வியாழன், 26 மே, 2022

வி பி சிங் பங்கேற்ற கூட்டத்தில்
சிவராசன் மேற்கொண்ட கொலை ஒத்திகை!
பேரறிவாளனுடன் நளினியும் பங்கேற்பு!
இது இரண்டாம் கொலை ஒத்திகை!
-----------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
1991 ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்றத் 
தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது.
ராஜிவ் ஜெயலலிதா கூட்டம் நடந்து முடிந்து 
விட்டது. இது அதிமுக கூட்டணிக்கு ஒரு 
உற்சாகத்தைக் கொடுத்தது.

இதை உணர்ந்த கலைஞர் தேசிய முன்னணியின் 
தலைவர் வி பி சிங்கை சென்னைக்கு வரவழைத்தார்.
அப்போது காங்கிரசுக்கு எதிர்க்கட்சி வி பி சிங்கின் 
தேசிய முன்னணியே.

திமுக கூட்டணி சார்பாக சென்னை நந்தனத்தில்
கலைஞர் ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டம் 
நடைபெற்றது. இதில் வி பி சிங் பங்கேற்றார். 
கூட்டம் நடைபெற்ற தேதி 07.05.19991.
இதிலிருந்து சரியாக இரண்டே வாரத்தில் ராஜிவ் 
படுகொலை நடைபெற்றது.
 
18.04.1991ல் ராஜிவ் ஜெயலலிதா கூட்டம். இடம் 
மெரினா கடற்கரை. சிவராசன், பேரறிவாளன், 
நளினி ஆகிய மூவரும் பெங்கேற்ற கூட்டம் இது.

07.05.1991ல் வி பி சிங் கலைஞர் கூட்டம். 
இடம் நந்தனம். இவ்விரு கூட்டங்களிலும் 
ராஜிவ் கொலைச் சதிகாரன் சிவராசனுடன் 
பேரறிவாளன் பங்கேற்றார். நளினியும் பங்கேற்றார்.

கலைஞர் கூட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவெனில் 
அக்கூட்டத்தில் சிவராசன் தரப்பில் மூன்று பெண்கள்
பங்கேற்றனர். அவர்கள்: அ) நளினி ஆ) வெடிகுண்டுப் 
பெண் தாணு இ) சுபா. மேலும் புகைப்படக்காரர் 
ஹரிபாபுவும் பங்கேற்றார்.    
        
ராஜிவ் கூட்டத்திலும் சரி, வி பி சிங் கூட்டத்திலும் சரி 
தமது தொழில் முறையில் ஒரு புகைப்படக்காரராகக் 
கலந்து கொண்டார் சுபா சுந்தரம். கூட்டத்தின் 
சிறந்த காட்சிகளை புகைப்படங்களாக எடுத்தவர் 
சுபா சுந்தரம்.

கைது செய்யப்பட்ட புகைப்படக்காரர் 
சுபா சுந்தரம் போலீசின் விசாரணைக்கு 
முழுமையாக ஒத்துழைத்தார். குற்றம் சாட்டப்பட்ட 
26 பேரில் நளினியும் சுபா சுந்தரமும் மட்டுமே 
எவ்விதத் தயக்கமும் இல்லாமல் தாங்கள் 
அறிந்த அத்தனை உண்மைகளையும் CBI போலீசாரிடம் 
தெரிவித்தனர். 

சுபா சுந்தரத்தின் சாட்சியமும் அவர் எடுத்த 
புகைப்படங்களும் .பேரறிவாளனை வழக்கில் 
வசமாகச் சிக்க வைத்தன. ராஜிவ் காந்தி, வி பி சிங் 
கூட்டங்களுக்கு தான் போகவே இல்லை என்று 
CBI அதிகாரிகளிடம் முதலில் மறுத்த பேரறிவாளன் 
சுபா சுந்தரம் எடுத்த புகைப்படங்களைக் காட்டி 
விசாரித்தபோது உண்மையை ஒத்துக் கொண்டார்.

அத்தோடு நிற்கவில்லை CBI அதிகாரிகள். சுபா 
சுந்தரத்தை வைத்துக்கொண்டு அவரின் 
முன்னிலையில் பேரறிவாளனிடம் கேள்வி 
கேட்டனர். பேரறிவாளன் சில உண்மைகளை 
மறைக்க முயன்றபோது சுபா சுந்தரம் குறுக்கிட்டு 
உண்மையை வெளிக்கொணர்வதில் உதவி புரிந்தார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது வாக்குமூலத்தில் 
ராஜிவ்-வி பி சிங் கூட்டங்களுக்கு சிவராசனின் 
அழைப்பின் பேரில் தான் அவருடன் சென்றதாக
பேரறிவாளன் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஒப்புதல் 
வாக்குமூலம் அவர் மீது சுமத்தப்பட்ட 120B பிரிவான 
குற்றமுறு சதியை (CROMINAL CONSPIRACY) கச்சிதமாக 
நிரூபித்தது.

வி பி சிங்-கலைஞர் கூட்டத்தில் வெடிகுண்டுப்பெண் 
தாணுவால் வி பி சிங்கை நெருங்க முடிந்தது.
இது சிவராசனுக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.
இவை அனைத்துக்கும் சான்றாதாரங்களும் (புகைப்பட
ஆதாரங்கள் மற்றும் அவற்றின் நெகடிவ் ஆகியவை)
சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன.
(அக்காலத்தில் 1990களில் டிஜிட்டல் புகைப்படக்கலை
இந்தியாவில் கிடையாது. எனவே புகைப்பட நெகட்டிவ்களும்
புகைப்படக்காரரின் நேரடி சாட்சியமும் மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்தவை).

புகைப்படக்காரர் சுபா சுந்தரத்தின் சாட்சியம்
குற்றமுறு சதியில் (criminal conspiracy) நளினி, பேரறிவாளன்
ஆகியோரின் பங்கை ஐயம் திரிபற உறுதி செய்தது.

மேலும் 20.05.1991 அன்று, கொலைக்கு ஒரு நாள் முந்தி,
நளினியின் தாயார் நர்ஸ் பத்மாவின் வீட்டில் வைத்து
கோடக் கலர் பிலிம் ரோல் ஒன்றை ஹரிபாபுவிடம்
வழங்கினார் பேரறிவாளன். இவ்வாறு கொலைச்
சதியில் பல்வேறு இடங்களில் பேரறிவாளன்
தொடர்பு கொண்டிருப்பதும் பங்கேற்றுள்ளதும்
சாட்சியங்களால் நிரூபிக்கப் பட்டுள்ளன. எனவே
பாட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற ஒரு காரணத்துக்காக
மட்டும் பேரறிவாளன் குற்றவாளி என்று தீர்மானிக்கப்
படவில்லை.
மேலும் இவை அனைத்தையும் பேரறிவாளனின்
வழக்கறிஞர் சீனியர் அட்வகேட் திரு நடராசன்
தம்முடைய வாதத்தில் ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இவை அனைத்தும் நீதியரசர் வாத்வா அவர்களின்
தீர்ப்பில் சொல்லப் பட்டிருக்கின்றன. இதோ
நீதியரசர் வாத்வா தீர்ப்பு வாசகங்கள்:
--------------------------------------------------------------------
On 18.4.1991 Nalini (A-1), Murugan (A-3), Arivu (A-18) and
Suba Sundaram (A-22) and deceased accused Haribabu
attended the meeting of Rajiv Gandhi and Jayalalitha at Marina
Beach, Madras.
**
On the night between May 7-8, 1991 Nalini (A-1), Murugan (A3),
Arivu (A-18) and deceased accused Sivarasan, Subha, Dhanu and
Haribabu attended the meeting of Prime Minister V.P. Singh at Nandanam,
Madras, where they conducted a 'dry run' by securing access to V.P. Singh
for garlanding him.
-----------------------------------------------------------------------------
Arivu (A-18) gave a Kodak colour film roll to Haribabu. This Kodak
colour film was to be used by Haribabu to take pictures
of the scene of crime.
********************************************
பின்குறிப்பு:
ஒவ்வொரு கட்டுரையிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்
தொடர்புடைய பகுதிகளை இக்கட்டுரையுடன்
கொடுத்துள்ளேன். அதைப் படிக்கிறீர்களாலா?

வாசகர்களுக்கு எனது வேண்டுகோள்! சிறந்த ஆங்கிலப்
புலமையும் ஓரளவு அடிப்படையான சட்ட அறிவும்
பெற்றுள்ள வாசகர்கள் அருள்கூர்ந்து உச்ச நீதிமன்றத்
தீர்ப்புரையை (verdict) படியுங்கள். நீங்களே முயன்று
படிக்கும்போது உங்களுக்கு உண்மை எளிதில்
விளங்கும். இதை நான் வலியுறுத்துகிறேன்.
--------------------------------------------------------



  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக