புதன், 7 அக்டோபர், 2015

இன்று (07.10.2015) உலகம் அழியும்!
கிறிஸ்துவ அமைப்பின் மூட நம்பிக்கை!
கடவுள் அழிக்கப் போகிறாராம் உலகை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
கிறிஸ்துவ மூடநம்பிக்கை அமைப்பு ஒன்று அமெரிக்காவில் 
ஃபிலடெல்பியாவில் செயல்பட்டு வருகிறது. இதன் பெயர் 
eBible Fellowship என்பது. இதன் தலைவர் மக் கான் (Mc Cann)
என்பவர். நச்சுக் கதிரியக்கத்தை உலகம் முழுவதும் 
பரப்பி வருவது போல, இவர் மூட நம்பிக்கையை உலகம் 
முழுவதும் பரப்பி வருகிறார்.

இன்று, அக்டோபர் 7, 2015 அன்று உலகம் நெருப்பால் 
அழிந்து விடும் என்றும் இது குறித்து பைபிளில் கூறப் 
பட்டு இருப்பதாகவும் திரு மக் கான் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இந்த மூடநம்பிக்கையைப் பரப்பி 
வருகிறார்.

உலகம் அழியுமா? அறிவியலின் பதில் என்ன?
-------------------------------------------------------------------------
1) உலகம் என்று இந்த மூடர்கள் கூறுவது பூமியையே.
பூமியில்தான் மனிதனும் பிற கீழ்நிலை உயிர்களும் 
வாழ்ந்து வருகின்றனர். இன்று உலகின் மக்கள் தொகை 
730 கோடி. இது போக, விலங்குகள், பறவைகள், மீன்கள்,
புழுப்பூச்சிகள், தாவரங்கள் இன்ன பிற என்று 
கோடானுகோடி அளவில் உயிரினங்கள் இப்பூமியில் 
வாழ்ந்து வருகின்றன.

2) இவ்வளவு உயிரினங்களையும் அழிக்க வேண்டும் என்றால் 
அதற்குத் தேவைப்படும் நெருப்பு சாதாரண நெருப்பு அல்ல.
ஊழித்தீயாக எரிய வேண்டும். அதற்கான எரிபொருள் 
இந்த பூமியில் கிடையாது.

3) உயிரினங்களைக் கடவுள் எரித்துக் கொன்று விடுகிறார் 
என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம்.
உலகில் உள்ள ஜடப்பொருட்களை (matter) எரித்து அழிக்க 
முடியுமா? இமயமலை, ஆல்ப்ஸ் மலை, விந்திய மலை 
உள்ளிட்ட மலைகளை, பாறைகளை நெருப்பால் எரித்து 
அழிக்க முடியுமா?

3) உலகில் உள்ள கனிம வளங்களை, இரும்பு, தாமிரம் 
போன்ற உலோகங்களை எரித்து அழிக்க முடியுமா?

4) பருப்பொருளை அழிக்க முடியாது. ஆற்றலையும் 
அழிக்க முடியாது. இதற்கான இயற்பியல் விதிகள் 
உள்ளன. ஆற்றலின் அழியாமை விதி (Law of conservation of 
energy) பற்றி பள்ளி மாணவர்கள் படித்திருப்பார்கள்.

5) எனவே உலகத்தை அழிப்பதோ, பொருளை அழிப்பதோ 
என்றுமே நடக்கக் கூடியது அல்ல. இன்னும் பல கோடி 
ஆண்டுகளின் பின், நமது சூரியன் இறந்து போகும்போது,
உலகம் அழியுமா? அழியாது. ஏனெனில் அதற்குள் மனிதன் 
வேறு கிரகங்களைக் கைப்பற்றி அவற்றில் குடியேறி 
இருப்பான். 

6) எனவே உலகம் அழியாது! பொருள் அழியாது.
அப்படியானால் அழியப் போவது யார்? வேறு யார்?
கடவுள்தான்!
****************************************************************
         
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக