வெள்ளி, 3 அக்டோபர், 2014

வருமான வரி ஏய்ப்பு வழக்கிலும் தண்டனை உறுதி !
சட்ட நிபுணர்கள் கருத்து!!
------------------------------------------------------------------------------------- 
ஜெயலலிதா மீது வருமானவரி ஏய்ப்பு மற்றும் மோசடி 
வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 
நடந்து வருகிறது. இந்த வழக்கு தீர்ப்புச் சொல்லும் 
கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜெயலலிதா நேரில் 
ஆஜராக வேண்டிய கட்டாயம் இந்த வழக்கில் உள்ளது.
அவ்வாறு ஆஜராகிய பின்னர் ஓரிரு மாதங்களில் 
தீர்ப்பு வழங்கப் பட்டு விடும்.

இந்த வழக்கில் ஜெ.வுக்கு தண்டனை கிடைப்பது உறுதி 
என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். எப்படி என்பதைப் 
பார்ப்போம். 

சில மாதங்களுக்கு முன்பு ,  இந்த வழக்கில் 
வருமானவரித் துறையுடன் சமரசம் செய்து கொள்ளத் 
தயார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஜெ .
நன்கு கவனிக்கவும். சமரசம் என்பதில்  
" குற்றத்தை ஒப்புக் கொள்ளுவது" என்பது 
உள்ளடங்கி உள்ளது. (THE ADMISSION OF GUILT 
IS AUTOMOTICALLY INCLUDED  IN A COMPROMISE).

குற்றத்தை ஒப்புக் கொள்வதும், அவ்வாறு 
ஒப்புக் கொண்டதன் பேரில், அபராதத்தையும் 
தண்டனையையும் குறைக்கக் கோருவதுமே 
ஒரு சமரச மனுவின் சாரம்.

எனவே, இந்த வருமானவரி ஏய்ப்பு மற்றும் மோசடி 
வழக்கில், குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் 
 (BY ADMISSION OF GUILT ) ஜெ.வுக்கு தண்டனை உறுதி 
என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். மூன்று  ஆண்டுகள் முதல்
ஆறு  ஆண்டுகள் வரை தண்டனை வழங்க  சட்டத்தில் 
இடம் இருக்கிறது என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக