வியாழன், 4 மே, 2023

பின்ராயி விஜயனின் பிம்ப்புகளாக 
போலி மாவோயிஸ்டுகளும் போலி நக்சல்பாரிகளும்!
ஒரு இழவும் தெரியாத உள்ளூர் கபோதிகள்!
-----------------------------------------------------------------------------------
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே (2022)
கேரளத்தில் அரசுப் போக்குவரத்துத் துறையில் 
(KSRTC) 12 மணி நேர வேலையை அமல்படுத்தி 
விட்டது பினராயி விஜயனின் போலி மார்க்சிஸ்ட் அரசு.

கடைந்தெடுத்த பிற்போக்குத் தனமான இந்த
12 மணி நேர வேலை அமலானது பற்றி இங்குள்ள 
நமது உள்ளூர் போலி மாவோயிஸ்டுகளுக்கோ
போலி நக்சல்பாரிகளுக்கோ ஒரு இழவும் தெரியாது.

ஒட்டு மொத்த தமிழ் வாசக்காப் பரப்பில் இதை 
முதன் முதலில் எடுத்துச் சொல்லி CPMன் தொழிலாளி 
விரோதப் போக்கை அம்பலப் படுத்தியவன் நான் ஒருவனே.

நான் கரடியாகக் கத்தியபோது இந்த மானங்கெட்ட 
போலி மாவோயிஸ்டுகளும் போலி நக்சல்பாரிகளும்
னவத் துவாரங்களை மூடிக்கொண்டு பினராயி 
விஜயனின் பிம்ப்புகளாக (pimps) வாழ்ந்து கொண்டுஇருந்தார்கள்.

மேதினச் சிறப்பிதழ் வெளியிட்ட இந்தக் கோமாளிகள் 
தங்களின் சிறப்பிதழில் கேரளத்தில் அமலுக்கு வந்த 
12 மணி நேர வேலையைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட 
எழுதியது கிடையாது.

ஏனெனில் இந்த முண்டங்களுக்கு ஒரு இழவும்  தெரியாது.
இவர்களிடம் பேப்பர் படிக்கும் பழக்கம் கிடையாது.
இவர்களில் 99 சதவீதம் தற்குறிகள். இவர்களுக்கு 
ஆங்கிலம் தெரியாது. இந்தச் செய்திகளெல்லாம் 
தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவராது. ஆங்கிலச் 
செய்தித்தாள்களை படிக்க வேண்டும். அதற்கு 
ஆங்கிலம் தெரிய வேண்டும். இவர்களில் பலருக்கு 
பட்லர் இங்கிலீஷ் மட்டுமே தெரியும்.

நான் Main stream mediaவில் பல்வேறு யூடியூப் சானல்களில் 
12 மணி நேர வேலை குறித்து கடுமையாகக் 
கண்டித்து நேர்காணல் வழங்கி உள்ளேன். அண்மையில் 
நான் கொடுத்த ஒரு நேர்காணல் இரண்டு லட்சம் பேரால் 
பார்க்கப்பட்டு உள்ளது.

ஆதன் தமிழ், பேசு தமிழா பேசு, ஐதமிழ், தினமலர், 
சாணக்யா உள்ளிட்ட பல்வேறு சானல்களில் பல்வேறு 
அரசியல் பொருள் பற்றி நேர்காணல் அளித்துள்ளேன்.

ஆளும் திமுக அரசையும் அதன் கூட்டணிக் 
கட்சிகளான போலிக் கம்யூனிஸ்டுகளையம் 
உறுதியுடன் எதிர்த்துக் கொண்டு, லெனின் மிகவும் 
சிலாகித்துக் கூறிய அரசியல் அம்பலப்படுத்தல்களை 
(political exposures) மிகவும் வீரியத்துடன் செய்து 
வருகிறேன். 

நான் சொல்லாமலும், என் மூலமாக அல்லாமலும் 
வேறெந்த வழியிலும் நமது உள்ளூர் போலி மாவோயிஸ்டுகளும்   
போலி நக்சல்பாரிகளும் கேரளத்தில் அமலுக்கு வந்து விட்ட 
12 மணி நேர வேலை பற்றி அறிந்திருக்கவில்லை.
அப்படி அறிந்திருந்தால் நான் சொல்வதற்கு முன்னதாக 
அவர்கள் சொல்லி இருந்தால் அதற்கான ஆதாரத்தை 
மேற்கூறிய போலிகள் தரட்டும்.

இந்தியாவிலேயே முதன் முதலாக 12 மணி நேர வேலை 
அமல் படுத்தி இருப்பது கேரளத்தில் உள்ள போலி 
மார்க்சிஸ்டு விஜயனின் அரசே ஆகும். இது 
கம்யூனிசத்திற்கே ஒரு தலைகுனிவு ஆகும். பின்ராயி 
விஜயனின் இந்த தொழிலாளி விரோதப் போக்கை 
கண்டிக்க மனமில்லாத போலி நக்சல்பாரிகளும் 
போலி மாவோயிஸ்டுகளும் நாசமாகப் போகட்டும்.
********************************************************   
   
    
   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக