வியாழன், 2 அக்டோபர், 2014

வைத்தியநாதனுக்கு  ஜெத்மலானி ஆஜர்!
---------------------------------------------------------------------
ஆவின் பாலில் கலப்படம் செய்து
ஆயிரம் கோடி கொள்ளை அடித்த
கயவன் வைத்தியநாதன் தற்போது
கடலூர் சிறையில் கம்பி எண்ணிக்
கொண்டு இருக்கிறான்.

இவனுடைய  ஜாமீன் மனு விழுப்புரம் குற்றவியல்
நீதிமன்றத்தில் எட்டாம் தேதி (08.10.2014)
விசாரணைக்கு வருகிறது.

ஜெத்மலானி எனக்காக வாதாடுவார் என்று
பெருமையுடன் கூறுகிறான் கயவன்
வைத்தியநாதன். ஒரு சிட்டிங்குக்கு
சில கோடிகள் வாங்கும் ஜெத்மலானிக்கு
இவனால் பீஸ்( fees )கொடுக்க முடியுமா
என்று நான் லேசாக சந்தேகம் அடைந்தேன்.

ஆனால், ஆவின் பால் கலப்பட ஊ ழலில்
கொள்ளை அடித்த தொகை பல ஆயிரம் கோடிகள்
என்று தமிழக அரசின் புலனாய்வு கூறுகிறது.
எனவே ஜெத்மலானிக்கு இவனால் பீஸ் கொடுக்க
முடியும் என்று தெளிவு அடைந்தேன்.

கயவன் வைத்தியநாதனுக்கும்
ஜெத்மலானி ஆஜர் ஆகிறார்.

கோடிக்கணக்கில் கொள்ளை அடி.
சில கோடிகளை ஜெத்மலாநிக்குக் கொடு.
வெளியே வா.
மீண்டும் கொள்ளை அடி.
இதுதான் வெற்றியின் தத்துவம்.

அடுத்த  முதல்வர் கனவு
வைத்தியநாதனுக்கும் இருக்கக் கூடும்.
ஆகவும் கூடும்!

********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக