திங்கள், 31 டிசம்பர், 2018

1857 ல் மார்க்ஸ்சின் கட்டுரையில் கலையின் தனித்தன்மை குறித்த தெறிப்புகள் எப்படி இருந்தன என்பதற்குத்தான். ‘‘கலையைப் பொறுத்தவரை அதில் சில அற்புதப்படைப்புகள் சமுதாயத்தின் பொருளாதார அடித்தளத்தை தாண்டி மேற்கட்டுமானத்தில் எஞ்சி நிற்கின்றன. அவை அழகியல் இன்பத்தைத் தருகின்றன. சில அம்சங்களில் மேம்பட்ட இடத்தில் நிற்கின்றன’’ என்ற மார்க்சின் அவதானிப்பை விளக்கினார் அருணன். அதனால் தான் கிரேக்க அடிமைச்சமூகத்தின் விளைச்சலான கிரேக்க இலக்கி யங்களை, நாடகங்களை மார்க்ஸ் சிலாகித்தார்

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

இலக்கியப் பக்கங்கள்:
இலக்கிய மாணவர்களுக்கு மட்டுமானது!
மீள்பதிவு!
-----------------------------------------
கருக்கல் மறைந்து வானம் வெளுத்தது!
(ஆண்டாள் திருப்பாவை விளக்கவுரை)
-----------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-----------------------------------------------------------------
பாசுரம்-8
--------------------
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
---------------------------------------------------------------------------------
விளக்கவுரை:
ஆண்டாள் தன் தோழியருடன் ஆய்ப்பாடியில் உள்ள
பிற பெண்களைத் துயில் எழுப்பச் செல்கிறாள். 
இப்போது பொழுது நன்கு புலர்ந்து விட்டது. கருக்கலுக்கே 
உரிய இருட்டு மறைந்து கீழ்வானம் நன்கு வெளுத்து 
விட்டது. 
இதற்கு முந்திய பாசுரத்தில் இருள் பிரியவில்லை. 
ஆறாம் பாசுரத்தில்
"புள்ளும் சிலம்பின காண்" என்கிறாள். 
ஏழாம் பாசுரத்தில்
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின
பேச்சரவம்" பற்றிக் கூறுகிறாள்.
உயிரினங்களில் பொழுது புலர்வதை முதலில்
உணர்வன பறவைகளே. பின்னரே விலங்குகளும்
மனிதர்களும் உணர்கின்றனர். சேவல்தான் முதலில்
கூவிப் பொழுது விடிவதை இன்றும் அறிவிக்கிறது.
ஆறாம் பாடலை விட, ஏழாம் பாடலில் மேலும்
நேரம் கூடிவிட்டது என்பதை உணர்த்துகிறாள் ஆண்டாள்.
ஆறாம் பாடலில் புள்ளும் சிலம்பின காண் என்பதன் மூலம்
ஒரு சில பறவைகள் ஓசை எழுப்பின என்ற ஆண்டாள்,
ஏழாம் பாடலில் கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின பேச்சரவம் என்பதில், "எங்கும்" என்ற
சொல்லால் எல்லா இடங்களிலும் பறவைகள் ஓசை
எழுப்பத் தொடங்கி விட்டன என்று கூறுவதன் மூலம்
ஆய்ப்பாடியின் மொத்தப் பறவைக் கணமும் கூடு
துறந்து வெளியில் பறந்து விட்டன என்று உணர்த்துகிறாள்.
இந்த எட்டாம் பாசுரத்தில் பொழுது மேலும் அதிகரித்து
விட்டது. பறவைகளுக்கு அடுத்து எருமைகளும்
தொழுவம் நீங்கி மேயச் சென்று விட்டன. பசும்புல்
தரை முழுவதும் எருமைகள் பரவி நின்று மேய்கின்றன.
சிறுவீடு என்பதில் வீடு என்றால் தொழுவத்தில் இருந்து
விடுதலை என்று பொருள்படும். ஆயின், வீடு என்று
சொன்னால் போதுமே, சிறுவீடு என்று ஆண்டாள் சொன்னது
ஏன்? .
பொழுது புலர்ந்ததுமே கறவைகளிடம் பால் கறப்பதில்லை.
அதிகாலையில் சிறிது மேய்ந்த பின்னர் தொழுவம்
திரும்பிய பின்னரே பால் கறப்பர்.பால் கறப்பதற்கு .
முன்னர் கறவைகளுக்கு அதிகாலையில் கிடைத்த
இந்த விடுதலையை சிறுவீடு என்கிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடலில் ஆண்டாள் எழுப்பச் செல்லும் பெண்
ஒரு கோதுகலமுடைய பாவை. எந்நேரமும் மனம் நிறைந்த
மகிழ்ச்சியுடன் இருப்பவள். தான் இருக்கும் இடத்தை
மகிழ்ச்சியால் நிரப்பி விடுபவள் இவள் எனவே இவள்
இல்லாமல் ஆண்டாள் செல்ல விரும்பவில்லை.
ஏற்கனவே நமது தோழியரில் பலர் நீராடச் சென்று
விட்டார்கள். மீதியிருப்பவர்களும் நீராட .விரைகிறார்கள்.
அவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்தி விட்டு உன்னைக்
கூப்பிட வந்திருக்கிறேன், எழுந்து வா என்கிறாள் ஆண்டாள்.
குதிரை வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து
கொன்றவனும், கம்சனின் அரசவை மல்லர்களை
மற்போரில் வென்றவனும் ஆகிய, தன் வீரத்தால்
தலைவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய கண்ணனை
வணங்கச் செல்வோம், வா.
நம்மைக் கண்டு கண்ணனே வியந்து நிற்பான். நம்மில்
எவர் எவர்க்கு என்ன வேண்டும் என ஆராய்ந்து அருள்
புரிவான், எனவே விரைந்து வா பெண்ணே என்கிறாள்
ஆண்டாள்.

இப்பாசுரத்தில் வரும் மேய்வான், போவான், கூவுவான்
ஆகிய சொற்கள் எதிர்கால வினைமுற்றுகள் அல்ல.
அவை ஆண்டாள் காலத்துத் தமிழில் பயின்ற வினையெச்ச
வாய்பாடுகள். தமிழ் இலக்கணம் கற்றோர் "வான், பான்,
பாக்கு" என்னும் வினையெச்சங்கள் பற்றிக் கற்றதை
ஈண்டு நினைவு கூர்க. 
**********************************************************************

எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் 
என்பதில் வரும் சிறுவீடு என்பதற்கு இதுவரை 
எவரும் விளக்கம் கூறியதில்லை. முனைந்து 
பொருள் கண்டறிந்து கூறியவன் யானே என்பதை 
மிகுந்த தன்னடக்கத்துடன் பதிவு செய்கிறேன்.
-
நெல்லை மாவட்டத்தில் மாடு வளர்ப்போர் 
:"கொஞ்சம் அவுத்து வுடு" என்பார்கள்.  இவ்வாறு 
" அவுத்து வுடுவது" தான் சிறு வீடு. அதாவது கயிற்றை 
அவிழ்த்து தொழுவத்தில் இருந்து வெளியே 
செல்லுமாறு விடுவது என்று பொருள். மாடு 
கன்றுகளோடு வளர்ந்தவர்கள்தாம் சிறுவீடு 
என்பதன் பொருளை அறியவும் உரைக்கவும்
முடியும்.     

ஆனந்தன் அமிர்தன்  கருங்குளம் முருகன் 

IKKATTURA

படித்தேன்; மகிழ்ச்சி; நன்றி.
முத்தமிழ் அறிஞரை விட்டு விட்டீர்களே!

மைக்கேல்ராஜ் நே


கிமு கிபி ஒழிக்கப் பட்ட பின் புதிய வழக்கு!  டு
பொசமு= பொது சகாப்தத்திற்கு முன்.
பொச = பொது சகாப்தம்/
In English: BCE =Before Common Era.
CE =Common Era.      


கணக்கு நிபுணரிடம் ஒப்படைக்கப் படுகிறது!
-----------------------------------------------------------------------------
இப்போதுதான் பார்க்கிறேன். Define profit என்ற
கேள்வி எழுகிறது. எனவே ஒரு கணிதப்
பேராசிரியரிடம் இந்தக் கேள்வியை ஒப்படைத்து
பதிலைப்பெற முடிவு செய்துள்ளேன். I think you are
challenging the answer (25 per cent). You please make your point
clear and categorical. Say which answer is correct. Or give your answer.
Let the experts decide.நியூட்டன் அறிவியல் மன்றம்
பொருளியல் வணிகம் சார்ந்த விஷயங்களில்
அக்கறை உடையதல்ல.


வெள்ளி, 28 டிசம்பர், 2018

இலக்கியப் பக்கங்கள்:
இலக்கிய மாணவர், ஆசிரியர், ஆர்வலர் ஆகியோருக்கு
மட்டுமானது; ஏனையோர்க்கன்று.
-------------------------------------------------------------------------------------- 
ஆண்டாளும் நெய்யுடை அடிசிலும்
-----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------
நெய்யுடை அடிசில் பேறு பெற்றவர்க்கே வாய்க்கும்.
உடைப்பருஞ் செல்வர் ஆயினும், இனிப்பும்
கொழுப்பும் ( SUGAR AND CHOLESTROL )அண்டுமானால்,
நெய்யுடை அடிசில் வாய்க்காமலே போம்.
எம் பள்ளிப் பருவத்தில், வீட்டில் அனைவரும்
அமர்ந்து உண்ணும்போது, இலைச் சோற்றில்
எம் அன்னை நெய் ஊற்றும்போதெல்லாம்
எம் தந்தை "மூட நெய் பெய்து, முழங்கை வழிவார"
என்பார்.
பலமுறை இவ்வாறு சொல்லக் கேட்டபின், எனக்கு
அத்தொடரின்பால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. எனினும்,
"மூட நெய்" என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை.
மூட நம்பிக்கை என்றால் தெரியும். அது என்ன
மூட நெய்? மூடத்தனமான நெய் என்பது
பொருந்தவில்லையே! தந்தையிடம் கேட்கத்
தோன்றவும் இல்லை. அக்காலச் சூழலில் கேட்டு
விடவும் முடியாது.
சிறிது காலத்திலேயே, வானொலியில் திருப்பாவை
விளக்கத்தை நான் கேட்கத் தொடங்கினேன். அப்போது
புரிந்தது மேற்கண்ட தொடர் ஆண்டாளின் பாசுரத்தில்
வருகிறது என்று. பொருளும் புரிந்தது.
"ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்."
மூட நெய் என்பதை அதற்கு முந்திய சீரான
பாற்சோறு (பால்ச்சோறு) என்பதுடன் கொண்டுகூட்டிப்
பொருள் காண வேண்டும்.
பாற்சோறு (பால்ச்சோறு) மூட நெய் பெய்து என்றால்,
இலையில் இடப்பட்ட சோறு முழுவதையும் மூடும்
அளவுக்கு நெய் ஊற்றுவது என்று பொருள். சோற்றின்
நடுவில் சிறிது நெய் ஊற்றி உண்பவர்கள் அல்ல ஆயர்கள்.
ஆயர் சமூகம் சுரண்டலற்ற சமூகம்; சமத்துவச் சமூகம்.
ஆயர்குடியினரின் நிறைவாழ்வை "மூட நெய் பெய்து
முழங்கை வழிவார" என்ற தொடரால் ஆண்டாள்
உணர்த்துகிறாள்.
உலகம் முழுவதும் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்த
தொல்குடிச் சமூகத்தினர் ஆயர்களே என்பது வரலாறு.
மானுட வரலாற்றில் இச் சமூகம் மேய்ச்சல் சமூகம்
( PASTORAL SOCIETY ) என்று அழைக்கப் படுகிறது.
உலகில் முதன் முதலில் தோன்றிய இலக்கியங்கள் யாவும்
ஆயர் குடியைச் சிறப்பித்துக் கூறுகின்றன. தமிழ் நிலத்தின்
நால்வகைப் பிரிவுகளைக் கூறவந்த தொல்காப்பியர்,
"மாயோன் மேய காடுறை உலகமும் " என்றுதான்
தொடங்குகிறார். இங்கு மேய என்பது விரும்பிய என்று
பொருள்படும். திருமால் விரும்பிய காட்டு நிலம் என்பது
பொருள்.
கிறித்துவ சமயமும் ஆயர்களைச் சிறப்பிப்பதில்
தவறியதில்லை. தங்கள் கடவுளையே ஒரு ஆயனாக,
மேய்ப்பனாக வரித்துக் கொண்ட மாண்பு கிறித்துவத்துக்கு
உண்டு.
"கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்;நான் தாழ்ச்சி
அடையேன். அவர் புல் உள்ள இடங்களில் என்னை
மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை இளைப்பாறச்
செய்கிறார் " என்கிறது விவிலியம்.
வேட்டுவச் சமூகமும் தொன்மையானதுதான் எனினும்
அங்கு கருணைக்கு இடமில்லை. அச்சமூகத்து மனிதன்
விலங்கோடு விலங்காக, சற்று மேம்பட்ட விலங்காக
வாழ்ந்தவன். அவ்வளவுதான்.
ஆயர் சமூகம்தான் நாகரிகம் எய்திய
முதல் சமூகம். வேட்டுவச் சமூகம் போலன்றி,
இங்கு விலங்குகளோடு மனிதன் இயைந்து வாழ்ந்தான்.
திருப்பாவையில், ஆண்டாள் விலங்குகளையும்
பறவைகளையும் சிறப்பித்துப் பாடுவதை நாம்
காணலாம்.
"புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ"
என்றும் ( பாசுரம்: 6 ),
"கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து"
என்றும் ( பாசுரம்: 7)
ஆண்டாள் பறவைகளை மாண்புறுத்துகிறாள்.
'கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத் தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்"
என்ற ஆண்டாள் பாசுரத்தைக் காட்டிலும் வேறு எதில்
எருமைகள் சிறப்பிக்கப் படுகின்றன?
ஆயர் சமூகத்தில், விலங்குகளுக்கும் குடியுரிமை உண்டு.
மனிதனுக்குச் சமமான குடியுரிமை. அங்கு பசுக்களே
வள்ளல்களாக இருப்பதால், மானுட வள்ளல்கள் இல்லை.
ஆயர் குடியில் மனிதர்களை வாழ வைப்பவை
விலங்குகளே! மாடு எனில் செல்வம்! மாடு எனில் வாழ்வு!
எனவே,
"வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் "
நிறைந்த ஆயர் குடியில், சோற்றை மூடும் அளவுக்கு
நெய் பெய்து உண்பதில் வியப்பில்லை அல்லவா!
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்"
என்று இரண்டாம் பாசுரத்தில் நோன்பு வினைகளைக்
கூறிய ஆண்டாள், நோன்பு நிறைவுறும் முன்னே,
இருபத்தேழாம் பாசுரத்தில் (கூடாரை வெல்லும்)
"மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்"
என்கிறாளே, இதன் விளக்கம் என்ன என்று சில
வாசகர்கள் எண்ணக் கூடும்.
நோன்பின் இறுதியில் நோன்பு நோற்ற பெண்களுக்கு
கோவிந்தன் வழங்கும் சன்மானங்களை எல்லாம் பெற்று,
புத்தாடை உடுத்தி அணிகலன்கள் பூண்டு அனைவரும்
கூடியிருந்து உண்டு மகிழும் காட்சியை ஆண்டாள்
உரைக்கிறாள். இது நோன்பின் பயனுறுத்தல் ஆகும்.
ஆண்டாளைப் படிக்கப் படிக்க அவளில் நான் மூழ்கிப்போய்
விடுகிறேன். கன்னங்களில் தாரை தாரையாகக் கண்ணீர்
வழிய வழிய அவளில் நான் திளைத்து விடுகிறேன்.
திகட்டுதல் கண்டேனில்லை!
"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்"
என்று அரச போகம் துறந்து சென்ற குலசேகர ஆழ்வார்
போல, நானும் அனைத்தையும் துறந்து, ஆண்டாளின்
திருவில்லிபுத்தூர் ஆய்ப்பாடியில் ஓர் ஆயனாக வாழும்
வாழ்க்கைக்கு ஏங்குகிறேன்.
வள்ளுவர் நம் மூளையை வென்று விட்டார் எனில்,
ஆண்டாளோ நம் இதயத்தை வென்று விட்டாள்!
வாழிய ஆண்டாள்!
**********************************************************************************

போலிப் பகுத்தறிவுக்கு கொள்ளி வைத்த
துர்கா அம்மையார்!
மின்னம்பலம் ஏடு அம்பலப் படுத்துகிறது!
-----------------------------------------------------------------------
குடும்ப சோதிடர்களின் அறிவுரைப்படி
கலைஞருக்கு காசியில் திதி கொடுத்தார்
துர்கா ஸ்டாலின் அம்மையார்!

மு க ஸ்டாலின் அவர்களின் அனுமதியோடு
அவர் சார்பாக காசியில் திதி  கொடுக்கும்
சடங்கை நிறைவேற்றினார் துர்கா அம்மையார்!

துர்கா அம்மையாருக்குத் தேவையான எல்லா
வசதிகளையும் செய்து கொடுத்தார் உ.பி முதல்வர்
யோகி ஆதித்யநாத்!

திராவிட இந்துத்துவத்தின் தலைவரான துர்கா
அம்மையாருக்கு தேசிய இந்துத்துவத்தின்
தலைவரான யோகி ஆதித்தயநாத் பணிவிடை
செய்ததில் வியப்பில்லை!

திராவிட இந்துத்துவமும் தேசிய இந்துத்துவமும்
காசியில் சங்கமம் ஆயின. Once and for all போலிப்
பகுத்தறிவுக்கும் சேர்த்து திதி கொடுத்த
துர்கா அம்மையார் வரலாற்றில் இடம் பெறுகிறார்!

இந்த உண்மைகளை மின்னம்பலம் இணைய ஏடு
அம்பலப் படுத்தி உள்ளது. நக்கீரன் ஏட்டில்
துணை ஆசிரியராக  இருந்த நக்கீரன் காமராஜ்
அவர்கள்தான் மின்னம்பலம் ஏட்டின் ஆசிரியர்
என்பது கூடுதல் சிறப்பு!      
***************************************************
தமிழகத்தில் மலர்ந்த தாமரை!
-----------------------------------------------------
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை
வெளிமாநிலத்திலும் பரப்ப துர்கா ஸ்டாலின் முடிவு!
அவ்வாறு உ.பி  மாநிலத்தில் உள்ள வாரணாசி
எனப்படும் காசியில் பகுத்தறிவுக்
கொள்கைகளைப்  பரப்பிய காட்சியும்
அதன் மாட்சியும்!
===========================================
காசியில் வழிபாடு செய்ய வருகை தரும்
துர்கா ஸ்டாலின் அம்மையாருக்கு சகல
வசதிகளும் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு
உபி  முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு! 

தாமரை தமிழகத்தில் கலைஞர் இல்லத்திலும்
(ஆலிவர் ரோடு) துர்கா அம்மையார் வசிக்கும்
இல்லத்திலும் மலர்ந்து விட்டது.   
------------------------------------------
போலிப் பகுத்தறிவுக் கயமையை
அம்பலப் படுத்துவோம்!
போலிப்பகுத்தறிவு = தாமரை மலர்வது!
-------------------------------------------------------------------
இதெல்லாம் அப்பட்டமான பொய். மார்க்சிஸ்ட்
கட்சிக்கும் நக்சல்பாரிக் கட்சியான லிபரேஷனுக்கும்
உள்ள வேறுபாடு பற்றியெல்லாம் கொளத்தூர்
மணிக்குத்  தெரியாது. விரிவான கட்டுரையை
ஏற்கனவே சில ஆண்டுக்கு முன்பு எழுதியுள்ளேன்.


காசியில் துர்கா!
யோகி ஆதித்தயநாத் உத்தரவு!
--------------------------------------------------------
துர்கா ஸ்டாலின் அம்மையார் காசிக்குச்
சென்று, இறந்து போன தம் குடும்பத்து
மூத்தோர்க்கு தர்ம சாஸ்திரம் கூறுகிற
சடங்குகளைச் செய்யச் சென்றுள்ளார்.

கலைஞரின் மரணத்தை அடுத்து, கலைஞருக்குச்
செய்ய வேண்டிய ஈமக்கடன் சடங்குகளைச்
செய்யவே துர்கா அம்மையார் காசி சென்றார்.

இவரது காசி வருகை பற்றி அறிந்த உ.பி முதல்வர்
யோகி ஆதித்யநாத் அவர்கள், துர்கா ஸ்டாலின்
அம்மையாருக்கும், அவரின் குழுவினருக்கும்
தேவையான வசதிகளைச் செய்து தருமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவு .பிறப்பித்தார்.

ஆங்கிலமோ இந்தியோ தெரியாத துர்கா
ஸ்டாலின் அம்மையாருக்கு உதவ, தமிழ் தெரிந்த
ஒரு இளம் ஐ ஏ எஸ் அதிகாரியை நியமித்தார் 
யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்ய நாத் ஜிந்தாபாத்!
ஆன்மிகம் வாழ்க!
போலிப் பகுத்தறிவு ஓங்குக!
*******************************************

சரியான விடையும் விளக்கமும்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
1) கணக்கில் நேரம் கேட்கப் படுகிறது.
நேரம் என்பது வேகம் மற்றும் தூரம் ஆகிய
இரண்டுடன் தொடர்பு உடையது.

2) தூரம் வேகம் நேரம் ஆகிய மூன்றையும்
 இணைக்கும் ஒரு சூத்திரம் உள்ளது.
தூரம் = வேகம் x நேரம்.
நேரம் = தூரம் divided by வேகம்,

3) கணக்கின்படி, தூரம் = 591 கோடி கிமீ
வேகம் (ஒளியின் வேகம்) = 300,000 கிமீ/நொடி
எனவே நேரம் = 5,910,000,000 divided by 300,000 நொடி
( கவனிக்கவும்: விடை "நொடி"யில் கிடைக்கும்)

4) வகுத்தால், 19700 நொடி வரும். இதை 60ஆல்
வகுத்தால் நிமிடம் கிடைக்கும். 

19700 நொடி= 19700 divided by 60 = 328.33333 நிமிடம்
= 328 நிமிடம். 328 நிமிடம் வருகிறது. இதில் 300 நிமிடம்
என்பது 5 மணி ஆகும்.  மீதி 28 நிமிடமும் உள்ளது.
எனவே 5 மணி 28 நிமிடம் ஆகிறது. இதுவே
சரியான விடையும் ஆகும்.
Therefore நேரம் = 5 மணி 28 நிமிடம்.

5) ஆக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம்
புளூட்டோவை அடைய ஐந்தரை மணி நேரம் ஆகும்.
காலை 6 மணிக்கு உள்ள சூரிய ஒளியை மதியம்
11.30 மணிக்குப் பார்ப்பது போல இது உள்ளது.

6) விடையளித்த அனைவருக்கும் நன்றி.
************************************************  


வியாழன், 27 டிசம்பர், 2018

லெனினை கொண்டாடுவதும் - பாசிசத்தைக் கொண்டாடுவதும் ஒன்று தான்!
-----------------------------------------------------------------------------------
மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வடிவத்தில் கட்சி கட்டிக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது. ஆனால், இதற்கு மாறாக தனி நபரோ, சிறுகுழுவோ கொள்கை முடிவெடுத்து மக்களை அடிமையாக நடத்தும் வடிவத்தில் கட்சி கட்டுவதற்கு கோட்பாடு ரீதியான வடிவம் கொடுத்தவர்தான் லெனின்.
லெனின் இப்படி தவறான முடிவை எடுத்து, அதை நியாயப்படுத்துவதற்கு மூல காரணமாக இருந்தவர் மார்க்ஸ். சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தனிச்சொத்துடைமையை ஒழித்து ‘பொதுவுடைமை’ கொண்டு வரவேண்டும் என்கிறார் மார்க்ஸ். மார்க்ஸ் கூறும் ‘பொதுவுடைமை’ என்பது ஒரு கொள்கை முடிவாகும்.
இந்த கொள்கை முடிவு எந்த அரசியலமைப்பு சட்ட வடிவத்திற்குள் உருவாகும் என்பது குறித்து மார்க்ஸ் தெளிவாக எந்த வரையறையையும் கொடுக்கவில்லை. (இங்கு நான் அரசியலமைப்பு சட்ட வடிவம் என்று குறிப்பிடுவது ஒவ்வொரு தனி நபரும் தொடர்ச்சியாக சம மதிப்பீட்டில் அரசியல் பொருளாதாரம் குறித்து முடிவெடுக்கும் உரிமைப் பங்கீடு பற்றியதாகும்.)
வெறும் கொள்கையை மட்டும் கூறிவிட்டு அரசியலமைப்பு சட்ட வடிவம் பற்றி மார்க்ஸ் தெளிவுபடுத்தாததால் எதேச்சதிகார வடிவத்தில் லெனின் கட்சி கட்டுவதற்கு அது உதவியாகி விட்டது. கட்சி என்பது அரசு வடிவத்தின் முன்னோடியாகும். ஆனால் லெனினோ புரட்சிகர கட்சி என்றால் அதற்கு புரட்சிகர கொள்கை வேண்டும் என்கிறார்.
லெனின் குறிப்பிடும் புரட்சிகர கொள்கை என்பது தனிநபரோ, சிறு குழுவோ எடுப்பதாகும். இப்படி எடுக்கப்பட்ட கொள்கை முடிவை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் எதேச்சதிகாரமாக மேலிருந்து கட்சி கட்டப்படுகிறது. இதனால் அரசியல் பொருளாதாரம் குறித்து முடிவெடுக்கும் உரிமையிலிருந்து மக்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
எதேச்சதிகார வடிவத்தில் கட்சி கட்டுவதற்காக ‘பொதுவுடைமை’ என்ற கொள்கையை லெனின் கையில் எடுத்தார். அதன் நீட்சியாக மற்றவர்கள் இனம், மதம், ஜாதி, மொழி உள்ளிட்ட காரணங்களைக் காட்டி எதேச்சதிகாரமாக கட்சி கட்ட அது உதவி செய்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவது என்பது ஏதோ புனிதமானது போலவும், அது உயர்ந்த நிலை என்பது போலவும் கருத்தியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் கமிட்டிக்கு கட்டுப்பட்டு மக்களிடம் தங்களது உணர்வுகளுக்கு மாறாக முக்கிக் கொண்டு பொய் பேசுவதுதான் அரசியல் நாகரிகம் என்ற கருத்தியல் கட்டமைப்பையும் கட்சி மார்க்சியவாதிகள் உருவாக்கியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியில் பஞ்சம கமிட்டி உறுப்பினராக (பரிச்சார்த்தக் குழு அல்லது கருக்குழு) சேர்ந்த ஒருவரை கட்சி உறுப்பினராக தரம் உயர்த்துவது யார்? அவருக்கான தகுதி என்ன? அவருக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது? என்று யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை.
கடவுளை புனிதமாகக் காட்டி அரசியலில் எதேச்சதிகாரமாக செயல்படுவது ஒரு வகை என்றால், கட்சி உறுப்பினர் என்பதையே புனிதமாக காட்டி அரசியலில் எதேச்சதிகாரமாக செயல்படுவதை மற்ெறாரு வகையாக்கி விட்டார்கள் மார்க்சியர்கள்.
ரகசியமாக கூடி குசு குசு என்று பேசுவதன் மூலம், தங்களை உழைக்கும் மக்களை விட மேலானவர்களாக கட்சி மார்க்சியர்கள் கருதிக் கொள்கிறார்கள். இடைக்கமிட்டியில் ரகசியமாக கூடி குசு குசு என்று பேசுகிறவர்கள், மாவட்ட கமிட்டிக்கு சென்று குசு குசு என்று பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மாவட்ட கமிட்டியில் உள்ளவர்கள் மாநிலக் கமிட்டிக்கும், மாநில கமிட்டியில் உள்ளவர்கள் தேசிய கமிட்டி அல்லது அகில இந்திய கமிட்டிக்கு சென்று குசு குசு என்று பேச வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இது ஒரு இடம் மாறும் மனு தர்ம கோட்பாடு போன்று செயல்படுகிறது.
ரகசியமாக கூடி குசு குசு என்று பேசுவதை கட்சி மார்க்சியர்கள் ‘சுய இன்பத்தை’ போல் அனுபவிக்கின்றனர். ஆளுகின்ற அரசு மீது மக்கள் மத்தியில் விமர்சனம் செய்ய உரிமை உள்ள ஒரு நாட்டில், மக்களுக்காக கட்சி கட்டுகிறேன் என்று கூறி விட்டு, மார்க்சியவாதிகள் தாங்கள் கட்டும் கட்சியில் விமர்சனம், சுயவிமர்சனத்தை அறைக்குள் கூடி குசு குசு என்று பேசுவதுதான் சரி என்று கூறுகின்றனர். இதனால் இதை ‘சுய இன்பத்தை’ போன்றது என்று விமர்சிப்பதில் தவறில்லை.
உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கண்டுபிடிப்புகளும் உழைப்பவனாலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான் எதார்த்த உண்மையாகும். ஆனால் லெனினோ ‘உழைப்பவனுக்கு அறிவு குறைவு’ என்று கண்டுபிடித்திருக்கிறார். லெனினின் இந்த ‘அரிய’ கண்டுபிடிப்பை எழவெடுத்த தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மார்ச்சியவாதிகள் எரிச்சல் அடைகின்றனர்.
ஸ்வர்திலோவ் பல்கலைக்கழகத்தில் அரசு எனும் தலைப்பில் லெனின் உரையாற்றும்போது, அரசு வடிவம் சிக்கலானது என்று கூறி மழுப்புகிறார். அரசு வடிவத்தை விளக்கினால் தன்னுடைய எதேச்சதிகாரம் அம்பலப்பட்டு விடும் என்று கூட தெரியாதவரா லெனின்?
மக்களை அடிமையாக நடத்த லெனின் உருவாக்கிய ‘ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு’ எதேச்சதிகாரம் என்பதால் அதை கடைபிடிப்பவர்கள் யாரும் ஒற்றுமையாக இருக்க முடியாது. தங்களுக்குள்ளேயே பல்வேறு குழுக்களாக பிரிந்து கொண்டு துரோகி, திரிபுவாதி, கலைப்புவாதி, ஓடுகாலி, போலி மார்க்சியவாதி, ஏகாதிபத்தியக் கைக்கூலி, வர்க்க விரோதி என்று மாற்றி மாற்றி குற்றம் சாட்டிக் கொண்டும், அடித்துக்கொண்டும் சாவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
கொள்கை முடிவு என்பது ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டதாகும். லெனின் உருவாக்கிய ‘ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு’ அடிப்படையில்தான் உலகம் முழுவதும் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படுகிறது. இப்படி கட்டப்பட்ட கட்சியிலிருந்து சிறு குழுவாக அல்லது சிறுபான்மையாக பிரிந்து வெளியே வருபவர்கள் கட்சி ஜனநாயகப் பூர்வமாக கட்டப்படவில்லை என்று கூற மாட்டார்கள். மாறாக கொள்கை தான் பிரச்சினை என்பார்கள். இவர்களுக்கும் பதவி கொடுத்திருந்தால் இப்படி கூறியிருக்க மாட்டார்கள். நான் மீண்டும் கூறுகிறேன் கொள்கை முடிவு என்பது ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டதாகும். கொள்கையை காரணம் காட்டி கட்சி உடைய முடியாது.
மேல் கமிட்டிக்கு கீழ் கமிட்டி கட்டுப்பட வேண்டும் என்கிறார் லெனின். மத நூல்களை வைத்துக் கொண்டு அதில் உள்ள ெகாள்கையை பாதுகாக்கிறேன் என்ற பெயரிலும், தங்களை மேலானவர்கள் என்று கூறிக் கொண்டும் பலர் எதேச்சதிகாரமாகக் கட்சி கட்டுவது ேபால், மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களை வைத்துக் கொண்டு அதில் உள்ள கொள்கையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் தங்களை மேலானவர்களாக அல்லது மேல்கமிட்டியாக வரையறுத்துக் கொள்வதைத்தான் மேல் கமிட்டிக் கீழ் கமிட்டி கட்டுப்பட வேண்டும் என்கிறார் லெனின்.
ஒரு மலை கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்றுமையாக, சமத்துவத்துடன் வாழ்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த மலை கிராமத்தில் மார்க்சியவாதி புகுந்தால் என்ன ஆகும் தெரியுமா? அங்குள்ள மக்களில் ஒரு பகுதியை பிரித்து அந்த ஒரு பகுதிக்குள் மேல் கமிட்டி கீழ் கமிட்டி உருவாக்கி விடுவார்கள். மேலும் உழைப்பவனுக்கு அறிவு குறைவு என்றும், அவர்களுக்கு அறிவு புகட்ட ேவண்டும் என்றும் பயிற்சி கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அறைக்குள் எப்படி பேச வேண்டும், மேல்கமிட்டிக்கு கட்டுப்பட்டு தங்களது உணர்வுகளுக்கு மாறாக மக்களிடம் எப்படி பொய் பேச வேண்டும், நிர்வாகிகளை எப்படி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கற்றுக் கொடுப்பார்கள்.
இப்படி அந்த மலைவாழ் கிராமத்தில் உருவாகிய மார்க்சியவாதிகள், சில ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்குள் நிலவும் முரண்பட்ட கருத்தால், குழுக்களாக பிரிந்து கலைப்புவாதி, துரோகி, ஓடுகாலி, திரிபுவாதி, போலி மார்க்சியவாதி, ஏகாதிபத்திய கைக்கூலி, வர்க்க விரோதி என்று குற்றம் சாட்டிக் கொண்டும் அடித்துக் கொண்டும் சாக ஆரம்பித்து விடுவார்கள். சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் இருந்த அந்த மலை கிராமம் அலங்கோலமாக காட்சியளிக்க ஆரம்பித்துவிடும்.
கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசக்கூடாது என்று சமூக வலை தளங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எழுதி வருவதை நாம் பார்க்கிறோம். இவர்கள் கட்சியையே ‘தனிச்சொத்துடைமையாக மாற்றியதை’ இது வெளிப்படையாகவே காட்டுகிறது.
அரசின் வடிவத்தோடு இணைத்து அரசின் பொருளாதாரக் கொள்கையை மார்க்ஸ் ஆய்வு ெசய்திருந்தால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் புதிய, புதிய உற்பத்தி உறவுகள் பிறக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்க மாட்டார்.
மார்க்ஸ் அரசு வடிவத்தை கூறாமல், வெறும் கொள்கையை மட்டும் கூறிவிட்டு சென்றதும், அதன் தொடர்ச்சியாக எதேச்சதிகார வடிவில் கட்சி கட்ட லெனின் கோட்பாடு உருவாக்கியதும் உலகம் முழுவதும் கொள்கையின் பெயரில் பாசிஸ்ட்டுகள் உற்பத்தியாவதற்கு வழிவகை செய்தது. பொதுவுடைமை, இனம், மதம், ஜாதி, ெமாழியின் பெயரில் உலகம் முழுவதும் பாசிஸ்ட்கள் உற்பத்தியாவதை மார்க்சியத்திலிருந்தான் பார்க்க வேண்டும்.
மார்க்ஸ் காலத்திற்கு முன்பு கடவுளின் பெயரால் எதேச்சதிகார முடியாட்சி இருந்தது. அவருக்கு பிறகு பல்வேறு கொள்கையின் பெயரிலும் எதேச்சதிகார அரசு உருவாக ஆரம்பித்து விட்டது.
மக்களின் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு மக்களிடமிருந்து பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பிரதிநிதிகளை மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடிவத்தில் கட்சி கட்டினால், அது ஒரு கட்டத்தில் அரசு வடிவமாக உருமாறிவிடும். அரசியல் பிரதிநிதிகள் மக்களின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வெறும் ஊழியர்களாக மாற்றப்படுவதால் அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்ட மாட்டார்கள்.
இன்று கொள்கையின் பெயரில் அரசியல் கட்சிகள் எதேச்சதிகாரமாக கட்டப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அதேபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடக்கும் போராட்டத்தில், அங்குள்ள மக்கள் அரசியல் கட்சியை ஒதுக்கிவைத்து விட்டு, தன்னெழுச்சியாக போராடுகிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மக்களின் உணர்வுகளை தொடர்ச்சியாக பிரதிபலிக்கும் வடிவத்தில் கட்சி கட்ட வேண்டி இருக்கிறது.
அரசியல் கட்சிகளை ஒதுக்கிவைத்து விட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள் என்றால், அங்கு ஜனநாயகப்பூர்வமாக கட்சி கட்டப்படவில்லை என்று அர்த்தம். இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் மார்க்சியவாதிகள் தன்ெனழுச்சி போராட்டத்தை ஒரு பக்குவமற்ற நிலையில் மக்கள் இருப்பதாக மட்டுமே குறுக்கிப் பார்க்கிறார்கள்.

சூரியனில் இருந்து 591 கோடி கிலோமீட்டர்
தொலைவில் உள்ள குறுங்கோளான  புளூட்டோவுக்கு
சூரிய ஒளி வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும்? 

ஒவ்வொருவரும் இந்தக் கணக்கைச்
செய்ய வேண்டும். பெரிய பெரிய ஃபார்முலா
எதுவும் தேவையில்லை. பத்தாம் வகுப்பு
கணக்குதான் இது. எனினும் எட்டாம் வகுப்பு
மாணவனால் சரியான விடை எழுத முடியும்.

வருகிறதே!


எங்களின் அறிவியல் நிகழ்ச்சிக்கு (நிகழ்ச்சி நடைபெறும்போது)  வாருங்கள். காட்டுகிறேன்.


நிகழ்ச்சிகள் எனது பென்சன் பணத்தில் நடக்கின்றன.
PENSION REVISION வந்தால்  ஐஸ்கிரீம் உண்டு.

கணக்கை எப்படிப் போட்டீர்கள் என்பதை
நான் அறிவேன். பிறர் அறிய வேண்டாமா?

தமிழ் மோகன் Ramkumar R Thakku ஆகிய இருவரும்
சரியான விடை எழுதி உள்ளனர். அவர்களை
விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளேன்.
எமது விடை இன்றிரவு வெளியாகும்.

ஒளியின் வேகம் என்பது மாறாதது. அது நொடிக்கு
3 லட்சம் கிமீ என்று எடுத்துக் கொள்க.
(Maximum attainable speed of light  in vaccum is a constant) 
இந்தக் கணக்கில் தூரம் 591 கோடி கிமீ
என்று கொடுக்கப்பட்டு உள்ளது. ஒளி பயணம்
செய்யும் வழி நெடுக எவ்விதத் தடையும் இல்லை
என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய அனுமானம்
(assumption, Space is almost empty except some local irregularities)

பின் என்ன? நேரம் = தூரம் divided by வேகம்.
அவ்வளவுதான்.

பொதுவான வாசகர்களுக்காக 10,12 வகுப்புகளின்
கணக்கு கொடுக்கும்போது, MSc, PhD போர்ஷனில்
உள்ள பாடங்களை உள்ளே புகுத்த வேண்டாம் என்று
கேட்டுக்  கொள்கிறேன்.    


புதன், 26 டிசம்பர், 2018

புலித்தலையை நாய் மோந்து பார்ப்பதா?
கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புக்கு
திராவிடத் தயிர் சாதங்கள் உரிமை கோருவதா?
வெண்மணிப் போராட்டத்தின் ஒளிவீசும் உண்மைகள்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
1950, 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள்
விவசாயக் கூலிகளை அடிமைக ளாக நடத்தினர்.
விவசாயக்  கூலிகளான பெண்களை வாடி போடி
என்றுதான் பண்ணையார்கள்  அழைப்பது வழக்கம்.

60 வயதான தலித் பெண்ணை பண்ணையாரின்
20 வயது மகன் வாடி போடி என்று அழைப்பது
இயல்பாக இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி இந்த விவசாயக் கூலிகளின்
நடுவில் வேலை செய்தது. சீனிவாசராவ் என்னும்
கம்யூனிஸ்ட் தலைவர் தலித்துகளிடம் உறைந்து
கிடந்த பண்ணையடிமைச் சிந்தனையை அகற்றி
சுயமரியாதை உணர்வை ஊட்டினார்.

தலித் பெண்களை  அமைப்பாக்கி, அவர்களிடம்
சீனிவாசராவ் கூறினார்: இனி பண்ணையார் உங்களை
வாடி போடி என்று கூப்பிட்டால், நீங்களும்
பதிலுக்கு பண்ணையாரை வாடா போடா என்று
என்று கூப்பிடுங்கள் என்றார். பண்ணையாரை
வாடா போடா என்று கூப்பிடும் மனநிலைக்கு
அப்பெண்களைத் தயார் படுத்தினார்.

ஒவ்வொரு பெண்ணும் தன்னை பண்ணையார் வாடி
என்று கூப்பிடும் தருணத்திற்காகக் காத்திருந்தனர்.
பண்ணையார் வாடி என்று கூப்பிட்டதும், என்னடா
சொல்லுடா என்றனர்/ திகைத்துப்போன பண்ணைகள்
வாடி போடி என்று அழைப்பதைக் கைவிட்டனர்.

இதற்குப் பெயர்தான் சுயமரியாதை.  தமிழ்நாட்டில்
மக்களுக்குச் சுயமரியாதை உணர்வை ஊட்டியவர்
சீனிவாசராவ் என்ற கம்யூனிஸ்ட் தலைவர்தானே
தவிர வேறு எவரும் இல்லை.

கீழ வெண்மணிப் போராட்டம் முற்றிலும்
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குச் சொந்தமானது.
சீனிவாசராவ் மணலூர் மணியம்மாள் ஆகிய
கம்யூனிஸ்டுகளின்  தன்னலமற்ற தியாகமே
தஞ்சை விவசாயக் கூலிகளை போராளிகளாக
மாற்றியது.

வெண்மணியில் கூலி உயர்வுப் போராட்டத்தை,
 சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை வர்க்கப்
போராட்டத்தை நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி.

வெண்மணியில் ராமையா என்பவரின் குடிசையில்
ஒளிந்திருந்த 44 பேரைத் தீயிட்டுக் கொளுத்தினான்
பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடு. உயர்நீதி
மன்றம் நாயுடுவை விடுதலை செய்தது.

ஆனால் நக்சல்பாரி இயக்கமோ நாயுடுவைக்
கொன்று பழி தீர்த்தது. வர்க்க எதிரிகளை
அழித்தொழிப்பது என்ற நிலையை நக்சல்பாரி
இயக்கம் எடுத்திருந்தது.எனவே அந்த அடிப்படையில்
கொடிய பண்ணையாரான கோபாலகிருஷ்ண
நாயுடுவை நக்சல்பாரிக் கட்சியான லிபரேஷன்
கட்சி அழித்தொழித்தது.

நெல்மணி கூடுதல் கேட்டதற்கு
வெண்மணித் தீயில் வெந்தோரே
உங்கள் நாமம் ஜிந்தாபாத்!

உங்களுக் கெங்கள் வீர வணக்கம்
வீர வணக்கம் வீர வணக்கம்

நீங்கள் சிந்திய ரத்தத்துக்கு
ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும்
ரத்தச் செங்கொடி பழிவாங்கும்!
பழி வாங்கும்! பழி வாங்கும்!
ரத்தச் செங்கொடி பழி வாங்கும்!

என்று இன்றும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட்
தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்களும்
கோஷமிட்டு வெண்மணித் தியாகிகளை
நினைவு கூர்கின்றனர்.


திராவிடத் தயிர்சாதங்களின் இழிதகைமை!
----------------------------------------------------------------------------
இவ்வாறு மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டும்
(CPI, CPM, CPI ML) உரிமையுள்ள வெண்மணி நிகழ்வுக்கு,
வர்க்கச் சுரண்டலையும் சாதிய ஆதிக்கத்தையும்
ஒருசேர எதிர்த்து முறியடித்த மகத்தான
பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கு சில
திராவிடத் தயிர்சாதங்கள் உரிமை கோரும்
சிறுபிள்ளைத்தனம் அண்மையில் தலை
தூக்கியுள்ளது.

திராவிட இயல்மற்றும் பெரியாரியல் சித்தாந்தம்
வெறும் அடையாள அரசியல் சித்தாந்தம் ஆகும்.
வர்க்கச் சிந்தனை என்பதே திராவிட இயலிலும்
பெரியாரியலிலும் அறவே கிடையாது. குட்டி
முதலாளித்துவச்  சித்தாந்தங்கள் அவை.

காந்தியின் அஹிம்சையை காந்தியை விடத்
தீவிரமாகக் கடைப்பிடித்தவர் பெரியார். வெறும்
பிரச்சாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட
பெரியாரியத்தில் வன்முறைக்கு அணுவளவும்
இடம் .கிடையாது. வன்முறையை அறவே
வெறுத்தவர் பெரியார். மறந்தும் கூட அவர்
வன்முறையைப் போதித்ததே கிடையாது.
பெரியாரியத்தின் அரசியல் வழி என்பது
முற்றிலும் தயிர்சாதக் கண்ணோட்டமே!

நிலைமை இவ்வாறு இருக்க, கொளத்தூர் மணி
போன்ற சில திராவிடத் தயிர்சாதத் தலைவர்கள்
கோபாலகிருஷ்ண நாயுடுவைப் படுகொலை
செய்தது தங்கள் திராவிடர் கழக ஆசாமிகள்
என்று கூறி வருவது மனிதகுல வரலாறு கண்டும்
கேட்டும் இராத அருவருப்பைத் தருகிறது.

நக்சல்பாரி இயக்கம் என்பது இரும்பு அடிக்கும்
இடம். அங்கு திராவிடத் தயிர்சாதங்களுக்கு
என்ன வேலை?

வர்க்க எதிரிகளை அழித்தொழித்தல் என்பதை
உச்ச கட்ட வர்க்கப் போராட்டமாக நக்சல்பாரி
இயக்கம் கருதியது. அழித்தொழிப்பு என்பது
மகத்தான நக்சல்பாரி இயக்கத்தின் தந்தையான
சாரு மஜூம்தார் முன் வைத்து  நடைமுறைப் படுத்திய
வழியாகும். இதற்கு திராவிடப் பிழைப்புவாத
தயிர்சாதங்கள் உரிமை கோருவது ஈனத்தனம் ஆகும்.
அழித்தொழிப்பு என்பது .மெதுவடை அல்ல.

இனிமேலும் இத்தகைய இழிசெயலில் திராவிடத்
தயிர்சாதங்கள் இறங்கினால், அவர்களுக்கு
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடம்
கற்பிக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.
புலித்தலையை நாய் மோத்தல் இல்.
*******************************************************   
      
 

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
பருந்தாகாது என்பதை திராவிட தயிர் சாதங்கள்
உணர வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி
நடந்த போது பிரிட்டிஷாரை ஆதரித்தது,
சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் ஆட்சி
நடந்தபோது காங்கிரசை ஆதரித்தது, காங்கிரஸ் தோற்று
1967 ல் அண்ணா திமுக ஆட்சியை அமைத்தபோது
திமுகவை ஆதரித்தது என்று காலமெல்லாம்
ஆட்சியில் உள்ள கட்சிக்கு வெண்சாமரம்
வீசுவதையே வழக்கமாகக் கொண்டவர்கள்
நக்சல்பாரிகளுக்கு அறிவுரை வழங்க முயலக்
கூடாது.

தனிப்பட்ட பகைமை காரணமாக முத்துராமலிங்கத்
தேவரை பலர் வன்மத்துடன் எதிர்த்தது உண்டு.
அதையெல்லாம் தலித் ஆதரவு என்று கணக்குக்
காட்ட முயற்சி செய்து தலித்துகளை ஏமாற்ற
முடியாது.

வெண்மணி விவகாரத்தில் கொலைகாரப்பாவி
கோபாலகிருஷ்ண நாயுடுவை யார் யார் எப்படி
எப்படி ஆதரித்தார்கள் என்பதற்கு வரலாறு
சாட்சி சொல்கிறது. நேரில் கண்ட சாட்சியங்கள்
பலர் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றனர்.
எனவே இந்த 2018ல் ஏமாற்று வேலை இனி
தலித்துகளிடம்  எடுபடாது.


லெனின் எழுதிய நூல்களைப் பற்றி எங்களிடம்
பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பது
போன்றது.


மத்திய சென்னையில் உதயநிதியை
நிறுத்தி எம்பி ஆக்கி மத்திய
இணையமைச்சர் ஆக்குவது என்ற
ஆலோசனை ஏற்கப்படுகிறது.
உள்துறை, சுகாதாரத் துறை பரிசீலனையில்!


அறிவியல் ஒளி என்பது மாத இதழ். கடைகளில்
கிடைக்காது. ஆண்டுச் சந்தா ரூ 180.
ஆயுள் சந்தா ரூ 2500.
ஆசிரியர்: நா சு சிதம்பரம்
:தொடர்புக்கு:  94440 63497.
மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in

1) DD மூலம் அனுப்பலாம்.
2) சிண்டிகேட் வங்கியில் நேரடியாகச் செலுத்தலாம்.
மணி ஆர்டர் ஏற்பதில்லை. நீங்கள்  ஆசிரியர்
திரு சிதம்பரம் அவர்களிடம் தொலைபேசியில்
பேசலாம். அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

சிண்டிகேட் வங்கியில் பின்வரும் அக்கவுண்ட்
நம்பரில் செலுத்துக: C.A: 60121010007197.
IFSC நம்பர்:  SYNB0006012 (தங்கசாலை கிளை)   
   
நீங்களே மேலே குறிப்பிட்ட அறிக்கையைப்
படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.





செவ்வாய், 25 டிசம்பர், 2018

தீர்மானங்கள்
-------------------------
காலங்காலமாக மத்திய மாநில அரசுகள் வேளாண்மையைப்
புறக்கணித்தே வந்துள்ளன.மிகவும் பின்தங்கிய
நிலையிலான வேளாண் உற்பத்தியை நவீனப்
படுத்தவோ உற்பத்தியைப் பெருக்கவோ விவசாயிகளின்
வாழ்க்கைத் தரத்தை மேம்மடுத்தவோ அரசுகள்
உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நரசிம்மராவ் ஆட்சியின்போது உலகமயக்
கொள்கைகள் அறிமுகப் படுத்தப்பட்டன. தொழில் துறையின்
மீதான கவனக் குவிப்பும் வேளாண்மையை அடியோடு
புறக்கணித்தலுமே இக்கொள்கைகளின் சாரமாக
அமைந்தது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது
விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும்
என்று அறிவித்தார்.

உலகமயக் கொள்கைகள் வேளாண்மையை குழிதோண்டிப்
புதைத்தன. தற்சார்பு விவசாயம் என்பது முழுவதுமாக
முடிவுக்கு வந்தது. விதைகள் உரங்கள் பூச்சி மருந்துகள்
என வேளாண் இடுபொருட்கள் அனைத்துக்கும் விவசாயிகள்  ஏகாதிபத்திய நிறுவனங்களைச் சார்ந்து இருக்க வேண்டிய
அவலம் ஏற்பட்டது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
வீரிய வித்துக்களை அறிமுகம் செய்ததன் மூலம்
இந்திய விதைச் சந்தை முற்றிலுமாக ஏகாதிபத்தியச்
சார்பு கொண்டதாக ஆனது.

விவசாயிகளின் தற்கொலை ஒவ்வொரு மாநிலத்திலும்
தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகிப் போனது.
அரசின் பாரபட்சமான கொள்கைகளோடு, மழை வெள்ளம்
புயல் சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களும்
விவசாயிகளை மீண்டெழுந்து விடாதபடி நிரந்தரமாக
முடக்கிப் போட்டு விடுகின்றன.

அதே நேரத்தில்,  பெருந்தொழில் அதிபர்களால் மிகச்
சுலபமாக பல்லாயிரம் கோடிரூபாய்களை
வங்கியில் இருந்து கடனாகப் பெற .முடிகிறது. நாட்டின்
மூலதனத் திரட்சியானது தொழிலதிபர்களுக்காகத்
திறந்து விடப்படுகிறது. கடனைத் திருப்பிக் கட்டாமல்
தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிச் செல்வது
இங்கு வாடிக்கையாகி விட்டது. அதே நேரத்தில் டிராக்டருக்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டாத விவசாயிகள்
தற்கொலை செய்து கொள்வதும் இயல்பான நிகழ்வாகி
விட்டது.

விவசாயத்தையும் விவசாயிகளையும் இந்தப் பேரவலத்தில்
இருந்து மீட்டெடுப்பது ஒன்றே அரசுகளின் முன்னுரிமை
கொண்ட செயல்பாடாக இருக்க வேண்டும். அரசுகளின்
வேளாண்மைக் கொள்கைகள் முற்றிலும் புரட்சிகரமான
விதத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்திய
வேளாண்மையானது முற்றிலும் அரசு ஆதரவுடன்
நடத்தப்பட வேண்டும். சுருங்கக் கூறின் வேளாண்மை
அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். வங்கிகள் அரசுடைமை
ஆக்கப்பட்டது போன்று, வேளாண்மையும் அரசுடைமை
ஆக்கப்பட்டு, நாட்டின் வேளாண்மையை அரசே
மேற்கொள்வதன் மூலமே இந்திய வேளாண்மை
தற்போதைய  நெருக்கடியில் இருந்து விடுதலை பெறும்.

இதைச் செய்யத் தவறினால், விவசாயிகள் விவசாயத்தைக்
கைவிட்டு பிழைப்புத்தேடி நகரங்களுக்குச் செல்ல
நேரிடும். விவசாய நிலங்கள் தரிசாகப் போடப்பட்டு
ரியல் எஸ்டேட் தரகர்களால் கைப்பற்றப்படும். இதன்
நிகர  விளைவாக உணவுப் பஞ்சம் ஏற்படும்.

இந்நிலையில் பின்வரும் தீர்மானங்களை இந்தப் பேரவை
முன்வைக்கிறது. இதை நிறைவேற்றித் தருமாறு
இந்த அவையை இப்பேரவை கேட்டுக் கொள்கிறது.

1) மத்திய மாநில அரசுகள் வேளாண்மைத் துறையின்
மீதான ஒரவஞ்சனைப் போக்கைக் கைவிட வேண்டும்.
வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள்,
பூச்சி மருந்துகள் ஆகியவற்றை அரசே நியாய விலைக்
கடைகளில் மலிவு விலையில் (subsidised rates)  வழங்க
வேண்டும்.

2) இதை நடைமுறைப்படுத்த மிகவும் பரவலாக ஒவ்வொரு
வட்ட ஒன்றிய அளவில் வேளாண் நியாய விலைக் கடைகளை
அரசே திறக்க வேண்டும்.

3) வேளாண் விளைபொருட்களுக்கான  சந்தையில்
இடைத்தரகர்ளின் தலையீடு ஒழிக்கப்படுவதை
அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். தேவையான
நிலைமைகளில் அரசே விவசாயிகளிடம் இருந்து
நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்.
தங்களால் விற்பனை செய்ய முடியாத பொருட்களை
விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையங்களில்
ஒப்படைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

4) மழை வெள்ளம் புயல் சுனாமி போன்ற இயற்கைப்
பேரிடர்களின்போது, விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும்
ஏற்படும் பாதிப்பை அரசு முற்றிலுமாக தனது பாதிப்பாக
ஏற்றுக்கொள்ள வேண்டும். பாதிப்புகளில் இருந்து
விவசாயத்தையும் விவசாயிகளையும் விடுவிப்பது
அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

5) இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு  கீழ வெண்மணியில்
நிலப்பிரபுக்களை எதிர்த்து நடந்த வர்க்கப் போராட்டத்தில்
உயிர்நீத்த போராளிகளுக்கு இப்பேரவை அஞ்சலி செலுத்துகிறது.
அவர்களின் தியாகம் வீண்போய் விடாமல் இன்றளவும்
நடைபெறும் வர்க்கப் போராட்டங்களுக்கும் சாதிய
ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கும்  
ஒரு மகத்தான உந்துவிசையாக இருக்கிறது என்பதை
இப்பேரவை அடையாளம் காண்கிறது.

6) சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும்
நிலமற்ற விவசாயக் கூலிகள் விவசாயத்தை விட்டு
வெளியேறி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை
உறுதி செய்யும் விதத்தில், அகில இந்திய அளவில்
குறைந்தபட்சத் கூலி உத்தரவாதச் சட்டங்களை இயற்ற
வேண்டும் என்று இப்பேரவை மத்திய அரசை
வலியுறுத்துகிறது.   

மேற்கூறிய புதிய முன்முயற்சிகளை நிறைவேற்றும்
விதத்தில் மத்திய அரசின் வேளாண்மைக் கொள்கை
புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அனைத்துக் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்களும் அத்தகைய புதிய
வேளாண்மைக் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு இந்தப் பேரவை கேட்டுக்கொள்கிறது.
**************************************





     
மாதவியின் கடிதம் பற்றி அறிந்திருப்போர்
பேறு பெற்றோர். பேறு பெறாதோர் அதிகமாகவும்
பேறு பெற்றோர் மிகக் குறைவாகவும் இருப்பது
இயல்பே. நன்றி. 

மைக்கேல் பாரடே படிக்காதவர்தான். அவரின்
பங்களிப்பு அதிகம். ராமர் பிள்ளையின்
மூலிகை எரிபொருள் பற்றிய தகவல்கள்
விவரங்கள் எதுவும் எனக்கு .கிட்டவில்லை.
எதையும் நான் படிக்கவும் இல்லை.
ஒன்றும் தெரியாமல் எப்படி கருத்துச் சொல்ல
முடியும்? யாராவது தரவுகளைச் சேகரித்து
ஆராய்ந்து நேர்மையுடன் கருத்துக் கூறினால்
நல்லது.


கால்குலசை முதன் முதலில் கண்டு பிடித்தவர்
நியூட்டன். ஆனால் தாமதமாகப் பதிப்பித்தார்.
நியூட்டனுக்குப் பின்பு கண்டு பிடித்தவர் லைபினிட்ஸ்.
ஆனால் நியூட்டனுக்கு முன்னரே பதிப்பித்தார்.
இதனால் அக்காலத்தில் கால்குலஸைக்
கண்டு பிடித்தவர் யார் என்ற சர்ச்சை
எழுந்தது. பின்னர் உண்மைகள் தெளிவாயின.

இன்று கால்குலஸில் பயன்படுத்தும் function
என்ற concept லீபினிட்ஸ் வழங்கியது. நியூட்டனின்
dot notationஐ விட லீபினிட்ஸின் குறியீட்டு முறை
சிறப்பாக இருந்தது.    

திங்கள், 24 டிசம்பர், 2018

கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு : சில நெருடல்களும் சில புரிதல்களும்
அனைத்து பெரியாரிய இயக்கங்கள் மற்றும் பல இயக்கங்கள் இணைந்து பேரணியும் மாநாடும் நடத்தவிருக்கும் செய்தியை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்த அதே வேளையில் சில அய்யங்களும் உள்ளத்தில் எழத்தான் செய்தன. காரணம் திராவிட ஒவ்வாமை உள்ளவர்களும் உள்ளனரே என்பதால்.
இதற்கிடையே சுபவீ அய்யாவை அழைக்கவில்லை என்றொரு சர்ச்சை. திமுகவை சேர்க்கவில்லை என்று சிலருக்கு ஆதங்கம். அண்ணா, கலைஞர், பேராசிரியர் எல்லாம் பெரியாரியவாதிகள் இல்லையா என்ற கேள்விகள். இப்படியாக இருந்த சூழலில் திராவிடர் கழகமும் ஆசிரியரும் பங்கேற்கிறார்கள் என்ற செய்தி அய்யங்களில் சிலவற்றை போக்கியது.
சுபவீ அய்யா அழைக்கப்பட்டிருகிறார். இது திமுகவிற்கு எதிராக நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல. திமுக மட்டுமல்ல தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த கட்சியும் அழைக்கப்படவில்லை என்ற செய்திகள் வந்தன. இருப்பினும் சிறிய சந்தேகத்தோடுதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருச்சி சென்றேன்.
திருச்சியில் நான் கண்ட கேட்ட சில எனது அய்யத்தை கூட்டியதாக உணர்கிறேன்.
பேரணி துவங்கும் இடத்தில் பாதுகாப்பு குழு அடையாள அட்டையை அணிந்துகொண்டு சிலர் சூழ்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கழுத்தில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். காலில் செருப்பு அணியாதிருந்த அவர் நெற்றியில் பெரிதாக சந்தன குங்கும பொட்டை அணிந்திருந்தார். இதனை கண்ட நான் அவர் யாரென கேள்வியை உரக்க எழுப்பினேன். என்னோடு ஒரு தோழர் சேர்ந்து அவரை அங்கிருத்து போகச் சொன்னார். திராவிடர் கழக தோழர் தளபதிராஜ் என நினைக்கிறேன். ஒருவர் அவரிடம் பொட்டையாவது அழிக்குமாறு கூறினார். நாங்கள் வற்புறுத்தியவுடன் அவர் அங்கிருத்து நகர்வது போல சில நொடிகள் நகர்ந்து மீண்டும் அதே இடத்தில் மற்றவர்களோடு கைகளை கோர்த்துக்கொண்டு நின்றார். எனக்கிருந்த அச்சமெல்லாம் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தது. எதிரிகள் கலகம் மூட்டுவார்களோ, வன்முறையை தூண்டுவார்களோ, தலைவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்று சிந்தித்துகொண்டிருந்த போது இப்படி ஒரு நபர் அங்கிருப்பது எனக்கு சரியாகப்படவில்லை. மீண்டும் பாதுகாப்பு வளையத்தை நெருங்கி ‘இங்கு இந்த பாதுகாப்பு குழுவுக்கு பொறுப்பாளர் யார்?’ என உரத்த குரலில் கேட்டேன். ஒருவர் தான்தான் என சொன்னார். அவரிடம் மீண்டும் அந்த சபரி மலைக்கு மாலை போட்டிருந்த நபரை காட்டி யார் இவரை பெரியாரியவாதிகள் கூட்டத்தில் கருப்புச்சட்டையோடு அனுமதித்தது? பத்திரிக்கையாளர்கள் அருகில் நிற்கும் இவர் ஒருவரின் புகைப்படம் போதுமானது இத்தனை பெரிய கருஞ்சட்டை பேரணியை அவமானப்படுத்த என உரத்த குரலில் கோபமாக சொன்னேன். அவரிடம் சென்று ஏதோ பேசிய அவர் மீண்டும் என் அருகில் வந்து ‘அவரும் உணர்வாளர்தான் விடுங்கள்’ என்றார். நான் மீண்டும் சொன்னேன் ‘அவர் உணர்வாளராக இருந்துவிட்டு போகட்டும் அவர் அவர் சார்ந்த அமைப்பினர் இருக்கும் பகுதிக்கு செல்லட்டும் இங்கு நிற்க வேண்டாம்’ என்று. அந்த நபர் அங்கிருந்து நகரவே இல்லை. நானே அந்த நபரிடம் சென்று ‘தயவுசெய்து இங்கிருந்து சென்று விடுங்கள் உங்களால் இத்தனை பெரிய பெரியாரியர்களின் பேரணி அசிங்கப்படுத்தப்பட்டு விடும்’ என்று கூறினேன். அவர் அங்கிருந்து இறுதிவரை போகவில்லை அவருடைய அந்த பாதுகாப்பு குழு நண்பர்களும் அவரை போகச் சொல்லவில்லை. இதனை அங்கிருந்த பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆசிரியர் அய்யா வந்தவுடன் அவரோடு அதற்கு மேல் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. ஆசிரியர் தலைவர்கள் பகுதிக்கு வரும் வரை மற்ற தோழர்களோடு நானும் அவருக்கு பாதுகாப்பாக வளையம் அமைத்து கூடவே சென்றேன். ஆசிரியர் உள் பகுதிக்கு சென்ற பிறகு அங்கிருந்து நகர்ந்தேன். நகர்ந்தேன் என்பதை விட அந்த நபரை அகற்ற சொல்லி நான் வாதிட்ட அதன் பொறுப்பாளரால் மூர்க்கத்தனமாக நெட்டித் தள்ளப்பட்டேன். பொதுவாகவே புகைப்படம் எடுக்கும் வாய்ப்புள்ள இடத்தில் நான் இருப்பதில்லை என்பதும் நானே நகர்ந்து சென்றுவிடுவேன் என்பதும் தெரியாத அந்த நபர் என்னை நெட்டி தள்ளியதில் ஒரு உள நிறைவடைந்ததை ரசித்துவிட்டு புறப்பட்டுவிட்டேன் மாநாட்டு திடலுக்கு. இப்போது எனது கேள்வியெல்லாம் தலைவர்கள் இருக்கும் இடத்தில் சபரி மலைக்கு மாலை அணிந்துகொண்டு நெற்றியில் பெரிதாக ஆன்மீக குறியோடு பாதுகாப்பு வளையத்தில் நின்ற நபர் எந்த அமைப்பை சேர்ந்தவர்? அவரை ஏன் அங்கு நிற்க வைத்தார்கள்? இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் அவரை அங்கிருந்து அகற்றாமல் அடம் பிடித்தது ஏன்? உண்மையான கருஞ்சட்டைகளை விட உயர்ந்த அந்த உணர்வாளர் யார்?
திக, பெதிக, திவிக ஆகிய அமைப்புகளின் பெயர்களில் இருந்த “திராவிடர்” என்ற சொல்லைத் தவிர வேறு எங்கும் திராவிடர் அல்லது திராவிட என்ற சொல் இல்லாதிருந்தது ஏன்?
தேர்தல் அரசியலில் ஈடுபடும் அமைப்பு என்பதால் திமுக அழைக்கப்படவில்லை என்ற விளக்கம் சரியானது என்றால் மேடையில் நின்று பேசி, சால்வை அணிவித்து, பரிசு வழங்கிய குடந்தை அரசன் தேர்தலில் போட்டியிட்டவர்தானே அவர் எந்த அடிப்படையில் அழைக்கப்பட்டார்?
கருஞ்சட்டை பேரணி மாநாடு என்று அறிவித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மேடை அறிவிப்பாளர் வெள்ளை சட்டையில் இருந்தது ஏன்?
மேடையில் பேசிய திரைப்பட இயக்குநர் கோபி நயினார் ’நீல சட்டை பேரணி நடத்தப்படும் என்று சொல்லியதால்தான் நீலச் சட்டையை கழற்றி வைத்துவிட்டு கருப்பு சட்டையை அணிந்துகொண்டு வந்தேன்’ என சொன்னார். நடந்தது எதிர்ப்பு போராட்டமல்ல சடங்கிற்காக கருப்பு சட்டை அணிந்துகொண்டு செல்வதற்கு. பெரியாரின் நினைவுநாளை ஒட்டி நடத்தப்பட்ட கருஞ்சட்டை பேரணி. உண்மையான பெரியாரியவாதிகள் மற்றும் பெரியார் மீது பற்றுகொண்டவர்கள் உண்மையாக உணர்வுப்பூர்வமாக கருஞ்சட்டையை அணிந்துகொண்டு வருபவர்கள். நீலச்சட்டை பேரணி என்ற பேரத்தால் கருஞ்சட்டை அணிந்துகொண்டு வந்தவர்கள் எதற்காக?
பேசிய சிலர் அடுத்து நீலச்சட்டை பேரணி, செஞ்சட்டை பேரணி என்று சொன்னார்கள். வந்தவர்களில் சிலர் பெரியாருக்காக வந்தார்களா அல்லது அடுத்து நடத்தப்படும் என உறுதி அளித்த பேரணிகளுக்காக இந்த பேரணியில் கலந்துகொண்டார்களா?
திமுக, மதிமுக போன்றவை தேர்தல் அரசியல் கட்சிகள் என்பதால் அழைக்கவில்லை என்ற போது அதுவே அடுத்து நடத்தப்படும் பேரணிகளுக்கும் விதியாக இருக்கும்பட்சத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடாத நீல மற்றும் சிவப்பு அமைப்புகள் எத்தனை இருக்கின்றன? அதில் உள்ள தொண்டர்களின் எண்ணிக்கை எத்தனை?
கருஞ்சட்டை பேரணியில் திராவிட இயக்க தேர்தல் அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அடுத்து நடத்தப்படும் நீலச்சட்டை அல்லது செஞ்சட்டை பேரணியில் தேர்தல் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு எண்ணிக்கையை கூட்டி காட்டினால் அது என்ன செய்தியை சொல்லும்?
இந்த கேள்விகளோடு மேலும் நேரில் மட்டுமே கேட்கவேண்டிய சில கேள்விகளும் மனதில் இருந்தாலும், அனைத்து பெரியாரிய இயக்கங்களையும் ஒன்றுபடுத்தி நடத்தப்பட்ட பேரணி மற்றும் மாநாடு பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியதே. அந்த வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு உண்மையான பெரியாரியவாதிகளின் நன்றிகள் உரித்தாகும்.
அய்யங்கள் உள்ளத்தில் இருந்தாலும், ஆசிரியர் அய்யாவின் உரை ஓரளவிற்கு தெளிவை தந்தது. கலைஞர் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பதும் மதிநுட்பம் வாய்ந்தவர் என்பதும் பலரும் பேசும் ஒன்று. அப்படிப்பட்ட கலைஞரே ராஜதந்திரி மதிநுட்பம் மிக்கவர் என கருதிய ஒருவர் அவரால் என் இளவல் என அழைக்கப்பட்ட ஆசிரியர் அய்யா அவர்கள். ஆசிரியரின் வழிகாட்டுதல் இருக்கும்வரை கருச்சட்டையினர் எதிரிகளையும் துரோகிகளையும் பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.
பகுத்தறிவுமிக்க பெரியாரியவாதிகள் பலவற்றையும் அலசி ஆராய்ந்தே ஏற்றுக்கொள்வார்கள். அதுவே அவர்களுடைய இயல்பு. பெரியார் கற்றுத்தந்த பாடம். என்னுடைய கேள்விகளும் அலசி ஆராயும் நோக்கத்தை கொண்டதே. மற்றபடி மேடையிலேயே ஆசிரியர் சொல்லியபடி பிரிக்கும் காரணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இணைக்கும் காரணிகளை வளர்த்து ஒன்றுபட முயல்வோம்.
விடாது கருப்பு!
////////////திராவிடப் புரட்சி................

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

மோடியும் துரோகிகளும்
டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
“இன்று, நம் பிரதமர் நரேந்திர மோடி, அதிக அளவு வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
காரணங்களை எல்லாம் நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும், கறுப்புப்பணம் வைத்திருப்பவரும், தீவிரவாதியும், தேச விரோதியும், தேசப் பற்று கொண்டுள்ள நம் பிரதமரின் ஊழலற்ற கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர் என அறிகிறேன்.
பண மதிப்பைக் குறைத்ததிலும் சரி, ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் அல்லது வருமான வரிப் ‘பேன்’ அட்டையுடன் இணைத்ததிலும் சரி, அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
ஆதார் எண்ணை இணைத்ததில், மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட 10 லட்சம் பேர் மாயமாக மறைந்து விட்டனர்.
3 கோடிக்கும் மேலான போலி ‘எல் பி ஜி’ இணைப்புகள் முடிவுக்கு வந்து விட்டன.
மதரஸாக்களில் ஸ்காலர்ஷிப் வாங்கியதாகச் சொல்லப் பட்ட 195000 போலி குழந்தைகளைக் காணோம்.
15 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் காணாமல் போய் விட்டன.
ஏன் இவை மாயமாய் மறைகின்றன?
திருடர்களின் மொத்த கறுப்பு சந்தையும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, எல்லாத் திருடர்களும் ஒன்றாகச் சேர்ந்து, உச்ச நீதி மன்றத்தில் , ஆதாரை இணைப்பது நம் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று ஒரு மனுவைப் போட்டார்கள். இதற்கு சில முதலமைச்சர்களும் உடந்தை. திருடர்களுக்குத் தனி ரகசிய உரிமை என்று என்ன இருக்கிறது?
1. மோடி 3 லட்சம் போலி நிறுவனங்களை மூடி விட்டார்;
2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;
3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
5. மூடப்பட்ட 40000 போலி நிறுவனங்களின் (ஏன் ஜி ஓ) உரிமையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;
6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;
7. ‘இ டெண்டர்’ முறையால், சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;
8. ‘கேஸ்’ நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;
9. புதிதாக வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப் பட்ட 1 கோடியே 20 லட்சம் பேர் கோபமடைந்துள்ளனர்;
10. ‘ஜி எஸ் டி’ என்னும் புதிய வரி விதிப்பின்படி, தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
11. கறுப்பை வெள்ளையாக்குவது சிரமமாகி விட்டது;
12. நேரத்தில் வேலைக்கு வர வேண்டி இருக்கும் சோம்பேறி அரசு ஊழியர்கள் கோபப்படுகிறார்கள்;
13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
14. ‘டிஜிடல்’ பொருளாதாரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;
15. பயங்கரவாதிகளின் பணப் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது;
16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள்ளனர்.
17. கடந்த 4 ஆண்டுகளாக, ஒரு ஊழல் கூட கிடையாது. இதனால் பல அரசியல்வாதிகள் மோடி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். மோடி முந்தைய பிரதமர்களைப் போல, ஊழல் என்றால் தன் கண்களைப் பொத்திக் கொண்டு விடுவார் என எதிர் பார்த்தனர். எனவே, மோடியால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து, ‘கிச்சடிக் கூட்டணி’யை ஏற்படுத்திக் கொண்டு, மோடி, இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து விடக் கூடாது என்று எல்லாப் பிரயத்தனங்களையும் செய்து வருகின்றனர். 
இப்போது, 125 கோடி இந்தியர்கள் முன்னுள்ளது, இந்த ஊழல் ‘கிச்சடிக் கூட்டணியை’ ஆதரிப்பதா, இல்லை இந்த நாட்டின் உண்மையான விசுவாசியான நம் பிரதமர் மோடியை ஆதரிப்பதா, என்பதே. பந்து உங்கள் பக்கம் தான் இருக்கிறது.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

வடக்கு வீழ்கிறது!
தெற்கு அரியணையில் வீற்றிருக்கிறது!
----------------------------------------------------------------------
ஒரு காலத்தில் ஆன்மிகம் என்றால்
வட இந்தியாதான். பெரும் பெரும் யாகங்கள்,
யக்ஞங்களை  வட இந்தியர்கள்தான் நடத்தி
வந்தனர். தென்னிந்தியா மிகவும் பின்தங்கியே
இருந்து வந்தது.

அண்மைக்காலமாக இந்நிலை மாறி வருகிறது.
இந்திய அளவில் பெரும் யாகங்களைச் செய்து
புகழ் பெற்றார் தெலுங்கானா முதல்வர்
சந்திர சேகர ராவ். கர்நாடகத்தில் கவுடா,
குமாரசாமி ஆகியோர் மூடநம்பிக்கையின்
எல்லையைத் தொட்டனர். கேரளத்தில் கூட
காம்ரேடுகள் கிருஷ்ண ஜெயந்தி நடத்தி
கிருஷ்ணரின் அருளாசி பெற்றனர்.

ஆன்மிக வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு
வேறு எவரையும் விட அதிகமானது. திராவிட
இந்துத்துவம் கொடிகட்டிப் பறக்கும் இடம்
தமிழ்நாடு.

யாக யக்ஞங்களைச் செய்வதில் உலக
அளவில் புகழ் பெற்றவர் ராஜாத்தி அம்மாள்.
அதிகமான எண்ணிக்கையில் யாக யக்ஞங்களைச்
செய்தவர் என்ற பெருமையை ராஜாத்தி அம்மாள்
பெறுகிறார்.இவரைக் கெளரவிக்கும் முகத்தான்
யக்ஞ சரஸ்வதி என்ற பட்டம் அண்மையில்
இவருக்கு வழங்கப் பட்டு இருக்கிறது.

லேசான மலச்சிக்கல் இவருக்கு இரண்டு
நாட்களாக இருந்தால் போதும். உடனே ஒரு
யாகத்தைச் செய்து மலச்சிக்கல் அவதியில்
இருந்து விடுதலை அடைந்து விடுவார். 2G
வழக்கில் சாதகமான தீர்ப்பு வர, இவர்
நடத்திய பிரம்மாண்ட யாகமே காரணம்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்
பெருவழுதிக்குப் பின் யாக யக்ஞங்களைச்
செய்வதில் தலைசிறந்து விளங்கும்
ராஜாத்தி அம்மாள் வாழிய

ராஜாத்தி அம்மாளுக்குப் போட்டியாக
ஆன்மிகத்தில் தினமும் முத்துக் குளிப்பவர்
துர்கா ஸ்டாலின் அம்மையார். தமிழ்நாடு
முழுவதும் உள்ள திருக்கோவில் வழிபாடுகளில்
கலந்து கொண்டு கலக்குபவர். இவர் இல்லாமல்
தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் எந்தக் கோவில்
விசேஷமும் நடக்காது. கோவில் விசேஷங்களுக்கு
அள்ளி அள்ளி  வழங்குவதில் மற்ற எவரும்
இவரின் அருகில்கூட வர முடியாது.

ராஜாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலினைத்
தொடர்ந்து, ஆழ்வார்கள் ஆய்வு மையம் நடத்தும்
ஜெகத் ரட்சகன், ஆன்மிக அருளாளர் கே என் நேரு
ஆகியோர் இந்துத்துவத்தின் தூண்களாகத்
திகழ்ந்து, தமிழகத்துக்கே ஆன்மிக ஒளி
பாய்ச்சி வருகின்றனர்.

ஆக, வட இந்தியா பொலிவிழந்து விட்டது.
ஆன்மிக  அரியணையில் இருந்து வடக்கு
வெளியேறி விட்டது. தெற்கு அரியணையில் ஏறி
விட்டது. இந்தச் சாதனையை நிகழ்த்திக்
காட்டிய ராஜாத்தி, துர்கா, ஜகத் ரட்சகன்,
நேரு ஆகியோர் வரலாற்றில் இடம் பெற்று
விட்டனர்.

தமிழகம் பெரியார் மண் அல்ல.
ஆன்மிக மண்!
*********************************************  

  

வியாழன், 20 டிசம்பர், 2018

"தீயிட்டுக் கொளுத்த வேண்டிய நூல்
பெரியாரின் "தமிழும் தமிழரும்".
"1968-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
அந்த நூலிலிருந்து சில பகுதிகள் பின் வருமாறு:
"தமிழ்மொழியை நான் காட்டுமிராண்டி மொழி என்று 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டு மொழியாகவும் அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.
ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும் எழுதியும் முயற்சித்தும் வந்து இருக்கிறேன்.
தமிழை தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று 1927வாக்கில் கருத்து கொடுத்தேன். வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்க வில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக்கொண்டார்கள். நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்க வில்லை. பிறகு தமிழ்மொழிக்கு கமால் பாட்சா செய்தது போல் ஆங்கில எழுத்துகளை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக்கால எழுத்துகளைத் தள்ளிவிடு என்றேன்.இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாகச் சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்?
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?
இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு, மூன்று தமிழ்ப்புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1)தொல்காப்பியன் (2)திருவள்ளுவர் (3)கம்பர் இம்மூவரில், 1.தொல்காப்பியன் ஆரியக் கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்து விட்ட மாபெரும் துரோகி.
2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான்.
3. கம்பன் தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப் பொய்யன், முழுப்பித்தலாட்டக்காரன். உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் இருக்கிறது என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்."
பெரியாரின் இந்த நூல் பார்ப்பன எதிர்ப்பு வேடங்கட்டி தமிழ் மொழி மீதும், தமிழ்ப்புலவர்கள் மீதும் தமிழுக்கு உழைத்த நம் முப்பாட்டன்களின் மீதும் கடும் நஞ்சைக் கக்குகிறது.
இந்தி எதிர்ப்புப்போரில் தமிழுக்கு சிறிது இடம் கொடுத்ததன் மூலம் தமிழ்ப்பற்றால் இந்தியை எதிர்க்க வில்லை என்றும் ஒப்புக் கொள்கிறார்.
தமிழ் எழுத்துகளை கைவிட்டு ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தச் சொல்வதன் மூலம் தமிழின் அடையாள வேர் அழியட்டும் என்னும் விருப்பத்தை மறைமுகமாகச் சொல்கிறார்.
ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவன் ஆரியக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தவனாம். அதுவும் மத உணர்ச்சியோடு கூறியவனாம். 1948இல் திருவள்ளுவர் மாநாட்டில் பங்கேற்ற பெரியார் "திருக்குறள் ஆரிய தர்மத்தை மனுதர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் " என்று பேசினார். 1948 இல் பேசியது சரியா? 1968 இல் பேசியது சரியா? முரண்பாட்டின் தொகுப்பு மூட்டை பெரியார் என்பதற்கு திருக்குறள் ஒன்றே போதும்.
தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் இழித்துப் பேசும் பெரியார் 1924 இல் திருவண்ணாமலை காங்கிரசு மாநாட்டில் தமிழ் குறித்து பேசியுள்ளார். சாமி சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர்' நூலில் இது உள்ளது. "ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாயப்பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்றிராதாரிடத்து தேசப்பற்றிராதென்பது நிச்சயம். வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு, ஆந்திரனுக்கு ஆந்திரமொழியில் பற்றுண்டு. ஆனால் தமிழனுக்கு தமிழில் பற்றில்லை இது பொய்யோ? தாய்மொழியில் பற்று செலுத்தாதிருக்கும் வரை தமிழர்கள் முன்னேற்றமடைய மாட்டார்கள்."
1924-இல் தமிழர்களுக்கு மொழிப்பற்று வேண்டும் என்றார். 1968-இல் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் முன்னேறுவதற்கு வழி இல்லை என்றும் மாற்றிப் பேசுகிறார். இது தான் பெரியாரின் முரண்பட்ட மொழிக் கொள்கை.
தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டமென்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? என்று கேட்கும் பெரியாருக்கு தமிழர்கள் திருப்பிக் கேட்போம்.
கர்நாடாகவிற்கு சென்று கன்னடத்தை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? என்று பேசிவிட்டு வீடு திரும்பியிருக்க முடியுமா? ஆந்திரத்திற்கு சென்று தெலுங்கிலிருக்கும் பெருமை என்ன? என்று கேட்டு விடும் துணிச்சல் இவருக்கு இருந்தது உண்டா?
தமிழ்மொழியிலேயே பகுத்தறிவு பரப்புரை செய்து விட்டு பிறகு தமிழையே திட்டுவது என்பது பெரியார் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்திட்ட கொடிய செயலாகும். தமிழையும் தமிழரையும் பழிக்கும் அவரின் இந்த நூலை தீயிட்டுச் சாம்பலாக்குவதைத் தவிர வேறு வழியில்லை!"
பதிவு / நன்றி - கதிர் நிலவன்

திமுகவின் புழுத்தறிவு!
----------------------------------------
கே என் நேரு பந்தக்கால் நட்டு
இந்துமத  முறைப்படி திமுக பொதுக்கூட்ட
மேடை அமைக்கும் காட்சி!
பார்ப்பனப் புரோகிதர் பந்தக்கால் நடுகிறார்!

இதுவாடா பகுத்தறிவு?
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்று
ஊரை ஏமாற்ற வேண்டியது!
பார்ப்பனப்  புரோகிதரைக் கொண்டு
மந்திரம் சொல்ல வேண்டியது!

பகுத்தறிவுக் கட்சியாமே திமுக!

இதுதான் திராவிட இந்துத்துவம்!
பாஜகவின் தேசிய இந்துத்துவத்தை விட
தீவிரமான இந்துத்துவம்!
*************************************************



கடவுள் என்ற கருத்தை (idea) பருப்பொருள் (matter)
ஆக்கி விடும் நெகிழ்ச்சியான இலக்கணம்!
கடவுள் பக்தன் உறவு கருத்தா பொருளா?
தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
பெற்ற தாய்க்கும் பிள்ளைகளுக்கும் ஓர் உறவு
இருக்கிறது. உடன்பிறந்தவர்களுக்கு இடையில்
ஓர் உறவு இருக்கிறது. இவையெல்லாம் ரத்த
உறவுகள்! ரத்த உறவுகள் பொருளா அல்லது கருத்தா?
பொருள்முதல்வாதம் என்ன சொல்கிறது?

இவை தவிர குடும்ப உறவுகள் இருக்கின்றன.
கணவன் மனைவி உறவு, மாமனார் மருமகன்
உறவு, மாமியார் மருமகள் உறவு இப்படிப்பல.
இந்த உறவுகளில் பெருத்த வில்லங்கமான உறவு
மாமியார்  மருமகள் உறவு. இந்தக் குடும்ப உறவுகள்
பொருளா கருத்தா?

இவை தவிரவும் சமூக உறவுகள் உள்ளன.
அ) ஒரு ஆலையில், சூப்பர்வைசருக்கும் லேபருக்கும்
உள்ள உறவு
ஆ) ஒரு தொழிலில், உதாரணமாக, கட்டிடம் கட்டுதலில், மேஸ்திரிக்கும் சித்தாளுக்கும் உள்ள உறவு,
கொத்தனாருக்கும் இஞ்சீனியருக்கும் உள்ள உறவு
இவை எத்தகையவை? கருத்தா அல்லது பொருளா?

ஒரு அலுவலகத்தில் மேனேஜருக்கும் அவருக்குக்
கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கும் உள்ள
உறவு எத்தகையது? பொருளா கருத்தா?

ஒரு கிராமத்தில் மேல்சாதியினரும் கீழ்  சாதியினரும்
வாழ்ந்து வரும்போது, அவர்களுக்கு  இடையிலான
உறவு எத்தகையது? கருத்தா அல்லது பொருளா?

நண்பர்களுக்கு இடையிலான நட்புறவுகளை
எப்படிப் பார்ப்பது? கருத்தாகவா  அல்லது
பொருளாகவா?

மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் இடையிலான நட்பு
எத்தகையது? கோப்பெருஞ்சோழனுக்கும்
பிசிராந்தையாருக்கும் இடையிலான நட்பு
எத்தகையது? கருத்தா அல்லது பொருளா?

வைகோவை திமுகவில் இருந்து நீக்கியபோது
சில தொண்டர்கள் தீக்குளித்துச் செத்தார்களே,
அப்படியானால், தலைவனுக்கும் தொண்டனுக்கும்
உள்ள உறவு எத்தகையது?

நடிகர் விஜய் நடித்த ஏதோ ஒரு படம் வெளியாவதில்
சிக்கல் இருந்தபோது, அதைக் கண்டித்து ஒரு
ரசிகர் தீக்குளித்துச் செத்தாரே! அப்படியானால்
நடிகனுக்கும்  ரசிகனுக்கும் உள்ள உறவு எத்தகையது?
அது கருத்தா அல்லது பொருளா?

சுருங்கக் கூறின், 1) உற்பத்தி உறவுகள், 2) வர்க்க
உறவுகள், 3) சாதிய உறவுகள், 4) ஆசிரியர் மாணவர்
உறவுகள் 5) தலைவன் தொண்டன் உறவுகள்
6) மேலதிகாரி ஊழியர் உறவுகள் 7) நட்புறவுகள்
உள்ளிட்ட  அனைத்து விதமான சமூக உறவுகளை
பொருள்முதல்வாதம் எப்படிப் பார்க்கிறது?
அவை கருத்தா அல்லது பொருளா?

மேலும், 8) கணிதத்தில் வரும் சிக்கல் எண்
(complex number) என்பது பொருளா கருத்தா?
9) கோள்கள் சூரியனைச் சுற்றுவது பற்றிய
கெப்ளரின் விதிகள் (Kepler's laws of planetary motion)
பொருளா அல்லது கருத்தா?
10) குவான்டம் கொள்கையும் ஐன்ஸ்டினின்
சார்பியல் கொள்கையும் பொருளா அல்லது
கருத்தா?

11) கோட்பாடுகள், கருத்தாக்கங்கள், சித்தாந்தங்கள்
ஆகியவை கருத்தா அல்லது பொருளா? அதாவது
காந்தியம், அத்வைதம், மார்க்சியம் ஆகிய
தத்துவங்கள் பொருளா அல்லது கருத்தா?

கேள்விகள் நீளக்கூடும். இந்த 11 கேள்விகளுடன்
நிறுத்திக் கொள்வோம். இக்கேள்விகள் பதிலுக்குக்
காத்திருக்கின்றன.

இவை அனைத்தும் வாசகர்கள் கேட்ட கேள்விகள்.
நியூட்டன் அறிவியல் மன்றம் அவற்றைத்
தொகுத்துள்ளது. அவ்வளவே. மார்க்சியம்
கற்றவர்கள் விடையளிக்கலாம்.

12ஆவதாக ஒரு கேள்வி இருக்கிறது. அது
முக்கியமான கேள்வி. கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள உறவு எத்தகையது? அது பொருளா அல்லது
கருத்தா?

மனித சிந்தனைக்கு வெளியே புறவயமாக (objective)
உள்ளவை பொருளே ஆகும் என்கிறது
பொருள்முதல்வாதம். அண்ணன் தம்பி உறவு
என்பது மனித சிந்தனைக்கு வெளியே
புறவயமாக உள்ளது. எனவே அது பொருளே
என்கின்றனர் பொருள்முதல்வாதம் அறிந்தோர்.

கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவும்
புறவயமாக உள்ளதுதானே! அப்படியானால்
அதுவும் பொருள்தானே என்கின்றனர் சிலர்.
இல்லை, அது பொருளாகாது என்று அவசரமாக
மறுக்கிறார் ஒரு பொருள்முதல்வாதி.

அது எப்படி?  எங்கோ இருக்கும் ஐயப்பனை வணங்க
ஒரு மண்டலம் விரதம் இருந்து  இருமுடி கட்டி
சபரிமலைக்குச் செல்கிறானே பக்தன்! அழகான
பெண்கள் தங்கள் அழகை  இழந்து திருப்பதியில்
போய் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே!
வேண்டுதல், நேர்த்திக்கடன், அலகு குத்துதல்,
தீச்சட்டி எடுத்தல், மண்சோறு சாப்பிடுதல்,
தேர் இழுத்தல் என்றெல்லாம் உள்ள நிகழ்வுகள்
புறவயமாக இருந்து நம்மைப் பாதிக்கின்றனவே!

கோவில் நுழைவுப் போராட்டங்கள், சேரித்
தெருவுக்குள் தேர் வர வேண்டும் என்று போராட்டங்கள்,
தமிழில்  அர்ச்சனை என்று போராட்டங்கள்
என்று பலவும் நம்மைப் பாதிக்கின்றனவே!
மேற்கூறிய நிகழ்வுகள் புறவயமாக இருந்து
நம்மைப் பாதிக்கவில்லையா?

அப்படியானால் கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள உறவு பொருள்தானே! அது எப்படி
கருத்தாகும்? சாதியம் (casteism) என்பது பொருள்
என்றால், கடவுளும் பொருள்தான்! சாதி என்பது
பொருள், ஆனால் கடவுள் என்பது கருத்தா?
இது என்ன நியாயம்? தலைக்கு ஒரு சீயக்காய்,
தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று சிலர் தங்களின்
வாதத்தை ஆவேசமாக முன்வைக்கின்றனர்.

புறவயமாக இருப்பதெல்லாம் பொருள் என்று
முடிவு கட்டும்போது, கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள புறவயமான உறவு, கடவுளையும் பொருளாக்கி
விடுகிறது. இது தர்க்கத்தின் தவிர்க்க இயலாத
நீட்சி ஆகும்.

கடவுள் என்பது வெறும் கருத்தே. கடவுள் என்பது
ஒருபோதும் பொருள் அல்ல. ஆனால் பொருள்
என்பதற்கான வரையறை நெகிழ்வாக இருப்பதால்
கடவுள்  என்னும் கருத்தும் பொருளாகி விடுவது
ஒரு பெருங்குறை.

எனவேதான் நியூட்டன் அறிவியல் மன்றம்
பொருள் என்றால் பௌதிக இருப்பு இருக்க
வேண்டும் என்று முன்வைக்கிறது. பௌதிக
இருப்பு குறித்து இன்னும் விரிவாக  அடுத்துக்
காணலாம்.
***************************************************

விவாதத்தில் வாசகர்கள் எழுப்பும் கேள்விகள்!
கடவுள் என்பது வெறும் கருத்தே, பொருள் அல்ல!
---------------------------------------------------------------------------------
சாதியம் குறித்தும் சாதி என்பது பொருளா கருத்தா
என்பது பற்றியும் கடந்த சில நாட்களாக
விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்திற்கு
மூல காரணம் தோழர் தீக்கதிர் முருகேசன்.
சாதி என்பது பொருள்முதல்வாதம் ஆகும்  என்று
கூறி இருந்தார் தீக்கதிர் குமரேசன்.

நானும் தோழர் தியாகு அவர்களும் குமரேசனை
மறுத்து சாதி பொருள்முதல்வாதம் ஆகாது
என்று எழுதினோம். தொடர்ந்து பருப்பொருள்
பற்றி எனக்கும் தியாகு அவர்களுக்கும் விவாதம்
நடந்து வருகிறது.

இந்த விவாதங்களில் யாரும் எதையும் நிறுவவில்லை.
விவாதங்களில் உற்சாகமாகப் பங்கேற்கும் பல
தோழர்கள் தங்கள் கேள்விகளை முன்வந்து பதில்களைக் 
கோருகிறார்கள்.கடவுளுக்கும் பக்தனுக்கும்
உள்ள உறவு புறவயமாக இருக்கும்போது, கடவுள்
என்பது பொருள்தான் என்று ஒரு தோழர்
கேள்வி எழுப்புகிறார். அதற்கு விடையளிக்க
வேண்டும்.

விவாதம் நடக்கிறது..உரையாடல் தொடர்கிறது.
இதுவரை யாரும் எதையும் நிறுவவில்லை.
தாங்கள் அருள்கூர்ந்து இப்பொருளில் சில
நாட்களாக நான் எழுதி வரும் பதிவுகளைப்
படித்தால், தங்களுக்கு இந்த விவாதம் பற்றிய
ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கக் கூடும்.

கடவுள் என்பது கருத்தே. அது ஒருபோதும்
பொருளாக இருக்கவில்லை என்பதே எனது
நிலைபாடு.
---------------------

      
 



  





     

புதன், 19 டிசம்பர், 2018

தவ்ஹீத் ஜமாத் ஜெய்னுலாப்தீன்களும்
மார்க்சிய ஜமாத் ஜெய்னுலாப்தீன்களும்!
பருப்பொருளின் வரையறையில் பௌதிக இருப்பு!
ஆதிசங்கரரின் இரண்டாவது மரணம்!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
பொருள்முதல்வாதம் பருப்பொருள் (matter) என்று
சொல்கிறது. மனித மனத்திற்கு வெளியே இருக்கும்
அத்தனையும் பருப்பொருள் என்று சொல்கிறது.
இதற்கு நிகராக இயற்பியல் கூறும் பிரபஞ்சம் (universe)
என்பதைக் கருதலாம்.

பூமி சூரியன் சந்திரன் கோள்கள் உள்ளிட்ட நமது
சூரியக் குடும்பம் மட்டுமின்றி பிற காலக்சிகள்
நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியது
பிரபஞ்சம்.

பிரபஞ்சம் (universe) என்பதற்கு அறிவியல் கூறும்
வரையறை  அற்புதமானது. "Whatever that exists is universe"
என்பதே பிரபஞ்சம் என்பதன் வரையறை.
எதெல்லாம் இருக்கிறதோ, எதெல்லாம் நின்று
நிலவுகிறதோ, எதெல்லாம் இருப்பை உடையதோ
அதெல்லாம் சேர்ந்ததே பிரபஞ்சம். இந்த
வரையறையின் மூலம்   பெரும் மேதைமையின்
உச்சத்தைத் தொட்டு விடுகிறது இயற்பியல்.

ஒரு வரையறை என்பது தேவையானதும்
போதுமானதுமான நிபந்தனைகளை
(necessary and sufficient) நிறைவு செய்திருக்க வேண்டும்
என்கிறது கணிதம். பருப்பொருள் பற்றிய
லெனினிய வரையறையானது "தேவையானது"
(necessary) என்ற நிபந்தனையை நிறைவு செய்கிறது.

லெனினிய வரையறையுடன்  "பருப்பொருளுக்கு
பௌதிக இருப்பு இருக்க வேண்டும்" என்ற
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் வரையறையைச்
சேர்க்கும்போது "போதுமானது"(sufficient) என்ற
நிபந்தனை நிறைவு செய்யப் படுகிறது.

இப்போது பருப்பொருளின் இலக்கணம் பின்வருமாறு
அமைந்து முழுமை பெறுகிறது. "பருப்பொருள்
என்பது மனித மனத்திற்கு வெளியில் சுதந்திரமான
புறநிலை யதார்த்தமாக இருப்பதும் பௌதிக
இருப்பைக் கொண்டிருப்பதும் ஆகும்". இந்த
வரையறையானது தேவையானது மற்றும்
போதுமானது (necessary and sufficient) என்ற இரண்டு
நிபந்தனைகளையும் நிறைவு செய்து
பருப்பொருளின் வரையறையை
கூர்மையானதாகவும் கறார்த்தன்மை
உடையதாகவும் ஆக்கி விடுகிறது.
(The definition is sharp and rigorous). பருப்பொருளின்
வரையறையில் உள்ள தாராளவாதம் முடிவுக்கு
வந்து விடுகிறது. 

இந்த வரையறைக்குப் பின்னர், எதை 
வேண்டுமானாலும் பொருளின் கணக்கில்
சேர்க்கலாம் என்ற நிலைமை முடிவுக்கு
வந்து விடுகிறது. பட்டா ஒருவன் பெயரில்
என்றாலும் பாத்தியதை பலருக்கு என்ற
அவலம் முடிவுக்கு வருகிறது. இனிமேல்
பட்டா எவருக்கோ அவருக்கு மட்டுமே
பாத்தியதை என்பது உறுதி செய்யப்பட்டு
விடுகிறது.

வள்ளி தெய்வானை சமேதராய் முருகன்,
ராதா கிருஷ்ணன், ஆதி சிவன்,பெருமாள்,
கர்த்தர், கர்த்தபர், அல்லா, குல்லா, முல்லா,
புல்லா என்றுள்ள அனைத்து விதமான
கசடுகளும் (all scums) இனி யார் எவராலும்
பொருளாகக் கருதப்பட முடியாது.

மானசீகமான இருப்பை மட்டுமே
(presence in one's mind only) கொண்டிருக்கிற கடவுள்கள்
தேவதைகள் பேய் பிசாசுகள் முனிகள் உள்ளிட்ட
யாவும் பருப்பொருளின் மாளிகையில் இருந்து
நிரந்தரமாக அடித்து விரட்டப் படுகின்றன.

"பொருள் என்னடா பொருள்? பொருளுக்கு
மானசீக இருப்பு மட்டுமே உண்டு" என்று
கொக்கரித்த ஆதிசங்கரர்  தலைமறைவாகி
விடுகிறார்.

பொருள்முதல்வாதமானது பௌதிக இருப்பு
இல்லாத விஷயங்களையும் பொருளாகக்
கருதுகிறது; அந்த விதத்தில் பொருள்முதல்
வாதம் ஓர் அரை அத்வைதமே (semi Advaida) என்று
அத்வைதிகள் இனி வாதம் செய்ய முடியாது.

எஸ் என் நாகராஜன், ஞானி போன்றோர்,
புதிய கான்டியவாதிகள் (Neo Kantians) மற்றும்
கான்டிய விலகல் (Kantian deviation) உடையவர்கள்
இத்தியாதி நபர்களின் தர்க்கம் தூக்குப்
போட்டுக் கொள்கிறது. சுருங்கக் கூறின்,
ஆதிசங்கரர் இரண்டாம் முறையாக இறந்து
விடுகிறார்.

பௌதிக இருப்பு என்னும் இந்த வரையறை
முற்ற முழுக்க நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு
மட்டும் சொந்தமானது. It is our/my brain child).
இதற்கு வேறு எவரும் சொந்தம் கொண்டாடி
விடக்கூடாது.

பொருளின் பௌதிக இருப்பு என்னும் எமது
வரையறை பொருள்முதல்வாதத்திற்கு ஒரு
பங்களிப்பு என்பதை நியூட்டன் அறிவியல்
மன்றம் மிகுந்த  தன்னடக்கத்துடன் தெரிவித்துக்
கொள்கிறது. இதை peer reviewக்கு சமர்ப்பிக்கிறேன்.
இது தவறு என்றால், கருத்தியல் ரீதியாக
எவரும் அதை நிரூபிக்கலாம்.

கணித மொழியில் இந்த வரையறை ஒரு
தேற்றமாகக் கருதப்படும் (a theory). சமகால
அறிவியலில் தற்போது ஒரு மரபு நிலவுகிறது.
எவர் ஒருவர் எந்த ஒரு அறிவியல் கொள்கையை
முன்வைத்தாலும், அது FALSIFIABLE ஆக
இருக்க வேண்டும்;(Any scientific theory must be falsifiable)
எனவே எந்தெந்தச் சூழலில் அக்கொள்கை
தவறாகி விடும் என்பதையும் அக்கொள்கையை
முன்வைப்பவர் கூறவேண்டும்.

எனவே இந்த மரபைப் பின்பற்றி, பின்வரும்
சூழலில் பௌதிக இருப்பு என்னும் எமது
கொள்கை தவறாகி விடும் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறோம்.
1. மானசீக இருப்பு உடையதும் பொருள்
 என்பதற்கு சான்று கிட்டும்போது.
2. பௌதிக இருப்பு இல்லாததும் பொருள்
என்பதற்குச் சான்று கிட்டும்போது.

முற்றிலும் அறிவியல் வழியில் எமது வரையறையை
முன்வைக்கிறோம். வசவுகள், அவதூறுகளைத்
தவிர்த்து விட்டு, கருத்தியல் ரீதியாக எமது
வரையறையைத் திறனாய்வு செய்யலாம்.

மார்க்சியம் என்பது மதமல்ல. மார்க்சியர்கள்
என்பவர்கள் ஜெய்னுலாப்தீன்கள் அல்லர்.
அல்லாஹு அக்பர் என்பது போல் மார்க்சுஹு
அக்பர் என்று கோஷமிடுவது மார்க்சியம் அல்ல.
மார்க்சிய அமைப்புகள் ஜமாத்தும் அல்ல. இந்தப்
புரிதல் உடையவர்கள் மட்டுமே மார்க்சியர்கள்.

எமது வரையறை மார்க்சியத்திற்கு திருத்தம்
முன்மொழிவதல்ல. மாறாக பொருள்முதல்
வாதத்தில் ஒரு வரையறையைச் சேர்க்கிறோம்.
பொருள்முதல்வாதம் என்பது மார்க்சியம்
பயன்படுத்தும் ஒரு கருவி (tool). இந்தக் கருவியை
நன்கு சாணை பிடித்துக் கூர்மையாக்கி
மார்க்சியத்திடம் ஒப்படைக்கிறோம். இது
மார்க்சியத்துக்கு எதிரானது என்ற கூச்சல்கள்
அர்த்தமற்றவை; விடலைத் தனமானவை.

பொருள்முதல்வாதம் ஓர் அறிவியல் தத்துவம்.
இத்தத்துவத்திற்கு ஓர் அறிவியல் வரையறையைச்
சேர்ப்பதற்கு நியூட்டன் அறிவியல் மன்றத்திற்கு
உரிமையும் அருகதையும் உண்டு.
***************************************************