செவ்வாய், 28 நவம்பர், 2017

கெப்ளரின் விதிகளை அறிவோம்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
( முந்தைய பதிவில் உள்ள கணக்கும் அதன் விடையும்)
------------------------------------------------------------------------------------------------
சரியான விடையும் விளக்கமும்!
----------------------------------------------------------
சூரியனில் இருந்து பூமி 15 கோடி கி.மீ
தூரத்தில் உள்ளது. இதில் பாதி தூரத்தில்
பூமி இருப்பதாக கற்பனை செய்தால்,
ஓராண்டு எத்தனை நாட்களைக் கொண்டதாக இருக்கும்?

தற்போது ஓராண்டுக்கு 365 நாள் என்று கொள்க.
---------------------------
விடை: 129 நாட்கள்.
விளக்கம்: இந்தக் கணக்கை கெப்ளரின் Law of periods
விதியைக் கொண்டு செய்ய வேண்டும்.
**
Law of periods: The square of the period of revolution of any planet is
proportional to the cube of the planet's mean distance from the sun.
Therefore, T^2 is directly proportional to R^3.
**
சூரியனைச் சுற்றுகிற எந்த ஒரு கோளின்
சுழற்சிக்காலத்தின் வர்க்கமானது, சூரியனுக்கும்
அக்கோளுக்கும் உள்ள சராசரி தூரத்தின்
மும்மடிக்கு நேர்விகிதப் பொருத்தத்தில் இருக்கும்.
இதுதான் மேற்கூறிய கெப்ளரின் விதியின் தமிழாக்கம்.
**
இப்போது கணக்கைச் செய்யலாம்.
சூரியன்-பூமி தூரம்= R என்க. (R = 15 கோடி கி.மீ= 1 AU)
காலம் = Time Period=  T என்க. (T = 365 நாட்கள்)
சூரியன்-பூமி புதிய தூரம் = a என்க (a = 7.5 கோடி கி.மீ = 0.5 AU)
இதற்கான காலம் = b என்க. (இதைக் கண்டறிய வேண்டும்).
**
கெப்ளரின் விதிப்படி,
b^2 /T^2 = a^3/R^3
b^2/ 365^2 =  0.5^3/1^3
On simplifying we get, b= 129 days.
எனவே, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்
பாதியாகக் குறையுமானால், ஒரு ஆண்டு என்பது
129 நாட்களாக இருக்கும்.
*********************************************************   
   


ஞாயிறு, 26 நவம்பர், 2017

(3) உபரி மதிப்புக்கு தோல்வி என்பதே கிடையாது!
விமர்சனங்களின் முதுகெலும்பை முறிக்கும் பதில்!
-----------------------------------------------------------------------------------------
1) மார்க்சியப் பொருளாதாரத்தின் உயிர் எது?
அது உபரி மதிப்புக் கோட்பாடுதான்.மார்க்சியப்
பொருளாதாரத்தில் இருந்து உபரி மதிப்பை
நீக்கி விட்டால், அது உயிரற்ற உடலாகி விடும்.

2) "மார்க்சின் மகத்தான பங்களிப்புகள் இரண்டு.
ஒன்று: உபரி மதிப்பு; மற்றொன்று வரலாற்றியல்
பொருள்முதல்வாதம்"  என்கிறார் எங்கல்ஸ்.

3) எங்கல்ஸ் கூறுவது முழுவதும் உண்மை. ஏனெனில்
உபரி மதிப்பும், வரலாற்றியல் பொருள்முதல்வாதமும்
மார்க்சுக்கு முன் இருக்கவில்லை. அவை முழுக்க
முழுக்க மார்க்சின் கண்டுபிடிப்புகள்.

4) மார்க்சுக்கு முன்பு சோஷலிசம் இருந்தது. பிரான்சு
நாட்டில் புருதோன் என்பவரால் சோஷலிசம் பேசப்பட்டது.
இங்கிலாந்தின் சோஷலிஸ்டுகள் ஃபேபியன் சோஷலிசம்
(fabian socialism) என்பதை முன்வைத்தனர்.இவ்வாறு
சோஷலிசமும், பொருள்முதல்வாதமும், இயங்கியலும்,
ஏன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட மார்க்சுக்கு முன்னரே
இருந்தன.  

5) ஆனால் மார்க்சுக்கு முன்பு உபரி மதிப்பு என்பதே
கிடையாது. வரலாற்றை பொருள்முதல்வாத நோக்கில்
அணுகுவது என்பதும் மார்க்சுக்கு முன்பு எவருடைய 
சிந்தையிலும் தோன்றியதே கிடையாது. எனவே
எங்கல்ஸின் கூற்று உண்மையே அன்றி வெறும்
புகழ்ச்சியில்லை.

6) மார்க்சுக்கு முந்திய சோஷலிசம்  எல்லாம்
குட்டி முதலாளியத் தன்மை வாய்ந்ததாகவும் நடைமுறை  சாத்தியமற்ற கற்பனையானதாகவும்
இருந்தது. ஆனால் மார்க்சின் சோஷலிசம் மட்டும்
மெய்யானதாகவும் நடைமுறைப் படுத்தக்
கூடியதாகவும் இருந்தது. (சோவியத்திலும்
சீனத்திலும் நடைமுறைப் படுத்தப் பட்டதைக்  .
கருதுக).எனவே மார்க்சின் சோஷலிசம் விஞ்ஞான
சோஷலிசம் எனப் பெயர் பெற்றது. இதனால்தான்
கனவுகளின் இடத்தில் விஞ்ஞானத்தை வைத்தவர்
என எங்கல்ஸ் மார்க்ஸைப் புகழ்ந்தார்.

7) முதலாளியம் எப்படிச் சுரண்டுகிறது, முதலாளிகள்
எப்படிப் பணம் சேர்க்கிறார்கள் என்ற ரகசியத்தின்
திறவுகோலாக மார்க்சின் உபரி மதிப்பு திகழ்கிறது
என்று குறிப்பிட்டார் எங்கல்ஸ். (இக்கட்டுரையில்
விளக்கப்பட்டுள்ள எங்கல்ஸின் கூற்றுகள் யாவும் 
Socialism: Utopian and scientific என்ற நூலில் உள்ளவை)

8) ஆக, உபரி மதிப்பு என்பது மார்க்சியப்
பொருளாதாரத்தின் உயிர் என்பதை உணர்ந்த
எதிரிகள் குறி பார்த்து அதன் மீது கத்தியைப்
பாய்ச்சுகிறார்கள். 

9)  இந்த எதிரிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள
வேண்டும். முதலாளித்துவம் என்பது ஒரு சிஸ்டம்.
ஒரு அமைப்பு முறை. இதன் தவிர்க்க இயலாத
இரண்டு கூறுகள் மூலதனமும் உபரி மதிப்பும்.
இவை ஒரே சிஸ்டத்துக்குள் இயங்குபவை.
இரட்டைத் தன்மை வாய்ந்தவை (binary).
ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. என்றாலும்
ஒரே சிஸ்டத்துக்குள்தான் இவை இரண்டும்
இருந்தாக வேண்டும்.  முதலாளித்துவம் என்ற
சிஸ்டம் இருக்கும் வரை, இந்த இரண்டும்
இருந்துதான் தீரும்.

10) "எதிரிடைகளின் ஒற்றுமை" (unity of opposites) என்று
ஒரு விதி உண்டு. இது ஒரு இயங்கியல் விதி ஆகும்.
(It is a dialectical law). ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு
விஷயங்கள் ஒரே அமைப்புக்குள் இருப்பதைக்
கூறும் விதி இது. இந்த விதிப்படியே மூலதனமும்
உபரி மதிப்பும் (அல்லது) முதலாளிகளும்
தொழிலாளிகளும் ஒரே அமைப்புக்குள்
இருக்கின்றனர்.

11) எனவே இந்த இயங்கியல் விதிப்படி, இவ்விரண்டில்
ஒன்று வெளியேறி இன்னொன்று மட்டும் முதலாளிய அமைப்புக்குள் இருக்க இயலாது. இருந்தால் இரண்டும்
இருந்தாக வேண்டும். எனவே உபரி மதிப்பு மட்டும்
காலாவதி ஆவதும், அதே நேரத்தில் மூலதனம்
மாற்றமின்றி நீடிப்பதும் என்பது சாத்தியமற்றது.

12) அதாவது முதலாளிய அமைப்பு முறை நீடிக்கும்
வரை உபரி மதிப்பும் நீடிக்கும். எப்போது
முதலாளித்துவ உற்பத்தி முறை முடிவுக்கு
வருகிறதோ அப்போதுதான் உபரி மதிப்பும்
முடிவுக்கு வரும். எனவே உபரி மதிப்புக் கோட்பாடு
தோற்று விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.

13) கி.பி 1776இல் ஜேம்ஸ் வாட் நீராவி எஞ்சினைக்
கண்டு பிடித்தார். இதைத் தொடர்ந்து தொழிற்புரட்சி
வேகம் எடுத்தது. இதன் பிறகு இரண்டு நூற்றாண்டுகள்
கழித்து உலகில் தொழில்நுட்பப் புரட்சி (technological
revolution) ஏற்பட்டது. அதிநவீன தானியங்கி எந்திரங்கள்,
கணினிகள், ரோபோக்கள் என்று உற்பத்திக் கருவிகள்
பேரளவில் வளர்ச்சி அடைந்தன.

14) பயோ டெக்னாலஜி, ஜெனெடிக் இன்ஜீனியரிங்,
நானோ டேகினாலஜி என்று நுட்பமான தொழில்நுட்பப் 
புரட்சியும் ஏற்பட்டது. சுருங்கக் கூறின், இந்த
மில்லேனியத்தின் தொடக்கத்தில் மனித சமூகம்
மொத்தமும் புரட்சிகரமான தொழில்நுட்ப
சகாப்தத்துக்குள் நுழைந்து விட்டன.

15) இதனால் எல்லாம் உபரி மதிப்பு தோல்வி அடைந்து
விட்டது என்று எவராலும் கூற இயலாது. ஒரு லட்சம் பேர் 
செய்துவந்த வேலையைச் செய்யக்கூடிய ஒரு
தானியங்கி எந்திரத்தை முதலாளிகள் வாங்கலாம்.
மனிதர்களுக்குப் பதில் எந்திரத்தை வைத்து
உற்பத்தியையும் நடத்தி விடலாம். ஆனால் இத்துடன்
முதலாளிய உற்பத்திமுறை என்னும் சர்க்யூட்
பூர்த்தி அடைந்து விடுவதில்லை.

16) உற்பத்தியான பொருட்கள் விற்கப்பட்டால்
மட்டுமே சர்க்யூட் பூர்த்தியாகும். பொருட்கள்
விற்பனையாக வேண்டும் என்றால், அதற்கான
சந்தை தேவை. சந்தை என்றால் "வாங்கும் சக்தி"
என்று பொருள்.(market means purchasing power). அதாவது
வாங்கும் சக்தி உடைய மக்களைக் கொண்டதே
சந்தை ஆகும். லட்சக் கணக்கான தொழிலாளிகளை
வேலை தராமல் தெருவில் வீசி எறிந்து விட்ட
பிறகு, சந்தை இருக்குமா? அழிந்து போய் இருக்கும்.

17) சந்தை இல்லாமல் போவதால், பொருட்கள் தேங்கும்.
இதனால் தடையற்ற தொடர்ச்சியான உற்பத்தி
நின்று போகும். ஆக மொத்தத்தில் முதலாளிய
உற்பத்திமுறை முடங்கிப் போகும்.

18) எனவே உபரி மதிப்பை முற்றிலும் பூஜ்யமாக்க
மூலதனத்தால் இயலாது. அப்படிச் செய்யுமானால்,
அது மூலதனத்தின் தற்கொலைப் பாதையாகும்.

19) எந்திரங்கள், கருவிகள், நிலம் ஆகியவற்றில்
செலுத்தப்படும் மூலதனத்தை மார்க்ஸ் நிலையான
மூலதனம்  (constant capital) என்று அழைக்கிறார். இந்த
நிலையான  மூலதனத்திலும் உழைப்பு மறைந்து
கிடக்கிறது என்கிறார் அவர். எனவே தானியங்கி
எந்திரம் உருவாக்கும் உபரி என்பது உழைப்பின்
உபரியே.

20) எனவே எந்தெந்த வழிகளில் முயன்றாலும்
உழைப்பு என்பதை எந்த நிலையிலும் தவிர்க்க
முடியாது. உழைப்பு இருக்கும்வரை உபரி
மதிப்பும் இருக்கும். முதலாளிய உற்பத்தி முறை
இந்த உலகில் இருக்கும் வரை உபரி மதிப்பும்
கூடவே இருக்கும். எனவே உபரி மதிப்புக்கு
தோல்வி என்பதே கிடையாது.
 ======================================================= 
  
           
  

சனி, 25 நவம்பர், 2017

(2) உபரி மதிப்புக் கோட்பாடு தோற்று விட்டதா?
மார்க்சியம் கூறும் பதில்! எளிமையான விளக்கம்!
----------------------------------------------------------------------------------
1) எங்கள் ஊரில் ஒரு தொழிற்சாலை வருகிறது.
அலுமினியப் பாத்திரங்கள் தயாரிக்கும் ஆலை
அது. ஆலைக்காக 50 ஏக்கர் நிலத்தை வாங்கிப்
போட்டுள்ளார் முதலாளி. ஆலைக்கான
கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டன.எந்திரங்களும்
கருவிகளும் வந்து இறங்கி விட்டன.

2) ஆலையில் வேலை செய்ய 100 பேர் தேவை. அந்த
நூறு பேரையும் முதலாளி தேர்ந்தெடுத்து விட்டார்.
ஒரு நல்ல நாளில் ஆலை இயங்கத் தொடங்கி விட்டது.

3) ஓராண்டு முடிவில் ஆலையில் உற்பத்தியான
அத்தனை கலன்களும் (vessels) சந்தையில் விற்றுத்
தீர்ந்து விட்டன. முதலாளிக்கு நல்ல லாபம் கிடைத்தது.
அந்த லாபத்தில் முதலாளி பக்கத்து ஊரில் இருந்த
ஒரு ஃபாக்டரியை விலைக்கு வாங்கி விட்டார். அதை
அவர் மகன் பார்த்துக் கொள்கிறான்.

4) முதலாளிக்கு எப்படி பணம் சேர்ந்தது? இன்னொரு
மில்லை வாங்கும் அளவுக்கு அவருக்கு எப்படி
செல்வம் சேர்ந்தது? அலுமினிய ஆலை காரணமாக
செல்வம் சேர்ந்தது என்றால், அந்தச் செல்வம் ஏன்
ஆலையில் வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு
கிடைக்கவில்லை?

5) முதலாளி முதல் போட்டார். நிலம், கட்டிடம், எந்திரம்
கருவிகள் எல்லாம் வாங்கினார். எனவே லாபத்தை
அவர் எடுத்துக் கொண்டார். இதுதான் சொல்லப்
படுகிற பதில்.

6) காரல் மார்க்ஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
நிலமும் கட்டிடமும் எந்திரங்களும் லாபத்தை
உருவாக்கவில்லை. லாபத்தை உருவாக்கியது
100 தொழிலாளர்களின் உழைப்பே என்றார் மார்க்ஸ்.  

7) நிலமும் எந்திரங்களும் நிச்சயமாக மூலதனம்தான்.
இதை "நிலையான மூலதனம்" (constant capital) என்றார்  
மார்க்ஸ். இது லாபத்தை உருவாக்கவில்லை. நிலையான
மூலதனத்தால் லாபத்தை உருவாக்க இயலாது
என்கிறார் மார்க்ஸ். அதை நிரூபித்தார்.

8) இந்த உதாரணத்தில் முதலாளிக்கு ரூ 10 லட்சம்
லாபம் கிடைத்ததாக வைத்துக் கொள்வோம்.
இதை லாபம் என்று புரிந்து கொள்ளாமல்
"உபரி மதிப்பு" (surplus value) என்று புரிந்து கொள்வோம்.

9) இந்த உபரி மதிப்பான ரூ 10 லட்சமும் 100
தொழிலாளர்களின் உழைப்பால் விளைந்தது.
எனவே அந்த ரூ 10 லட்சத்தையும், 100 தொழிலாளருக்குப்
பிரித்துக் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம்.

10) ஆனால், அந்த ரூ 10 லட்சத்தையும்  முதலாளியே
அபகரித்துக் கொள்கிறார். இதற்குப் பெயர்தான்
சுரண்டல் என்பது.

11) ஆக, உபரி மதிப்பை உருவாக்கியது யார்?
100 தொழிலாளர்கள். எப்படி உருவாக்கினார்கள்?
இந்த 100 தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியே
(labour power) உபரி மதிப்பை உருவாக்கியது என்றார்
மார்க்ஸ்.

12) இதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறை.
இந்த முறை இருக்கிற வரைக்கும் உபரி மதிப்பு
என்பது உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.
அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

13) சரி, நவீன தொழில்நுட்பம் தொழிற்சாலையில்
புகுத்தப் படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த 100 தொழிலாளர்கள் செய்யும் வேலையை
ஒரே ஒரு எந்திரம் (sophisticated machine) செய்து விடுகிறது
என்று வைத்துக் கொள்வோம்.

14) அப்போது என்ன நடக்கும்? 100 தொழிலாளிகளையும்
வேலையை விட்டு நீக்கி விடுவார் முதலாளி.
(தொழிற்சங்கம் போராடினால் ஏதேனும் நஷ்ட ஈடு
கொடுப்பார் முதலாளி. அவ்வளவுதான்)

15) "இப்போது உபரி மதிப்பு ஏற்படுவதில்லை; ஏனெனில்
உபரி மதிப்பு என்பதே தொழிலாளியால்,
தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியால்
ஏற்படுகின்ற ஒன்று. இங்கு தொழிலார்களே
இல்லாத நிலையில், அவர்கள் எப்படி உபரி மதிப்பை
உருவாக்க முடியும்?" என்கின்றனர் மார்க்சின்
விமர்சகர்கள்.

16) "தற்போது ஆலையில் கிடைத்திருப்பது லாபம் ஆகும்.
இது முதலாளிக்கு மட்டுமே சொந்தம். இதில்
தொழிலாளிக்கு எந்த சட்டபூர்வ உரிமையும் இல்லை;
ஏனெனில்  இதை தொழிலாளியின் உழைப்புச் சக்தி உருவாக்கவில்லை" என்கின்றனர் மார்க்சின் விமர்சகர்கள்.

17) ஆக, நவீன தொழில்நுட்பமானது மார்க்ஸ்
கண்டு பிடித்துக் கூறிய உபரி மதிப்பு என்னும்
கோட்பாட்டை வீழ்த்தி விட்டது என்கின்றனர்
மார்க்சின் விமர்சகர்கள்.

18) இதற்கு மார்க்சியத்தின் விடை என்ன?
அடுத்துக் காண்போம். (தொடரும்)
*******************************************************
இக்கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையைப்
படித்து விட்டீர்களா? படியுங்கள்.





  
(1) காரல் மார்க்சின் உபரி மதிப்புக் கோட்பாடு
காலாவதி ஆகி விட்டதா? உண்மை என்ன?
-------------------------------------------------------------------------------
1) உபரி மதிப்புக் கோட்பாடு (theory of surplus value)
முதலாளியப் பொருள் உற்பத்தி முறை நிலவும்
ஒரு சமூகத்தில் நிலவும் கோட்பாடு.

2) முதலாளியப் பொருள் உற்பத்தி முறை நீடிக்கும்
வரை, உபரி மதிப்புக் கோட்பாடும் நீடிக்கும்.

3) ரிக்கார்டோவின் வாரக் கோட்பாடு இன்றளவும்
நீடிக்கிறதா? அல்லது காலாவதி ஆகி விட்டதா?
காலாவதி ஆகவில்லை என்பது தெளிவு.

4) இதைப் போலவே உபரி மதிப்புக் கோட்பாடும்
காலாவதி ஆகவில்லை; நீடிக்கிறது இதுவே உண்மை.  

5) என்றாலும், உபரி மதிப்பு காலாவதி ஆகி விட்டது
என்ற குரல்கள் இன்று ஓங்கி ஒலிக்கின்றன. இவற்றில்
தர்க்க வலிமையே இல்லை என்று ஒதுக்கி விட முடியாது.
எளிய தர்க்கத்துடன்தான் இந்த எதிர்ப்புக் குரல்கள்
ஒலிக்கின்றன. அசுரத் தனமான தொழில்நுட்ப
வளர்ச்சியும், சர்வ வியாபகம் ஆகி வருகின்ற
கணினிமயமும் மார்க்சிய எதிர்ப்பாளர்களால்
சுட்டிக் காட்டப் படுகின்றன.

6) எனவே மார்க்சிஸ்டுகள் இவற்றுக்குப்
பதிலளிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.
தெரியாத கேள்வியை சாய்ஸில் விடும் பள்ளி
மாணவன் போலநடந்து கொள்கிறவர்கள்
மார்க்சிஸ்டுகள் அல்லர். ஏனெனில் இது
compulsory question. விடையளிக்காவிட்டால்
மதிப்பெண் இழப்பு ஏற்படும். எனவே மார்க்சியம்
இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது.

7) மூல ஆசான்கள் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின்
ஆகியோரின் நூல்களில், எதிர் வாதங்களுக்கு
பதிலளித்த நூல்களே (polemical writings) மிகுதி!

8) இங்கு பொருளாதாரம் பற்றிய ஒரு முக்கியமான
விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதார விதிகள் யாவும் இயற்பியல் விதிகள்
போன்றோ  கணித விதிகள் போன்றோ முற்றிலும்
துல்லியமானவையாக இருப்பதில்லை. மேலும்
இயற்பியல் விதிகளுக்கு உரிய பிரபஞ்சத் தன்மை
பொருளியல் விதிகளுக்கு இல்லை.

9) ஆயின், பொருளியல் விதிகள் எப்படிப்பட்டவை?
அவை வெறுமனே ஒரு போக்கைச் சுட்டிக் காட்டுபவை.
Economic laws are hypothetical tendencies! Just that is all.
எங்கும் எதிலும் எப்போதும் எந்தச் சூழலுக்கும்
பொருந்தும் பிரபஞ்சத்தன்மை உடைய (universal)
முற்றிலும் சரியான விதி எதுவும் பொருளியலில்
கிடையாது. இது பொருளியல் கொள்கைகள்
அனைத்துக்கும் பொருந்தும்.
Every law of economics has its own limitations.

10) இந்தச் சூழலை மனதில் கொண்டுதான் உபரி
மதிப்புக் கோட்பாடு பற்றிய விமர்சனத்தைக்
கையாள வேண்டும்.

11) இந்தப் பீடிகையுடன் உபரி மதிப்புக் கோட்பாட்டின்
செல்லுபடித் தன்மை என்ற பிரதான விஷ்யத்துக்குள்
செல்லலாம். (கட்டுரை அடுத்த பதிவில்; இன்று இரவில்
வெளியாகும்)
************************************************************



    


அன்றே கூறினார் ஆர்ய பட்டர்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
ஆர்ய பட்டர் கூறிய piன் மதிப்பு = 3.1416.
இது மூன்று தசம இடங்கள் வரை சரியாக உள்ளது.
pi = 3.14159265 என்று முடிவுறாமல் செல்லும்.

ஆர்ய பட்டரின் பின்வரும் சூத்திரம் piன் மதிப்பை
கணக்கிடுவது என்று கூறுகிறது.

1) 4 என்ற எண்ணைக் கருதுக. (4)
2) இதை 100உடன் கூட்டுக.(104)
3) இதை 8ஆல் பெருக்குக. (104x8= 832)
4) இதை 62000 என்ற எண்ணுடன் கூட்டுக. (832+62000=62832)
5) இந்த 62832 என்பது விட்டத்தின் அளவு 20000 கொண்ட
ஒரு வட்டத்தின் சுற்றளவு ஆகும்.
( pi x 20000 = 62832)
6) எனவே pi = 62832 divided by 20000
= 3.1416/

ஆர்ய பட்டர் கூறிய மதிப்பு = 3.1416
நவீன மதிப்பு = 3.1415

ஆர்ய பட்டர் கூறியது கி.பி 499இல். தாம் கூறிய மதிப்பு
தோராயமானதே என்றும் அவர் கூறியிருந்தார்.
இச்செய்தி அவரின் ஆர்ய பட்டியம் என்ற நூலில் உள்ளது.
*****************************************************    

தை மகளின் கை விரல்களை
வெண்டைப்பிஞ்சுகள் என
மயங்கினான் மாமன்னன்.
pi = 3.14159265.....
இது ஒரு நினைவுகூரும் வாக்கியம்.

இவ்வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும்
எத்தனை எழுத்து உள்ளதோ அதைக் கொண்டு
pi ன் மதிப்பை நினைவு கூரலாம். இது நல்ல அழகான
வாக்கியம்தான். என்றாலும் வேறு ஒரு வாக்கியத்தை
உருவாக்க முயல்கிறேன். காரணம், தமிழ் தெரியாத பல
மூதேவிகள் "வெண்டைப்பிஞ்சுகள்" என்று எழுதுவதே
சரி என்று அறியாமல் வெண்டை என்றும் பிஞ்சு என்றும்
பிரித்து விட்டால் பிழை ஏற்படும். இதைத் தவிர்க்கவே
வேறு ஒரு வாக்கியத்தை உருவாக்க விழைகிறேன்.

நுகர்வுக் கலாச்சாரத்தின் தந்தை ஓஷோ!
உதிரி விடலைகளின் ஆசான் ஓஷோ!
--------------------------------------------------------------------------.
ஓஷோ அறிவாளிதான். மறுப்பதற்கில்லை.
ஒரு அறிவாளிதான் ஒரு theoreticianஆக இருக்க
முடியும். அவருடைய தியரி என்ன
என்பதும் அது சமூகத்துக்கு பயனுள்ளதா, சமூகத்தை
மேம்படுத்துமா என்றுமே பார்க்க வேண்டும்.

ஓஷோ இறந்து விட்டார். அவர் இறந்து 25 ஆண்டுகள்
ஆகின்றன.மிகப்பெரும் நுகர்வுக் கலாச்சாரத்தை
ஓஷோ சென்ற இடமெல்லாம் விதைத்தார்.
காம நுகர்வே பேரின்பம், பெருங்கடமை என்றார்.
ஆடம்பர வாழ்வே லட்சியம் என்கிறார்.
பிரம்மாணடமான ஆடம்பரத்துடன் வாழ்ந்தார்.
இந்தியாவின் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடித்தளம்
இட்டவர் ஓஷோவே. எனவே அவர்தான் இந்தியாவின்
வெறுக்கத்தக்க நுகர்வுக் கலாச்சராத்தின் தந்தை.


காந்தியத்துக்கு நேர் எதிரானது ஓஷோவின் சித்தாந்தம்.
மகாத்மா காந்தி நுகர்வு மறுப்பைப் போதித்தார்.
தாம் போதித்தபடி வாழ்ந்து காட்டினார். சுதந்திரம்
அடைந்த பின்னரும் ஒரு தலைமுறை முழுவதுமே
இந்திய மக்களை பொறுத்தமட்டில், நுகர்வு மறுப்புச்
சிந்தனையைப் பற்றி ஒழுகியது. மகாத்மா காந்தியின்
இந்த நுகர்வு மறுப்புச் சிந்தனையின் மீது முதன் முதலில் கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறையிலும்
(in theory and practice) கத்தியைப் பாய்ச்சியவர் ஓஷோவே.

காந்தியைப் போலவே மாவோவும் தீவிரமான
நுகர்வு மறுப்பாளர். நுகர்வு மறுப்புச் சிந்தனையை
மொத்த சீனத்தின் தேசியக் கோட்பாட்டாக
வளர்த்து எடுத்தவர் மாவோ. ஓஷோ மார்க்சியத்தை
எதிர்த்தார். ஆனால் மாவோவின் கம்யூன்
முறையிலான கூட்டு வாழ்க்கையை அறிமுகம் செய்தார்.
 
மாவோ பாணியில் ஓஷோ கம்யூன்களை
ஏற்படுத்தியதன் நோக்கம் கூட்டுக்கலவியை
மேற்கொள்ளவே. கலவிக் கூச்சம், கலவித்தடைகள்
ஆகியவற்றைத் தகர்த்து எறிந்தார் ஓஷோ. இதுவே
அவரின் வாழ்நாள் சாதனை.

இதுதான் தனது சித்தாந்தம் என்று அடையாளம்
காட்ட இயலாத அளவுக்கு,  முரண்பட்ட பல்வேறு
தத்துவங்களில் இருந்து அவற்றின் சில பல
கூறுகளை எடுத்துக் கொண்டு  ஓஷோ தமது சொந்த சித்தாந்தத்தை உருவாக்கினார். இதனால்
இதுதான் அவரின் கொள்கை என்று
திட்டவட்டமாக எந்த ஒன்றையும் சுட்ட முடியாமல்
போனது. ஓஷோவின் சித்தாந்தமானது பல்வேறு
தத்துவங்களின் காக்டெயில் ஆகும்.

இதன் காரணமாக, எந்த ஒரு தத்துவத்தையும்
முறையாகப் பயின்று, அதற்கு தம்மை ஒப்புக்
கொடுக்க விரும்பாத உதிரி விடலைகளின்
கூட்டம் ஓஷோவைத் தலையில் வைத்துக்
கொண்டாடியது. இன்றும் கொண்டாடி வருகிறது.
*******************************************************


சோவியத் புரட்சிக் கவிஞன்
மாயா காவ்ஸ்கி தற்கொலை செய்து இறந்தார்!
-----------------------------------------------------------------------------------








 

அத்வைதத்தின் நவீன வடிவங்களும்
ஆதிசங்கரரின் புதிய அவதாரங்களும்!
-------------------------------------------------------------------------
முன்குறிப்பு: மார்க்சியப் பார்வையில் அத்வைதம் என்ற
வெளிவரவிருக்கும் நூலில் இருந்து ஒரு கட்டுரை இது!
-----------------------------------------------------------------------------------------------------
1970களில் இந்தியாவில் இரண்டு ஆன்மிகவாதிகள்
மிகவும் பிரபலம். ஒருவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (1895-1986).
இன்னொருவர் ஆச்சார்ய ரஜனீஷ் (1931-1990).

இருவரில் ரஜனீஷ் இளையவர். இருவருமே பிரிட்டிஷ்
ஆட்சிக்காலத்தில் பிறந்தவர்கள். இருவரும் உலகம்
முழுவதும் சுற்றி தங்கள் சித்தாந்தத்தைப்
பரப்பியவர்கள். இருவருக்கும் அமெரிக்க சீடர்கள்
அதிகம். அமெரிக்காவில் ஆசிரமம் நடத்தியவர்
ரஜனீஷ்.

இந்த ஆச்சார்ய ரஜனீஷ்தான் பின்னாளில் ஓஷோ
என்று அழைக்கப்பட்டார்.ஓஷோ என்ற சமஸ்கிருதச்
சொல்லுக்கு ஆசான் என்று பொருள்.

ஓஷோ ஒரு கருத்துமுதல்வாதி. சிந்தனைக்கு கட்டற்ற
சுதந்திரத்தை அவரின் சித்தாந்தம் அளிக்கிறது.
அந்த வகையில் ஆதிசங்கரரின் அத்வைதத்திற்கு
இவரின் சித்தாந்தம் மிக நெருக்கமாக வரும்.

நிலவுடைமைச் சமூக காலத்தைச் சேர்ந்த கீழ்த்திசைத்
தத்துவங்கள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் நுகர்வு
மறுப்பை வலியுறுத்தும். அதற்கு மாறாக, ஓஷோவின்
தத்துவம் நுகர்வை, இன்ப நுகர்ச்சியை தீவிரமாக
வலியுறுத்துகிறது. பாலியல் வேட்கை, பாலியல்
உறவுகள் ஆகியவை மிகவும் அழுத்தத்திற்கு
உட்படுத்தப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் கொந்தளிப்பு
நிலவும் என்கிறார் ஓஷோ. எனவே பாலியல்
சுதந்திரம் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும்
என்று வலியுறுத்தினார் ஓஷோ. கழிபெருங்காமம்,
கட்டற்ற பாலுறவு ஆகியவற்றை அவர் ஆதரித்தார்.
இதன் காரணமாக செக்ஸ் சாமியார் என்று பெயர்
பெற்றார்.

ஒருபுறம் மனதின் கட்டற்ற சுதந்திரத்தை வலியுறுத்திய
ஓஷோ, மறுபுறம் கட்டற்ற இன்ப நுகர்ச்சியை
வலியுறுத்தினார். இதன் மூலம் கருத்துமுதல்
வாதம், பொருள்முதல் வாதம் ஆகிய இரண்டின்
விசித்திரமான ஒரு கலவையை உருவாக்கினார்.
இதுவே அவரின் சித்தாந்தம் ஆகும்.

மேலும் மஹாயான புத்தமதம் கூறும் கருத்துமுதல்
வாதம்,  நீட்ஷேயின் தத்துவங்கள் ஆகியவற்றின்
செல்வாக்கும் இவரின் சித்தாந்தத்தில் உண்டு.
A rare blend of various philosophical thoughts is Oshoism!

ஆதிசங்கரரைப் போலவே ஓஷோவும் மதங்களை
எதிர்த்தார்; சடங்குகளை எதிர்த்தார். சங்கரரைப் போல
ஓஷோவும் கடவுளுக்கு பெரிய முக்கியத்துவம்
எதையும் அளிக்கவில்லை. பொருள் என்பதையே
முற்றிலுமாக மறுத்த ஆதிசங்கரரைப் போல்
அல்லாமல், ஓஷோ பொருளின் பங்கை
மறுக்கவில்லை. இதனால் ஓஷோவின் தத்துவத்தில்
அப்பாலைத் தன்மைக்கு இடமில்லை. இதன்
காரணாமாக ஓஷோவின் சிந்தனைகள் அவரின்
மரணத்திற்குப் பின்னரும் மடிந்து விடாமல்
உள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஒரு கல்லூரியில் தத்துவப்
பேராசிரியராகப் பணியாற்றிய ஓஷோ, வேலையைத்
துறந்து முழுநேர ஆன்மிகவாதியாக மாறிய பின்னர்
கணக்கற்ற நூல்களை எழுதி உள்ளார்.

இருக்கின்ற அமைப்பை மாற்ற முடியாது என்ற
கொள்கையைப் போதித்தவர் ஓஷோ. மார்க்சியத்தை
சோஷலிஸ்ட் கொள்கைகளை எதிர்த்தார் ஓஷோ.
கிறிஸ்துவ மதத்தை முற்றிலுமாக  எதிர்த்தவர் ஓஷோ.
ஏசு கிறிஸ்து கிருஷ்ணரின் அவதாரமே என்று ஓஷோ
கூறியதால் அமெரிக்காவில் அவரால் தொடர்ந்து
நீடிக்க முடியவில்லை.

ஓஷோவின் அமெரிக்க ஆசிரமம் ஓரிகானில்
இருந்தது. பெரும் ஆடம்பர வாழ்க்கையை
மேற்கொண்டவர் ஓஷோ. வருஷம் 365 நாளுக்கும்
365 ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்து காட்டினார்
ஓஷோ. அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அமெரிக்கக்
கோடீஸ்வரர் ராக்பெல்லர் ஆகியோருக்கும் கூடக்
கிட்டாத வாழ்வு இது.

அவரின் அமெரிக்க ஆசிரமம் பல்வேறு குற்றச்
செயல்கள் நடக்கிற இடமாக இருந்தது. கொலை,
கொலை முயற்சி, கொலைக்கான சதித்திட்டம்
ஆகிய குற்றச் செயல்களுக்காக ஓஷோ அமெரிக்கச்
சிறையில் அடைக்கப் பட்டார். பின்னர்
விடுதலையானார்.உலகின் பல நாடுகள் அவரைத்
தம் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தன.
இறுதியில் தம் 58ஆவது வயதில் இறந்தார்.

அரியானவைச் சேர்ந்த சாமியார் ராம் ரஹீம்
என்பவர் பல்வேறு காமக் களியாட்டங்கள்,
கற்பழிப்புக் குற்றங்களுக்காக  தற்போது சிறையில்
அடைக்கப் பட்டுள்ளார். இவரெல்லாம் ஓஷோவின்
தத்துவத்தால் ஈர்க்கப் பட்டவரே.

ஓஷோவின் தத்துவம் எப்படிப்பட்ட பின்விளைவுகளை
ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு ராம் ரஹீம்
ஒரு உதாரணம். இன்றைக்கு மார்க்சிய எதிர்ப்புக்கு
ஓஷோ பெரிதும் பயன்படுகிறார். அத்வைதம்
காலத்துக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக்
கொள்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக ஓஷோவின்
தத்துவம் உள்ளது.
***************************************************************** 
ocean என்ற சொல்லில் இருந்து ஓஷோ என்ற சொல்
வந்ததாக ஒரு கருத்து உள்ளது. எனினும் ஓஷோவின்
ஆதரவாளர்கள் பெரும்பான்மையினர் இதை ஏற்றுக்
கொள்ளவில்லை. தம் பெயருக்கு அவர்  அத்தகைய
விளக்கத்தை ஒருபோதும்  அளித்ததில்லை என்றும்
கூறப்படுகிறது. இந்த விவரங்கள் முழுக்கட்டுரையில்
உள்ளன. இது சுருங்கிய முகநூல் பதிவு.
**
ஓஷோவின் பேச்சும் எழுத்துக்களுமே கணக்கற்ற
தொகுப்பு நூல்களாக உள்ளன. இவையே அவர் எழுதிய
நூல்களாக இங்கு குறிப்பிடப் படுகின்றன.  


பாலுறவில் உச்சம் அடைவதை ஓஷோ தீவிரமாக
வலியுறுத்தினார். அந்த உச்ச நிலையை (climax)
அவர் உச்சகட்ட யோகநிலை என்று வர்ணித்தார்.
அதை அடையாத பாலுறவு பயனற்றது என்றார்.

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் ஓஷோவின்
செக்ஸ் பற்றிய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு
அதை வெகுவாக சிலாகித்தவர். அவர் மடத்தை விட்டு
ஓடுவதற்கு அதுவும் ஒரு காரணம் என்று அப்போது
சொல்லப்பட்டது.
 

 ....என்று சொல்லப் .படுகிறது. யாசர் அராபத்துக்கும்
கதிரியக்கத் தன்மை உடைய பொலோனியம் நஞ்சு
கொடுக்கப் பட்டது என்றும் கூறப் படுகிறது.
Conspiracy theories are never finite; they are always infinite.



  

வியாழன், 23 நவம்பர், 2017

அதிமுக பாஜக பாமக தேமுதிக புதிய தமிழகம்
கூட்டணி உருவாகிறது. திமுக CPI CPM காங்

அதிமுக (166) பாமக (23)  பாஜக (20)
தேமுதிக (15) மதிமுக  (6) புதிய தமிழகம் (4).
இதுவே அதிமுக கூட்டணி! எடப்பாடி முதல்வர் வேட்பாளர்!  

கூட்டணியின் முக்கிய அம்சங்கள்:
--------------------------------------------------------------
1) மதிமுக அதிக இடம் கேட்டால், கழட்டி விட முடிவு.
2) வாக்கு சதவீத அடிப்படையில் பாமகவே இரண்டாம்
கட்சி என்ற அந்தஸ்த்தைப் .பெறுகிறது.
3) பாமக, பாஜக கட்சிகளை விட தேமுதிகவுக்கு
சீட் குறைவு. இதற்கு ஒத்துக்கொண்டு சலாம்
போடுவதைத் தவிர தேமுதிகவுக்கு வேறு வழியில்லை.

இதுதான் அதிமுக கூட்டணியின் blue print. இதன் மீதுதான்
விவாதம் நடந்து வருகிறது.

அரசியலில் பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.
அதில் இது ஒரு ஆப்ஷன். இதன் மீது விவாதம்
நடந்து வருகிறது. இது உண்மை.


திமுக  கூட்டணியில் சேர்க்கச் சொல்லி
துரைமுருகனிடம் மார்க்சிஸ்ட் பிரமுகர்கள்
கெஞ்சல்! கோபத்தில் தகாத வார்த்தை பிரயோகித்த  ன்
துரைமுருகன்!

தொண்டர்களின் உணர்வை மனநிலையை
அப்படியே பிரதிபலித்த துரைமுருகனுக்கு
தொண்டர்கள் பாராட்டு!


லாரியில் அடிபட்டுச் செத்துப்போன
மக்கள் நலக் கூட்டணி!
---------------------------------------------------------------
1) திமுக அதிமுக இல்லாத தமிழகம்
என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சிகள்
(CPI, CPM) இன்று திமுகவுடன் கூட்டணிக்காக
நாயாய் அலைவது ஏன்?

2) தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து
துரைமுருகன் திட்டி அவமானப் படுத்தியபோதும்
அமைதி காத்தது ஏன்?

3) "எங்கள் நிலைபாட்டில் மாற்றம் இல்லை; கடந்த
2019 தேர்தலில் எடுத்த அதே நிலையை இப்போதும்
எடுக்கிறோம். திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை"  
என்று CPI, CPM கட்சிகள் அறிவிக்குமா?

4) தலையால் தண்ணீர் குடித்தாலும் ஸ்டாலின்
உங்களுக்கு தலா 6  சீட்டுக்கு மேல் தரப்போவதில்லை.

5) மக்கள் நலக் கூட்டணி என்ன  ஆனது? ஏன் அது தேர்தல்
லாரியில் அடிபட்டுச் செத்துப் போனது?
*************************************************************

RK நகர் இடைத்தேர்தலில்
வலியப்போய் திமுகவுக்கு ஆதரவு
கொடுக்க நாயாய் அலையும் கட்சிகள்!
கண்டு கொள்ளாத ஸ்டாலின்! 
   

திமுகவை ஒழிப்போம் என்று கூறித் தேர்தலில்
நின்று படுதோல்வி அடைந்த பிறகு, இன்று திமுக
கூட்டணியில் சேர்க்கச் சொல்லிக் கெஞ்சும்
கபோதிகளிடம் கண்ணியமாகவா பேச முடியும்?
மகாத்மா காந்தியாக இருந்தாலும் தகாத வார்த்தை
பேசுகிற இடமல்லவா (context) அது! எனவே துரைமுருகன்
பேசியதில் என்ன தவறு? 


புதன், 22 நவம்பர், 2017

பாயாசம் சூடு ஆறும் கணக்கு:
விடையும் விளக்கமும்!
---------------------------------------------------
1) நியூட்டனின் கூலிங் விதியைப் பார்த்தோம்.
அதை ஒரு ஃ பார்முலாவாக மாற்றியதையும்
பார்த்தோம்.
2) இக்கணக்கைச் செய்ய வேண்டுமெனில் மேலும் சில
 விவரங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
**
3) ஃபார்முலாவில் உள்ள e^minus kt என்பதில் உள்ள
k ஒரு cooling constant ஆகும். இது சூடாக உள்ள பொருளைப்
பொறுத்து மாறும். இங்கு பாயாசத்தின் cooling constant
k = 0.08 என்று எடுத்துக் கொள்வோம். மேலும் இத்தகைய
கணக்குகளில் கருதப்படும் வழக்கமான ASSUMPTIONS
அத்தனையையும் நாமும் இங்கு கருதுகிறோம்.
**
4) கால்குலேட்டரில் அல்லது TABLESல் இருந்து
தேவையான ln (natural logarithm) மதிப்புகளை எடுத்துக்
கொண்டு கணக்கைச் செய்யவும்.
5) அதன்படி, கிடைக்கும் விடை:
t = 9.8 minutes ஆகும்.

பின்குறிப்பு: இந்தக் கணக்கில் அறை  வெப்பநிலையை
விட பாயாசத்தை வெப்பநிலை அதிகம். எனவே
பாயாசமானது வெப்பத்தை இழக்கும். அதனால் e^ minus kt
என்று ஃபார்முலா சொல்கிறது. மாறாக, பொருளின்
வெப்பம் அறையின் வெப்பநிலையை விடக் குறைவாக
இருந்தால், the constant will be positive.   
***************************************************************


செவ்வாய், 21 நவம்பர், 2017

எங்கல்ஸ் போன பிறகு வந்த ஒரு உள்ளூர்
மார்க்சியவாதி என்ன படிக்கிறாய் என்றார்,
புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். " தேவையில்லாமல்
ஏன் mathsஐ படிக்கிறீர்கள், தோழரே, இது நேர
விரயம் அல்லவா?" என்றார்.
**
"Every fool is fully convinced" என்ற ஆங்கிலப்
பழமொழி நினைவுக்கு வரவே, சரி என்று
ஆமோதித்து வைத்தேன். தோழரும் புறப்பட்டுச்
சென்றார். அவருக்கு அவசரம். ஆம், அவர்
பொருள்முதல்வாத வகுப்பு எடுக்கப் போய்க்
கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட மார்க்சியர்கள்
இருந்தால், கி.பி 3017இல் கூட, இந்தியாவில்
மார்க்சியம் வராது என்கிறார் உடனிருந்த நண்பர்.
------------------------------------------------------------------------------

இதுதான் நியூட்டனின் கூலிங் விதி!(Newton's law of cooling)
-----------------------------------------------------------------------------------------------
ஒரு பொருளின்  வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமானது
அப்பொருளின் வெப்பநிலைக்கும் அதன் சுற்றுப்புறத்தின்
வெப்பநிலைக்கும் உள்ள வேறுபாட்டுக்கு நேர்விகிதப்
பொருத்தத்தில் இருக்கும்.

predicate calculus என்பது கணிதத்தின் நவீனப் பிரிவு.
இது இயங்கியலில் உள்ள தர்க்கத்தை
அறிவியல் வழியில் அணுகுவது.
XII CBSE Business mathsல் இது பாடம். 

Lambda calculus என்பது கணினி  programல்  பிரபலம்.
பயன்படுகிறது. predicate calculus என்பது
தர்க்கவியல். இவை நவீன கணிதப் பிரிவுகள். வை தை
மார்க்சியர்கள் கற்க வேண்டிய . வேண்டும்

   

திங்கள், 20 நவம்பர், 2017

first தலைமுடியை அடையாறு ஆலமரம் அளவு
பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கி!
வேதியியல் நோபல் பரிசு 2017!
----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
இதற்கு மேல் சாதிக்க எதுவுமில்லை என்ற அளவுக்கு
நுண்ணோக்கித் தொழில்நுட்பத்தில் உச்ச அளவிலான
சாதனை புரிந்துள்ளனர் வேதியியல் அறிஞர்கள்.
பொருளை அதன் மிக அடிப்படையான அளவில்
(the most fundamental level), அதாவது அணுக்களின் மட்டத்தில்
பார்க்கக் கூடிய நுண்ணோக்கி உருவாக்கப் பட்டுள்ளது.

உயிரி மூலக்கூறுகளை  (bio molecules), அதாவது
உயிர்ப்பொருள்களின் சாம்பிளை நுண்ணிய  ஆங்ஸ்ட்ராம் மட்டத்தில் (10^minus 10) பார்ப்பது, தற்போது கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துடன் கூடிய எலக்ட்ரான் நுண்ணோக்கியால் சாத்தியமாகி உள்ளது.

ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியில் உயிரற்ற பொருளின் சாம்பிளைப் பார்ப்பதற்கும் உயிருள்ள பொருளின்
சாம்பிளைப் பார்ப்பதற்கும் இடையில் பாரதூரமான
வேறுபாடு உள்ளது. உயிருள்ள பொருளின் மூலக்கூறான
புரதத்தை எடுத்துக் கொள்வோம். இது சவ்வு (membrane)
போன்ற ஒரு பொருளால் மூடப்பட்டு ஈரப்பதத்துடன்
இருக்கும். எலக்ட்ரான் நுண்ணோக்கியில் சாம்பிளை
வைக்கும் சிற்றறையில் வெற்றிடம் இருக்கும். இந்த
வெற்றிடத்தில் வைக்கப்படும் சாம்பிள் தனது நீர்த்தன்மையை
இழந்து உலர்ந்து விடும். இதன் காரணமாக,
நுண்ணோக்கியில் கிடைக்கும்  உருவத்தில் (image)
புரதத்தின் கட்டமைப்பு (structure) தாறுமாறாக மாறிப்
போயிருக்கும். இப்படிக் கிடைக்கும் உருவங்களால்
எப்பயனும் இருக்காது. உயிரற்ற பொருளின் சாம்பிளை
நுண்ணோக்கியில் பார்ப்பதில் இத்தகைய இடையூறுகள் கிடையாது.

உயிரிப் பொருட்களை அணுவின் மட்டத்தில் (atomic level)
காட்ட வல்ல நுண்ணோக்கி ஒரு கனவாகவே இருந்தது.
அத்தகைய நுண்ணோக்கியை நோக்கி, உயிரி வேதியியல் (biochemistry) நெடுங்காலமாகத் தவம் இருந்து வந்தது.
புரதம் போன்ற உயிரி மூலக்கூறுகளின் முப்பரிமாணக்
கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (structural changes)
மூலமாகவே உயிரியல் செயல்பாடுகள் நிகழ்கின்றன.
புரதக் கட்டமைப்பு மாற்றங்களை அறிய முடியாமல், அதைக்
காட்ட வல்ல நுண்ணோக்கி இல்லாமல், உயிரிவேதியியலின்
மூலக்கூறு இயங்கியல் (molecular dynamics) வெகு காலமாக
முடங்கிக் கிடந்தது. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள
எலக்ட்ரான் நுண்ணோக்கியால் உயிரிவேதியியலில்
புதிய சகாப்தம் பிறந்துள்ளது. ஒரு மூலக்கூற்றை,
ஒரு செல்லை அதன் மூலை முடுக்கிலெல்லாம்
தற்போது பார்க்க முடியும். அது எப்படி நகர்கிறது
என்பதையும் பார்க்க முடியும். ஆக, இந்தக் கண்டுபிடிப்பு   உயிரிவேதியியலில் ஒரு மாபெரும் புரட்சியை
நிகழ்த்தி உள்ளது.

எனவே இச்சாதனையை நிகழ்த்திய
அ) ஜாக்குவாஸ் டுபோச்செட்
ஆ) ஜோக்கிம் ஃபிராங்க்
இ) ரிச்சர்ட் ஹெண்டர்சன்
ஆகிய மூன்று அறிஞர்களுக்கு 2017க்கான வேதியியல்
நோபல் பரிசு சமமாகப் பிரித்து வழங்கப் படுகிறது.

உயிரற்ற பொருளும் உயிர்ப் பொருளும்!
-----------------------------------------------------------------------------
இந்த இடத்தில் ஒரு வரலாற்று உண்மையைக் கருத்தில்
கொள்ள வேண்டும். உலகின் முதல் எலக்ட்ரான் நுண்ணோக்கியைக் கண்டு பிடித்தவர் எர்னஸ்ட் ரஸ்கா
(Ernst Ruska) என்னும் ஒரு  இயற்பியல் அறிஞர். இதற்காக
1986க்கான இயற்பியல் நோபெல் பரிசு இவருக்கு
வழங்கப்பட்டது. இருப்பினும் உயிர்ப் பொருட்களை
அதாவது உயிரி மூலக்கூறுகளை (புரதம், கார்போ
ஹைட்ரேட், நியூக்ளிக் அமிலம், கொழுப்பு போன்றவை)
எர்னஸ்ட் ரஸ்கா கண்டுபிடித்த எலக்ட்ரான் நுண்ணோக்கியால்
பார்க்க இயலவில்லை.

இதில் உள்ள வெற்றிடத்தில் வைக்கப்படும் உயிரிப் பொருளின் சாம்பிளானது நீர்த்தன்மையை இழந்து விடுவதால் உருவம் சரிவரக்  கிடைப்பதில்லை என்பதை முன்னரே பார்த்தோம். மேலும்
தீவிரமான எலக்ட்ரான் கதிர்கள் சாம்பிள் மீது செலுத்தப்
படுவதால் சாம்பிள் அழிந்து விடுகிறது. இக்காரணங்களால்
புழக்கத்தில் ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கி இருந்த போதிலும்,
உயிரிப் பொருள்களை ஆராய அது பயன்படவில்லை.
அது உயிரற்ற பொருட்களை ஆராய  மட்டுமே பயன்பட்டது.
எனவே உயிரிப் பொருட்களை ஆராய வல்ல ஒரு புதிய
எலக்ட்ரான் நுண்ணோக்கியைக் கண்டுபிடிக்க வேண்டிய
இன்றியமையாத தேவை இருந்து வந்தது. தற்போது அத்தேவை
நிறைவு செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு வகை நுண்ணோக்கிகள்!
--------------------------------------------------------------
பரிசு பெற்ற மூவரும் இணைந்து கண்டுபிடித்த எலக்ட்ரான்
நுண்ணோக்கி கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துடன்
கூடிய ஊடுருவும் நுண்ணோக்கி (cryo travelling microscope) ஆகும்.

எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பிரதானமாக இரண்டு
வகை உண்டு. 1) அலகிடும் நுண்ணோக்கி (Scanning Electron Microscope)
2) ஊடுருவும் நுண்ணோக்கி (Travelling Electron Microscope).

நோபெல் பரிசு பெற்ற அறிஞர்கள் கண்டுபிடித்தது ஊடுருவும்
நுண்ணோக்கி (TEM) ஆகும். இதில் எலக்ட்ரான் கதிர்கள்
(electron beams) கொடுக்கப்பட்ட சாம்பிள் மீது  ஊடுருவிச்
செல்லும் (pass through the sample). இதற்கு மாறாக, அலகிடும்
நுண்ணோக்கியில் (SEM) எலக்ட்ரான் கதிர்கள் சாம்பிளின்
மேற்பரப்பை அலகிடும். இதன் மூலமாக சாம்பிளின்
டோப்போகிராபியும் அதன் சேர்க்கையும்
(topography and composition) தெரியவரும்.

ஒரு நுண்ணோக்கியில் இரண்டு அம்சங்கள் அதன் தரத்தைத்
தீர்மானிப்பவை. அவை: 1. வேற்றுமைப் படுத்தல் (resolution)
2. உருப்பெருக்கம் (magnification)

சாம்பிளில் உள்ள பாகங்களில், ஒன்றில் இருந்து மற்றொன்றை
துலக்கமாக வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமைப்படுத்தல் (resolution) எனப்படும். இதில் SEM 0.4 நானோ மீட்டர்  resolution தரும்.
ஆனால் TEM 0.5 ஆங்ஸ்ட்ராம் resolution தரும்

SEM  வகையில், 1 லட்சம் மடங்கு முதல் 10 லட்சம் மடங்கு வரையிலான  உருப்பெருக்கம் (magnification) தரும்
கருவிகள் உண்டு.

TEM வகையில் 5 லட்சம்  மடங்கு முதல் 1 கோடி மடங்கு வரை உருப்பெருக்க  வல்ல கருவிகள் உண்டு. அதிக உருப்பெருக்கம் கருவிகளின் தயாரிப்பைப் பொறுத்தது.

நமது தலைமுடியை ஆற்றல் மிக்க TEM  வகை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தால், அடையாறு ஆலமரம் அளவுக்கு பெரிதாகத் தெரியும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம்!
---------------------------------------------------------------
மிகவும் தாழ்ந்த வெப்பநிலைகளில் பொருட்கள் (materials)
எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது பற்றி அறியும் துறையே
கிரையோஜெனிக்ஸ் (cryogenics) ஆகும். கிரையோஜெனிக்
தன்மை வாய்ந்த பொருட்கள் பற்றி நாம் அறிவோம்.
திரவ நைட்ரஜன் அத்தகைய ஒரு பொருள் ஆகும். வாயு
நிலையில் உள்ள நைட்ரஜன்  திரவமாக்கப் பட்டு .
வெகுவாகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்
பட்டிருக்கும். மேலும் ஹீலியம்-3, ஹீல்சியம்-4 ஆகியவையும்
கிரையோஜெனிக் பொருட்களே.

நமது வேதியியல் அறிஞர்கள் உருவாக்கிய எலக்ட்ரான்
நுண்ணோக்கியில் மைனஸ் 196 டிகிரி செல்சியசுக்கு
குளிர்விக்கப்பட்ட திரவ நைட்ரஜன் பயன்பட்டது. எனவே
இது கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படுவதாகும்.

நுண்ணோக்கிகளின் வரலாறு!
--------------------------------------------------------
நுண்ணோக்கிகளின் கடந்த கால வரலாற்றை நாம்
அறிந்திருந்தால் மட்டுமே இந்த நிகழ்காலச் சாதனையின்
மாண்பை உணர முடியும். ஆரம்ப கால நுண்ணோக்கி
என்பது ஒரே ஒரு உருப்பெருக்கும் வில்லையை (lens)
கொண்டிருக்கும்.  இத்தகையவை எளிய நுண்ணோக்கிகள்
(simple microscope) ஆகும். இவை "ஒரு வில்லை, ஒரு உருவம்"
(one lens one image) என்ற அடிப்படையில் செயல்படுபவை.

1590 வாக்கில்தான் கூட்டு நுண்ணோக்கிகள் (compound microscopes)
வர ஆரம்பித்தன. இவற்றில் இரண்டு லென்சுகள் உண்டு.
ஒன்று பொருளுக்கு அருகிலும் மற்றொன்று கண்ணுக்கு
அருகிலும் இருக்கும். இதில் இரண்டு உருவங்கள் கிடைக்கும்.
"இரண்டு லென்சுகள் இரண்டு உருவங்கள்" என்ற
அடிப்படையில் இவை செயல்படும்.

நுண்ணோக்கிகள் பிரதானமாக இரண்டு வகைப்படும்.
1. ஒளியியல் நுண்ணோக்கி (optical microscope).
2. எலக்ட்ரான் நுண்ணோக்கி (electron microscope).
ஒளியியல் கருவிகள் ஒளியைப் பயன்படுத்துபவை.
அதாவது  காணுறு ஒளியை (visible light). காணுறு ஒளியின்
அலைநீளம் நிறத்தைப் பொறுத்து அமையும். சாதாரணமாக,
600 நானோமீட்டர் அலை நீளமுள்ள ஒளி இங்கு பயன்படும்.
அலைநீளத்தைப் பொறுத்தே அளக்கிற பொருளின்
துல்லியம் அமையும். அதாவது பயன்படுத்துகிற
ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான
அலைநீளம் உள்ள பொருளைத் துல்லியமாக
அளக்க முடியாது.

இதற்கு மாறாக, எலக்ட்ரான் நுண்ணோக்கியில்
ஒளிக்குப் பதிலாக எலக்ட்ரான்கள் பயன்படுத்தப்
படுகின்றன. பொதுவாக இவற்றில் பயன்படும்
எலக்ட்ரானின் அலைநீளம் 6 பிக்கோ மீட்டர்.
(1 pico meter = 10^minus 12 meter). எனவே எலக்ட்ரான்
நுண்ணோக்கியால் துல்லியமாக அளக்க இயலும்.

தண்ணீரைக் கண்ணாடியாக மாற்றிய அதிசயம்!
----------------------------------------------------------------------------------------
பல சவால்களைக் கடந்துதான் பரிசு பெற்ற இந்த
TEM வகை நுண்ணோக்கி உருவாக்கப் பட்டிருக்கிறது.
தேவையான அளவு உருப்பெருக்கம் வேண்டுமெனில்,
நுண்ணோக்கியில் விளிம்பு விளைவு (diffraction) என்னும்
இயற்பியல் நிகழ்வு போதிய அளவு நடைபெற வேண்டும்.
அப்போதுதான் சாம்பிளின் உள்ளே ஒளி புகுந்து, அதன்
எல்லாப் பாகங்களையும் நன்கு புலப்படுத்தும்.

ஒளியின் பாதையின் ஒரு தடை குறுக்கிட்டால்,
அத்தடையின் ஓரங்களில் ஒளி வளைந்து செல்வதே
விளிம்பு விளைவு (diffraction) ஆகும்.

நல்ல படிகத்தன்மை ( crystalline) உடைய ஒரு சாம்பிளை
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் வைத்துப்
பார்த்தால், அதில் போதிய அளவு விளிம்பு விளைவு
ஏற்படுவதில்லை. ஒவ்வொரு உயிரி மூலக்கூற்றிலும்
(bio molecule) தண்ணீர் இருக்கிறது இந்தத் தண்ணீர்
பனிக்கட்டியாக மாறிய பிறகு, அது  கறாரான
படிக அமைப்பைப் பெற்று விடுகிறது. இது எலக்ட்ரான்
கதிர்களை (electron beams) சீர்குலைத்து விடுகிறது.
இதனால்  விளிம்பு விளைவு போதிய அளவு .நிகழ்வதில்லை.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க, தண்ணீரை
பனிக்கட்டியாக (ice) மாற்றுவதற்குப் பதில்,
அதை கண்ணாடியாக (glass) மாற்ற விஞ்ஞானி
ஜாகுவாஸ் டுபோசெட் (Jacques Dubochet) முடிவு
செய்தார்.

கண்ணாடி திடத்தன்மை (solid) கொண்டிருக்கும்.
என்றாலும் அது படிகம் அல்ல.  உண்மையில் அது
ஒரு பாய்மமே. (பாய்மம்= fluid). மூலக்கூறுகள்
ஒழுங்கற்ற தன்மையில் வரிசை குலைந்து இருப்பதால்
அது படிகத் தன்மை அடைவதில்லை. தண்ணீர் படிகமாக
மாறாமல், கண்ணாடியாக மாற வேண்டுமெனில்
அதை வேகமாகக் குளிர்விக்க வேண்டும்
(rapid cooling).இதற்கு திரவ நைட்ரஜன் பயன்படும்.

இவ்வாறு தண்ணீரைக் கண்ணாடியாக மாற்றி,
அந்த சாம்பிளை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் வைத்துப்
பார்த்தபோது, அது ஒரு சீராக விளிம்பு விளைவு அடைந்தது. .       

தண்ணீர் இயல்பாகக் குளிர்ந்தால்
(normal cooling or slow cooling) அது ஐஸ்கட்டியாகி விடும்.
தண்ணீர் வேகமாகக் குளிர்விக்கப் பட்டால்
(rapid cooling) அது கண்ணாடி ஆகும். இவ்வாறு தண்ணீரைக்
கண்ணாடியாக ஆக்கும் முறை vitrification எனப்படும்.

சிலிகான் டை ஆக்சைடில் இருந்து தயாரிக்கப்படும்
கண்ணாடி பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.
இங்கு கண்ணாடி என்பது vitrified water என்று பொருள்படும்.
கண்ணாடி என்றால், படிகத்  தன்மையற்ற
(non crystalline with disordered state of  molecules) ஒழுங்கற்ற
நிலையில் இருக்கும்மூலக்கூறுகளால் ஆனது என்று பொருள்.
தண்ணீரை இவ்வாறு கண்ணாடியாக மாற்றுவது
vitrification method ஆகும். இந்த பூமி முழுவதும் உள்ள
தண்ணீரில் பெரும்பகுதி கண்ணாடித் தண்ணீர்தான்.
அதாவது vitrified waterதான்.   

TEM வகை நுண்ணோக்கிகளில் இரண்டு பரிமாணம்
உடைய உருவங்கள்தான் கிடைக்கும். (SEM வகையில்
முப்பரிமாண உருவங்கள் கிடைக்கும்). முப்பரிமாண
உருவங்களைப் பெறுவதற்காக உருவச் செயல்பாடு
(image processing) என்னும் உத்தியைக் கண்டறிந்தார்
பரிசு பெற்ற இன்னொரு விஞ்ஞானியான ஃபிராங்க்.
கணித முறையைப் பயன்படுத்தி,  கணினியின்
மூலம் முப்பரிமாண உருவங்களை உருவாக்கினார்.

மூன்றாவது விஞ்ஞானியான ரிச்சர்டு ஹெண்டர்சன்
1990இல் முதன் முதலாக ஒரு புரத மூலக்கூற்றின்
அணு மட்டத்திலான உருவத்தை (image) உருவாக்கினார்.
முன்னதாக 15 ஆண்டுகளுக்கு முன்பே,
இதற்கான ஒரு மாதிரியை வடிவமைத்து இருந்தார்.
15 ஆண்டு உழைப்பின் பயனை இறுதியில் அவர் அடைந்தார்.

இவ்வாறு உயிரி மூலக்கூறுகளை அணு மட்டத்தில்
ஆராய்ந்து முப்பரிமாண உருவங்களைத் தரும்
இந்த எலக்ட்ரான் நுண்ணோக்கி மேற்கூறிய மூன்று
விஞ்ஞானிகளின் கூட்டுப் படைப்பு. எனவே பரிசு
 மூவருக்கும் சமமாகப் பங்கிடப் பட்டது.
*******************************************************     




தலைமுடியை அடையாறு ஆலமரம் அளவு
பெரிதாக்கிக் காட்டும் நுண்ணோக்கி!
வேதியியல் நோபல் பரிசு 2017!
----------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------
இதற்கு மேல் சாதிக்க எதுவுமில்லை என்ற அளவுக்கு
நுண்ணோக்கித் தொழில்நுட்பத்தில் உச்ச அளவிலான
சாதனை புரிந்துள்ளனர் வேதியியல் அறிஞர்கள்.
பொருளை அதன் மிக அடிப்படையான அளவில்
(the most fundamental level), அதாவது அணுக்களின் மட்டத்தில்
பார்க்கக் கூடிய நுண்ணோக்கி உருவாக்கப் பட்டுள்ளது.

உயிரி மூலக்கூறுகளை  (bio molecules), அதாவது
உயிர்ப்பொருள்களின் சாம்பிளை
நுண்ணிய  ஆங்ஸ்ட்ராம் மட்டத்தில்
(10^minus 10) பார்ப்பது, தற்போது கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துடன் கூடிய எலக்ட்ரான் நுண்ணோக்கியால் சாத்தியமாகி உள்ளது.

ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியில் உயிரற்ற பொருளின் சாம்பிளைப் பார்ப்பதற்கும் உயிருள்ள பொருளின்
சாம்பிளைப் பார்ப்பதற்கும் இடையில் பாரதூரமான
வேறுபாடு உள்ளது. உயிருள்ள பொருளின் மூலக்கூறான
புரதத்தை எடுத்துக் கொள்வோம். இது சவ்வு (membrane)
போன்ற ஒரு பொருளால் மூடப்பட்டு ஈரப்பதத்துடன்
இருக்கும். எலக்ட்ரான் நுண்ணோக்கியில் சாம்பிளை
வைக்கும் சிற்றறையில் வெற்றிடம் இருக்கும். இந்த
வெற்றிடத்தில் வைக்கப்படும் சாம்பிள் தனது நீர்த்தன்மையை
இழந்து உலர்ந்து விடும். இதன் காரணமாக,
நுண்ணோக்கியில் கிடைக்கும்  உருவத்தில் (image)
புரதத்தின் கட்டமைப்பு (structure) தாறுமாறாக மாறிப்
போயிருக்கும். இப்படிக் கிடைக்கும் உருவங்களால்
எப்பயனும் இருக்காது. உயிரற்ற பொருளின் சாம்பிளை
நுண்ணோக்கியில் பார்ப்பதில் இத்தகைய இடையூறுகள் கிடையாது.

உயிரிப் பொருட்களை அணுவின் மட்டத்தில் (atomic level)
காட்ட வல்ல நுண்ணோக்கி ஒரு கனவாகவே இருந்தது.
அத்தகைய நுண்ணோக்கியை நோக்கி, உயிரி வேதியியல் (biochemistry) நெடுங்காலமாகத் தவம் இருந்து வந்தது.
புரதம் போன்ற உயிரி மூலக்கூறுகளின் முப்பரிமாணக்
கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (structural changes)
மூலமாகவே உயிரியல் செயல்பாடுகள் நிகழ்கின்றன.
புரதக் கட்டமைப்பு மாற்றங்களை அறிய முடியாமல், அதைக்
காட்ட வல்ல நுண்ணோக்கி இல்லாமல், உயிரிவேதியியலின்
மூலக்கூறு இயங்கியல் (molecular dynamics) வெகு காலமாக
முடங்கிக் கிடந்தது. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள
எலக்ட்ரான் நுண்ணோக்கியால் உயிரிவேதியியலில்
புதிய சகாப்தம் பிறந்துள்ளது. ஒரு மூலக்கூற்றை,
ஒரு செல்லை அதன் மூலை முடுக்கிலெல்லாம்
தற்போது பார்க்க முடியும். அது எப்படி நகர்கிறது
என்பதையும் பார்க்க முடியும். ஆக, இந்தக் கண்டுபிடிப்பு   உயிரிவேதியியலில் ஒரு மாபெரும் புரட்சியை
நிகழ்த்தி உள்ளது.

எனவே இச்சாதனையை நிகழ்த்திய 
அ) ஜாக்குவாஸ் டுபோச்செட்
ஆ) ஜோக்கிம் ஃபிராங்க்
இ) ரிச்சர்ட் ஹெண்டர்சன்
ஆகிய மூன்று அறிஞர்களுக்கு 2017க்கான வேதியியல்
நோபல் பரிசு சமமாகப் பிரித்து வழங்கப் படுகிறது.

உயிரற்ற பொருளும் உயிர்ப் பொருளும்!
-----------------------------------------------------------------------------
இந்த இடத்தில் ஒரு வரலாற்று உண்மையைக் கருத்தில்
கொள்ள வேண்டும். உலகின் முதல் எலக்ட்ரான் நுண்ணோக்கியைக் கண்டு பிடித்தவர் எர்னஸ்ட் ரஸ்கா
(Ernst Ruska) என்னும் ஒரு  இயற்பியல் அறிஞர். இதற்காக
1986க்கான இயற்பியல் நோபெல் பரிசு இவருக்கு
வழங்கப்பட்டது. இருப்பினும் உயிர்ப் பொருட்களை
அதாவது உயிரி மூலக்கூறுகளை (புரதம், கார்போ
ஹைட்ரேட், நியூக்ளிக் அமிலம், கொழுப்பு போன்றவை)
எர்னஸ்ட் ரஸ்கா கண்டுபிடித்த எலக்ட்ரான் நுண்ணோக்கியால்
பார்க்க இயலவில்லை.

இதில் உள்ள வெற்றிடத்தில் வைக்கப்படும் உயிரிப் பொருளின் சாம்பிளானது நீர்த்தன்மையை இழந்து விடுவதால் உருவம் சரிவரக்  கிடைப்பதில்லை என்பதை முன்னரே பார்த்தோம். மேலும்
தீவிரமான எலக்ட்ரான் கதிர்கள் சாம்பிள் மீது செலுத்தப்
படுவதால் சாம்பிள் அழிந்து விடுகிறது. இக்காரணங்களால்
புழக்கத்தில் ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கி இருந்த போதிலும்,
உயிரிப் பொருள்களை ஆராய அது பயன்படவில்லை.
அது உயிரற்ற பொருட்களை ஆராய  மட்டுமே பயன்பட்டது.
எனவே உயிரிப் பொருட்களை ஆராய வல்ல ஒரு புதிய
எலக்ட்ரான் நுண்ணோக்கியைக் கண்டுபிடிக்க வேண்டிய
இன்றியமையாத தேவை இருந்து வந்தது. தற்போது அத்தேவை
நிறைவு செய்யப்பட்டு உள்ளது.

இரண்டு வகை நுண்ணோக்கிகள்!
--------------------------------------------------------------
பரிசு பெற்ற மூவரும் இணைந்து கண்டுபிடித்த எலக்ட்ரான்
நுண்ணோக்கி கிரையோஜெனிக் தொழில்நுட்பத்துடன்
கூடிய ஊடுருவும் நுண்ணோக்கி (cryo travelling microscope) ஆகும்.

எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பிரதானமாக இரண்டு
வகை உண்டு. 1) அலகிடும் நுண்ணோக்கி (Scanning Electron Microscope)
2) ஊடுருவும் நுண்ணோக்கி (Travelling Electron Microscope).

நோபெல் பரிசு பெற்ற அறிஞர்கள் கண்டுபிடித்தது ஊடுருவும்
நுண்ணோக்கி (TEM) ஆகும். இதில் எலக்ட்ரான் கதிர்கள்
(electron beams) கொடுக்கப்பட்ட சாம்பிள் மீது  ஊடுருவிச்
செல்லும் (pass through the sample). இதற்கு மாறாக, அலகிடும்
நுண்ணோக்கியில் (SEM) எலக்ட்ரான் கதிர்கள் சாம்பிளின்
மேற்பரப்பை அலகிடும். இதன் மூலமாக சாம்பிளின்
டோப்போகிராபியும் அதன் சேர்க்கையும்
(topography and composition) தெரியவரும்.

ஒரு நுண்ணோக்கியில் இரண்டு அம்சங்கள் அதன் தரத்தைத்
தீர்மானிப்பவை. அவை: 1. வேற்றுமைப் படுத்தல் (resolution)
2. உருப்பெருக்கம் (magnification)

சாம்பிளில் உள்ள பாகங்களில், ஒன்றில் இருந்து மற்றொன்றை
துலக்கமாக வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமைப்படுத்தல் (resolution) எனப்படும். இதில் SEM 0.4 நானோ மீட்டர்  resolution தரும்.
ஆனால் TEM 0.5 ஆங்ஸ்ட்ராம் resolution தரும்

SEM  வகையில், 1 லட்சம் மடங்கு முதல் 10 லட்சம் மடங்கு வரையிலான  உருப்பெருக்கம் (magnification) தரும்
கருவிகள் உண்டு.

TEM வகையில் 5 லட்சம்  மடங்கு முதல் 1 கோடி மடங்கு வரை உருப்பெருக்க  வல்ல கருவிகள் உண்டு. அதிக உருப்பெருக்கம் கருவிகளின் தயாரிப்பைப் பொறுத்தது.

நமது தலைமுடியை ஆற்றல் மிக்க TEM  வகை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தால், அடையாறு ஆலமரம் அளவுக்கு பெரிதாகத் தெரியும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம்!
---------------------------------------------------------------
மிகவும் தாழ்ந்த வெப்பநிலைகளில் பொருட்கள் (materials)
எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது பற்றி அறியும் துறையே
கிரையோஜெனிக்ஸ் (cryogenics) ஆகும். கிரையோஜெனிக்
தன்மை வாய்ந்த பொருட்கள் பற்றி நாம் அறிவோம்.
திரவ நைட்ரஜன் அத்தகைய ஒரு பொருள் ஆகும். வாயு
நிலையில் உள்ள நைட்ரஜன்  திரவமாக்கப் பட்டு .
வெகுவாகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்
பட்டிருக்கும். மேலும் ஹீலியம்-3, ஹீல்சியம்-4 ஆகியவையும்
கிரையோஜெனிக் பொருட்களே.

நமது வேதியியல் அறிஞர்கள் உருவாக்கிய எலக்ட்ரான்
நுண்ணோக்கியில் மைனஸ் 196 டிகிரி செல்சியசுக்கு
குளிர்விக்கப்பட்ட திரவ நைட்ரஜன் பயன்பட்டது. எனவே
இது கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படுவதாகும்.

நுண்ணோக்கிகளின் வரலாறு!
--------------------------------------------------------
நுண்ணோக்கிகளின் கடந்த கால வரலாற்றை நாம்
அறிந்திருந்தால் மட்டுமே இந்த நிகழ்காலச் சாதனையின்
மாண்பை உணர முடியும். ஆரம்ப கால நுண்ணோக்கி
என்பது ஒரே ஒரு உருப்பெருக்கும் வில்லையை (lens)
கொண்டிருக்கும்.  இத்தகையவை எளிய நுண்ணோக்கிகள்
(simple microscope) ஆகும். இவை "ஒரு வில்லை, ஒரு உருவம்"
(one lens one image) என்ற அடிப்படையில் செயல்படுபவை.

1590 வாக்கில்தான் கூட்டு நுண்ணோக்கிகள் (compound microscopes)
வர ஆரம்பித்தன. இவற்றில் இரண்டு லென்சுகள் உண்டு.
ஒன்று பொருளுக்கு அருகிலும் மற்றொன்று கண்ணுக்கு
அருகிலும் இருக்கும். இதில் இரண்டு உருவங்கள் கிடைக்கும்.
"இரண்டு லென்சுகள் இரண்டு உருவங்கள்" என்ற
அடிப்படையில் இவை செயல்படும்.

நுண்ணோக்கிகள் பிரதானமாக இரண்டு வகைப்படும்.
1. ஒளியியல் நுண்ணோக்கி (optical microscope).
2. எலக்ட்ரான் நுண்ணோக்கி (electron microscope).
ஒளியியல் கருவிகள் ஒளியைப் பயன்படுத்துபவை.
அதாவது  காணுறு ஒளியை (visible light). காணுறு ஒளியின்
அலைநீளம் நிறத்தைப் பொறுத்து அமையும். சாதாரணமாக,
600 நானோமீட்டர் அலை நீளமுள்ள ஒளி இங்கு பயன்படும்.
அலைநீளத்தைப் பொறுத்தே அளக்கிற பொருளின்
துல்லியம் அமையும். அதாவது பயன்படுத்துகிற
ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான
அலைநீளம் உள்ள பொருளைத் துல்லியமாக
அளக்க முடியாது.

இதற்கு மாறாக, எலக்ட்ரான் நுண்ணோக்கியில்
ஒளிக்குப் பதிலாக எலக்ட்ரான்கள் பயன்படுத்தப்
படுகின்றன. பொதுவாக இவற்றில் பயன்படும்
எலக்ட்ரானின் அலைநீளம் 6 பிக்கோ மீட்டர்.
(1 pico meter = 10^minus 12 meter). எனவே எலக்ட்ரான்
நுண்ணோக்கியால் துல்லியமாக அளக்க இயலும்.

தண்ணீரைக் கண்ணாடியாக மாற்றிய அதிசயம்!
----------------------------------------------------------------------------------------
பல சவால்களைக் கடந்துதான் பரிசு பெற்ற இந்த
TEM வகை நுண்ணோக்கி உருவாக்கப் பட்டிருக்கிறது.
தேவையான அளவு உருப்பெருக்கம் வேண்டுமெனில்,
நுண்ணோக்கியில் விளிம்பு விளைவு (diffraction) என்னும்
இயற்பியல் நிகழ்வு போதிய அளவு நடைபெற வேண்டும்.
அப்போதுதான் சாம்பிளின் உள்ளே ஒளி புகுந்து, அதன்
எல்லாப் பாகங்களையும் நன்கு புலப்படுத்தும்.

ஒளியின் பாதையின் ஒரு தடை குறுக்கிட்டால்,
அத்தடையின் ஓரங்களில் ஒளி வளைந்து செல்வதே
விளிம்பு விளைவு (diffraction) ஆகும்.

நல்ல படிகத்தன்மை ( crystalline) உடைய ஒரு சாம்பிளை
எலக்ட்ரான் நுண்ணோக்கியில் வைத்துப்
பார்த்தால், அதில் போதிய அளவு விளிம்பு விளைவு
ஏற்படுவதில்லை. ஒவ்வொரு உயிரி மூலக்கூற்றிலும்
(bio molecule) தண்ணீர் இருக்கிறது இந்தத் தண்ணீர்
பனிக்கட்டியாக மாறிய பிறகு, அது  கறாரான
படிக அமைப்பைப் பெற்று விடுகிறது. இது எலக்ட்ரான்
கதிர்களை (electron beams) சீர்குலைத்து விடுகிறது.
இதனால்  விளிம்பு விளைவு போதிய அளவு .நிகழ்வதில்லை.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க, தண்ணீரை
பனிக்கட்டியாக (ice) மாற்றுவதற்குப் பதில்,
அதை கண்ணாடியாக (glass) மாற்ற விஞ்ஞானி
ஜாகுவாஸ் டுபோசெட் (Jacques Dubochet) முடிவு
செய்தார்.

கண்ணாடி திடத்தன்மை (solid) கொண்டிருக்கும்.
என்றாலும் அது படிகம் அல்ல.  உண்மையில் அது
ஒரு பாய்மமே. (பாய்மம்= fluid). மூலக்கூறுகள்
ஒழுங்கற்ற தன்மையில் வரிசை குலைந்து இருப்பதால்
அது படிகத் தன்மை அடைவதில்லை. தண்ணீர் படிகமாக
மாறாமல், கண்ணாடியாக மாற வேண்டுமெனில்
அதை வேகமாகக் குளிர்விக்க வேண்டும்
(rapid cooling).இதற்கு திரவ நைட்ரஜன் பயன்படும்.

இவ்வாறு தண்ணீரைக் கண்ணாடியாக மாற்றி,
அந்த சாம்பிளை எலக்ட்ரான் நுண்ணோக்கியில் வைத்துப்
பார்த்தபோது, அது ஒரு சீராக விளிம்பு விளைவு அடைந்தது. .         

தண்ணீர் இயல்பாகக் குளிர்ந்தால்
(normal cooling or slow cooling) அது ஐஸ்கட்டியாகி விடும்.
தண்ணீர் வேகமாகக் குளிர்விக்கப் பட்டால்
(rapid cooling) அது கண்ணாடி ஆகும். இவ்வாறு தண்ணீரைக்
கண்ணாடியாக ஆக்கும் முறை vitrification எனப்படும்.

சிலிகான் டை ஆக்சைடில் இருந்து தயாரிக்கப்படும்
கண்ணாடி பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை.
இங்கு கண்ணாடி என்பது vitrified water என்று பொருள்படும்.
கண்ணாடி என்றால், படிகத்  தன்மையற்ற
(non crystalline with disordered state of  molecules) ஒழுங்கற்ற
நிலையில் இருக்கும்மூலக்கூறுகளால் ஆனது என்று பொருள்.
தண்ணீரை இவ்வாறு கண்ணாடியாக மாற்றுவது
vitrification method ஆகும். இந்த பூமி முழுவதும் உள்ள
தண்ணீரில் பெரும்பகுதி கண்ணாடித் தண்ணீர்தான்.
அதாவது vitrified waterதான்.   

TEM வகை நுண்ணோக்கிகளில் இரண்டு பரிமாணம்
உடைய உருவங்கள்தான் கிடைக்கும். (SEM வகையில்
முப்பரிமாண உருவங்கள் கிடைக்கும்). முப்பரிமாண
உருவங்களைப் பெறுவதற்காக உருவச் செயல்பாடு
(image processing) என்னும் உத்தியைக் கண்டறிந்தார்
பரிசு பெற்ற இன்னொரு விஞ்ஞானியான ஃபிராங்க்.
கணித முறையைப் பயன்படுத்தி,  கணினியின்
மூலம் முப்பரிமாண உருவங்களை உருவாக்கினார்.

மூன்றாவது விஞ்ஞானியான ரிச்சர்டு ஹெண்டர்சன்
1990இல் முதன் முதலாக ஒரு புரத மூலக்கூற்றின்
அணு மட்டத்திலான உருவத்தை (image) உருவாக்கினார்.
முன்னதாக 15 ஆண்டுகளுக்கு முன்பே,
இதற்கான ஒரு மாதிரியை வடிவமைத்து இருந்தார்.
15 ஆண்டு உழைப்பின் பயனை இறுதியில் அவர் அடைந்தார்.

இவ்வாறு உயிரி மூலக்கூறுகளை அணு மட்டத்தில்
ஆராய்ந்து முப்பரிமாண உருவங்களைத் தரும் 
இந்த எலக்ட்ரான் நுண்ணோக்கி மேற்கூறிய மூன்று
விஞ்ஞானிகளின் கூட்டுப் படைப்பு. எனவே பரிசு
 மூவருக்கும் சமமாகப் பங்கிடப் பட்டது.
*******************************************************      





ஞாயிறு, 19 நவம்பர், 2017

ஒரு மாமியாருக்கு 2 மருமகள்.
ஒருத்தி தூத்துக்குடியிலும்
இன்னொருத்தி ஊட்டியிலும் பாலைக்
காய்ச்சினால், யாரால் சீக்கிரம் பாலைக் காய்ச்சுவார்?
காய்ச்ச முடியும்? ஏன்?  யு   பால்

mukkiya kurippu!
முக்கிய குறிப்பு!
--------------------------------
தூத்துக்குடி கடல் மட்டத்தில் இருப்பதாகவும் ஊட்டி
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6000 அடி உயரத்தில்
இருப்பதாகவும் கணக்கில் கொள்ளுங்கள். இருவரும்
ஒரே தரத்துப்பாலை, ஒரே அளவு திறன் உடைய
அடுப்பில், ஒரே நேரத்தில் காய்ச்சுகின்றனர் என்று
கொள்க. உயரத்தைத் தவிர (altitude aboveMSL, MSL =Mean Sea Level )
வேறு காரணி எதுவும் பால் காய்ச்சுதலில் செயல்படாது
என்று கொள்க.
------------------------------------------------------------------------------------------------
சரியான விடையும் விளக்கமும்!
-----------------------------------------------------------
விடை: ஊட்டி மருமகள்தான் சீக்கிரம் பால் காய்ச்சுவார்.
விளக்கம்:
-------------------
1) பாலின் கொதிநிலை (boiling point) என்ன?
தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்ஸியஸ்
என்பதை நாம் அறிவோம். பாலின் கொதிநிலை
100 டிகிரியை விடச் சற்று அதிகம். அவ்வளவே.
கிட்டத்தட்ட 100 டிகிரி, 100.5 டிகிரி, 101 டிகிரி (செல்ஸியஸ்)
என்ற அளவில்தான் பாலின் கொதிநிலை இருக்கும்.
**
2) ஊட்டி கடல் மட்டத்துக்கு மேல் 6000 அடி உயரத்தில்
இருக்கிறது. இதனால் அங்கு பாலின் கொதிநிலை
குறைவாக இருக்கும். அதாவது 93 டிகிரி செல்ஸியஸ்
(அல்லது 92 டிகிரி செல்ஸியஸ்) என்பதுதான் பாலின்
கொதிநிலை.
**
3) தூத்துக்குடியில் பாலின் கொதிநிலை= 100 டிகிரி C.
ஊட்டியில் பாலின் கொதிநிலை 93 டிகிரி C.
எனவே ஊட்டியில் விரைவில் பாலைக்
காய்ச்ச முடியும்.
**
4) திரவங்களின் கொதிநிலை உயரத்தைப் பொறுத்து
(altitude) மாறும் என்பதை உணர்த்துவதே இக்கணக்கின்
நோக்கம்.
**
5) உயரத்தைப் பொறுத்து ஏன் கொதிநிலை மாறுகிறது
என்பதை வாசகர்கள் தங்கள் சொந்த முயற்சியில்
அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். வெவ்வேறு
திரவங்களின் கொதிநிலை பற்றியும் அறிந்து
கொள்ளவும். ஆல்கஹாலின் கொதிநிலை என்ன?
அறிந்து கொள்க.
----------------------------------------------------------------------------------------    

Why is e^(pi i) = -1?

Asked by Brad Peterson, student, Roy High on January 29, 1997:
I was watching an episode of The Simpsons the other day, the one where Homer gets sucked into the third dimension, and in this 3-D world, there was an equation that said  (IMAGE) . So I put it into the calculator and it worked, but I have no idea why, because e to any power isnt supposed to be a negative number, and I thought pi was in no way related to e.If you could explain the process, it would save lots of time pondering and plugging epi, and i into the calculator in random ways to figure out whats going on.
We'd be glad to explain; that's exactly what this area is here for.
The first question to ask, though, is not "why does  (IMAGE) ", but rather, "what does  (IMAGE)  even mean?" In other words, what does it mean to raise a number to an imaginary power?
Once that question is answered, it will be much more clear why  (IMAGE) . It turns out that  (IMAGE)  for all x, a fact which is known as de Moivre's formula, and illustrates how closely related the exponential function is to the trigonometric functions. From this formula, it follows immediately that  (IMAGE) .
So now, the question is, why is  (IMAGE)  the "right" thing to define what e raised to an imaginary power means?
Raising a number to an imaginary power makes no sense based on the original definition of exponentiation you learned, where  (IMAGE)  means "a multiplied by itself b times." That definition only makes sense when b is a positive integer. After all, what would it mean to multiply something by itself i times??
Of course, the original definition doesn't even make sense for fractions and negative numbers. You should have learned how to extend the definition to include fractions. For example, since 1/3 is that number which, when multiplied by 3, gives you 1, it makes sense to define  (IMAGE)  to be that number which, if you raise it to the power of 3, would give you  (IMAGE)  (i.e., a); in other words,  (IMAGE)  is defined to be the cube root of a. Similarly, you learned how to extend the definition to negative exponents by  (IMAGE) .
But none of these considerations give any clue as to what raising a number to a complex power should mean. Instead, we need to express exponentiation, or its properties, in some way that can be extended to complex powers.
The first way to do this is to use the fact that  (IMAGE)  happens to be equal to the infinite sum
 (IMAGE)
(where n! means n factorial, the product of the numbers 1,2,. . . ,n).
The reason why this is so depends on the theory of Taylor series from calculus, which would take too long to describe here. You will encounter it in a calculus class at some point, if you haven't already.
Now, this infinite sum makes perfectly good sense even for imaginary numbers. By plugging in ix in place of x, you get
 (IMAGE)
Now it turns out that  (IMAGE)  is the infinite sum for cos x, while  (IMAGE)  is the infinite sum for sin x (again by the theory of Taylor series). Therefore,  (IMAGE) .
Now, this may be a little unsatisfying to you since I haven't explained why  (IMAGE) , cos x, and sin x equal those three different infinite sums. I can't do so without assuming some calculus background that you may not have.
However, here's another way of understanding why  (IMAGE) . It too involves some calculus, but I can describe the calculus involved more easily.
Associated to many functions f(x) is another function f'(x), called the derivative of f(x). It measures how rapidly f(x) is changing at the value x.
If  (IMAGE) f(x) may represent, for example, an exponentially growing population. The rate of change of such a population (the number of births per day, for example) is directly proportional to the current size of the population; that is, f'(x) is a constant times f(x). When  (IMAGE) , that constant is exactly 1 (that's the property which defines the number e). More generally, if  (IMAGE) , then  (IMAGE) .
What about the trigonometric functions? Well, if f(x) = sin x, then f'(x) = cos x, and if f(x) = cos x, then f'(x) = - sin x.
If you think about it for a minute, these equations are very reasonable. First of all, when x=0, sin x equals zero but increases as x increases; in fact, the slope of the graph of = sin x at the point (0,0) is 1, which is another way of saying that the rate of increase there is 1, so f'(0) = 1.
 (IMAGE)
But then, as x increases to  (IMAGE) , the rate of increase drops off and eventually sin x stops increasing altogether and starts decreasing. In other words, f'(x) drops to zero when  (IMAGE) , and becomes -1 by the time x reaches pi (see the picture).
Therefore, f'(x) is a function which starts at 1 when x=0, decreases to 0 when  (IMAGE) , drops to -1 when  (IMAGE) , rises back to 0 when  (IMAGE) , and so on. This is precisely what the cosine function does, so it should be no surprise that f'(x) = cos x. Similar reasoning shows why it is reasonable that, when f(x)=cos xf'(x)=-sin x. The exact proofs of these facts you will see in a calculus class.
Now, keeping those facts in mind, what should  (IMAGE)  be? If we write it in terms of real and imaginary parts g(x) + i h(x), what should the functions g(x) and h(x) be?
The key is to take the derivative. It is only reasonable to define  (IMAGE)  in such a way that it still has the same properties as mentioned above, namely, the derivative of  (IMAGE)  should still equal  (IMAGE) . Therefore, if  (IMAGE) , we should have
 (IMAGE)
But f'(x) should also equal g'(x) + i h'(x), so we are looking for a pair of functions g and h for which h' = g and g' = -h. This is exactly the same interrelationship that the sine and cosine functions have, as we saw above. It also turns out that these two equations, together with the conditions g(0)=1 and h(0)=0 that arise from the fact that  (IMAGE)  needs to equal 1, uniquely determine the functions g and h.
It follows from all this that g must be the cosine function and h must be the sine function. That is why  (IMAGE) .
குரல் தொகுப்புக் கருவி உதவுமே!
-----------------------------------------------------------
1) கேப்டன் டி.வி அதிபராக மட்டும் விஜயகாந்த்
இருப்பார் என்றால் அவரை எவரும் விமர்சிக்க
மாட்டார்கள். ஆனால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக
இருந்தவர். முதலமைச்சர் வேட்பாளராக இருந்தார்.

2) முதலமைச்சர் பதவி அதிகாரம் மிக்கபதவி. அதற்கு
விஜயகாந்த் ஆசைப்பட உரிமை உண்டு. அப்படி
ஆசைப்படும் ஒருவரை விமர்சிக்க ஒவ்வொரு
வாக்காளனுக்கும் உரிமை உண்டு.

3)ஸ்டீபன் ஹாக்கிங் என்ற இங்கிலாந்து விஞ்ஞானிக்கு
இளமையிலேயே ஒரு  நரம்பு நோய் ஏற்பட்டு, பேசும்
சக்தி உட்பட பல்வேறு சக்திகளை இழந்து விட்டார்.
ஆனாலும் voice synthesizer என்ற கருவி மூலம் பேசுகிறார்.
அவர் பேசாத பல்கலைக் கழகங்கள் இல்லை என்னும்
அளவுக்குப் பேசுகிறார்.

4) கேப்டன் அவர்கள் இப்படி ஒரு கருவியின் உதவியால்
பேசலாம். அதற்கு ஆகும் செலவு அவருக்குத் துச்சம்.
பார்வைக் குறைவு உள்ளவன் கண்ணாடி அணிகிறான்.
காது கேட்காதவன் ஹியரிங் எய்ட் அணிகிறான்.
நடக்க முடியாதவன் சக்கர நாற்காலியைப் பயன்
படுத்துகிறான். அது போலவே கேப்டன்  அவர்கள்
voice synthesizer பயன்படுத்தலாம். இதில் என்ன தவறு?
அல்லது இதில் என்ன கேவலம் உள்ளது?

5)  தமிழ்நாட்டில் கலைஞரை வெறுக்க ஒரு கோடிப்
பேர் உண்டு.  ஜெயாவை, முன்பு எம்ஜியாரை
வெறுக்கவும் 1 கோடிப்பேர் உண்டு. ராமதாஸையும்
திருமாவளவனையும் வெறுக்க கோடிக்கணக்கில்
ஆட்கள் உண்டு. ஆனால் அந்த அளவு வெறுப்பை,
அல்லது அதில் 10 சதம் அளவுக்குக்கூட
சம்பாதிக்காதவர் கேப்டன். அவர் தமிழக
அரசியலின் நகைச்சுவை மன்னன்.

6) எனவே அவரை விமர்சிக்கும் பதிவுகளில் வெறுப்போ
வன்மமோ இருக்காது. மாறாக கேலியும் கிண்டலும்
இருக்கும். இதற்கு காரணம் விமர்சிப்பவர்கள் அல்ல.
கேப்டனேதான்! இப்பதிவு உடற்குறை சார்ந்த
கிண்டல் என்று கருதுவதை போல பிறழ் புரிதல்
எதுவும் இல்லை. அப்படிக் கருதுவது escapism ஆகும்.
கேப்டன் அவர்கள் வாய்ஸ் synthesizer பயன்படுத்துவார்
என்றால் அதை முதலில் வரவேற்பது நாங்களே. 
 



        


நான் thermodynamicsல் brownian motion
படித்துக் கொண்டிருந்தபோது லெனின் வந்தார். வந்து 
என்ன படிக்கிறாய்   என்றார். physics என்றேன்.
முட்டாளே அதுவும் மார்க்சியம் தாண்டா என்றார்.


மைனஸ் 1ன் வர்க்க மூலம் ஒரு முரண்பாடு
என்கிறார் எங்கல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு-ல்.
இதைப் படிக்காமலோ புரியாமலோ
முரண்பாட்டை எப்படிக் கையாள முடியும்? 


மார்க்சியத் தத்துவத்தை பொருள்முதல்வாதத்தை
அறிந்து கொள்ள மிக முக்கியமான நூல் இது.
இந்த நூலைப் பற்றி, "இது ஒரு என்சைக்ளோபீடியா
போன்றது" என்று ஏங்கல்ஸ் கூறுகிறார். (பார்க்க:
மார்க்சுக்கு எங்கல்ஸ் எழுதிய கடிதம்  1878ல் ஜெர்மன்
மொழியில் நூல் வெளியானதும் மார்க்சுக்கு எங்கல்ஸ்
எழுதிய கடிதம். இந்த நூலைப் படிக்காமலும்
புரியாமலும் மார்க்சியத் தத்துவத்தைப் புரிந்து
கொள்ள முடியாது.

 

சனி, 18 நவம்பர், 2017

அயன் ராண்ட் கலைக்கலஞ்சியம் என்ற ஒரு நூலை அமெரிக்க நூலகத்தில் பார்த்த நினைவிருக்கிறது. அயன் ராண்டின் கொள்கைகளை பிரச்சாரம்செய்வதற்கான ஆய்வுமையத்தால் வெளியிடப்பட்டது அது. அயன் ராண்ட் பல்வேறு விஷயங்களைப் பற்றி சொன்ன கருத்துக்கள் அதில் அகரவரிசையில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவரது நோக்கின் மையச்சரடு என்பது அவராலேயே புறவயவாதம் என்று வகுத்துரைக்கப்பட்டது.
இந்தபூமியில் உள்ள எல்லா சிந்தனைகளையும் இரண்டாகப் பிரிக்கலாம் என்பது அயன் ரான்டின் வாதம். ஒன்று, பூமியை நமக்குப் பயன்படுத்திக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உரிய சிந்தனைகள் அடங்கியது. இரண்டு, பயனற்ற இலட்சியவாதச் சிந்தனைகளும் காலாவதியான நம்பிக்கைகளும் வழக்கங்களும் அடங்கியது. பிந்தையதை முழுக்க நிராகரித்து பயனுள்ள சிந்தனைகளை மட்டுமே வளர்த்துக்கொள்வதற்குப் பெயரே புறவயவாதம் என எளிமையாகச் சொல்லலாம்.
பயனற்ற சிந்தனைகள் என்பவை அர்த்தமில்லாத அச்சம் போன்ற உணர்ச்சிகளால் உருவாகி நீடிப்பவையான, அல்லது சென்றகாலத்தில் ஏதேனும் வகையில் பயன்பட்டு இப்போது பொருளிழந்துபோன அகவயமான உணர்ச்சிகளால் ஆனவையாக இருக்கும். அவற்றுக்கு இன்று புறவய மதிப்பு இருக்காது. அவற்றை அடையாளம் காண்பதற்குச் சிரந்தவழி அவற்றின் புறவயமதிப்பை அளவிடுவதே. அதுவே புறவயவாதம்

மண்ணில் வாழ்வதற்கான தத்துவம்’ என புறவயவாதத்த்தை அயன் ராண்ட் சொன்னார். மானுட சிந்தனைகள் என நமக்கு இப்போது கிடைப்பவற்றை பரிசீலனைசெய்து எது உண்மையிலேயே பயனுள்ளது என்று உணர்வதற்கும் அப்படி உண்மையை உணர்ந்தபின்னர் அதை ஏற்றுக்கொள்ளவும் முன்வைத்துப் பேசவும் இருக்ககூடிய மனத்தடைகளை வெல்வதற்கும் உதவக்கூடிய அடிப்படையான வாழ்க்கை நோக்கே புறவயவாதம்
இப்படிச்சொல்லலாம், பிறர் பொருட்டு வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்ற சித்தாந்தம் நம் சூழலில் உயர்ந்த விழுமியமாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில் அது பயனுள்ளதா? அயன் ராண்டின் புறவயவாதம் அதை இப்படி ஆராயும். ஒன்று, மண்ணில் எவருமே அப்படி வாழ்வதில்லை. வாழ முடிவதில்லை. அது உயிரின் அடிப்படைக்கே எதிரானது. எல்லா உயிர்களும் தங்களுக்காகவே வாழ்கின்றன. அந்த சுயநலம் மூலம்தான் மண்ணில் அவை போராடி தங்கி வாழமுடியும். சுயநல நோக்கு இல்லாத ஒரு சமூகம் அழியத்தான் வேண்டும்.
சமூகத்தை முன்னிறுத்தி தன்னை நிராகரிப்பதற்கு தனிமனிதர்களை தயாரிக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு கருத்து இது. பெரும்பாலான பழங்குடிகளில் இது உள்ளது. அங்கே குடி மட்டுமே இருக்கும் குடிமகன் இருக்கமாட்டான். இந்த நோக்கை திரள்வாதம் [collectivism]  என்கிறார் அயன். திரள்வாதமானது மதத்தின் வழியாக ‘புனிதப்படுத்தப்பட்டு’ முன் வைக்கப்படுகிறது. மதம்சார்ந்த இலக்கியங்களும் கலைகளும் அதை உணர்ச்சிகரமாக முன்வைக்க்கின்றன. நம் சமூகத்தில் இன்று நிலவும் விழுமியங்கலில் பெரும்பாலானவை திரள்வாதம் சார்ந்தவை மட்டுமே என்கிறார் அயன் ரான்ட்
புறவயவாதம் என்பது திரள்வாதத்துக்கு முற்றிலும் எதிரான ஒன்று. ஒரு விழுமியம் உணர்ச்சிகரமானதாக இருக்கிறதா நெடுங்காலமாக இருந்துகொண்டிருக்கிறதா என்பதெல்லாம் அதற்கு முக்கியமே அல்ல. அது பயனுள்ளதா, நடைமுறைச்சாத்தியமானதா  என்பது மட்டுமே அதற்கு முக்கியம்.  பயனுள்ள ஒன்று ஒருபோதும் ஓர் அகவய மன எழுச்சியாக இருக்காது. அந்தப்பயன் புறவயமாக நிறுவப்படக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பது புறவயவாதத்தின் ஓர் அடிப்படை.
அகவயவாதம்  விழுமியங்களை நிராகரிக்கிறது என்பதல்ல இதன் பொருள். அந்த விழுமியங்களின் பலன் என்பது புறவயமாக நிறுவப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் வாதம். கருணை பாசம் அன்பு தர்மம் எதுவானாலும் அதன் பயன்மதிப்பு, நடைமுறைச்சாத்தியமே அது தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டும்
திரள்வாதம் சார்ந்த இலட்சியக்கருத்து உயர்பண்பாக முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படும்போது அதை நம்புகிறவர்கள் அந்த திசையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்று அது முடியாமலாகும்போது ஏமாற்றம் அடைகிறார்கள். அதற்குள் அவர்களுக்கு சுய அடையாளம் உருவாகியிருக்கும். அதை அவர்களால் துறக்கவும் முடியாது. ஆகவே அவர்கள் மெல்லமெல்ல போலிகளாக ஆகிரார்கள். தங்களை பிறருக்க்காக வாழ்பவர்களாக எண்ணிக்கொண்டு அந்தரங்கத்தில் சுயநலமிகளாக  இருக்கிறார்கள். அயன்டின் கோணத்தில் மானுட இயல்புக்கு மாறான எந்த ஒரு இலட்சியமும் மனிதனை போலியானவனாகத்தான் ஆக்கும்.
மிக விரிவாகவே அயன் ராண்ட் முன்வைத்து வாதிடும் புறவயவாதத்தை இப்படி சுருக்கிவிடமுடியாது. இது ஒரு எளிமையான சாராம்சப்படுத்தல் மட்டுமே.  புறவயவாதத்தை எப்படி தங்கள் வகையில் பொருள்கொள்வது, எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை வாசகர்களே தீர்மானிக்கலாம். அது இங்கே விவாதவிஷயம் அல்ல. ஆனால்  புறவயவாத  என்பது தத்துவத்தின் பரிணாம வரலாற்றில் எங்கே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மேலைத்தத்துவ மரபை மிகப்பொதுப்படையாக இரு பெரும் ஓட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று கிரேக்கமரபு. இன்னொன்று செமிட்டிக் மரபு.. கிரேக்க மரபு தருக்கத்துக்கும் மொழிதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. செமிட்டிக் மரபு நம்பிக்கைக்கும் படிமங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது.  முந்தையது தனிமனிதனை நோக்கிப் பேசியது. பிந்தையது திரளான மக்களை நோக்கிப் பேசியது. ஆகவே பிந்தையது மதமாக ஆகி நேரடியாக அதிகாரத்தைக் கையாள ஆரம்பித்து அந்த அதிகாரத்தைக் கொண்டு கிரேக்க மரபை முற்றாகவே ஒழித்தது.

மத்தியகாலகட்டம் என்பது சிந்தனையில் செமிட்டிக் மரபு மட்டுமே நீடித்த, அது மட்டுமே அனுமதிக்கப்பட்ட, ஒரு காலகட்டம். திரள்வாதம் என்று அயன் சொல்லும் அனைத்துமே மத்தியகாலகட்ட கிறித்தவ சிந்தனைக்கே சரிவரப்பொருந்துவதை சாதாரணமாகக் காணலாம். கிறித்தவத் திரள்வாதத்தால் தனிமனித சிந்தனையும் ஆன்மீகத்தேடலும் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தப்பட்டன, மீறல்கள் ஒடுக்கப்பட்டன. அதை ஐரோப்பிய  நாகரீகத்தின் இருண்டகாலக்ட்டம் என்று இன்று குறிப்பிடுகிறார்கள்
ஐரோப்பிய மறுமலர்சி என்பது பதினைந்தாம் நூற்றாண்டுமுதல் மெல்லமெல்ல உருவாகி பதினெட்டாம் நூற்றாண்டில் முழுமை அடைந்த ஒன்று. அதன் மூன்று அடிப்படைக்கூறுகள் ஒன்று, நிரூபணவாத அறிவியல், இரண்டு, ஜனநாயகம், மூன்று, உலகளாவிய நோக்கு.
நிரூபணவாத அறிவியல் பகுத்தறிவு வாதத்தை உருவாக்கியது. அதன் விளைவாக  நவீன நாத்திகவாதம் உருவாகியது . அது கிறித்தவத்துக்கு எதிரான ஒரு வலிமையான கருத்தியல் சக்தியாக பரிணாமம் கொண்டது. நிரூபணவாத அறிவியலே நாம் இன்று காணும் புறஉலகை உருவாக்கியது என்றால் அது மிகை அல்ல. இயந்திரத்தொழில் நுட்பமும், இயந்திர விதிகளின் படியே அமைக்கப்பட்ட சமூக அமைப்புகளும், புறவயமான சமூக அறிவியல் ஆய்வுமுறைகளும் எல்லாம் அதன் சிருஷ்டிகளே.அயன் ரான்ட் நிரூபணவாத அறிவியல் சார்ந்தே தன் அடிபப்டைக்கோணங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். ஒன்றை புறவயமாக எப்படி நிர்ணயிப்பது? அது புறவயமாக நிரூபிக்கப்படும்போது மட்டுமே– இல்லையா?
ஜனநாயகம் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் ஆதாரமான விசைகளில் ஒன்று.  அதாவது சாமானியர்களுக்கு அரசதிகாரம். அவர்களை பெருந்திரளாக ஆக்கி அடக்கி ஆளும் நோக்குக்கு எதிரான கருத்தியல் எழுச்சி அது.  கம்யூனிசமேகூட ஐரோப்பிய ஜனநாயகவாதம் என்ற பெரும் சொல்லாடலின் ஒரு பகுதியாக உருவானதுதான்.
அந்த ஜனநாயகவாதத்தின் அடிப்படை கருத்துநிலை என்பது தனிநபர்வாதம். தனிநபரை முழுக்க நிராகரித்து அவனை வழிநடத்தப்படும் ஆடாகக் கண்ட கிறித்தவத்துக்கு எதிரான குரல் அது. முந்நூறு ஆண்டுகளாக உருவாகி வந்த மேலைநாட்டு தனிநபர்வாதத்தை விரிவாகப்புரிந்துகொள்ளாமல் அங்குள்ள மனித உரிமை நோக்கு, அடிப்படை உரிமை நோக்கு, மேட்டிமைவாதம், அறிவுமையவாதம் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஒருவன் தன்னை ஒரு தனித்த இருப்பாக, தன் சொந்தச் சிந்தனையை சமூகத்தின் சிந்தனை அமைப்பின் அடிபப்டைத்துளியாக, உணரும்போதே ஜனநாயகம் பிறக்கிறது. அவன் சமூகத்தின் அதிகாரத்தில் தனக்குரிய பங்கை கோருகிறான். அதற்கான அரசியலமைப்பை நாடுகிறான். அதுவே ஜனநாயகம்.
தனிமனிதனை முற்றாக நிரகாகரித்த செமிட்டிக் சிந்தனைகளுக்கு எதிராக முன்வைக்கபப்ட்டது தனிமனிதவாதம். தனிமனிதனை சமூகத்தின் அடிப்படை அலகாகக் காண்பதில் இது ஆரம்பிக்கிறது. தனிமனிதன் மட்டுமே இருக்கிறான், சமூகம் என்பதே இல்லை என்று சொல்லும் அதீத நிலை வரை சிலசமயம் சென்றடைகிறது.
மூன்று ஆப்த வாக்கியங்களாக இந்த ஒட்டுமொத்த விரிவை சுருக்கிப் புரிந்துகொள்ளலாம். தெகார்த்தேயின் ‘நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கிறேன்’  மார்க்சின் ‘நமது வேலை உலகத்தை புரிந்துகொள்வது அல்ல, அதை மாற்றியமைப்பதுதான்’ சார்த்ரின் ‘மனிதன் அவனை உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்’
முதல் சிந்தனையை மேலைநாட்டு சுதந்திர இச்சை இயக்கத்தின் [Free Will Movement] சாரம் எனலாம். பல்வேறு கோணங்களில் இன்றுவரை விளக்கப்படும் இந்த வரியானது சிந்திக்கும் மனிதனின் இருப்பை நிறுவக்கூடியது. சிந்திப்பதன்மூலம் மனிதன் தன் இருப்பை உருவாக்குகிறான். இருப்பதற்காக சிந்திக்கிறான். சிந்திப்பவன் மட்டுமே இருக்கிறான். சிந்தநை என்பதே மனிதன் தன் இருப்பை உணர்வதுதான்
இரண்டாவது சிந்தனை இந்தச் சிந்தனையின் இன்னொரு கோணத்திலான நீட்சி. தன்னைப்பற்றி சிந்திக்கும் மனிதன் தன் சூழலை மாற்றியமைத்து தனக்குரிய உலகை தானே உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற உத்வேகத்தை அடைகிறான். ந்தினெட்டாம் நூற்றாண்டு  முதலாளித்துவசிந்தனைகள் அனைத்திலும் சாராம்சமாக ஓடுவது இந்த எண்ணமே. உலகம் முழுக்க ஐரோப்பியர்களைக் கொண்டுசென்றது, இன்றைய தொழில்நுட்ப உலகை உருவாக்கியது, இயற்கையைச் சூறையாடசெய்தது இந்த எண்ணமே. முதலாளித்துவ சிந்தனையில் உருவான ‘நான் உலகம் சமைப்பவன்’ என்ற தன்னுணர்வு அடுத்த கட்டத்தை அடைவதே கம்யூனிசம். அதாவது மார்க்ஸ் உருவகித்த கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தின் இன்றியமையாத வளர்ச்சிநிலை மட்டுமே.
மூன்று இந்த இரு உணர்வெழுச்சிகளின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. தனிமனிதனாக தன்னை உணர்ந்த மனிதன் காலம் வெளி என்னும் பிரம்மண்டங்களின் முன்பு தன்னை உணரும்போது உருவாகும் அர்த்தமின்மை இவ்வரியில் உள்ளது. இதுவே இருத்தலியமாக பல தளங்களில் விரிவாக்கம் பெற்ற சிந்தனை.
எந்த ஒரு  சிந்தனைக்கூறையும் சட்டென்று உலகலாவியதாக உருவகித்துக்கொள்வது என்பது ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் முதல் உருவாகிவந்த ஒரு மனநிலை. பெரும்பாலான ஐரோப்பியச் சிந்தனைகளில் இந்த அம்சத்தைக் காணலாம். இந்தப்போக்கின் முதல் புள்ளி பெருங்கவிஞர் கதே என்று சார்த்ர் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார்.  எந்தக்கருத்தையும் இப்படி மானுடப்பொதுவிதியாக ஆக்கும்போக்கில் ஐரோப்பா ஏராளமான கோட்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. அயன் ரான்ட் போன்றவர்கள் கூட ‘மானுடம்’ நோக்கிப் பேசுவதைக் காணலாம்

இந்த மனநிலையை நிராகரித்தது பின் நவீனத்துவம்தான். நாகார்ஜுனன் எண்பதுகளில் தமிழில் தெளிவற்ற முறையிலானாலும் இச்சிந்தனையை முன்வைத்து மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார். பன்மைத்துவம், விளிம்புகள், மையமின்மைகள் ஆகியவை சிந்தனையில் எந்த இடத்தை வகிக்கின்றன என்று சொல்லி தமிழியர்கள் போன்றவர்களால் வசைபாடப்பட்டார்.
உண்மையில் ஒருவிஷயத்தை தர்க்கபூர்வமாக மானுடமளாவ மாறுவது சாத்தியமே அல்ல. மானுடம் என்பது என்ன? ஐரோப்பிய மனிதனும் பப்புவா நியூகினியா பழங்குடியும் சேர்ந்த ஒரு அமைப்பு அல்லவா? உள்ளுணர்வு சார்ந்து ஒரு மானுடப்பொது உணர்ச்சியை ஒருவன் அடைவதென்பது வேறு. தர்க்கபூர்வமாக மானுடம் என்று சொல்லும்போது ஒரு சராசரியே உருவகிக்கப்படுகிறது. அந்தச் சராசரி என்பது பெரும்பாலும் ஐரோப்பிய சராசரியே [ இங்கே ஒரு சின்னக் குறிப்பு ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அமெரிக்கா என்பது ஐர்ப்போய பண்பாடு மற்றும் சிந்தனையின் நீட்சிதான்]
இந்த செமிட்டிக் எதிர்ப்புச் சிந்தனைப்போக்கின் விளைவாக ஐரோப்பாவில் பல்வேறு சிந்தனைகள் உருவாகி வந்தன. அவற்றின் பரிணாமநிலைகளை நாம் எந்த ஒரு தத்துவ அறிமுக நூலிலும் காணலாம் ·பாயர்பாக் முதலியவர்களால் முன்வைக்கபப்ட்ட எளிய பொருள்முதல்வாதம்  அங்கிருந்து இந்தியா வரை வந்து பகுத்தறிவுவாதம் என்ற பேரில் இன்றும் வலுவாக உள்ளது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சிநிலை என்பது முரணியக்க வரலாற்று பொருள்முதல்வாதமான மார்க்சியம். 
அதன் பின்னர் நேர்காட்சிவாதம், புலனறிவாதம், பயனுறுவாதம் [Utilitarianism], நடைமுறைவாதம் [Pragmaticism] என பல்வேறு சிந்தனைமுறைகள் ஐரோப்பிய சொற்களனில் உருவாகி வந்திருக்கின்றன. இந்தத்தரப்பு என்பது ஐரோப்பிய சிந்தனையில் என்றும் வலுவாக இருந்துகொண்டே இருக்கக் கூடிய ஒன்றாகும். இவற்றை பொதுவாக அதிதூய பொருள்முதல்வாத நோக்குகள் எனலாம். இன்னும் நிறைய சிந்தனைகள் இக்கிளையில் உருவாகும். இது மனிதனை, வரலாற்றை கருத்துமுதல்வாத நோக்குடன் சாராம்சப்படுத்தும் எந்த அணுகுமுறைக்கும் எதிரானது. இதற்கு உண்மையில் பெரிய ஒரு தத்துவ-சமூக பங்களிப்பு உண்டு என்றே நான் எண்ணுகிறேன்.
உண்மையில் பொருள்முதல்வாதத்தின் நீட்சியான மார்க்ஸியம் என்பது ஒரு கருத்துமுதல்வாதமாகும். வரலாறுக்கு தனக்கே உரிய ஓர் பரிணாமமும் இலக்கும் உள்ளது என்கிறது மார்க்ஸியம். இந்த வரலாற்றுவாதம் என்பது ஒரு கருத்துமுதல்வாத உருவகம். வரலாற்றுக்கு ஒரு ‘உள்ளக்கிடக்கை’ உண்டு என்ற எண்ணம் இதில் உள்ளது. பொருள்முதல் வாதத்தில் மார்க்சியத்தால் சேர்க்கபப்ட்ட இந்த இலட்சியவாத அம்சத்தைக்கூட இல்லாமலாக்கி அதை தூய புறவய தர்க்கங்களால் ஆன ஒன்றாக தொகுக்கும் முயற்சி என்று நாம் மேலெ சொன்ன சிந்தனைகளைச் சொல்லலாம்
அதாவது ஒரு புரிதலுக்காக இப்படி வகுத்துக்கொள்ளலாம். மேலைநாட்டில் செமிட்டிக் சிந்தனைகளை மறுத்து கிரேக்க பின்னணியில் இருந்து ஊக்கம் பெற்று உருவான பொருள்முதல்வாத சிந்தனை முறையில் இரு கிளைகள்.  அதை முதலாளித்துவம் , மார்க்சியம் எனலாம்.அதில் மார்க்ஸியம் என்ற கிளை தனக்குள் செமிட்டிக் மரபில் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு கருத்துமுதல்வாத அம்சத்தைச் சேர்த்துக்கொண்டது. இன்னொரு கிளையான முதலாளித்துவம் தன்னை தூய பொருள்முதல்வாதமாக நிலைநாட்டிக்கொள்ள முயலும்போது உருவாகும் சிந்தனைகளே மேலெ சொன்னவை
உலகசிந்தனைக்கு அமெரிக்காவின் கொடை என்பது இதுதான்.  அமெரிக்காவிலேயே உருவாகிவந்த, அமெரிக்காவுக்கே உரிய தத்துவசிந்தனை என்பது நடைமுறைவாதம்தான். அது தொடர்ச்சியான பல சிந்தனையாளர்களால் உருவாக்கபப்ட்ட ஒரு சிந்தனை மரபு. அமெரிக்காவின் பெரும்பாலான சிந்தனையாளர்களில் நடைமுறைவாதத்தின் வலுவான செல்வாக்கு உண்டு. அங்கே கல்லூரி வட்டாரங்களில் நடைமுறைவாதம் கிட்டத்தட்ட ஒரு மதக்கொள்கைபோல கடைப்பிடிக்கபப்டுகிரது என்று நான் கற்பனைசெய்துகொள்கிறேன். அமெரிக்க நடைமுறைவாதத்தில் முளைத்த ஒரு சிறு கிளை, மேற்கொண்டு வளர்ச்சி இல்லாமல் நின்றுவிட்ட ஒன்று, தான் அயன் ரான்டின் புறவயவாதம் என சுருக்கிக்கொள்ளலாம்.
நடைமுறைவாதத்தை நான் நிராகரிக்கவில்லை. எனக்கு அதன்மீது பெரும் மோகமே உண்டு. நடைமுறைவாதம் சார்ந்து ஒரு தமிழ் நூலைஇ எழுதுவதாக இருக்கிறேன். ஆனால் என் வழக்கபப்டி நான் ஒரு தத்துவ தரப்பை அதற்கு நெர் எதிரான தரப்பையும் கணக்கில் கொண்டே யோசிப்பேன்.  நான் அத்வைதத்தில் நம்பிக்கை கொண்டவன், ஆனால் எனக்கு உலகாயத சிந்தனைகள் அதே அளவுக்கு முக்கியமானவை. இந்திய உலகாயதச் சிந்தனைகள் வளர்ச்சி குன்றி நின்றுவிட்டன. அவற்றின் வளர்ச்சி முழுமையாக இருந்திருந்தால் எங்கே வந்திருக்குகோ அதுவே அமெரிக்கந் அடைமுறைவாதம். ஆகவே எனக்கு அது மிக முக்கியமானது. ஆனால் அது எனக்கு முழுமையானது அல்ல
அமெரிக்க நடைமுறைவாதம் என்பது அமெரிக்காவுக்கே உரிய இன்னொரு தனித்த சிந்தனைமுறையான ஆழ்நிலைவாதத்துக்கு நேர் எதிரானது. எமர்சன், தோரோ போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட ஆழ்நிலைவாத [Transcendentalism ] த்தால் ‘சீண்டப்பட்டு’ உருவானது என்று கூட சொல்லலாம். மனிதனை உன்னதமான ஒரு படைப்பாக காண்கிறது ஆழ்நிலைவாதம். இயற்கையை பெரும் பேணும்சக்தியாக அணுகுகிறது. இயற்கையின் ஒரு பகுதியான மனிதன் இயற்கையின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்க வேண்டியவன். ஐரோப்பிய மறுமலர்ச்சியில் உருவான இயற்கைவாதத்தின் [Naturalism ]அடுத்த  வளர்ச்சிலை  என ஆழ்நிலை வாதத்தைச் சொல்லலாம்.
இந்த கருதுக்க்களை அயன் ராண்ட் ஒரே சொல்லில் திரள்வாதம் என நிராகரித்து மேலே செல்வார். அதன் சாராம்சமான உணர்ச்சிகளுக்குள் செல்ல அவர் முயல்வதே இல்லை. அயன் ராண்டின் நோக்கிலேயே பார்த்தால்கூட இந்த வகையான இலட்சியவாதச் சிந்தனைகளின் பயன்மதிப்பு என்ன என்று ஆராயலாமே. இவை ஏன் மனிதனில் உருவாயின, எவ்வாறு பரிணாமம் கொண்டன என்று பார்க்கலாமே.  உதாரணமாக தியாகம் என்ற விழுமியம் தர்க்கபூர்வமாக அபத்தமாக இருக்கட்டும். அதன் பயன்மதிப்பு என்ன? ஏன் அது மனிதனில் உருவானது? ஏன் நிலைநிற்கிறது?
எல்லா கருத்துக்களும்  கருவிகள். அவை ஆற்றக்கூடிய பணி என்று ஒன்று  உண்டு. அப்பணியே அவற்றின் நிலைநிற்பை நியாயப்படுத்துகிறது. கருத்துக்களை அவற்றின் பரிணாமம், பயன்பாடு என்ற நோக்கில்தான் நடைமுறைவாதம் கருத்தில் கொள்கிறது.  அயன் ரான் அந்த அளவுக்கு திறந்த மனத்தைக்கூட காண்பிப்பதில்லை. முன்னோடிகளான நடைமுறைவாடக்ச் சிந்தனையாளர்கள் ஆழ்நிலைவாதத்தை விரிவாகவே விவாதத்துக்கு எடுத்துக்கொண்டபின்னர்தன் நிராகரிக்கிறார்கள். அதன் அடிபப்டைகளை தத்துவார்த்தமாக எதிர்கொள்கிறார்கள். அந்த விவாதமே முக்கியமானது.
ஐரோப்பிய தனிமனிதவாதத்தை விரிவாக இங்கே பேச முடியவில்லை. அதன் பல்வேறு படிநிலைகளை மட்டும் சொல்லிச்செல்லலாம். கிரேக்க மரபில் தனிமனிதன் ஒரு முக்கியமான அடிபப்டை அலகாக கருதபப்ட்டான். அதை ந் ம் பிளேட்டோவின் குடியரசு விவாதங்களில் திட்டவட்டமாகக் காணலாம். ஆனால் கிரேக்க தனிமனிதன் என்பவன் ‘குடிமகன்’ [ப்ளீபியன்] மட்டுமே. குடிமக்கள் அல்லாத அடிமைகள் பெண்கள் போன்றவர்களுக்கு தனிமனித உரிமையும் தனித்தன்மையும் அனுமதிக்கப்படவில்லை.
கிரேக்க தனிமனிதவாதம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் மீட்கபப்ட்டபோது அது மானுடம் சார்ந்ததாக உருவகிக்கப்பட்டது. எல்லா தனிமனிதர்களுக்கும் தனித்துவமும் சிந்தனை உரிமையும் உருவகிக்கப்பட்டன. மானுடவாதம் என்ற சிந்தனைமுறையாக இது உருவாகி வந்தது. தனிமனித வாதத்தை  ஒரு கருத்துமுதல்வாத நோக்குடன் இலட்சியக் கோட்பாடாக வளர்த்தெடுத்தது  மானுடவாதம். வால்டேர் ரூசோ போன்றவர்களை இதன் முன்னோடிச் சிந்தனையாளர்களாக நாம் அறிவோம். மானுடவாதமும், இயற்கைவாதமும் கலந்த கலவையே ஐரோப்பாவில் எமர்சன், தோரோ போன்றவரக்ளால் முன்வைக்கப்பட்ட ஆழ்நிலைவாதம். மனிதனின் உள்ளார்ந்த நல்லியல்பு, அவனது இயல்பான சுதந்திரம், மானுட சமத்துவம் ஆகிய மூன்றும் ஆழ்நிலைவாதத்தின் அடிபப்டைக்கருத்துக்கள்.
ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போது மீட்டிருவாக்கம் செய்யபப்ட்ட பொருள்முதல்வாதச் சிந்தனையின் ஒரு பகுதியாகவே தனிமனிதவாதம் புத்துயிர் பெற்றது. ஆனால் அது மானுடவாதவாத்மாக கருத்துமுதல்வாத வளர்ச்சி கொண்டபோது அந்த கருத்துமுதல்வாத கருத்துநிலையை ரத்து செய்யும் சிந்தனைகள் உருவாயின. அவ்வாறு உருவான சிந்தனைகள் மானுட சமத்துவம் என்ற இலட்சியக்கருத்தை நிராகரித்தன. மனிதனின் உள்ளார்ந்த நல்லியல்பு, மானுடனின் பிறப்புச்சமநிலை போன்றவை வெறும் ‘ஆன்மீக ஊகங்கள் ‘ என்று  நிராகரிக்கபப்ட்டன. இயல்பாகவே அவை கிரேக்க தனிமனித வாதத்தை நோக்கி சென்றன. பிளேட்டோ சொல்வதுபோல தகுதி கொண்டவர்களுக்கே தனிமனித உரிமைகள் என்ற நிலையை அடைந்தன. இதை நாம் அமெரிக்க நடைமுறைவாதிகளில் காணலாம்’
இந்த நோக்கையே நாம் அயன் ரான்டில் காண்கிறோம். அவர் தனிமனித உரிமைகளைப்பற்றி பேசுகிறார். ஆனால் அனைத்து மனிதர்களுக்கும் உரிய தனிமனித உரிமைகள் அல்ல. அவை தேர்வுசெய்யபப்ட்ட, தகுதியான, படைப்பூக்கம் கொண்ட ‘ உலகை நிர்மாணிக்கும்’ மக்களுக்கு மட்டுமே உரிய சுதந்திரம் மட்டுமே. ‘பொதுமக்கள்’ இவர்களால் வழிநடத்தப்படவேண்டியவர்கள். கிட்டத்தட்ட பிளேட்டோவின்  நோக்குக்கு அளிக்கப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட வள்ர்ர்சிநோக்கு இது. மானுடவாதம் மார்க்ஸியமாக வளர்ச்சி அடைந்து கண்முன் நின்றபோது அதையும் ஆழ்நிலைவாதத்தையும் முற்றாக ரத்துசெய்யும் நோக்குடன் உருவாக்கபப்ட்ட அதீத நிலையே புறவயவாதம்


என் நோக்கில் எமர்சனின் உணர்ச்சிபெருக்குள்ள ஆழ்நிலைவாதம் ஒரு அதீத எல்லை. அயன் ராண்டின் புரவயவாதம் இன்னொரு அதீத எல்லை. நான் நடுவே செல்லவே விரும்புவேன். அதுவே புத்தர் சொன்ன பாதை

**********

ஓர் இலக்கிய ஆக்கத்துக்கு இருக்கவேண்டிய சுதந்திரமான தேடலும் அதன் விளைவான பரிணாமகதியும் இல்லாமல் முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் கட்டமைக்கபப்ட்ட ஒரு இயந்திரத்தனமான நாவல்தான் அயன் ரான்டின் ஃபௌன்டன் கெட்
அயன் ரான்ட் பேசும் தனிமனிதவாதம் என்பது கிரேக்கசிந்தனையில் வேர்கொண்டு, ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படையாக கருதப்பட்டு மீட்கப்பட்ட ஒன்று. அயன்ரான்ட் அதை மிகைப்படுத்தி அறிவுஜீவிமையவாதமாக ஆக்குகிறார்.
ஐரோப்பியப் பொருள்முதல்வாதத்தில் மார்க்ஸியம் உருவாக்கிய கருத்துமுதல்வாதத்திருப்பத்தை ரத்துசெய்து தூய பொருள்முதல்வாதத்=த்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட அமெரிக்க நடைமுறைவாதத்தில் உருவான ஒரு குறிப்பிட்ட வாதகதி மட்டுமே அயன் ரான்டின் புறவய வாதம்