ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

1) இரண்டாம் உலகப் போர் நடந்த காலம் 1939-1945.
அதாவது இன்றைக்கு 76 ஆண்டுகளுக்கு முன்பு.
2) அப்போது 1939இல் அமெரிக்கா, இன்று நாம் காண்பது போல் உலகின் முதல்நிலை வல்லரசாக இல்லை.
**
3) உலகப்போரைத் தொடங்கியது கேர்மணியே தவிர
அமேரிக்கா இல்லை.
4) சோவியத் ஒன்றியம் அப்போது மிக்க இளமையான
சோஷலிச நாடாக இருந்தது. வல்லரசாக இல்லை.
**
5) IMPERIAL PRIDE என்ற வெட்டிப்  பெருமைக்காக ஜப்பான்
போரை நீட்டித்தது. ஏப்ரல் மாதமே ஹிட்லரும் முசோலினியும்
செத்துபோய், ஜெர்மனியும் இத்தாலியும் சரண் அடைந்த பிறகும்,
போரில் வெற்றி கிடைக்காது என்பது உறுதியான பிறகும்
ஜப்பான் தொடர்ந்து போரிட்டது.
**
6) அணுகுண்டு வீச்சை விட, மற்ற சாதாரண குண்டுகளால்
ஜப்பானுக்கு ஏற்பட்ட சேதாரம் அதிகம். அப்படி இருந்தும்
ஜப்பான்  சரண் அடைய மறுத்துப் போரிடுகிறது.
**
7) வேறு வழி இல்லாத நிலையில் அணுகுண்டு போடப்
படுகிறது. ஆகஸ்ட் 6இல் முதல் குண்டு. அப்போதும்
ஜப்பான் சரண் அடையவில்லை.
8) ஆகஸ்ட் 9இல் இரண்டாம் குண்டு போட்டும் சரண் இல்லை.
**
9) மூன்றாவது குண்டு போடப் போகிறார்கள் என்று தகவல்
கசிந்த பின்பு, கடைசியில் சரண் அடைகிறது ஜப்பான்.
10) ஹிட்லரும் முசோலினியும் செத்த பிறகும் கூட
ஜப்பான் போர் புரிந்தது நியாயமா? அறிவுடைமை ஆகுமா?
**
11) போர்முனையில் எடுக்கப் படும் முடிவுகள் அப்போது
உள்ள சூழ்நிலையை வைத்து எடுக்கப் படுகின்றன.
80 ஆண்டுகளுக்குப் பிறகு, மாறிய சூழ்நிலையில் இருந்து
கொண்டு, சாவகாசமாக அமைதியாக யோசித்து, விமர்சிப்பது
பொருந்தாது.
**
12) அன்று அந்த முடிவை உலகமே வரவேற்றது. நிம்மதிப்
பெருமூச்சு விட்டது.
------------------------ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக