திங்கள், 3 ஜூன், 2019


உதயநிதிக்கு பெருகும் ஆதரவு!
-----------------------------------------------
உதயநிதிக்கு இளைஞர் அணிச்செயலாளர்
பதவி வழங்க வேண்டும் என்றும்
அவரை மாநிலங்களவை எம்பி (Rajya sabha MP)
ஆக்க வேண்டும் என்றும்
வேள்பாரி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு
கடிதம் எழுதி உள்ளார்.

யார் இந்த வேள்பாரி?
இவர் திமுக இளைஞர் அணியின் மாநிலப் பொறுப்பாளர்.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர்
பழனிச்சாமியின் மகன் இவர்.

இவர் 2011ல் வேலூர் சிறையில் இருந்தார்.
எதற்காக? இந்தியை எதிர்த்து ஏதேனும்
போராட்டம் கீராட்டம் நடத்தினாரா?

இல்லை. நில அபகரிப்பு செய்தார்.
புகார் கொடுத்தவனை மிரட்டினார்.
அதற்காக சேலம் சிறையில் அடைக்கப் பட்டார்.

இப்படிப்பட்ட நில அபகரிப்பு புகழ் வேள்பாரி
தற்போது உதயநிதி புகழ் பாடுகிறார்.

கயமை! கயமை!! கயமை!!!
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கிலச் செய்தியை
(இத்துடன் இணைப்பு) படியுங்கள்.
********************************************** 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக