வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வெட்கப்பட்டுக் கொண்டு மோடியை ஆதரிக்கும்
யெச்சூரி டி ராஜா "புரட்சிகர"  கம்யூனிஸ்டுகள்!
இவர்களின் இணையதளத்தில் சுடுகாட்டு அமைதி!
---------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------------
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை ராஜ்யசபாவில்
இரு கம்யூனிஸ்டுகளும் ஆதரித்தனர். யெச்சூரி,
டி.ராஜாவின் உரைகள் பாஜக எம்.பி.க்களின்
ஆதரவைப் பெற்றன. யெச்சூரி  தலைமையில்
CPM உறுப்பினர்களும், டி ராஜா தலைமையில்
CPI உறுப்பினர்களும் GST மசோதாவை ஆதரித்து
வாக்களித்தனர்.

இதற்காக அருண் ஜெட்லி யெச்சூரி மற்றும்
ராஜாவுக்கு மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றி
தெரிவித்தார்.

மசோதாவில் உள்ள எதிர்மறை அம்சங்களைச்
சுட்டிக்காட்டி  CPI, CPM கட்சிகள் ஒரு அதிருப்திக்
குறிப்பை (dissent note) மாநிலங்களவையில் பதிவு
செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
மோடியை வரிந்து கட்டிக்  கொண்டு ஆதரித்தனர்
யெச்சூரியும் டி ராஜாவும்.

இந்த GST மசோதா உண்மையிலேயே நாட்டுக்கு
நல்லது என்றால் அதை வெளிப்படையாகச்
சொல்லி, தங்களின் செய்கையின் நியாயத்தை
இவர்கள் மக்களுக்கு விளக்கிச் சொல்லலாமே!

இந்த இரு கட்சிகளின் (CPI, CPM) மத்திய மற்றும்
தமிழ் மாநில இணைய தளங்களைப் பாருங்கள்.
(அவற்றை கமென்ட் பகுதியில் இணைத்துள்ளேன்)
சுடுகாட்டு அமைதி நிலவும். GST பற்றி ஒன்றுமே
இருக்காது.

இதற்குப் பெயர்தான் திருத்தல்வாதம் (Revisionism)!
அம்பானி. அதானி போன்ற கார்ப்பொரேட்
நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான்
CPI, CPM கட்சிகள் GST மசோதாவை ஆதரித்தன
என்று நாம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம்!
போலிக் கம்யூனிஸ்டுகளே, உங்களால் இதை
மறுக்க முடியுமா?
************************************************************
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக