திங்கள், 10 டிசம்பர், 2018

தீக்கதிர் குமரேசனுக்கு மறுப்பு!
மின்னம்பலம் இணைய இதழில்
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் மறுப்புக் கட்டுரை!
-------------------------------------------------------------------------------------------
மின்னம்பலம் இணைய இதழில் (06.12.2018)
வெளியான கட்டுரை இது!
சாதி பொருள்முதல்வாதம் ஆகும் என்ற தோழர்
குமரேசனின் கருத்தை மறுத்து எழுதப்பட்ட கட்டுரை.

வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
-------------------------------------------------------------
இக்கட்டுரையில் சாதியம் குறித்த மரபார்ந்த
மார்க்சியப் பார்வையை மட்டுமே  வெளிப்படுத்தி
இருக்கிறேன். இது பொதுத்தளத்தில் அனைத்து
வாசகர்களுக்குமான கட்டுரை.

மார்க்சியத்தை ஆழமாகக் கற்ற தோழர் தியாகு
உள்ளிட்ட சிலருடன் முகநூலில் நடைபெற்ற,
நடைபெறும் விவாதத்தில் முன்வைத்த கருத்துக்களை
இக்கட்டுரையில் கூறவில்லை.

சாதி ஒரு மேற்கட்டுமானம் என்றும்
சாதிக்கு பொருளாயத அடிப்படை உண்டு என்றும்
இக்கட்டுரை கூறுகிறது. இது மார்க்சிய
வட்டாரத்தில் இன்று நிலவுகிற ஏற்கப்பட்ட கருத்து.
எனினும் ஏற்கப்பட்ட இந்தக் கருத்துக்கு அப்பால்
சென்று சில உண்மைகளைக் கூற வேண்டும்.
அதை இந்தக் கட்டுரை கூறவில்லை.

விவாதம் முற்றுப்பெற்ற பின்னரே, சாதியம்
குறித்த புதிய கருத்துக்களை எழுத   இயலும்.

விரும்புவோர் படிக்கலாம்.
**********************************************************

அறிவு கருத்து சிந்தனை ஆகிய எல்லாம்
மூளை என்ற பொருளில் இருந்து உருவாகின்றன.
மூளை என்பது சிந்திக்கும் உறுப்பு என்றார்
லெனின்.

அறிவு, மனம் ஆகியவை பொருள் அல்ல.
அவை கருத்தே.

பொருள்  என்பதற்கான மரபார்ந்த மார்க்சிய
வரையறை மிகவும் நெகிழ்ச்சியாகவும்
தாராளத்தன்மை உடையதாகவும் இருப்பதாலேயே
இத்தகைய சந்தேகங்கள் எழுகின்றன.

ஒரு விஷயம் கருத்தா பொருளா என்று அறிவதற்கான
ஒரே வழி அதற்கு பௌதிக இருப்பு உண்டா என்ற
கேள்வியைக் கேட்பதுதான். அறிவு, கருத்து, சிந்தனை 
ஆகியவற்றுக்கு இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில்
எவ்விதமான இருப்பும் இல்லை. அவை மனிதர்களின்
மனதில் குடிகொண்டு இருக்கின்றன.

இதன் மூலம், பொருளின் வரையறையில் "பௌதிக
இருப்பு" (physical existence) என்னும் அம்சத்துக்கு உரிய
முக்கியத்துவம் தெரியவரும். 
------------------------------------------------------------------------------------
நான் சொல்லாத ஒன்றை எனது கருத்தாக
வலிந்து புனைந்து கொண்டு எழுதப்பட்ட மறுப்பு!
--------------------------------------------------------------------------------------
////நிறை இருப்பே பொருளின் வரையறை என்பதே 
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கருத்து.//// என்று 
கூறுகிறார் தோழர் மதியவன் இரும்பொறை.
இது முற்றிலும் உண்மைக்குப் புறமானது.
அப்படி நான் கூறவே இல்லை.

பௌதிக இருப்பு (physical existence) என்பதே பொருளின்
வரையறையாகும் என்பதும் லெனின் கூறிய
"பொருள் என்பது புறநிலை யதார்த்தம் "
(objective reality) என்ற லெனினின் வரையறையுடன்
இதைச் சேர்க்க வேண்டும் என்பதே நான்
வலியுறுத்தும் கருத்து.

பௌதிக இருப்பு வேறு; நிறை இருப்பு வேறு.
நிறை என்பது அறிவியலில் mass என்ற பொருளில்
ஆளப் படுகிறது. பௌதிக இருப்பு என்று நான்
மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக்
கொண்டிருக்கும்போது, நிறை இருப்பு என்று
திரிப்பதில் நியாயம் இல்லை என்பதை
வாசகர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்.

ஒரு துகளைச் சுட்டும்போது, அதன் நிறையைக்
கொண்டு சுட்டுவது அறிவியலில் பழங்கால
நடைமுறை. இன்று துகள் இயற்பியலில்
(particle physics) ஒரு துகளை எவ்வாறு அடையாளப்
படுத்துகிறார்கள்? உதாரணமாக, ஹிக்ஸ் போஸான்
என்ற துகளைப் பற்றி அறிவியல் எப்படி
எழுதுகிறது? இதோ பாருங்கள்.
"A new particle with a mass of 125 GeV was discovered in 2012" 
இந்த வாக்கியத்தில் mass என்பது மில்லி கிராம் போன்ற 
நிறுத்தல் அளவுகளில் சொல்லப்படவில்லை. மாறாக 
கிக்கா எலக்ட்ரான் வோல்ட் என்ற ஆற்றலின் அலகில் 
(unit of energy) குறிப்பிடப் படுகிறது. ஆக நிறை (mass)
என்பதன் அலகே மாறிவிட்டது.  

எனவே தோழர் மதியவன்  இரும்பொறை அவர்கள் 
நான் என்ன கூறியிருக்கிறோனோ அதற்கு மறுப்புத் 
தரலாம். நான் கூறாத ஒன்றை, அவரே தம் 
கற்பனையில் எடுத்துக்கொண்டு மறுப்புத் தருவது 
அவரின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக