வெள்ளி, 27 மே, 2022

இந்தியா என்ற பெயர் சங்க இலக்கியங்களில் 

உள்ளதா? தமிழ் இலக்கியங்களில் உள்ளதா?

இல்லை. ஏன் இல்லை என்று தெளிவாக விடை

கூறி இருக்கிறேன்.


இந்தியா என்ற சொல் 15, 16ஆம் 

நூற்றாண்டுகளுக்குப் பின்னர்

உண்டான சொல். பார்த்தலோமியா டயஸ், 

மெக்கல்லன், வாஸ்கோடகாமா 

பயணங்களுக்குப் பின்னர் உண்டான சொல்.


ஐரோப்பியர்கள் பயன்படுத்திய சொல்.

காரல் மார்க்ஸ் காலத்தால் பிற்பட்டவர்.

அவரின் காலம் 1818-1883. அதாவது 19ஆம் 

நூற்றாண்டு. எனவே அவர் இந்தியா என்று 

குறிப்பிடுகிறார். மற்ற ஐரோப்பியர்கள் 

குறிப்பிட்டது போல மார்க்சும் 

குறிப்பிடுகிறார்.


இந்தியா என்பதற்கு 5000 ஆண்டு கால 

வரலாறேனும் உண்டு அல்லவா!

அப்போது அதற்கு என்ன பெயர் இருந்தது?



நேற்று வந்த ஐரோப்பியன் நம்மை என்ன 

சொல்லிக் கூப்பிட்டானா அந்தப் பெயரை 

நான் ஏற்பேன். ஆனால் இந்த மண்ணின் 

பண்டைய பெயரை ஏற்க மாட்டேன் என்பது 

பிரிட்டிஷ் அடிவருடித்தனமே அல்லால் 

வேறு என்ன?    


ஆரியம் திராவிடம் என்று எதுவுமே கிடையாது.

இதை டாக்டர் அம்பேத்கார் மீண்டும் மீண்டும் 

தெளிவாகச் சொல்கிறார். இந்திய மக்களைப் 

பிரித்தாள சூழ்ச்சி செய்த பிரிட்டிஸ்காரன் 

ஆரியன் என்றும் திராவிடம் என்றும் 

பிரிவினையை செயற்கையாக 

உருவாக்கினான்.


பிரிட்டிஸ்காரன் ஏற்படுத்திய 

பிரிவினையை கையில் எடுத்துக் 

கொண்டு இருப்பது பிரிட்டிஷ் 

அடிவருடித் தனம் ஆகும்.   


ஆரியமும் கிடையாது!

திராவிடமும் கிடையாது.

இன்னும் எவ்வளவு நாளுக்கு ஈ வே 

ராமசாமி சொன்ன அறிய திராவிடப் 

போலிப் பிரிவினைக்கு இரையாகிக் 

கொண்டே இருப்பது?     டி     பாத்து பது 


உண்மைதான்!

ஆரிய திராவிட இனவாதம் 

கற்பனையானது. அது புராணப் புரட்டு.


இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் 

India that is Bharath என்று உள்ளதே, அதை 

நாம் ஏற்க வேண்டும் அல்லவா!

அதை ஏற்காவிட்டால் அதைத் தீ 

வைத்துக் கொளுத்துங்கள். எந்தக் 

கோழைக்காவது அதற்குத் துணிச்சல் 

உண்டா?  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக