சனி, 31 டிசம்பர், 2016

விவரம் தெரியாமல் சின்மயி வழக்கை ஜோதிமணி
விவகாரத்துடன் ஒப்பிடுவதாக நினைப்பது தவறு.
காவல் துறையில் வழக்குத் தொடுக்கும் உரிமை
பார்ப்பனப் பெண் சின்மயிக்கு மட்டும்தான் உண்டு
என்று நினைப்பது அடிமைச் சிந்தனையே. நமது
சூத்திரப்  பெண் ஜோதிமணி அந்த உரிமையைப்
பயன்படுத்தக் கூடாதா? அரசியல் கட்சியின் பின்புலம்
உள்ள ஜோதிமணியே அமைதி காத்தால் மற்றப்
பெண்களின் கதி என்ன?
 

சின்மயிக்கு எதிராகவும் ஜோதிமணிக்கு எதிராகவும்
எழுதப்பட்ட வசவுகள் ஒரே மாதிரியானவை.
ஆபாசமானவை. இவ்வளவு இழிவான ஆபாசமான
வசவுகளை எழுதுவோர் ஆபாசக் கயவர்கள்
அல்லாமல் வேறு யார்? ஜோதிமணி அவர்கள்
புகார் கொடுத்தால், நிச்சயமாக ஆபாசத்தை
எழுதிய அயோக்கியர்கள் சிறைத் தண்டனை
பெறுவார்கள்.
**
பார்ப்பனப் பெண்ணை ஆபாசமாகத் திட்டுவது
புரட்சிகரமானது என்று கருத்துவது இழிந்த
குட்டி முதலாளித்துவப் பார்வை. இதில் வெறிபிடித்த
ஆணாதிக்கமும் ஆண் வன்மமுமே உள்ளன.
அதேபோல, ஜோதிமணியைத் திட்டிய கயவர்களும்
ஆணாதிக்க வன்மக் கயவர்கள். இரண்டுக்கும்
இடையில் எவ்வித  வேறுபாடும் இல்லை.
ஒன்று புரட்சிகரமானது, மற்றது பிற்போக்கானது
என்ற பார்வை பழுதுபட்ட குட்டி முதலாளித்துவப்
பார்வையே தவிர வேறொன்றும் இல்லை.
**
கக்கூசில் எழுதுபவன் எல்லாம் சமூகநீதிப்
போராளி என்று கருத மார்க்சியத்தில் இடமில்லை.
தேவையற்ற வாதங்களில் ஈடுபடுவதன் மூலம்.
தாங்கள் ஜோதிமணிக்கு அநீதி இழைப்பதாகவே
கருத முடியும்.
**
சட்ட வழித்  தீர்வில்  உடன்பாடு இல்லையென்றால்,
நக்சல்பாரிகள்-மாவோயிஸ்டுகள் பின்பற்றும்
புரட்சிகர வன்முறையைக் கையாளலாம்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக