வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தனியார் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்து
தமிழக  அரசே கலந்தாய்வு (COUNSELLING) மூலமாக
நிரப்பலாம். இதை உங்களைப் போலவே நானும்
வரவேற்கிறேன். ஆனால் இதைச் செய்ய முடியாது.
ஏனெனில் அதற்கான சட்டம் இல்லை. தமிழக அரசு
இப்படி ஒரு அறிவிப்பைச் செய்தால் போதும், அடுத்த
நிமிடமே இதை எதிர்த்து வழக்குத் தொடுத்து
தடையாணை (STAY) வாங்கி விடுவார்கள். ஒரு
சட்டமோ அல்லது நீதிமன்றத் தீர்ப்போ இல்லாமல்
எந்த அரசாலும் தனியார் கல்லூரி இடங்களை
நிரப்ப முடியாது.
**
உணமியில் இப்போது வந்துள்ள இந்தத் தீர்ப்புத்தான்
தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் இடங்களை
அரசே நிரப்ப வழி செய்கிறது, NEET மூலமாக.
எனவே இதை ஆதரிப்பதன் மூலமே பெரும்
விஷ விருட்சமாக வளர்ந்து விட்ட சுயநிதித்
திமிங்கலங்களின் தொண்டையில் கத்தியைப்
பாய்ச்ச முடியும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக