திங்கள், 20 பிப்ரவரி, 2023

 84,000 வாகன்களுக்கு இந்திய ரயில்வே 
ஆர்டர் கொடுத்துள்ளது!
பொருளுற்பத்தி குறித்த இந்தக் கட்டுரையை 
அடையாள அரசியல் கபோதிகள் படிக்கக் கூடாது!
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
வாகன் (wagon ) = சரக்கு ரயிலின் ஒரு பெட்டி,
பயணிகள் ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்ட் போன்றது!
  
இந்தியாவின் ஒட்டு மொத்த சரக்குப் போக்குவரத்தில் 
ரயில்வேயின் பங்கு தற்போது 27 சதவீதம் ஆகும்.
இதை 45 சதவீதமாக உயர்த்த இந்திய ரயில்வே முடிவு 
செய்துள்ளது. இதற்காக 84,000 வாகன்களுக்கு 
இந்திய ரயில்வே ஆர்டர் செய்துள்ளது.

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் இவ்வாறு 
84,000 வாகன்களுக்கு ஆர்டர் கொடுப்பது இதுவே 
முதல் முறை ஆகும்.

இது மிகப்பெரிதும் வரவேற்கத்தக்க நடவடிக்கை!
இதனால் ரயில்வேயில் வேலைவாய்ப்புப் பெருகும்.
மேலும் தற்போது தனியார் வசம் உள்ள லாரிகள் 
டிரக்குகள் மூலம் நடைபெறும் சரக்குப் போக்குவரத்தில் 
கணிசமான பங்கு அரசின் ரயில்வே துறைக்கு 
மாறும். அந்த அளவுக்கு தனியாருக்குச் செல்லும் 
வருவாய் இனிமேல் அரசுக்குச் செல்லும்.

இந்தியாவின் உற்பத்தி சார்ந்த மிகப்பெரும் 
நடவடிக்கை இது. பொருளுற்பத்தியை நிறைவு 
செய்யும் இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது.
இந்த அளவு பெரும் எண்ணிக்கையிலான வாகன்களை 
ஆர்டர் செய்யும் இந்திய ரயில்வேயின் அமைச்சர் 
அஸ்வினி வைஷ்ணவ் அவர்களைப் பாராட்டுகிறோம்.

அஷ்வினி வைஷ்ணவ் கான்பூர் ஐஐடியில் எம்டெக் 
பட்டம் பெற்றவர். ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய 
அளவில் 27வது ரேங்க் பெற்றுத் தேறி ஐஏஎஸ் 
அதிகாரியாகப் பணியாற்றியவர். மேலும் வணிக 
மேலாண்மைப் படிப்பை (MBA) அமெரிக்காவில் 
படித்தவர்.   

சரக்குப் போக்குவரத்தில் 45 சதவீதம் 
தான் அமைச்சராக இருக்கும் ரயில்வேத் துறையின் 
மூலம் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் 
அதற்காக பிரும்மாண்டமான அளவில் ஒரேபடியாக 
84,000 வாகன்களுக்கு ஆர்டர் கொடுத்த வேகமும்
அஷ்வினி வைஷ்ணவின் சாதனை அல்ல; அவரது 
படிப்பின் சாதனை ஆகும்! 

மு க அழகிரி போன்றவர்களை மத்திய 
அமைச்சராக்கிய தமிழர்களுக்கு அஷ்வினி 
வைஷ்ணவை அவரது படிப்பை மதிக்கத் 
தெரியாது. கைநாட்டுத் தற்குறி ராப்ரிதேவியை 
முதல்வராக்கிய சூத்திரத் திருட்டுக் கூட்டம் 
படிப்பை என்றாவது மதித்ததுண்டா?
வாரிசு அரசியல் என்னும் நவீன வர்ணாசிரமதத்தால் 
உயர்ந்த அதிகாரமுள்ள பதவிகளை அபகரித்துக் 
கொண்ட திருட்டுக் கூட்டம் என்றாவது கல்வியை 
மதிக்குமா?

காலம் இப்படியே இருந்து விடாது கயவர்களே!
காலம் மாறும்! அன்று இழிந்த வாரிசு அரசியலை 
அது கணக்குத் தீர்க்கும்!
************************************************
படிப்பை மதிக்காத ஒரு மூடனின் முதுகுத்தொலியை 
உரித்துக் கொண்டிருக்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி!
இடம்: வீரவநல்லூர் காந்தி சிலை முன்பு. 
  
 

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக