வெள்ளி, 24 மார்ச், 2023

 சாதியைச் சொல்லித் திட்டாதீர்கள்!
---------------------------------------------------------
ராகுல் காந்தி எம்பி பதவியை இழந்தார்.
அவரை தகுதிநீக்கம் செய்து (disqualified)
மக்களவை செயலகம் (Lok Sabha Secretariat
உத்தரவிட்டுள்ளது.
ஆர் எஸ் எஸ்தான் மகாத்மா காந்தியைக் கொலை
செய்தது என்று முன்பு ராகுல் காந்தி பேசி
இருந்தார். அது குறித்து வழக்குத் தொடரப்
பட்டது.
உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாம் சொன்னது
தவறு என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
எனவே உச்சநீதிமன்றம் அவரை மன்னித்து
விடுதலை செய்தது. இது முதல் மன்னிப்பு.
மோடி தம்மை நாட்டின் காவல்காரன் என்ற
பொருளில் சௌகிதார் என்று அழைத்துக்
கொண்டார். ராகுல் காந்தியோ மோடியின் மீது
தனிநபர் தாக்குதல் தொடுத்து
"சௌகிதார் சோர் ஹை" என்றார்.
சோர் என்றால் திருடன் என்று பொருள்.
ராகுல் மீது வழக்குத் தொடரப் பட்டது.
உச்சநீதிமன்றத்தில் ராகுல் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார். உச்சநீதிமன்றமும் அவரை
மன்னித்து விடுதலை செய்தது.
இது இரண்டாவது மன்னிப்பு.
எனவேதான் ராகுல் காந்தியை habitual offender
என்று சூரத் நீதிமன்றம் கூறியது.
இங்கே ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்கும்
வழக்கம் இல்லாதவர்கள் ராகுல்காந்தி
மன்னிப்பே கேட்கவில்லை என்று பொய்
சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.
கமெண்ட் பகுதியில் ஆங்கிலச் செய்தியை
இணைத்துள்ளேன்.ஆங்கிலம் தெரிந்த அன்பர்கள்
படிக்கலாம்.
இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்
கேட்ட பிறகும் ராகுல் திருந்தவில்லை. எனவே
இன்று தண்டனை பெறுகிறார்.
அவருக்கு ஏன் தண்டனை?
அவர் மோடியைத் திட்டி விட்டார் என்பதற்காக அல்ல.
அவர் மோடி என்னும் சாதியத் திட்டி விட்டார்
என்பதற்காகவே தண்டனை. சட்டப் பிரிவு IPC
499, 500 என்ன கூறுகிறது என்று தெரிந்தவர்கள்
மட்டுமே நான் இங்கு சொல்வதை உணர முடியும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்நாட்டில்
எல்லாத் திருடன் பெயரும் நாடார் என்றுதான்
முடிகிறது என்று யாராவது ஏசினால்
என்ன ஆகும்? நாடார் சகோதாரர்கள்
சொன்னவனின் முதுகுத் தொலியை உரித்து
விடுவார்கள் அல்லவா?
(நாடார் சகோதரர்கள் என்னை மன்னிக்கவும்).
இங்கே நாடார், தேவர், கோனார், கவுண்டர் என்பது
போல குஜராத்தில் பட்டேல், மோடி என்பவை
ஜாதிப் பெயர்கள். மோடி என்ற ஜாதியினர்
முழுவதுமே திருடர்கள் என்று ராகுல் காந்தி
பேசினால், அச்சாதிக்காரன் சும்மா விடுவானா?
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்கிறார் வள்ளுவர். ராகுல் காந்தி
திருக்குறளை படித்தது இல்லை.
படித்திருந்தால் இவ்வளவு துனபம் இல்லை.
ராகுல் காந்தி உயர்சாதிக்காரர். கவுல் பிராமணர்.
மோடியோ மணி சங்கர் அய்யர் கூறியபடி
நீச சாதிக்காரர். உயர்ந்த சாதியைச் சேர்ந்த
ராகுல், தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மோடியை
அல்லது அவரின் சாதியை இழிவாகப் பேசினால்
என்ன தப்பு? ஒரு உயர்சாதிக்கு இந்த உரிமை
கிடையாதா என்கிறார்கள் ராகுலின்
ஆதரவாளர்கள். அவர்கள் திருந்த வேண்டும்!
************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக