திங்கள், 18 ஜனவரி, 2016


வேற்றுக்கிரகவாசிகளை விரைவில் தொடர்புகொள்வோம், ஏரியா 51 கட்டுக்கதை. – NASA அதிகாரியின் தகவல்

நாசா விண் ஆராய்ச்சி மைய முக்கியமான நிர்வாகி ( Charles Bolden ) ஒருவர் மாணவருடனான கலந்துரையாடலின் போது சில முக்கியமான விடையங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
10 வயது மாணவன் “வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா ?” என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், வேற்றுக்கிரக வாசிகளை மிக விரைவில் தொடர்புகொள்வோம் என உறுதிப்படுத்தினார். சூரிய குடும்பத்தில் இல்லாவிடினும் அண்மையில் உள்ள கலக்‌ஷிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அதிகம் என கூறினார். 2018 இல் பாவணைக்கு நிறுவப்படவுள்ள James Webb telescope இன் உதவியுடன் அடுத்த 20-30 ஆண்டுகளுக்குள் நிச்சயம் வேற்றுக்கிரக வாசிகளை அடையாளம் காணமுடியும் என்றார். ( இச்சாதனம் வேற்று கிரகங்களில் இருக்கும் வளி மண்டலத்தை உண்ணிப்பாக அவதானிக்க உதவும்.)
ஏரியா51 எனப்படும் அமெரிக்காவின் (மெக்‌ஷிகோ எல்லை) உயர் கட்டுப்பாட்டு மர்ம பகுதி பற்றி கேட்ட போது, அங்கு தான் எந்த வித வேற்றுகிரக வாசிகளின் தடையங்களையோ பறக்கும் தட்டுக்களையோ காணவில்லை எனவும் அது சோதனைக்கான களம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
ஆனால், ஏரியா51 பகுதியில் பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக 1951 ஆம் ஆண்டில் இருந்து அங்கு வேலை பார்த்தவர்களால் தகவல் கசிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக