ஞாயிறு, 29 நவம்பர், 2015

ராமகோபாலன் படுதோல்வி!
மார்க்சிஸ்டுகள் வெற்றி!
எதில்? பிள்ளையாரை வணங்குவதில்!
---------------------------------------------------------------
தமிழ்நாட்டில் பிள்ளையாரைப் பெருமளவு போற்றியவர்
பட்டிதொட்டி எல்லாம் பரப்பியவர் ராமகோபாலன்ஜி
அவர்கள். ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியை
தமிழ்நாடு முழுவதும் கொண்டாடியவர் ராமகோபாலன்ஜி.
பிள்ளையார் என்றால் ராமகோபாலன்; ராமகோபாலன்
என்றால் பிள்ளையார் என்று சொல்லும் அளவுக்கு
பிள்ளையாருடன் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்டவர்,
அடையாளப் படுத்திக் கொண்டவர் ராமகோபாலன்ஜி.

ஆனால், இன்று காலம் மாறி விட்டது. ராமகோபாலன்ஜிக்கு
போட்டியாளர்களாக மார்க்சிஸ்டுகள் வந்து விட்டனர்.
பிள்ளையாரை வணங்கும், போற்றும் போட்டியில் அவர்கள்
ராமகோபாலன்ஜியைத் தோற்கடித்து விட்டனர்.

இதோ படத்தைப் பாருங்கள். மார்க்சிஸ்ட் இளைஞர் அமைப்பான மன்னிக்கவும் வாலிபர் அமைப்பான DYFI வெளியிட்டுள்ள
சுவரொட்டியைப் பாருங்கள். புரட்சியாளர்கள் பகத்சிங்,
சேகுவேரா ஆகியோருடன் நடுநாயகமாக பிள்ளையார்
மன்னிக்கவும் விநாயகர் நிற்கிறார்.

டாக்டர் சேகுவேரா ஒரு பிள்ளையார் பக்தர் என்ற ஒரு
ஆராய்ச்சி நூலை நாளையே மார்க்சிய அறிஞர் பிரகாஷ்
காரத்ஜி  எழுதக் கூடும். அந்த நூலை  அமித்ஷாஜி  வெளியிடக்
கூடும். முதல் பிரதியைப் பெற வெளிநாட்டுச் சுற்றுப்
பயணத்தை ரத்து செய்து விட்டு மோடிஜி வரக்  கூடும்.
விழா ஏற்பாடுகளை ராஜாஜி மேற்கொள்ளக் கூடும்.
( இங்கு ராஜாஜி என்பது ஹெச் ராஜா அவர்களைக் குறிக்கும்)

வாழ்க இந்துத்துவம்!
காரல் மார்க்ஸ் ஒழிக!
உண்மையான இந்துத்துவக் கட்சி CPM ஜிந்தாபாத்!
(நன்றி: படம் வினவு இணையதளம்)
***************************************************************
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக