திங்கள், 23 ஜனவரி, 2023

 திவால் ஆகிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான்!
----------------------------------------------------------------------
இன்னும் 15 நாள் அல்லது அதிகபட்சம் 21 நாள் மட்டுமே 
பாகிஸ்தான் தாக்குப் பிடிக்கும். அதன் பின்னர் அது 
முற்றிலுமாக collapse ஆகி விடும் என்று அறிவித்து 
உள்ளது IMF. அதன் கணக்குப்படி, பெப்ரவரி 15க்குள் 
பாகிஸ்தான் திவாலாகி விடும் என்பது உறுதியாகி 
விட்டது.

பாகிஸ்தானில் தற்போது மின்சாரம் இல்லை.
தெரு விளக்குகள் எரிவதில்லை. கடுமையான 
எரிபொருள் தட்டுப்பாடு. பெட்ரோல் டீசல் 
கிடைப்பதில்லை. நாடு முழுவதும் உள்ள 
பெட்ரோல் பங்குகளில் முக்கால்வாசி பங்குகள்  
மூடப்பட்டுக் கிடக்கின்றன.

இந்தியாவின் கருணையை யாசித்து நிற்கிறது 
பாகிஸ்தான். இந்தியா கோதுமை வழங்கினால் 
பாகிஸ்தானில் பட்டினிச்சாவுகள் தடுக்கப் படும்.
இல்லையேல் பட்டினி கிடந்தே செத்துப்போகும் 
பாகிஸ்தான்.
*********************************************
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக