செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

மீரத நகரில் மதரசாவில் இளம்பெண் கற்பழிப்பு;
உ.பி மாநிலம் பெண்களின் நரகம்!
---------------------------------------------------------------------    
உ.பி மாநிலம் பெண்களுக்கான பாழ் நரகம் 
என்பது மீண்டும் மீண்டும் அம்பலப் பட்டுக்கொண்டே 
வருகிறது. "BOYS ARE BOYS",  "பையன்கள் அப்படித்தான்,
கற்பழிக்கத்தான் செய்வார்கள்"  என்று பாலியல் வன்புணர்ச்சிக் 
குற்றங்களை நியாயப் படுத்தும் முலாயம் சிங் உ.பியின் 
பிதாமகராக இருக்கும்போது வன்புணர்ச்சிக் குற்றங்கள் 
பெருகத்தான் செய்யும்.

அண்மையில் 20 வயது இளம்பெண் ஒருவர் மீரத்  நகரில் உள்ள
மதரசாவில் கூட்டு வன்புணர்ச்சி ( GANG RAPE ) செய்யப்பட்டுள்ளார்.
அது மட்டுமின்றி அவர் கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு 
மதமாற்றம் செய்யப் பட்டுள்ளார். கடந்த ஜூலை 30 அன்று 
கடத்தப்பட்ட அந்த இளம்பெண்ணை, மறுநாள் (ஜூலை 31)
அன்று முசாபர் நகரில்   உள்ள மதரசாவுக்குக் கடத்திச்சென்று 
அங்கு மதமாற்றத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பது 
குற்றவாளிகளின் திட்டமாக இருந்துள்ளது.

மதமாற்றத்துக்கான அந்தப் பெண்ணின் "சம்மதம்" வலிந்து 
பெறப்பட்டு அதற்கான முத்திரைத்தாளில் வாசகங்கள் 
எழுதப்பட்டு அந்தப் பெண்ணின் கையெழுத்து துன்புறுத்திப் 
பெறப்பட்டுள்ளது. இன்றைக்கு (04 ஆகஸ்ட்) ஹாப்பூர் ( HAPUR) 
மாவட்ட மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் 
வாக்குமூலம் கொடுத்தபோது முத்திரைத்தாள் ஆவணத்தையும் 
சமர்ப்பித்தார்.

ஏழை எளிய குடும்பத்துப் பெண்களை இவ்வாறு கடத்திச் சென்று, 
கற்பழித்து, மதம் மாற்றி வளைகுடா நாடுகளுக்கு விபச்சாரத்துக்கு 
அனுப்புவது என்பது உ.பியில் முலாயம்சிங்கின் ஆட்சியில்  மிகவும் இயல்பான நடைமுறையாக உள்ளது. பெருவாரியான 
மதரசாக்கள் இத்தகைய இழிசெயலில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் 
கொண்டுள்ளன என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

உ.பி.யில் கற்பழிப்புக் குற்றங்கள் நடக்காத இடம் இல்லை; 
நடக்காத நேரம் இல்லை. நடக்கிற கற்பழிப்புக் குற்றங்களில் 
பெரும்பான்மை காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்யப் 
படுவது இல்லை. 

புகார் கொடுக்கச் சென்றவர்கள் மீதே குற்றம் சுமத்தப் படுவது 
வாடிக்கை ஆகிவிட்டபடியால் பாதிக்கப் பட்டவர்கள் புகார் கொடுக்க 
முன்வருவது இல்லை. 

மதரசாக்கள் கற்பழிப்புக் குற்றங்களின் தலைமைச் செயலகமாக 
இருப்பது கேவலமானது; வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.
ஒடுக்கப்பட வேண்டியது. இந்த லட்சணத்தில் பாஜக அரசின் 
நிதியமைச்சர் அருண் ஜெட்லி மதரசாக்களை நவீனப் படுத்த 
கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி உள்ளார். வாக்குவங்கி அரசியலுக்காக 
மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு அரசுநிதியை, மக்களின் 
வரிப்பணத்தை ஒதுக்குவது நிறுத்தப் படவேண்டும். இந்த நிதி 
பெண்களைக் கற்பழிப்பதற்குத்தானே பயன்படும் என்று பாதிக்கப் 
பட்ட பெண்கள் கேட்கும் கேள்விக்கு பாஜக அரசின் பதில் என்ன?

கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருந்தபோது, அதைத் தட்டிக்   கேட்டார் கலைஞர். மதரசாக்கள் குற்றவாளிகளின் கூடாரமாக 
இருக்கும் உ.பி.யில் அதைத் தட்டிக்கேட்க அங்கு ஒரு 
கலைஞர் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை 
உ.பி. அரசு ஏற்படுத்தவில்லை. எனவே மத்திய அரசு தலையிட்டு 
வன்புணர்ச்சிக் குற்றவாளிகள் கைது செய்யப் படுவதையும் 
தண்டனை பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் 
நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். நகர்ப்புறப் பெண்களுக்கு ஆதரவாக கடந்த காலத்தில் திரண்ட இந்திய சமூகம், உ.பி.யின் 
இந்த எளிய கிராமப்புறப் பெண்ணுக்காகவும் திரள வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படும்வரை இந்திய சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.  

தண்டனையைப் பற்றி:
--------------------------------- 
தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் முன்பு கூறிய 
ஒரு கருத்தை இங்கு நினைவு கூர்வது நலம். கற்பழிப்புக் 
குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் 
செய்யவேண்டும் என்னும் நல்லதொரு கருத்தை முதல்வர்
அவர்கள் தெரிவித்தார்கள்.
மத்திய அரசு தகுந்த சட்டத்தை இயற்றி அம்மா அவர்களின் 
கருத்தை நடைமுறைப் படுத்தவேண்டும். 
இதுவே நாட்டு மக்களின் விருப்பம்.

குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது!
அகிலேஷ் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.இது நம் கடமை.
எனினும், இதை விட முக்கியமானது, மதத்தையும் மதநம்பிக்கை, 
கடவுள் நம்பிக்கை போன்ற மூடநம்பிக்கைகளையும் முறியடிக்க வேண்டும்.இதுவே தலையாய கடமை.

*********************************************************************   
                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக