செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஊழல் என்பது மனித உரிமை மீறல் ஆகும்!
------------------------------------------------------------ 
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்ட 
ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த 
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் 
மேதகு சந்திரசேகரா அவர்கள் ஜெ.வுக்கு ஜாமீனை 
மறுத்துத் தீர்ப்பளித்தார். தமது தீர்ப்புரையில் அவர் 
கூறிய முக்கியத்துவம் மிகுந்த கருத்து 
வரவேற்கத்தக்கது.

ஊழல் என்பதே மோசமான மனித உரிமை மீறல்
என்ற அவரின் கருத்து போற்றத்தக்கது.
ஜாமீன் கொடுக்காவிட்டால், அது மனித 
உரிமை மீறல் என்ற ஜெ. தரப்பின் கருத்தின்
மீது சூட்டுக்கோலால் சூடு போடும் கருத்து 
நீதியரசரின் கருத்து.

***********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக