வெள்ளி, 14 ஜூலை, 2017

CBSE ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பால்
மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு
பாதிப்பு ஏற்படுமா? எமது கட்டுரை
படித்து விட்டீர்களா?

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று!

சிப்ஸ் 5

CBSE 15% மற்றும் மாநிலப் பாடத்திட்டம் 85%
என்ற ஒதுக்கீட்டை சட்டமன்றத்தில் ஒரு
சட்டமாக நிறைவேற்றி இருந்தால்
அது நீதிமன்றத்தில் தோற்று இருக்காது.
நீதியரசர் ரவிச்சந்திர பாபு அவர்கள் தமது
தீர்ப்பில் கூறியுள்ளது: "அமைச்சரவைக் கூட்டத்தைக்
கூட்டி இந்த முடிவை எடுக்கவில்லை. இது வெறும்
கூடுதல் இயக்குனரின் முடிவு (Addl Director of Health services)"
என்கிறார். 

நீதிமன்றத்தில்  வெற்றி பெற்று இருக்க வேண்டிய
15% மற்றும் 85% ஒதுக்கீடு தோற்று விட்டது. இதற்கு
காரணம் அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வர்
எடப்பாடியுமே. அவர்களின் கவனக் குறைவே காரணம்.
ஒரு அடிஷனல் டைரக்டர் எப்படி அரசின் கொள்கை
முடிவைத்  தீர்மானிக்க முடியும் என்கிறார்
நீதியரசர் ரவிச்சந்திர பாபு.

அப்படிச் சொல்ல முடியாது. அக்கறை கிடையாது.
மூளையும் கிடையாது. நீதியரசர் தமது தீர்ப்பில்
மிக்கது தெளிவாக இந்தக் குறைபாட்டைச்
சுட்டி காட்டுகிறார். அமைச்சரவையின் முடிவாகக்
கூட இது இல்லையே என்கிறார். எனவே அதை ரத்து
செய்கிறார்.
எது?

நீதியரசரின் தீர்ப்பை நான் முழுவதுமாகப் படித்துப்
பார்த்தேன். அதில ஒன்றுக்கு மேற்பட்ட பத்திகளில்
நீதியரசர் ரவிச்சந்திர பாபு இப்படிக் கூறுகிறார்.
1) அடிஷனல் டைரக்டரின் முடிவுதான் இது.
2) அமைச்சரவை கூடி விவாதிக்கவில்லை.
3) அடிஷனல் டைரக்டர் அரசின் கொள்கை முடிவை
எடுக்க இயலாது.
4) அடிஷனல் டைரக்டர் இந்தப் பரிந்துரையை
(15% மற்றும் 85%) கூறியுள்ள அதே தேதியில்
அரசாணையும் வெளியிடப் படுகிறது. எனவே
did not apply their mind.
5) இவை தீர்ப்புரையில் உள்ள வாசகங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக