சனி, 11 ஏப்ரல், 2020



இதுவரை கொரனா நிதியாக 32-கோடி மக்களின் கணக்கில் - #நேரடி_மான்யமாக 28-ஆயிரம் கோடி ரூபாய் Prathan Manthri Galyan Relief திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கியுவில் நிற்காது - ஒரு ரூபாய் கமிஷன் இல்லை நேரடியாக அக்கவுண்டில் வரவு - செலவு!
🌾₹14,000கோடியை - 7 கோடி விவசாயிகளின் கணக்கில் under PM - KISAN scheme
👉₹10,000 கோடியை - 19 கோடி பெண்கள் கணக்கில் under PMJDY
👷₹3,000கோடியை - 2 கோடி கட்டிட தொழிலாளர்கள் கணக்கில்
 ₹1400 கோடிக்கு மேல் - 3கோடி senior citizens and aged widowsன் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
====================================
எதிர்வரும் பொருளாதார நெருக்கடியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு ரூ.20000 கோடி செலவு செய்யப் போவதாக வரும் செய்திகள் வதந்திகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதையும் மீறி பாஜக அரசு நிதியை ஒதுக்கினால் அதை விட கேவலம் இந்த அரசுக்கு வேறு ஒன்றும் இல்லை.
நாடாளுமன்ற உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த மானிய விலை உணவுகளின் விலையை நட்டமின்றி மாற்றி வரையறை செய்தது பாஜக அரசு தான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
படேல் சிலை எதற்கு, புதிய கட்டிடம் எதற்கு என்று முகநூலில் போராடும் போராளிகள் யார் என்று பார்த்தால் எல்லாம் #ஒரே_இடம் தான் "திராவிடம்".
காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி கொரானோ நெருக்கடியால் பத்திரிகைகளுக்கு தரும் விளம்பரங்களை சில ஆண்டுகளுக்கு நிறுத்தச் சொல்லி சென்ற வாரம் ஆலோசனை வழங்கியிருந்தார். அதை எடிட்டர்ஸ் கில்ட் ஆட்சேபித்து இருந்தது. எனக்குத் தெரிந்து நல்ல யோசனை. தயவு செய்து உடனடியாக செயல்படுத்தவும்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைவு, பிறமாநிலத்திற்கு அதிகம் என்று செய்திகளைத் திரித்து தினமும் விஷத்தை பரப்பும் கேடுகெட்ட ஊடகங்களுக்கு கூடுதலாக வருமானம் வேறு ஒரு கேடா ?
1. கடந்த ஆறு வருடங்களாக இலங்கை இராணுவம் நம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை.
2. காவிரி விவகாரத்தில் தமிழக கோரிக்கைப்படி அரசிதழில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
3. இலங்கைக்கு அண்மையில் கூட மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
4. அரசியல் சாசனப் பட்டியலில் மாநிலங்களே தங்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. மாநில நிதி பங்கீடு 42% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளிடம் கேட்டு கருவூலத்தை நிர்வகிக்க முடியாது.
6. ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைப்படி மாநில நிதி ஓவர் டிராஃபட் வசதி காலம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
7. மருத்துவ உதவிகள் விமானப்படை மூலம் பயணங்கள் கடுமையாக உள்ள வட கிழக்கு மலைப்பிரதேசங்கள், காஷ்மீர், மாலத்தீவு, பிரேசில், ப்ராங்பர்ட் வரை செல்கிறது.
8. தட்டுப்பாடின்றி அத்தாவாசிய பொருள்கள் செல்ல இரயில்வே, துறைமுகம், சரக்கு வாகனங்கள் உதவுகின்றன.
9. நோய்ப்பரவல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு வெகுவாக குறைந்திருப்பது மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பை, நல்லிணக்கப் போக்கைக் காட்டுகிறது.
இங்கு தமிழ்நாட்டை மட்டும் கவனிக்கவில்லை என்று சில தற்குறிகள் ஜல்லியடித்துக் கொண்டிருக்கின்றன.
பேசாமல் திருவள்ளுவர், சர்வஞ்சர் சிலைகளைத் திறந்து தமிழக - கர்நாடக மாநில நல்லுறவு வளர்ந்து விட்டது என்ற பிம்பத்தைப் போல பாஜகவும் ஏதாவது சிறப்பான முயற்சி செய்து பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக