திங்கள், 30 நவம்பர், 2015

முகநூல் என்பது குட்டி முதலாளித்துவர்களின் சொர்க்கம்.
ஒரு கட்டற்ற சுதந்திரம் (அரசை நேரடியாகப் பகைத்து
sedition chargeக்கு இலக்காகாத வரையில்) இங்கு உள்ளது.
அதனை குட்டி முதலாளித்துவர்கள் இயல்பாக ஒரு
பரிபூரணத்துடன் அனுபவிக்கிறார்கள்.
**
மார்க்சியத்தைக் கற்காத, மார்க்சியத்தைப் பிரயோகிக்காத
பல குட்டிமுதலாளித்துவர்கள் தங்களைத் தாங்களே மாபெரும்
மார்க்சிஸ்டுகளாக வரித்துக் கொண்டு பல்வேறு பதிவுகளை
இட்டு தங்களின் கு.மு அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள்.
**
எத்தகைய சமூகப் பொறுப்பும் இன்றி, பொதுவெளியில்
எழுதுகிறபோது அது படிக்கிறவர்களுக்குப் புரிய வேண்டும்
என்ற அக்கறையின்றி இவர்கள் எழுதுவார்கள். இதில் பலர்
வெறும் சொற்காமுகர்கள் (phrase mongers); வேறு பலர்
வறட்டு மேற்கோள்வாதிகள். வேறு பலர் ஒரு வரி கூட
ஒழுங்காக எழுத இயலாத மூடர்கள்.
**
ஒரு கருத்தை ஆதரிக்கிறானா  அல்லது எதிர்க்கிறானா
என்று கூட அவனது பதிவில் இருந்து அறிய முடியாதபடிக்கு
"எழுதும்" கயவர்கள் பலரும் தருக்கித் திரியும் இடம்
முகநூலே. மகஇகவின் கோவன் கலைஞரைச் சந்தித்த
நிகழ்வு பற்றி எழுதும் மஜஇக ஆதரவாளரின் பதிவில்
வெறும் லெனின் மேற்கோள் மட்டுமே இருக்கும். அந்தப்
பதிவில் இருந்து கோவன் கலைஞரைச் சந்தித்ததை
ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்று எவராலும்
கண்டு பிடிக்க முடியாது.
**
இது போன்ற பதிவுகளிடம்  பதிவர்களிடம் என்ன விதமான
அணுகுமுறையை மேற்கொள்வது? கைகண்ட மருந்து எது?
நமது பதில், பாசிசம்தான். ஜனநாயகம், மார்க்சிசம்,
பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய எல்லாம் பயன் தராது.
ஹிட்லர் முசோலினி போன்றவர்களின் தத்துவம்தான்
இங்கு பயன்படும். நான் அதைத்தான் தீவிரமாகக்
கடைப்பிடிக்கிறேன்.
**
மேற்படி பதிவுகளைப் படிக்க நேர்ந்தால், படித்தபின் காரித்
துப்பி விட்டுச் செல்ல வேண்டும். அல்லது பதிவன் மீது
பாசிசத்தை ஏவ வேண்டும். This is a very simple but effective
solution.
----------------------------------------------------------------------------------------------
   
         


உலகம் முழுவதும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக
கடவுள் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
போப்பாண்டவர் அலறுகிறார். ஆனால் தமிழகத்திலோ
கடவுள் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாத்திகம் எனப்படும் பொருள்முதல்வாதத்தை கொள்கையாகக்
கொண்ட CPI, CPM கட்சிகளே நாத்திகப் பிரச்சாரத்தைக்
கைவிட்டு விட்டன. அதனால்தான் DYFI போன்ற அமைப்புகள்
விநாயகர் படம் போட்டு விழா நடத்துகின்றனர். தோழர் ஜி
ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நமது வேண்டுகோள். "அய்யா,
மக்களிடம் நாத்திகப் பிரச்சாரம் செய்யாவிட்டாலும்
பரவாயில்லை; உங்கள் கட்சி அணிகள், வெகுஜன அமைப்புகளின்
உறுப்பினர்கள் ஆகியோரிடமாவது நாத்திகத்தைக் கொண்டு
செல்லுங்கள்".
உயர் அறிவியலைத் தமிழில் சொல்வது என்பதில் உள்ள
சிக்கல்கள் குறித்து பின்னூட்டங்களில் சொல்லப்பட்ட
என் கருத்துகள் மொழியியல் அறிஞர் திரு தெய்வசுந்தரம்
அவர்களை நோக்கி முன்வைக்கப் பட்டவை ஆகும்.
பேசப்படுகிற சிக்கல் குறித்த விவாதம் 1) அறிவியலிலும்
2) தமிழிலும் 3) மார்க்சியத்திலும் தக்க புலமையைக்
கோருகிறது. திரு தெய்வசுந்தரம் அவர்கள்  இம்மூன்றிலும்
குறிப்பிடத்தக்க அளவு புலமை வாய்ந்தவர் என்னும் தகுதி
பற்றியே அவரிடம் இச்சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்
படுகின்றன. அதற்கு அவர் சில விடைகளைத் தந்துள்ளார்.
**
நிற்க. இம்மூன்றிலும் (அறிவியல், தமிழ், மார்க்சியம்)
தக்க புலமை இன்றி, அறியாமை மிக்கு உள்ளோர்
இந்த விவாதத்தில் மேலெழும் கருத்துக்களைப் புரிந்து
கொள்ள இயலாமல் பிறழ் புரிதலுக்கு ஆளாக நேரிடும்.
அவ்வாறு பிறழ் புரிதலுக்கு இலக்காகி நிற்போர் தமது
வக்கிர மனநிலையை பிறர் மீது சுமத்த முற்படுவர்.
**
திரு தெய்வசுந்தரம் அவர்களின் கண்ணோட்டப்படி,
இப்பதிவும் இம்முகநூல் பக்கமும் Academic Lingustics
மற்றும் அறிவுசார் துறையினருக்கானது. எனவே இதில்
லாவணி பாடுவதைத் தவிர்க்க வேண்டுமாறு கோருகிறேன்.
**
லாவணியில் பெருவிருப்பம் உடையோர் என்னுடைய
முகநூல் பக்கத்துக்கு வருமாறு வேண்டுகிறேன். இதே
கருத்துக்களை அங்கு மறுபிரசுரம் செய்துள்ளேன்.
தமிழறிஞர் தெய்வசுந்தரம் அய்யா அவர்களுக்கு
சிரமம் தர வேண்டாம் என்று வேண்டுகிறேன்.    
சர்வரோக நிவாரணி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை!
-----------------------------------------------------------------------------------
மார்க்சியம் ஒரு சர்வரோக நிவாரணி என்ற கற்பிதம்
உண்மையன்று. மார்க்சியத்தை இஸ்லாம் கிறித்துவம்
போன்ற ஒரு மதமாகப் பார்க்கிற பார்வையே இக்கற்பிதத்தை
தோற்றுவித்தது. கணிதம் படிக்கிற  ப்ளஸ் டூ மாணவன்
கையடக்கமான ஒரு ஃபார்முலா புத்தகத்தை வைத்திருப்பான்.
அதுபோலவே குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்கள்
பலரும், ஒரு சில மார்க்சிய வாய்ப்பாடுகளை மனனம் செய்து
கொண்டு, அதைத் தாண்டிய எதுவும் மார்க்சியம் இல்லை
என்று குதிக்கிறார்கள். இவர்களில் பலர் எந்த விதமான
நடைமுறையும் அற்றவர்கள். அதாவது மார்க்சியத்தைப்
பிரயோகம் செய்து பார்க்காதவர்கள். நிற்க.
**
சமூகத்தின் உற்பத்தியில் பங்கெடுக்காத எந்த ஒரு பிரிவு
மக்களும் சமூக அந்தஸ்தில் பின்னுக்குத் தள்ளப்
படுவார்கள் என்பது சமூக இலக்கணம். இதையே
எங்கல்ஸ் கூறுகிறார். இது உண்மையில் மார்க்சிய
பால பாடம் ஆகும். எனவே பெண்கள் சமூகத்தின்
உற்பத்தியில் பங்கெடுக்கும்போது, பெருமளவிலான
சுரண்டலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.
அன்றாட வாழ்க்கையில் இருந்தே இதை எவர் ஒருவரும்
அறிய இயலும்.
**
ஒரு சமூக அமைப்பில் பல்வேறு விதமான ஏற்றத் தாழ்வுகள்
இருக்கின்றன. பொருளாதாரத் தற்சார்பை அடைவது என்பது
பிற வகைச் சுரண்டல்களில் இருந்து போராடி விடுபடுவதற்கு
முன் நிபந்தனை ஆகும்.
**
மூலதனத்தின் சுரண்டலில் இருந்து விடுபட்ட உடனே
பிற வகையான  அடிமைத்தனங்கள் யாவும் தாமாகவே
அகன்று விடும் என்று கருதுவது மார்க்சியப் பார்வை அல்ல.
சீனத்தில் மாவோ ஏன் பண்பாட்டுத் துறையில் ஒரு
புரட்சியை நடத்தினார் என்று சிந்திப்பது அவசியம்.
அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம் மேல்கட்டிலும் தானாகவே
மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்பது உண்மையல்ல.
**
சமூகத்தின் உற்பத்தியில் பெண்கள் பங்கெடுப்பதன் மூலம்
பெண் விடுதலையை நோக்கி தீர்மானகரமான அடி எடுத்து
வைக்க முடியும் என்று எங்கல்ஸ் கூறுகிறார். எங்கல்ஸ்
கூறியதன் பொருள் இவ்வளவே. இதற்கு மேலும் எங்கல்ஸ்
கூறியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்கு
உரியது. கி.பி 3015 வரைக்கும் எங்கல்ஸ் சொல்வது
பொருந்தும் என்று குதிப்பது நகைப்புக்கு உரியது
மட்டுமின்றி மடமையும் ஆகும்.  
**
பதிவும் பின்னூட்டங்களும் மார்க்சியம் ஒரு சர்வரோக
நிவாரணி அல்ல என்று காட்ட முயல்வதாகவும், "இல்லை
இல்லை, மார்க்சியம் ஒரு சர்வரோக நிவாரணிதான்" என்று
நிரூபிக்க முயல்வதாகவும் அமைந்துள்ளது. இது மிகவும்
துரதிருஷ்ட வசமானது.

மொழியை ஓர் உயிரினத்துடன் ஒப்பிடலாம். சூழலுக்குத் தக்கவாறு
தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் உயிரினங்களே காலத்தை
வென்று வாழ்கின்றன; மற்றவை மடிகின்றன. அதுபோன்று
மாறிவரும் உற்பத்தி முறைக்கு ஏற்றவாறு அதில் பங்கேற்கவல்ல
மொழிகளே வாழும். பிற அழியும்.
**
காலத்தை வென்று நிற்கும் வல்லமை எந்த மொழிக்கும் இல்லை.
மார்க்சியம் மொழி குறித்த ஒரு தொடக்க நிலைச் சித்திரத்தை,
சரியான சித்திரத்தை வழங்கி இருக்கிறது. பின்நவீனத்துவம்
பல படிகள் முன்சென்று, மொழி என்பதை அக்கு வேறு  ஆணி வேறாக
அலசி இருக்கிறது.
**
ஒரு மோட்டார் பைக்கில், ideal roadஇல் அதிகபட்சம் 150 kmph
வேகம் வரை செல்ல முடியும். 1000 kmph வேகம் என்பது
சாத்தியம் அற்றது. அதுபோலவே, pre feudal காலத்தில்
தோன்றிய தமிழ் அக்காலத்துக்கே உரிய கட்டுமானத்தைக்
கொண்டது. நவீன காலத்தின் தேவைகளுக்கு அக்கட்டுமானம்
ஈடு கொடுக்க இயலாது.
**
Academic lingustics அடிப்படையில் நான் பேசவில்லை. காரணம்
அதை நான் கற்கவில்லை. மார்க்சியம் தொட்டு இன்றுவரை
வளர்ந்து வரும் மொழி பற்றிய கருத்துக்களின் அடிப்படையிலும்
எனது சொந்த அனுபவத்திலும் சரியென்று உணர்ந்தவை
பற்றியே நான் கூறுகிறேன்.
**
எனவே, தாங்கள் கூறியபடி வேறொரு தளத்தில் இது பற்றிப்
பின்னர் பேசலாம். ஏனெனில், இத்தளம் பெரிதும் academics
சார்ந்தது.
     
சாகாவரம் பெற்ற மொழி எங்கேனும் உண்டா?
-------------------------------------------------------------------------------
அறிவியல் கலைச் சொற்கள் தமிழில் இல்லை என்பது மொத்தச்
சிக்கலின் ஒரு சிறு விழுக்காடு மட்டுமே. உயர் அறிவியலைத்
தமிழில் சொல்வது என்பதில் கலைச்சொல்லாக்கக் குறைபாடு
மட்டுமின்றி பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அறிவியலைத் தமிழில்
வரையறை செய்வது, தமிழில் விளக்குவது என்பன போன்ற
இடங்களில் தமிழின் போதாமை நன்கு புலப்படுகிறது.
**
16 வயதில் இருந்தே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு
வருகிறேன். மார்க்சிய மூல ஆசான்களின் படைப்புகளில்
இருந்து பல்வேறு பகுதிகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்,
அமைப்பின் தேவை மற்றும் ஆணைக்கு இணங்க. இவ்வாறு
மொழிபெயர்க்கையில் பெருத்த சிரமங்களை உணரவில்லை.
ஆனால், உயர் அறிவியலைத் தமிழில் சொல்ல முற்படும்போது
ஒருவித இயலாமையை உணர்ந்தேன். அந்த இயலாமைக்குக் காரணம் என்னுடைய குறைபாடுகள் மட்டுமன்று என்ற உண்மை
புலப்பட்டது. இங்குதான் மொழியின் போதாமை என்ற விடயமே
முன்னுக்கு வருகிறது.
**
அடுத்து, இந்தியும் தமிழைப் போன்றதுதான். தமிழால்
முடியவில்லை எனும்போது அது இந்திக்கும் பொருந்தும்தான்.
ஆட்சியாளர்களின் பரிவு என்ற ஒற்றைக் காரணி மூலமாக
எந்த மொழியும் வாழ்ந்து விட முடியாது. காலமாற்றங்களை,
சமூக மாற்றங்களை, உற்பத்திமுறை மாற்றங்களை ஊடறுத்துச்
செல்ல வேண்டுமெனில், ஒரு மொழியானது தன்னளவில்
இயல்பிலேயே (inherent) வல்லமை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
இந்தி அத்தகு வல்லமை வாய்ந்த மொழி அல்ல.
**
சாகாவரம் பெற்ற மொழி என்ற ஒன்று இந்த மானுட சமூகத்தில்
உண்டா? உண்டு என்ற விடை அறிவியலுக்கு எதிரான விடையே.
அடுத்து, ஒரு மொழியின் வாழ்நாள் என்பது வரம்பற்றதா?
(infinite). இதற்கு "ஆம்"  என்ற விடை கூறப்படுமானால்,
அவ்விடை அறிவியலுக்கு எதிரானதாகும். இதுவே மார்க்சியம்
ஆகும். 

ஒவ்வொரு மொழிக்கும் பிறப்பு, வளர்ச்சி, உச்சம், சரிவு,
இறப்பு ஆகிய கட்டங்கள் உண்டு. இதற்கு விலக்காக
எந்த மொழியும் இல்லை. அடுத்து, ஒரு மொழியின்
இயக்கத்துக்கும் அம்மொழி பேசப்படும் சமூகத்தின்
பொருள் உற்பத்தி முறைக்கும் நெருக்கமான தொடர்பு
உண்டு. இதைத் தெரிந்து கொள்ள மார்க்சியக் கல்வி
துணை புரியும். நிகழ் சமூகத்தின் பொருள் உற்பத்தி
முறையில் தமிழ் என்ன பங்கு வகிக்கிறது என்பதை
அறிந்து கொண்டால் தமிழின் போதாமை பற்றி
அறிய இயலும். மார்க்சிய நோக்கில் அணுகுதல்
என்பதன் பொருள் அறிவியல் வழியில் அணுகுதல்
என்பதாகும். 
ஒவ்வொரு மொழிக்கும் பிறப்பு, வளர்ச்சி, உச்சம், சரிவு,
இறப்பு ஆகிய கட்டங்கள் உண்டு. இதற்கு விலக்காக
எந்த மொழியும் இல்லை. அடுத்து, ஒரு மொழியின்
இயக்கத்துக்கும் அம்மொழி பேசப்படும் சமூகத்தின்
பொருள் உற்பத்தி முறைக்கும் நெருக்கமான தொடர்பு
உண்டு. இதைத் தெரிந்து கொள்ள மார்க்சியக் கல்வி
துணை புரியும். நிகழ் சமூகத்தின் பொருள் உற்பத்தி
முறையில் தமிழ் என்ன பங்கு வகிக்கிறது என்பதை
அறிந்து கொண்டால் தமிழின் போதாமை பற்றி
அறிய இயலும். மார்க்சிய நோக்கில் அணுகுதல்
என்பதன் பொருள் அறிவியல் வழியில் அணுகுதல்
என்பதாகும்.
ரஷ்ய, பிரெஞ்சு மொழிகள் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகள்
யாவும் ஆங்கிலம் உட்பட காலத்தால் பிந்திய மொழிகள்.
தமிழ் தொன்மையான மொழி. தமிழ் pre feudal காலத்து மொழி.
இனக்குழுச் சமூகமாக தமிழர்கள் வாழ்ந்த காலத்தில்
தோன்றி, நிலவுடைமைச் சமூகக் காலத்தில் உச்சக்கட்ட
வளர்ச்சியை எட்டிய தமிழ், அதன் பின்னான முதலாளிய
சமூகக் காலத்தில் வளரவில்லை. ஆனால் ரஷ்ய மொழி
ஆங்கிலம் போன்றவை post feudal காலத்தவை. எனவே நவீன
அறிவியலை அம்மொழிகளில் சொல்வது எளிது. மொழிக்கும்
சமூகத்தின் உற்பத்தி முறைக்கும் உள்ள உயிரோட்டமான
தொடர்பு குறித்த அறிவு இல்லாமல், மொழிகளின் இயக்கத்தைப்
புரிந்து கொள்ள இயலாது. 
உயர் அறிவியலைத் தமிழில் சொல்ல இயலாமை
-------------------------------------------------------------------------------
நவீன அறிவியலில், குறிப்பாக கணினியியலில் பெருமளவு
சொற்குறுக்கங்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக,
SMPS (Switch Mode Power Supply), ATM (Asynchronous Transfer Mode),
முதலியன. தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 216 உயிர்மெய்கள்
உள்ளன. எனவே சொற்குறுக்கங்களைக் கையாள ஏதுவானதாக
தமிழ் இல்லை. இயல்பிலேயே தமிழ் அவ்வாறு இல்லை.
ஏனெனில், தமிழ் என்பது pre feudal காலத்து மொழி.
**
நவீன காலப் பேரெண்களைக் குறிக்க தமிழில் சொற்கள் இல்லை.
million, billion, trillion, quadrillion, quintillion, sextillion, septillion, octillion
என்று தொடரும் எண் வரிசையை தமிழில் கூறுவது எங்ஙனம்?
பதின்ம அளவையின் முன்னொட்டுகளான (metric unit prefix)
mega, giga, tera மற்றும் milli, micro, nano, pico, femto ஆகியவற்றுக்கு
இணையான தமிழ்ச் சொற்கள் இல்லை.
**
இன்னும் நிறையக் கூறலாம். தமிழ் வழியில் படிப்பவர்கள்
அப்படியே ஆங்கிலச் சொற்களை எடுத்தாள்கிறார்கள்.
வேதியியலில் அத்தனை தனிமங்களும் ஆங்கிலப் பெயரில்தான்
உள்ளன. வேதியியல் சமன்பாடுகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன.
5 + 3 என்பதை அஞ்சு ப்ளஸ் மூணு என்றுதான் கற்கிறார்கள்;
ப்ளஸ் என்ற சொல்தான் நான் ஆரம்பப் பள்ளியில்
படித்த காலந்தொட்டு இன்றுவரை பயன்படுகிறது.
**
எனவே உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதைத் தவிர்த்து
அறிவுபூர்வமாகச் சிந்திக்கையில் பின்வரும் முடிவுக்கு
ஒருவர் வருவது தவிர்க்க இயலாததே. அது இதுதான்:
உயர் அறிவியலைத் தமிழில் சொல்ல இயலாது.                  
99 மலர்கள் வரை குறிப்பிட்ட கபிலர் நூறாவது மலரை
ஏன் குறிப்பிடவில்லை? குறிப்பிடத் தேவை இல்லை.
ஏனெனில் தலைவிதான் நூறாவது மலர்.
(எனது பேராசிரியர் வகுப்பில் கூறியது)
இலக்கிய வினாடிவினா போன்ற நிகழ்ச்சிகளை
நடத்துவது குறித்தல்ல இந்த விவாதம். தமிழில்
அறிவியலை எழுதுதல் குறித்து. ஆரம்ப நிலையிலான
அறிவியலை  மட்டுமே (elementary stage) தமிழால் சொல்ல
முடிகிறது. உயர்நிலை அறிவியலைத் தமிழில்
சொல்ல இயலவில்லை.

அறிவியலைத் தமிழில், தனித்தமிழில் எழுதலாம்தான்.
எதுவரை? 12ஆம் வகுப்பு மாணவனின் தரம் வரை. அதற்கு மேல்
எழுதத் தமிழ் இடமளிக்கவில்லை. இது ஏதோ பழக்க வழக்கம்
சார்ந்த விஷயம் அன்று. கல்லூரி வகுப்பு மற்றும் அதற்கு
மேற்பட்ட வகுப்புகளுக்கான அறிவியல், மற்றும் இன்று
இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவியலை
தமிழில் எழுத இயலாது. இது எழுதுவோரின் குறையன்று.
தமிழின் போதாமையே. prefeudal, feudal காலத்தைத் தாண்டி
தமிழ் வளரவில்லை. இதுவே உண்மை, கசப்பாக இருப்பினும். 

ஞாயிறு, 29 நவம்பர், 2015

அய்யா,
தமிழ் உள்ளிட்ட சில மொழிகள் அழிவின் விளிம்பில்
இருப்பதாகவும் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இந்தச் சில
மொழிகளின் அழிவு தொடங்கி விடும் என்றும் ஐ.நா மன்ற
அறிக்கை கூறுகிறது. இது குறித்து கவிஞர் வைரமுத்துவும்
தமிழறிஞர் குமரி ஆனந்தனும் கண்ணீரும் கம்பலையுமாக
விடுத்த அறிக்கைகள் ஓராண்டுக்கு முன்னரே தமிழ்நாட்டில்
வெளியாகின.

தமிழ்ச் சமூகத்தின் பொருள் உற்பத்தியில் தமிழ் என்ன இடம்
வகிக்கிறது என்பதைப் பொறுத்தே தமிழின் எதிர்காலம்
அமையும். சமூகத்தின் பொருள் உற்பத்தி என்பது அறிவியல்
தொழில்நுட்பம் சார்ந்தது, அறிவியல்-தொழில்நுட்பத்தில்
தமிழுக்கு என்ன இடம் இருக்கிறது என்று பார்த்தால்,
சொல்லிக்கொள்ள வல்ல எந்த இடமும் இல்லை என்பது
கண்கூடு. சமூகத்தின் பொருள் உற்பத்தியில் பங்கேற்காத
எந்த மொழியும் நிலைத்து நிற்க இயலாது. இது ஒரு
மார்க்சிய பால பாடம்.

தமிழ் தொன்மை மிக்க மொழி என்கிறோம். அது 100 விழுக்காடு
உண்மையே. அதே நேரத்தில், தொன்மை மிக்க மொழி
என்பதன் பொருள் தமிழ் நவீன மொழியாக இல்லை
என்பதே. நிலவுடைமைச் சமூகத்துக்கு முந்திய காலத்தில்
தோன்றியது தமிழ். (born during pre feudal period). நிலவுடைமைச்
சமூக காலத்தில் வளர்ச்சியின் உச்சம் கண்டது தமிழ்.

இன்றைய காலம் நிலவுடைமைக்குப் பிந்திய காலம்.
இன்னும் சொல்லப்போனால் ஏகாதிபத்திய காலம்.
(post feudal and imperial period) இக்காலத்திற்கு ஏதுவானதாக
இசைவானதாகத் தமிழ் இல்லை என்பது உள்ளங்கை
நெல்லிக்கனி. Pre feudal காலத்தில் தோன்றிய தமிழ்,
Post feudal காலத்தில் பொருந்தி நிற்க இயலவில்லை.

எல்லா மொழிகளுக்கும் ஓர் ஆரம்பம், வளர்ச்சி, உச்சம்,
சரிவு, இறுதி என்ற கட்டங்கள் உண்டு. இதற்குத் தமிழும்
விலக்கன்று. இதுதான் தமிழின் எதிர்காலம் குறித்த
அறுதி உண்மை.

நிலைமை இவ்வாறிருக்க, கூடம் தெரியாமல் சாமி ஆடும்
மூடனைப் போல, தனித்தமிழ் தலிபான்கள் தமிழின்
முடிவை விரைந்து தருவிக்கின்றனர். வணக்கத்துக்குரிய
மறைமலையடிகளின் தனித்தமிழ்க் கொள்கைகள் இன்று
ஒரு சிறிதும் பொருந்தா என்பதை அறிவியல் வழியில்
சிந்திக்கும் எவரும் உணர இயலும்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழில் அறிவியலை எழுதி
வருபவன் என்ற முறையில் என் பட்டறிவின் வழி
மேற்கூறிய உண்மைகளை உணர்ந்துள்ளேன்.

தங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
     


இது மார்க்சிய அறிவு சார்ந்த விடயம் அல்ல.
மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாத அறியாமை
இருக்குமேயானால், அதைக் குணப் படுத்த இயலும்.
இது அவர்களின் (CPM கட்சி) நிலைப்பாடு சார்ந்த விடயம்.
கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்குப் போட்டியாக, கட்சி சார்பாக
(நன்கு கவனிக்கவும்: கட்சி சார்பாக) கிருஷ்ண ஜெயந்தியைக்
கொண்டாடினார்கள். இங்கு ராமகோபாலனுக்குப்
போட்டியாக பிள்ளையார் சதுர்த்தி மற்றும் ஆயுத பூஜையைக்
கொண்டாடுகிறார்கள். வங்கத்தில் துர்கா வழிபாட்டில்
(காளி வழிபாடு) முன்னணியில் நின்றார்கள். இந்துத்துவத்தை
பாஜகவிடம் இருந்து தங்களிடம் வைத்துக் கொள்வதே
மார்க்சிஸ்டுகளின் திட்டம். 
ராமகோபாலன் படுதோல்வி!
மார்க்சிஸ்டுகள் வெற்றி!
எதில்? பிள்ளையாரை வணங்குவதில்!
---------------------------------------------------------------
தமிழ்நாட்டில் பிள்ளையாரைப் பெருமளவு போற்றியவர்
பட்டிதொட்டி எல்லாம் பரப்பியவர் ராமகோபாலன்ஜி
அவர்கள். ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியை
தமிழ்நாடு முழுவதும் கொண்டாடியவர் ராமகோபாலன்ஜி.
பிள்ளையார் என்றால் ராமகோபாலன்; ராமகோபாலன்
என்றால் பிள்ளையார் என்று சொல்லும் அளவுக்கு
பிள்ளையாருடன் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்டவர்,
அடையாளப் படுத்திக் கொண்டவர் ராமகோபாலன்ஜி.

ஆனால், இன்று காலம் மாறி விட்டது. ராமகோபாலன்ஜிக்கு
போட்டியாளர்களாக மார்க்சிஸ்டுகள் வந்து விட்டனர்.
பிள்ளையாரை வணங்கும், போற்றும் போட்டியில் அவர்கள்
ராமகோபாலன்ஜியைத் தோற்கடித்து விட்டனர்.

இதோ படத்தைப் பாருங்கள். மார்க்சிஸ்ட் இளைஞர் அமைப்பான மன்னிக்கவும் வாலிபர் அமைப்பான DYFI வெளியிட்டுள்ள
சுவரொட்டியைப் பாருங்கள். புரட்சியாளர்கள் பகத்சிங்,
சேகுவேரா ஆகியோருடன் நடுநாயகமாக பிள்ளையார்
மன்னிக்கவும் விநாயகர் நிற்கிறார்.

டாக்டர் சேகுவேரா ஒரு பிள்ளையார் பக்தர் என்ற ஒரு
ஆராய்ச்சி நூலை நாளையே மார்க்சிய அறிஞர் பிரகாஷ்
காரத்ஜி  எழுதக் கூடும். அந்த நூலை  அமித்ஷாஜி  வெளியிடக்
கூடும். முதல் பிரதியைப் பெற வெளிநாட்டுச் சுற்றுப்
பயணத்தை ரத்து செய்து விட்டு மோடிஜி வரக்  கூடும்.
விழா ஏற்பாடுகளை ராஜாஜி மேற்கொள்ளக் கூடும்.
( இங்கு ராஜாஜி என்பது ஹெச் ராஜா அவர்களைக் குறிக்கும்)

வாழ்க இந்துத்துவம்!
காரல் மார்க்ஸ் ஒழிக!
உண்மையான இந்துத்துவக் கட்சி CPM ஜிந்தாபாத்!
(நன்றி: படம் வினவு இணையதளம்)
***************************************************************
    

புலிகளும் ஹோமியோபதியும்
-----------------------------------------------------
1) யுத்தத்தில் இறுதி வரை ஊன்றி நின்றவர்கள் புலிகள்.
சாதியை அவர்கள் பேணி இருப்பார்களேயானால்,
ஒரு எஃகு உறுதி கொண்ட ஒற்றுமையைக் கட்டி இருக்க
முடியாது. நீண்ட காலம் யுத்தம் நடத்தி இருக்க முடியாது.
ஒரு நீதியான யுத்தம் போராளிகளின் சகல மாசுகளையும்
சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நிற்க. முகநூலில் பதிவு
இடும் குட்டி முதலாளித்துவ நபர்களை வைத்துக் கொண்டு
புலிகளை மதிப்பிட இயலாது. புலிகள் ஆயுதப் போராட்டத்தை
நடத்தியவர்கள். புலிகள் பற்றிய மதிப்பீடு என்பது அவர்களின்
மக்கள் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றிய
மதிப்பீடுதான். தோழர் ஏ.எம்.கே அவர்களின் புரட்சிகர
வழிகாட்டுதலின் கீழ் மஜஇக அமைப்பு புலிகள் மற்றும்
ஈழ விடுதலை குறித்து மிகச் சரியான கருத்துக்களைக்
கொண்டிருந்தது என்பது நாம் அறிந்ததே.

2) பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி, அதே நூற்றாண்டின்
இறுதியில் போலி மருத்துவம் என்று நிரூபிக்கப் பட்டதுதான்
ஹோமியோபதி. இது ஒரு போலி அறிவியல் ( pseudo science)
ஆகும். இதற்கும் மார்க்சிய இயங்கியலுக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. உலக நாடுகளாலும் மக்கள் சமூகத்தாலும்
தொடர்ந்து நிராகரிக்கப் பட்டு வருகிறது ஹோமியோபதி.

3) மேற்சொன்ன இரு கருத்துக்களையும் விளக்கி தனிக்
கட்டுரையோ அல்லது தொடர் கட்டுரையோ எழுதினால்தான்
கருத்து விளக்கம் பெறும். ஓரிரு வாக்கியங்களால் ஆன
பின்னூட்டத்தில் கருத்து விளக்கம் உறுதல் இல்லை.
சில நாட்களில் தனிக்கட்டுரை எழுத உள்ளேன். நன்றி.
  
எவ்வளவு அழகான முற்போக்கு கருத்து!
தமிழக மற்றும் இந்திய முற்போக்காளர்கள்
இவரை ஆதர்சமாகக் கொள்ள வேண்டும்.
நீங்கள் புலிகளை அவதூறு செய்வதாக நான் எங்கும்
கூறவில்லை.புலிகள் பற்றிய தங்கள் பார்வை சரியல்ல
என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். அடுத்து
ஹோமியோபதியையும் இயங்கியலையும் தாங்கள் தொடர்பு
படுத்துவது நகைப்புக்குரியது.  விசுவரூபம் எடுத்து
வளர்ந்து நிற்கும் அறிவியலில் இருந்து முற்றிலுமாகத்
துண்டித்துக் கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய
தவறான கருத்தைக் கொண்டிருக்க முடியும்.  
பொய்யான குற்றச்சாட்டுகள். புலிகள் இயக்கம் சாதியத்தை
எதிர்த்துப் போரிட்டு ஒழித்துக் கட்டிய இயக்கம். இசுலாமிய
எதிர்ப்புக் கண்ணோட்டம் இருந்ததாகக் கூறுவதும்
உண்மையல்ல. இசுலாமியர்களில் சிலர் தமிழ் ஈழம்
என்ற கோட்பாட்டை ஏற்கவில்லை. அவர்கள் சிங்கள
அரசுடன் சேர்ந்து செயல்பட்டனர். புலிகள் இதை
எதிர்கொள்ள நேர்ந்தது. எதிர்கொண்டனர். இது இசுலாமிய
எதிர்ப்பு ஆகாது.   அடுத்து, ஹோமியோபதிக்கும்
இயங்கியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இப்பதிவு முழுவதும் தவறான உண்மையற்ற
கருத்துக்களால் ஆனது.
நலம். சொல்லுங்கள் எவ்வளவு பணத்துக்கு வாங்க உத்தேசம்?

1000 ரூபாய் மதிப்புக்கு?
சரி, நாளை ஒரு பட்டியலைப் பரிந்து உரைக்கிறேன்.

சரி, ஒரு விளக்கம் மற்றும் ஒரு பட்டியல். இரண்டும் நாளை அளிக்கிறேன்.
தேசியத் தலைவருக்கு அவர் பிறந்த நாளிலும்
மாவீரர்  நாளிலும் அஞ்சலி!
தமிழகத்தின் ஈழப் போலி ஆதரவாளர்கள்
இனிமேலாவது திருந்த வேண்டும்!
-------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------------------------
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன்
அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26. இவ்வாண்டு
2015 நவம்பர் 26 அன்று தேசியத் தலைவரின்
பிறந்த நாளை திருநெல்வேலியில் கொண்டாடிய போது
அந்நிகழ்வில் பங்கேற்றேன்.

1954 நவம்பர் 26இல் பிறந்த தேசியத் தலைவர் அவர்கள்
இன்று (2015 நவம்பர் 26) உயிருடன் இருப்பாரேயானால்
அவருக்கு 62ஆவது அகவை பிறந்திருக்கும்.

தொடர்ந்து மாவீரர் நாளிலும் (நவம்பர் 27,2015)
தேசியத் தலைவர் உள்ளிட்ட மறைந்த அனைத்துப்
போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தப் பட்டது.

ஒவ்வோராண்டும் நவம்பர் 27 அன்று தேசியத் தலைவர்
அவர்கள் மாவீரர் நாள் அஞ்சலியுரை நிகழ்த்துவார்.
2009 நவம்பர் 27 முதல் இன்று 2015 நவம்பர் 27 வரை
முழுசாக ஏழு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இந்த ஏழு ஆண்டுகளிலும் தேசியத் தலைவரின் உரையைக்
கேட்க முடியவில்லை. காரணம் தேசியத் தலைவர்
அவர்கள் 2009 மே 18 அன்று வீரமரணம் அடைந்து
விட்டமை ஆகும்.

இனிமேலும் தமிழ் தேசியப் பிழைப்புவாதிகளும்
ஈழப் போலி ஆதரவாளர்களும் தேசியத் தலைவர்
அவர்கள் இறந்து விட்டார் என்ற உண்மையை மூடி
மறைக்காமலும், தேசியத் தலைவர் அவர்கள் எங்கோ
கண்காணாத இடத்தில் உயிரோடு இருக்கிறார் என்ற
இழிந்த பொய்யைச் சொல்லாமலும் மாவீரர் நாளன்று
தேசியத் தலைவர் உள்ளிட்ட வீர மரணம் அடைந்த
அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி
செலுத்த முன்வர வேண்டும்.
****************************************************************** 

    

சனி, 28 நவம்பர், 2015

அறிவியல் விளக்கம்
-------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
கொடுக்கப்பட்ட வீடியோ காட்சியில், ஒருவர் சூடான பாலை
ஆற்றுகிறார். சுழன்றுகொண்டே ஆற்றுகிறார். அவர்
சுழன்றாலும் பாத்திரத்தில் இருந்து பால்
சிந்துவதில்லை. இது பார்ப்பவருக்கு வியப்பைத் தருகிறது.
எனினும் சிறிது பயிற்சிக்குப் பின், ஆர்வம் உள்ளவர்களால்
இதை எளிதில் செய்ய இயலும்.

அவர் பயன்படுத்தும் இரண்டு பாத்திரங்களும் அ) வாயகன்ற
விளிம்பில் மடிந்து ஒரு விரற்கடை அளவுக்கு நீண்டவை.
ஆ) உள்ளிருக்கும் பாலை விட கொள்ளளவு அதிகமானவை.
இ) வழக்கமாக காப்பி ஆற்றும் தம்ளர்களை விட உயரமானவை.
ஈ)இரு பாத்திரங்களும் கைப்பிடி உடையவை (அல்லது கைப்பிடி
போன்று பிடித்துக் கொள்ள வசதி உடையவை).

இதனால், பாலை வேகமாக ஆற்றும்போதோ, சுழன்றுகொண்டே
ஆற்றும்போதோ பால் சிந்தி விடாமல் இருக்க ஏதுவாகிறது.
சுருங்கக் கூறின், the geometry of the containers is helpful in preserving
the liquid without spilling.

சூடான பாலை குடிப்பதற்கு ஏற்ற சூட்டில் தருவதற்காக,
அதை ஆற்றித் தருவார்கள். சூடான பால் convection மூலமாக
சூட்டை இழக்கிறது. இது அன்றாடம் நம் வாழ்வில் பயன்படும்
இயற்பியல் கோட்பாடு. இது அனைவரும் அறிந்ததே.

இங்கு சுழன்றுகொண்டே பாலை ஆற்றும்போதும், பால்
சிந்தாமல் எப்படி ஆற்ற முடிகிறது என்பதுதான் கேள்வி.

பாலை ஆற்றுபவர் இரண்டு விதமான இயக்கங்களை (motions)
மேற்கொள்கிறார். தமது இடுப்பை ஒரு புள்ளியில் (சிறிய ஸ்டூல்)
இருத்திக் கொண்டு வட்டமாகச் சுற்றுகிறார். (This is a circular motion).

அடுத்து அவரின் உடலின் மேற்பகுதியில் இன்னொரு இயக்கம்
நடைபெறுகிறது. தம் கைகளால் பாலை ஆற்றுகிறார். இவ்விரு
இயக்கங்களும் ஒன்றையொன்று பாதிப்பதில்லை. எனவே
பால் சிந்துவதில்லை.   



புதன், 25 நவம்பர், 2015

உண்மைதான். நூறு கோடிக்கும் மேற்பட்ட இசுலாமிய
மக்கள் தொகையில் நாத்திகர்கள் எத்தனை பேர்?
அவ்வளவு பேர் மீதும் இசுலாமிய மதபீடங்களின்
பட்வா (மதக்கட்டளை) இருக்கிறது. உயிருக்குப் பயந்து
நாடு நாடாகத் தஞ்சம் கேட்டு வாழ்கிறார்கள் சல்மான் ருஷ்டி,
தஸ்லிமா நஸ்ரின் போன்றோர். நாத்திகராக இருந்த
தோழர் இன்குலாப் (இசுலாமியர்) எவ்வளவு துன்ப
துயரங்களை அனுபவித்தார் என்பதை இடதுசாரியினர் அறிவர்.
பொதுவில், இசுலாம், நாத்திகத்தை மூர்க்கத் தனமாகவும்
வெறித்தனமாகவும் ஒடுக்குகிறது. 
குருட்டு நாத்திகமும் போலிப் பகுத்தறிவும்
மதவெறியர்களிடம் தோல்வி அடையும்!
தமிழகத்தில் நாத்திகத்தின் எதிர்காலம்!
-------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------
உலகில் மனித இனம் தோன்றிய காலம் முதல்
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் பிற விலங்கினங்கள்
போன்றே வாழ்ந்து வந்தான். மானுட வாழ்க்கை நீண்ட
நெடிய கட்டங்களைக் கடந்த பின்னரே, மனிதன் கடவுளைக்
கற்பித்தான். இதன் பின்னரான நீண்ட கட்டங்களுக்குப்
பிறகே மதம் தோன்றியது. மனிதனின் அற்புதமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று கடவுள்.

இன்று இந்த 2015இல், உலகெங்கும் கடவுள் நம்பிக்கை
குறைந்து வருகிறது. உலகின் பெரும்பான்மையான
மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கிறித்துவம் தன்
பிடியை இழந்து வருகிறது. கிறித்துவத்தின் செல்வாக்கில்
இருந்து விடுபட்டு கோடிக்கணக்கான மக்கள் நாத்திகர்களாக
மாறி வருகிறார்கள்.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளிலும் முன்னாள் கம்யூனிஸ்ட்
நாடுகளிலும் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்கள்
நாத்திகர்களாகவே இருந்து வருகிறார்கள். இசுலாமிய நாடுகளில் 
வாழும் மக்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் இசுலாமியர்கள்
ஆகியோரிடம் மட்டுமே அதிதீவிர கடவுள் நம்பிக்கை இருந்து
வருகிறது. மக்களின் சிந்தனையையும் சிந்தனையைத்
தூண்டும் அறிவியலையும் இசுலாம் விலங்கிட்டு வைத்து
இருப்பதால்தான், இசுலாம் மதத்தில் இருந்து நாத்திகத்தை
நோக்கிய பயணம் வெற்றி பெறுவதில்லை.

உலக மக்கள் தொகையில் மிக மிகக் குறைவான மக்களால்
பின்பற்றப் படும் சீக்கிய மதமும் இஸ்லாம் மதத்தைப் போன்றே
தன் மக்களின் சிந்தனையை விலங்கிட்டு வைத்து இருக்கிறது.
எனவே சீக்கியர்கள் நடுவில் இருந்து நாத்திகம் பிறப்பது
முயல் கொம்பே. சீக்கியர்களில் முதல் நாத்திகர் பகத் சிங்.
கடைசி நாத்திகரும் அவரே.

இந்து மதம் தனக்கென ஒரு இறுக்கமான கட்டமைப்பைக்
கொண்டிராத ஒரு மதம். மேலும் கோட்பாட்டு ரீதியாக
நாத்திகம் இந்து மதத்தின் ஒரு பிரிக்க இயலாத கூறாக
உள்ளது. தனி மனிதனின் மீதான மதத்தின் பிடி, மிக மிகத்
தளர்வாக அல்லது அறவே இல்லாத மதம் இந்து மதம்.

பௌத்தம் ஒரு நிறுவனமயமான மதமாக ஆன பிறகும்
கூட, பிற நிறுவனமயமான மதங்களான கிறித்துவம் இசுலாம்
போல, மக்கள் மீதான தன் பிடியை இறுக்கவில்லை.
தாராளப் போக்குகளைக் கொண்ட ஒரு லிபரல் மதம்தான் அது.

இந்தியச் சூழலில் பௌத்தம் சமணம் ஆகிய மதங்கள் இந்து
மதத்தின் கிளைகள் போலவே செயல்படுகின்றன. பௌத்தரான
ராஜபக்சே திருப்பதிக்கு வந்து அங்குள்ள இந்துக் கடவுளான
வெங்கடேசப் பெருமாளை வணங்கிச் சென்றது இங்கு நினைவு
கூரத் தக்கது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தவிர்க்க இயலாத
ஒரு விளைவு, முன்னேறிச் சிந்திக்கும் மக்களுக்கு (those who
can think ahead of the society)   கடவுள் மீதான நம்பிக்கையை
இழப்பதற்கான வாய்ப்பைத் தருகிறது என்பதாகும்.  

1) அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அசுரத்
தனமான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி
2) மேற்கூறிய அறிவியல் வளர்ச்சியானது மானுடத்தின்
சிந்தனையைக் கவ்விப் பிடித்திருக்கும் இறுக்கமான
விலங்குகளை உடைத்தெறிந்து, மானுட சிந்தனையின்
கதவுகளை விசாலமாகத் திறந்து வைத்தமை
3) அமெரிக்க ஐரோப்பிய சமூகங்களில் நிலப்பிரபுத்துவம்
முற்றிலுமாகத் தகர்க்கப் பட்டு, மக்களின் பங்கேற்புடன்
கூடிய முதலாளித்துவ ஜனநாயகம் மலர்ந்தமை

மேற்கூறிய மூன்று காரணிகளும் அமெரிக்க ஐரோப்பிய
சமூகத்தில், மக்களின் மீதான கிறித்துவத்தின் பிடி
தளர்ந்தமைக்கும் நாத்திகம் பரவலாக ஏற்கப் படுவதற்குமான
காரணிகளில் சிலவாகும்.

மன்னராட்சி, ராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி
நடக்கும் இசுலாமிய நாடுகளில், ஐரோப்பிய நாடுகளைப்
போன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியோ அல்லது
முதலாளித்துவ ஜனநாயகமோ ஏற்பட வில்லை. எனவே
இயல்பாக அந்நாடுகளில் நாத்திகம் முளைவிடவே
இல்லை.

மதமும் கடவுளும் அதன் உச்சாணிக் கொம்பில் சகல
அதிகாரத்துடன் அதாவது முற்றிய சர்வாதிகாரத்துடன்
ஆட்சி நடத்திய காலம் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் மட்டுமே,
நிலப்பிரபுத்துவம் தகர்க்கப்பட்டு அதன் சாம்பலில்
முதலாளித்துவ சமூகம் உருவானது என்பது நாத்திகம்
முகிழ்ப்பதற்கு ஏதுவான சூழலைத் தந்தது.

முதலாளிய சமூகம் என்னும் நாற்றங்காலில் நடப்பட்ட
நாத்திக நாற்றுக்கள், அறிவார்ந்த சோஷலிச சமூகம் 
என்னும் வயலில் பிடுங்கி நடப்ப்படும்போது, பயிர்
செழிக்கும்.

நிற்க. மேற்கூறிய கருத்துக்கள் யாவும் சமகால
சமூகத்தைப் பொருள்முதல்வாத நோக்கில் ஆராயும்
எவரும் வந்தடைகிற முடிவுகளே. இக்கருத்துக்கள்
யாவும் அடுத்து எழுதப்போகும் ஒரு கட்டுரையின்
பீடிகைகளே. அடுத்த கட்டுரை தமிழகச் சூழலில்
நாத்திகம் என்ற தலைப்பில் அமையும்.

குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்களும் போலிப்
பகுத்தறிவுவாதிகளும் குருட்டு நாத்திகர்களும்
நிறைந்துள்ள ஒரு சமூகச் சூழலில் தமிழ்நாட்டில்
நாத்திகமும் அதன் எதிர்காலமும் என்பது குறித்து
பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்கப் பெறும்.
******************************************************************  
     
   
 

    
       

செவ்வாய், 24 நவம்பர், 2015

ஏசண்ணன் அவர்கள் (கே ஜே யேசுதாஸ்) தியாகையரின்
மறு அவதாரம் என்ற என் கருதுகோளுக்கு ஆதாரமாகத் திகழும்
பாடல்களில் இப்பாடலும் ஒன்று.  எனினும் இப்பாடல் எடிட்
செய்யப்பட்டு உள்ளது. முழுமையான ஒன்றை இங்கு தந்துள்ளேன்.
(குறிப்பு: இப்பாடலின் இசை மேன்மையை நுகரவும் போற்றவும்
ஒருவன் கடவுள் பக்தனாக இருக்க வேண்டியதில்லை. ஆனால்
இசையார்வமும் இசையறிவும் இருந்தால் போதும். எனவேதான்,
ஐயப்பனை, கடவுளை ஏற்காத நிலையிலும் இப்பாடலின்
இசை விழுமியத்தில் நெஞ்சைப் பறி கொடுக்க முடிகிறது).   

திங்கள், 23 நவம்பர், 2015

நாகர்கோவில் அல்போன்ஸ் மேனிலைப் பள்ளியில்
15.11.2015 அன்று நடைபெற்ற அறிவியல் திறனறி தேர்வு
(அறிவியல் ஒளி ஏடும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக்
கழகமும்  இணைந்து நடத்தும் தேர்வு) குறித்த காட்சிகள். 

சனி, 21 நவம்பர், 2015

1 செ.மீ மழை பெய்தது என்பதன் பொருள் என்ன?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------
மழை அளவுக் கருவிகள் (rain gauge) யாவும் நிலத்தில் பெய்த 
மழையின் உயரத்தை மட்டுமே அளக்கும். 10 அடிக்கு 10 அடி 
உள்ள உங்கள் வீட்டு முற்றம் என்றாலும் சரி, அல்லது 
10 ஏக்கர் பரப்புள்ள ஒரு மைதானம் என்றாலும் சரி,
1 செ.மீ மழை  பெய்தது என்றால், அந்தந்த நிலத்தில் 
1 செ.மீ உயரத்துக்கு மழை பெய்தது என்றுதான் பொருள். 
அதாவது, மழையை அளத்தல் என்பது நிலத்தின் பரப்பளவைச்
சாராமல், உயரத்தை மட்டுமே அளப்பதாகும்.

1 செ.மீ மழை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
-------------------------------------------------------------------------------- 
1 செ.மீ மழை  பெய்தது என்று எடுத்துக் கொள்ளுவோம்.
ஒரு சதுர மீட்டர் பரப்பில் 1 செ.மீ உயரத்திற்கு மழை பெய்தது 
என்று வைத்துக் கொண்டால்,ஒரு சதுர மீட்டர் பரப்பில் 
10 லிட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது என்று பொருள்.

எளிய கணக்கு:
-------------------------
5 செ.மீ மழை பெய்துள்ளது என்றால், 1 ச.மீ  பரப்பில் 
எவ்வளவு மழைநீர் சேகரம் ஆகி இருக்கும்?
விடை:
----------- 
 1 சதுர மீட்டர் = 100 செ.மீ X 100 செ.மீ 
எனவே, மழை அளவு = 5 செ.மீ X 100 செ.மீ X 100 செ.மீ 
.............................................= 50000 கன செ.மீ 
.............................................=   50 லிட்டர்.
************************************************************       

வெள்ளி, 20 நவம்பர், 2015

ராகுல் காந்தியைப் பற்றி வரும் செய்திகள் 
அதிர்ச்சி அளிக்கின்றன!
----------------------------------------------------------------------
ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று இருந்தார் 
என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருந்தார்.
இருந்து விட்டுப் போகட்டுமே, அதனால் என்ன? இதுபோன்ற 
வெறும் செய்நுட்பக்கூறு சார்ந்த அற்ப விவரங்களை 
(a mere technicality, that too, trivial) பிரம்மாஸ்திரம் போல 
ஏவுவதால் என்ன பயன் விளையும்? சுவாமியின் 
வாள் வீச்சுகள் வெறும் அதிர்ச்சி மதிப்பைத் தவிர 
வேறு எதைத் தரும்? தந்து விட முடியும்? அதுவும் 
250 வோல்ட் அதிர்ச்சி அல்ல;  வெறும் 3 வோல்ட்
அதிர்ச்சிதான். 

எங்கோ அல்பேனியாவில் பிறந்து இந்தியாவுக்கு வந்து 
தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சேவை 
செய்த அன்னை தெரசா இந்தியராகவே அறியப் பட்டார்.   
அயர்லாந்தில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபிள் என்ற 
பெண்மணி விவேகானந்தருடன் இந்தியா வந்து கல்கத்தாவில் 
தங்கி ஆன்மீகப் பணிகளைச் செய்தார். சகோதரி நிவேதிதா 
என்று அறியப்பட்ட அவர் இந்தியராகவே மக்களால் 
ஏற்கப்பட்டார்.

ராகுல்காந்தி அந்நியர் அல்லர்.அந்நிய நாட்டவர் அல்லர்.
அவர் இந்தியரான நேருவின் கொள்ளுப் பேரன். நேரு-இந்திரா-
ராஜீவ்-ராகுல் என்ற வரிசையில் வரும் ராகுல் காந்தியை 
அந்நியர் என்று கூறுவதை எவரும் ஏற்கப் போவதில்லை.
எனவே, இதுபோன்ற frivolous objectionகளை எழுப்புவதைத் 
தவிர்த்து வேறு ஏதேனும் உருப்படியாக  டாக்டர் சுவாமி 
செய்யலாம்.

ஆனால், ராகுல் குறித்த பேரதிர்ச்சி தரும் செய்தி ஒன்று உண்டு.
2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதியன்று, அமெரிக்காவில்,
பாஸ்டன் நகரின் லோகன் விமான நிலையத்தில் அமெரிக்க FBI 
போலிசாரால் ராகுல் கைது செய்யப்பட்டார் என்பதே அச்செய்தி.
கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்கள் அடங்கிய சூட்கேசுடன் 
ராகுல் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து சோனியா காந்தி அன்றைய பிரதமர் 
வாஜ்பாய் அவர்களுடன் நேரடியாகத் தொலைபேசியில் பேசி,
ராகுலை விடுவிக்குமாறு கோரினார். சோனியாவின் 
கோரிக்கையை ஏற்று வாஜ்பாய் அமெரிக்க அதிகாரிகளுடன் 
பேசி, ராகுலை விடுவித்தார். இது வரலாறு.

ராகுல் காந்தியோ சோனியா காந்தியோ இன்றுவரை 
இதற்கான எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அவர்கள் 
விளக்கம் அளிக்கக் கடமைப் பட்டவர்கள். ஏனெனில், 
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக 
இருக்க வேண்டும்.
*********************************************************************      


வியாழன், 19 நவம்பர், 2015

விண்வெளி ஆராய்ச்சி வேறு!
வானிலை ஆராய்ச்சி வேறு!
சென்னையில் 250 செ.மீ மழை பெய்யும் என்று 
நாசா கூறியதாக வரும் செய்திகள் பொய்யே!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------ 
வானிலை ஆய்வை நாசா மேற்கொள்வதில்லை. ஏனெனில் 
அது விண்வெளி ஆய்வுக்கான நிறுவனம். எனவே சென்னையில் 
2015 நவம்பரில் (அல்லது டிசம்பரில்) 21 அல்லது 22 ஆம் தேதியன்று 
250 செ.மீ மழை பெய்யும் என்று நாசா அறிவித்து இருப்பதாக 
சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள செய்தி அப்பட்டமான 
பொய்ச் செய்தியே. 

பூமியின் வளிமண்டலம் (atmosphere) ஐந்து அடுக்குகளைக்
கொண்டதாக உள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து, அதாவது 
கடல் மட்டத்தில் இருந்து, பத்தாயிரம் கி.மீ உயரம் வரை 
நமது வளிமண்டலம் பரவியுள்ளது. அதற்கு மேல், அதாவது 
10000 கி.மீ. உயரத்துக்கு மேல்தான் புறவெளி (outer space)
ஆரம்பிக்கிறது.

வளிமண்டலத்தின் முதல் அடுக்கு troposphere ஆகும்.
இது கடல் மட்டத்தில் இருந்து 12 கி.மீ உயரம் வரை உள்ளது.      
கவிஞர்களும் பொதுமக்களும் இதைத் தொடுவானம் 
என்கின்றனர். வளிமண்டலத்தின் மொத்த நிறையில் 
(mass) 80 சதம் இந்த அடுக்கில் உள்ளது. 

வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீர்த்திவலையும் 
(water vapour) அனேகமாக இந்த அடுக்கில்தான் உள்ளது. 
(வாயு வடிவத்தில் இருக்கும் தண்ணீர்தான் water vapour ஆகும்)   
எனவே பூமியின் வானிலையை இந்த அடுக்குதான் 
(troposphere) தீர்மானிக்கிறது. இந்த அடுக்கில்தான் சாதாரண 
விமானங்கள் பறக்கின்றன. ஜெட் விமானங்கள் சாதாரண 
விமானங்களை அதிக உயரத்தில் பறப்பவை. எனவே அவை 
troposphereக்கு மேலே உள்ள stratosphere என்ற அடுக்கின் 
கீழ்ப்பாகத்தில் பறக்கின்றன.

எவரெஸ்ட் சிகரம் 8848 மீ உயரமுள்ளது. இச்சிகரம் troposphere 
அடுக்கில்தான் உள்ளது. வளிமண்டலத்தின் பல்வேறு 
அடுக்குகளிலும் மேகங்கள் காணப்படுகின்றன. எனினும் 
மழை தரும் மேகங்கள், வானிலையைப் பாதிக்கும் மேகங்கள் 
ஆகியன troposphere அடுக்கில்தான் உள்ளன. 

மேற்கூறிய விவரங்கள் மூலமாக நாம் கூற வருவது 
இதுதான். வானிலை ஆய்வு மையங்களின்  (meteorological centres)
ஆகப் பெரும்பான்மையான பணி, கடல் மட்டத்தில் 
இருந்து 15 கி.மீ உயரம் வரையிலான வளிமண்டலத்தின் 
பகுதிகளை ஆராய்வதே. இந்த 15 கி.மீ உயரம் என்பது 
troposphere முழுவதும் மற்றும் stratosphereயின் தாழ்ந்த 
பகுதி ஆகியவை மட்டுமே. 

இதற்கு மாறாக. விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் 
(அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ போன்றவை)
கவனம் செலுத்துவது கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் 
கி.மீ உயரத்திலும் அதற்கு மேலும் இருக்கும் புறவெளி 
(outer space) பற்றியுமே. செயற்கைக் கோள்களைச்
செலுத்தி விண்வெளியை கோள்களை நட்சத்திரங்களை 
ஆராய்வது விண்வெளி ஆய்வு மையங்களின் பணி.

செயற்கைக் கோள்கள் அதிக உயரத்தில் பறப்பவை.
உதாரணமாக இன்சாட் 3D செயற்கைக் கோள் 36000 கி.மீ 
உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்தப் பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையம் LEO எனப்படும் Low Earth 
Orbitஇல் 400 கி.மீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.

ஆக, வானிலை ஆய்வு என்பது 15 கி.மீ உயரத்துடன் முடிந்து 
விடுகிறது. விண்வெளி ஆய்வு என்பது  300 கி.மீ, 400 கி.மீயில்
தொடங்கி 36000 கி.மீ வரை செல்லக் கூடியது. வானிலை 
ஆய்வு என்பது Earth Science பிரிவைச் சார்ந்தது. விண்வெளி 
ஆய்வு என்பது Space Science பிரிவைச் சார்ந்தது. இரண்டின் 
நோக்கமும் பணிகளும் வேறு வேறானவை. ஒன்றின் பணியை 
மற்றொன்று செய்யாது; செய்வதற்கான தேவையும் இல்லை.

எனவே, நாசா வானிலை ஆய்வை மேற்கொண்டது என்பதும் 
வானிலை முன்னறிவிப்பைச் செய்தது என்பதும் பொய்யே.
250 செ.மீ மழை என்றால் என்ன என்றே தெரியாத தற்குறிகள் 
இத்தகைய பொய்யைப் பரப்புவது மிகப்பெரிய சமூகக் 
குற்றம். இந்தியாவில் எந்த வானிலை ஆய்வு மையத்திலும் 
250 செ.மீ மழையை (250 செ.மீ = 8 அடி, தோராயமாக) 
அளக்கக் கூடிய மழை அளவுமானிகள் (rain gauge) இல்லை 
என்பதே உண்மை. கருவிகள் மனிதனின்  தேவைக்கேற்ப 
வடிவமைக்கப் படுபவை.

நவீன மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்!
அறிவியலைக் கற்றுத் தெளிவோம்!
********************************************************************                 
        
   

செவ்வாய், 17 நவம்பர், 2015

"அலைபாயுதே கண்ணா" பாடலை ஆகச் சிறப்பாகப்
பாடியவர் ஏசண்ணன் (கே ஜே யேசுதாஸ்) மட்டுமே.
பித்துக்குளியாரிடம் உருக்கம் மட்டுமே உண்டு. அதுவும்
டி.எம்.எஸ்.சுடன் ஒப்புநோக்கும் இடத்து சற்று மாற்றுக்
குறைவானதே. அலைபாயுதே பாடல் ஒரு பெண்ணின்
விரக தாபத்தைப் பற்றிய பாடல். சிறந்த பாடகர் என்பவர்
தம் சாரீரத்தில் அந்த பாவத்தைக் கொண்டுவர வேண்டும்.
அதைச் சிறப்பாகக் கொண்டு வருபவர் ஏசண்ணன்.மேலும்
ஏசண்ணன் கர்நாடக இசையில் (இது தமிழிசையே)
சிகரங்களை அநாயாசமாகத் தொட்டவர். பித்துக்குளியாருக்கோ
மூச்சு முட்டும். மேலும் தாபத்துக்கு அவர் எங்கே
போவார், பாவம்.
**
முக்தி அடைந்து விட வேண்டும் என்று துடிக்கும் ஒரு அறுபது
வயதுக் கிழவன் இறைவனை நோக்கி உருகிப் பாடுவதாகத்தான்
பித்துக்குளியார் பாடி இருக்கிறார். அதில் மோகனமும்
நளினமும் பெண்ணின் விரகமும் துளி கூட இல்லை. இத்தகு
உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு பாடல் கூட பித்துக்குளியார்
பாடியது இல்லை. ஏனெனில், அவரால் அத்தகு உணர்ச்சிகளைக்
கொண்டு வரவே  இயலாது.
**
இது ஒரு romantic song. ஆனால் பித்துக்குளியாரோ இப்பாடல்
முழுவதும் முகாரி பாடுகிறார். சங்கதிகளைக் கையாள்வதிலும்
அவரிடம் ஒரு தெளிவு இல்லை. ஒரு விரகதாபப் பாடலை
எப்படிப் பாடக்கூடாது என்பதற்கு பித்துக்குளியாரின் இப்பாடல்
சிறந்த உதாரணம் ஆகும்.
**
ஏசண்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மகாராஜபுரம் சந்தானம்
ஆகியோர் பாடிய அலைபாயுதே பாடலைக் கேளுங்கள்.
பித்துக்குளியார் குறித்த மெய்யான மதிப்பீட்டுக்கு
வருவதற்கு இவை துணை புரியும்.
N.B: If you feel embarrassed by this comment, dont hesitate to delete it.     
சாரலின்போது எவரும் குடை விரிப்பதில்லை!
நாகர்கோவிலில் மழை இல்லை!
---------------------------------------------------------------------------
திட்டமிட்டபடி தேர்வு இனிதே நடந்தேறியது. 'அறிவியல் ஒளி'
ஏடும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையமும்
(Tamilnadu Science and Technology Centre) இணைந்து நடத்தும்
பள்ளி மாணவர்களுக்கான (9, 10 வகுப்புகள்) அறிவியல்
திறனறி தேர்வு ஞாயிறு அன்று (15.10.2015) காலை பத்து
மணிக்கு குறித்த நேரத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் கேம்ப் ரோடில் உள்ள அல்போன்ஸ் மேனிலைப்
பள்ளியைத் தேர்வு மையமாகக் கொண்டு, பல்வேறு பள்ளி
மாணவ மாணவியர் இத்தேர்வை எழுதினர். தேர்வாளராக
(Examiner) நான் சென்றிருந்தேன். சிறுகுடை  ஒன்றை எடுத்துச்
சென்றிருந்தேன்.

இருப்பினும் குடை விரிக்கப்படவே இல்லை. ஏனெனில் மிக
மெல்லிய சாரல் மட்டுமே வீசியது. சாரலின்போது குடை
பிடிக்கும் பழக்கம் தமிழனுக்கு இல்லை.

தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம்
வீசும்போது சாரல் என்பார் கவிஞர் வைரமுத்து.
வடகிழக்குப் பருவக்காற்றுக்கும் அவர் ஒரு கவிதை
எழுத வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
****************************************************************           

திங்கள், 16 நவம்பர், 2015

350 இயக்கம் வாழ்க!
வளிமண்டல கார்பன்டை ஆக்சைடின் 
குறைந்த அளவும் கூடுதல் தீங்கும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னால், ஓரிடத்தில் 
சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, மூச்சை உள்ளே இழுத்து 
வெளியே விடுங்கள். வளிமண்டலத்தில் உள்ள காற்றை நீங்கள் 
உள்ளே இழுக்கிறீர்கள்; பின் வெளியே விடுகிறீர்கள்.
உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் என்னென்ன 
வாயுக்கள் உள்ளே செல்கின்றன? வெளியே வருகின்றன?

பூமிக்கு ஒரு வளிமண்டலம் (atmosphere) இருக்கிறது. ஒரு கனத்த
போர்வையைப் போல இது பூமியை மூடுகிறது. இதன் மூலம் 
சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும்  கதிர்வீச்சு
பூமியைத் தாக்காமல்  வளிமண்டலம் நம்மைக் காக்கிறது.

பூமியின் வளிமண்டலத்தில், கன அளவு ரீதியாக (by volume) 
அதிக அளவு நைட்ரஜன் இருக்கிறது.அதாவது 78 சதம். 
அடுத்து ஆக்சிஜன் 21 சதம் இருக்கிறது. இவை இரண்டும் 
சேர்ந்து 99 சதம் ஆகி விடுகிறது. மேலும் ஆர்கான் 0.9 சதம் 
இருக்கிறது. மீதமுள்ள பிற வாயுக்கள் கார்பன் டை
ஆக்சைட் உள்ளிட்டு 0.1 சதம் உள்ளன.

நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, பிரதானமாக ஆக்சிஜனும் 
நைட்ரஜனும் ஆர்கானும் உள்ளே செல்கின்றன. நீங்கள் 
வெளிவிடும் மூச்சுக் காற்றில் 78 சதம் நைட்ரஜன் மற்றும்
அதிகபட்சமாக 16 சதம் ஆக்சிஜன், அதிகபட்சமாக 5 சதத்திற்குச்
சற்றே மேலாக கார்பன்டை ஆக்சைட், ஆர்கான்  உள்ளிட்ட 
பிற வாயுக்கள் 1 சதம் என்று இருக்கின்றன. (78+16+5+1 = 100)

99 சதம் உள்ள வாயுக்களான நைட்ரஜனும் ஆக்சிஜனும் 
பூமியைச் சூடேற்றவில்லை. ஆனால் ஒரு சதத்திற்கும் 
குறைவாக நம் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களான 
ஆவி நிலையிலான நீர் (water vapour), கார்பன் டை ஆக்சைட், 
மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஒசோன்,  குளோரோ 
ஃபுளூரோ கார்பன் ஆகிய பசுங்குடில் வாயுக்கள் பூமியை 
வெப்பம் ஆக்குகின்றன. GWP எனப்படும் Global Warming 
Potential இந்த வாயுக்களுக்கு அதிகம்.

தொழிற்புரட்சிக்கு முன், அதாவது 1750ஆம் ஆண்டிற்கு முன் 
வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைட் இந்த அளவு 
சேகரம் ஆகவில்லை. 1750இல் 280 ppm என்ற அளவில் 
வளிமண்டலத்தில் இருந்த கார்பன்டை ஆக்சைட், இன்று 
2015இல் 400 ppm என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. இதுவே 
பூமி வெப்பம் அடைவதற்கான காரணம் ஆகும்.
(ppm = part per million)

வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடின் அளவை 
350 ppm என்ற அளவுக்கு குறைத்திட உறுதி ஏற்போம்.
*********************************************************************   
    
        

(2) 350 இயக்கத்தில் சேருங்கள்!
ஆதரித்துப் பிரச்சாரம் செய்யுங்கள்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
பூமியின் வளிமண்டலத்தில் சேகரம் ஆகியுள்ள
கார்பன்-டை-ஆக்சைட் 400 ppm என்ற அளவை
எட்டியுள்ளது நடப்பாண்டில் (2015).இதனால் பூமி
வெப்பம் அடைகிறது.  

வெள்ளி, 13 நவம்பர், 2015

அறிவியல் ஒளி இதழில் (நவம்பர் 2015)
பித்தகோரஸ் தேற்றம் பற்றிய கட்டுரை!
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
1) பித்தகோரஸ் தேற்றம் பற்றிய உண்மை நிலையை 
விளக்கி எழுதிய கட்டுரை "அறிவியல் ஒளி" இதழில் 
பிரசுரிக்கப் பட்டுள்ளது.   
2) இது குறித்து சென்னை வானொலியில் அக்டோபர் 
2015 கடைசி வாரத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம் 
உரையாற்றி உள்ளது.
3) சமூக வலைத் தளங்களிலும் நியூட்டன் அறிவியல் 
மன்றம் நிறையவே எழுதி உள்ளது.
4) கூட்டங்களிலும் பேசியாயிற்று.

இருப்பினும் பித்தகோரஸ் தேற்றம் பற்றிய 
மூடத்தனமான உரிமைகோரல்களை 
பிற்போக்காளர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பாரதப்பித்து தலைக்கேறிய இந்துத்துவர்களும்,
தமிழ்ப்பித்து தலைக்கேறிய போலித் தமிழ்த் தேசியர்களும் 
சம அளவில் இந்த மூடத்தனத்தைச் செய்கிறார்கள்.
--------------------------------------------------------------------------------------------
கட்டுரையின் மீது சுட்டியை வைத்துப் பெரிதாக்கிப் 
பார்க்கலாம். இது SCANNED COPY.
--------------------------------------------------------------------------------------------------  
மழையினூடாக நாகர்கோவில் பயணம்!
---------------------------------------------------------------
ஒரு அறிவியல் நிகழ்வில் பங்கேற்கும் பொருட்டு 
சனிக்கிழமை மாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்கிறேன்.
திங்கள், செவ்வாயில் சென்னை திரும்புவேன். 
ஐ.ஐ.டி.யில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு!
2012இல் 325 ஏழை மாணவர்கள் தெரிவு!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------
மதச் சிறுபான்மையினருக்கான 4.5 சதம் இடஒதுக்கீடு 
OBCக்குரிய 27 சதம் ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக
வழங்கப்பட வேண்டும் என்று 2012ஆம் ஆண்டு முதல் 
ஐ.ஐ.டி. நிர்வாகம் முடிவு எடுத்தது.   

இதன்படி, 325 முஸ்லிம் மாணவர்கள் B.Tech சேர்க்கைக்கு 
பட்டியல் இடப்பட்டனர்.(shortlisted).இவர்கள் அனைவரும் 
ஏழை மாணவர்கள். அதாவது கிரீமி லேயர் அல்லாத 
பிற்பட்ட முஸ்லிம் மாணவர்கள்.

இதுபோக, பொதுப்பிரிவில், 180 முஸ்லிம் மாணவர்கள் 
சேர்க்கைக்காக பட்டியல் இடப்பட்டு உள்ளனர். மேலும்
ஒரு முஸ்லிம் மாணவர் எடுத்துள்ள அதிகபட்ச RANK 
159 ஆகும். 9500 இடங்களில் ஒரு முஸ்லிம் மாணவர் 
159ஆவது இடத்தைப் பெற்றுள்ளார் என்பது பெருமைக்கு 
உரியதாகும்.

இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன?

பாப்பானுக்குத்தான் படிப்பு வரும்!
பாப்பானுக்குத்தான் அறிவு அதிகம்!
பாப்பாந்தான் ஐ.ஐ.டி. பரீட்சையில் பாஸ் பண்ண முடியும்!

இப்படியெல்லாம் சில சமூக விரோதிகள் மேற்கொண்ட 
பொய்ப்பிரச்சாரம் தவிடு பொடி ஆகி விட்டது என்பதைத் 
தான் மேற்கூறிய புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

எனவே, இசுலாமிய அன்பர்களே, உங்கள் பிள்ளைகளை 
ஐ.ஐ.டி.யில் சேருங்கள். ஐ.ஐ.டி நமக்கு உரிமை உள்ள 
இடம். அது நமது இடம். அது பார்ப்பானுக்கு மட்டும் 
சொந்தமானது அல்ல.

பின்குறிப்பு: மதரீதியான இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தின் 
இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது.
****************************************************************** 

  
பல ஆண்டுகளாகவே பெரியார் திராவிடக் கழகம் என்ற பெயரில் 
கட்சி நடத்தும் விடுதலை ராசேந்திரன் போன்றவர்கள், கோவை 
ராமகிருட்டிணன் போன்றவர்கள் ஐ.ஐ.டி.க்கு எதிரான 
பிற்போக்கான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்.
இவர்களின் முட்டாள் தனமான பிரச்சாரம் காரணமாக
பல BC, MBC, SC பெற்றோர்களும் மாணவர்களும் 
ஐ.ஐ.டி.யில் சேரும் வாய்ப்பை இழந்தனர். இது பற்றி 
எம்மிடம் புகார் தெரிவித்த பெற்றோர்கள் அதிகம்.
**
நியூட்டன் அறிவியல் மன்றம் மேற்கொண்ட தொடர்ச்சியான 
பிரச்சாரத்தின் விளைவாக பெற்றோர்களிடம் 
விழிப்புணர்வு ஏற்பட்டது. தவறான பிரச்சாரத்தை நம்பிக் 
கெட்டோம் என்று எம்மிடம் பல பெற்றோர்களும் முறையிட்டு 
உள்ளனர். 
பிற்பட்ட ஜாதி ஏழை மாணவன்
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மாநில முதலிடம்!
பார்ப்பனர்களை வென்று ஐ.ஐ.டி.யைக் கைப்பற்றிய
சூத்திர மாணவர்களை வரவேற்போம்!
--------------------------------------------------------------------------------
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் பெரியார்.
ஆனால் மானமும் அறிவும் இல்லாத, மூளை முழுவதும்
தாழ்வு மனப்பான்மை நிரம்பி வழிகிற, சிலர்
சமூகத்தைப் பல நூற்றாண்டுகள் பின்னுக்குத்
தள்ளுகிற பிற்போக்குக் கருத்துகளைத் தொடர்ந்து
பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

"ஐ.ஐ.டி.லல்லாம் நாம சேர முடியுமா? அது
பிராமின்சுக்குன்னு உண்டானது. நம்ம பசங்கல்லாம்
அந்தப் பரீச்சைல பாஸ் பண்ண முடியாது.
அதுக்கெல்லாம் நெறய மூள வேணும்.
ஏதாவது ஆர்ட்ஸ் குரூப்ல சேத்து விட்டா நம்ம பசங்க
பாஸ் பண்ணுவாங்க..அக்கவுன்டன்சி குரூப் நல்ல குரூப்.
அதுல சேத்து விடுங்க பசங்கள"

இப்படிப்பட்ட அறிவுரைகளை வழங்கி பல சூத்திர பஞ்சமப்
பெற்றோர்களுக்கு தவறான வழிகாட்டி, பல பிற்பட்ட
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை இருட்டில்
தள்ளிய புண்ணியவான்கள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு.

ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக இருக்கிறது.
ராகேஷ் ரஞ்சன் நாயக் என்ற 18 வயது மாணவன் ஐ.ஐ.டி
நுழைவுத் தேர்வில் (JEE Advanced 2012) அகில இந்திய அளவில்
154ஆவது RANK எடுத்துள்ளான். OBC மாணவர்களில் 18ஆவது
RANK எடுத்துள்ளான். மேலும் ஓடிஸா மாநிலத்தில்
தேர்வில் வென்ற  240 பேரில் முதல் இடம் பெற்றுள்ளான்.   
இதற்காக ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அவனைப்
பாராட்டி உள்ளார்.

இம்மாணவன் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவன். இவனின்
தந்தை பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பவர். படிப்பறிவு
இல்லாதவர். ஐ.ஐ.டி. பற்றியோ தன்  மகனின்  கல்வி
பற்றியோ எவ்வித அறிவும் இல்லாதவர்.

ஐ.ஐ.டி என்பது தந்தக் கோபுரம் என்றும், வாயில் வெள்ளிக்
கரண்டியோடு பிறந்த பார்ப்பனர்களுக்கு மட்டுமே அங்கு இடம்
கிடைக்கும் என்றும் அறியாமை காரணமாகவும் தாழ்வு
மனப்பான்மை காரணமாகவும் சிலர் சூத்திரப் பிள்ளைகளின்
எதிர்காலத்தைப் பாலைவனம் ஆக்குகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை அறிந்த பின்னராவது இப்படிப்
பட்டவர்கள் திருந்த வேண்டும்.

ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்கள் அனைவரும்
மேட்டுக்குடியினர் என்று அடுத்ததாக இன்னொரு
பொய்யையும் இந்த தாழ்வு மனப்பான்மை கோஷ்டியினர்
பரப்பி வருகின்றனர். இதுவும் அப்பட்டமான பொய்யே.
இடஒதுக்கீட்டில்  சேரும் OBC, SC, ST மாணவர்களில்
90 சதம் மாணவர்கள் ஏழ்மையான மற்றும் நடுத்தர
வருவாய்ப் பிரிவினரே. அதே போல், பொதுப்போட்டியில்
சேரும் மாணவர்களிலும் பெரும்பாலோர் எளிய நடுத்தர
வர்க்கப் பிரிவினரே.

கோடி கோடியாய்ச் சொத்து சேர்த்து வைத்திருக்கின்ற,
சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கின்ற
அரசியல்வாதிகளில் எவரேனும் தங்கள் பிள்ளைகளை
ஐ.ஐ.டி.யில் சேர்த்து இருக்கிறார்களா? லல்லு பிரசாத்
யாதவ் தம் இரு மகன்களையும் எம்.எல்.ஏ.க்கள்
ஆக்கி இருக்கிறாரே தவிர இஞ்சீனியர் ஆக்கவில்லை.

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எல்லாம் ஐ.ஐ.டி.யில்
படித்தால், அப்போது சொல்லலாம் அதில் மேட்டுக்குடிச்
சீமான்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று.

எனவே, தாழ்வு மனப்பான்மை கோஷ்டியினரே, அருள்
கூர்ந்து உங்களின் பொய்மூட்டையை அவிழ்க்க வேண்டாம். 
சூத்திரப் பிள்ளைகளின் எதிர்காலத்தை இருட்டாக்க
வேண்டாம் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
------------------------------------------------------------------------------------------------
 


    
   
ஐ.ஐ.டி கணக்குகள் 18 வயதுப் பையனின்  வேகத்தையும்
30 வயது ஆசிரியரின் முதிர்ச்சியையும் ஒருங்கே கோருகின்றன.
ஆனால், எந்த ஒரு 18 வயதுப் பையனுக்கும் 30 வயது
ஆசிரியரின் முதிர்ச்சி இருப்பதில்லை. இது உலக இயற்கை.
கேள்வித்தாளில் கணக்கை வாசித்த உடன், instantaneously,
கணக்கைப் போடத் தொடங்கி விடும் மாணவர்களே
அதிகம். இதற்குப் பதிலாக, கணக்கை வாசித்து, நன்கு
புரிந்து கொண்டு, அதற்கான  ஒரு தோராயமான விடையை
மனதில் ஊகித்துக் கொள்ள வேண்டும் இதற்கு ஒரு சில
வினாடிகளே ஆகும். அதன் பிறகே, கணக்கைச் செய்யத்
தொடங்க வேண்டும்.    
இது ஐ.ஐ.டி கணக்கு அல்ல. இந்தக் கணக்கை ஒரு கிழவி 
கூடச் செய்ய முடியும். எட்டாங்கிளாஸ் பெயில் ஆகி,
பொழுதுபோக்காக கிராமத்தில் பகடை உருட்டி 
தாயம் விளையாடிக் கொண்டிருக்கும் எந்த ஒரு கிழவியோ 
குமரியோ இந்தக் கணக்கைச் செய்ய முடியும்.
செய்யுங்கள். குறிப்பாக adverse comment போடுபவர்கள் 
இக்கணக்கைச் செய்து முடித்த பிறகு கமென்ட் போடலாம்.
***     
மூன்று பகடைகள் உருட்டப் படுகின்றன. இம்மூன்று 
பகடைகளிலும் ஒரே நம்பர் விழ வேண்டும் என்றால் 
அதற்கான வாய்ப்பு என்ன?
(IIT JEE Mains 1984 Maths paper)
11 12 13 14 15 16
21 22 23 24 25 26
31 32 33 34 35 36
41 42 43 44 45 46
51 52 53 54 55 56
61 62 63 64 65 66
-------------------------
Solution to the given sum on probability:
------------------------------------------------------
The total number of ways in which any number can appear
in the three dice = 6x6x6 = 216

The number of ways in which the same number can appear on each
of the three dice =6 
(111,222,333,444,555,666)

Therefore the required probability = 6/216 = 1/36.
----------------------------------------------------------------------
For everyone to understand the sum, the entire sample space
containing the total number of cases i.e 216 ways is given below.
From this, anyone can easily identify the number of favourable 
cases and hence the required probability.

111 112 113 114 115 116
121 122 123 124 125 126
131 132 133 134 135 136
141 142 143 144 145 146 
151 152 153 154 155 156
161 162 163 164 165 166

211 212 213 214 215 216
221 222 223 224 225 226
231 232 233 234 235 236
241 242 243 244 245 246
251 252 253 254 255 256
261 262 263 264 265 266

311 312 313 314 315 316
321 322 323 324 325 326
331 332 333 334 335 336
341 342 343 344 345 346
351 352 353 354 355 356
361 362 363 364 365 366

411 412 413 414 415 416
421 422 423 424 425 426
431 432 433 434 435 436
441 442 443 444 445 446
451 452 453 454 455 456
461 462 463 464 465 466

511 512 513 514 515 516
521 522 523 524 525 526
531 532 533 534 535 536
541 542 543 544 545 546
551 552 553 554 555 556
561 562 563 564 565 566

611 612 613 614 615 616
621 622 623 624 625 626
631 632 633 634 635 636
641 642 643 644 645 646
651 652 653 654 655 656 
661 662 663 664 665 666
--------------------------------------------------------------------------
ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு 20ஆவது இடம்!
கல்வியில் 13ஆவது இடம்!
----------------------------------------------------------------------------------------
கேப்டன் செய்திகள் டி.வி.யில் விவாதம்
12.11.2015 வியாழன் இரவு 9 to 10 மணி.
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு.
-------------------------------------------------------------------------------------

வியாழன், 12 நவம்பர், 2015

2015 ஐ.ஐ.டி. மாணவர்கள் சேர்க்கை விவரங்கள்!
கறாராகச் செயல்படுத்தப்படும் இட ஒதுக்கீடு!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: இந்தப் பதிவு பெற்றோர்கள் மற்றும் 
மாணவர்களுக்கானது.
------------------------------------------------------------------------------
2015 B.Tech சேர்க்கை cut off மதிப்பெண் விவரம்:
மொத்த மதிப்பெண்கள்:504
----------------------------------------------------
பொதுப்போட்டி: (open competition).. = 124 மதிப்பெண் 
பிற்பட்டோர் (non-creamy layer OBC);=112  மதிப்பெண்    
SC, ST மற்றும் ஊனமுற்றோர் .......= 62 மதிப்பெண் 
SC,ST with 50% marks Relaxation.............= 31 மதிப்பெண் 

மேற்கூறிய CUTOFF அடிப்படையில் நடப்பாண்டில் 
(2015இல்) மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.
SC,ST மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட CUTOFF மதிப்பெண் 
பெறாத நிலையில் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி 
வகுப்புகள் (Preparatory course) நடத்தி, அதில் 50 சதம் 
மதிப்பெண் தளர்ச்சி (relaxation of marks) வழங்கப்பட்டு      
B.Tech படிப்பில் சேர்க்கப் படுகிறார்கள். இவ்வாறு நிரப்பப் 
படாத SC, ST காலியிடங்கள் நிரப்பப் படுகின்றன.

மொத்தம் 17 ஐ.ஐ.டி.கள்  உள்ளன.
மொத்த B.Tech மாணவர்கள் =9885.
கட்டண விவரம்:
--------------------------
பொதுப்பிரிவு மற்றும் OBC மாணவர்களுக்கான 
கட்டணங்கள்:


Total payable fee at the time of admission for each IIT includes 
IIT Bhubaneswar (Rs. 68,600), IIT Bombay (Rs. 67,876),
 IIT Delhi (Rs. 56,635), IIT Gandhinagar (Rs. 62,600), 
IIT Guwahati (Rs. 56,600), IIT Jodhpur (Rs. 68,750), 
IIT Kanpur (Rs. 66,517), IIT Kharagpur (Rs. 57,876), 
IIT Madras (Rs. 54,927), IT Mandi (Rs. 62,300), 
IIT Patna (Rs. 60,250), IIT Roorkee (Rs. 63,820), 
IIT Ropar (Rs. 58,650), IIT (BHU) Varanasi (Rs. 66,200) and 
ISM Dhanbad (Rs. 49,842) .

However, fee will be much less for SC and ST candidates. 
SC,ST மாணவர்களுக்கு இதே கட்டணத்தின் அடிப்படையில் 
கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. சலுகை போக, 
நிகரக் கட்டணம் மிக மிகக் குறைவே. இது அந்தந்த ஐ.ஐ.டி.யைப் 
பொறுத்து மாறுபடும். அனேகமாக SC, ST  மாணவர்கள் 
மெஸ் பீஸ் கட்டினாலே போதும் என்ற அளவில் இருக்கும்.

நமது வேண்டுகோள்:
--------------------------------------
எங்கள் காலத்தில் நாங்கள் எல்லாம் ஐ.ஐ.டி. என்று ஒன்று 
இருப்பதே தெரியாமல் வாழ்ந்தோம். தெரிந்தாலும், முடவன் 
கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதை போலத்தான்.
எனவே SC, ST மாணவர்களே, அவர்தம் பெற்றோர்களே, 
ஐ.ஐ.டி.யில் சேர்வது என்பது உங்கள்  உரிமை.  அந்த உரிமையைப் 
பறிகொடுத்து விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளை ஐ.ஐ.டி.யில் 
சேருங்கள்.
***********************************************************************  
Personal tools
HOME → NEWS → CURRENT → IIT BOMBAY FALLS IN LINE, STARTS FACULTY QUOTA
Mumbai: After the initial resistance to quotas for its teaching faculty, India’s premier institutes are beginning to cave in. The Indian Institute of Technology-Bombay (IIT-B), has decided to introduce a reservation policy for its faculty at the level of assistant professors. “We will soon release advertisements for this. We are looking at various ways to attract PhDs from the reserved categories for these faculty positions,” said Devang Khakhar, director of IIT-B. “If the reserved seats remain unfilled despite all efforts, they can be de-reserved after a year,” he added.
Mumbai: After the initial resistance to quotas for its teaching faculty, India’s premier institutes are beginning to cave in. The Indian Institute of Technology-Bombay (IIT-B), has decided to introduce a reservation policy for its faculty at the level of assistant professors.
“We will soon release advertisements for this. We are looking at various ways to attract PhDs from the reserved categories for these faculty positions,” said Devang Khakhar, director of IIT-B. “If the reserved seats remain unfilled despite all efforts, they can be de-reserved after a year,” he added. Other than science and technology, IIT-B’s reservation policy will be applicable up to the level of professors in other streams like management and humanities.
According to a notification issued in 2008 by the ministry of human resource and development (MHRD), the IITs were asked to introduce reservations in teaching positions, which included 15% quota for scheduled caste (SC) candidates, 7.5% for scheduled tribe (ST) candidates and 27% quota for candidates from other backward classes (OBCs).
However, the IITs were reportedly unhappy with the order and had asked the ministry to revisit the matter. However, the SC/ST (Reservation in Posts and Services) Bill, 2008, which had sought to exempt 47 elite institutes from faculty quotas, including the IITs, could not be passed in the Lok Sabha due to opposition. Hence, the ministry order on faculty quota still stands.
Several other IITs have already implemented it or are in the process of doing so. “We implemented quotas earlier this year. The will be no compromise on quality, irrespective of whether it’s a general category or a reserved category,” said IIT-Roorkee director, SC Saxena. IIT-Kharagpur initiated the reservation policy in November this year and has invited applications for the posts. At IIT-Madras, while no appointments have been made, the process will be started soon.
IIT-Guwahati started faculty quota in 2008. “It is not a problem because unfilled posts can be de-reserved after a year. But the fear is that if the order becomes more binding, and if such flexibility is taken away, then we will be in trouble,” said director of IIT-Guwahati, Gautam Barua.

NEW DELHI:  IITs will have to live with the system of quota in faculty, as attempts to exempt the elite institutes from reservation have not proved to be fruitful, Human Resource Development Minister Kapil Sibal said on Wednesday.
"Attempt to exempt IITs from implementation of reservation in faculty have proved to be unfruitful. You have to work with it," Sibal told the IIT directors who wanted clarification on the issue of faculty reservation.
The government had in 2008 asked the IITs to implement reservation for Scheduled Caste, Scheduled Tribe and OBCs in faculty recruitment.
This had created discontent among the directors and teaching fraternity in the elite institutions. They had opposed the quota policy.
IIT Delhi Director Prof Surendra Prasad on Wednesday took up the issue with Sibal when he was interacting with directors in New Delhi. Prasad said the directors were still confused on the issue of faculty reservation.
However, Sibal clarified that the quota system still prevails in the IITs.
The IIT were expecting exemption when the government introduced the Scheduled Caste and Scheduled Tribes (Reservation in Posts and Services) Bill 2008 in 2008 in Parliament.
The Bill, moved by Department of Personnel and Training and passed by Rajya Sabha, seeks to provide exemption from reservation for SCs and STs in the appointment of faculty in the Institutions of National Importance (INI). It has listed 47 institutions, including the IITs, as INIs.
However, it could not be passed in the Lok Sabha when members opposed to the provision of exemption.
Sibal's views assume significance as the contentious issue of quota has been stoutly opposed by IIT faculty members. The directors had earlier taken up the issue with Prime Minister Manmohan Singh, who had assured them to "look into" the matter.
The DoPT Bill says that there shall be no reservation where appointments are made to posts higher than the lowest grade of group 'A' posts in institutions of national importance.
However, an IIT director said that they would continue to oppose the move.
Story First Published: July 01, 2009 19:5
Union Minister Arjun Singh has taken a big step backwards from the untiring pursuit of his proreservation agenda.
After the Union human resource development ( HRD) ministry under him first said all educational institutions — including the socalled institutions of excellence as they are now defined — would have reservation in faculty positions, it has done a turnaround.
The institutions of excellence include the Indian Institutes of Technology ( IITs), the Indian Institutes of Management ( IIMs) and AIIMS. At Wednesday’s meeting of the IIT Council, the apex body governing the IITs that is headed by Singh, it was announced that the government had already moved a Bill in Parliament to exempt them from implementing quotas in teaching posts. Concern over “ dilution of quality” is now being cited as the reason for this.
Taking refuge behind the Scheduled Castes and Scheduled Tribes ( Reservation in Posts and Services) Bill, 2008 which was introduced in the last session of Parliament and has been passed by the Rajya Sabha, the ministry abandoned moves to have quotas in faculties at these top institutes.
“ There is a provision in the Bill that institutions of excellence will get exemption from implementation of reservation. Once the Bill is passed, there will be no reservation in IIT faculty,” said higher education secretary, HRD ministry R.P. Agrawal on Wednesday.
He described them as institutes of “national importance”. The official’s statement barely conceals the fact that the ministry, and Singh, were forced to fall in line after enthusiastically playing the quota card. There was no explanation from the ministry on the belated realisation that IITs and IIMs were institutions of “national importance”.
The truth is, Singh’s climbdown, to now exclude the faculties of these institutes from quota, follows pressure from IIT directors and even Prime Minister Manmohan Singh over the past year. During this time, the HRD ministry and the IITs have been in a confrontation on the issue.
While the ministry insisted that the premier technical institutions implement reservations in teaching faculty, this was resisted by the IITs.
The Bill, which is yet to be passed by the Lok Sabha, specifies 47 institutions which would be exempted from implementing quotas in faculty once the Bill is passed. They include the seven IITs, six IIMs, National Institutes of Technology (NITs), Aligarh Muslim University (AMU), Delhi University, Banaras Hindu University (BHU), All India Institute of Medical Sciences (AIIMS) and the Post Graduate Institute of Medical Research (PGIMER) in Chandigarh.
Arjun Singh wanted to have quotas in the faculties of these top institutes after he had successfully implemented the OBC quota in student admissions in the IITs. But, on the faculty reservation issue the IIT bosses bypassed him to take their case to the Prime Minister.
IIT Guwahati director Prof Gautam Barua said, “When the Prime Minister came to our institute in August last year, I had told him on behalf of all the IITs about our concerns on faculty quota. Just as the department of space and the department of atomic energy are exempt from reservation in faculty positions, the IITs being institutions of national importance should also be exempt. The PM had assured me that he would look into the matter.” The Prime Minister said he would consult CNR Rao, his scientific advisory council chief, on the issue. In his speech at IIT Guwahati, the Prime Minister had said, “ I have taken note of the point that Gautam Barua has made with regard to the reservation issue. I will take that with me and bring it to the notice of my cabinet colleagues.” Meanwhile, protest marches were held and memorandums presented to the Prime Minister, saying the proposal for quotas in faculties should be scrapped. The IIT directors conveyed to the Prime Minister their concerns about dilution in quality.
The HRD ministry had sent out a circular in June last year asking the IITs to implement reservation for SC, ST and OBC categories, adding up to 49.5 per cent while recruiting faculty.
The IITs in accordance with the HRD circular were required to reserve 27 per cent of the positions for OBCs, 15 per cent for SCs and 7.5 per cent for STs from the assistant professor level.
But the IITs stood their ground.
At the standing committee meeting of the IIT Council in July last year they said they would not implement these quotas. The HRD ministry, on its part, stood by its decision.
The bone of contention between the ministry and the IITs was the level at which quota was to be implemented. The IITs maintained that quota in faculty should be implemented at the entry level — lecturers positions — only.
But, the HRD ministry said lecturers held contractual posts.
The assistant professor’s post should therefore be considered as the entry level post and quotas should be implemented at that level, the ministry insisted.
The ministry knew that the bulk of recruitments at the IITs take place at the assistant professor level. On the flip side, this was also why the IITs were averse to implementing the HRD ministry’s circular.
The Scheduled Castes and Scheduled Tribes ( Reservation in Posts and Services) Bill, which is pending before the Parliament says, “ There shall be no reservation where appointments are made to posts higher than the lowest grade of group ‘ A’ posts in institutions of national importance.” An IIT Delhi faculty member said even though the IITs are at present working at 60 per cent faculty strength, there could not be a fall in quality. “ Faculty members are employed on the basis of caste. We only look for competence and the research background.” As an IIT director put it, “ Quality has always been the major concern. We would not and will not compromise on quality as far as selection of faculty goes.” Prof Barua said in a regime of faculty shortage, quota did not make sense. Even the “ few good applicants” that the IITs attract would have to be turned away if there are quotas for faculty positions, he said.
With the HRD ministry coming around to seeing the IITs point of view, the government might have placated these institutions and others like them . An IIT director said: “ We are overjoyed. It seems the PMO’s intervention has helped us in resolving the matter favourably.” IIT- Delhi director Prof Surendra Prasad said, “ We are happy that our concerns have been addressed by the government.”
Courtesy: Mail Today
For more news from India Today, follow us on Twitter @indiatoday and on Facebook atfacebook.com/IndiaToday