செவ்வாய், 6 அக்டோபர், 2015

இருவருக்கு இயற்பியல் நோபல் பரிசு 2015
நியூட்ரினோ ஆய்வுகளுக்காகப் பரிசு!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------
2015 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு 
இன்று ( 6 அக்டோபர் 2015) அறிவிக்கப் பட்டது.


1) டகாகி கஜிடா (Takaaki Kajita), வயது:56 (பிறப்பு:1959)
என்ற ஜப்பானியப் பேராசிரியர் 
2) ஆர்தர் பி மாக்டொனால்ட் (Arthur B McDonald)
    (வயது:72, பிறப்பு:1943) என்ற கனடிய-அமெரிக்கப் பேராசிரியர் 
ஆகிய இருவருக்கும்,

நியூட்ரினோ துகள்களுக்கு நிறை உண்டு என்று 
கண்டுபிடித்தமைக்காக பரிசு வழங்கப் படுகிறது.
(for the discovery of neutrino oscillations which show that the 
neutrinos have mass).

ஜப்பானில் உள்ள Super Kamiokande Detector மூலம் 
1998இல் காஸ்மிக் கதிர்களில் இருந்து வரும் 
நியூட்ரினோக்களை ஆய்வு செய்து அவை oscillation க்கு 
உள்ளாகின்றன என்று டகாகி கஜிடா கண்டறிந்தார்.

கனடாவில் உள்ள Queens Universityஇல் உள்ள 
Sadbury  Neutrino Observatoryயில் 2001இல்  சூரியனில் 
இருந்து வரும் நியூட்ரினோக்களை ஆய்வு செய்து
அவை oscillation அடைகின்றன என்று மாக்டொனால்ட் 
கண்டறிந்தார்.  

நியூட்ரினோக்களுக்கு நிறை உண்டு என்ற 
கண்டுபிடிப்புக்குப் பரிசு என்பது இயற்பியல் 
சமூகத்தினரால் வரவேற்கப் படுகிறது.
********************************************************8888 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக