ஞாயிறு, 29 அக்டோபர், 2023

பினராயி விஜயனிடம் தோற்றுப்போன
இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் 
12 மணி நேர வேலைநேரமும்! 
-----------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
ஒரு தொழிலாளியின் வேலைநேரம் எவ்வளவு இருக்க 
வேண்டும் என்பது பற்றி காரல் மார்க்ஸ் மிகப்பெரிதும் 
அக்கறை கொண்டிருந்தார். என்றாலும் மார்க்சின் 
காலத்தில் எட்டு மணி நேர வேலை என்பது 
சட்டமாக்கப் படவில்லை. அப்போதெல்லாம் 
தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் 
வேலை செய்வது வழக்கமான நடைமுறையாக 
இருந்தது.  

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மே தினத்தில்,
அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தின் 
தொழிலாளர்கள் போராடி, உயிர்த் தியாகம் செய்து
எட்டுமணி நேர வேலையைச் சட்டமாக்கினர்.  

இன்போசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் இந்தியத் 
தொழிலாளர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது 
தொழிலாளர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் 
வேலை செய்து வருகின்றனர்.

நாராயணமூர்த்தி அவர்கள் வாரத்துக்கு 70 மணி 
நேரம் வேலை என்பதன் மூலம் நாளொன்றுக்கு 
12 மணி நேரம் வேலை செய்வதைக் குறிப்பிடுகிறார்.
அதாவது நாளொன்றுக்கு 11 மணி 40 நிமிடம் 
(11-2/3 மணி) வீதம் ஆறு நாட்கள் வேலை செய்தால்,
வாரத்துக்கு 70 மணி நேர வேலை என்ற கணக்கு
வருவதை எவரும் அறிந்து கொள்ளலாம்.

நாராயணமூர்த்தி அவர்கள் ஐ ஐ டி கான்பூரில் 
எம் டெக் படித்தவர். இன்போசிஸ் நிறுவனத்தைத் 
தோற்றுவித்து வளர்த்தவர்களில் ஒருவர். நிறுவன 
மேலாண்மை, தொழிற்சாலை மேலாண்மை 
ஆகியவற்றில் நிறைந்த அனுபவம் பெற்றவர்.

என்றாலும், வாரத்துக்கு 70 மணி நேர வேலை என்ற 
கருத்து அவரின் சுயசிந்தனையின் வெளிப்பாடு அல்ல.
It is NOT his brain child! நாளொன்றுக்கு 12 மணி நேர 
வேலை என்ற கருத்தை அவர் கேரள மார்க்சிஸ்ட் 
முதல்வர் பினராயி விஜயனிடம் இருந்தே பெற்றார்.

கேரளத்தில் 12 மணி நேர வேலையைச் சட்டம் 
ஆக்கியவர் பினராயி விஜயன். ஏதோ ஒரு 
சிறிய தனியார் நிறுவனத்தில் 12 மணி நேர வேலை 
சட்டமாக்கப் பட்டுள்ளது என்றால் ஒழிந்து 
போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் 
மாநில அரசுத் துறையில், KSRTC எனப்படும் 
அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனத்தில் 
பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் 
பணிபுரியும் இடத்தில், எட்டு மணி நேர வேலையை 
ஒழித்துக் கட்டி விட்டு 12 மணி நேர வேலையைச் 
சட்டமாக்கி உள்ளார் பினராயி விஜயன்.

கொடிய சுரண்டலுக்குப் பேர்போன தனியார் நிறுவன 
முதலாளிகளே வேலைநேரத்தை அதிகரிப்பதற்கு  
அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் போலி 
மார்க்சிஸ்ட்டான பினராயி விஜயன் மிகவும் 
துணிச்சலுடன் பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் 
செய்து 12 மணி நேர வேலையைஅச் சட்டமாக்கி 
உள்ளார்.

பினராயி விஜயன் 12 மணி நேர வேலையைச் சட்டமாக்கிய 
பின்னரே, இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு 12 மணி 
நேர வேளை பற்றிப் பேசுவதற்கான தைரியம் 
வந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் கூட தங்கம் தென்னரசுவும் மு க 
ஸ்டாலீனும் சேர்ந்து 12 மணி நேர வேலையை
நடைமுறைப் படுத்த முயன்றனர் என்பதை 
நினைத்துப் பாருங்கள்.

இதற்கெல்லாம் மூல காரணமாக இருப்பவர் 
போலி கம்யூனிஸ்ட் பினராயி விஜயனே!

போலி நக்ஸல்பாரித் தற்குறிகளின் பேதைமை!
--------------------------------------------------------------------------
12 மணி நேர வேலை என்னும் பிற்போக்குச் சட்டம் 
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத நிலையில் 
கேரளத்தில் போலி மார்க்சிஸ்ட் விஜயனால் கொண்டு 
வரபட்டது. என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள போலி 
நக்சல்பாரித் தற்குறிகள் யாரும் இதைக் 
கண்டிக்கவில்லை. இந்தத் தற்குறிகளுக்கு 
கேரளத்தில் 12 மணி நேர வேலை சட்டமாகி விட்டது 
என்ற உண்மைகூடத் தெரியாது.

இந்த அநியாயத்தை முதன் முதலில் அம்பலப் படுத்தியது
நியூட்டன் அறிவியல் மன்றமே. ஆனால் போலி 
மாவோயிஸ்டுகளும் போலி நக்சல்பாரிகளும் வாயில் 
கொழுக்கட்டையை  அடைத்துக் கொண்டு
பினராயி விஜயனை அம்பலப் படுத்த மறுத்து 
தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் செய்தனர்.

இன்று நாராயண மூர்த்தி 12 மணி நேரம் வேலை 
செய்ய வேண்டும் என்று சொல்கிறார் என்றால், 
கேரளத்திலே எந்த எதிர்ப்பும் இல்லாமல் 12 மணி நேர 
வேலை சட்டமாகி விட்டது என்ற தைரியம்தான்!
பினராயி விஜயனும் மார்க்சிஸ்ட் கட்சியும்
இருக்கும் வரை இந்தியாவில் புரட்சி ஒருபோதும் 
வராது என்ற நம்பிக்கைதான்!
************************************************ 


            

 

 
  

   
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக