ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

அதானி பங்கு வீழ்ச்சி! LIC தப்பிப் பிழைக்குமா?
------------------------------------------------------------- 
ZOOM MEETING
------------------------------------------
சுருக்கமான முன்னுரை:
------------------------------------
இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவர் அதானி.
ஆசியாவின் முதல் பணக்காரர். உலக அளவில் 
3ஆம் இடத்தில் இருந்த பணக்காரர்.

இம்மாதம் ஜனவரி 25 அன்று தமது குழுமப் பங்குகளை 
ரூ 25,000 கோடிக்கு பங்கு விற்பனைக்கு அறிவிப்பைச் 
செய்து இருந்தார். சரியாக அதற்கு முந்திய நாளன்று
ஜனவரி 24ல், அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் 
என்ற கம்பனி அதானி குழுமம் மீது நிறையக் 
குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இதனால் அதானி குழுமப் 
பங்குகளை சரிந்தன.

ரூ  8,8 லட்சம் கோடி மதிப்புக்கு அதானியின் 
பங்குகள் சரிந்தன. அதானி உலகின் 3ஆவது 
பணக்காரர் என்ற இடத்தில் இருந்து 20 ஆவது 
பணக்காரர் என்ற அளவுக்கு இறங்கினார்.

அதானி குழுமத்தில் முதலீடு செய்த LIC மற்றும் 
ஸ்டேட் வங்கியும் இதனால் பாதிப்பு அடையுமா?
மக்களின் பணத்திற்கு ஆபத்தா என்றெல்லாம் 
கேள்விகள் எழுந்துள்ளன. எனவே இந்திய அரசு என்ன 
நடவடிக்கை எடுத்துள்ளது? இவை பற்றி இன்றி 
பார்ப்போம். தோழர் இளங்கோ பேசுகிறார்.
கேள்விகளுக்கும் விடை அளிப்பார்.

தோழர் இளங்கோ மத்திய அரசிலும் பின்னர் 
மத்திய பொதுத்துறையிலும் 30 ஆண்டுகளுக்கு 
மேல் பணியாற்றியவர். மத்திய அரசு மற்றும் 
மத்திய பொதுத்துறை தொழிற்சங்கத்தில், அதுவும் 
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் 
நீண்ட காலம் பணியாற்றியவர். நிர்வாகத்துடனான 
பேச்சுவார்த்தை கவுன்சிலில் மாவட்ட, மாநில அளவில் 
இடம் பெற்றவர். எஸ்மா சட்டத்தை உடைத்தெறிந்த 
சங்கத் பாரம்பரியம் உடையவர். தொழிற்சங்கப் 
போராட்டங்களில் பங்கேற்றமைக்காக 124A சட்டப் 
பிரிவின் கீழ் சிறைப்பட்டவர். இப்போது அவரிடம் பேசுவோம்.
உரையாடல் பாணியில் இந்நிகழ்வு இருக்கும்.
-------------------------------------------------------------------------
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக