வெள்ளி, 25 டிசம்பர், 2015

உச்சநீதிமன்றம் வரை சென்ற பின்னும் பாதி வழக்குகளே திரும்பப் பெறப்பட்டன. மீதி 100க்கு மேல் உள்ள வழக்குகளை ரத்து செய்ய
ஜெயா அரசு மறுக்கிறது. வழக்கு வாய்தா என்று
போராட்டக் காரர்களின்  பிழைப்பும் வாழ்வாதாரமும்
நீதிமன்றங்களில் ஆஜர் ஆவதில் பறிபோய் விடுகிறது.
எனவே சட்ட நிபுணர்களின் கருத்துப்படி இந்த முடிவு
எடுக்கப் பட்டுள்ளது. இது முகிலனின் சொந்த முடிவு அல்ல.
உதயகுமாரைப் போல முகிலன் தேர்தலில் நிற்கவில்லை.
அவர் தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்ற மா-லெ
இயக்கத்தில் பணியாற்றியவர்.
**
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தை, ஆரம்பம்
முதலே கவனித்து வருகின்ற வாசகர்களை மனதில்
இருத்தி இந்தப் பதிவு எழுதப் பட்டுள்ளது. இதில் பல
விஷயங்கள் (உதயகுமாரின் பாத்திரம் பற்றி)
சொல்லப்படவில்லை. எல்லாவற்றையும் சொல்ல
வேண்டுமெனில் தனிப்பதிவு தேவை.
**
முகிலன் செய்தது சரி என்றால், உதயகுமார் செய்ய மறுப்பது
தவறுதானே!    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக