வெள்ளி, 3 அக்டோபர், 2014

வெட்டுப்பட்ட பல்லியின் வால்   
எவ்வளவு நேரம் துடிக்கும்?
------------------------------------------------------- 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 
தண்டிக்கப் பட்டதை எதிர்த்து தமிழ்நாடு 
முழுவதும் நடைபெற்று வந்த காலித்தனங்களும்
ரவுடித்தனங்களும் முடிவுக்கு வந்து கொண்டு 
இருக்கின்றன. தொடர்ந்து காலித்தனம் 
செய்தால், ஜெ.வுக்கு ஜாமீன் கிடைக்காமல் 
போய்விடும் என்ற ஞானோதயம் ஏற்பட்டு 
இருக்கக்கூடும்.

வெட்டுப்பட்ட  பல்லியின் வால்,
பல்லி  செத்துப் போன பிறகும் சிறிது 
நேரம் துடிக்கும். அதன் பிறகு அடங்கி விடும்.
வெள்ளம் வடிந்தது போல் காலித்தனமும் 
வடிந்து கொண்டு இருக்கிறது.

என்றாலும் அபாயம் முற்றிலுமாக நீங்கி 
விடவில்லை. அக்டோபர் 7ஆம் தேதியும் 
ஜாமீன் மறுக்கப் படும்போது மீண்டும் 
தலை காட்டும். அப்போது அந்தக் 
காலித்தனத்தின் தலையை  அறுக்க 
தமிழ் மக்கள் தயார் ஆகட்டும்.

****************************************************          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக