சனி, 3 ஜூன், 2023

 quantum3 காரண காரியப் பொருத்தம்

குவாண்டம் இயற்பியலில் இல்லை!
குவான்டம் விசையியலைப் புரிந்து கொள்ள....
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
குவான்டம் விசையியலைப் புரிந்து கொள்ள
சில எளிய அடிப்படைகளைத் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்.
நியூட்டனின் இயற்பியலில் எல்லாமே
முன்தீர்மானிக்கப் பட்டது. (pre determined)
நியூட்டனின் சமகாலத்தவரான லாப்லேஸ்
படுபயங்கர முன்தீர்மானவாதியாக இருந்தார்.
அவரிடம் நியூட்டனின் தாக்கம் மிக .அதிகம்.
குவான்டம் விசையியலில் இது கிடையாது.
உறுதியாக இந்த நிகழ்வுதான் நடக்கும் என்று
குவான்டம் இயற்பியல் .கூறுவதில்லை. மாறாக,
பல்வேறு வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றுதான்
நிகழும் என்கிறது குவான்டம் இயற்பியல். எந்த
ஒன்று என்பதை முன்னரே தீர்மானிக்க முடியாது
என்கிறது கு.இ. No certainties only probabilities என்கிறது
குவான்டம் இயற்பியல்.
ஒரு பகடையை உருட்டுகிறீர்கள். சகுனி உருட்டிய
பகடைதான். 5 விழுகிறது.
5 விழுவது என்பது ஒரு நிகழ்வு (event). ஒவ்வொரு
நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்
என்பது நமது பொதுப்புத்தி (common sense).
அப்படியானால், 5 விழுவதற்குக் காரணம் என்ன?
ஒரு காரணமும் இல்லை அல்லவா? இதே போல,
கதிரியக்கச் சிதைவை (radioactive decay) எடுத்துக்
கொள்ளுவோம். பொதுவாக 82க்குப் பின்னரான
தனிமங்கள் கதிரியக்கச் சிதைவு அடையக்
கூடியவை. இங்கு 82 என்பது அணுஎண் 82ஐக்
கொண்ட காரீயத்தைக் குறிக்கும் (Lead).
கதிரியக்கச் சிதைவை அடையும் ஒரு தனிமம்
நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம்.
அந்த சாம்பிளில் 100 அணுக்கள் இருப்பதாக
வைத்துக் கொள்ளுவோம். ஒவ்வொரு அணுவுக்கும்
1 முதல் 100 வரை எண்கள் கொடுத்து, அடையாளப்
படுத்தி வைத்திருப்பதாகக் கருதுவோம். ஒரு
நிமிடத்துக்கு ஒரு அணு வீதம் சிதைவடைவதாகக்
கருதுவோம்.
10ஆவது நிமிட ஆரம்பத்தில் எந்த அணு சிதையும்
என்று எவராலும் முன்கணிக்க முடியுமா?
48ஆவது அணு சிதையலாம். அல்லது 83ஆவது
அணு சிதையலாம். அல்லது 15ஆவது அணுவும்
சிதையலாம்.
சிதையும் என்பதுதான் உறுதியே தவிர, எந்த அணு
எப்போது சிதையும் என்று முன்கணிக்க முடியாது.
10ஆவது நிமிட ஆரம்பத்தில், 48ஆவது அணு
சிதைகிறது என்று கொள்ளுவோம். இது ஒரு
நிகழ்வு (event). இது நிகழக் காரணம் என்ன?
What has caused the decay of 48th atom?
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்க
வேண்டும் அல்லவா? காரண-காரியப் பொருத்தம்
உலகில் உள்ளதா இல்லையா?(cause and effect relationship).
எனில், 10ஆவது நிமிட ஆரம்பத்தில் 48ஆவது அணு
சிதைந்ததன் காரணம் என்ன? எக்காரணமும்
இல்லை என்பதுதானே உண்மை!
பின்குறிப்புக்கள்:
--------------------------------------
பொருளின் பௌதிக இருப்பு குறித்து 
 மேலும் கொஞ்சம் விளக்கம்!
பொருள்முதல்வாதம் என்ற பரந்த தலைப்பில்!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------
ஆக்சிஜன் ஹைட்ரஜன் இவற்றுக்கெல்லாம் 
பௌதிக இருப்பு உண்டா? காற்றுக்கு பௌதிக 
இருப்பு உண்டா என்றெல்லாம் கேள்விகள் 
கேட்கப் பட்டுள்ளன.

மேற்கூறிய அனைத்துக்கும் பௌதிக இருப்பு உண்டு.
நான் பியூசி படித்தபோது Chemistry practical வகுப்பில் 
ஹைட்ரஜன் தயாரித்து உள்ளேன். KMnO4ல் இருந்து 
ஆக்சிஜன் தயாரித்துக் காட்டினார் ஆசிரியர்.

பொருட்கள் திட, திரவ, வாயு என்னும் அனைவரும் 
அறிந்த மூன்று நிலைகளில் உள்ளன. ஆனால் 
பொருட்களுக்கு மூன்று நிலைகளையும் தாண்டி 
பிளாஸ்மா, போஸ்-ஐன்ஸ்டைன் கண்டென்சேட்
போன்ற வேறு நிலைகளும் உண்டு. 
Bose-Einstein condensate என்பது M.Sc Physics portion.
உரிய ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.
உரிய நூல்களைப் படிக்கவும்.

நிகழ்வுகளும் பொருளும்
----------------------------------------
பொருள்முதல்வாதத்தில் பொருளைப் போன்றே

நிகழ்வுகளும் முக்கியம்.

1) மழை பெய்கிறது. இது ஒரு நிகழ்வு.

2) விளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சியதுமே 

பொருளின் நிழல் விழுகிறது. நிழல் விழுவது 

ஒரு optical phenomenon. இது ஒரு நிகழ்வு.

3) சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.

இவை நிகழ்வுகள்.  .  

4) ஒரு இடத்தில் ஒரு காந்தத்தை வைக்கிறோம்.

காந்தத்தைச் சுற்றிலும் உள்ள இடத்தில் 

காந்தத்தின் இருப்பு உணரப் படுகிறது.

இவ்வாறு காந்தத்தின் இருப்பு உணரப்படும் 

இடம் காந்தப் புலம் (magnetic field) ஆகும்.

இது ஒரு நிகழ்வு ஆகும்.

5) அது போல மின்சார chargeஐ ஒரு இடத்தில் 

வைத்தால், அந்த chargeஐச் சுற்றி ஒரு 

மின்புலம் உண்டாகிறது. இப்புலம் ஒரு 

நிகழ்வாகும்.

6) இது போல ஈர்ப்புப் புலமும் (gravitational field)

ஒரு நிகழ்வே.


மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளும் பொருள் 

என்ற வகைமையில் வரும். These are all matter.

இந்நிகழ்வுகள் கருத்தாகாது.


1526ல் நடைபெற்ற முதலாவது பானிபட் போரும்

1757ல் நடைபெற்ற பிளாசிப் போரும், முதல் 

இரண்டாம் உலகப் போர்களும் கார்கில் போரும் 

நிகழ்வுகளே.

மாங்கொட்டையை வீசிய இடத்தில் மாஞ்செடி 

முளைப்பதும், உயிரினங்கள் உயிரோடு 

இருப்பதும் நிகழ்வுகளே.இந்நிகழ்வுகள் 

அனைத்தும் பொருளே; கருத்து அல்ல.

-------------------------------------------------------------

பின்குறிப்பு:

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை கணக்கற்ற 

அறிவியல் பரிசோதனைகள் நிகழ்ந்துள்ளன.

அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்றது 

Double slit experiment என்னும் இரட்டைத் துளைப்

பரிசோதனை. இது ஒரு நிகழ்வு. எனவே இது 

பொருள் ஆகும்.

இயற்பியலில் சிந்தனைப் பரிசோதனைகளும் 

(thought experiments) உண்டு. இதுவரையிலான 

சிந்தனைப் பரிசோதனைகளில் புகழ் பெற்றது 

குவான்டம் தியரியில் வரும் ஷ்ராடிங்கரின்

பூனைப் பரிசோதனை ஆகும்.

(Schrodinger's  cat experiment).


ஆக இரண்டு மாபெரும் பரிசோதனைகளைப் 

பார்த்தோம். ஒன்று: பௌதிக ரீதியாக 

நடைபெறும் physical experiment. இன்னொன்று 

கற்பனையில் நடைபெறும் சிந்தனைப் 

பரிசோதனை (thought experiment). இப்போது 

நமது கேள்வி. இவ்விரண்டு பரிசோதனைகளில் 

எது பொருள்? எது கருத்து? அல்லது இரண்டுமே 

பொருள்தானா?


(சிந்தனைப் பரிசோதனை என்பது இயற்பியலின் 

எந்த விதியையும் மீறாமல் நடக்கும் பரிசோதனை 

ஆகும். விதி மீறல் அனுமதிக்கப் படாது).       

 

பின்குறிப்பு-2:

குவான்டம் தியரியை நன்கறிந்தவர்கள் மட்டும் 

கேள்விக்கு விடையளிக்கவும். 

பின்குறிப்பு-3:

இந்தக் குறுங்கட்டுரை பதிப்புரிமைக்கு 

உட்பட்டது.

**********************************************



      

    

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக