வியாழன், 13 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் 72 போலி டாக்டர்கள் கைது!
உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசு நடவடிக்கை!
மார்க்சிஸ்டுகள் அல்லாதோர் இதைப் படிக்க வேண்டாம்!  
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
போலி டாக்டர்களைக் களையெடுக்க வேண்டும் என்று 
அண்மையில் ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 
தீர்ப்பளித்தது. அதன்படி தமிழக அரசு 72 போலி 
டாக்டர்களைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது.
கைதானவர்களில் பலரும் ஹோமியோபதி போலி 
வைத்தியர்கள் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

இந்திய அரசு மாற்று மருத்துவம் என்ற பெயரில் 
ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி. 
யுனானி ஆகிய மருத்துவ முறைகளை அங்கீகரித்துள்ளது.
அந்தந்த மருத்துவத்தில் முறையாகப் படித்துத் தேறி, 
பட்டம்  பெற்று, இந்திய மருத்துவக் கவுன்சிலில் 
பதிவு செய்து கொண்டவர்களே முறையான 
மருத்துவர்கள் ஆவர்.

இதன்படி, ஒருவர் ஹோமியோபதி மருத்துவராகச் 
செயல்பட  வேண்டுமெனில் BHMS என்னும் ஐந்தாண்டு 
ஹோமியோபதி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் இந்திய 
மருத்துவ கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்து 
கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் ஹோமியோபதியின் துரதிருஷ்டம் என்னவெனில்
வேறெந்த மருத்துவ முறையையும் விட போலி மருத்துவர்கள் 
ஹோமியோபதியில்தான் அதிகம். ஹோமியோபதி 
மருத்துவன் என்று கூறிக்கொண்டு சாலைகளில் திரியும் 
1000 பேரை எடுத்துக்  கொண்டால், அவர்களில் 2 பேர் மட்டுமே 
முறைப்படி BHMS படித்துத் தேறியவர்களாக இருப்பார்கள்.
மீட்டி 998 பேர் படிப்பறிவே இல்லாத போலி மருத்துவர்கள்.

இப்போது 72 பேரைமட்டுமே அரசு கைது செய்துள்ளது.
இன்னும் கைது செய்யப்பட வேண்டிய ஹோமியோபதி 
போலி வைத்தியர்கள் குறைந்தது 70,000 பேர் இருப்பார்கள்.

இன்று கைதான் 72 ஆசாமிகளில் பெரும்பாலோர் போலி 
நக்சல்பாரிகள். எனக்குத் தெரிந்த பல போலி 
ஹோமியோபதி வைத்தியர்கள் VIII std பெயிலாய்ப் 
போனவர்கள். மேலும் X std பெயிலானவன், old SSLC
பெயிலானவன், பியூசி பெயிலானவன், எந்தப்படிப்பையும் 
ஒழுங்காகப் படிக்காமல், படிப்பு மண்டையில் ஏறாமல் 
discontinue ஆனவன் இத்தியாதி இத்தியாதி ஆசாமிகள்தான் 
ஹோமியோபதி வைத்தியார்களாக ஊரை ஏமாற்றிக் 
கொண்டு இருப்பவர்கள்.

இந்திய அரசு ஹோமியோபதியை  அங்கீகரிக்கிறது. ஆனால் 
மார்க்சியம் ஹோமியோபதியை அங்கீகரிக்கவில்லை.     
எனவே மெய்யான மார்க்சிஸ்டுகள் என்றால் அவர்கள் 
ஹோமியோபதியைப் புறக்கணிக்க வேண்டும்.

இக்கட்டுரை மார்க்சிஸ்டுகள் என்று ஊரை ஏமாற்றும் 
போலி ஹோமியோபதி ஆசாமிகளை மட்டுமே கண்டிக்கிறது.
வலதுசாரி முகாமில், பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ்வா 
ஆசாமிகள் ஹோமியோபதியையோ வீரன் எந்த ஒரு போலி 
அறிவியலையையோ பின்னாற்றலாம். அது பற்றி 
நியூட்டன் அறிவியல் மன்றம் கவலைப் படுவதில்லை.
இந்தப் பதிவு மார்க்சிஸ்ட் அல்லாதவர்களுக்கான 
பதிவு அல்ல, (Not meant for Non-Marxists.
------------------------------------------------------------------------------------------     
   
    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக