திங்கள், 30 நவம்பர், 2015

உலகம் முழுவதும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக
கடவுள் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
போப்பாண்டவர் அலறுகிறார். ஆனால் தமிழகத்திலோ
கடவுள் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாத்திகம் எனப்படும் பொருள்முதல்வாதத்தை கொள்கையாகக்
கொண்ட CPI, CPM கட்சிகளே நாத்திகப் பிரச்சாரத்தைக்
கைவிட்டு விட்டன. அதனால்தான் DYFI போன்ற அமைப்புகள்
விநாயகர் படம் போட்டு விழா நடத்துகின்றனர். தோழர் ஜி
ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நமது வேண்டுகோள். "அய்யா,
மக்களிடம் நாத்திகப் பிரச்சாரம் செய்யாவிட்டாலும்
பரவாயில்லை; உங்கள் கட்சி அணிகள், வெகுஜன அமைப்புகளின்
உறுப்பினர்கள் ஆகியோரிடமாவது நாத்திகத்தைக் கொண்டு
செல்லுங்கள்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக