திங்கள், 7 ஆகஸ்ட், 2023

ஒரு வாரம் விடுப்பு எடுத்தேன்!
விடுப்பு முடிந்து இன்று முகநூலில் இயங்குகிறேன்!
----------------------------------------------------------------------------
கடந்த ஜூலை 30 முதல் நேற்று வரை முகநூலில் 
இயங்கவில்லை. இன்டர்நெட் இணைப்பு பழுது, 
குடியிருப்பில் வெள்ளை அடித்தது ஆகிய 
காரணங்களால் இணையத் தொடர்பு துண்டிக்கப் 
பட்டிருந்தது. இதுவே முகநூல் தொடர்பில் 
இல்லாமைக்குக் காரணம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 30அன்று என் பிறந்தநாள் 
வந்தது. பிறந்தநாள் என்பதும் மற்றொரு நாளே 
என்பதுதான் எனது நடைமுறையாக இருந்தது.
ஆனால் முகநூலானது ஒருவரின் பிறந்தநாளை 
அகிலத்திற்கே அறிவித்து விடுகிறது.

மிகுந்த அன்புடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 
நண்பர்களுக்கு எனது நன்றியைக் கூற இயலவில்லை.
அதற்காக வருந்துகிறேன். வாழ்த்திய அனைவருக்கும்
எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் 
கொள்கிறேன்.

சந்திரயான்-3 குறித்த பல முக்கிய விவரங்களை 
என்னால் முகநூலில் எழுத இயலவில்லை. இனி 
இப்போது முதலே எழுதத் தொடங்குகிறேன்.
********************************************                      

கடந்த ஜூலை 30 அன்று நான் 70 வயதை நிறைவு 
செய்து வயது 71ல் வாழத் தொடங்குகிறேன். 
பிறந்த நாளை ஒரு சராசரி நாளாகத்தான் இதுவரை 
கருதி வருகிறேன். உள்ளார்ந்தஅன்போடும் 
அக்கறையோடும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்த 
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் மீண்டும் 
எனது நன்றியை உரைக்கிறேன். நன்றி! வணக்கம்!
--------------------------------------------

தாய்மடி முருகானந்தம் 


ராம்குமார் த ரா 

பத்ம. சிவ அசோகன் 

கா சதாசிவம் 

கதிரவன் குமரேசன் 
 

தாமதமாகிப்போன நன்றி!
----------------------------------------
கடந்த ஜூலை 30 முதல் நேற்று வரை முகநூலில் 
இயங்கவில்லை. இன்டர்நெட் இணைப்பு பழுது, 
குடியிருப்பில் வெள்ளை அடித்தது ஆகிய 
காரணங்களால் இணையத் தொடர்பு துண்டிக்கப் 
பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 30ல் வந்த என் 
பிறந்த நாளுக்கு வாழ்து கூறிய அன்பு 
நண்பர்களுக்கு உடனடியாக எனது நன்றியைத் 
தெரிவிக்க இயலவில்லை. அதற்காக 
வருந்துகிறேன். தாமதமாக இப்போது எனது 
நன்றியைத் தெரிவிக்கிறேன். அதை ஏற்றுக் 
கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன், இளங்கோ பிச்சாண்டி.  மிக்க நன்றி!

பேராசிரியர் அவர்களுக்கு,
நான் தங்களின் பதிவைப் பார்த்த அக்கணத்தில்,
யாரும் விடை சொல்லவில்லை என்பதால் நான் 
விடை கூறினேன். கடந்த 20 ஆண்டுகளாக 
எந்தப்போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
நடுவராக இருக்க வேண்டிய வயதில் 
போட்டியில் பங்கேற்பது தகாது என்ற 
எண்ணம் கொண்டுள்ளேன்.

வாசகர்களோடு உரையாடும் பதிவுகளை 
ஊக்குவிக்கும் பொருட்டே இங்கு 
விடையளித்தேன். இத்தகைய interactive 
பதிவுகளை நான் வரவேற்கிறேன்.


முக்கியமான ஒரு விஷயத்தை எழுதும்போது,
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு 
விஷயத்தை எழுதும்போது தமிழில் எழுத 
வேண்டாமா? தமிழில் இன்னொரு பதிவை எழுதுங்கள்.


ஊழல் ரத்னா விருதை இன்னமும் 
உருவாக்காமல் இருக்கும் மோடி அரசைக்  
கண்டிப்போம்! தமிழகத்தை வஞ்சிக்கிறார் மோடி!


 

     
 

1 கருத்து:

  1. //முக்கியமான ஒரு விஷயத்தை எழுதும்போது,
    எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு
    விஷயத்தை எழுதும்போது தமிழில் எழுத
    வேண்டாமா? தமிழில் இன்னொரு பதிவை எழுதுங்கள்.//
    உங்களின் இந்த அறிவுறுத்தல் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    பதிலளிநீக்கு