திங்கள், 30 அக்டோபர், 2023

பசும்பொன் தேவர் குறித்த மதிப்பீடு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
பசும்பொன் தேவர் அவர்கள் (1908-1963) 55 ஆண்டு 
காலமே இவ்வுலகில் வாழ்ந்தார். அவரின் காலம் 
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு நம் நாடு அடிமைப் 
பட்டுக் கிடந்த காலம்.

மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகத் 
தம் அரசியல் வாழ்வைத் தொடங்கிய தேவர் அவர்கள் 
இறுதி வரை சமரசமின்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை 
எதிர்த்து நின்றவர் ஆவார்.

தேச விடுதலைப்போரின் காலக்கட்டத்தில், ஒரு நபரின் 
பாத்திரத்தை மதிப்பீடு செய்யத் தகுந்த காரணி என்ன?
அவர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியா 
இல்லையா என்பதுதான் அக்காரணி ஆகும்; இதுவே 
தீர்மானகரமான காரணிஆகும். இதுவே மார்க்சிய 
அளவுகோலும் ஆகும்.

இதன்படி பார்த்தால் பசும்பொன் தேவர் அவர்கள் 
சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாகத் 
திகழ்ந்த வரலாற்று உண்மை புலப்படுகிறது.

பசும்பொன் தேவரின் சமகாலத்து தலைவர்களுள் 
ஒருவரான ஈ வெ ராமசாமி தீவிர பிரிட்டிஷ் 
விசுவாசியாக இருந்து வரலாற்றுக் களங்கம் ஆனார்.

பிரிட்டிஷ் விசுவாசியான ஈ வெ ராமசாமி பசும்பொன் 
தேவர் மீது தீராத வன்மம் கொண்டவராக இருந்தார்.
தேவர் குறித்த அவதூறுகளை மட்டுமின்றி, தேச 
விடுதலைப் போரில் பங்களித்த அனைவரையும் பற்றிய 
அவதூறுகளை உருவாக்கிப் பரப்பினார்  ஈ வெ ராமசாமி.
அவற்றை முறியடித்து போற்றுதலுக்குரிய பசும்பொன் 
தேவரின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவது 
முற்போக்காளர்களின் கடமை ஆகும்.
*******************************************************.



     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக