வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

யாப்பென மொழிப!
---------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------------------

ஒன்றிரண்டு கெட்ட வார்த்தைகளை
வாகாய் நுழைப்பதாலும்

தீய்ந்து போன சமஸ்கிருதச் சொற்களைத்
திணிப்பதாலும்

இடக்கர் அடக்கலை இகழ்ந்து
கத்தி பாய்ச்சுவதாலும்

கருப்பொருள்
மனப்பிறழ்ச்சி யுற்றவனின் தற்கூற்றாய்
எதுவாயினும்
கர மைதுனம் முதல்
ஆசனப்புழைப் புணர்ச்சி வரை

தலைப்பு
அதீதத்தினும் அதீதமாக
‘யவனப் போர் வீரனின் மதுக்குடுவையும்
முதுமக்கள் தாழியின் நாளமில்லாச் சுரப்பிகளும்’
என்பது போலும்

பாயாசத்து முந்திரியாய்
அல்குலும் நகிலும்

எனினும்
புரியாமையின் புகைமூட்டம்
கவிப்பதில்தான்
கனம் கொள்ளும் கவிதை.

--------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக