புதன், 16 ஆகஸ்ட், 2023

லல்லு பிரசாத்தின் மயிரைக் கூடப் 
பிடுங்க முடியாத சட்டமும் நீதியும்!
------------------------------------------------------
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு என்பது ஒரு 
ஒற்றை வழக்கு அல்ல. அது பல வழக்குகளைக் 
கொண்டது. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 
ஐந்து வழக்குகள் தொடுக்கப் பட்டன. ஐந்திலும் 
தீர்ப்பு வந்து விட்டது.

இந்த ஐந்து வழக்குகளிலும் லல்லு பிரசாத் யாதவிற்கு
தண்டனை கிடைத்தது. ஒன்றில் கூட அவர் 
நிரபராதி என்று விடுவிக்கப் படவில்லை.   

ஊரு வழக்கில் அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை 
கிடைத்தது. இன்னொரு வழக்கில் அவருக்கு 14 ஆண்டு 
சிறை தண்டனை கிடைத்தது. 

என்றாலும் இவ்வளவுக்கு அப்புறமும் லாலு பிரசாத் 
யாதவ் கடந்த சில ஆண்டுகளாக ஜாமீனில்தான் 
இருக்கிறார். ஜாலியாக இருக்கிறார். வெளிநாடு 
சென்று வந்தார்.

இந்தியாவின் சட்டமும் நீதியும் லாலு பிரசாத் 
யாதவின் மயிரைக் கூடப் பிடுங்க முடியாது 
என்பது அனுதினமும் நிரூபிக்கப் பட்டுக் கொண்டு 
இருக்கிறது.

இந்தியா குற்றவாளிகளின் சொர்க்கம்.
இந்தியா திருட்டுப் பயல்களின் சொர்க்கம்!
இந்தியா ஊழல் பெருச்சாளிகளின் சொர்க்கம்.

மோடியும் அமித்ஷாவும் என்ன செய்து கொண்டு 
இருக்கிறார்கள்? அவர்களால் லாலு பிரசாத்தின் 
மயிரைக் கூடப் பிடுங்க முடியவில்லை என்பதைப் 
பார்க்கிறோம்..
*************************************************


பிரசாத் யாதவைத் தொடக்கூட முடியவில்லை 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக