செவ்வாய், 3 நவம்பர், 2015

இந்தியாவில் இன்றைக்கு இருக்கிற ஜனநாயகம் இந்திரா-ராஜீவ்
ஆட்சியில் கிடையாது. இன்றைக்கு என்பதை 2009 முதல் என்று
எடுத்துக் கொள்ளலாம்.காங்கிரஸ் கட்சி பலவீனப் பட்டதாலும்
அதன் ஏகபோகம் தகர்ந்து போனதாலுமே, இன்று ஜனநாயகம்
நமக்குக் கிடைத்து இருக்கிறது. நேரு குடும்ப ஆட்சி முடிவுக்கு
வந்த பின்னர்தான், இன்று நாம் அனுபவிக்கும் ஜனநாயகம்
கிட்டி உள்ளது.
**
ஒரு அசுரத்தனமான ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசின்
முன்னாள், ஒரு சிறிய மாநிலக் கட்சியான திமுக தாக்குப்
பிடிக்க முடியாமல் திணறியது. திமுக ஆட்சி மூன்று முறை
கலைக்கப் பட்டது. எனவே, கலைஞர் 1980இல் இந்திராவுடன்
கூட்டணி வைத்தார் என்றால், அதை மாநிலக் கட்சிகளின்
கையறு நிலை என்பதில் இருந்து பார்க்க வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக