செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நாதியற்றுப்போன தமிழ்ச் சமூகம்!
அருள்வாக்குச் சொல்ல ஆரும் இல்லை!
--------------------------------------------------------------------------
மஹா பெரியவாள் (காஞ்சி சந்திர சேகர சரஸ்வதி)
மறைந்தபோது கண்ணீர் சிந்தியவன் நான்.
காரணம், இனி அருள்வாக்குச் சொல்ல யார்
இருக்கிறார்கள் இந்தத் தமிழ்நாட்டில் என்ற
சோகம்தான்.

மஹா பெரியவாள் எப்பேர்ப்பட்ட மஹாநுபாவர்!
அவா ரேஞ்சுக்கு இனி யாராவது அருள்வாக்குச்
சொல்ல முடியுமா? ஸத்ய கீர்த்தியோன்னோ அவா!
அவா சொன்ன அருள்வாக்கு ஒண்ணொண்ணும்
கோடி வராகனுக்குன்னா சமம் ஆறது!

"தீண்டாமை க்ஷேமகரமானது" என்று சொன்னாளே
பெரியவா! அவா வாய்க்குச் சக்கரன்னா போடணும்!
பெரியவா திவ்ய புருஷரா இருந்து நூறு வருஷம்
ஜீவித்து, பஹவான்ட்ட போயிட்டா.

பெரியவா ரொம்பவே சாஸ்த்ரீயமா இருப்பா. அவா
முண்டச்சி தரிசனம் கொடுக்க மாட்டாளோன்னோ!
ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே தரிசனம்
தரலியோன்னோ! 

அவாளுக்கு அப்புறம் நம்ம ஜெயேந்திரர் அருள்வாக்குச்
சொல்ல ஆரம்பிச்சா. நன்னாத்தான் இருந்துச்சு!
எந்தப் பாவி கண்ணு வெச்சானோ, கஞ்சா கேசு,
கற்பழிப்பு கேசு, கொலைக்கேசுன்னு எல்லாக்
கேஸையும் அவா பேர்ல எழுதிட்டா இந்த ஜெயலலிதா!

இவா கொஞ்சம் லிபரல். இவா முண்டச்சி
தரிசனமெல்லாம் நன்னாக் கொடுப்பா!

ஜெயேந்திரரும் ஜெயிலுக்கெல்லாம் பொயிட்டு
வந்துட்டு மௌன விரதம் இருக்கறேன்
பேர்வழின்னுட்டு வாய மூடிண்டுட்டா! என்ன
செய்யறது, வாயத் தொறந்தா புடிச்சு உள்ள
களிதிங்கப் போட்ருவாளோன்னோ ஜெயலலிதா!

மொத்தத்துல இப்ப தமிழ்நாட்லே அருள்வாக்குச்
சொல்ல ஆள் இல்லாமப் போச்சோன்னோ!
-------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இந்தப்
பத்திவைப் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்
கொள்கிறோம்.
*************************************************************


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக