீட்க வல்ல தொழில்நுட்பம் இந்தியாவிலேயே இல்லை
என்றும், இதற்குத் தேவையான நவீன அறிவியல் கருவிகள்
இந்தியாவில் இல்லை என்றும் சில கருத்துக்கள் சமூகத்தில்
திணிக்கப் படுகின்றன. இந்தக் கருத்து சரியா என்று
பார்ப்போம்.

ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்பதில் உள்ள
தொழில்நுட்பம் உலகெங்கும் இதுதான். இது மிகவும்
எளிய தொழில்நுட்பம்தான். அணுஉலைத் தொழில்நுட்பம்
போன்றோ அல்லது விண்வெளியில் வேற்று கிரகத்துக்கு
செயற்கைக்கோள் அனுப்பும் தொழில்நுட்பம் போன்றோ
சிக்கலான தொழில்நுட்பம் அல்ல இது.

நியூட்டன் காலத்திய மெக்கானிக்சே இதற்குரிய தீர்வைத்
தந்து விடுகிறது. நீங்கள் துகள் இயற்பியலுக்கோ
குவான்டம் இயற்பியலுக்கோ போக வேண்டியதில்லை.

1) எந்தக் குழாய் வழியாக குழந்தை விழுந்ததோ, அதே
குழாய் வழியாக கருவியையோ, ஆளையோ,
ரோபோவையோ அனுப்பி குழந்தை இருக்குமிடத்தை
அடைந்து அதை மீட்பது.

2) குழாயின் அகலம் (diameter of the passage) மிகவும்
குறுகியதாக இருந்தால், மேற்கூறிய வழிமுறைகள்
பயன் தராமல் போகக்கூடும். அந்நிலையில்
குழியில் விழுந்த குழந்தையை எப்படி அடைவது?

அந்தக் குழிக்குப் போதிய அளவு மிக அருகில் இன்னொரு
குழியை ஆங்கில L எழுத்து வடிவில் (L shaped) தோண்டி,
அதன் வழியாக குழந்தை இருக்கும் இடத்தை அடைந்து
அதை மீட்பது.  (படத்தைப் பார்க்கவும்).

இவ்விரண்டு வழிகளைத் தவிர, இந்த மொத்தப்
பிரபஞ்சத்திலும் குழியில் விழுந்த குழந்தையை மீட்க
வேறு வழி எதுவும் கிடையாது. அமெரிக்கா,  ரஷ்யா,சீனா,
ஜெர்மனி என்று எவ்வளவு வளர்ந்த நாடாக இருந்தாலும்
இவ்விரண்டு வழிகள் மட்டுமே உண்டு.

குழந்தை சுஜித்தை மீட்பதில், மீட்புக் குழுவினர் முதல்
வழியைப் பின்பற்றி, குழந்தை விழுந்த அதே குழாய்
வழியாக சில கருவிகளைச் செலுத்தி மீட்க முயன்றனர்.
மணிகண்டன் என்பவர் கொண்டவந்த கருவியைச்
செலுத்தி மீட்கும் முயற்சி தோற்றது. அடுத்து அதே போன்ற
மற்ற முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் இரண்டாவது
வழிமுறையை மீட்புக்குழு நாடியது. 

ஆனால் மிகக் கடினமான பாறைகள் இருந்ததால்,
ரிக் எந்திரம் பயன்படுத்தப்பட்ட போதிலும்,
உரிய நேரத்துக்குள் பக்கவாட்டுக் குழியைத்
தோண்ட முடியவில்லை.

இதனிடையே குழந்தையின் நிலை என்ன என்று பார்ப்போம்.

1) குழிக்குள் விழுந்த குழந்தை ஒரு abnormal situationக்கு
ஆட்பட்டுள்ளது.  கிட்டத்தட்ட shrink fitting என்று கூறத்தக்க
அளவில் குழந்தை அந்த சிலிண்டருக்குள் (குழிக்குள்)
மாட்டிக் கொண்டுள்ளது. அங்குமிங்கும் திரும்பவோ,
உடலைச் சுற்றி வளைக்கவோ இயலாத நிலையில்
ஒரே இடத்தில் ஒரே பொசிஷனில் இருக்க வேண்டிய
நிலைக்கு குழந்தை ஆட்பட்டுள்ளது.

இது குழந்தையின் மீது ஒரு stressஐ ஏற்படுத்தி உள்ளது.
குழந்தையின் மீது செயல்படும் stress tensorஐ அறிந்து
கொண்டு, அதற்கேற்பவே மீட்புப் பணியைத் தீர்மானிக்க
இயலும்.

2) முதலில் குறைவான ஆழத்தில் இருந்த குழந்தை
இறுதியில் 85 அடி ஆழத்திற்குச் சென்று விட்டது.
அந்த சிலிண்டரில் எந்தப் பிடிமானமும் இல்லாததால்
குழந்தை free fall போன்று மேலும் ஆழத்துக்குச் செல்ல
வாய்ப்புண்டு. அந்த ஆழத்தில் சுவாசத்துக்குத்
தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. எனவே மேலிருந்து
ஆக்சிஜன் செலுத்தப் பட்டது. இதன் மூலம் குழந்தை
உயிருடன் இருக்க வாய்ப்பு ஏற்பட்டது.

3) ஆக்சிஜன் சப்ளை இருந்த போதிலும், நேரம் ஆக ஆக
குழந்தையின் மீது செயல்படும் stress tensor காரணமாக,
குழந்தைக்கு pulse down நிலைமை ஏற்படும். ஒரு குறிப்பிட்ட
அளவுக்குக் கீழ் பல்ஸ் குறைந்து விட்டால், குழந்தை
மயக்கம் ஆகிவிடும். மீட்புப்பணி நடந்து
கொண்டிருக்கும்போதே, குழந்தையின் pulse down
நிலைமை பற்றி மீட்புக்குழு அறிந்திருக்கும்.

Pulseன் threshold level என்ன என்பது பற்றியும், அந்த
threshold levelல் குழந்தை அதிகபட்சம் எவ்வளவு நேரம்
உயிருடன் இருக்கும் என்பது பற்றியும் ஒரு குழந்தை
நல மருத்துவரோ அல்லது உடல் இயங்கியல்
பேராசிரியரோ மட்டுமே கூற இயலும். இக்கட்டுரை
ஆசிரியரால் அதுபற்றித் துல்லியமாகக் கூற இயலாது.

முதல் வழி, இரண்டாவது வழி ஆகிய இரண்டுமே
தோல்வி அடைந்ததால், குழந்தை உயிரிழப்பது
தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

இப்போது உயிரிழந்த குழந்தையை 85 அடி ஆழத்தில்
இருந்து மேலே தூக்குவது என்பது மீட்புக்குழுவின்
அடுத்த கட்டப்பணி. இது ஐந்து பத்து நிமிடத்திற்குள்
முடிந்து விடும் எளிய பணி. எனவே மீட்புக்குழுவானது
ஒரு பொருளைத் தூக்குவது போல குழந்தையின்
உயிரற்ற உடலை மேலே தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது. குழந்தை
உயிரிழக்கக் காரணங்கள் இவையே.
1) ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் மிகவும் குறுகியது
(4 அங்குல விட்டம் மட்டுமே). இதன் காரணமாக
கருவிகளையோ பலூனையோ உட்செலுத்த முடியவில்லை.

2) பல்வேறு காரணங்களால் குழந்தையின் மீது
செயல்பட்ட stress tensorன் தாக்கம் அதிகம். குறுகிய
குழாய் என்பதால் உடலை அசைக்கக் கூட முடியாமல்
ஒரே பொசிஷனில் குழந்தை இருந்த நிலைமை மற்றும்
குழந்தையின் மீது மிக மெலிதாக மண் படிந்தமை. 

3) சுற்றிலும் மிக்க கடினமான பாறைகள் இருந்ததால்
பக்கவாட்டில் ஒரு குழாய் அமைப்பதில் தோல்வி.

4) இரண்டு வயதுக் குழந்தை என்பதால், it is highly tender
என்பதால், குழந்தையால் மீட்புப் பணியின் தாக்கத்தைப்
பொறுத்துக் கொள்ள இயலவில்லை. சற்று வயது கூடிய
பெரிய குழந்தையாக இருந்தால், அதன் உடல் ஓரளவு
அதிகமான தாக்கத்தை எதிர்கொள்ள இயலும்.  
 
இவைதான் காரணங்களே அன்றி, நம்மிடம் தொழில்நுட்பம்
இல்லை என்பதோ கருவிகள் இல்லை என்பதோ
காரணம் அல்ல.

சீனாவில் 10 நிமிடத்தில் மீட்டு விட்டார்கள்,
ஸ்பெயினில் 15 நிமிடத்தில் மீட்டு விட்டார்கள்
என்று பேசுபவர்கள் ஒரே ஒரு உண்மையை உணர்ந்து
கொள்ள வேண்டும்.
Every case is unique. Ours is the one which has heavy odds against.

கட்டுமான வேலையின்போது கடினமான பாறைகளை
வெடி வைத்துத் தகர்ப்பார்கள். அதே போல வெடி
வைத்துத் தகர்ப்பது இயலாது. ஏனெனில் இது
கட்டுமானப் பணி அல்ல; குழந்தையை மீட்கும் பணி.

இந்த இடத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த
ஒரு ஆங்கிலப் படத்தை நினைவு படுத்துகிறேன்.
"The Shawshank Redemption" என்ற படம் அது. எத்தனை பேர்
பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது.

இப்படத்தின் கதாநாயகன் சிறையில் அடைக்கப்பட்ட
ஓர் ஆயுள் தண்டனைக் கைதி. அவன் சிறையில் ஒரு
சுரங்கம் தோண்டுவான். 19 ஆண்டு காலம் கொஞ்சம்
கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் சுரங்கம் தோண்டித்
தப்பித்து விடுவான். 

குழந்தை சுஜித் மீட்பிலும் அவ்வளவு மெதுவாகச்
சுரங்கம் தோண்டினால்தான் குழந்தைக்கு பாதிப்பு
ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் அது சாத்தியமற்றது.

குழந்தைக்காக மிகவும் வருந்துகிறேன். குழந்தையின்
பெற்றோரின் துயரத்தில் பங்கு கொள்கிறேன்.
**********************************************************

குழியில் உள்ள குழந்தையை நெருங்கவே முடியாத
நிலையில், குழந்தை இருக்கும் இடத்திற்குக் கீழே
இரண்டடியில் தடுப்பு ஏற்படுத்துவது எப்படி?
  

குழந்தை மீட்பு விவகாரத்தில், குழந்தை இருக்கும்
இடத்தை கொடுக்கப்பட்ட இரண்டு வழிகளாலும்
நெருங்க முடியவில்லை. இதனால்தான் rescue operation
தோற்றது.இதுதான் உண்மை. இதை மக்கள் புரிந்து
கொள்வதற்காகவே இக்கட்டுரையை எழுதி உள்ளேன்.

  


குழந்தை சுர்ஜித் மீட்புப்பணிகள்!
ஜோதிமணி எம்பி என்ன செய்ய வேண்டும்?
------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
2004 சுனாமிக்குப் பிறகுதான் இந்தியாவில்
தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்
பட்டது. இது ஒரு மூன்றடுக்கு (three tier) அமைப்பு.
மாவட்ட, மாநில, தேசிய அடுக்குகளைக் கொண்டது.

இந்தியாவில் அடிக்கடி ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான
மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றின்பொது மீட்புப்
பணிகளை மேற்கொள்ளுவதில்தான் நமது பேரிடர்
மேலாண்மை அமைப்புகள் பயிற்சி பெற்றுள்ளன.

ஜப்பான் நாடு பூகம்ப முறிவுப்பாதையில் (fault line)
அமைந்துள்ளது. எனவே அங்கு அடிக்கடி பூகம்பம்
ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே ஜப்பான் நாடு
பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர்களின்போது
மிகுந்த திறமையுடன் செயலாற்றுவதில் நல்ல
பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டார்பிடோ எனப்படும் சூறாவளி
அடிக்கடி ஏற்படும். இது எப்போது ஏற்படும் என்பதை
அரை மணி நேரத்திற்கு முன்னர்தான் கூற இயலும்.
எனவே அரை மணி நேர அவகாசத்தில், பாதுகாப்பான
இடம் நோக்கி மக்கள் நகர வேண்டும். எனவே
அமெரிக்காவில் உள்ள பேரிடர் மேலாண்மை
அமைப்புகள் இவற்றில் பயிற்சியும் நிபுணத்துவமும்
பெற்றுள்ளன.

நாம் முன்னர்க் கூறியபடி, இந்தியாவின் பேரிடர்
மேலாண்மை அமைப்புகள் மழை வெள்ளம் புயல்
ஆகிய பேரிடர்களின்போது மட்டும் திறம்படச்
செயலாற்றும் அனுபவம் பெற்றவை.

மணப்பாறையில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக்
கிணற்றில் விழுந்தது மிகவும் துயர நிகழ்வு. உடனே 
தீயணைக்கும் படைக்குத் தகவல் சொல்லப்பட்டு
அவர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியில்
ஈடுபட்டனர். அப்போதெல்லாம் இது மிகவும் சிக்கலான
மீட்புப்பணி என்று யாரும் கருதவில்லை. எளிதில்
குழந்தையை மீட்டு விடலாம் என்ற புரிதலே
அனைவருக்கும் இருந்தது.

ஆரம்ப முயற்சிகள் தோற்று, குழந்தை இன்னும்
ஆழத்துக்குச் சென்றுவிட்ட பிறகே, நிலைமையின்
தீவிரத்தை அனைவரும் உணர்ந்து பேரிடர் மேலாண்மை
அமைப்புக்குத் தகவல் கொடுத்து, அவர்களும்
வந்து சேர்ந்தனர். எனவே பேரிடர் மேலாண்மை அமைப்பு
நிலைமைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்குள்
மீட்புப்பணியில் பொன்னான நேரம் (golden hour) எனப்படும்
நேரம் பெருமளவு கழிந்து விட்டது.

தற்போது மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில்
ஈடுபட்டுள்ளனர். மொத்த அரசு எந்திரமும் முடுக்கி
விடப்பட்டுள்ளது. குழந்தை மீட்கப்படுவதற்கான
நிகழ்தகவு appreciableஆக இருக்கிறது.

கரூர் எம்பி செல்வி ஜோதிமணி அங்கு சென்றுள்ளார்.
அங்கேயே தங்கியும் இருக்கிறார். அவரின் அக்கறை
பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் அவர் ஒரு வீடியோவை
வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறிய சில
கருத்துக்கள் முற்றிலும் தவறானவையாக உள்ளன.

எந்திரங்களைக் கொண்டு மேலும் தோண்டுவது தவறு
என்கிறார் செல்வி ஜோதிமணி. எந்திரங்களைப்
பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது?
மீட்புப்பணி என்பது கைக்குத்தல் அரிசியில்
தீபாவளிப் பலகாரம் செய்வது போன்றதல்ல.

அடுத்து plan A தோற்று விட்டால்,  plan B கைவசம் இல்லை
என்றெல்லாம் பெரிய தொழில்நுட்ப நிபுணர் போல்
பேசுகிறார். ஜோதிமணி அறிவியலோ தொழில்நுட்பமோ  
கற்றவர் அல்லர். ஒரு தொழில்நுட்ப விவகாரத்தில்
கருத்துச் சொல்ல எள்ளளவும் அருகதை அற்றவர்.

ஒரு எம்பி என்ற முறையில் தமக்கான ஒரு அறிவியல்
ஆலோசகரை ஜோதிமணி அமர்த்திக் கொள்ளலாம்.
அந்த ஆலோசகருக்கான சம்பளத்தை அரசு கொடுத்து .
விடும். ஜோதிமணிக்கு எந்தச் செலவும் கிடையாது.

இவ்வாறு அரசின் செலவில் ஒரு அறிவியல் ஆலோசகரை
அமர்த்திக் கொண்டு, அவரிடம் ஆலோசனை பெற்று
விஷயம் தெரிந்து கொண்டு, அதன் பிறகு அவர்
கருத்துக் கூறுவதுதான் முறை. 

குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று
பிரார்த்தனை செய்யும் இந்து கிறிஸ்துவ இஸ்லாமிய
மக்களின் நல்லெண்ணம் போற்றத் தக்கது. அதே நேரத்தில்
பிரார்த்தனைகளால் அணுவளவும் பயன் இல்லை என்ற
உண்மையையும் சொல்ல வேண்டி உள்ளது. இல்லாத
கடவுளிடம் வேண்டுதல் செய்வதால் என்ன பயன் விளையும்?

மீட்புப்பணிகள் முடிந்தவுடன், டாக்டர் மயில்சாமி
அண்ணாத்துரை தலைமையில் ஒரு குழுவை அமைத்து
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்பட்டால்
என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை
தமிழக அரசு பெற வேண்டும்.
*************************************************    

குரங்குகளைப் பயன்படுத்த இயலாது.
அவை சொன்ன பேச்சைக் கேட்கும் தன்மை
இல்லாதவை. ரோபோக்களை உருவாக்கி அனுப்பலாம்.

  


சனி, 26 அக்டோபர், 2019

MARISM DETAILS GERMANY
கோசல நாட்டைப்பற்றிப் பேசவந்த கம்பன், அந்த நாட்டில் கொடையே இல்லை, ஏனென்றால் அங்கு வறுமை இல்லை ஆதலால் என்பான்; ('வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்');
கமபன் கண்ட குறிக்கோள் நாட்டை நேரில் காண வேண்டுமென்றால் - உண்மையான சோசலிஸத்தைத் துய்க்க வேண்டுமென்றால் ஜெர்மனிக்குத்தான் வர வேண்டும் என்கிறார் அங்குள்ள ஒரு நண்பர்.
* மருத்துவமனைகளில் சாதாரண காய்சலுக்கான சிகிச்சையாக இருந்தாலும், மகப்பேற்று மருத்துவமாக இருந்தாலும்,
அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் -
எந்தச் சிகிச்சைக்கும் சல்லிக்காசுகூடக் கட்டணம் கிடையாது; மருந்தும் மருத்துவமும் முற்றிலும் இலவசம்.
* பள்ளிகளில் படிக்க ஒரு பைசாகூடக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அனைத்தும் இலவசம்.
* பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர் ஒவ்வொருவருக்கும் அரசு மாதந்தோறும் 700 ஈரோ(Euro) தருகிறது. அதாவது 55,000 ரூபாய்.
* இங்குள்ள நகரங்களில் சாலைகள் அகலமாகவும், ஒழுங்காகவும் தூய்மையாகவும் உள்ளன. சாலையின் இருபுறங்களிலும் கார்கள் நிறுத்தி வைக்கப்படுவதே (Parking) பெரும்பான் மையாகக் காணப்படுகிறது.
* இங்கு (பீலஃபெல்டு நகரில்)
மோட்டார் பைக்கை மிக அரிதாகவே காணமுடிகிறது. காணும் திசையெல்லாம் சிற்றுந்தும் (car), மிதியுந்துமே (cycle) ஆதிக்கம் செலுத்துகின்றன.
* 8 கோடியே 30 லட்சம் மக்கள்தொகை உள்ள ஜெர்மனியில் 6 கோடியே 40 லட்சம் கார்கள் உள்ளன. வேறெந்த நாட்டிலும் இந்த அளவிற்குக் கார்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை.
* குறுகுறு குழந்தைகள்முதல்
குடுகுடு கிழவர்கள்வரை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் மிதியுந்தில் வலம்வருவதைக் காணமுடிகிறது. இதனால், எரிபொருள் சிக்கனம், காற்று மாசுபடாமை, நல்ல உடற்பயிற்சி சாத்தியமாகின்றன.
* பேருந்துகள், மெட்ரோ, டிராம்கள் - எனப் பொதுப்போக்குவரத்துகள் வசதியாகவும் கூட்ட நெரிசலே இல்லாமலும் உள்ளன.
* கடைகளில் விற்பனையாளர்கள்,
கார், பஸ், டிராம், மெட்ரோ ஓட்டுநர்கள், விமான நிலையங்களில் சக்கர நாற்காலி தள்ளுநர்கள் - என இத்தகையோருள் ஏறத்தாழப் பாதிப்பேர் பெண்களாகவே உள்ளனர். ஆனால் சிகரெட் பிடிப்பதில் மட்டும் ஆண்களைப் பெண்கள் மிஞ்சிவிட்டனர். எங்குப் பார்த்தாலும் பெரும்பாலான பெண்கள் புகைத்தபடியே உள்ளனர்.
* நான் சென்றதிலிருந்து, வாகனங்களிலிருந்து ஹார்ன் சத்தம் வருமா என்று காதைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஹார்ன் ஒலி வந்தபாடில்லை. ஒலிமாசுக் கட்டுப்பாட்டில் அவ்வளவு அக்கறையுடன் நடந்துகொள்கின்றனர்.
* தமிழ்ப்பள்ளிகளை நடத்துதற்கும், கலை நிகழ்ச்சிகள், ஆண்டுவிழாக்கள் போன்றவற்றை நடத்துதற்கும் நிர்வாகமே கட்டடங்களையும், அரஙகுகளையும் வாடகையின்றித் தருகின்றது என்பது கூடுதல் மகிழ்ச்சி.
காணாமல் போன
ஆணவக் கொலை எதிர்ப்புப் போராளிகள்! 
--------------------------------------------------------------
ஆணவக் கொலைகள் செய்வோம்!
ஆணவக் கொலைகள் நாட்டுக்குத் தேவை என்கிறார்
அண்ணன் ஹரி நாடார்!

இருப்பினும் ஆணவக் கொலையை எதிர்க்கும்
போலிப் போராளிகள் அண்ணன் ஹரி நாடாரை
எதிர்க்க மாட்டார்கள்! காரணம் பயம்!

ஆணவக் கொலையை எதிர்ப்பதாகச் சொல்லும்
கூலிக்கார நாய்களின் முகத்தில் காரித் துப்புவோம்!
---------------------------------------------------------------

இது ஒரு பிரச்சார இயக்கம்தான். எனவே பூமி சூடாவது
பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நீங்களே ஒரு
350 இயக்கம் உங்கள் ஊரில் அல்லது வசிக்கும் இடத்தில்
ஆரம்பியுங்கள். பிரச்சாரம் செய்யுங்கள். இந்த இயக்கம்
ஆரம்பிக்க நீங்கள் ஒருவரே போதும்.

புவி வெப்பம் அடைதல் பற்றிய கட்டுரைகளைப்
படியுங்கள். அறிவியல் ஒளி ஏட்டில் நான் எழுதிய
நீண்ட விளக்கக்  கட்டுரை வெளியாகி உள்ளது.

நிலக்கரிப் பயன்பாட்டைக் குறையுங்கள்.
அனல் மின் நிலையங்களை மூட வேண்டும் என்று
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

பெட்ரோலில் ஓடும் உங்கள் காரை ஸ்கூட்டரை
விற்று விட்டு, மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர்,
கார் வாங்குங்கள். இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள்
பெட்ரோல் டீசல் வாகனங்கள் ஒழிந்து விடும்.

தொட்டதுக்கெல்லாம் ஸ்கூட்டரை எடுக்காதீர்கள்.
பொதுப் போக்குவரத்தை பஸ், மின்சார ரயில்,
ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். சைக்கிள்
ஓட்டினால் நல்லது.


உண்மைதான். எனவேதான் உண்மைகளை எடுத்துச்
சொல்வது தேவைப்படுகிறது. உலக அளவில் IPCC
அமைப்பானது ஹைடிரோ கார்பன் பயன்பாட்டைக்
குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இதனால்தான் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல்
வாகனங்கள் முடிவுக்கு வருகின்றன. அரசு நல்ல
முடிவை எடுத்துள்ளது. மக்களும் புவி வெப்பமுறாமல்
தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அது எப்படி என்று மக்களுக்கு உணர்த்துவது
அறிவியலாளர்களின் கடமை.




பொறியியல் படித்த புதிய பட்டதாரிகளுக்கு
இஸ்ரோவில் வேலை வாய்ப்பு!
விண்ணப்பியுங்கள் தமிழர்களே!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
BE freshers தேவை! இஸ்ரோவில் வேலை!
காலியிடம் = 327
எலக்ட்ரானிக்ஸ், கணினிப் பொறியியல் உள்ளிட்ட
பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும்!

ஆண்டுதோறும் ஆள் எடுக்கிறார்கள் இஸ்ரோவில்!
இருந்தாலும் தமிழர்கள் தேர்வாகி வேலைக்குச்
செல்வதே இல்லை!

இதற்குத் தேர்வு எழுத வேண்டும்.
தேர்வு என்றாலே தமிழ்நாட்டில்
தோல்வி மனப்பான்மையும், வெறுப்பும்,
தாழ்வு மனப்பான்மையும் தலைதூக்கி நிற்கிறது.

தமிழர்கள் எல்லாரும் தேர்வில் தேறி என்ஜீனியர்
ஆகி விட்டால், உதயநிதிக்குப் போஸ்டர் ஓட்ட
ஆள் கிடைப்பானா? எனவே திராவிட இயக்கம்
திட்டமிட்டே இளைஞர்களிடம் ஒரு தாழ்வு
மனப்பான்மையை விதைத்து வைத்திருக்கிறது.

இதை முறியடிக்காமல் எதுவும் செய்ய முடியாது.

தமிழர்களே தேர்வு எழுதுங்கள்!
***************************************

மாயாவதி கட்சியின் தலைவர்களை
செருப்பு மாலை போட்டு கழுதை மேல் ஏற்றி
ஊர்வலம் விட்ட கட்சித் தொண்டர்கள்!
ராஜஸ்தானில் அதிசயம்!
---------------------------------------------------------------------
ராஜஸ்தான் சட்ட மன்றத் தேர்தலில் மாயாவதியின்
கட்சி போட்டியிட்டு ஆறு இடங்களை வென்றது.
இந்த ஆறு பேரும் அப்படியே மொத்தமாக
கட்சி மாறி காங்கிரசில்  சேர்ந்து விட்டனர்.

இதனால் ராஜஸ்தான் முழுவதும் பகுஜன் கட்சியின்
தொண்டர்கள் கொதிப்படைந்தனர். காசு வாங்கிக்
கொண்டு இந்தக் கட்சிமாறிகளுக்கு சீட்டு கொடுத்த
கட்சியின் மாநிலத் தலைவரையும், மாநிலப்
பொறுப்பாளரையும் தொண்டர்கள் தண்டித்தனர்.
எப்படி?

இருவரையும் கழுதை மேல் ஏற்றி, செருப்பு மாலை
போட்டு, முகத்தில் கரியைப் பூசி  தெருக்களில்
ஊர்வலம் விட்டனர். இந்த வீடியோ வைரல்
ஆகி உள்ளது. இதுதான் சரியான தண்டனை!
**************************************************  

   

 

வெள்ளி, 25 அக்டோபர், 2019

நாங்குநேரி விக்கிரவாண்டி முடிவுகள்
உணர்த்தும் உண்மை என்ன?
---------------------------------------------------------
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்
திமுகவின் புகஸிந்தியை 44,294 வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்கடித்துள்ளார். நாங்குனேரியில் அதிமுகவின்
நாராயணன் காங்கிரசின் மனோகரனை 33,445 வாக்குகள்
வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

நான்குனேரியில் தேவேந்திர குல வேளாளர் சமூக
மக்கள் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணித்தனர்.
அவர்கள் வாக்களித்திருந்தால், காங்கிரஸ் வேட்பாளர்
மனோகரன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்
போய் இருப்பார்.

காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன் உள்ளூர்க்காரர் அல்லர்.
இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். காங்கிரஸ் தலைவர்
கே எஸ் அழகிரியால் நான்குனேரியில் ஒரு உள்ளூர்
வேட்பாளரை நிறுத்த முடியவில்லை; அல்லது நிறுத்த
விரும்பவில்லை.

இதைத்தவிர காங்கிரசின் தவறு என்று வேறு ஏதும் இல்லை.
காங்கிரசின் தலைவிதி திமுகவின் தலைவிதியுடன்
முடிச்சுப் போடப்பட்டு உள்ளது. எனவே இந்தப்
படுதோல்வியில் காங்கிரசின் பங்கு என்று பெரிதாக
ஏதும் இல்லை.

திமுக என்பது ஒரு அரசியல் கடசியாக, சமூக இயக்கமாக
ஒரு காலத்தில் இருந்தது. இன்று அது கருணாநிதி அண்ட்
சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியாக மாறி
விட்டது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சொத்துக்கள்,
வெளி மாநிலங்களில் வாங்கிக் குவித்த சொத்துக்கள்,
வெளி நாடுகளில் உள்ள சொத்துக்கள்
என்று குவிந்த சொத்துக்களைக் காப்பாற்றுவது
மட்டுமே திமுகவின் ஒரே லட்சியமாக மாறி
விட்டது. எனவே கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி,
இன்பநிதி என்பதாக திமுக மாறி விட்டது.

மக்கள் இதை விரும்பவில்லை. இதை ஏற்கத்
தயாராக இல்லை. எனவே தேர்தல் முடிவுகள்
இப்படித்தான் இருக்கும். 2021 பொதுத்தேர்தலிலும்
முடிவுகள் இப்படித்தான் வரக்கூடும்.

ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தால், உதயநிதிக்குப்   ழே   ட்
பல்லக்குத் தூக்க வேண்டும் என்ற நிலையில்
காங்கிரஸ் மானமிழந்து இருக்க வேண்டிய
அவசியம் இல்லை. சென்னை வரும்போதெல்லாம்
கருணாநிதியைச் சந்திக்க மறுத்து கெத்தாக
இருந்த ராகுல் காந்தி இன்று உதயநிதிக்குப்
பல்லக்குத் தூக்குவதை மானமுள்ள காங்கிரஸ்காரன்
விரும்பவில்லை.

சபரீசன் பேச்சைக் கேட்டுக் கொண்டு, வன்னியருக்கு
மட்டும் தனி உள்ஒதுக்கீடு என்று ஸ்டாலின்
அறிவித்தது முட்டாள்தனம் மட்டுமல்ல; மற்ற
சாதியினர் அனைவ்ருக்கும் ஆத்திரத்தை
ஏற்படுத்தியது.

எல்லாக் கோபத்துக்கும் மக்கள் வடிகால் தேடி
விட்டார்கள்! அவ்வளவுதான்!
***********************************************************


வியாழன், 24 அக்டோபர், 2019

சோஷலிசம் சொத்துரிமையை ஏற்பதில்லை!
(திரு சமஸ் கட்டுரைக்கு மறுப்பு!)
----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கம்யூனிஸ்ட் அல்லாத ஒருவர், கம்யூனிசம் பற்றிய
மிகவும் பாமரத்தனமான புரிதலுக்கு மேல் ஏதுமற்ற
ஒருவர் திரு சமஸ். இவர் "தமிழ் இந்து திசை" ஏட்டில்
(23.10.2019) "அடுத்த நூற்றாண்டின் பொதுவுடைமை
இயக்கம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி
கம்யூனிசம் குறித்த தமது அறியாமையை ஊரறியச்
செய்துள்ளார்.

மார்க்சியத்தின் அடிப்படை நிலைபாடுகளைக்கூட
அறிந்திராத, இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்
வரலாற்றை நுனிப்புல் அளவேனும் அறிந்திராத திரு சமஸ்
ஒட்டுமொத்தக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும்
மிகுந்த அகந்தையோடு அறிவுரை வழங்க முன்வந்துள்ளார்.

குட்டி முதலாளிய சிந்தனைக் குள்ளரும், மார்க்சியத்தைக்
கற்றிராத கல்லாக் களிமகனுமான சமஸ் எழுதிய
கட்டுரை எவ்விதத்திலும் பரிசீலிக்கவோ மறுப்புரைக்கவோ
அருகதையற்றது. எனினும் அவரின் கட்டுரை திரளான
வாசகர்களைக் கொண்ட ஒரு தினசரியில் வெளிவந்துள்ளதால்
பதிலளிக்க நேருகிறது.

வசந்தத்தின் இடி முழக்கம்!
------------------------------------------
இந்திய அரசியல் அரங்கில் வசந்தத்தின் இடிமுழக்கமாக
எழுந்த நக்சல்பாரி விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய
எழுச்சியையும், அதைத் தொடர்ந்து சாரு மஜூம்தார் தலைமையில்
1969 ஏப்ரலில் மார்க்சிய லெனினியக் கட்சி உதயமானதையும்
கொஞ்சமும் அறியாதவர் கட்டுரையாளர் சமஸ்.

சீனாவில் மாவோ ஆட்சி நடத்திய காலம் அது. நக்சல்பாரி
எழுச்சியை வசந்தத்தின் இடிமுழக்கம் (Spring thunder) என்றும்
சாரு மஜூம்தாரை புரட்சியின் சுடரொளி என்றும்
சீனக்  கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியின்
அறைகூவலை ஏற்று கல்லூரி மாணவர்கள் படிப்பைத்
துறந்து விடுதலைக்காகப் போராட வந்தார்கள். மகாத்மா
காந்திக்குப் பிறகு, வேறெந்தத் தலைவரின் அறைகூவலுக்கு
இசைந்து, மாணவர்கள் படிப்பைத் துறந்தார்கள் என்றால்,
அது சாரு மஜூம்தாருக்கு மட்டும்தான்.

"எழுபதின் பத்தாண்டுகளை விடுதலையின் பத்தாண்டுகளாக
மாற்றுவோம்" (The decade of 70s will be the decade of liberation)
என்ற சாரு மஜூம்தாரின் அறைகூவலை
ஏற்று கணக்கற்ற கல்லூரி மாணவர்கள் படிப்பைத்
துறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்கள்.

போஜ்புரிலும் ஸ்ரீகாகுளத்திலும் செந்தளங்கள் உருவாக்கப்
பட்டன. நிலப்பிரபுத்துவச் சுரண்டல், கந்து வட்டிக்
கொடுமைகள் ஆகியவை ஒழிக்கப்பட்டன. மக்கள்
நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு மக்களின் எதிரிகளான
பண்ணையார்கள் தண்டிக்கப் பட்டனர். செந்தளங்களில்
போலீசின் அதிகாரம் செல்லுபடியாகவில்லை.

தமிழ்நாட்டிலும் தர்மபுரியில் மக்கள் யுத்தக்குழுவின்
தலைமையில் தோழர் பாலனின் செயல்பாடுகளால்
கந்துவட்டிக் கொடுமைகள், சாதியக் கொடுமைகள்
ஒழிக்கப் பட்டன. நாடு முழுவதும் வர்க்க எதிரிகளை
அழித்தொழிப்பது என்ற செயல்தந்திர முழக்கம் நடைமுறைப்
படுத்தப் பட்டு கொடிய நிலப்பிரபுக்கள் அழித்தொழிக்கப்
பட்டனர்.

இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு ந.மு, ந.பி
(நக்சல்பாரிக்கு முன், நக்சல்பாரிக்குப் பின்) என்றே
அமைந்துள்ளது.இத்தகைய நக்சல்பாரியைப் பற்றி
எதுவுமே தெரியாமல் பெருத்த அறியாமையுடன் எழுதுகிறார்
சமஸ். கம்யூனிஸ்ட் அல்லாத ஒருவரின் சராசரி
மூடத்தனம் என்று கருதி இதைக் கடந்து விட முடியாது.
தான் எப்பேர்ப்பட்ட முட்டாள் என்று கூட அறியாத
முட்டாள்தனம் சமசினுடையது/

முதலாளித்துவம் உலகளாவியது!
----------------------------------------------------
லெனின் ஸ்டாலின் மாவோ ஹோசிமின் பிடல் காஸ்ட்ரோ
என்று இந்திய நிலத்துக்கு வெளியே தங்களுக்கான
முன்னுதாரணங்களைத் தேடுகிறார்கள் கம்யூனிஸ்டுகள்
என்று குறைகூறுகிறார் சமஸ். மூலதனம் உலகளாவியது;
முதலாளித்துவமும் உலகளாவியது. அது போலவே
மார்க்சியமும் உலகளாவியது; அப்படித்தான் இருந்தாக வேண்டும்.
மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் மாவோ ஆகிய ஐவரும் மார்க்சியத்தின் மூல ஆசான்கள். இவர்களைத் தவிர்த்து விட்டு
மார்க்சியம் என்பது கிடையாது.

நியூட்டன், ஐன்ஸ்டின், மாக்ஸ் பிளாங் ஆகியோர் நவீன
அறிவியலின் முன்னோடிகள். இவர்கள் வெளிநாட்டினர்
என்பதற்காக இவர்களைத் தவிர்த்து விட்டு அறிவியலைப்
பேச இயலாது. தாமஸ் ஆல்வா எடிசனை இந்தியா
கொண்டாடுவதும், இந்தியாவின் கணித மேதை ராமானுஜனை
உலகம் கொண்டாடுவதும் எதனால்?

ஆப்பிரிக்கக் கறுப்பின மக்கள் மகாத்மா காந்தியைப்
போற்றுவதும் நெல்சன் மண்டேலா காந்தியத்தைப்
பின்பற்றியதும் எதனால்? இதெல்லாம் மானுடத்தின் இயல்பு!
மானுடத்துக்கே உரிய பொதுப்பண்பு!

மானுட சமூகத்தின் பொருள் உற்பத்தி உலகளாவியது.
உள்ளூர்த் தன்மை மட்டும் கொண்ட பொருள் உற்பத்தி
என்பது என்றோ காலாவதி ஆகிப்போன ஒன்று.
முதலாளித்துவமானது ஏகாதிபத்தியமாக வளர்ச்சி
அடைந்த பின்னர், பொருள் உற்பத்தியின் சர்வதேசத்
தன்மை மேலோங்கி விட்டது. இந்தியச் சந்தையில்
சீனப்பொருட்களும் பிற அந்நிய நாட்டுப் பொருட்களும்
இறைந்து கிடப்பது இதற்கு மிகவும் பிரபலமான உதாரணம்.

உலகளாவிய உற்பத்தி தோன்றி விட்டதாலேயே, உலகளாவிய
உற்பத்திக் கருவிகளை உருவாக்கியோரை அங்கீகரிக்கும்
நோக்கில், உலகம் தழுவிய அளவில் நோபல் பரிசுகள்
வழங்கும் நடைமுறை ஏற்பட்டது. உற்பத்திக் கருவிகளான
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இதனால்தான் நோபல் பரிசு
வழங்கப் படுகிறது.

உலகளாவிய உற்பத்தி, உலகளாவிய சந்தை,
உலகளாவிய வணிகம் ஆகியவையே இன்றைய
உலகை இயக்கும் சக்திகள். எனவே உலகம் முழுமைக்குமான
சாதனைகளை நிகழ்த்திய அறிஞர்ளை நாடுகளின்
எல்லைகளைத் தாண்டி உலகம் போற்றுகிறது.
இந்திய இளைஞர்களின்  மனம் கவர்ந்தவர்களாக
பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மட்டுமல்ல, பில் கேட்ஸ்,
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோரும்தான் இருக்கிறார்கள்.

தமிழரின் தத்துவ மரபு!
-----------------------------------
இன்றைய ஏகாதிபத்திய யுகம் தோன்றுவதற்கு முன்னரே,
பண்டைத் தமிழகம் உலகளாவிய சிந்தனை மரபைக்
கொண்டிருந்தது.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்" என்றுதான் கம்பர்
தமது ராமாயணத்தின் முதலடியை எழுதுகிறார்.
" உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றுதான்
சேக்கிழார் பெரிய புராணத்தின் முதலடியை எழுதுகிறார்.
"வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇ" என்றுதான்
நக்கீரர் நெடுநல்வாடையைத் தொடங்குகிறார்.

சிந்தனைக் குள்ளரான சமஸ் மானுடத்தின் பொதுப் பண்புகளை
அறிய மாட்டார்.  தமிழரின் உலகம் தழுவிய சிந்தனை மரபை அறிய மாட்டார். வெளிநாட்டைச் சேர்ந்த லெனின், ஸ்டாலின்,
மாவோ  ஆகியோரை இந்தியக் கம்யூனிஸ்டுகள் போற்றுவது
தேச விரோதம் என்பதற்கு மேல் அவரின் மூளையால்
சிந்திக்க இயலாது.

சோஷலிசமும் கம்யூனிசமும் வேறானவை அல்ல!
----------------------------------------------------------------------------
சோசலிசம், கம்யூனிசம் பற்றிய திரு சமஸின் புரிதல்
மிகவும் இழிந்த பிறழ்புரிதல் ஆகும். சோசலிசமும்
கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவங்கள்
என்ற தவறான புரிதலின்மீது தொடர்ந்து எழுதிக்
கொண்டே போகிறார்.

முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டவை அல்ல. ஏகாதிபத்தியம் என்பது
முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் என்றார் லெனின்.
அதைப்போலவே கம்யூனிசம் என்பது சோசலிசத்தின்
உச்ச கட்டம் ஆகும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டவை அல்ல.

திரு சமஸ் போன்றவர்களுக்கும் புரியும்படி சொல்ல
வேண்டுமென்றால், இளங்கலை பட்டப் படிப்பில்
சேருவது சோசலிசம் என்றால், பிஹெச்டி பயில்வது
கம்யூனிசம் ஆகும். இவ்விரண்டும் முரண்பட்டவை அல்ல.

சோசலிசம் தனிச் சொத்துரிமையை ஏற்றுக் கொள்கிறது
என்றும் கம்யூனிசம் முரட்டடியாக தனிச்சொத்துரிமையை
ஏற்க மறுக்கிறது என்றும் கூறி தனது தற்குறித் தனத்தை
வெட்கமின்றிப் பிரகடனம் செய்கிறார் சமஸ்.

சோசலிசம் கம்யூனிசம் இரண்டுமே முதலாளிய
வர்க்கத்தினரின் சொத்துரிமையை அங்கீகரிக்கவில்லை.
சோஷலிஸக் கட்டுமானத்தின்போது, எடுத்த எடுப்பிலேயே
முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
சொத்துக்களைப் பறிமுதல் செய்ய கம்யூனிச சமுதாயம்
மலரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற தேவை அறவே இல்லை.

கியூபாவில் புரட்சிக்குப் பின் 1959ல் ஆட்சிக்கு வந்த பிடல்
காஸ்ட்ரோ, பதவிக்கு வந்த உடனேயே, பெரும் நிலவுடைமையைக்
கொண்டிருந்த பண்ணையார்களின் நிலத்தைப் பறிமுதல்
செய்தார். அவை லட்சக் கணக்கான  நிலமற்ற
விவசாயிகளுக்கு விநியோகிக்கப் பட்டன.
சோசலிஷத்தைக் கட்டுவதற்கான முதல் நிபந்தனையே
பெரு முதலாளிகள், பெரும் பண்ணையார்களின்
சொத்துக்களைப் பறிமுதல் செய்வதுதான்.

"கம்யூனிஸ்டுகளின் கொள்கையை ஒரு வரியில்
சொல்வதானால், தனிச்சொத்துரிமையை ஒழிப்பதுதான்
என்று கூறலாம்" என்கிறார் காரல் மார்க்ஸ்.
(கம்யூனிஸ்ட் அறிக்கை, அத்தியாயம்-2, பாட்டாளிகளும்
கம்யூனிஸ்டுகளும்).

சோஷலிசமும் சரி, கம்யூனிசமும் சரி இரண்டுமே
முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை
கோட்பாடாக ஏற்றுக் கொண்டவை. இதுவே மார்க்சியத்தின்
அடிப்படை. ஆனால் இந்த அடிப்படை உண்மை தெரியாமல்
சோசலிசம் தனிச்சொத்துரிமையை ஏற்பதாக சமஸ் கூறுவது
இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய தற்குறித்தனம்.

உலகமயச் சூழலில் உள்ளூர் மட்டத்தில் கட்சியா?
------------------------------------------------------------------------------
கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயர்தான்
பொருத்தமானது என்ற சமஸின் அபத்தங்கள் பதிலளிப்பதற்கே
அருகதை அற்றவை. அடுத்து அகில இந்திய அளவிலான
கட்சி கட்டக் கூடாது என்றும் அந்தந்த மாநில அளவிலேயே
கட்சியைக் கட்ட வேண்டும் என்றும் மூத்த மார்க்சிய
அறிஞர் எஸ் என் நாகராஜன் கூறியதை மேற்கோள்
காட்டும் சமஸ், அவரின் கேள்விக்கு இன்னும் கம்யூனிஸ்டுகள்
பதிலளிக்கவில்லை என்றும் பொய்யுரைக்கிறார்.

சமஸ் கூறுவது உண்மை அல்ல. அகில இந்தியக் கட்சியும்
ஏக இந்தியப் புரட்சியுமே இந்தியாவுக்குச் சரி என்ற
முடிவை பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துள்ளன.
உலகமயச் சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில்
உள்ளூர் அளவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்ட வேண்டும்
என்ற போதனை பிற்போக்குத் தனமானது.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை எப்படிக் கட்ட வேண்டும் என்பது
குறித்த லெனினிய போதனைகள் எல்லா நாட்டுக்கும்
பொருந்துவன. ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கட்டுறுதி
வாய்ந்த அமைப்பாக இருப்பதற்குப் பதிலாக
சம்மேளனத் தன்மையுடன் (federation or confederation setup)
இருக்க இயலாது. அப்படி இருக்குமானால் அதனால்
புரட்சியை நடத்த இயலாது.

அதே நேரத்தில், கட்சியின் மக்கள் திரள் அமைப்புகளான
தொழிற்சங்கம், விவசாயிகள் சங்கம், பெண்கள், மாணவர்கள்,
இளைஞர்கள் ஆகியோருக்கான அமைப்புகள் ஆகியவை சம்மேளனத் தன்மையுடன்தான் (federation setup) கட்டப் படுகின்றன.
மக்கள் திரள் அமைப்புகளின் நெகிழ்ச்சியான அமைப்பு வடிவம்
கட்சிக்குப் பொருந்தாது.

சமூகத்தின் புறநிலைத் தேவைகளில் இருந்துதான் அமைப்பு
வடிவம் தீர்மானிக்கப் படுகிறது. இந்திய ஆளும் வர்க்கமும்
அரசும் ஏக இந்தியத் தன்மையுடன் மத்தியில் சகல
அதிகாரத்தையும் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்,
மாநில அளவில் கட்சி கட்டுவது என்ற ஆலோசனை
கேலிக்கூத்தானது. எஸ் என் நாகராஜன் அவர்களின் புரிதல்
தவறானது என்று ஆயிரம் முறை சொல்லியாகி விட்டது.

உலகமயப் பொருளாதாரத்தை அணுகுவது, மதத்தை
அணுகுவது, தேசியத்தை அணுகுவது, அரசியத்தை
அணுகுவது ஆகிய நான்கு சிக்கல்களுக்கு இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தீர்வு இல்லை என்கிறார் சமஸ்.
தீர்வில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் அதற்கான எந்த
உதாரணத்தையும் காட்டவில்லை. எனவே அவரின் கூற்று
வெற்று அவதூறாக மட்டுமே நிற்கிறது. போகிற போக்கில்
ஏதேனும் அவதூற்றைத் தெளித்து விட்டுப் போவது
குட்டி முதலாளிய லும்பன்களின் வேலை.

இடதுசாரிக் கட்சிகள் ஒரே அமைப்பில் திரளாமல் பிரிந்து
கிடப்பது பற்றி அதிகமாகவே கண்ணீர் சிந்துகிறார் சமஸ்.
அவர் குறிப்பிடுகிற கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட்
(CPM) கட்சிகளிடையே ஏற்கனவே செயல்பாட்டு ஒற்றுமை
(functional unity) சிறப்பாகவே உள்ளது. அமைப்பு ரீதியான
ஒற்றுமையை (organisational unity) புறநிலைத் தேவையை ஒட்டி
எப்போது வேண்டுமோ அப்போது அவர்களே ஏற்படுத்திக்
கொள்வார்கள். அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.
திமுக அதிமுக ஏன் இரண்டாகப் பிரிந்து கிடைக்க வேண்டும்
என்று கவலைப் படுவதுதான் சமஸின் அறிவெல்லைக்கு
உட்பட்டது.

வர்க்கப் போருக்குப் பதிலாக வர்க்க சமரசமா?
-----------------------------------------------------------------------
மகாத்மா காந்தி, அம்பேத்கார், பெரியார், அண்ணாத்துரை
ஆகியோரை கம்யூனிஸ்டுகள் சுவீகரித்துக் கொள்ள
வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் சமஸ். ஏன் இந்த
நாலு பேருடன் நிறுத்தி விட்டார்? கருணாநிதி, மு க ஸ்டாலின்,
உதயநிதி, இன்பநிதி வரை சுவீகரித்துக் கொள்ளலாமே!
வட இந்தியாவில் லல்லு பிரசாத் யாதவ் முதல் ராபரி தேவி வரை
சுவீகரித்துக் கொள்ளலாமே!

மார்க்சியம் வர்க்கப் போராட்டத்திற்கான தத்துவம்.
காந்தியமோ வர்க்க சமரசத் தத்துவம். முதலாளிய
எதிர்ப்பை காந்தியம் ஏற்கவில்லை. தனிச் சொத்துரிமை
ஒழிப்பை காந்தியம் ஏற்கவில்லை. இந்நிலையில் காந்தியத்திடம்
இருந்து எதை சுவீகரிப்பது?

ஜோதிராவ் புலே, அம்பேத்கார், பெரியார் ஆகியோர்,
நிலவுகிற சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டே
அதில் உடனடியான சிற்சில மாற்றங்களைக் கோரிச்
செயல்பட்டனர். இவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.
இவர்களின் பங்களிப்பை எவரும் மறுக்க இயலாது.
ஆனால் மார்க்சியம் மேலெழுந்தவாரியான
சீர்திருத்தங்களுக்காக அல்ல, ஒட்டு மொத்த சமூக
மாற்றத்துக்காக நிற்கிறது. அது நிலவுகிற சமூக அமைப்பைத்
தக்க வைப்பதை அல்ல, தகர்த்து எறிவதையே தனது
லடசியமாகக் கொண்டது.

மார்க்சியத்தை மானுடம் சுவீகரிக்க வேண்டும்!
---------------------------------------------------------------------------
மக்களை நேசிக்கும் யார் எவரும் அல்லது எந்தக் கட்சியும்
சுவீகரித்துக் கொள்ள வேண்டிய பலரை கம்யூனிஸ்ட்
இயக்கம் மட்டுமே பெற்றிருக்கிறது. அந்தப் பலரின்
பட்டியல் மிக நீளமானது. சுருக்கம் கருதி, ஒரே ஒருவரை
மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். அவர்தான் சீனிவாச ராவ்.

வசதிமிக்க குடும்பத்தில் பிறந்து, கம்யூனிஸ்ட் கட்சியில்
சேர்ந்து, கீழ்த்தஞ்சைப் பகுதியில் நிலமற்ற விவசாயக்
கூலிகளின் நடுவில் வேலை செய்து, சேரிகளில் குடிசைகளில்
தங்கி, அமைப்பைக் கட்டி, சவுக்கடி சாணிப்பால் போன்ற
நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை எதிர்த்துப்
போராடி முறியடித்து, அடிமைத்தனத்தை ஒழித்து,
நிலமற்ற எளிய மக்களின் கூன் முதுகை நிமிர்த்திய
தோழர் சீனிவாச ராவ் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட். அவர்தான்
ஒட்டு மொத்த மானுடமும் சுவீகரித்துக் கொள்ள வேண்டிய
அருகதையைப் பெற்றவர். இதெல்லாம் சமசுக்குத் தெரியுமா?

திரு சமசின் கட்டுரை இன்னும் பல அருவருக்கத்தக்க
அபத்தங்களைத் தாங்கி நிற்கிறது. அவை பரிசீலிக்கவே
அருகதை அற்றவை. அவற்றுக்கெல்லாம் point to point rebuttal
அளிக்க இயலாது. மொத்தக் கம்யூனிஸ்டுகளுக்கும் அறிவுரை
வழங்கும் தலைமை ஸ்தானத்தில் தான் இருப்பதாகப் பாவித்துக்
கொண்டு, சுயஇன்பம் துய்த்துள்ளார் சமஸ். பேதை ஒருவன்
கழுவாத காலைப் படுக்கையில் வைத்தது போன்றது அவரின்
கட்டுரை.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
************************************************************
             

புதன், 23 அக்டோபர், 2019

ரூ 630 கோடி ஊழல்! திரிபுராவில்
மார்க்சிஸ்ட் ஆடசியில் அமைச்சராக இருந்த
பாதல் சவுத்ரி கைது! ஊழல் புரிந்து
கைதாகும் மார்க்சிஸ்ட் வாழ்க!    த ட்


உடன் பொதுப்பணித்துறை
முன்னாள் தலைமைப் பொறியாளரும் கைது!

செங்காற்று பகத்சிங் பாரதி  மருதுபாண்டியன் இரா


கூத்தாடியை வணங்குவதை தமிழனின்
கலாச்சாரமாக மாற்றிய திராவிடத் தத்துவம்
அழியாமல் விமோசனம் இல்லை. காமராசர்
இருந்தபோது அவர் இந்த திராவிடத்தின் மீது
சாணியைக் கரைத்து ஊற்றி அடித்தார்.


கூத்தாடி வாழ மண்சோறு திங்கும்
புழுவினும் இழிந்த ஈனப் பயல்கள்!
------------------------------------------------------
ஜோசப் விஜய் என்று ஒரு கூத்தாடிப் பயல்.
இவன் நடித்த "பிகில்" என்ற படம்
தீபாவளிக்கு வருகிறதாம்.

இந்தப்படம் வசூலில் வெற்றி அடைய வேண்டுமாம்!
அதற்காக மண்சோறு சாப்பிடும் ஈனப்பயல்கள்!

தமிழ் மண்ணை கூத்தாடிகளின் நிலமாக
மாற்றிய திராவிடக் கூத்தாடிகள்
அண்ணாத்துரை, கருணாநிதி, ராமச்சந்திர மேனன்
ஆகிய புழுவினும் இழிந்த கூத்தாடிகளுக்கு
மன்னிப்பே கிடையாது!
--------------------------------------------------------------------------

poorshvaa uuzhalukkup

பூர்ஷ்வா ஊழலுக்குப் போட்டியாக
திரிபுரா மார்க்சிஸ்டுகளின் ஊழல்!
ரூ 600 கோடி ஊழல் புரிந்த மார்க்சிஸ்ட் கட்சியின்
மத்தியக் கமிட்டி மெம்பர் பாதல் சௌத்ரி!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை எப்படிக் கட்ட வேண்டும்
என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லெனின்.
ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சியை அப்படித்தான்
கட்டினார்.

196 இந்திய சீனப்போருக்குப் பின்னர்,
கம்யூனிஸ்ட் கடசியில் இருந்து பிரிந்து சென்ற
அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கினார்.
அது லெனின் பாணியில் மத்தியக் கமிட்டி
அமைப்புடன் கட்டப் பட்டது.

பின்னர், மார்க்சிஸ்ட் கடசியில் இருந்து பிரிந்து
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை தோழர்
சாறு மஜூம்தார் காட்டினார். அதுவும் மத்தியக்
கமிட்டி அமைப்புடன் கறாரான லெனின் பாணியில்
கட்டப்பட்டது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி (CPI) லெனின் பாணியில் கட்டப் பட்டதல்ல.

இதையெல்லாம் இங்கு சொல்வதற்கான காரணம் இதுதான்!
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் மத்தியக் கமிட்டி என்பது
உச்சபட்ச அதிகாரம் உள்ள அமைப்பு. எனவே ஒரு மத்தியக்
கமிட்டி மெம்பர் என்பது உயர் அதிகாரமுள்ள மற்றும்
உயர்ந்த அந்தஸ்துள்ள பதவி.

நான் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தபோது, மத்தியக் கமிட்டி
மெம்பராகி விட வேண்டும் என்ற லட்சியம் எனக்கு
இருந்தது. மார்க்சிஸ்ட் கடசியில் சேர்ந்த பலருக்கும்
அந்த எண்ணம் இருந்திருக்கக் கூடும்.

ஆக, மத்தியக் கமிட்டி மெம்பர் பதவி என்பது எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது என்பதை கம்யூனிஸ்ட் அல்லாத
வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு உயர்ந்த மத்தியக் கமிட்டி மெம்பர் என்ற
பதவியில் இருந்தவர் மார்க்சிஸ்ட் பாதல் சௌத்ரி.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், மார்க்சிஸ்ட்
ஆட்சியின்போது மாணிக் சர்க்கார் முதல்வராக
இருந்தபோது அமைச்சராக இருந்தவர்.

இவர் பொதுப்பணித்துறையில் ரூ 600 கோடிக்கும்
மேல் ஊழல் புரிந்தது அம்பலமாகி உள்ளது.
இவருடன் சேர்ந்து ஊழல் புரிந்த பொதுப்பணித்
துறையின் தலைமைப் பொறியாளர் கைது செய்யப்
பட்டுள்ளார்.

பாத்தாள் சௌத்ரியைக் கைது செய்ய போலீஸ்
முயன்றபோது அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றம்
சென்றார். நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன்
கொடுக்க இயலாது என்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து பாதல் சௌத்ரி தலைமறைவு
ஆனார். அதன் பிறகு நெஞ்சுவலி என்று பொய் சொல்லி
மருத்துவமனையில் போய்ப் படுத்துக் கொண்டார்.
அங்கு வைத்து இவர் கைது செய்யப் பட்டார்.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில்,
இவருக்கு இடைக்கால ஜாமீன் சில நாட்களுக்கு
மட்டுமே கிடைத்தது.

கைதாகாமல் தப்பிக்க சகல தில்லுமுல்லுகளையும்
செய்து அசிங்கப் பட்டார் இந்த மத்தியக் கமிட்டி
மெம்பர்.

கல்வித்தந்தை பாரிவேந்தரிடம் இருந்து மு க ஸ்டாலின்
மூலமாக ரூ 25 கோடிக்கு காட்ச்சியை அடகு வைத்த
பெருமை தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு.
ஊழல் புரிந்து ரூ 600 கோடிக்கு மேல் கொள்ளையடித்த
பெருமை பாத்தாள் சௌத்ரிக்கு உண்டு.

மார்க்சிஸ்ட் கட்சியும் (CPM) இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியும் (CPI) போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்
என்ற உண்மை இந்த நிகழ்வின் மூலம் மீண்டும்
நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.
**********************************************    
மருதுபாண்டியன் திருப்பூர் குணா


திராவிடன் என்பதில் பெருமை கொள்வோம்!
திராவிடம் = நில அபகரிப்பு.
இது திராவிட மண்ணடா!
இங்கு நிலத்தை அபகரிக்கும் உரிமை
திராவிடக் கயவர்களுக்கு உண்டு என்கிறாரோ
புழுவினும் இழிந்த அழகிரி!


போலிக் கம்யூனிஸ்டுகளை அம்பலப் படுத்தி
முறியடிக்காமல் மெய்யான கம்யூனிசத்தை
மக்களிடம் ஒருபோதும் கொண்டு சேர்க்க இயலாது
என்பது ஏற்கனவே ML இயக்கம் தொடங்கியபோதே
எடுத்த முடிவு. அந்த முடிவை அமல் படுத்தும் விதத்தில்
போலிக் கம்யூனிஸ்டுகளின் ஊழல் அம்பலப் படுத்தப்
படுகிறது. இவ்வாறு அம்பலப்படுத்துவது ஒரு
முக்கியமான முன்நிபந்தனையாக உள்ளது.

இது உணர்ச்சிவசப்பட்டோ அல்லது கோபப்பட்டோ
எழுதுகிற விஷயம் அல்ல. போலிகள் இருக்கும்வரை
இந்த நாட்டில் மெய்யான தீவிரமான காத்திரமான
மார்க்சியம் மக்களிடம் சென்று சேராது.








.  


ரூபாய் இரட்டிப்பு மோசடியில் சிக்கிய
கலைஞரின் பேரன் ஜோதிமணி!
---------------------------------------------------------
ஜோதிமணி என்பவர் கலைஞரின் மகள் செல்வியின்
மருமகன். இவர் அண்மையில் ஒருவரிடம்
ரூபாய் நோட்டு இரட்டிப்பு போன்ற ஒரு வகை
மோசடி செய்து ரூ 80 லட்சம் பணத்தை அபகரித்துக்
கொண்டார் என்று செய்திகள் வருகின்றன.

போலீசார் விசாரித்ததில் கலைஞரின் பேரன்
ஜோதிமணி இந்தக் குற்றத்தைச் செய்தது
உறுதியாகி உள்ளது.

என்றாலும் ஜோதிமணியைக் கைது செய்து
சிறையில் அடைக்க எடப்பாடியின் போலிஸ்
தயாராக இல்லை. ஊடகங்களும் கனத்த
மௌனம்!

இந்நிலையில் முரசொலி ஏட்டில் கலைஞரின் மகள்
செல்வியும் அவரின் கணவர் செல்வமும் இணைந்து
ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளனர்.

தங்களின் மருமகன் ஜோதிமணியின் எந்த செய்கைக்கும்
தாங்கள் பொறுப்பல்ல என்று அவர்கள் அறிவித்து
உள்ளனர்.

முரசொலியில் வெளியான இந்த அறிவிப்பு மூலம்
ஜோதிமணியின் கிரிமினல் குற்றம் உறுதிப் படுகிறது.
என்றாலும் பொதுவெளியில் இந்தச் செய்தியை
அப்படியே அமுக்கி விட ஊடகவியலாளர்கள் உறுதி
பூண்டுள்ளனர்.

Investigative journalism என்பதெல்லாம் பொய் என்று
ஊடகவியலாளர்கள் நிரூபிக்கின்றனர்.
-----------------------------------------------------------------------------

119 வயதில் நேதாஜி அவர்கள் உயிருடன் இருப்பதாக
வைகோ பேசினார் என்று வந்த செய்தியின்
அடிப்படையில் வைகோ அவர்களைக் குறிப்பிட
வேண்டி உள்ளது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்
என்றும் வைகோ பேசி வருகிறார்.

வைகோவுக்கு உண்மை என்ன என்று நன்கு தெரியும்.
இருந்தும் உண்மையையே ஏன் மறைக்க வேண்டும்?

நேத்தாஜியும் தேவரும்!
----------------------------------
போர்முனைக்குச் சென்ற பிறகு நேதாஜியை
தேவர் அவர்கள் சந்தித்து இருப்பதற்கான வாய்ப்பு
இல்லை. அதற்கு முன்பு இருவரும் சந்தித்ததில்
ஆச்சரியம் இல்லை.

விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என்ற
செய்தி பொய் என்று தேவர் அவர்கள் அறிவார்.
அதைஅவர் நன்கு உறுதிப் படுத்திக் கொண்ட
பின்னரே, நேத்தாஜி உயிருடன் இருப்பதாக அவர்
அறிவித்தார்.

போர் முடிவடைந்து, ஜப்பான் சரண் அடைந்தபோது
நேதாஜி சரண் அடையவில்லை. தமக்குப் பாதுகாப்பானது
என்று அவர் கருதிய மஞ்சூரியா வழியாக ரஷ்யா சென்று
ஸ்டாவினைச் சந்திக்க முடிவு செய்தார். ரஷ்யா சென்றார்;
சிறைப்பட்டார்; மடிந்தார்.

போர் முடிவடைந்த பின்னர் அவர் இந்தியாவுக்கு
வரவில்லை. ஏனெனில் இந்தியா அதாவது பிரிட்டிஷ்
இந்தியா அவரை வேட்டையாடக் காத்திருந்தது.
எனவே போர் முடிந்த பின்பு, தேவர் அவர்கள்
நேத்தாஜியைச் சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை.

அப்படிச் சந்தித்து இருந்தால் அது எப்படி சாத்தியம்
என்று தேவர் அவர்கள் கூறியிருந்தால் அல்லாமல்
நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் தேவர் அவர்கள்
அப்படி எந்த ரகசியத்தையும் வெளியிடவில்லை.

எனவே நேத்தாஜி உயிருடன்தான் இருக்கிறார் என்ற
செய்தியை, அரசின் அறிவிப்புக்கு எதிரான ஒரு செய்தியை
மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக,
தேவர் அவர்கள் உயர்வு நவிற்சியாகச் சொல்லி
இருக்கலாம் என்பதே நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
கருத்து. இதுதான் உண்மை!   .


பாஜக காங் புரிந்துணர்வு
ஒப்பந்தம்! ஹெட் கிளார்க் லெவல் 
லஞ்சத்தை ப சி வாங்கியதாக
நீர்த்துப்போன குற்றப்பத்திரிகை!
விளைவு: ப.சி.க்கு ஜாமீன் கிடைத்தது! 
வெறும் ரூ 10 லட்சம்    என்று

சோவியத்தைப் பொறுத்த மட்டில்
நேதாஜி பாசிச முகாமைச் சேர்ந்த ஒரு தளபதி.
அவர் ஒரு கொடிய பாஸிஸ்ட். இதுதான் நேத்தாஜி
பற்றிய சோவியத்தின் மதிப்பீடு! வேறு என்ன மதிப்பீடு
சோவியத்திற்கு இருந்திருக்க முடியும்?

வாங்கிய லஞ்சம் வெறும் ரூ 9.75 லட்சம்தானா?
இது ஹெட் கிளார்க் லெவலிலேயே வாங்கக்கூடிய
லஞ்சம் ஆயிற்றே! இதற்கா சிதம்பரத்தைக்
கைது செய்வது என்று கருதிய உச்சநீதிமன்றம்
உடனே ஜாமீன் வழங்கி விட்டது.
எல்லாம் MoU செய்த மாயம்!

அந்தக் காலத்தில் விஜய லட்சுமி பண்டிட் அதை
வெளிப்படையாகச் சொல்லி, அது அக்கால
ஏடுகளில் வெளிவந்து, ஜவகர்லால் நேரு
அவரைக் கண்டித்து வாயை மூடிக் கொண்டு
இருக்குமாறு கூறி விட்டார். அதன் பிறகு
விஜயலட்சுமி அதைப்பற்றிப் பேசவே இல்லை.

அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
உண்மையே.

பணத்தைப் பறிகொடுத்த தொழிலதிபர்,
செல்வியின் கணவரிடம் சென்று பணத்தைத்
திருப்பித் தருமாறு கேட்டதாகவும் அதற்கு
மருமகனிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்
என்று செல்வியின் கணவர் கூறியதாகவும்
செய்திகள் வந்துள்ளன. அதனால்தான் இந்த அறிவிப்பு.


கருணாநிதி குடும்பத்தின் யோக்கியதை பாரீர்!
--------------------------------------------------------------------------
லஞ்சமும் ஊழலும் நிதி மோசடியும்
அடுத்தவன் பணத்தை அபகரிப்பதுமே
இந்தக் குடும்பத்தின் தொழில் என்று ஆகி விட்டதா?

இன்னும் இந்த மோசடியைச் செய்த கருணாநிதியின்
பேரன் ஜோதிமணியை கைது செய்யவில்லை!
அவன் மீது கைவைக்க தமிழ்நாடு போலீசுக்குத்
துணிவு இல்லை!

இந்த மோசடியைப் பற்றி எழுத
ஊடகத் தறுதலைகளுக்கும் பயம்!

புழுவினும் இழிந்த ஈனப்பயல்கள்!
******************************************

போலி மருந்து தயாரிப்பு வழக்கு!
கலைஞரின் பேரன் ஜோதிமணிக்கு உள்ள தொடர்பு!
குமுதம் ஏடு செய்தி!
----------------------------------------------------------------------------------
சிலஆண்டுகளுக்கு முன்பு போலி மருந்து ஊழல்
தமிழகத்தை உலுக்கியது.

உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல்வேறு
போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு
மருந்துக் கடைகளுக்கும் மருத்துவமனைக்கும்
அனுப்பப் பட்டன.

இது கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு மருந்துக்
கடைகளிலும் மருந்து குடவுன்களிலும்
ரெயிடுகள் நடந்தன. ஒரு சிலர் கைது செய்யப்
பட்டனர்.

ஆனால் அரசியல் செல்வாக்குள்ள நபர்களால்
இந்த வழக்கு அப்படியே அமுக்கப் பட்டது.

இந்த போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில்
கலைஞரின் பேரன் ஜோதிமணியின் பெயர்
அடிபட்டது. ஜோதிமணி ஒரு டாக்டர் என்பது
குறிப்பிடத் தக்கது.

தற்போது ரூ 80 லட்சம் நோட்டு இரட்டிப்பு மோசடியில்
சிக்கியுள்ள கலைஞரின் பேரன் ஜோதிமணியின்
மீது CB CID போலீசார் போலி மருத்துத் தயாரிப்பு
குறித்தும் விசாரிக்க உள்ளனர்.

இந்த வழக்கை CBI விசாரிப்பது நல்லது.

குமுதம் ஏட்டின் செய்தியைப் படிக்குமாறு வேண்டுகிறோம்.
******************************************************  

தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு கன்னடம்
மலையாளம் ஒடியா ஆகிய ஆறு மொழிகளும்
செம்மொழிகளாக இந்தியாவில் அங்கீகரிக்கப்
பட்டவை!
  
============================================
ஸ்டாலின் மிசாவில் கைதானாரா?
ராஜஸ்தான் அரசு என்ன சொல்கிறது?
------------------------------------------------------------
மு க ஸ்டாலின் மிசாவில் கைதானாரா என்று
தமிழ்நாட்டில் விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் மிசா பற்றி  ராஜஸ்தான் என்ன சொல்கிறது?  

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார்.
இவருடைய அமைச்சரவை தற்போது மிசா பற்றி
ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அது என்ன?

ராஜஸ்தானில், நெருக்கடி நிலைக்காலத்தில், மிசா
சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம்
அனுபவித்தவர்களுக்கு ராஜஸ்தான் அரசு பென்ஷன்
வழங்கும் நடைமுறை உள்ளது. இந்த பென்சன்
பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

மாதம் ரூ 20,000 பென்ஷனாகவும் ரூ 4000 மருத்துவச்
செலவுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பென்ஷனை
ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு தற்போது
நிறுத்தி விட முடிவு எடுத்துள்ளது.

முதல்வர் அசோக் கேளாட்டின் இந்த முடிவு
மிகவும் கயமைத் தனமான ஒரு முடிவாகும்.
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடி
மிசாவில்  சிறை சென்றவர்கள் இரண்டாம் சுதந்திரப்
போராட்ட வீரர்களே.  அவர்களுக்கு இதுவரை
வழங்கப்பட்டு வந்த பென்ஷனை நிறுத்துவது
அநியாயம்.

அவர்களில் பலர் ஏற்கனவே இறந்து விட்டார்கள்.
உயிருடன் இருக்கும் சிலருக்கு மட்டும் வழங்கும்
இந்த பென்ஷனை நிறுத்தும் முடிவு மிகுந்த
கயமைத் தனமானது. இதை வன்மையாகக்
கண்டிக்கிறோம்.
**************************************


  .



திங்கள், 21 அக்டோபர், 2019

ஆல்பிரட் நோபல் இன்று பிறந்தார்!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
ஆல்பிரட் நோபல் (Alfred Nobel 21 Oct 1883-10 Dec 1896) இன்றுதான்
(21 அக்டோபர்) பிறந்தார். இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த
ஒரு வேதியியல் பொறியாளர்.

இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தமது திரண்ட
சொத்துக்களை தானமாக வழங்கி நோபல் பரிசுகளை
ஆண்டுதோறும் வழங்கச் செய்தார்.

இவரின் கண்டுபிடிப்புகள் பல நூற்றுக்கணக்கில்.
பிரதானமாக பின் வரும் இரண்டு:
1) டைனமைட் (dynamite)
2) ஜெலிக்னைட் (Gelignite)
இவை இரண்டும் வெடிபொருட்கள்.

சுரங்கம் தோண்டுதல், கல் குவாரிகள் அமைத்தல்,
கட்டிடங்கள் கட்டுதல் ஆகிய தொழில்களில்
இவரின் டைனமைட், ஜெலிக்னைட் ஆகியவை
பயன்பட்டன. 

பிரசித்தி பெற்ற போபர்ஸ் பீரங்கித் தொழிற்சாலை
இவர் நிறுவியதே.

1901 முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இயற்பியலில் முதல் நோபல் பரிசு எக்ஸ்ரேயைக்
கண்டுபிடித்த ரியன்ட்ஜென்னுக்கு (Roentgen)
வழங்கப்பட்டது.         

தமது திரண்ட சொத்துக்களை மானுட நன்மைக்காக
அர்ப்பணித்த நோபல், வரலாற்றின் தலைசிறந்த
மானுடர்களில் ஒருவர்.
********************************************************

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு
வங்கியில் கடன் வாங்கி திரும்பிச் செலுத்தவில்லை!
தமிழ்நாட்டின் விஜய் மல்லையாவாக கே என் நேரு!
அவரின் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்!
---------------------------------------------------------------------------
திருச்சியின் முடிசூடா மன்னராக இன்றளவும்
விளங்குபவர் கே என் நேரு. இவர் திமுகவின் முன்னாள்
அமைச்சர்.

இவர் திருச்சி கன்டோன்மென்டில் உள்ள இந்தியன் வங்கியில்
ரூ 100 கோடி பல ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கினார்.
வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தவில்லை.

கடனை உடனே திரும்பிச் செலுத்துமாறு இந்தியன் வங்கி
எவ்வளவோ நோட்டீஸ்களை அனுப்பியது. கே என் நேரு
கண்டு கொள்ளவில்லை.

எனவே கடன் பெறுவதற்காக கே என் நேரு
அடமானம் வைத்த சொத்துக்களை இந்தியன் வங்கி
ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.

பட்ஜெட் விவாதம் செய்வோர் கவனத்திற்கு!

அறிவியல் ஒளி 2019 ஆண்டு மலரில் வெளியாகி
உள்ளது. அது ஒரு நீண்ட கட்டுரை.  ஆ

பின்குறிப்பு:
------------------
தேதி சரிதான். அந்தத் தேதியில் ஏலம் என்றுதான்
அறிவிப்பு இந்தியன் வங்கியில் ஓட்டப் பட்டு
இருந்தது. பத்திரிகைகளிலும் செய்தி வந்தது.

ஆனால் அதன் பிறகு, அந்த ஏலம் நடந்த செய்தியை
இந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை. கே என் நேரு
எல்லா ஊடகத்தையும் விலைக்கு வாங்கி விட்டார்.

தற்போது புலனாய்வு செய்துதான் உண்மையைக்
கண்டறிய வேண்டும்.

எழுதி விடுவோம்.

கே என் நேருவின் சொத்துக்கள்
ஒரு லட்சம் கோடி ரூபாய் என்று
கணக்கிடப் பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி
அடுத்தவர் சொத்தை அபகரித்ததன் மூலம்
வந்ததாகும்.






இந்தக் கட்டுரை ஆட்டிச இடதுசாரித் தற்குறிகளுக்கு
இந்தியப்  பொருளாதாரத்தின் அடிப்படை என்ன என்று
எடுத்துச் சொல்லும் கட்டுரை. ஆட்டிச இடதுசாரித்
தற்குறிகளிடம் இதற்குப் பதில் இருக்காது.





maruthupaandiyan  மருதுபாண்டியன்


குரோனி முதலாளித்துவமே காரணம்.
அவர்களுக்கு இடமளித்து அதன் மூலம் ஊழல் புரிந்து
வங்கியைத் திவால் ஆக்கிய வங்கி CEO காரணம்.


அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை.
காங்கிரஸ் ஆட்சியானது பல துறைகளை நவீனம்
ஆக்கியது. ஆனால் நவீனச் செயல்பாடுகளின் மீது
checks and balances  ஏற்படுத்த வல்ல சட்டங்களை
இயற்றத் தவறி விட்டது. எனவே வெளிநாடு தப்பி
ஓடும் குற்றவாளிகளைப் பிடிக்க இயலாது.

சட்ட மன்ற உறுப்பினராக இருந்து கொண்டு,
அமைச்சராக இருந்து கொண்டு, பொதுத்துறை
வங்கியை ஏமாற்றி மோசடி செய்யும் கே என் நேருவைக்
கைது செய்ய சட்டம் இல்லை.


கே என் நேரு வாங்கிய கடன் ரூ 100 கோடி மட்டுமே.
ரூபாய் நூறு கோடி மட்டும்.

உரிய சட்டங்களை இயற்ற வேண்டும். 1995க்குப் பின்னரான இந்தியாவுக்குப் பொருத்தமான
துறைவாரியான சட்டங்களை இயற்ற வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தையும்கூட, புதிய சூழலுக்கு
ஏற்ப முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும்.
அல்லது புதிய அரசமைப்புச் சட்டத்தை இயற்ற
வேண்டும். இதெல்லாம் இந்தியாவில் நடக்குமா?
 
 





திருச்சியைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில்
உள்ள 80 ஏக்கர் நிலத்தையும் அந்த நிலத்தில்
உள்ள கட்டிடங்களையும் அடமானம் வைத்துத்தான்
கே என் நேரு கடன் பெற்றுள்ளார்.

இந்த சொத்துக்களை வரும் நவம்பர் 11ஆம் தேதி
ஏலம் விடுகிறது இந்தியன் வங்கி. இது பொது ஏலம்.
யார் வேண்டுமானாலும் ஏலத்தில் பங்கேற்கலாம்.
இணைய தளத்தின் மூலமாக ஆன் லைனில்
ஏலம் நடைபெறும்.

கே என் நேருவை மீறி அவரின் சொத்தை ஏலம்
எடுக்க எத்தனை பேர் முன்வருகின்றனர் என்று
பார்க்கலாம். அடமானம் வைத்த சொத்துக்கள்
ரூ 100 கோடி மதிப்புள்ளவை அல்ல என்று
ரியல் எஸ்டேட் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஆக, தமிழ்நாட்டின் விஜய் மல்லையாவாக
ஆகி விட்டார் கே என் நேரு!
கே என் நேரு புகழ் ஓங்குக!
விஜய் மல்லையா பாதையைப் பின்பற்றுவோம்!
******************************************************** 
விவசாயம் பொய்த்துப்போய் கடனைத் திரும்பிச்
செலுத்த முடியாத நிலையில் மானத்துக்கு அஞ்சி
விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.
ஆனால் கே என் நேரு அசராமல் இருக்கிறார்.
மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய
அமைச்சர் இவ்வாறு மோசடியில் ஈடுபடுகிறார்.

அவர் அமைச்சராக இருந்தது கடைசியாக 2011ல்.
அதன் பிறகு இன்றுவரை அமைச்சராக இல்லை.
கிட்டத்தட்ட ஒன்பது வருஷம் அமைச்சராக இல்லை.
எப்படி சம்பாதிக்க முடியும்?

லஞ்ச லாவண்யம், ஊழலுக்கு வாய்ப்பு இல்லாத
ஒருவரிடம் கடனைத் திரும்பிச் செலுத்து என்று
சொன்னால் அவர் என்ன செய்வார், பாவம்!


இதுதான் உண்மை! இதுதான் கள நிலவரம்.
நான் ஒவ்வொரு நாளும் ஏராளமான மாணவர்களைச் சந்தித்து
வருகிறேன். உரையாடி வருகிறேன். நான் மாணவனாக
இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை இது தொடர்கிறது.

கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்
மாணவர்களின் தமிழறிவு எந்த மட்டத்தில் இருக்கிறது
என்று தெரிந்து வைத்துள்ளேன்.

தினமணியில் வரும் ஒரு நடுப்பக்கக் கட்டுரையை
அப்படியே வாசிக்கச் சொன்னால், தங்கு தடையின்றி
வாசிக்கத் தெரிந்தவர்கள் மிகவும் அற்பமாகவே
உள்ளனர். என்னுடன் ஊடாடும் மாண்வர்களிடம்
அடிக்கடி இவ்வாறு வாசிக்கச் சொல்லி நான்
கேட்பதுண்டு.

களநிலவரத்திற்கு ஏற்ப, எழுதினால்தான் புரியும்.
இல்லையேல் எழுதப்பட்ட விஷயம் நம்மிடமே
தங்கி விடும். நம்மைத்தாண்டி மற்றவர்களிடம்
சென்று சேராது.

..............அப்புறம் கழன்று
கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருளெனப் போயிற்றன்றே.
.................கம்பர்.........
(சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்
என்று தொடங்கும் விருத்தம்). ............  


திமுகவில் பலர் அப்படித்தான் உள்ளனர்.
எந்த நேரமும் பாஜகவில் சேரக்கூடிய நிலையில்தான்
திமுகவில் பலர் உள்ளனர். ஏனெனில் எல்லோரும்
ஊழல் பேர்வழிகள்; நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள்.
சில நாட்களுக்கு முன்பு கலைஞரின் பேரன்
(செல்வியின் மருமகன்) ஜோதிமணி என்பவர்
ரூ ஒரு கோடி பண மோசடியில் ஈடுபட்டுக்
கைதாகி உள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
இவர் அநேகமாக பாஜகவில் சேரக்கூடும்.

ஏற்கனவே கலைஞரின் மகன் மு க அழகிரி பாஜகவில்
சேருவதற்காக ஹெச் ராஜாவுடன் பேசி வருகிறார்
என்ற செய்தியும் அனைவரும் அறிந்ததே.


மோசடிப் பேர்வழிகளின் பதவியைப் பறிக்கும் சட்டம்!
------------------------------------------------------------------------------------
சட்டமன்ற நாடாளுமன்ற இந்நாள் முன்னாள்
உறுப்பினர்கள், இந்நாள் முன்னாள் அமைச்சர்கள்
பொதுத்துறை வங்கியில் கடன் வாங்கித் திரும்பிச்
செலுத்தாமல் இருப்பது மோசடியாகக் கருதப்பட்டு
அவர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்பட
வேண்டும். ஆயுள் முழுவதும் தேர்தலில் நிற்பதற்குத்
தடை வித்திக்க வேண்டும். இப்படி ஒரு சட்டம்
இன்று நாட்டுக்குத் தேவை.














வெள்ளி, 18 அக்டோபர், 2019

வியட்நாமில் எடுபடாத அணுஉலை எதிர்ப்பு!

நியூட்டன் அறிவியல் மன்றம்
மருதுபாண்டியன்

வியட்நாமில் அணுஉலை எதிர்ப்பு ஏன் எடுபடவில்லை
என்று இங்குள்ள அணுஉலை எதிர்ப்பாளர்கள்
சிந்திக்க வேண்டும்!

minute (மினிட்) = நிமிடம்.
minute (மைநியூட்) = நுட்பமானது, மிக மிகச் சிறியது.
இரண்டுக்கும் ஒரே ஸ்பெல்லிங்தான்.

minute (நிமிடம்) என்பது பெயர்ச்சொல் (noun)
minute (நட்பமானது) என்பது adjective.
adjective என்றால் degrees of comparison உண்டு.
எனவே superlative form= minutest.

minute (மைநியூட்) என்பதற்கு ஓர் உதாரணம்.
ஒரே ஒரு அரிசியில் திருவள்ளுவர் உருவத்தைச்
செதுக்குகிறான் ஒருவன். இந்த உருவம் மிகவும்
minute (மைநியூட்) ஆனது. கண்ணால் பார்க்க இயலாது.
உருப்பெருக்குக் கண்ணாடி மூலம்தான் பார்க்க
இயலும். இது நுட்பமானது.
    
  . 

வியாழன், 17 அக்டோபர், 2019

ராஜீவைக் கொன்றது விடுதலைப் புலிகளே!
ஆன்டன் பாலசிங்கம் ஒப்புதல் வாக்குமூலம்!
----------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு
என்று உலகுக்கு உணர்த்துவத்துகின்ற ஒரே ஒரு
வேலையை மட்டும் சிங்கள அரசு சரியாகச் செய்தது.
புலிகள் நிகழ்த்திய பல்வேறு படுகொலைகள் பற்றி
உலக நாடுகளில் முக்கியமான நாடுகளுக்கு
சிங்கள அரசால் எடுத்துச் சொல்லப் பட்டது.

லட்சுமணன் கதிர்காமர் என்ற இலங்கை அமைச்சர்
இதில் பெருமுயற்சி எடுத்தார். அவரும் படுகொலை
செய்யப் பட்டார்.

இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் புலிகள்
இயக்கம் தடை செய்யப்பட்டது. ஐரோப்பா முழுவதும்
புலிகளைத் தடை செய்தது.

இதனால் புலிகளுக்குக் கிடைத்து வந்த வெளிநாட்டு
உதவிகள், ராஜதந்திர ஆதரவு ஆகிய அனைத்தும்
தடைப்பட்டன. புலிகள் இயக்கம் ஒரு முட்டுச்
சந்தில் போய் நின்றது.

இந்தத் தேக்க நிலையை உடைத்தால் மட்டுமே
புலிகள் இயக்கம் ஜீவித்திருக்க முடியும் என்ற
நிலை ஏற்பட்டது. எந்த வெளிநாட்டில் இருந்தும்
ஆதரவு கிடைக்காத நிலையில், ஏற்கனவே உதவி
செய்த நாடுகளும் கைவிரித்து விட்ட நிலையில்
புலிகளுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருந்தது.
அதுதான் இந்தியாவின் உதவியைப் பெறுவது.

ஆனால் இந்தியாவுடன் இணக்கம் கொள்வதற்கு
பெரும் முட்டுக்கட்டையாக ராஜிவ் படுகொலை
இருந்தது. இந்நிலையில் புலிகள் அமைப்பின்
தத்துவஞானியாகத் திகழ்ந்த ஆன்டன் பாலசிங்கம்
(Anton Balasingam, theoretician, LTTE) ஒரு முடிவை எடுத்தார்.

ராஜீவைப் படுகொலை செய்ததை ஒத்துக்கொண்டு
மன்னிப்புக் கேட்பதன் மூலமே இந்தியாவுடன்
உறவு கொண்டு உதவி பெற முடியும் என்ற நிலையை
உணர்ந்த ஆன்டன் பாலசிங்கம் ராஜிவ்
படுகொலைக்காக புலிகளின் சார்பில் பகிரங்கமாக
மன்னிப்புக் கோரினார்.

இது நடந்தது 2006ல். தமது மறைவுக்குச் சில மாதம்
முன்னதாக, புலிகள் அமைப்பைக் காப்பாற்றும்
நோக்கில் பாலசிங்கம் மன்னிப்புக் கோரினார்.

பாலசிங்கம் கூறியது:-
---------------------------------
1) ராஜிவ் படுகொலை என்பது ஒரு பெரும் வரலாற்றுச்
சோகம் (A monumental and historical tragedy).
2) அதற்காக நாங்கள் (புலிகள்) பெரிதும் வருந்துகிறோம்.
(for which we deeply regret)
3) இந்தியா மிகவும் பெருந்தன்மையுடன் இத்தவற்றை
மன்னித்து பழைய கசப்பை மறந்து இனப்
பிரச்சசினையை புதிய கோணத்தில் அணுக வேண்டும்.
(Calls upon India to be magnanimous and to put the past behind and to
approach the ethnic question in a new perspective).  
(பார்க்க: NDTV லண்டன் டிவிக்கு ஆன்டன் பாலசிங்கம்
அளித்த பேட்டி).

1991ல் நடந்த ராஜிவ் படுகொலையை நாங்கள்
செய்யவில்லை  என்று தொடக்கத்தில் புலிகள்
மறுத்திருந்த போதிலும், 2006 வாக்கில் அதை
புலிகள் அமைப்பின் தத்துவஞானியான ஆன்டன்
பாலசிங்கம் ஒப்புக் கொண்டார்.

இதைச் சில ஆண்டுகளுக்கு முன்பே நான் கூறினேன்.
எவரும் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஈழத்தரகர்கள் வைகோவும் நெடுமாறனும் கள்ள
மௌனம் சாதித்தனர்.

ஆக புலிகள்தான் ராஜீவைக் கொன்றனர் என்ற
உண்மை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக மறைக்கப்
பட்டிருந்தது. ஈழ ஆதரவு முகாமைப் பொறுத்து
ஒரு சிலர் மட்டுமே அறிந்த உண்மையாக இருந்தது.
அவ்வாறு உண்மை அறிந்த பலரும் தாங்கள்
அறிந்த உண்மையைப் பொதுவெளியில் சொல்லவில்லை.

தற்போது சீமான் உண்மையைக் கூறியதன் மூலம்
ஈழ ஆதரவு முகாமில் இருந்து வெளிவரும் முதல்
உண்மையாக அது இருக்கிறது.
**************************************************** 
உச்சநீதி மன்றத் தீர்ப்பும் கார்த்திகேயனின்
SIT குழுவும் புலிகள்தான் கொலை செய்தனர் என்று
கூறியதை என்னால் ஏற்க இயலவில்லை.
இதைத்தவிர்த்த பிற reliable sources மூலம் பின்னர்
ஆதாரம் கிடைத்தது. புலிகள்தான் கொன்றார்கள்
என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள்
கிடைத்தன.

ராஜிவ் கொலை மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஈழப்போர்
குறித்தும் உறுதியான மெய்யான ஆதாரங்கள்
கிடைத்து வருகின்றன. ஒவ்வொன்றும் பிற
ஆதாரங்களால் corroborate ஆகின்றன.

எனவே ஆன்டன் பாலசிங்கம் சொன்னது முழுமுற்றான
உண்மை. அதை எவரும் ஏற்காமல் இருக்க முடியாது.
ஈழம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த
உண்மைகள்  இன்றளவும் மறைக்கப்பட்டே
வருகின்றன. அவற்றை வெளியிட இருக்கிறேன்.

கொலையில் பெரும்பங்குள்ள சாமியார் இறந்து
விட்டார். உயிருடன் இருக்கும் சாமியின் பங்கு குறித்து
ஆதாரங்களைத் தேடி வருகிறேன். உருப்படியாக
எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வர்மா கமிஷன் அறிக்கை பொதுவெளியில்
இருந்து அகற்றப்பட்டு விட்டது. சிதம்பரம்
தன் பங்கிற்கு வேண்டுமென்றே சில
கோப்புகளைத் தொலைத்து விட்டார்.


புலிகள் அமைப்பு தற்போது இல்லை. பிரபாகரனும்
உயிருடன் இல்லை. எனவே
யார் வேண்டுமானாலும் புலிகளின் சார்பாகப்
பேச இயலும்.

தமிழ்நாட்டில் மெய்யான ஈழ ஆதரவு என்பது
எளிய தமிழ் மக்களிடம் மட்டுமே உள்ளது.
நெடுமாறன் வைகோ சீமான் என்று அனைவரும்
ஈழப் பிழைப்புவாதிகளே.


ஈழப் பிழைப்புவாதிகள் அனைவரையும் சீமான் பொய்
உட்பட மிக்க கடுமையாக அம்பலப்படுத்தி
வருகிறேன். இதைச் செய்ய யாரும் தயாராக இல்லை.

அதே நேரத்தில் ஏனைய பிழைப்புவாதிகள்
புலிகள் ராஜீவைக் கொல்லவில்லை என்றும்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும்
போய் சொல்லிப் பிழைப்பு நடத்துகின்றனர்.

இந்த நேரத்தில் சீமான் ஏனைய பிழைப்புவாதிகளிடம்
இருந்து மாறுபட்டு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு,
முதல் முறையாக உண்மையைச் சொல்லும்போது
அதை ஏன் நாம் எதிர்க்க வேண்டும்?

ஈழப்பிழைப்புவாதிகளின் முகாம் இன்று
பிளவுபட்டு நிற்கிறது என்பதை வரவேற்காமல்
இருக்க முடியுமா? இது சீமானை ஆதரிப்பதாக
ஆகி விடுமா?

இப்பொருளில் நான் எழுதிய எல்லாப் பதிவுகளையம்
படிக்க வேண்டும்.சீமான் ஏன் இப்படிச் சொல்கிறார்
என்பதை அம்பலப்படுத்தி ஏற்கனவே நேற்று ஒரு
கட்டுரை எழுதி உள்ளேன். அதை முதலில் படிக்கவும்.
தடித்தஎழுத்துப் பதிவில் ஒரு வரி மட்டும்தான்
எழுத முடியும். எனவே கட்டுரையைப் படிக்கவும்.


பரப்பன அக்ரகார சிறையில்
12 கோடி செலவில் தீபாவளி கொண்டாட்டம்!
50 மெட்ரிக் டன் சுவீட்களை
ஆர்டர் செய்த சசிகலா!
  



 


  

 :

செவ்வாய், 15 அக்டோபர், 2019

28 ஆண்டு கால கோழைத்தனத்துக்கு முடிவு கட்டி
புலிகள்தான் ராஜீவைக் கொன்றனர் என்ற
உண்மையை உரக்கச் சொன்ன சீமான்

திங்கள், 14 அக்டோபர், 2019

பாயாசத்தையும் மீன் குழம்பையும் சேர்த்துக் கலக்குவதா?
எழுவர் விடுதலை ஏன் சாத்தியம் ஆகாது?
------------------------------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
எழுவர் விடுதலை என்பதில் அந்த ஏழு பேரும் விடுதலை
ஆகாமல் இருக்கும் நிலைமை என்பது ஒரு பொன்முட்டை
இடும் வாத்து போன்றது. பொன்முட்டை இடும் வாத்தை
யாராவது அறுத்துப் பார்ப்பார்களா?

அந்த ஏழு பேரும் விடுதலை ஆகாமல் இருக்கும் வரைதான்
ஈழப் பிழைப்புவாதிகளுக்கு ஆதாயம். விடுதலை
ஆகிவிட்டால் இவர்களுக்கு அது நஷ்டம்! இதுதான் உண்மை!
எப்படி என்பதைப் பார்ப்போம்.

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரும் சிறையில்
ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களின்  விடுதலையில் முக்கியமான அம்சம்
எது என்றால், இந்த ஏழு பேரும் இந்தியர்கள் அல்லர்
என்பதுதான்.

நளினியும் பேரறிவாளனும் இந்தியர்கள் என்பது
எல்லோருக்கும் தெரியும். அதே போல நளினியின்
கணவர் முருகன் ஸ்ரீலங்கா குடிமகன் என்பதும்
அனைவரும் அறிந்ததே.

இந்த ஏழு பேரில் இந்தியர்களான நளினி, பேரறிவாளன்
உள்ளிட்டோருக்கு, அதாவது இந்தியர்களுக்கு மட்டும்
விடுதலை என்று கோரி இருந்தால் இதற்குள்
இந்தியர்கள் அனைவரும் விடுதலை ஆகி இருக்க
முடியும்.

ஆனால் இலங்கைப் பிரஜைகளை இந்தியர்களோடு
சேர்த்து அனைவருக்கும் விடுதலை என்று கேட்டதால்
யாருக்குமே இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.

தண்டனை அனுபவிக்கும் இலங்கைப் பிரஜைகளின்
சார்பில் இலங்கை அரசு அவர்களின் விடுதலையைக்
கோரி ஒரு கருணை மனுவை அனுப்பி இருக்க வேண்டும்.
ஆனால் இந்த நிமிடம் வரை, இலங்கை அரசின் சார்பாக
தங்கள் நாட்டுப் பிரஜைகளை விடுவிக்க வேண்டும் என்று
ஒரு கருணை மனு கூட அனுப்பப் படவில்லை.

கருணை மனுவே இல்லாதபோது அவர்களை எப்படி
இந்திய அரசு விடுவிக்கும்? 

இந்த சட்டச் சிக்கலை கருத்தில் கொள்ளாமல் எழுவர்
விடுதலை என்று உளறிக் கொண்டிருந்தால் விடுதலை
கிடைக்குமா?

இலங்கையில் முன்புள்ள நிலைமை வேறு. இன்றுள்ள
நிலைமை வேறு. இன்று தமிழ் மாகாணத்தில் தமிழ்
முதலமைச்சர் இருக்கிறார். நாடாளுமன்றத்தில்
தமிழ் எம்பிக்கள் இருக்கின்றனர். எதிர்க்கட்சித்
தலைவராக  தமிழரே இருக்கிறார்.

இவர்களில் யாராவது, குறைந்த பட்சம் ஒரே ஒரு
எம்பியாவது ஒரு கருணை மனுவைத் தயாரித்து
இலங்கை அரசின் மூலமாக இந்திய அரசுக்கு
அனுப்பி இருந்தால், அந்தக் கருணை மனு
பரிசீலிக்கப் பட்டு இருக்கும். விடுதலையும் கிட்டி
இருக்கும்.

ஆனால் இந்த நிமிடம் வரை இலங்கைப் பிரஜைகளை
விடுவிக்கச் சொல்லி, இலங்கை அரசின் சார்பில்
ஒரு கருணை மனு கூட இல்லை.வெளிநாட்டுக்
கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால்,
அந்த வெளிநாட்டின் அரசில் இருந்து அதிகாரபூர்வமான
எழுத்து மூலமான வேண்டுகோளோ கருணை மனுவோ
கண்டிப்பாக வேண்டும். அது இல்லாமல் பொதுவாக
எந்த நாடும் வெளிநாட்டுக் கைதிகளை விடுதலை
செய்வதில்லை. இப்படிச் சட்டம் இல்லாவிடினும்
இதுதான் நடைமுறையாக (practice in vogue) இந்தியாவில்
இருந்து வருகிறது. ஆனால் இந்தியப் பிரஜைகளுக்கு
இப்படி எதுவும் தேவை இல்லை.

ஏழு பேரின் விடுதலையைக் கோருகிறவர்கள்
இலங்கை அரசிடம் இருந்து ஒரு கருணை
மனுவைப் பெற்று இந்திய அரசுக்கு அனுப்புவதில்
எந்த அக்கறையும் காட்டவில்லை.

முருகன் உள்ளிட்ட இலங்கைப் பிரஜைகளை விடுவிக்க
வேண்டும் என்று இலங்கை அரசு கோருமானால்,
அதை அவ்வளவு எளிதாக இந்திய அரசால் புறந்தள்ள
முடியாது. மிகப்பெரிய diplomatic value  உடையதாக
இலங்கை அரசின் அந்த வேண்டுகோள் இருக்கும்.

எழுவர் விடுதலை என்று ஒரே மொத்தமாக
இந்தியர்களுக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கும்
சேர்த்து ஒருசேர விடுதலையைக் கோருவது பயன்
தரவில்லை என்று பார்த்தோம்.

முதலில் இந்தியர்களின் விடுதலை; அதை அடுத்து
இலங்கைப் பிரஜைகளின் விடுதலை என்று கோரி
இருந்தால் இந்நேரம் நளினியும் பேரறிவாளனும்
விடுதலை ஆகி இருப்பார்கள்.

அடுத்து இலங்கை அரசிடம் இருந்து ஒரு கருணை
மனுவைப் பெற்று அதை இந்திய அரசிடம் சமர்ப்பித்து
இருந்தால், முருகன் போன்ற இலங்கைப் பிரஜைகளும்
விடுதலை ஆகி இருப்பார்கள்.

ஆனால் எழுவர் விடுதலை என்று போலிக்குரல்
கொடுக்கும் ஈழத் தரகர்கள் இந்த செயலுத்தியைக்
கடைப்பிடிக்கவில்லை. இதை நான் பல ஆண்டுகளாகச்
சொல்லி வருகிறேன்.

ஈழத் தரகர்கள் பாயாசத்தையும் மீன் குழம்பையும்
சேர்த்துக் கலக்குகிறார்கள். விளைவு: இரண்டுமே
குப்பைத் தொட்டிக்குப் போகிறது.
*************************************************

மருதுபாண்டியன் சிலம்பபராசன் சே திருப்பூர் குணா

ராஜீவ் படுகொலை விஷயத்தில் உண்மை தெரிந்த பலரும்
தாங்கள் அறிந்த பல உண்மைகளை இதுவரை
பொதுவெளியில் சொல்லவில்லை, நான் உட்பட.
ஏனெனில் உண்மைகளைச் சொன்னால் ஏற்றுக்
கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத ஒரு சமூகத்தில்
எவரும் இதுதான் உண்மை என்று திடீரெனச்
சொல்லி விட முடியாது.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவராக உண்மைகளைப்
பேசத் தொடங்கி இருக்கிறார்கள். முதன் முதலில்
பல ஆண்டுகளுக்கு முன்பு தோல் திருமாவளவன்
அவர்கள் ஒரு உண்மையைஅச் சொன்னார். அது
ஜூனியர் விகடன் ஏட்டில் வெளிவந்தது.

தமிழினி என்னும் LTTE போராளி தனக்குத் தெரிந்த
உண்மைகளில் 5 சதம் மட்டுமே கூறி ஒரு நூல்
வெளியிட்டார். தற்போது சீமான் அவர்கள்
உண்மையைப் பேசத் தொடங்கி இருக்கிறார்.
இதைத் தமிழ்ச் சமூகம் வரவேற்க வேண்டும்.

இன்னும் எத்தனை காலம்தான் பொய்களையே உண்டு
பொய்களையே சுவாசித்துக் கொண்டு இறுக்கப்
போகிறதோ தமிழ்ச் சமூகம்.

2019 மாவீரர் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்போ
சில உண்மைகளை வெளியிட இருக்கிறேன்.
----------------------------------------------------------------------

பேரில் சிலர் மட்டுமே இந்தியர்கள் என்பதும்
மற்றவர்கள் வெளிநாட்டினர் என்பதும்.

இந்தோனேஷியாவின் பாலித்தீவு வழக்கு பற்றிச்
சிலராவது அறிந்திருக்கக் கூடும். அது போதைப்
பொருள் கடத்தல் வழக்கு. அதில் ஈழத்தமிழர்
மயூரன் பிடிபட்டு மரண தண்டனை விதிக்கப்
பட்டார்.

மயூரன் ஈழத்தமிழர் என்றாலும் அவர் ஆஸ்திரேலியக்
குடிமகன் ஆவார். எனவே அவ்ருக்கு கருணை காட்டுமாறு
ஆஸ்திரேலிய அரசு கோரி இருந்தது. ஆஸ்திரேலியப்
பிரதமரே கருணை காட்டுமாறு கடிதம் அனுப்பி
இருந்தார்.

இதைப்போன்று, இலங்கை அரசிடம் இருந்து
முருகன் உள்ளிட்ட இலங்கைப் பிரஜைகளை
விடுவிக்கச் சொல்லி இலங்கை அரசு கடிதம்
எழுதி இருக்க வேண்டும். ஆனால் அப்படிக்
கடிதம் எதுவும் இந்த நிமிடம் வரை இல்லை.
இதனால் விடுதலை கிடைக்காமல் போகிறது.



   

 
  
        

உத்தியை மாற்றும் சீமான் புத்திசாலியே!
---------------------------------------------------------------
ஆட்சியைத் தக்க வைப்பது அதிமுகவின் நோக்கம்;
ஆட்சியைப் பிடிப்பது திமுகவின் நோக்கம். ஆனால்
சீமானின் நோக்கம் இந்த இரண்டும் அல்ல; அவரின்
நிகழ்ச்சி நிரலில் ஆட்சி என்பதெல்லாம் கிடையாது.

திமுக அதிமுகவின் உத்திகளும் திட்டங்களும்
தமிழ்நாட்டு மக்களை அடிப்படையாகக் கொண்டு
வகுக்கப் படும். சீமானின் உத்திகளும் திட்டங்களும்
ஈழத் தமிழர்களை அடிப்படையாகக் கொண்டு
வகுக்கப்படும்.

இதுவரை வந்து கொண்டிருந்த பணம் தொடர்ந்து வர
வேண்டும் என்பது மட்டுமே அவரின் ஒரே நோக்கம்.
அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்
காய் நகர்த்துகிறார்.

நெடுமாறன் வைகோ வகையறாக்கள் கடைப்பிடித்த
உத்தி என்பது புலிகள் ராஜீவைக் கொல்லவில்லை
என்பது. இந்த உத்தி தற்போது காலாவதி ஆகிவிட்டது.
காலத்தை வென்று நிற்கும் உத்தியா அது? இல்லையே.

எனவே உத்தியை மாற்றுகிறார் சீமான். "ஆமடா,
நாங்கதான் ராஜீவைக் கொண்ணு புதச்சோம்"
என்று உண்மையை வெளிப்படையாக ஒத்துக்
கொள்வதே இன்று ஈழ மக்களால், புலம் பெயர்ந்த
ஈழத்தவர்களால் விரும்பப் படுகிறது. இலங்கையின்
அரசியல் சூழல் இத்தகைய உத்தியைக்
கைக்கொள்வதே ஆதாயம் என்று உணர்த்துகிறது.

"ராஜீவைப் புலிகள் கொள்ளவில்லை".... இது பழைய உத்தி.
"ராஜீவைப் புலிகள்தான் கொன்றனர்"....இது புதிய உத்தி.
அவ்வளவுதான். பழைய உத்தி காலாவதி ஆகிவிட்டது.
எனவே புதிய உத்தி தேவைப் படுகிறது.  

பழைய உத்தி பயன் தரவில்லை; பண வரத்து
வெகுவாகக் குறைந்து விட்டது. புதிய உத்தி
பணவரத்தை உறுதிப்படுத்தும்.   

இதை நன்கு உணர்ந்து கொண்ட சீமான், ராஜீவை
நாங்கள்தான் கொன்றோம் என்று உரக்கச் சொல்வதன்
மூலம் ஈழத்தமிழர்களின் கவனத்தைத் தன்பால்
ஈர்க்கிறார். இது ஒரு மாபெரும் கவன ஈர்ப்பு ஆகும்.
இதற்கு உரிய பணப்பலனையும் அவர் பெறுவார்.
         

எழுவர் விடுதலையில், அந்த ஏழு பெரும் விடுதலை
ஆகாமல் இருக்கும் நிலைமை என்பது ஒரு
பொன்முட்டை இடும் வாத்து போன்றது. யாராவது
பொன்முட்டை இடும் வாத்தை அறுப்பார்களா?

எழுவர் விடுதலை சாத்தியம் அற்றது. அதற்குக் காரணம்
இந்தியர்களான நளினி பேரறிவாளன் விடுதலையுடன்
இந்தியர் அல்லாத வெளிநாட்டு ஆட்களான முருகன்
போன்றோரின் விடுதலையையும் சேர்த்துக் குழப்புவது.
இதைப் பல ஆண்டாக நான் சொல்லி வருகிறேன்.
  .