ஞாயிறு, 29 நவம்பர், 2015

இது மார்க்சிய அறிவு சார்ந்த விடயம் அல்ல.
மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாத அறியாமை
இருக்குமேயானால், அதைக் குணப் படுத்த இயலும்.
இது அவர்களின் (CPM கட்சி) நிலைப்பாடு சார்ந்த விடயம்.
கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்குப் போட்டியாக, கட்சி சார்பாக
(நன்கு கவனிக்கவும்: கட்சி சார்பாக) கிருஷ்ண ஜெயந்தியைக்
கொண்டாடினார்கள். இங்கு ராமகோபாலனுக்குப்
போட்டியாக பிள்ளையார் சதுர்த்தி மற்றும் ஆயுத பூஜையைக்
கொண்டாடுகிறார்கள். வங்கத்தில் துர்கா வழிபாட்டில்
(காளி வழிபாடு) முன்னணியில் நின்றார்கள். இந்துத்துவத்தை
பாஜகவிடம் இருந்து தங்களிடம் வைத்துக் கொள்வதே
மார்க்சிஸ்டுகளின் திட்டம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக