சனி, 21 அக்டோபர், 2023

பங்காரு அடிகளார் மறைவு!
குவாண்டம் சூப்பர் பொசிஷனும் 
இந்து சூப்பர் பொசிஷனும்! 
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------
கடவுள் இல்லை என்பதே முழுமுதல் உண்மை!
ஆனால் மதம் இருக்கிறது! ஒரு மதம் அல்ல, 
ஒரு நூறு என்ற அளவில் மதங்கள் இருக்கின்றன.

இல்லாத கடவுளுக்கு கணக்கற்ற மதங்கள்! இதுதான் 
உலகம்! இல்லாத கடவுளை இருப்பவர் போல 
வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன மதங்கள்.

இந்து மதம் உலகின் ஏனைய மதங்களில் இருந்து
மிகப்பெரிதும் வேறுபட்டது. Of all the religions Hinduism is 
the most irreligious religion.

இந்து மதம் கணக்கற்ற கடவுள்களைக் கொண்டது.
மேலும் கணக்கற்ற cultகளையும் கொண்டது.
இங்கு cult என்பதன் சரியான பொருளை அறிந்திட 
வேண்டும்.   

இதில் பங்காரு அடிகளார் தமது முயற்சியில் தனித்த 
ஒரு cultஐ உருவாக்கினார்.

இன்றும் கூட உலகின் சில மதங்களில் பெண்களுக்கு 
வழிபாட்டு உரிமை வழங்கப் படுவதில்லை.
ஆனால் பங்காரு அடிகளார் மாதவிலக்கு 
நேரங்களிலும்கூட பெண்கள் கோவிலுக்கு வரலாம்; 
வழிபடலாம் என்று புதியதொரு நடைமுறையை 
ஏற்படுத்தினார். வேறு எந்த மதத்திலும் இப்படி 
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.

புட்டபர்த்தி சாய்பாபா மோதிரம் வரவழைப்பது,
விபூதி வரவழைப்பது போன்ற மந்திர தந்திரச்
செயல்களை செய்து தம்மை கடவுளின் 
அவதாரமாகக் கற்பிக்க முயன்றார். ஆனால் 
பங்காரு அடிகளாரோ இத்தகைய மாய மந்திரங்களை 
மேற்கொள்ளாமல் இந்து மதத்தில் நிலவும் 
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அதை நடைமுறைப் 
படுத்தினார்.

மாதவிலக்கு நேரத்தில், அந்த மூன்று நாட்களில் 
பெண்கள் சானிட்டரி நாப்கின்கள் வைத்துக் 
கொண்டு அலுவலகம் செல்வது போல, கோவிலுக்குச் 
செல்லலாம்; வழிபாடு செய்யலாம் என்ற 
ஒரு புதிய நடைமுறையை பங்காரு அடிகளார் 
அறிமுகப் படுத்தினார். அந்தரங்க சுத்தியுடன் 
அதை அவர் நடைமுறைப் படுத்தியதால் 
அப்பழக்கம் இன்று நிலைபேறு உடையதாக ஆகி விட்டது.

இந்து மதம் காலந்தோறும் நிகழும் மாற்றங்களுக்கு 
ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. 
வள்ளலார், பங்காரு அடிகளார் போன்றோர் இந்து  
சமய சீர்திருத்தவாதிகள். 

சமூகத்தின் மேல்தட்டுப் பெருமக்கள் முதல் அடித்தட்டு 
மக்கள் வரை  புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு பக்தர்கள் 
இருந்தனர். ஆனால் பங்காரு அடிகளாரோ ஒடுக்கப்பட்ட 
வர்க்கத்து மக்களையே தமது பக்தர்களாகக் 
கொண்டிருந்தார்.

தமது முதிர்ந்த வயதில் நேற்று (19.10.2023) பங்காரு 
அடிகளார் மறைந்தார் என்று அறிகிறோம். இந்து 
சமய சீர்திருத்தவாதியாக வரலாற்றில் அவர் இடம்
பெறுகிறார். இக்கட்டுரை அவர் ஈடுபட்ட பல்வேறு 
துறைகளில் அவரின் பங்களிப்பு பற்றிய 
முழுமையான மதிப்பீடு அல்ல.அப்படி ஒரு 
மதிப்பீட்டைச் செய்ய வேண்டிய தேவை எதுவும் 
எமக்கு இல்லை. இந்து மதம் vis-a-vis பங்காரு அடிகளார் 
என்ற பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே எமது
மதிப்பீடு அமைகிறது.

உலகின் மக்கள்தொகை இன்று 800 கோடியை எட்டி 
உள்ளது. இந்த 800 கோடியில் கிறித்துவ மதத்தைப் 
பின்பற்றும் மக்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
என்றாலும் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக
மேற்கில் கடவுள் நம்பிக்கை ஆட்டம் கண்டு கொண்டே 
வருகிறது. கிறித்துவத்தின் மீது நம்பிக்கை இழக்கும்
மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் பல்கிப் 
பெருகுவதால், போப்பாண்டவர்கள் நடுக்கத்துக்கு 
ஆளாகி நிற்கின்றனர்.  

இஸ்லாமிய சீக்கிய மதங்கள் மிகவும் கறார்த் 
தன்மையுடன் மாற்றங்களுக்கு இடம் கொடாமல் 
பழமையைப் பேணி நிற்கும் மதங்களாகத் 
திகழ்கின்றன. எனவே இவ்விரு மதங்களை விட்டு 
வெளியேறுவோர் மிக மிகக்குறைவு.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் லிபரலிசம் 
செல்வாக்குப் பெற்றுள்ளதால் கிறித்துவ மதத்திலும் 
அதே லிபரலிசத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாதபோது   
மக்கள் கிறித்துவத்தை விட்டு வெளியேறி 
விடுகின்றனர்.

அப்படியானால் இந்து மதம்? அதன் நிலைமை என்ன?
ஒரு மதம் என்ற வரையறைக்குள் இந்து மதத்தை 
அடக்க முடியாது. இக்கட்டுரையின் தொடக்கத்தில் 
Of all the religions Hinduism is the most irreligious religion என்று 
கூறி இருக்கிறேன். எனவே ஒரு மதத்திற்கு ஏற்படும் 
பாதிப்புகள் மதமற்ற மதமான (irreligious religion) இந்து 
மதத்திற்கு ஏற்படுவதில்லை. ஏனெனில் There is NO difference 
between  "to be a Hindu" and "NOT to be a Hindu".

குவாண்டம் தியரியில் வருகிற ஷ்ராடிங்கரின் பூனை 
ஒரே நேரத்தில் உயிருடன் இருக்கும்; செத்தும் இருக்கும்.
இது குவாண்டம் சூப்பர் பொசிஷன் எனப்படும். 
இந்து மதமும் குவாண்டம் தியரி போன்று ஒரு 
சூப்பர் பொசிஷியனுக்கு இடம் அளிக்கிறது.
இதற்கு "Hindu superposition" என்று பெயரிடுகிறேன் நான்.
இந்த சூப்பர் பொசிஷன்படி, ஒருவர் ஒரே நேரத்தில் 
இந்துவாகவும் இருக்கலாம்; இந்து அற்றவராகவும் 
இருக்கலாம் (Hindu and Non Hindu at the same time).
புரிகிறதா?
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
அகல்விரிவானதும் ஆழமானதுமான (comprehensive and deep) 
வாசிப்பும் சிந்தனை வளமும் அறிவியல் பின்னணியும் 
இல்லாதவர்கள் பிறழ்புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு 
இக்கட்டுரையை வாசிக்காமல் இருந்து ஒத்துழைக்குமாறு 
அன்புடன் வேண்டுகிறது நியூட்டன் அறிவியல் மன்றம்.
*********************************************************** 
1) கறார்த் தன்மை 
2) கட்டுப்பாடுகள் 
3) பழமையை மாற்றத்துக்கு உட்படுத்தாமல் 
பேணிப் பாதுகாப்பது 
இம்மூன்றும் ஒரு மதத்தின் அடிப்படையான 
கூறுகள். இவை ஜனநாயக மறுப்புக்குச் 
சிறந்த உதாரணங்கள். மதம் என்றாலே 
ஜனநாயக மறுப்புத்தான்!

ஆனால் இந்து மதமானது ஒரு மதம் அல்ல.
எனவே மதத்தின் பண்புகள் அதற்கு
இருப்பதில்லை. அதாவது ஜனநாயக 
மறுப்பு அங்கு இல்லை.

பைபிள் அல்லது குரான் கிருத்துவ இஸ்லாமிய 
மதங்களின் புனித நூல் ஆகும். ஆனால் இந்து 
மதத்திற்கு அப்படி எந்தப் புனிதநூலும் கிடையாது.
புனிதநூல்கள் சர்வாதிகாரத்தின் அடையாளங்கள்.
புனித நூல் இல்லாதபோது சர்வாதிகாரத்திற்கான 
தேவை அங்கு இல்லை.

    
 

.      
  

  

      
   
 
     
 
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக